ஆதித்தியா
அமெரிக்க
முன்னாள் அதிபர் ஜார்ஜ்புஷ் இப்போது டெக்ஸாஸ் மாநிலத்தில் ஹூயூஸ்டன் நகருக்கு அருகே
வசிக்கிறார். முன்னாள் அதிபர்களுக்கான உரிமைகளில்
ஒன்று முழுநேர செக்யூரிட்டி.. அதற்காக ஒரு
சிறிய ரகசிய உளவுப் படைப்பிரிவு இயங்குகிறது, அந்த குழுவில் ஒருவரின் மகன் பாட்ரிக். வயது இரண்டு. சமீபத்தில் அந்த குழந்தை லுக்கேமியா
என்ற ரத்த புற்றுநோயால் தாக்கபட்டிருப்பது கண்டறியபட்டது. அதன் சிகிச்சையின் தீவிரத்தால் அந்த குழந்தையின்
தலை முடி முழுவதும் கொட்டி மொட்டையாகியிருக்கிறது.
அந்த குழந்தைக்கு அது வினோதமாக தெரியக்கூடாது என்பதற்காக ஒரே காலனியில் வசிக்கும் பாட்ரிக்கின் தந்தை ஜோனின்
குழுவினர் அனைவரும் மொட்டை அடித்துகொண்டனர். அந்த குழந்தையின் மருத்துவ செலவிற்கு நிதிதிரட்ட
பாட்ரிக் பிரண்ட்ஸ் என்ற பெயரில் ஒரு வெப்
சைட்டையும் துவக்கி நன்கொடைகள் கேட்டிருக்கின்றனர்.
திடுமென
ஒருநாள் தன் அத்தனை பாதுகாவலர்களும் மொட்டைதலையர்களாக இருந்ததைப்பார்த்து விசாரித்து
விஷயம் அறிந்த புஷ் உடனே பெரிய அளவில் நிதிஉதவி செய்தததோடு அந்த குழுவில் தானும் இருப்பதை
அறிவிக்கும் வகையில் மொட்டை அடித்து கொண்டார். அவர்களோடு
ஒரு குருப் போட்டோ எடுத்து அதை அவர்களின் வெப் ஸைட்டில் வெளியிடச்செய்தார்.
நன்கொடை வசூலிப்பதற்காக நகரில் ஒரு மோட்டார் சைக்கிள்
பந்தையத்தைதானே முன்னின்று நடத்தியிருக்கிறார்.
அதோடு நிற்காமல் அந்த சிறுவனோடு ஒரு படம் எடுத்துகொண்டார்
அதை திருமதி புஷ் தேசிய நாளிதழ்களுக்கு அனுப்பி
அந்த சிறுவனின் மருத்துவ செலவிற்கு உதவ வேண்டியிருக்கிறார்.
கையில்
மோட்டார் பொம்மைகளுடன் யார் மடியில் இருக்கிறோம்
என்பது கூட புரியாமல் உட்கார்ந்திருக்கும் அந்த மொட்டை சிறுவனும் மொட்டைதலையுடன் முன்னாள் அதிபர் புஷ்ஷும் இருக்கும் அந்த படம் பலரை
பாட்ரிக் நண்பர்கள் குழுவிற்கு நன்கொடை அனுப்ப செய்திருக்கிறது.
அதிபர்
புஷ்ஷுக்கு இபோது வயது 89, பெர்க்கின்ஸ் நோய் தாக்கியிருப்பதால் சக்ர நாற்காலியிலிருக்கிறார்.
கல்கி11/08/13
சூப்பர் நியூஸ் சார். பாட்ரிக் குணமாக வேண்டுகிறோம்.
பதிலளிநீக்குரவி
நீயூ டெல்லி
அந்த குழந்தைக்கு இன்ஷ்யூரன்ஸ் கிடையாதா என்ன?
பதிலளிநீக்குரிட்டையரான பிரெசிடெண்ட்க்கு இத்தனை செக்யூரிட்டியா?. பார்த்தா நம்ம ஆளுங்களும் கேட்கபோறாங்க !
ஜெய்சங்கர்