25/4/13

கதை எழுதி கடன்களை அடைத்த எழுத்தாளார்.


உலகில் மிக அதிகமாக விற்பனையாகும் கிரைம் நாவல் ஆசிரியர்களின் பட்டியலில் முக்கிய இடத்திலிருப்பவர் ஜெஃப்ரி ஆர்ச்சர். இங்கிலாந்துகாரார். வயது 73. கடந்த 30 ஆண்டுகளில் எழுதியிருப்பது 31 புத்தகங்கள். 97 நாடுகளில் 33 மொழிகளில் வெளியிடபடும் இவரது புத்தகங்கள் இதுவரை விற்றிருப்பது 25 கோடிபிரதிகளுக்கும் மேல்.. 1975ல் வெளியான இவரது முதல் புத்தகம்  இதுவரை 2 கோடி பிரதிகளுக்கு மேல் விற்றிருக்கிறது.
சமீபத்தில் தனது 31வது புத்தகமான ”பெஸ்ட் கெப்ட் சீகரட்ஸ்” யை  இந்தியாவில் 4 நகரங்களில் அறிமுகபடுத்துவதற்காக வந்திருந்த பயணத்தில் சென்னைக்கு வந்திருந்தார். தனக்காக காத்திருந்த இளைஞர் பட்டாளத்தை பார்த்து பிரமித்துபோனார். ”அத்தனை இளம் பெண்களும் என்னை பார்த்த உற்சாகத்தில் குரல் எழுப்பயதில் என்னை ஒரு ராக்ஸ்டார்போல உணர்ந்தேன். தெரிந்திருந்தால் கிதாரை கொண்டுவந்திருப்பேன்” என்று சொல்லும் ஜெஃப்ரி இங்கிலாந்தில் தான் இளைஞர்களிடம் இவ்வளவு பாப்புலர் இல்லை என்பதையும் இந்திய இளைஞர்கள் நிறைய ஆங்கில புத்தகங்கள் படிக்கிறார்கள் என்பது புரிகிறது என்றும் சொன்னார்.. இவரது முந்தய புத்தகம் வெளியானபோது இந்தியாவிற்கு வந்ததிருந்தபோது அதற்கு  கிடைத்த  அமோக வரவேற்பை பார்த்து இந்த புத்தக வெளியிட்டை இந்தியாவில் செய்ய விரும்பியிருக்கிறார். (இம்மாதிரி ”புக் டூர்” களை பதிபக்கதினர் செய்வதும் அதற்காக இவர் கட்டணம் வசூலிப்பதும் வேறு விஷயம்)
இவரது கிரைம் நாவல்களை விட சுவாரஸ்யமான திருப்பங்கள் கொண்டது இவரது வாழ்க்கை. ஆக்ஸ்போர்ட்டில் கல்வியை முடித்தபின்னர் ஆர்வத்துடன் இறங்கியது அரசியலில். லண்டன் நகர்மன்ற உறுப்பினாராக துவங்கிய அரசியல் வாழ்க்கை 29 வயதிலே இங்கிலாந்து நாடாளுமன்ற
உறுப்பினராகும் அளவிற்கு  உயர்ந்தது, பிரகாசமான எதிர்காலம் அரசியலில் உருவாகியிருந்து கொண்டிருந்த காலகட்டத்தில். ஜெஃப்ரி மூதலீடு செய்து இயக்குனராக இருந்த கம்பெனி திவாலாகியாதால் தன் எம்பி பதவியை இழக்க நேர்ந்தது. தனது கன்ஸ்ர்வேட்டிவ் கட்சியில் செல்வாக்கையும், சொத்துகளையும் இழந்து 4 லட்சம் பவுண்ட்கள் கடனுடன் திவாலான நேரத்தில்  முடிவு  ஒரு எழுத்தாளாராவது என்பது. 34 வயதில் எழுதிய முதல் புத்தகம் “ஒரு பைசா அதிகமோ, ஒரு பைசா குறைவோ இல்லை”(
Not a Penny More, Not a Penny Less. )  என்ற நாவல்   லண்டனில் வெளியான உடனேயே சூப்பர் ஹிட்டான இந்த புத்தகம் சில வாரங்களிலேயே  17 நாடுகளில் வெளியாகி பணத்தை கொட்டியது. கடன்களை அடைத்த சந்தோஷத்தில் எழுதி தள்ளினார் ஜெஃப்ரி. . உலகம் அறிந்த எழுத்தாளாரகிய உயர்ந்தபின்னரும்  அரசியல் ஆர்வம் குறைய வில்லை. கட்சியில் செல்வாக்கு உயர்ந்து தேசிய அளவில் உபதலைவராக இருந்தபோது லண்டன் நகர் மேயராக விரும்பி உள்கட்சி தேர்தலில் பெரிய அளவில் வெற்றியும் பெற்று கட்சியின் வேட்பாளாராக 1999ல் அறிவிக்கபட்டிருந்தார். ல் தேர்தலுக்கு முன், 10 ஆணடுகளாக நடந்துகொண்டிருந்த வழக்கில் இவருக்கு பொய் சாட்சி அளித்தற்காக 4 ஆண்டு தண்டனை அளிக்கபட்டது., அரசியல் வாழ்வு அஸ்தமனம் ஆகியது. ஆனால் ஜெயிலில் இருந்த இரண்டு ஆண்டுகளில் ஜெப்ரி எழுதியது ”கைதியின் டைரி” என்ற புத்தகத்தின் மூன்று தொகுப்புகள்.
ஒராண்டு முழுவதும் ஆராய்ச்சி செய்து தகவல்கள் திரட்டியபின் 6 வாரங்களில் ஒரு நாவலின் முதல் டிராப்ட்டை எழுதும் இவர், அது மறந்துபோகுமளவிற்கு வேறு விஷயங்களில் அடுத்த 4 வாரங்கள் கவனம் செலுத்துவார். பின்னர் டிராப்ட்டை திருத்த ஆரம்பித்து பல முறை திருத்தங்கள் செய்து- ”கடைசி புத்தகத்தை 14 முறை செய்தேன்” ஒரு நாவலை உருவாக்குகிறார். நாவல்கள் எழுதும் காலங்களை எதாவது ஒரு வெளிநாட்டில் கழிக்கிறார்.
இந்தியாவில் நிறைய ஆங்கிலபுத்தகங்கள் வருவதை அறிவேன். ஆனால் நான் படிக்க என் எஜெண்ட்கள் எதையும் அனுப்பவில்லை. என்று சொல்லும் ஜெஃப்ரிக்கு எழுத்துக்கு அடுத்தபடியாக பிடித்த விஷயம் கிரிக்கெட். நமது வீர்ர்களில் டோனி.
 தனது புத்தகங்களில் மிக சிக்கலான நுணுக்கமான டெக்னலாஜி சமாசாரங்களைக்கூட  தெளிவாக சொல்லும் இவர் தன் புத்தகங்களை மைநிரப்பிய பேனாவின்மூலம், கையால்தான் எழுதுகிறார். சொன்ன காரணம்  “எனக்கு கம்ப்யூட்டர் டெக்னாலாஜி தெரியாது.“



கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்கள்