அமெரிக்கா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அமெரிக்கா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

8/10/17

சிலைகள் எழுப்பியிருக்கும் பிரச்சனை

       
 
அமெரிக்காவில் வெர்ஜினியா மாநிலத்திலிருக்கும் ஒரு நகரம் சார்லொட்டஸ்வில் (Charlottesvulle). அமைதியான இந்த நகரில் எழுந்த ஒரு போராட்டம், இன்று அமெரிக்காவின் சிலநகரங்களில் இனவெறிப்போராட்டமாகப் பரவிக்கொண்டிருக்கிறது. நகரப் பார்க்கில் இருக்கும் ராபர்ட் இ-லீ என்பவரின் சிலையினால் எழுந்தது பிரச்னை.
அமெரிக்கா ஒரு ஐக்கியநாடாக, பிறந்தவுடன் சில மாநிலங்களை இணைக்க ஒரு நீண்ட உள்நாட்டுபோரை சந்தித்ததைச் சரித்திரம். சொல்லுகிறது 1861 முதல் 1865 வரை நடைபெற்ற இந்த உள்நாட்டுப் போருக்கான காரணங்களில் ஒன்று. .அடிமைகளின் விடுதலை. முறையை ஒழிப்பதை முன்னிறுத்தி ஆபிரகாம் லிங்கன் அந்த   தலைமையில் ஒரு படையும், அடிமைகளை விடுதலை செய்யக் கூடாது என்பதை முன்னிறுத்தி ஜெபர்சன் டேவிஸ் தலைமையில் மற்றொரு படையும் போரில் ஈடுபட்இதிஸீல் ஜெபர்சன் டேவிஸ் அணியியை ஜெனரல் ராபர்ட் இ-லீ வழிநடத்தினார்.
இந்தப் போரில் ஆபிரகாம் ஆபிரஹாம் லிங்கள் வெற்றி பெற்றாலும் அவரை எதிர்த்துப் போராடிய மாநிலங்களில் ஆட்சி செய்யதவர்களின் சிலைகளும் பெயர்களைத்தாங்கிய பொதுக் கட்டிடங்களும் தொடர்ந்து கொண்டிருந்தன. காலப் போக்கில் மக்கள் அவைகளை தங்கள் மாநிலத்தின் சரித்திர அடையாளாங்களாக ஏற்றுகொண்டார்கள்.
வெர்ஜினியா மாகாணம் சார்லோட்டஸ்வில் நகரில்  இந்த ஜெனரல் ராபர்ட் இ-லீ-யின் சிலை உள்ளது. அந்தச் சிலையை அகற்ற நகர நிர்வாகம் முடிவு செய்தது. சொல்லப்பட்ட காரணம் இம்மாதிரி சிலைகள் அமெரிக்காவில் வெள்ளையினத்தவரின்களின் ஆதிக்கத்தைக் காட்டும் அடையாளம். என்பது. முடிவு செய்து ஒராண்டாகியும் சிலை அகற்றபடாதால், அதைச்செய்வதற்கு இயந்திரங்களுடன் ஒரு தன்னார்வ குழு பார்க்கில் குழுமிவிட்டது இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மற்றொரு குழு சார்லோட்டஸ்வில் நகரில் பேரணி நடத்தினர். அதேநேரம் இன ஒற்றுமையை வலியுறுத்தும் ஒரு  குழுவினரும் அதே பகுதியில் கூடினர்.
 இருதரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் பெரிய கலவரமாக வெடித்தது அதில் நகரின் முக்கிய மனித உரிமை ஆர்வலர் ஒருவர் இறந்துவிட்டார். இது தேசிய சின்னமாக அறிவிக்கபட்ட  பல சின்னங்களில்  இந்தச் சிலையும் ஒன்று. அகற்ற நகரகவுன்சிலுக்கு அதிகாரமில்லை என்று போடப்பட்ட வழக்கில் நீதிபதி, அகற்ற தடையுத்தரவு பிறபித்து சில நகரங்களில் நடந்திருப்பதைப் போல சிலைஉடைக்கபட்டுவிடக்கூடாது என்பதற்காக சிலையை கருப்பு துணியால் மூடி பாதுகாக்க  உத்திரவிட்டிருக்கிறார்.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து மெரிலாண்ட், ஃபளோரிடா வடக்கு காரோலினா போன்ற மாநிலங்களில் உள்ள சில பெரிய நகர கவுன்சில்கள் இம்மாதிரி இருக்கும் சிலைகளை அகற்ற தீர்மானங்கள் போட்டு இரவோடு இரவாக அகற்றவும் செய்துவிட்டார்கள். துர்ஹாம் என்ற நகரில் போராட்டக்கார்களே சிலையைப் பீடத்திலிருந்து கழட்டி கயற்றில் கட்டி கிரேன் மூலம் பகலில் மக்கள் கைதட்டலுடன் அகற்றியிருக்கிறார்கள். சில இடங்களில் சிலைகள் கறுப்பு துணிகளால் மூடப்பட்டன. சில சிலைகள் மரப்பெட்டிகளால் மறைக்கபட்டன.
நகர பார்க்குகளை நிர்வகிக்கும் உரிமை நகர கவுன்சில்களுக்கு இருந்தாலும் இப்படி சிலைகளைச் சின்னங்களையும் அகற்றும் உரிமைகளை ரத்து செய்திருப்பதாகச் சில மாநில அரசுகள் அறிவித்திருக்கின்றன.  இந்த முடிவை எதிர்த்து வழக்குகளும் போடபட்டிருக்கின்றன
இம்மாதிரி நாட்டின் ஒற்றுமையைக் குலைக்கும் இனவெறிச் செயல்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஸ்டன் நகரில் பல்லாயிரக் கணக்கானோர் கலந்து கொண்ட பிரம்மாண்ட பேரணி ஒன்றும் அண்மையில் நடைபெற்றது
இந்த எதிர்ப்பும் போராட்டமும் ஒரே இரவில் எழுந்தவை இல்லை. 2015ல் கொலைவெறி பிடித்த வெள்ளை இன அமெரிக்கர், ஒருவர் பல கறுப்பினத்தவரை சுட்டுக்கொன்றதில்  எழுந்த கோபம் அடங்காமல் மெல்ல கனிந்து கொண்டிருந்தது. “கருப்பு இனத்தவரின் உயிர்களும் முக்கியமானது(Black lives matter movement) என்று ஒரு இயக்கம் எழுந்த்து. அது தான் இதைச்செய்து கொன்டிருக்கிறது
.
அமெரிக்காவின் பல நகர கவுன்சிகளில் கறுப்பினத்தவர் பெருமளவில் இடம் பெற்றிருப்பதால் இதைச் செய்யத் துவங்கியிருக்கிறார்கள். சிலைகளை அகற்றுவது ஒரு அடையாளமே தவிர பிரச்னையின் ஆழம் பெரிது.
இந்த ஆண்டு பிப்ரவரியில் யேல் பல்கலைகழகம் இந்தப் பிர்ச்னையை சந்தித்தது. அந்தப் பலகலைகழகத்திலிருக்கும் பல கல்லூரிகளில் ஓன்று கால்ஹென் காலேஜ்(CALHOUN COLLEGE) செல்வந்தரான அவரது நன்கொடையினால் உருவாக்கப்பட்ட இந்தக் கல்லூரிக்கு அவரது பெயரிடப்பட்டு அதன் முகப்பில் அவர் சிலையும் நிறுவப்பட்டு பலகாலமாக இருந்து வருகிறது. திரு கால்ஹென் கறுப்பின அடிமை முறையை ஆதரித்தவர், அதனால் அந்தப் பெயரை மாற்றிச் சிலையை அப்புறபடுத்துங்கள் என மாணவர்கள் போராட்டம் செய்தனர். முதலில் வெகுகடுமையாக எதிர்த்த பல்கலை கழக நிர்வாகம் நீண்ட போரட்டங்களுக்கு பின்னர் தன் முடிவை மாற்றிக்கொண்டு கல்லூரியின் பெயரை  இப்போது மாற்றியிருக்கிறது. இதுபோல பல பல்கலைகழங்களில் இப்படி நனகொடை கொடுத்தவர்களின் பெயர்களும், சிலைகளும் இருப்பதால் இம் மாதிரிப் போராட்டங்கள் அங்கும் தொடரலாம் என்ற அச்சம் எழுந்திருக்கிறது.
இதுவரை 60க்குமேல் சிலைகளும் அடையாளங்களும் அகற்றப்பட்டிருக்கின்றன, . நமது உள்நட்டுப் போரும் அடிமைமுறை ஒழிப்பும் நாட்டின் சரித்திரம். அதில் பங்குபெற்றவர்களும் அமெரிக்கர்கள் தான். 20ம் நூற்றாண்டில் நிறுவபட்ட சிலைகளை இப்போது அகற்ற போராடுவது அநாகரிகம். சரித்திரத்தை நாம் ஏன் மறைக்க வேண்டும்? என இருநிற இனத்தவரும் இணைந்த குழு ஒன்றும் குரல் எழுப்ப்யிருக்கிறது
.
இந்த இனமோதலை அமெரிக்க அதிபர் டிரம்ப் சரியான விதத்தில் கையாளவில்ல என அனைத்து தரப்பினரும் விமர்சிக்கின்றனர். பிர்ச்சனை தீவிரமாக இருந்தபோது “இன்று ராப்ர்ட்- இ லீ நாளை ஜார்ஜ் வாஷிங்டனா? பின்னர் ஜெபர்ஸ்னா? அவர்களும் அடிமைகளை வைத்திருந்தவர்கள் தானே?” என்ற அவரது பேச்சு அமெரிக்க வெள்ளையினத்தவரின் ஆணவ வெளிபாடாகப் புரிந்துகொள்ளபட்டது. வழக்கம் போலப் பின்னால் அவர் தெரிவித்த குழப்பான விளக்கங்கள் எடுபடவில்லை.
உலக சரித்திரத்தை உற்று நோக்கினால்  பெரிய போராடங்களுக்கும் புரட்சிக்கும்  பின்னால் ஒரு தனி மனிதனின் செயல் தீப்பொறியாகத் துவங்கியிருக்கும். ஒரு கோபக்காரின் துப்பாக்கி சூட்டில் இறந்தவர்களுக்கு விலையாக் இந்தப் போராட்டம் எழுந்திருக்கிறது.
இது வலுக்குமா? சரியான நடவடிக்கைகள்மூலம் டிரம்ப் பின் நிர்வாகம் வலுவிழக்கச்செய்யுமா?
 உலகம் பார்த்துக்கொண்டிருக்கிறது


 

9/6/17

டிரம்ப் தான் பிரச்சனையா?



 கடந்த சில வாரங்களாகத் தலைப்பு செய்தியாக அடிபட்டுக்கொண்டிருக்கும் இதைப் பற்றி ஓர் அலசல்
அமெரிக்காவில் அமெரிக்கர்களுக்கு அதிக வேலை வாய்ப்பு என்ற கோஷத்துடன் தேர்தலில்  வென்ற, அதிபர் டொனால்டு டிரம்ப் தலைமையிலான அரசு பதவியேற்ற பின், அங்கு பணியாற்றும் இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டவர்களுக்கு வழங்கப்படும், 'எச் - 1 பி' விசாக்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.                     
மேலும், 'வெளிநாடுகளைச் சேர்ந்த கம்ப்யூட்டர் புரோகிராமர்களை, எச் - 1 பி விசா மூலம் அமெரிக்காவுக்கு வரவழைத்துப் பணியமர்த்தும் போது, அவர்களுக்குக் கூடுதல் சம்பளம் தர வேண்டும்' எனவும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
இதனால், அமெரிக்காவில் செயல்பட்டு வரும், இந்திய, ஐ.டி., நிறுவனங்கள், இந்தியாவில் இருந்து ஊழியர்களைப் பணியமர்த்துவதில் சிக்கல் நீடித்து வருகிறது. இதையடுத்து, கூடுதல் சம்பளம் மற்றும் விசா கெடுபிடி காரண மாக, பணியில் இருக்கும் ஊழியர்களை ஆட் குறைப்பு செய்ய, ஐ.டி., நிறுவனங்கள் முடிவு செய்துஉள்ளன.
இன்போசிஸ், டெக் மகேந்திரா உட்பட, ஏழு முக்கிய, ஐ.டி., நிறுவனங்கள், இந்த ஆண்டில், இன்போசிஸ், டெக் மகேந்திரா உட்பட, ஏழு முக்கிய, ஐ.டி., நிறுவனங்கள், இந்த ஆண்டில், 56 ஆயிரம் ஊழியர்களை, ஆட்குறைப்பு செய்ய திட்டமிட்டு வருவதாகத் தகவல் வெளியாகி யுள்ளது.
இது எந்தளவுக்கு உண்மை? என்பதை ஆராய்ந்ததில் தெரிந்த விஷயங்கள்
இந்திய - ஐ.டி., நிறுவனங்கள், ஆட்குறைப்பு நடவடிக்கையை, அமெரிக்க தேர்தலுக்கு முன்னரே துவங்கிவிட்டன. அமெரிக்க அதிபரின் அறிவிப்பால்  அது தலைப்பு செய்தியாகியிருக்கிறது.

கடந்த பிப்ரவரி மாதம் நாஸ்காம் இந்தியா தலைமைப்பண்பு மாநாட்டில், ஐடி துறைப் பணியாளர்கள் சந்திக்கவிருக்கும் சவால்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. அதில், அடுத்த மூன்றாண்டுகளில் ஐடி துறையில் பணியாற்றும் பலரும் தேவையற்றவர்களாகிவிடுவார்கள். நவீனத் தொழில்நுட்ப மாற்றங்களால், 50-60 சதவிகிதம் வரையிலான பணியாளர்களைத் தக்கவைப்பதில் நிறுவனங்கள் கடும் சவால்களைச் சந்திக்க நேரிடும். புதிதாகக் கற்றுக்கொள்வதில் உள்ள சிரமங்களால், 35 வயதுக்கு மேற்பட்டோர் வேலை இழக்கும் அபாயம் உள்ளது. மேலும், இனி வரும் காலங்களில் வேலை இழக்கும் ஐடி நிறுவன ஊழியர்களுக்கு வேறு வேலை கிடைப்பதிலும் பல சிரமங்கள் உள்ளன’ எனக் குறிப்பிட்டு, மெக்கின்ஸி நிறுவனம் ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது.
 ஓராண்டுக்கும் மேலாக, தகவல் தொழில் நுட்பம் சார்ந்த புதிய வாய்ப்புகள், வெளிநாடு களைச் சேர்ந்த நிறுவனங்களுக்கு அதிக அளவில் கிடைத்து வருகின்றன. வெளிநாட்டு நிறுவனங்களுடன் போட்டி போட்டு, புதிய தொழில் வாய்ப்புகளை பெறும் நிலையில், இந்திய - ஐ.டி., நிறுவனங்கள் இல்லை.
சர்வதேச போட்டி, தொழில் மந்தநிலை போன்ற காரணங்களால், இந்திய, ஐ.டி., துறை, கடுமை யான நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. பல் வேறு வாய்ப்புகளும், வெளிநாட்டு நிறுவனங்களுக்குச் செல்கின்றன. இந்நிலையில்,அமெரிக்காவில், அதிபர் டொனால்டு டிரம்ப் அரசு, எச் - 1 பி விசாவுக்கு விதித்து வரும் கடுமையான கட்டுப்பாடுகள் காரணமாக, ஊழியர்களுக்கான செலவு அதிகரித்து வருகிறது; செலவைக் கணிசமாக குறைக்க வேண்டிய கட்டாயத்தில்  இருக்கும் நிறுவனங்கள் இதைப் பயன்படுத்திக்கொண்டு ஊழியர் களின் எண்ணிக்கையைக் குறைக்கும் நடவடிக் கையில், இந்திய - ஐ.டி., நிறுவனங்கள் இறங்கி யுள்ளது., எனவே, திறன் குறைந்த மற்றும் மிக அதிக சம்பளம் பெறும் ஊழியர்களின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. இந்திய - ஐ.டி., துறை.     நாஸ்காம்  மதிப்பீட்டின் படி, இந்த ஆண்டில், 56 ஆயிரம் ஊழியர்கள் வரை, ஆட்குறைப்பு செய்யப்பட வாய்ப்புள்ளது

ஆட்குறைப்பு காரணம் இது மட்டுமில்லை. நாம் சர்வதேச தேவைகளுக்கெற்ற்ப அப்டேட் ஆக வில்லை என்பது தான்  உண்மை என்கிறார். வா. மணிகண்டன். இவர் பல பயிற்சிகள் பெற்ற பென்பொறியாளர். பங்களூருவில் பணியிலிருக்கிறார்.
“கடந்த ஏழெட்டு ஆண்டுகளில் தகவல் தொழில்நுட்பத்துறை வெகு வேகமாக புதிய பரப்புகளை அடைந்திருக்கிறது. ஆராய்ச்சிக் கட்டுரைகளில் மட்டுமே மொட்டுகளாக இருந்த சொற்கள் எல்லாம் இன்றைக்கு பூத்துக் காயாகி கனியாகி நிற்கின்றன. இந்தத் துறையின் வேகம் அலாதியானது. ஆனால் நாம்தான் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பாக எதைக் கற்றுக் கொண்டிருந்தோமோ அதையே கற்றுக் கொண்டிருக்கிறோம். இந்திய வேலைச் சந்தையில் தகவல் தொழில்நுட்பத்துறையின் புதிய பிரிவுகளுக்கு ஆட்கள் இல்லை என்று பேசத் தொடங்கியிருக்கிறார்கள். வேலையில் இருப்பவர்களும் சரி, மாணவர்களும் சரி புதிய பிரிவுகளைப் பற்றி தெளிவான புரிதல்களை உருவாக்கிக் கொள்ள வேண்டிய அவசியம் உண்டாகியிருக்கிறது.

இன்றைக்கு மென்பொருள் துறையில் வேலையில் இருக்கிறவர்களின் பெரிய பிரச்சினை தம்மை ஒரு மென்பொருளோடு பிணைத்துக் கொள்வதுதான். ஆரக்கிளிலில் வேலை செய்தால் அதை மட்டுமே தெரிந்து வைத்துக் கொண்டால் போதும் என்கிற மனநிலை பலருக்கும் இருக்கிறது. மென்பொருள்களைத் தெரிந்து வைத்துக் கொள்வது அவசியம்தான் என்றாலும் அது மட்டுமே போதுமானது இல்லை. இன்றைக்கு ஆரக்கிள் இருக்கிறது. நாளைக்கு டேரக்கிள் என்று புதியதாக ஏதேனும் வரக் கூடும். எந்தவொரு மென்பொருளையுமே பத்து நாட்கள் மண்டையை உடைத்தால் கற்றுக் கொள்ள முடியும். அது பெரிய காரியமே இல்லை. அப்படியென்றால் எது பெரிய காரியம்? நம்முடைய துறை சார்ந்த அறிவை வளர்த்துக் கொள்வது. இன்றைக்கு தொலைத் தொடர்புத்துறைக்கான ப்ராஜக்ட் ஒன்றை .net ஐ வைத்துச் செய்து கொடுத்தால் .netஇல் பிஸ்தாவாக இருப்பதைவிடவும் தொலைத்தொடர்புத் துறையில் பிஸ்தாவாக இருப்பதுதான் பெரிய காரியம். உற்பத்தி (manufacturing), ஊர்தி (automobile) என எந்தத் துறையில் வேலை செய்கிறோமோ அதைக் கற்று வைத்துக் கொள்ள வேண்டும். domain knowledge என்பார்கள். அக்குவேறு ஆணி வேறாகத் தெரிந்து வைத்திருக்க வேண்டும். அப்படியொரு அறிவை வளர்த்துக் கொண்டவர்கள் என்னதான் மென்பொருள் மாறினாலும் சமாளித்துவிடலாம்.

புதிதாக என்ன களம் உருவானாலும் அதை நம் துறையில் எப்படிப் பயன்படுத்த முடியும் என்று தெரிந்து வைத்திருக்கிற ஆட்களுக்கு அவசியம் இருந்து கொண்டேயிருக்கும். அப்படிப் பட்டவர்களுக்கு ஆயிரம் வாய்ப்புகளா என்று கேட்டால், ஆம், ஆயிரம் வாய்ப்புகள்தான். என்கிறார்.
கிபி 2000 ஆம் ஆண்டுவாக்கில் சி, சி++, ஜாவா அதன் பிறகு .net என்று படித்துக்
கொண்டிருந்தோம். இன்றைக்கும் கிட்டத்தட்ட அதே நிலைமையில்தான் இருக்கிறோம். கல்லூரிகளில் இத்தகைய பாடங்களைத்தான் சொல்லித் தருகிறார்கள். Cloud, IoT, Business Intelligence மாதிரியான புதிய களங்களைக் கல்லூரிகள் சொல்லித் தருவதில்லை. சுடச்சுட வளர்ந்து வரும் பிரிவுகளைப் பற்றிக் கற்றுத் தருகிற பயிற்சி நிறுவனங்களும் வெகு குறைவு.  என்கிறார் திரு  குஹன் ரமணன். இவர் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த பணிகளை  உலகளவில் மேற்கொள்ளும் ஒரு நிறுவனத்தின் இயக்குநர்.
 எனவே பிரச்சினைகளுக்கு டிரம்ப் மட்டுமே காரணம் இல்லை நிலவும்  டிரெண்டும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்