10/9/13

உலகிலேயே அதிகமான சம்பளம் வாங்கும் அம்மா

  கோக்கோலா விற்கு போட்டியாக பானம் தயாரித்து விற்கும் கம்பெனியாக துவங்கி இன்று அதனுடன் பலவித ஸ்நாக்களையும், உணவு பொருட்களையும் உலகில் 200 நாடுகளில் தயாரித்து, விற்று தன் வணிக சாம்ராஜ்யத்தின் எல்லைகளை விரித்து வளர்ந்து கொண்டிருக்கும் நிறுவனம் பெப்ஸி கோ.  உணவுப் பொருள் வணிக நிறுவனங்களின் பட்டியலில் உலகளவில் இரண்டாம் இடம். கடந்த ஆண்டின்  பிஸினஸ் 66000 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (ஒருபில்லியன்= 100கோடிகள்) மொத்த பணியாளர்கள்   2 லட்சத்துக்கும்மேல். இதன் தலைவரும் முதன்மை செயல் அதிகாரியாகவும் இருப்பவர் ஒரு இந்தியப் பெண். பெயர் இந்திரா நூயி.  அவர்  ஒரு தமிழ்ப் பெண். என்பதால் நாம் சற்று அதிகமாகவே பெருமைபட்டுக்கொள்ளலாம். உலகிலேயே அதிக சம்பளம் பெறும் பெண் தலைமைஅதிகாரியும் இவரே
.
 சென்னை தியாகராயநகர் வாசியான கிருஷ்ணமூர்த்தி தம்பதியரின் மகளான இந்திரா அங்குள்ள ஹோலிஏஞ்சல் பள்ளியிலும், பின் கிருத்துவகல்லூரியிலும் படித்தவர். கணிதம், பெளதிகம்  பட்டம் பெற்றபின்  கல்கத்தா ஐஐஏம்பில் எம்பிஏ படித்தவர். இந்தியாவில் தன் தொழில் வாழ்க்கையை  ஒரு பெரிய நிறுவனத்தில் மேனேஜராக துவங்கியவர். 1978ல் அமெரிக்க யேல் பலகலைகழகத்தில் மேனெஜ்மெண்ட் படிக்கும் வாய்ப்புகிடைத்ததினால் அமரிக்கா சென்றார். படிக்கும்போதே பாஸ்டன் கன்ஸ்லட்டென்ஸி என்ற நிறுவனம் வேலைக்கழைத்தது.  அதன் பின் பல அமெரிக்க முன்னணி கார்ப்பேர்ட்களில் உயர் பதவி.. 1994ல் பெப்ஸி நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்த இவர் 7 ஆண்டுகளில் அதன் தலைமை  நிதி அலுவலாரக உயர்ந்தார்.,.  அந்த பதவியில்  இவர் இருந்த போது கம்பெனியின்  வருமானம் 72% அதிகமானது. லாபம் இருமடங்காகியது.  கார்ப்ரேட் உலகம் இவரை கவனிக்க ஆரம்பித்தது. போட்டி நிறுவனம் உள்பட பல நிறுவனங்களிடமிருந்து அழைப்புகள்.  ஆனால் இந்திரா பெப்ஸியை உலக முன்னணி நிருவனங்களில்  ஒன்றாக்குவதில் உறுதியாக இருந்தார். அதேப்போல் அதை சாதித்தும் காட்டினார். பெப்ஸியின் நிர்வாக குழு ஒருமனதாக  இவரை 2006ல் பெப்ஸிகோவின் தலைவராக நியமித்தது. முதல் முறையாக ஒரு பெண்,  அதுவும் அமெரிக்கர் அல்லாத ஒருவர் அந்த பதவியில் நியமிக்கபட்ட சரித்திர சம்பவம் அது.  சம்பளம் ஆண்டுக்கு 17 மில்லியன் டாலர்கள் (ஒரு மில்லியன் = 10 லட்சம்)   இவர் தலைமையில் இப்போது பெப்ஸிகோ இன்னும் வலுவாகிகொண்டிருக்கிறது. இந்த சாதனைகள் எல்லாம்  இவரால் எப்படி முடிகிறது?
 ”உலகம்முழுவதிருக்கும் என் டீமுடன் தொடர்ந்து தொடர்பிலிருக்கிறேன். வெற்றியின் பெரும்பங்கு அவர்களுடையது.  எந்த விஷயத்தையும் பெப்ஸி நிர்வாகிகள்  மாறுபட்ட கோணங்களில் பார்க்க பழக்கபடுத்தபட்டிருக்கிறார்கள்  என்று சொல்லும் இவர் ஒருநாளில் 20 மணிநேரம் வேலை செய்கிறார். மாதத்தில் இரண்டுவாரம் உலகின் ஏதாவது ஒரு நாட்டில் பயணம் செய்துகொண்டிருக்கிறார்.   வெறும் கோலா பான விற்பனையைமட்டுமே எப்போதும்  செய்து கொண்டிருக்கு முடியாது என்பதனால்   சிப்ஸ் போன்ற பலவகை உணவுபொருட்களை விற்கும் ஆலோசனைகளை நிர்வாகத்திற்கு வழங்கியதும் , அதற்காக  உலகின் பலபகுதிகளில் இருந்த அத்தகைய கம்பெனிகளை பெப்ஸி நிருவனத்துடன் இணைத்ததும் தான் இவரது சாதனைகளில் மிகப்பெரியது.,
கணவர் ராஜ் நூயி (Raj K. Nooyi) மைசூரில் படித்தபின் அமெரிக்காவில் எஞ்னியரிங்கும், எம்பிஏ யும் படித்தவர். பல நிறுவனங்களில் உயர்பதவி வகித்தவர். இப்போது  தனது நிர்வாக ஆலோசகனை நிறுவனத்தின் தலைவராகயிருக்கிறார். இரண்டு பெண்கள். இந்திய இசையை விரும்பும் இந்திரா தமிழில் பேசுவதையும், எழுதுவதையும் இன்னும் மறக்கவில்லை. தன்   அலுவலக அறையில் சிறிய வினாயகர் சிலை வைத்திருக்கிறார்.


 இந்திரா நூயிக்கு  பல அமெரிக்க பல்கலகழகங்கள் கெளரவ டாக்டர் பட்டங்கள் வழங்கியிருக்கிறது. நம் நாட்டின் பத்மபூஷன் விருது பெற்றவர்,  ஆனால் இவர் பெரிதும் மதிப்பது அமெரிக்காவின் ”சிறந்த அம்மா” (Best moms)க்களில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டதைத்தான். எவ்வளவு பிஸியாக இருந்தாலும்,தனது மகள்களின் படிப்பிலும் வளர்ச்சியிலும் மிகுந்த கவனம் செலுத்தியவர் இவர். இன்று அவர்கள் அம்மா படித்த யெல் பல்கலைகழகத்தில் பிஸினஸ் மேனெஜ்மெண்ட்படிக்கிறார்கள்.




கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்கள்