18/12/11

சென்னையை கலக்கிய ஹிலாரி கிளிண்டன்





சென்னையை கலக்கிய ஹிலாரி  கிளிண்டன் 

அமெரிக்க அதிபரின் வெளியுறவு கொளகைகளை வகுப்பதிலும் வழி நடத்துவதிலும் மிக முக்கிய பணியாற்றுபவர் அமெரிக்க வெளியுறவு செயலர். முன்னாள் அமெரிக்க அதிபரின் மனைவி. செனட்டர், அதிபர் வேட்பாளருக்கு  தேர்தலில் உள்கட்சி தேர்தலில் ஒமாவுடன் போட்டியயிட்ட   அரசியல்வாதி  என்று பல முகங்களை கொண்ட ஹிலாரி கிண்டன். இப்போது அந்த பதவியிலிருப்பவர்.  இந்தமுறை இந்தியபயணத்தில் அவர் வர விருபியது சென்னை.  இதுவரை இந்த பத்வியிலிருந்தவர்கள் சென்னைக்கு வந்தலில்லை. அமெரிக்க  துணை அதிபரும் அமைசர்களும்  மட்டும் பயன்படுத்தும் அமெரிக்க விமானப்படையின்  விசேஷ போயிங் விமானத்தில் ஐந்து பெண அதிகாரிகள் உள்ளிட்ட 19 பாதுகாப்பு படையினர், 2 மோப்ப நாய்கள்.  10 பத்திரிகையளார்கள், 5 அரசு அதிகாரிகளுடன்   டில்லியிலிருந்து வந்து விமான் நிலையத்தில்  வந்து இறங்கியவுடன் நேரே பங்குகொள்ள வேண்டிய நிகழச்சிகளுக்கு  சென்றார். பரபரவென்று  ௪ மணிநேரத்தில்  ௪ விழாக்களில் பங்கு கொண்டு கலக்கினார். கருநீலசூட்டில் கருப்புகண்ணாடி, கையில் சின்ன ஸ்கேனர், காலரில் மைக் என அவர் கூடவே வந்த ” “மென் இன் பிளாக்“பாதுகாப்புபடைக்கு எந்த வகையிலும் சளைத்தவர்கள் இல்லை என்று காட்டியது  நமது சென்னை போலீசின் சிறப்பு விஐபி பாதுகாப்பு படை. 18 கார்கள் பவனி வந்தாலும் நகரில் எந்த இடத்திலும் போக்குவரத்து நிறுத்தப்படாமல் ஒரு அசாம்பவிதமும் இல்லாமல் படு திறமியாக சமாளித்தார்கள், ஹிலாரி கலந்துகொண்ட நிகழச்சிகளின் ஒரு நேரடி ரிபோர்ட்.
                         ***********

கோட்டுர்புரத்தில் கலைஞரின் கனவு கட்டிடங்களில் ஒன்றான அண்ணா நூலகத்தின் ஆடிட்டோரியத்தில் தூதரகத்தினரால் விசேஷமாக அழைக்கபட்ட நகரின் பிரமுகர்கள்,. பேராசியர்கள் மாணவர்கள்  என 700க்கும் மேற்பட்டவ்ர்கள் கலந்த கொண்ட கூட்டம் முதல்நிகழ்ச்சி.  பாதுகாப்பு காரணத்தினால் முன்னாதாக வரச் சொல்லியிருந்ததால் வந்து  ஒரு மணி நேரம் பொறுமையுடன் காத்திருந்த கூட்டத்தில் கண்ணில் பட்டவர்கள்.    கார்திக்சிதம்பரம், பூங்கோதை ஆலடிஅருணாஆற்காட் இளவரசர், சுதாரகுநாதன்,  கமலஹாசன் கெளதமி.  வெள்ளை பேண்ட், வெள்ளை ஷூ, நீல பூக்கள் போட்ட பட்டு புஷ்கோட்  அணிந்து ஹிலாரி மேடை ஏறி அமெரிக்க ஆக்ஸெண்ட்ட்டில் “வணக்கம்””’’’”“ என்றவுடன் அரங்கம் கைதட்டலில் அதிர்ந்தது.
மேடைக்கு ஹிலாரியை அழைத்து வந்தவர் ஒரு நிமிடத்தில் தன் வரவேற்பை முடித்து அமர்ந்துவிட்டார்.  அவரை பலருக்கு யாரென்று தெரியவில்லை. கடந்த 18 ஆண்டுகளில் இந்தியா எப்படி சாதித்து காட்டமுடியும் என்பதற்கு  தமிழ் நாடு மிக சிறந்த முன் உதாரணமாக இருப்பது கண்டுவியந்து போன நான் இம்முறை இங்குவர விரும்பினேன் என்று துவக்கி 40 நிமிடம் ஹிலாரி பேசினார்.பேச்சின் நடுவே  இந்த நூலுகத்தின் தலமை நூலகருக்கும் அமெரிக்காவிற்கும் ஒரு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த தொடர்பு இருபதாக குறிபிட்டுவிட்டு அவரை பார்த்து புன்கைத்தார். விழாவிற்கு பின்னர் அவரை சந்தித்ததில் தெரிந்து கொண்டவிஷயம் நூலகர் நரேஷ் 2005ல் கடலூர் மாவட்டத்தின் கல்வி அதிகாரியாக பணியாற்றிய போது  சூனாமியால் பதிக்கபட்ட பள்ளி குழந்தைகளுக்கு படிப்பை தொடர              விசேஷ ஏற்பாடுகளை வெற்றிகரமாக் செய்த அதிகாரி எனபதையும் அபோது வந்த அதிபர் கிளீண்டனால் பராட்டபட்டவர் எனபதையும்  “தூதரக அதிகாரிகள் என்னை பற்றி சொல்லியிருக்கலாம்.. அதைதிருமதி ஹிலாரி குறிப்பிட்டது சந்தோஷமாகயிருகிறது.” “ என்றார் இபோது கல்வித்துறையின் இணை டைரக்டராகவும்  நூலக தலமைக்கும் பொறுப்பேற்றிருக்கும் நரேஷ்
 கூட்டம் முடிந்ததும்  கோட்டையில் அம்மாவை சந்திக்க புறப்பட்டார் ஹில்லாரி.  வெளியே நம் காதில் விழுந்த கமெண்ட்  “ அருமையான ஸ்பீச: ” “புதிய விஷயம் ஒன்றும் இல்லை” “: போன்ற  மாணவர்களின்.  பல விதமாக கமெண்ட்களுக்கிடையே பேசப்பட்ட ஒரு விஷயம் ஏன் கேள்விகள் அனுமதிக்க் படவில்லை? ..

                .
                                                                             *************


தெனிந்தியாவின் பல  நகர்புற,கிராமபஞ்சாயத்து பெண்தலைவர்கள், சுய உதவிகுழுகளின் தலைவிகள் போன்ற ஆசிரியயைகள் போன்ற உழைக்கும் மகிளிர் அணிகளின் கூட்டமைப்பின் தலைமையக்ம் சென்ன்னையிலிருக்கிறது. கோட்டயில் அம்மாவை சந்தித்தபின் ஹிலாரிகிளிண்டன் கலந்த கொண்ட கூட்டம் இவர்களுடையது.  மேடை ஏறியவுனயே  என் நல்ல நணபரும் உங்கள் எல்லோருடைய நண்பருமான ஜெயா விற்கு இங்கு வந்தறகு நன்றி சொல்லவேண்டும். என துவக்கி 1978லிருந்து உங்கள் அமைப்பு செய்துவரும் நல்ல பணிகளையும் 700லிருந்து இன்று ப்ல லட்சமாக வளர்ந்துவருவதை நான் வியந்து பார்த்து கொண்டிருகிறேன் என்று சொல்லி  விரைவில் ஒரு பெரிய அமெரிக்க நிதி நிறுவனம் உங்களுக்கு தொடர்ந்த  பயிற்சி அளிக்க  ஏற்பாடுகளை செய்யபோகிறது என்ற தகவலையும் அறிவித்தார். நீங்கள் பின்பற்ற  உங்களது தலைவியை விட வேறு எந்த ரோல்மாடலும் வேண்டாம் என்று புகழந்து   எங்கே அவர்? ஜெயா கம். கம் ஹியர் என தன்னருகில் அழைத்து நிறுத்திகொண்டார். கலந்து கொண்டவர்களில் எத்தனைபேருக்கு ஹில்லாரியின் அமெரிக்க ஆங்கிலம் புரிந்ததோ ஆனால்  ஒவொருமுறை பர்ரட்டபடும்போது கைதட்டி மகிழந்தார்கள்.  இந்த அமைப்பின் தலவர் திரும்தி ஜெயா அருணாசலம்  2005  நாட்டின் பொருளாதார வளர்ச்சிகாக பாடுபடும் தலவர்களுக்கு வழங்கபடும் குளோபல் லீடர்ஷிப்  விருதுபெற்றவர். தனிபட்ட முறையிலும் ஹிலாரி கிளிண்டனை அறிந்தவர். விழாவில் பங்கேறகாமல் ஆபீஸில் பணியிலிருந்தவர்களையும்  அருகில் சென்று வாழ்த்திவிட்டு கலாஷேத்திராவில் அடுத்த நிகழச்சிக்கு புறபட்டார்,

                                    ********
 மேடை, நாற்காலி, மாலை, பேனர், மைக் பிகாசமான விளக்குகள் எதுவும் இல்லாமல்  மிக குறைந்த அழைப்பாளார்களுடன் கலாஷேத்திராவின்  நிகழ்ச்சிகள்.  ஹில்லாரி வரும் முன்னே வந்த பாதுகாப்பு அதிகாரிகள். இடத்தை மட்டுமில்லாமல் நடனத்திற்கு தயாராக் இருந்தவர்களையும் சோதித்தனர். கலாஷேத்திராவின் மையப்பகுதியில் பதம புஷ்கரணி என்ற அல்லி த்டாகத்தின் அருகில் பெரிய ஆலமரம். படர்ந்து வளரும் அதன் விழுதுகள்  சீராக்கபட்டு  ஒரு பந்தல் இடபட்ட கூடம் போல  அமைந்திருக்கும். அதன். தரை சிமிண்ட் தளமிடபட்டிருக்கும். பக்கத்தில் சின்ன மேடையில் வினாயகர் இந்த ஆலமரத்தின் அடியில் தான்  நடன வகுப்புகள் நடக்கும். அன்று இதமான வெளிச்சம் தரும் விளக்குகளுடன் அந்த வகுப்பறையில்   ஹிலாரிகிளிண்டனுக்கான நடன  நிகழ்ச்சிகள் நடத்தபட்டன, கலாஷேத்திரா அமைப்பின் தலைவரின் அழகான  சிறிய வரவேற்பு உரையில் ரதன சுருக்கமாக கலாஷேத்திரா பற்றியும் நிறுவனர் ருக்மணி தேவி பற்றியும் குறிபிட்டார். பின்னர்  கதக்களியும் மோகினியாட்டமும் இணைந்த ஒரு நடனம் தொடர்ந்து 10 நிமிட பரதநாட்டியம். 20 நிமிடத்தில் கச்சதிமாக முடிந்தது கலைநிகழ்ச்சி. ஹிலாரியுடன் வந்த ஒரு அமெரிக்க அதைகாரி பிர்மாதமாக் தலையாட்டி ரசித்துகொண்டிருந்தார். மிகுந்த் கவனத்துடன் நடனைத்தை ரசித்து பார்த்த ஹில்லாரி எழுந்துவந்து கலைஞர்களை ” “இனியஇசை, அற்புதமான நட்டுவாங்கம், அழகிய நடனம் “ என கைகூப்பி  பராட்டி, சற்று தள்ளி அரை இருட்டில் அமர்ந்திருந்த வாத்திய கலைஞர்களையும் கூப்பிட்டு பராட்டினார்.

ஒரு இந்திய நடனத்தை இன்ரு தான் இவ்வளவு அருகிலிருந்து பார்கிறேன். என்று சொல்லி எல்லோரும் படம் எடுத்துகொண்டார்களா என உறுதி செய்துகொண்ட பின்னரே இடத்திலிருந்து நகர்ந்தார்.  ” “இன்று ஆடிய தில்லாவின் ஜதிஸ்வரம் ருக்மணி தேவியியால் உருவாக்கபட்டதுஎங்களது 75ஆம் ஆண்டில் இதுபோன்ற முக்கிய தருணத்தில் அதை நடனமாக்கியதில் எங்களுக்கு மகிழ்ச்சி “ என்று சொன்ன லீலா ஸம்சன் .   “தொடர்ந்து மூடிய அரங்களிலும் அறைகளிலும் நடந்த கூட்டங்களிலிருந்து மாறுதலான இதை நான் மிகவும் ரசித்தேன்” “ என ஹிலாரி அவரிடம் சொன்னதை சந்தோஷத்துடன் நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.. கலாஷேத்திராவில் யாரகயிருந்தாலும் வகுப்புக்குள் மட்டுமில்லை  இசை  நடன நிகழச்சிகள் பார்க்க கூட காலணியை கழட்டிய பின் தான் அமரவேண்டும்  என்பது விதி. ஆனால் ஆலமரவகுப்பில்  அவ்வளவு  ஷூககள்,  ஹைஹீல் ஷுக்கள் அணிந்தவர்களைப்  பார்த்தது சற்று நெருடலாயிருந்தது.

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்கள்