22/3/15
20/3/15
புனே உயரமாகிக்கொண்டிருக்கிறது
அடுக்குமாடிவீடுகள்
புனேயில் புதிதல்ல. 50 ஆண்டுகளுக்கு முன்னரே துவங்கிவிட்ட விஷயம். ஆனால் இப்போது பல
அடுக்குமாடிகளுடன் களுடன் அதிகமான கட்டிடங்கள் மிக வேகமாக எழுந்திருக்கின்றன.
28 அல்லது 24 அடுக்குமாடி வீடுகள். 8 அல்லது 10 மாடி பிரமாண்ட
அலுவலககட்டிடங்கள் நிறைய எழுந்திருக்கின்றன. எல்லா அடுக்குமாடி வீடுகளிலும். முதல்
4 மாடிகளுக்கு -1,-2,-3.-4 என நம்பரிட்டு 5 வது
அடையாள
அட்டையை அழுத்தினால் திறக்கும் கதவு. கிச்சனில்; புகைவந்தால் அலறும் அலாரம் நடக்க நல்ல பாதைகள் மெத்தென்ற பசும்புல்வெளி பார்க்
நீச்சல் குளம், குழந்தைகள் விளையாட வெண்மணல்திடல்
கோல்ப்மைதானம் என மிக நவீன வசதிகளுடன் சுத்தமான
குட்டி ஹைடெக் ஊர். கால்நகம்வெட்டிக்கொள்வதிலிருந்து சகல நகர வாழ்க்கையின் ஆடம்பரங்களும்
இங்கேயே இருக்கிறது.
ஆனாலும். பனித்துளிகள் மின்னும்பயிர்களுடன் அருகிலிருக்கும்
விளைநிலங்களையும் அதன் எதிரே மிதக்கும் மேகங்கள் தொட்டுசெல்லும் உயர்ந்த கட்டிடங்களையும் நம் பால்கனியிலிருந்து
ஒன்றாக பார்க்கும்போது ஒரு மாறுபட்ட வினோதமான
உணர்வு எழுகிறது.
”இன்னும்
சில நாட்களில் நாங்கள் அங்கேயும் வந்துவிடுவோம்” என்று அந்த உயர்ந்த கட்டிடங்கள் சொல்லுவதைக்கேட்டு அழும் அந்த நிலங்களின்
கண்களில் நீர் கட்டியிருப்பது போல தோன்றிற்று. .
- 19 others like this.
- Vedha Gopalan வாஸ்து சாஸ்த்திரமா இல்லை விதிமீறலை மறைக்கும் சமாச்சாரமா (ஏன் சார்! அதிகாரிகள் நேரில் வந்து பார்க்கும்போது கட்டடத்தின் உயரம்கூடவா கண்ணுக்குத் தெரியாது? ) இறைவா!!
இந்தியாவின் முகத்தை காட்டும் ஷோகேஸ்
கட்டிடங்களில் விளக்குகளை அணைப்பதே இல்லை.
5 ஸ்டார் சம்பளம் வாங்குபவர்கள் தெருவோர கையேந்திபவனில்
அழகிய வாக்கியங்கள்
. பனித்துளிகள் மின்னும்பயிர்களுடன்..நல்ல ரசனை தங்களுக்கு
அய்யோ..அந்தக் கடைசி வரி மனசைப் பிசைகிறது!..சொல்லாதீங்க - Bala Mukundhan அதே போல் பெங்களூரு தன் தனித்தன்மையை இழந்து வருடங்கள் பல ஆகி விட்டது. யஷ்வந்த்பூரிலிருந்து பனஷங்கரி செல்லும் Outer Ring Road வழியாகப் பயணித்தோமானால், குன்றுகள் அனைத்தும் அழிக்கப்பட்டு அதன் மேல் அடுக்கு மாடிக் கட்டிடங்களும், குடியிருப்புகளும்தான் தென் படுகின்றன. கார்டன் சிடி, கான்கிரீட் சிடியாக மாறி விட்டது. வட பெங்களுருவில் விமான நிலையம் செல்லும் வழியெங்கும் வயல் நிலங்கள் வானாளாவிய கட்டிடங்களைத் தான் தாங்கி நிற்கின்றன. Whitefield சுற்றிய பகுதியை பற்றி கேட்கவேவேண்டாம். இங்கே நிலங்களின் கண்களில் நீர் கூட கட்டாது. ஏனெனில், நீர் வழிந்தோட கூட இடமில்லாது கான்கிரீட் தரைகளும், கட்டிடங்களும் பூமிக்கும் மனிதனுக்கும் இடையே தடை எழுப்பியுள்ளது.
இதை விட கோரம் ஒன்று உண்டென்றால், அது M G Road தான். எவ்வளவு அழகான ஒரு சாலையாக இருந்த அது இன்று உயர் மட்ட மெட்ரோ ரயில் பாதை அமைக்கப்பட்டதின் மூலம் தன்னிலை இழந்து ஒரு சவப்பாதையாக மாறியுள்ளது. 18 வருடம் கழித்து அந்தப் பாதையைப் பார்த்த என் கண்ணில் நீர்தான் முட்டிக் கொண்டு நின்றது. இந்த ஒரு வருடமாக அந்தப் பாதைப் பக்கமே செல்லவில்லை. - Shah Jahan இப்போதெல்லாம் கேடட் கம்யூனிட்டியில் வசிப்பதுதான் நாகரிகம் என்ற மனநிலை உருவாகிவிட்டது. கோவையில்கூட கேடட் கம்யூனிட்டி வந்தாயிற்று.
- Skrajendran S Krihsnasamy Naidu இன்னும் சில நாட்களில் நாங்கள் அங்கேயும் வந்துவிடுவோம்” என்று அந்த உயர்ந்த கட்டிடங்கள் சொல்லுவதைக்கேட்டு அந்த நிலங்களின் கண்களில் நீர் கட்டியிருப்பது போல தோன்றிற்று.
. - Pitchumani Sudhangan கவிதை வடிவிலான ஒரு மனக் கலக்கத்தை, ஒரு சமூக அக்கறையை எத்தனை அழகாக ரசனையோடு சொல்லியிருக்கிறீர்கள் ரமணன் ஸார்!
இதற்கு குழுசேர்:
இடுகைகள்
(
Atom
)