10/12/13

சபாஷ் சுஜாதா !

இதாண்டா போலீஸ் 


பரபரப்பான மும்பாய் நகரின் சயான் பகுதியின் முக்கிய வீதி.   முந்திய கார்களின் பம்பரை தொட்டு முண்டிக்கொண்டிருக்கும் நெருக்கமான  டிராபிக். வேகமாக வந்து கொண்டிருக்கும் ஒரு கார்  வேகம் தணிந்து மெதுவாக ஒதுங்கி   நிற்கிறது, பின்னல் வரும் வாகனங்களுக்கு இடைஞ்சலாக நிற்கும்  அந்த காரைக்கண்டு  எரிச்சல் அடைந்த  போக்குவரத்து போலீஸ்கார்   நெருங்கி பார்த்ததும் அதிர்ச்சியடைகிறார். காரை ஓட்டி வந்தவர்  ஸ்டியரிங்கில் சாய்ந்து கிடக்கிறார். உடல் முழுவதும் வேர்வையினால் நனைந்திருக்கிறது. மனிதருக்கு மாரடைப்பு என்பதை புரிந்து கொள்கிறார். உடனே அருகில் இருக்கும் சிக்கனிலில் பணியிலிருக்கும்தன்  இன்ஸ்பெக்டர் சுஜாதாவிற்கு தனது வாக்கி டாக்கி மூலம் தகவல் தருகிறார்.கான்ஸ்டபிள்  குமார்தத் அடுத்த நிமிடம் அங்கு வந்த சுஜாதா, கன்ட்ரோல் ரூமுக்கு சொல்லி, லீலாவதி ஆஸ்பத்திரி வரையில் சாலையில் போக்குவரத்தை ஓரமாக தள்ளுமாறும் சிக்னல்களை பச்சையில் நிறுத்தி வைக்குமாறும் வேகமாக உத்தரவுகள் பிறப்பிக்கிறார்.. சாலையில் சென்றுகொண்டிருந்த ஒரு காரை நிறுத்தி, ஆஸ்பத்திரி வரை அந்த காரை ஓட்டி வருமாறு  அதன் டிரைவரை கேட்டுக் கொள்கிறார்.  அந்த காரில் வந்த மாரடைப்பால் தாக்கபட்டிருப்பவரை   பத்திரமாக  அணைத்து பிடித்து,  அவர் மார்பை மசாஜ் செய்தபடி வருமாறு கான்ஸ்டபிளுக்கு கட்டளையிடுகிறார்.

  தனது போலிஸ்ரோந்து காரை  முன்னால் வேகமாக  செலுத்தி வழி ஏற்படுத்திய படி 12 நிமிடங்களில் ஆஸ்பத்திரியை அடைகிறார். போகும்போதே இவர் கண்ட்ரோல் மூலம் சொன்ன தகவலினால் தயாராகயிருந்த டாக்டர்கள் சிகிச்சையை துவக்குகின்றனர்..  காரில் இருந்தவரின்  பிஸினஸ் கார்டை பார்த்து அவர் வீட்டிற்கு தகவல் கொடுத்திருந்தனால் அவரின் மனைவியும் ஆஸ்பத்திரிக்கு விரைந்து கொண்டிருந்தார்.  
அந்த மனிதர் உயிர் பிழைத்து கொண்டார்.
அவர் இந்திய முன்னாள் கிரிகெட் வீர்ர் வினோத் காம்ப்ளி.
அடாவடி, அத்துமீறல், அற்பமான கையேந்தல், அதிகாரத்துக்கு அடிபணிதல்,பிரச்சனைகள் வரும்போது மேல் அதிகாரிகள் சொன்னால் மட்டுமே செயல் படுவது என்ற போலீஸ் அதிகாரிகளிடையே,  மாறுபட்டு சமயோசிதமாக மின்னல் வேகத்தில் இயங்கிய பெண்போலீஸ் இன்ஸ்பெக்டர் சுஜாதா. இவருக்கு ஒரு சபாஷ் சொன்னால என்ன?
 இவரைபோல  எல்லா போலீஸ் அதிகாரிகள் இருந்தால் இந்தியா எப்படி இருக்கும்? 

ரமணன்


கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்கள்