அமுதசுரபி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அமுதசுரபி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

16/1/17

தமிழ்த் தாத்தாவின் தாத்தா காலத்திற்கு முன்னரே சுவடிகளைத் தேடியவர்.



இந்த மாத இதழ் அமுதசுரபியில் வெளியாகியிருக்கும் எனது கட்டுரை. இதழாசிரியருக்கு நன்றியுடன்.. இங்கே..
தமிழ்த் தாத்தாவின் தாத்தா காலத்திற்கு முன்னரே சுவடிகளைத் தேடியவர்.
தமிழுக்காகவே வாழ்ந்தவர்கள், தமிழை வைத்தே பிழைத்தவர்கள், தமிழை வியாபாரம் செய்பவர்கள், தமிழால் புகழ் பெற்றவர்கள், தமிழைத் தன்னுடைய வளர்ச்சிக்குப் பயன்படுத்தியவர்கள், மனமகிழ்ச்சிக்காகத் தமிழைப் படித்தவர்கள், இலக்கிய சுவைக்காகத் தமிழை நேசித்தவர்கள்.. எனப் பல விதத்தில் தமிழைப் பயன்படுத்திக்கொண்டிருக்கும் மனிதர்களுக்கெல்லாம் தெரியும் கரையானுக்கும், செல்லரிப்புக்கும் பலியாகிக் கொண்டிருந்த நூல்களைக் காப்பாற்றி நமக்குக் கொடுத்தவர் தமிழ்த் தாத்தா என்று அழைக்கப்படுகிற உ.வே.சுவாமிநாத ஐயர்.என்பது.
ஆனால் தமிழ் தாத்தா பிறந்த 1855 ஆம் ஆண்டுக்கு 72 ஆண்டுகளுக்குமுன்னே(1783) அதாவது தமிழ் தாத்தாவின் தாத்தா காலத்திலேயே ஒரு மனிதன் தமிழக கிராமங்களில் சுவடிகளையும், செப்பு தகடுகளையும் தேடி அலைந்து சேகரித்து தொகுத்திருக்கிறார் என்பது ஓர் ஆச்சரியமான செய்தி. அதைவிட ஆச்சரியம் அந்த மனிதன் தமிழன் அல்ல என்பது மட்டுமில்லை தமிழே தெரியாத ஆங்கிலேயர் என்பது தான்.
அந்த ஆங்கிலேயர் காலின் மெக்கன்சி. தொல்பொருளியல், நாணயவியல், வரைபடவியல், மானுடவியல், நாட்டுப்புறவியல், மதம், தத்துவம் சார்ந்த அறிவியல் போன்ற பல துறைகளில் ஆர்வம் மிகக் கொண்ட ஒரு ஆங்கிலேய அரசு அதிகாரி.. தமிழ்த் தாத்தாவைப்போல ஊர் ஊராகச் சென்று சுவடிகளைச் சேகரித்தது போல இவரும் கைப்பணத்தைச் செலவழித்து உதவியாளர்கள் மூலம் தொகுத்த சுவடிகளும், சில கல்வெட்டுக்களின் பிரதிகளும் பின்னாளில் செய்யப்பட்ட ஆய்வுகளுக்கு மூல ஆதாரமாக இருந்திருக்கிறது. இவர் தமிழகம் மட்டுமில்லாமல் இலங்கை, ஜாவா தீவுகளுக்கும் சென்று சுவடிகளை சேகரித்திருக்கிறார்..
தமிழகத்தின் பல்வேறு முகங்களை வெளிக்காட்டும், அரியச் செய்திகளைச்சொல்லும் இந்தத் தொகுப்புக்களை தொகுத்துக் குவித்திருப்பவர் மெக்கன்ஸி என்ற ஆங்கிலேயர்.

யாரிந்த மெக்கன்சி? 


 இந்தியாவில் முதன் முதலில் கள ஆய்வினைத்தொடங்கிவைத்தவரான மெக்கன்சி ஸ்காட்லாந்தில் பிறந்தவர் அவர் கிழக்கிந்திய கம்பெனியில் 30ஆவது வயதில் இணைந்து சில போர்களிலும் பங்கேற்று இறுதியில் சென்னையில். தலைமை நில அளவை ஆய்வாளராக பொறுப்பேற்று அரை நூற்றாண்டு . காலம் பணியாற்றிய பொழுது ஆர்வம் காரணமாக செய்த காரியம் இந்த சேகரிப்பும் தொகுப்பும் என்று பதிவு செய்யப்பட்டிருக்கிறது.. மெக்கன்சி தன் அலுவலக பணிக்காக சென்ற இடங்களில் எல்லாம் தன் சுவடி சேகரிப்பு, தொகுப்புப் பணிகளை செய்து வந்திருக்கிறார். இப்படி 30 ஆண்டுக்காலம் அவர் தொகுத்த தொல்பொருள் தொகுப்பை அவரே அழகாக வகைப்படுத்தி பட்டியிலிட்டிருக்கிறார். இன்றைக்குத் தமிழக வரலாற்றை ஆராய்பவர்களுக்கு உதவும் அரிய பொக்கிஷம். அவரது மரணத்திற்குப் பின்னர் இங்கிலாந்துக்கு அனுப்பப் பட்ட அறிக்கை காணாமல் போயிவிட்டது. இன்று இருப்பது சென்னை ஆவணக்காப்பகத்திலிருக்கும் அதன் நகல் மட்டுமே 
வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த மதுரை தான் மெக்ன்சியின் தொகுப்புப் பணியில் முதலிடம் பெற்றிருக்கிறது அதற்குக் காரணம் அவர் அங்கு தங்கியிருந்த போது தமிழ் அறிஞர்களிடம், நண்பர்களிடமும் விவாதித்தபோதுதான் தமிழ் நாட்டின் வரலாறு, வாழ்க்கைமுறை, இலக்கியம் பற்றி நிறையத் தெரிந்துகொண்டிருக்கிறார். அவை பற்றிய செய்திகளின் சேகரிப்பின், தொகுக்கப்படவேண்டியதின் அவசியத்தை உணர்ந்திருக்கிறார்..
இந்த ஆர்வத்தினால், அலுவலக பணிக்காக அடிக்கடி குமரி முதல் கிருஷ்ணா வரையிலும் சென்று வரும்போதெல்லாம் தொகுப்பு பணியில் ஈடுபட்டிருக்கிறார். பலருடன் இயங்கும் ஒரு நிறுவனம் கூட தொகுத்திட முடியாத அளவிலான தொகுப்புகளை தனிப்பட்ட முறையில் தொகுத்திருக்கிறார். 
இப்படி இந்த மனிதர் சேகரித்து தொகுத்திருப்பதின் எண்ணிக்கைகளைப் பாருங்கள். கல்லிலும் செம்பிலும் உள்ள சாசனங்கள்3000, பல்வேறு மொழிகளைச்சேர்ந்த சுவடிகள் 1568, கல்வெட்டுக்கள் 8076, ஓவியங்கள் 2630 வரைபடங்கள் 78 நாணயங்கள் 6218. இவற்றை சேகரிக்கபட்ட்து மட்டுமில்லாமல் மட்டுமில்லை மொழி வாரியாக, நியாயம் , தர்மம், சட்டம், கணிதம் எனப் பல பிரிவுகளில் தொகுக்கவும் பட்டிருக்கிறது. 
தொல்பொருள் தொகுப்பில் மெக்கன்சி காட்டிய ஆர்வம் ஆச்சரியப்படவைக்கிறது. எங்கோ ஸ்காட்;லாந்தில் ஒரு சதாரண குடும்பத்தில் பிறந்து பணி நிமித்தம் இந்த நாட்டிற்கு வந்து செய்த அலுவலகப்பணியோடு இத்தகைய அரியச் சாதனை செய்திருக்கும் இவரது சேவைகளுக்கு நமது வரலாற்றில் உரிய இடம் தரப்படவில்லை,

மலையாளம், தெலுங்கு கன்னட மொழிகளுக்கு உதவ அறிஞர்கள், கிராமங்களுக்குச் சென்று சேகரிக்க பணியாளார்கள், குடும்பங்களின் வரலாறுகளை அந்த குடுபத்தினரையே எழுதிதரச்சொல்வது, மலைவாழ்மக்களை சந்தித்துக் குறிப்பு எழுதிக்கொள்வது, கல்வெட்டுகளைத் தாளில் பதிந்துகொள்வது, புரியாதவற்றை ஓவியமாக்கிக் கொண்டுவந்து பரிசீலிப்பது போன்ற முறைகளைப் பயன் படுத்தி தன் தொகுப்பைச் செம்மைப்படுத்தியிருக்கிறார். எல்லாவற்றையும் விட நம் கவனத்தை கவர்வது சேகரித்ததில் தெளிவாகப் புரியாத விஷயங்களைப் பற்றி ஒரு வினா பட்டியலை சம்பந்தப்பட்டவர்களுக்கு அனுப்பி விடைகள் பெற்று தொகுப்பில் சேர்த்திருப்பதுதான்.
தமிழக வரலாற்றில் ஒரு முக்கிய கட்டமான 15, 16 ஆம் நூற்றாண்டுகளில் தஞ்சை வரலாற்றை அறிந்து கொள்ள, கல்வெட்டுகளில் இருக்கும் தவறுகளை திருத்திக்கொள்ள இவர் தொகுப்பில் இருக்கும் தெலுங்கு, தமிழ் சுவடிகள் தான் உதவியிருக்கின்றன. தவிர . அதே போல இவர் ஜாவா தீவுகளில் பணியாற்றிய போது கண்ட, எகிப்திய பிரமிடுகளைவிடப் பழமையான புத்தர் கோவிலை பற்றி இவர் எழுதிய குறிப்புக்கள் தான் புத்த மதம் ஜாவாவில் பரவியிருந்ததற்கு முதல் சான்று. 
 பணியில் இருந்த காலத்தில் (1818) இந்தியாவின் வரலாறு என்று ஒரு புத்தகம் எழுதத் திட்டமிட்டிருப்பதாக ஒரு குறிப்பில் சொல்லும் மெக்கன்சி இறுதிவரை அதை எழுதவே இல்லை. தன்னுடைய 38 ஆண்டுக்கால இந்திய பணியில் ஒரு நாள் கூட விடுப்பு எடுக்காமல் பணியாற்றிய மெக்கன்சி கல்கத்தாவில் இருக்கும்போது தன் தொகுப்புப் பணிகளை இங்கிலாந்து சென்று தொடரவிரும்பினார், விடுமுறை கிடைப்பதற்குள் இறந்துவிடுகிறார். அவரது தொகுப்புகளை அவரது மனைவியிடமிருந்து கிழக்கிந்திய கம்பெனி விலைக்குப் பெற்று அதை கம்பெனியின் சொத்தாக அறிவிக்கிறது. மெக்கன்சியின் தொகுப்புகள் பல இங்கிலாந்து அனுப்பபட்டுவிட்டன தென் இந்தியப்பகுதிகளைச் சேர்ந்த சுவடிகள் ஆவணங்கள், கட்டுரைகள், கல்வெட்டு பிரதிகள் போன்றவகைகள் இப்போது சென்னையில் இருக்கிறது. மெக்கசிக்கு பின் இவைகள் தேர்ந்த உதவியாளர்களால் பட்டியலிடப்பட்டிருக்கிறது
. 
ஆராய்ச்சியாளர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படும் சென்னை கோட்டையிலிருக்கும் ஆவணக்காப்பகத்தில் மெக்ஸியின் குறிப்புகளுக்கு என தனிப்பகுதியே இருக்கிறது. அதிலிருக்கும் தமிழ் சுவடிகளை பேராசியர் முனைவர் ராசேந்திரன் அன்றைய தமிழகத்தின் அரசியல், சமுதாயப் பொருளியல், பண்பாடு நிலைகள் பற்றி ஆய்ந்து 1793-95, 1796-1810, 1811-1813, என்று முன்று கால கட்டங்களாக பிரித்து காலின் மெக்கன்சி வரலாறும் சுவடிகளும் என ஒரு புத்தகமே எழுதியிருக்கிறார். இன்றும் பல வெளிநாட்டு உள்நாட்டு பல்கலைக்கழக மானவர்களின் ஆராய்சிகளுக்கு இந்தக் குறிப்புகள் உதவுகின்றன. 
“ மெக்கன்சியின் பெருமையைப் பற்றி நாம் ஒன்றும் சொல்ல வேண்டாம் அவருடைய தொகுப்பே என்றும் அவர் பெருமையை சொல்லும்” என்று குறிப்பு எழுதியிருக்கிறார் அன்றைய வைஸ்ராய் கர்னல் வெல்லீஸ்லி.

எவ்வளவு உண்மையான வார்த்தைகள்?

29/3/16

தேசம் பிறந்த கதையைச் சொல்லிக்கொண்டிருக்கும் நகரம்







ழகுறவடிவமைக்கபட்ட அந்தத் திரையரங்கம் நிரம்பியிருக்கிறது. அதி தொழில்நுட்ப ஒலிவசதிகளுடன் அமைக்கப்பட்டிருக்கும் அதன் திரையில்-  ஓடும் காட்சி- கடும் இடியோசையுடன் கொட்டும் மழையில் சுழன்றடிக்கும் காற்றில் மிக வேகமாக ஓடிவரும் குதிரையின் மேல் மழைக்கோட்டும் தொப்பியும் அணிந்த மனிதர். கட்டிட வாயிலை நெருங்கும்போது உள்ளே இன்னும் 5 நிமிடத்தில் ஒட்டு போடும் நேரம் முடிகிறது என ஒருவர் அறிவித்துக் கொண்டிருக்கிறார். நின்ற குதிரையிலிருந்து தாவிக் குதித்து  ஈர உடையுடனும் சேறு படிந்த காலணிகளுடனும் பாய்ந்த அந்த மனிதர்
 ”நான் வந்து விட்டேன் எனது ஓட்டு புதிய தேசத்துடன் இணைவதற்கானது” என்று சொல்லி ஆவணங்களில்  கையெழுத்திடுகிறார்.
 ”பிரச்சனை தீர்ந்தது. அமெரிக்க ஐக்கிய நாட்டில் முதல் மாநிலமாக டெலவேர் இணைந்துவிட்டது” என்று தலைவர் அறிவிக்கிறார்.
அந்த அறையில் கூடியிருந்தோர் கைத்தட்டுகிறார்கள். அந்தக்காட்சி, அரங்கத்தில் படக் காட்சியைப் பார்த்துக்கொண்டிருந்தவர்களையும் கைதட்டவைக்கிறது
.

அமெரிக்க நாட்டின் சரித்திரத்திரத்தில் மிக முக்கியமான இடம் பிலடெல்பியா நகருக்கு உண்டு. அமெரிக்கா”ஐக்கிய” நாடாகப் பிறந்தது இந்த நகரில் தான். பெருமை மிக்க தங்கள் நாடு உருவானதை சுற்றுலா பயணிகளுக்கும் வரும் தலைமுறைக்கும் சொல்ல ”நேஷனல் கான்ஸ்டியூஷன் சென்டர்” என்ற வளாகத்தை இங்கு உருவாக்கியிருக்கிறார்கள். கண்காட்சிகள், நூல்நிலையம், விவாத அரங்கு, பயிற்சிவகுப்புகள், திரையரங்குகள் எனப் பலவசதிகளுடன் பிரமாண்டமானதாக அழகாக இருக்கிறது. அமெரிக்க சட்டத்தின் முதல் வாசகத்தை முகப்பு சுவரில் கொண்டிருக்கும் இங்கு, ஆண்டுமுழுவதும் மக்கள் பங்குகொள்ளும் நிகழ்ச்சிகள் நடைபெற்றுக்கொண்டேயிருக்கிறது. ஒவ்வொரு மாதமும் ஒரு மாநிலத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளி மாணவர்களும் ஆசிரியர்களும் வருகிறார்கள். வெளிநாடு, உள்நாட்டுச் சுற்றுலா பயணிகளும் குவிகிறார்கள் அந்த வளாகத்திலிருக்கும் ஒரு திரையரங்கில் பார்த்த படத்தின் காட்சி தான் நாம் மேலே பார்த்தது..
சுதந்திர வேட்கை வேகமாக எழுந்து பரவி ஆங்கிலேயர்களை வெளியேற்றப் போராட்டங்கள் துவங்கிய ஆரம்ப கட்டத்தில் தாமஸ் ஜெபர்சன்  தலைமையில் அமெரிக்க சுதந்திரபிகடனம் அறிவிக்கப்பட்ட இடம் பிலடெலபியாவின் சட்டமன்றம். இதற்கு இன்று பிஃரிடம் ஹால் எனப் பெயரிட்டிருக்கிறார்கள். இதன் அருகில் தான் இந்த வளாகத்தை வடிவமைத்திருக்கிறார்கள்.,
13 மாநிலங்கள் இணைந்து சுதந்திர பிரகடனத்தில் கையெழுத்திட்டு அமெரிக்க ஐக்கிய நாடு என்ற புதிய தேசம் அறிவிக்கப்பட்டவுடன் அதை ஏற்று மற்ற மாநிலங்கள் ஒவ்வொன்றாக இணைய வேண்டும் என்பது திட்டம். ஆனால் பிரகடனம் தயாரானவுடன் முதலில் ஒப்புக் கொண்ட டெலவேர் மாநிலத்தின் தீர்மானத்துக்கு ஆதரவாகவும் எதிராகவும் சரி சமமான ஒட்டு கிடைத்திருந்ததால் சிக்கல் ஏற்பட்டது. அதைத்தவிர்க்க டெலவேர் மாநில அமைப்பின் தலைவர் தன் நண்பர் சீஸர்ரோட்னிக்கு செய்தி அனுப்பி, அவர் குதிரையில் விரைந்து வந்து கையெழுத்திட்டு மெஜாரிட்டி ஒட்டு கிடைக்க செய்த காட்சியைத்தான் படத்தில் பார்த்தோம்.  அமெரிக்க தேசம் பிறந்த கதையைச்சொல்லும் இந்தப்படம் வெறும் ஆவணப்படமாக இல்லாமல் இது போல பல சுவாரசியமான காட்சிகளாலான அருமையான திரைப்படம்.
இங்கே அமெரிக்க நாட்டின் சுதந்திர சம்பந்தப்பட்ட அனைவரையும் அழகாக, ரசிக்கும் விதத்தில் அமைத்திருக்கிறார்கள். அமெரிக்க கொடி பிறந்த கதையையும், அமெரிக்க டாலர் எப்படி வடிவமைக்கப்பட்டது பற்றியும் காதில் மாட்டியிருக்கும் போனில் ஒலிக்க காட்சிகளைப் பார்த்துக்கொண்டே நகருகிறோம். இதேபோல் பல தகவல்கள்.
ஜெபர்சன் தங்கி சுதந்திரபிரகடனத்தை இரண்டேநாளில் எழுதிய அறை இருந்த ஹோட்டலை பாரம்பரிய சின்னமாக அறிவித்து அன்றிருந்தைப்போலவே பாதுகாக்கிறார்கள். அதேபோல் சுதந்திர பிகடனம் கையெழுத்திட்ட முதல் சட்ட மன்றத்தை அன்றிருந்தது போலவே, அதே மேசைகள் பயன் படுத்திய பேனாக்கள் உட்பட அப்படியே காட்சி படுத்தியிருக்கிறார்கள். அழைத்துச் சென்று காட்டி விளக்கம் சொல்பவர் கூட அன்றைய பாணி உடையிலிருக்கிறார். நாட்டின் சுதந்திரம் பற்றிப் பேசும் கட்டிடங்கள் இருப்பதால் இந்தப் பகுதியை" சுதந்திர பூங்கா" என அழைக்கிறார்கள்.
இந்தச் சுதந்திர பூங்காவில் அழகான ஒரு தனி வளாகத்தில் 30அடி உயரமும், 900கிலோ எடையும் கொண்ட அந்தப் பிரமாண்டமான ”லிபர்ட்டி பெல்” அதன் பின்னே உள்ள கண்ணாடி சுவரின் வழியே தெரியும் அமெரிக்க முதல் சட்டமன்றத்தின் பின்னணியில் கம்பீரமாக நிற்கிறது ஆண்டுக்கு 10 லட்சம் பேர் வந்து பார்க்கும் இந்த மணிக்கு அமெரிக்க தேசிய கொடிக்கு நிகரான அந்தஸ்து வழங்கப் பட்டிருக்கிறது.
காட்சியகத்தில் காலச்சுவடுகளின் படங்களோடும் ஒலிஓளிகாட்சிகளோடும் நிறுவப்பட்டிருக்கும் இந்த மணியை சில ஆண்டுகளுக்கு முன் வந்த ஒரு பார்வையாளர், தான் கொண்டுவந்த சுத்தியால் அடித்துப் பார்க்க முயன்றதால் இப்போது இதற்கு 24/7காவல். .மணியைத் தொட்டுபார்க்க முடியாதபடி அமைத்திருக்கிறார்கள்
.
அமெரிக்காவின் முதல் பாங்க், முதல் சிறை இப்படிப் பல பழைய விஷயங்கள் இந்த பிலடெல்பியா நகரில் இருந்தாலும் எல்லா அமெரிக்க நகரங்களைப் போல நவீனமாகவிருக்கிறது.முக்கியமான பழைய கட்டிடங்களை இடிக்க அனுமதியில்லாதால் அவை அருகிலிருக்கும் கட்டிடங்களின் கண்ணாடிச் சுவர்களில் தங்களை அழகுபார்த்துக்கொண்டிருக்கின்றன. நகரின் பழைய கட்டிடங்களின் பக்கச் சுவர்களில் மிகப்பெரிய படங்களை எழுதி அழகுட்டும் இயக்கம் ஒன்று வலுவாக இயங்கிக் கொண்டிருப்பதால் நகரில் எங்குப்பார்த்தாலும் பெரிய சவர் சித்திரங்கள்.
தங்கள் நாட்டின் சுதந்திர காலகட்டத்தை அழகாக அடுத்த தலைமுறையினருக்காக இப்படி காட்சியாக்கியிருக்கும் அமெரிக்கர்களைப் பாராட்டத் தோன்றினாலும் நாம் ஏன் இதுபோல இன்னும் செய்யவில்லை? என்று நம் மனதில் எழும் கேள்வியைத் தவிர்க்க முடியவில்லை.

(அமுத சுரபி ஏப்ரல் 2016)



3/11/14

செல்வம் நங்கூரமிடும் துறைமுகம்.


மிகச்சிறிய 32 குட்டிதிட்டுகளிணைந்து சின்ன  தீவாகயிருக்கும் அந்த நாட்டில் இருப்பது ஒரு சிறிய மீன் பிடிதுறைமுகம்தான்சிறியபயண கப்பல்கள்கூட வரமுடியாது. ஆனால் இன்று உலகம் முழுவதும்நிதி நிலையங்களின் துறைமுகமாக” ( Financial Harbour) அறியபட்டிருக்கும் அந்த வாமனதேசம்தான் பஹரைன்  .
 மிகச்சிறிய இந்த வளைகுடா  தீவில்தான்  முதல் எண்ணைக் கிணறு நிறுவபட்டது..அதன் வளம் குறைந்து இன்னும்10 ஆண்டுகளில் மூடப்பட்டுவிடும் என்ற நிலையிலேயே, நாட்டின் பொருளாதாரத்தை வளமாக்க இந்த தீவின் அரசு செய்த காரியங்கள் இரண்டுஅண்டை நாடான செளதி அரேபியாவிலிருந்து கச்சா எண்ணையை கடலின் அடியில் பதிக்கபட்ட குழாய்களின் மூலம் கொண்டுவந்து சுத்திகரித்து அவர்களுக்கு அனுப்பவதற்காக அதிதொழில்நுட்பத்தில் ஆலைகளை நிறுவி,எண்ணையின்விலையில் பாதியை கட்டணமாக வசூலித்தது. மற்றொன்று வெளிநாட்டு வங்கிகளை  இங்கிருந்து தொழில்செய்ய வரவேற்றது. இன்றைக்கு 300க்கும் மேற்பட்ட வெளிநாட்டு வங்கிகள் இயங்கும் இந்த தேசத்தில் இன்னும் அவர்கள் வருகை தொடர்ந்தவண்ணமிருக்கிறது.
அவர்களின் வசதிக்காகவே நகரின் நடுவே .நவீன வசதிகளுடன் அலுவலகம் சிறப்பான  தொலைதொடர்பு வசதிகள் கொண்ட  பிரமாண்ட 53 மாடி கட்டிடத்தை எழுப்பியிருக்கிறார்கள். இரண்டு  ராட்டசத வடிவ பூட்ஸ் வகை காலணியை எதிரும் புதிருமாக நிறுத்தியதைப்போல நிற்கும் இந்த கட்டிடங்களின் பெயர்  “பைனாஷியல் ஹார்பர்” Financial Harbour
தொழில்வளம் எதுவுமில்லாத வெறும் ஈச்ச மர காடுகளாயிருக்கும் இந்த சின்னஞ்சிறு பாலைவனத்தீவில்  இவ்வளவு வங்கிகள் என்னசெய்கின்றனஉலகஆப் ஷோர் பேங்கிங்”(off shore banking) என்ற பேங்க்கிங் தொழிலின்  முக்கிய கேந்திரம் இதுதான், , உலகில் நல்ல வருமானம் தரும் தொழில்களில் மற்றொரு  நாட்டில்  முதலீடு செய்ய விரும்பும்  நிறுவனங்களுக்கு, அதை அவர்கள் நாட்டிலிருந்து செய்யாமல் மற்றொரு நாட்டிலிருந்து செய்ய  உதவது இந்த வங்கிகளின் பணி. எளிதாக சொல்லவேண்டுமானால்ஒரு ஜப்பானிய நிறுவனம்  மெக்கிஸிக்கோவில் அதிக லாபம் ஈட்டும் தொழிலில் முதலீடு செய்ய இங்குள்ள ஸ்விடன் நாட்டு வங்கிக்கிளை உதவும். இதனால் பல நாடுகளின் பொருளாதாரத்தை கண்கொத்தி பாம்பாக கண்காணித்து தங்கள் வாடிக்கையாளார்களை செல்வந்தர்களாக்கிகொண்டிருக்கிரார்கள் இந்த வங்கியாளார்கள். ஒரே இரவில் கோடிகளை ஈட்டவும், இழக்கவும் செய்கிறார்கள். வருமானத்திற்கு வரி எதுவும் கிடையாது.லாபத்தை உலகின் எந்த மூலைக்கு மாற்ற தடையேதுமில்லை. பல வங்கிகளில் இந்தியர்கள் அதில் கணிசமான அளவில் தமிழர்கள் பணியிலிருக்கிறார்கள்
கடந்த  10 ஆண்டுகளில் இந்த வங்கித்தொழில் நாட்டின் முகத்தையே மாற்றியிருக்கிறது. பிரமாண்டமான பல மாடிகட்டிடங்கள், அகன்ற சாலைகள் என வளர்ந்து கொண்டிருக்கிறது. நகரின் புதிய அடையாளமாக எழுந்திருப்பது
    240மீட்டர் உயரத்தில்  வேர்ல்ட் டிரேட் செண்ட்டர்.(world trade center) இரட்டை கோபுரம். தொலவிலிருந்து பார்க்கும்போது சாய்த்து நிறுத்திவைக்கபட்டிருக்கும் படகைப் போல இருக்கும் இதை அருகில் பார்க்கும் போது தான் அது  ஒரு படகில் விரித்து கட்டப்பட்டிருக்கும் இரண்டு பாய்மரங்கள் என்ற வடிவம்  புரிகிறது. 50 மாடிகளுடன் அமைக்கப் பட்டிருக்கும்  இந்த  இரண்டு கட்டடித்திற்கு இடையில் பெரிய காற்றாடிகளை நிறுவி மின் சக்தி பெற ஒரு காற்றாலையை நிறுவியிருக்கிரார்கள். இது இந்த கட்டிடத்திற்கான மின் வசதியை தருகிறது. கட்டிடத்தில் பல பன்னாட்டு நிறுவனங்களின் அலுவலகங்கள். வங்கிகள்மேலேயிருந்து பார்க்கும்போது தேசம் முழுவதும் தெரிகிறது. ஆம். இந்த நகரம் மட்டும் தான் முழுதேசமே!. கீழ்தளத்தில் மிகப்பெரிய ஷாப்பிங் மால்  நிறைய சர்வதேச பிராண்டுகளின் கடைகள்.
இங்குமட்டுமில்லை நகரின் அத்தனை பெரிய கட்டிடங்களிலும்  கீழ் தளம் மால் தான்எல்லா மால்களிலும் பிராத்தனைக்கு என தனி இடம். இவைகளைத்தவிர பல லட்சம் மீட்டர் பரப்பளவில் பல மாடிகட்டிடங்களில்  பல தனி மால்கள்..உலகின் எந்த முண்ணணி பிராண்டும் தங்கள் படைப்பை முதலில் அறிமுகப்படுத்துமிடம் பஹரைன் தான்இந்த மால்களில்தான்.. சில மிக பிரமாண்டமானவை. ஒரு மாலில்  5000 கார்களை நிறுத்த அடுக்கமாடி பார்க்கிங் நிறுவியிருக்கிறார்கள். கடைகளில் யார் வாங்குகிறார்கள்? எந்த வித வரியுமில்லாமல் சர்வதேச விலையைவிட மலிவாக  கிடைப்பதால்  அருகிலிருக்கும் சவுதி அரேபியா போன்ற அண்டை நாடுகளிலிருந்து விடுமுறைகளில் வந்து வாங்கித்தள்ளுகிரார்கள். இதற்கு வசதியாகியிருப்பது பஹரைன் மன்னர் பெயரில் அமைக்கபட்டிருக்கும் கடல் வழி சாலை தான். குறிப்பிட்ட இடங்களில் மட்டும் கீழே படகுகள் கடந்து போக  உயர்ந்தநிலையில்  பாலமாக அமைக்கபட்டிருக்கும் கடல்வழி சாலையில் பலநாட்களில் நெருக்கடியாகிவிடுமளவிற்கு போக்குவரத்துபோக விஸா அவசியமானாலும்  இங்கிருந்து தினசரி  சவுதி அரேபியாவின் நகரங்களுக்கு போய் வேலை செய்து திரும்புவர்களுமிருக்கிறார்கள்.
ஒரே ஒரு நகரமாகயிருக்கும் இந்த தேசத்தை இப்போது நிறைய வசதிகளுடன் ஒரு சுற்றுலா மையமாகக்க  துவங்கியிருக்கிறார்கள். உலகின் சிறந்த ஹோட்டல்கள் இங்கு வந்திருக்கின்றன. ஒரு ஹோட்டல் அருகிலிருக்கும் அமைதியான கடலை அலையடிக்கும்,கடலாகஇயந்திரங்களின் உதவியால்  உருவாக்கியிருக்கிறார்கள்அருகிலுள்ள குட்டி தீவுகளை ரிஸார்ட்டாக மாற்றிக்கொண்டிருக்கிரார்கள். ஃபார்முலா ஒன் என்ற சர்வதேச கார் ரேஸ்களை நடத்த மிக அதிக செலவில் டிராக்களை அமைத்து உலகம் முழுவதுமிருக்கும் கார் ரேஸ்பிரியர்களை ஈர்க்கிறார்கள்
நகர் உருவாகும் போது நிறுவபட்ட  “பாபல் பஹரைன்என்ற நுழைவாயில் முகப்பை மாற்றாமல் போற்றி பாதுகாக்கும் பகுதியில்தான் நகரின்பிரதான கடை வீதிகள். நிறைய  குறுகிய தெருக்கள் நிறைய இந்திய முகங்கள். வீதியோர கடைகள். சன்னமான குரலில் சரளமான மலையாளம். நடிகர் மோகன்லால்,மம்முட்டி படங்களுடன் முடிதிருத்துமிடத்திலிருந்து, குருவாயரப்பன் சன்னதியுடன் கோவிலாக மாற்றபட்டிருக்கும் 2 பெட்ரூம் பிளாட் வரை எங்கும் நிறைந்த கேரள வாசனை. காய்கறி மார்கெட்டைப்போல தங்க நகைகளுக்கு தனியாக 300 கடைகளுடன்  கோல்ட் சிட்டி. என்ற மார்க்கெட்.

மெக்கா விலிருந்து கொண்டுவரப்பட்ட கற்களினானால் பிரமாண்டமாக நிறுவபட்டிருக்கிறது அந்த மசூதி.. இத்தாலிய மார்பிள் தரை, இந்திய தேக்கில் கதவுகள்,பிரான்ஸில் வடிவமைக்கபட்ட கண்னாடி சாரளங்கள்.ஸ்பெய்னில் வடிவமைக்கபட்ட பைபர்கிளாஸ் விதானம், தரை முழுவதும் பெர்ஷ்ய கார்பெட் என மிக நேர்த்தியாக கலையுணர்வுடனிருக்கும் அதனுள் பிராத்தனை இல்லாத சமயங்களில் பார்க்க அனுமதிக்கிறார்கள். எந்த நாட்டினாராக, எந்த மதத்தினாராக யிருந்தாலும் பெண்கள் உள்ளே நுழைய பர்தா அணிந்தால்தான் அனுமதி..  ஏர்கண்டிஷன் செய்யப்பட்டிருக்கும் பெரிய பிராத்தனை கூடத்தில் விதானத்திலிருந்து தொங்கும் சரவிளக்கில் இணைக்கபட்டிருக்கும் ஒரு பிரமாண்ட வட்டம்  1000 பல்புகளுடன் நம்மை பிரமிக்கவைக்கிறது.(1000விளக்கு மசூதி)
ஒரு  வளமான முகலாய நாட்டில் அவர்களது வழிபாட்டுதலம் ஆடம்பரமாக இருப்பதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. ஆனால்  நகரின் வெளியே 10 மைல் தொலைவில் பார்த்த ஒரு மரம் தான் ஆச்சரியமான விஷயம். சுற்றுவட்டாரத்தில் 20 மைலுக்கு எந்தநீர்வளம் இல்லாத அந்த மணல் பாலைவனத்தில் 400 ஆண்டுகளுக்கும் மேலாக உயிர் வாழும் ஒரு மரம்.. எங்கிருந்து தனக்கு வேண்டிய நீரை எடுத்துகொள்கிறது என்ற ஆச்சரியத்தை தரும் இந்த மரத்தின் அடி பாகம் ஆலமரம்போலவும் இலைகள் புளிய மர இலைகளைபோலவும் தன் கிளைகளை  சிறு மாமரம்போல தாழ்வாக பரப்பி  ஆராய்சியாளர்களுக்கு சவால் விட்டுகொண்டு நிற்கிறது. மிக அரிதான தாவரமாக அறிவிக்கபட்டு வாழும் மரமாக(tree of life) பாதுகாகப்படுகிறது. வழிபாட்டுக்கு உரியதாக மதிக்கப்படும் இதில் சிலர் தங்கள் பெயரை செதுக்கியிருக்கிறார்கள். அவை தமிழ் எழுத்துகளாக இருப்பது     நெஞ்சில் வலியை உண்டாக்கியது.
.
இந்த வாழும் மரத்தை பார்த்து திரும்பும்போதுஇறைவன் படைப்பில் புரிந்துகொள்ளமுடியாத சில ஆச்சரியங்கள் அவன் மீது கொண்டுள்ள நம்பிக்கையை அதிகரிக்கசெய்கிறது.” என்ற இஸ்ரேலிய பழமொழி  நினைவிற்கு வந்ததது.






17/12/13

குதிரை சொல்லும் கதை


இந்த ஆண்டு அமுத சுரபி தீபாவளி மலர் வெளியிட்டிருக்கும் எனது கட்டுரை 



சென்னை தீவுதிடலின் எதிரில் கடலை பார்த்து   சற்றே கழுத்தை  சாய்த்து கம்பீரமாக  தன்மீது வாளூடன்  அமர்ந்திருக்கும் ஒரு வீரனுடன்  கடந்த 175 ஆண்டுகளாக  நிற்கிறது. கிரேக்க பாணியில் வடிவமைக்கபட்ட அந்த குதிரை சிலை.  உலகில்  குதிரை மீது மனிதர் அமர்ந்த நிலையில் இருக்கும் சிலைகள்  ஐந்து இடங்களில் மட்டுமே இருக்கிறது. மன்னர்களுக்கு மட்டுமே அளிக்கபட்ட இந்த கெளரவம்  இந்தியாவில் ஒரு ஆங்கில கவர்னருக்கு அளிக்கபட்டிருக்கிறது,  அவர் தாமஸ் மன்றோ. இந்தியாவில் ஒரு சிப்பாயாக வாழ்க்கையைத் தொடங்கி, 12 ஆண்டுகள் ராணுவத்தில் பணியாற்றிய பிறகு, நிர்வாகப் பணிக்கு மாற்றம் செய்யப்பட்டவர் தாமஸ் மன்றோ.  தனது கடின உழைப்பால் முன்னேறி ஆளுனராக உயர்ந்தவர்.  1820 முதல் 1827 வரை சென்னை மாநில கவர்னாராகயிருந்தவர். தனது நேர்மையான நிர்வாகத்தால் மக்கள் மனதில் இடம் பெற்றிருந்த ஒரு சில ஆங்கிலேய அதிகாரிகளில் இவரும் ஒருவர் . இன்றுள்ள தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களின் பெரும்பான்மையான பகுதியும் திருப்பத்தூர் பகுதியும் ஒன்றாக  பாராமகால் என்று அறிய பட்டபகுதியில் ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக, கலைக்டராக இருந்தவர். மாவட்டம் முழுவதும் குதிரையில் அலைந்து திரிந்து விவசாயிகளின் உண்மை நிலைமையை நேரடியாக அறிந்துகொண்ட மன்றோ. விவசாயிகளின் வரிச்சுமையை மாற்றி அமைக்க முற்பட்டவர்.தன் பதவிகாலம் முடிந்ததும் இங்கிலாந்து செல்லும் முன் தன்பணியாற்றிய கடப்பா பகுதியில் பயணம் செய்தபோது  1827ல் இறந்துபோனார். இவர்அந்த பகுதியிலிருக்கும் ராகவேந்திரர் சமாதியில் வழிபட்டபோது அவர் இவருக்கு காட்சி கொடுத்தாதாக அரசு குறிப்புகளில் பதிவாகியிருக்கிறது. இப்போதும், கடப்பாவில் உள்ள ஒரு அனுமார் கோயிலில் ராமர் சீதை படங்களுடன் தாமஸ் மன்றோவின் படமும் இருக்கிறது. அங்கே, தினமும் நடக்கும் பூஜையில் மன்றோ படத்துக்கும் தீபாராதனை காட்டப்படுகிறது.
மக்களின் நன்மதிப்பை பெற்றிருந்த இந்த அதிகாரிக்கு  மக்களிடம் நன்கொடை பெற்று ஒரு சிலை வைக்கமுடிவு செய்யபட்டவுடன்  இங்கிலாந்தின் எஃப் சான்ட்ரீ என்ற புகழ்பெற்ற சிற்பி நியமிக்கபடுகிறார். மாடலுக்கான அரபிகுதிரையை  4ம் ஜார்ஜ்  மன்னரின் லாயத்திலிருந்து தேர்ந்தெடுத்து பணியை  செய்யத அந்த கலைஞன் சந்தித்த அடுத்த சவால் மன்றோவின் முழு உருவபடம் எதுமில்லாததினால்  கிடைத்த மார்பளவு படத்திலிருந்து  உருவாக்கவேண்டியிருந்தது
இந்த 6 டன் எடையுள்ள சிலை முதலில் பிளாஸ்ட் ஆப் பாரிஸ்ஸில் வடிவமைக்கபட்டு பின்னர் வெண்கலத்தில் வார்க்கபட்டிருக்கிறது. குதிரை, வால்பகுதி,  மன்றோவின்உருவம், வாள்இருக்கும்பகுதி என 5 தனிதனிப்பகுதிகளாக  கப்பலில் கொண்டுவரபட்டு  இங்கு இணைக்கபட்டிருக்கிறது.  அன்று சென்னையில் பெரிய அளவில் துறைமுகமேஇல்லாத  நிலையில் கப்பலிலிருந்து சிறுபடகுகளில் பகுதிகளாக கரைக்கு கொண்டுவந்திருக்கிறார்கள். இந்த 15 அடி சிலையை மேலும் கம்பீரமாக்க 25 அடியில் ஒரு பீடம் உள்ளூர் கலைஞர்களின் உதவியுடன்  செய்திருக்கிறது ஆங்கிலேய நிறுவனம்.



.இந்த சிலையை படைத்த சிற்பியிடம் ஏறி அமர்வதற்கு சேணத்திலிருந்து 

 தொங்கும் கால்வைக்கும் வளையங்கள் இல்லையே என அவரது சிறுவயது

 மகன் கேட்டதால் தற்கொலை செய்துகொண்டுவிட்டாதாக  சொல்லப்படுவது

 ஒரு வளமான கற்பனை கதை என்கிறார் வி. ஸ்ரீராம். இவர் சென்னை நகரின்

பாரம்பரியத்தை பற்றி ஆராயந்து கட்டுரைகள் எழுதியிருப்பவர். படைத்த

 சிற்பி சான்ட்ரீ பல ஆண்டுகளுக்கு பின்னர் இதய நோயால் இறந்ததற்கான

குறிப்புகள் இருக்கின்றன என்கிறார் இவர். செம்மொழி மாநாட்டிற்கு முன்

  ஆங்கிலேயர்களின் பெயரில் இருந்த தெருக்களை மாற்றியபோது இந்த

சிலையையும் எடுக்க தீர்மானித்திருந்த அரசின் முடிவு எதனாலோ

 கைவிடபட்டது


 40 ஆண்டுகாலம் உதவிகலைக்டெர் முதல் கவர்னர் வரை நேர்மையாக ஊழல்புரியாத அதிகாரியாக பணியாற்றிய தாம்ஸ் மன்றோ அன்றைய ஆட்சியில் துளிர்விட  துவங்கிய லஞ்சம் பற்றி 1795ல்  எழுதிய குறிப்பு இது

  இந்தியாவின் வறுமைக்கு முக்கியக் காரணம், அரசு இயந்திரத்தின் நிர்வாகக் குளறுபடிகளே. ஒரு மாவட்ட ஆட்சித் தலைவரே முறைகேடான செயல்களுக்கு துணை நின்றால், அவரால் எப்படி ஒரு நேர்மையான நிர்வாகத்தை நடத்த முடியும் "கலெக்டர்கள் தாங்கள் பதவிக்கு வந்து சில ஆண்டுகளிலேயே சொத்துகளைக் குவித்துவிடுகிறார்கள். வருவாய்க்கு மேல் டாம்பீகமாகச் செலவு செய்கிறார்கள். நாட்டைச் சுரண்டும் கலெக்டர் (அன்றைக்கு அமைச்சர்கள் கிடையாது; கலெக்டர்கள்தான் ஆட்சியாளர்கள்) நாடு  எப்படி முன்னேறும்?

 மூதறிஞர் ராஜாஜி பதவிஏற்கும் முன் தன்னை சந்திக்கவரும் இளம்

அதிகாரிகளுக்கு  நிர்வாகத்தில் மன்றோவின் அணுகுமுறை பற்றி படிக்க

 சொல்லுவாராம்.

பொதுவாழ்வில் தூய்மைக்கும்  நிர்வாகத்தில் நேர்மைக்கும்   குரல் கொடுத்த

முதல் மனிதன்  இவர் என அறியும்போது மக்கள் வரிப் பணத்தில் இல்லாமல்

 நன்கொடைகள் மூலம் எழுப்பபட்ட இந்த சிலை இன்னும்  கம்பீரமாக

தெரிகிறது.