9/10/14

விடுமுறைபயணமாக விண்வெளிக்கு போனவர் !

 சுழலும் நமது பூமிக்கு மேலே பறக்கும் பயணிகள் விமானம் அதிக பட்டசம் 30,000 அடி உயரத்தில் பறக்கமுடியும் அந்த வாயு வெளிமண்டலத்தாண்டி  இருப்பது விண்வெளி வட்டத்தின் விளிம்பு. இதை ஸ்ட்ராட்டோஸ்பியர் (stratosphere) அழைக்கிறார்கள்.   இதில் மிக சக்தி வாய்ந்த போர் விமானங்களும், ராக்கெட்களுமே பறக்க முடியம், ரஷ்யாவில் இந்த விண்வெளி விளிம்பிற்கு  சுற்றுலா பயணம் செய்ய ஒரு டிராவல் நிறுவனம் ஏற்பாடு செய்துகொடுக்கிறது.  கண்ட்டிரி டூரிஸம் என்ற இந்த நிறுவனம் அரசின் ஆதரவோடு சாகஸ விமான பயணங்களை நிகழ்த்துகிறது.  இதற்காகவே MIG 29, MIG 31  போன்ற பல வகை போர் விமானங்களை சொந்தமாக வைத்திருக்கிறார்கள். விரும்புவர்கள் பணம் செலுத்தி இந்த பயணங்களைச் செய்ய முடியும்.
இந்த ஆண்டு சுதந்திரதினத்தன்று இதில் பறந்த முதல் இந்தியர்  டி, என் சுரேஷ் குமார். இவர் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் ( ISRO)  ஹாசனிலுள்ள தலைமை கட்டுபாட்டு கேந்திரத்தில் பணிபுரியும்  மூத்த விஞ்ஞானி.  மணிக்கு 1850 கீமீ  வேகத்தில் ஜிவ்வென்று பறந்து 48 நிமிடத்தில்  விண்வெளியின் விளிம்பிற்கு  பறந்து அங்கிருந்து உலகை பார்க்க கூடிய இந்த பயணத்திற்கு செலவு 15 லட்சம் ரூபாய்கள். “இந்த பயணம்  எனது 20 ஆண்டு கனவு எனச்சொல்லும்  சுரேஷ் குமாரும் அவரது மனைவியும் இதற்காகவே வருமானத்தில் பெரும்பகுதியை சேமித்திருக்கிறார்கள்
பணம் கொடுத்து டிக்கெட் வாங்கினால் மட்டும் இந்த பயணத்தில் போய்விடமுடியாது.  உடல்நிலை தகுதி, தகவல் தொடர்பு சாதனைங்களை கையளும் திறன், ஒரளாவது விண்வெளிவிஞ்ஞானம் திடமான மனநிலை எல்லாம் இருக்க வேண்டும், மனுச்செய்தவர்களை பரிசோதித்து தேர்ந்டுத்து பயிற்சி கொடுத்த பின்னரே பயணம்.  இவற்றையெல்லாம் 6 மாதம்  முன்னரே செய்து முடித்திருக்க வேண்டும், சுரேஷ் குமார் இந்திய அரசின் விஞ்ஞானியாதலால் பல கட்டங்களில் நிறுவனத்தின்  அனுமதிகளைப் பெற வேண்டியிருந்தது.
 இந்த விண்வெளி விளிம்பு பயண கனவு சுரேஷ் குமாருக்கு எழுந்ததின் காரணம் ஒரு ஏமாற்றம்.  1985 ஆம் ஆண்டு நாசாவின் மூலமாக இஸ்ரோ விண்வெளிக்கு  அனுப்ப 4 பேர்களை தேர்ந்தெடுத்திருந்தது. அதில் சுரேஷ்குமாரும் ஒருவர்.  ஆனால் 1986ல்  நாசாவின் சேலன்ஜர் விண்கலம் கிளம்பிய சில வினாடிகளிலேயே வெடித்து விபத்தாகி விட்டதால்  தொடர்ந்து திட்டமிடப்பட்ட  அனைத்து விண்வெளிப் பயணங்கள் நிறுத்த பட்டுவிட்டன.
அதில் மிகுந்த ஏமாற்றமடைந்த சுரேஷ் இதை சாதிப்பதை தன் கனவாக கொண்டு தன் சொந்த சேமிப்பில் நிறைவேற்றியிருக்கிறார். விண்வெளி விளிம்பிற்கு மட்டுமில்லை  எல்லா பயணங்களையும் நேசிப்பவர் இவரும் இவரைப்போலவே மூத்த விஞ்ஞானியாக பணியாற்றும் இவரது மனைவி கீதாவும். கடந்த 15 ஆண்டுகளில் 110 நாடுகளுக்கு பயணம் செய்திருக்கிறார்கள் இந்த தம்பதியினர்.  எல்லாமே பட்ஜெட் பயணங்கள் எனச்சொல்லும் இவர்கள் இதற்காக செலவழித்த பணம் 50 லட்சம்.





கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்கள்