22/7/18

செருப்பு



கடந்த வார கல்கியில் வெளியான எனது சிறுகதை



செருப்பு





“அம்மா இன்னிக்காச்சும் வாங்கித்தாங்க அம்மா. காதர் பாய் கடையிலே நான் பார்த்தது இன்னும் அது இருக்கும்மா”.

“பார்க்கலாம்ப்பா. இன்னிக்கு சீட்டுக்குப் பணம் கட்டணும். நாளை வியாபாரத்தில் கடையில்வரதைப்பார்த்துட்டுசயாங்காலமா போலாம்”

சரி என்று அரை மனதோடு தலையாட்டுகிறான் கணபதி. வரும் அழுகையை அடக்கிப் பையன் பார்க்காமல்கண்ணைத்துடைத்துகொள்கிறார் காவேரி.



அந்தச் சிறுவன் கேட்டது புதுச்செருப்பு. கடந்த ஒரு மாதமாகக் கேட்கிறான். காவேரியால் வங்கித் தர முடியவில்லை. குழந்தையைக் கொடுத்துவிட்டு கணவன் கைவிட்டு காணாமல் போனபின் வாழ்க்கையுடன் போராடி இந்தப் பையனைவளர்த்துக்கொண்டிருப்பவள். வீட்டு வேலை, கட்டிடத்தொழிலாளியெனப் பல அவதாரங்கள் எடுத்ததில் அவள்புரிந்துகொண்டது எங்கும் தன் பெண்மைக்குப் பாதுகாப்பில்லை என்பதைத்தான்.

இறுதியாக அவள் செய்த துணிவான முடிவு தான் இந்தச் சொந்தப் பலகாரகக்கடை. ராமநாதபுரம் அருகில் தேசியநெடுஞ்சாலையைத் தெட்டுக்குக்கொண்டிருக்கும் ஒரு சின்னக் கிராமத்தின் நுழை வாயிலில் அரசின் புறம்போக்குஇடத்திலிருக்கும் சிறு குடிசைதான் அவளுடைய வீடு கடை எல்லாம். திண்ணையிலிருக்கும் அடுப்பும் சமையல்சாமன்களும் அங்கு மாட்டப்பட்டிருக்கும் கிருஷ்ணன் படமும் தான் அவளுடைய சொத்து.

அருகில் எழுந்துகொண்டிருக்கும் பெரிய பிராஜக்டின் பணியாளர்கள் தான் அவளுடைய கஸ்டமர்கள். பேர்தான் பலகாரக்கடையே தவிர அதிகம் விற்பது டீ, காபி தான். காலை நேரத்தில் வேலைக்குப் போகும் முன் வரும் சிலதொழிளார்களுக்கான இட்லி, வார இறுதி சம்பளநாளின்போது தவறாமல் வீட்டுக்கு வாங்கிப்போகும்வாடிக்கையாளர்களுக்காகப் பஜ்ஜி வடை, போண்டா போடுவது என்றளவில் தான் வியாபாரம் .காலை 10 மணிக்கும் மதியம்3 மணிக்கும் கணபதி ஒரு பிளாஸ்க்கில் டீ அடுக்காகச் சொருகிய அட்டை டம்பளர் சகிதம் தொழிளார்களிடம் ஒரு ரவுண்ட்போய் கப் 3 ரூபாய் என்று டீ கொடுத்து காசை வாங்கி வருவான்.



யாருக்கும் கடன் கிடையாது, கடையில் சிகரட் விற்பனை செய்வதில்லை உட்கார்ந்து பேச வசதி கிடையாது. என்றகாவேரியின் கட்டுப்பாடுகளினால் கஸ்டமர்கள் குறைவுதான். என்றாவது கம்பெனி அல்லது பிராஜக்கெட் அதிகாரிகள்மீட்டிங், என்றால் கூடுதலாக 25 கப் டீ விற்பனையாகும். காவேரியின் கடையில் வாங்கிய டீயை “உங்களுக்காகவேராமநாதபுரத்திலிருந்து கொண்டு வந்தது” என்று அழகான பீங்கான் கப்புகளில் கொடுத்து அந்த சைட்டின் காண்டிராக்டர்பாராட்டுக்களை வாங்கிக் கொள்வது காவேரிக்குத்தெரியாது.

அன்று நாள் துவங்கியதிலிருந்தே பரப்பாகியிருந்தது. அந்தப் பகுதியில் காவேரி அதுவரை பார்க்காத மனிதர்கள் பலர் வந்துகொண்டிருந்தார்கள். சிலர் கடையில் டீ சாப்பிட்டார்கள். கடையின் முன்னால் மெல்லக் கூட்டம் சேர்ந்தது. யாரின்வரவுக்கோ காத்திருந்தார்கள். காவேரி தெரிந்தவர்களுடன் கூட அதிகம் பேசமாட்டார். அதனால் புதியவர்களிடம் என்னவிஷயம் என்று கேட்கவில்லை.

சற்று நேரத்தில் சர் என்று ஒரு கார் வந்தது அதிலிருந்த இறங்கிய ஒரு கரை வேட்டி வெள்ளை சட்டை மனிதர்.” தலைவர்கூட்டு ரோட்டுக்கு வந்திட்டு இருக்கார். எல்லோரும் அங்கே வாங்க, மினிஸ்டர் வர பாதையை மாத்திட்டாங்களாம். அதனால் நாம் அந்த ரோடுக்குதான் போகணும் சீக்கிரம் வாங்க என்று சொல்லிவிட்டு காரில் ஏறிப்போனார்

மிக வேகமாக ஓடி வந்த கணபதி “அம்மா சீக்கிரம் இன்னும் இரண்டு பிளாஸ்க்க்கு டீ போடும்மா. மெயின் ரோட்டில் ஒரேகூட்டம் கட்டிடத்துக்குக் கொண்டு போன டீயை எல்லாம் அவங்க 5 நிமிஷத்தில் வாங்கிட்டாங்க. கப் 5 ரூபான்னுகொடுத்தேன். என்று தான் சம்பாதித்த 100 ரூபாயை காவேரியிடம் கொடுத்தான்.

அடுப்[பில் கொதித்துக்கொண்டிருந்த டீயை பிளாஸ்கில் ஊற்றிக்கொண்டே எதுனாச்சும் அரசியல் கூட்டமாடா? என்றார்

என்ன கட்சின்னு தெரியல்லம்மா எல்லாரும் கருப்பு கொடி வைச்சிருக்காங்க. ஆளுங்க வந்திட்டே இருக்காங்க என்றுசொல்லிக்கொண்டே பரபரப்புடன் பிளாஸ்க்கை எடுத்துக்கொண்டான் கணபதி.

“சூவுதானமாக இருந்துக்கோ காசைப் பத்திரமாக வைச்சுக்கோ” என்று சொல்லுவதை காதில் வாங்கக் கணபதி அங்குஇல்லை. இந்த பிளாஸ்க் டீ முழுவதையும் விற்று காலிசெய்யும் ஆர்வம் அவனை ஓடச்செய்திருந்தது.



“தமிழகத்தை வஞ்சிக்காதே !, உச்ச நீதிமன்ற தீர்ப்பை உடனடியாக அமுல் படுத்து ! ” என்ற முழக்கங்கள் தொலைவில்தலைவரின் காரைப்பார்த்ததும் உச்ச ஸ்தாயில் ஒலிக்கத்துவங்கியது. தலைவரின் கார் அருகில் வந்ததும் அவர்பெயரைச்சொல்லி வாழ்க கோஷங்கள் எழுந்தன.

காரின் முன் சீட்டிலிருந்து நிதானமாக இறங்கிய தலைவர் கூட்டத்தைப் பார்த்து கைகூப்பி வணக்கம் சொல்லிவிட்டு பேசஆரம்பித்தார். “நமது கருப்புகொடி கண்டன ஆர்பாட்ட அறிவிப்பினால் மத்திய அமைச்சர் கிராமத்துக்கு வரும் பாதையைமாற்றிவிட்ட தகவல் நமக்குக் கிடைத்திருக்கிறது. அதனால் தான் இடத்தை மாற்றி இங்கு போராட்டம் செய்யவந்திருக்கிறோம். அமைச்சர் கார் வரும்போது கறுப்புக்கொடியை அசைத்துக் கோஷமிடவேண்டும். நம் நோக்கம் அவர்காரை மறிப்பதில்லை. நமது கண்டனத்தை அவருக்குப் புரிய வைக்க அவர் வருமிடத்தில் நின்று கருப்பு கொடிகாட்டுகிறோம். அதனால் கார் வரும்போது எவரும் குறுக்கே பாயக் கூடாது. எந்த அசம்பாவிதமும் கூடாது. உங்கள்அருகிலிருப்பவர்களைக் கவனித்துக்கொண்டிருங்கள். மாற்றுகட்சிகார்கள் ஊடுருவி எதாவது அராஜகம் செய்து பழியைநம்மீது போடுவார்கள் ஜாக்கிரதையாக இருங்கள்.” பேச்சை முடிப்பதற்குள் “மாவட்ட எஸ்பி பேசுகிறார் சார்” என யாரோபோனைக்கொடுக்கத் தலைவர் போனில் பேசியபடியே காரிக்குத்திரும்பினார்.

வெய்யிலைப்போலவே கூட்டமும் அதிகமாகிக்கொண்டிருந்தது. மாவட்டத்தின் பல பகுதிகளிலிருந்து வந்த வேன்களும்மோட்டார் சைக்கிள்களும் அந்தச் சாலையின் இருபக்க வெளிகளில் நிறைந்திருந்தன.

“அம்மா இந்த பிளாஸ்க்கும் காலி. சீக்கிரம் இன்னொண்ணு ரொப்பு. கூட்டம் அள்ளுது. கப் ஆறுருபாய்ன்னு வித்திட்டேன்” என்று கையில் நிறைந்த நோட்டுகளை அம்மாவிடம் கொடுத்தான் கணபதி.

“இந்த பிளாஸ்க்கு மட்டும் தான் பாலிருக்குடா. அதோடு போதும்”. என்ற காவேரியின் மனதுக்குள் மகனின்சாமர்த்தியத்தைக் கண்டு மகிழுந்தாலும் பின் என் இந்தப்பையனுக்குப் படிப்பு ஏறவில்லை? என்ற வருத்தமும் எழுந்தது

.“டீ இல்லான தின்றதுக்கு ஏதாவது பண்ணு. அதையும் வித்துருலாம். கணபதியின் கண்ணில் செருப்பின் விலைச்சீட்டுமின்னி மறைந்தது.

கூட்டம் அதிகரித்துக்கொண்டேயிருந்தது. எப்படி எங்கிருந்து இத்தனைபேர் இந்த கிராமத்துக்கு வந்தார்கள்? எனஉள்ளூர்க்கார்களும் ஆச்சரியத்தோடு அவர்களுடன் இணைந்து கொண்டிருந்தனர்.

“உங்களுக்கு இந்த இடத்தில் போராட்டம் நடத்த அனுமதியில்லை. கலைந்து போகச்சொல்லுங்கள்” என்ற அந்தப்போலீஸ்அதிகாரியிடம் “அமைச்சர் வருவதாக அறிவிக்கப்பட்ட பாதையை நீங்கள் மாற்றும்போது நாங்கள் மாற்றக்கூடாதா?” என்றுஉள்ளூர் அரசியல் வாதி ஒருவர் சத்தமாக வாதிட்டுக்கொண்டிருந்தபோது மிக வேகமாக வந்த ஒரு லாரியிலிருந்துசாலைகளின் நடுவில் ரோடைபிரிக்க வைக்கும் இரும்பு தடுப்பு வேலிகள் சர சர வென்று இறங்கின. அதைச் சாலையின்இருபுறங்களிலும் பரபரவென்று நிறுத்தினார்கள் அந்த லாரியில் வந்த போலீசார். அந்த இரும்பு தடுப்புக்களிலிருந்தவிளம்பரங்கள் அது மாவட்ட தலைநகரிலிருந்து வந்திருப்பதைச்சொல்லியது.

“இந்த தடுப்புக்குப்பினால் போங்க” என்று கத்தியபடி அடுத்த லாரியிலிருந்து. பெரிய கம்புகளுடனும் ஃபைபர் கிளாஸ்கேடயங்களுடனும் இறங்கினார்கள் நீல வண்ண உடுப்பு அணிந்த போலீசார். வினாடிகளில் மாறிப்போனது அந்த இடம்.

மக்கள் அந்த தடுப்புக்குப்பின் போக மறுக்க போலீஸ் அவர்களை முழுவேகத்துடன் தள்ள சில நிமிடங்களில் அந்த இடம்உணர்ச்சிகளின் சங்கம மாகியிருந்தது. கறுப்புக் கொடிகளை ஏந்திய தொண்டர்களின் கோஷத்தில் இப்போது போலீஸ்அராஜகம் ஒழிகவும் சேர்ந்து கொண்டது

.“அமைச்சரின் கான்வாய் இராமநாதபுரத்திலிருந்து கிளம்பிவிட்டது ரோஜர்” என்று அலறிக்கொண்டு வந்த ஸ்பீக்கர்வைத்தடிராபிக் கிளியரன்ஸ் ஜீப்பைப் பார்த்தவுடன் போலீஸாரின் வேகம் அதிகமானது. கம்பி தடுப்புக்கு பின்னால்போகாதவர்களை பிரம்பால் அடிக்க ஆரம்பித்தார்கள். களேபரமாகியது. தொண்டர்கள் அடிவாங்காமலிருக்க ஓட சிலர் அந்ததடுப்பின்மேலே விழுந்து அது சரிந்து மறுபக்கம் இருப்பர்வகளை அது நசுக்கியதால் வேதனையால் அவர்கள் கத்தஆரம்பித்தார்கள்

அந்த ஓலங்கள்அமைச்சரின் குழு கார்களின் அணிவகுப்பின் பைலட் ஜீப்பின் சைரன் ஒலியில் அமுங்கிவிட்டது. என்னநடக்கிறது? என்பது புரிவதற்குள் வினாடிகளில் அமைச்சரின் கார் அந்தப் பகுதியைக் கடந்துபறந்தது. அப்போது எங்கோதொலைவிலிருந்து எறியப்பட்ட ஒரு சிறிய கல் அமைச்சரின் அணிவகுப்பில் கடைசியாக வந்த காரின் மீது பட்டு தெறித்துசாலையில் விழுந்தது. தொடர்ந்து விழுந்தது ஒரு வார் அறுந்த பழைய செருப்பு..

அடிபட்டால் அடுத்தவினாடி திருப்பித் தாக்கும் விலங்குகளைப் போலப் போலீசார் நிற்பவர்கள் எல்லோரையும் தாக்கஆரம்பித்தனர் தொண்டர்கள் அலறிக்கொண்டு சிதறி ஓடினர்.



“ஐயோ என் பிளாஸ்க் - பிளாஸ்க் சார் பிளீஸ்” என்று கணபதி கத்தியதைக் கேட்க எவருக்கும் நேரமில்லை. தவறிவிழுந்தஅதை மிதித்து உடைத்துவிட்டு ஓடிக்கொண்டிருந்தது கூட்டம். பதறி ஓடிக்கொண்டிருப்பவர்களிடையே சிக்கி தடுக்கி கிழேவிழுந்த கணபதியை மிதித்துக்கொண்டே பல கால்கள் தொடர்ந்து ஓடிக்கொண்டிருந்தன. மிகுந்த கஷ்டத்துடன் எழுந்தகணபதியின் மீது விழுந்த ஒரு போலீஸ்காரின் அடியில் அவன் மயங்கி தரையில் விழுந்தான்.

சிதறிக்கிடந்த கிழிந்த கறுப்பு கொடிகள், சட்டைகள் கொடிக்கம்புகள் அறுந்தச் செருப்புகள் அடிபட்டு விழுந்திருக்கும் சிலமனிதர்கள் என ஒரு போர் நிகழ்ந்த இடம்போல் மாறியிருந்தது. அந்த இடம்



அரைமணிக்குப் பின் மயங்கிய நிலையிலிருந்து விழித்த கணபதிக்கு கண் இருட்டிக்கொண்டு வந்தது. காலில் பலமாகவிழுந்த அடி இப்போது விண்ணென்று வலித்தது. அப்போது அருகில் கிடந்த ஒற்றைச் செருப்பு அவன் கவனத்தை ஈர்த்தது. புத்தம் புதிய செருப்பு அவன் பார்த்து வைத்திருந்த அதே மாடல். அதைக்கையில் எடுத்துப்பார்த்துகொண்டிருந்த அடுத்தநிமிட,ம் ஒரு கெட்டவார்த்தையைச் சொல்லிக்கொண்டே அவனைப் பளீரென்று அறைந்தார் ஒரு போலீஸ்காரர். “மவனே நீதான் செருப்பை வீசினயாடா?” எனச்சொல்லி தரதரவென அவனை இழுத்துக்கொண்டே ஜீப்புக்குப் போனார். கணபதிக்குஒன்றுமே புரியவில்லை. “சார் சார் என்று அவன் பேசஆரம்பிக்கு முன்னரே பளார் பளார் என்று அறை, அவனுக்கு அழுகைமுட்டிக்கொண்டு வந்தது. கால் வலி வேறு அதிகமாகிக்கொண்டேயிருந்தது.

விஷயமறிந்து போலீஸ்டேஷனுக்கு பதறி அடித்துக்கொண்டு வந்த காவேரி கணபதியை ஜட்டியுடன்உட்காரவைத்திருப்பதைப்பார்த்து கூசித் துடித்துபோனார்

.அந்த இன்ஸ்பெக்டரின் காலில் விழுந்து “ஐயா அவனுக்கு ஒன்றும் தெரியாதய்யா விபரம் பத்தாத பையன் விட்டுடங்கஅய்யா என்று கண்ணீருடன் கெஞ்சினார்

“சும்மா கத்தாதம்மா ஓம் மவன் மந்திரி கார் மேல் செருப்பு எறிஞ்சிருக்கான். இது எவ்வளவு பெரிய கேஸ் தெரியமா? கேஸ்எழுதிட்டோம் நாளைக்கு ராமநாதபுரம் கோர்ட்டுக்கு வக்கீலோடு வந்து ஜாமீன் கேக்கச்சொல்லு. போ” என்று கத்திவிட்டுயாரோடுனோ போனில் பேச ஆரம்பித்துவிட்டார்.

கருணையை வேண்டும் காவேரியின் கதறலையும் அழுகையையும் ஒரு பொருட்டாகவே மதிக்க வில்லை அந்தக் காக்கிசட்டையின் மரத்துப்போன நெஞ்சம்

.மதியம் கடந்துகொண்டிருந்தது. என்ன செய்வது? என்று தெரியாமல் தவித்துக்கொண்டிருந்த காவேரி. ஸ்டேஷன்வாசலிலேயே உட்கார்ந்திருந்தார்.



சட்டென்று வந்த அந்த காரை காவேரி முதலில் கவனிக்கவில்லை. காரிலிருந்து இறங்கியவர் ஒம் மகனாம்மா? பேர் என்ன? என்ன வயசாகிறது? என்ற கேட்ட அந்தத் தொனியிலேயே இவர் நமக்கு உதவி செய்யபவர் போலிருக்கிறது என்றுநினைத்து அழுதபடி “பேர்“கணபதி சார். இந்த ஆனிக்கு 14 வயசாகுதுங்க நெடுநெடுன்னு வளர்ந்திருக்கே தவிர விபரம்பத்தாத புள்ளை படிப்பு ஏறல்ல, எங்கூட பலகாரகடையிலிருக்கான். அவனைப்புடிச்சி “ ,என்று புலம்ப ஆரம்பித்தார். கறுப்புகோட்டுடன் கம்பீரமான நடையில் ஸ்டேஷனுக்குள் நுழைந்தவரை இன்ஸ்பெக்டர் சற்றும் எதிர்பார்க்கவில்லை என்பதுஅவர் உடல் மொழியில் தெரிந்தது

. என்ன சண்முகம்? ராமநாதபுரத்தில் செய்ததை இங்கும் செய்ய ஆரம்பிச்சிட்டுங்களா? ஏன்ய்யா சர்வீஸ் முழுவதும் இப்படிபொய்கேஸ் போட்டுகிட்டே இருப்பிங்களா? இதுவே பனிஷ்மெண்ட் போஸ்டிங். இங்கேயும் ஆரம்பிச்சிட்டிங்களா? என்றுசொல்லியபடியே நாற்காலியில் உட்கார்ந்தார் கிருஷ்ணத்தேவர்.

சுற்று வட்டாரத்தில் இருக்கும் மாவட்ட கோர்ட்டுகளில் மனித உரிமை, பெண் பாதுகாப்பு சமூக நீதி சிறுகுழந்தை நலம்போன்ற விஷயங்களுக்காக வழக்குப்போட்டு போராடும் வழக்கறிஞர். சமூக ஆர்வலர். இடது சாரி சிந்தனையுள்ளவர். இன்று நடந்த போராட்டத்தில் இடது சாரி அமைப்புகள் இல்லாததால் இவருடைய வருகை அந்த இன்ஸ்பெக்டருக்குஅதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் தந்தது.



“இல்ல சார் இரண்டு சாட்சி ஸ்டிராங்க இருக்கு. காலிலிருந்து கழட்டி எறிந்ததைப்பார்திருக்காங்க சார், அரசியல்போராட்டம், சென்டரல் மினிஸ்டர்... அந்தக்கட்சி பிரஷர் அதனாலே” என்று இழுத்தவர். எறிந்த “செருப்பைக்கூடஎடுத்துவைச்சிருக்கோம் சார்.” என்று தன் மேஜையின் மீதி ஒரு பிளாஸ்டிக் கவரில் வைத்திருந்த செருப்பை நோக்கிக்கையை காட்டினார்

.

மொதல அவன் டிரஸ்சை கொடுங்க அரசியல் போராட்ட கைதுன்னு சொல்றீங்க அப்புறம் ஏன் இந்த கிரிமினல்டீரிட்மென்ட்?

மேஜைமீது இருந்த அந்த பிளாஸ்டிக் கவரையும் அதில் உள்ள செருப்பையும் அரை நிமிஷம் பார்த்த கிருஷ்ணத்தேவர்.

“அப்படியா சரி புறப்படுங்க ராமநாதபுரம் மாஜிஸ்ட்ரேட் வீட்டுக்கு” என்றார்.

சற்றே திகைப்புடன் “சார் வண்டி இல்ல சார் நாளைக்குக் காலையிலே கூட்டிப் போய் ரிமாண்ட் பண்ணறோம் நீங்க வந்துஜாமீனல எடுத்துடுங்க”.

“மிஸ்டர் சண்முகம் ! மாஜிஸ்ட்ரேட் கிட்ட போறது பையனுக்கு ஜாமீன் எடுக்க இல்லை நீங்கபொய்கேஸ்போட்டிருக்கின்னு ஆதாரத்தோடு சொல்லி உங்க மேலே கோர்ட்லேயே ஒரு புகார்கொடுத்து வழக்குப் பதிவுசெய்யத்தான்

.ஒரு மைனர் பையனை இப்படி ஸ்டேஷனில் வச்சதுக்கு சட்டத்தில் இடமில்லை. எங்கேய்யா? உங்க சாட்சிகள்அவங்களையும் வரச்சொல்லுங்க. பொய் சாட்சி கொடுத்தற்காக அவங்க மேலேயும் மாஜிஸ்டிரேட் கிட்ட ஒரு புகார்கொடுக்கணும்

.சார்...

“பின்ன என்ன சண்முகம் சட்டங்களைத்தான் மறந்திட்டிங்க, சொந்தமா சிந்திக்கிறதையே மறந்தீட்டிங்களா?

இந்த புதுச் செருப்பில் சைஸ் 9 நம்பர் பளிச்சின்னு தெரியுது. இந்த சிறுபையனின் கால் சைஸ் உஙளுக்குப் பார்த்தவுடன்தெரியலையா? கழட்டி ஏறிஞ்சதைப்பார்த்த சாட்சி இருக்காங்களாம் என்ன கதைய்யா இது?

வாங்க போலீஸ் வண்டியில்லாவிட்டால் பராவாயில்ல என் காரில் போகலாம். கிளம்புங்க” என்று சொல்லிக்கொண்டேஎழுந்தார்.



“சார்,சார் அவசரத்திலே கவனிக்கல்ல. சாரி சார். மேட்டரைப் பெருசு பண்ணாதீங்க சார். பிளீஸ்”காலையில் கருணையேஇல்லாமல் பேசிய காக்கிச்சட்டை இப்போது கருணைக்காகக்கெஞ்சியது



இன்ஸ்பெக்டர் கான்ஸ்டபளைப் பார்த்துக் கண்ணைக்காட்டியதும் அவர் கணபதியின் டிரஸைக்கொடுத்து “நீ போப்பா” என்றார்.



“அய்யா நீங்க மஹராசனாக இருக்கணும். நா கும்படற கிருஷ்ணன் சாமி நேரில்ல வந்தது போல வந்து இவனைக்காப்பாத்திட்டிங்க” என அழுதுகொண்டே அவரின் காலில் விழுந்து வணங்கினார் காவேரி.

வெளியே வந்த கிருஷ்ணத் தேவர் காத்திருந்த உள்ளூர் நண்பரிடம் "சரியான டைத்துக்கு இன்பெர்மேஷன் கொடுத்தீங்க. கோர்ட்டுக்குப் போக வேண்டிய அவசியமே இல்லை. இந்த பையனைத் இவனுக வேறு தொந்தரவு பண்ணாம பாத்துங்க" என்று சொல்லிக் கொண்டே காரில்ஏறிப்போனார்

“நல்ல மனுஷன் மவராசன். நேரத்துக்கு வந்து காப்பத்திட்டார்டா... “நாளைக்குப் போய் உனக்குச் செருப்பு வாங்கலாம்கணபதி”.



“எனக்கு இனிமே செருப்பே வேண்டாம்மா. நளைக்கு நமக்கு வேற பிளாஸ்க் வாங்கணும்”



அந்த பதிலைக் கேட்டு ஒரு வினாடி ஸ்தம்பித்துப் போய் கணபதியைக் கட்டி அணைத்துக்கொண்டார். காவேரி

----ஆதித்யா

முக நூலில் வந்த பின்னூட்டங்களில் சில

Panneerselvam Natarajan
Panneerselvam Natarajan அருமையான சிறுகதை சார்.. இன்னமும் இப்படிப்பட்ட நிகழ்வுகள் தமிழகத்தில் ஆங்காங்கே அரங்கேறிக் கொண்டுதானிருக்கிறது.
Manage
Like · Reply · 1w

Ramanan Vsv replied · 1 Reply
Subramanian Venkateswaran
Subramanian Venkateswaran Really excellent and touching. Touching story. Welldone.
Manage
Like · Reply · 1w

Ramanan Vsv replied · 1 Reply
Raghunathan Vaidyanathan
Raghunathan Vaidyanathan ரமணன் சார்,

அருமை. தூத்துக்குடி சம்பவம் ஒரு இன்ஸ்பைரேஷனாக இருந்ததோ? ஆனால் இதுபோன்ற அராஜஹங்கள் அடிக்கடி நடக்கிறது. கதை நன்றாக இருக்கிறது.
Manage
Like · Reply · 1w
Ramanan Vsv
Ramanan Vsv நன்றி இதில் பாதி நிஜம். ராமநாதபுரத்தில் நிகழ்ந்தது
2
Manage
Like · Reply · 1w · Edited
Uma Ganesh
Uma Ganesh நல்ல வேளை கணபதிக்கு ஒண்ணும் ஆகலை.
Manage
Like · Reply · 1w

Ramanan Vsv replied · 1 Reply
Kamaraj Rathinasamy
Kamaraj Rathinasamy நெஞ்சைத் தொடும் கதை தான், இருந்தாலும் கதையில் கூட ஏழை எளியவர்கள் மட்டுமே துன்பப் பட வேண்டுமா?
Manage
Like · Reply · 1w

Ramanan Vsv replied · 1 Reply
M Nithyanandam
M Nithyanandam அருமையான கதை சார், ஏன் இத்தனை வருஷம் நீண்ட இடைவெளி, அதிகம் சார். பல நல்ல சிறுகதைகள் கிடைக்காமல் போய்விட்டதே.
Manage
Like · Reply · 1w

Ramanan Vsv replied · 1 Reply
Vidya Subramaniam
Vidya Subramaniam அருமை.
Manage
Like · Reply · 1w

Ramanan Vsv replied · 1 Reply
Moorthy Athiyanan
Moorthy Athiyanan இன்று தான் படித்தேன் சார்....நன்றி.
Manage
Like · Reply · 1w

Ramanan Vsv replied · 1 Reply
Subashini Tirumalai
Subashini Tirumalai அருமையான நெகிழ்வான கதை!
Manage
Like · Reply · 1w

Ramanan Vsv replied · 1 Reply
Namagirilakshmi Arumugam
Namagirilakshmi Arumugam Arumai
Manage
Like · Reply · 1w
Krishnamurthi Balaji
Krishnamurthi Balaji மிக மிக அருமை
Manage
Like · Reply · 1w
Subramanian Narayanan
Subramanian Narayanan அருமை சார்
Manage
Like · Reply · 1w

Ramanan Vsv replied · 1 Reply
Ramanathan Rk
Ramanathan Rk செறிவான கதை.. நல்ல ஓட்டம்..! கதை நேர்கோட்டில் பயணித்து மனித நேயக்குவிப்பில் முடிவது கூடுதல் சிறப்பு. வாழ்த்துகள் ஸார்..!
Manage
Like · Reply · 1w

Ramanan Vsv replied · 1 Reply
இளமதி பத்மா
இளமதி பத்மா படித்துக் கொண்டிருக்கும் போதே பதட்டமானேன் . அருமை சார்.
Manage
Like · Reply · 1w

Ramanan Vsv replied · 1 Reply
Maragatha Mani
Maragatha Mani இன்னும் எத்தனை காலம் தான் கதையும் நடைமுறையும் ஒன்றாகவே இருக்கபோகிறதோ. நீண்ட இடைவெளி விட்டு நீங்கள் எழுதும்போதும் காட்சிகளக தெரிகிறது.
Manage
Like · Reply · 1w

Maragatha Mani replied · 2 Replies
Major Dasan
Major Dasan Arppudham... Vaazthukkal
Manage
Like · Reply · 1w

Ramanan Vsv replied · 1 Reply
Ananthakrishnan Panchanadam
Ananthakrishnan Panchanadam வாழ்த்துக்கள் 💐
Manage
Like · Reply · 1w
Revathi Suriyan
Revathi Suriyan மிக அருமையான கதை. இன்றைய யதார்த்தை தோலுரித்துக் காட்டியிருக்கிறார் கதாசிரியர். என் மனமார்ந்த பாராட்டுக்கள் ரமணன் சார்.
Manage
Like · Reply · 1w · Edited

Ramanan Vsv replied · 1 Reply
Bhuvaneswari Chandrasekaran
Bhuvaneswari Chandrasekaran அருமையான கதை!
Manage
Like · Reply · 1w

Ramanan Vsv replied · 1 Reply
K V Rajamany
K V Rajamany Jeans....ரமணனா...கொக்கா...
Manage
Like · Reply · 1w

Ramanan Vsv replied · 1 Reply
Bhaskaran Jayaraman
Bhaskaran Jayaraman செருப்பைச் சுற்றியே கதை - வறுமை, பாசம், உழைப்பு, அரசியல், காவலில் நேர்மையின்மை, தனியாய் கிடைக்கும் ஒற்றைச் செருப்பு மற்றும் பிய்ந்த செருப்புகள் - ஆரம்பத்தில் விருப்பு, இறுதியில் வேண்டா வெறுப்பானதும் செருப்பாலே! அருமை சார்!
Manage
Like · Reply · 1w

Ramanan Vsv replied · 1 Reply
Rajan Subrahmanian Kalambur
Rajan Subrahmanian Kalambur What a boy. Fantastic and heart rending story.
Manage
Like · Reply · 1w
Gopal Srinivasan
Gopal Srinivasan அற்புதம்
Manage
Like · Reply · 1w

Ramanan Vsv replied · 1 Reply
Venkatachalam Muthiah Muthiah
Venkatachalam Muthiah Muthiah அவரை விட இவரை தான் மிகவும் ரசித்தேன்(ஆதித்யாவை)
Manage
Like · Reply · 1w

Venkatachalam Muthiah Muthiah replied · 2 Replies
Raghavan Chetlur
Raghavan Chetlur இன்றைய நடப்புகளின் பிரதிபலிப்பை உணரமுடிகிறது. அடிப்பவன் அடிகளெல்லாம் அப்பாவிகள் தலைகளிலே தான்....
Manage
Like · Reply · 1w

Ramanan Vsv replied · 1 Reply
எழுத்தாளர் கே ஜி ஜவஹர்
எழுத்தாளர் கே ஜி ஜவஹர் அருமை சார்
Manage
Like · Reply · 1w

Ramanan Vsv replied · 1 Reply
Mathanagopal Nagarajan
Mathanagopal Nagarajan கதையின் களமும் , உரையாடல்களும் , சம்பவங்களும் உண்மைக்கு அருகில்.
காபியை வைத்து காண்டிராக்டர் நல்ல பேர் எடுக்க முயல்வது அருமை.
இடது சாரிக் காரரை வைத்து ஜாமீன் எடுப்பதும் …See More
Manage
Like · Reply · 1w

Ramanan Vsv replied · 1 Reply
Bharathi Godakrishniah
Bharathi Godakrishniah Very much interesting This happens very rarely in reality. The innocent and the poor are the scapegoats in reality. Congratulations.
Actually I read half the story yesterday. Could not continue due to other work. I completed reading it just now. Well done AUDITYA!
Manage
Like · Reply · 1w

Bharathi Godakrishniah replied · 2 Replies
Latha Kamala
Latha Kamala கதை நன்றாக வந்திருக்கிறது கல்கியில் வரும் கட்டுரை நிறைய படித்திருக்கிறேன் இது வரை .இனி தொடருமா?
Manage
Like · Reply · 1w

Ramanan Vsv replied · 3 Replies
Latha Kamala
Latha Kamala நான் US ல் இருப்பதால் கல்கி படிக்கவில்லை .
Manage
Like · Reply · 1w

Latha Kamala replied · 2 Replies
Gopalakrishnan Lokanathan
Gopalakrishnan Lokanathan super sir...
Manage
Like · Reply · 1w
Ramanan Vsv
Ramanan Vsv thank you very much
Manage
Like · Reply · 1w
Vedha Gopalan
Vedha Gopalan குடிசையை வர்ணித்த விதம் நேரில் பார்த்த உணர்வைத் தந்தது
//அடுக்காகச் சொருகிய அட்டை டம்பளர் / ஆஹா
//காவேரியின் கட்டுப்பாடுகள்// அருமை …See More
1
Manage
Like · Reply · 1w

Vedha Gopalan replied · 2 Replies
Kandasamy K
Kandasamy K வாழ்த்துக்கள்
Manage
Like · Reply · 1w
Saraswathi Rajendran
Saraswathi Rajendran அருமைசார்
Manage
Like · Reply · 1w
Valiyur Subramanian
Valiyur Subramanian இனி இடைவெளியின்றித் தொடர்ந்து எழுதவும். நல்ல நடை.
Manage
Like · Reply · 1w

Ramanan Vsv replied · 1 Reply
Rajaram Sankaran
Rajaram Sankaran அருமை நண்பரே
Manage
Like · Reply · 1w
Geetha Chandra
Geetha Chandra இப்ப தான் நிதானமா படிக்க முடிந்தது ....வெகு அருமை....கதைக்களமும் விவரித்த விறுவிறுப்பும் ஒரு திரில்லர் அனுபவத்தைக் கொடுத்தது ..கடைசி வரை அந்த பையனுக்கு ஏதோ ஆகப் போகிறதென்றே நினைத்தேன் ...துணுக்கு தோரணங்களால் கதை சொல்வது எளிது சீரியஸ் கதை செய்வது கடினம் ...Congrats
Manage
Like · Reply · 3d
Vijayalakshmi Ranganathan
Vijayalakshmi Ranganathan Normal story
But very nice
Manage
Like · Reply · 19h
Ramanan Vsv

Write a comment...


1

18/7/18

சினிமாக்கள் பார்த்துதான் தொழில் கற்றேன்”



வங்கிக்கொள்ளை, ஆள்கடத்தல், கைதிகள் சிறையிலிருந்து தபிப்பது போன்ற காட்சிகளைப் பிரமிப்புடன் பார்க்க வைத்த ஹாலிவுட் படங்கள் 1990 களிலும்,2000களிலும் வெளிவந்த அல்பேஷினோ, ஸ்கார்ஃபேஸ் ஹீட் போன்றவை. இன்றும் ரசித்துப் பார்க்கப்படும் இந்த ஹாலிவுட் படங்களைத் தூக்கிச் சாப்பிடுமளவிற்கு ஒரு சிறை யிலிருந்து தப்பிக்கும் சாகசம் அண்மையில் பிரான்ஸில் நிகழ்ந்திருக்கிறது.
பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரீஸின் புறநகர் பகுதியான சூட் பிரான்ஸிலியனில் (sud-Francilien) நவீன பாதுகாப்பு வசதிகளுடன் ஒரு அதி பாதுகாப்பு அமைப்புக்கொண்ட சிறைச்சாலை. இருக்கிறது.  இதில் 25 ஆண்டு சிறை தண்டனையை அனுபவித்துக்கொண்டிருக்கும் கிரிமினல் குற்றவாளி ரொடோய்ன் ஃபெய்ட்.( Redoine Faid)

கைதிகள் பார்வையாளர்களைச் சந்திக்கும் அறையில் அண்மையில் இவரைச் சந்திக்க வந்த ஒரு ஒரு உறவினருடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது திடுமென்று நவீனத் துப்பாக்கிகளுடன் பிரான்ஸின் கமாண்டோக்கள் உடையணிந்த இருவர் கண்ணாடிக்கதவுகளை வலிமையான டிரில்லர்களால் துளைத்து உடைத்துக்கொண்டு உள்ளே வந்தனர். கதவுகளை உடைக்கும் போதே புகைக்குண்டுகளை வெடித்ததால். புகை சூழுந்த அந்த நிமிடங்களில் என்ன நடக்கிறது என்று புரிந்துகொண்டு சிறைக் காவலர்கள் சுதாரிப்பதற்குள் ரொடொய்ன் ஃபெய்ட்டை இழுத்துக்கொண்டு  வெளியே ஒடி  ஒரு கமாண்டோ காவலுடன் நின்று கொண்டிருந்த ஹெலிகாப்டரில் ஏற்றிக்கொண்டனர். அதன் உள்ளே பைலட்டின் தலையில் துப்பாக்கியை வைத்திருந்த மற்றொரு காமண்டோ கட்டளையிட்டவுடன் விமானம் பறந்து சிலநிமிடங்களில் மறைந்தது.உலகச்சிறைச்சாலைகள் உடைப்பு வரலாற்றில் இதுவரை இவ்வளவு வேகமாக ஒரு சிறை தப்பிப்பு நடந்ததில்லை. உண்மையான கமாண்டோ ஆக்‌ஷன் இது.
ஒரு ஹாலிவுட் திர்ல்லர் போல 10 நிமிடத்தில் நடந்து முடிந்துவிட்ட இந்தத் தப்பிப்பித்தலில் துப்பாக்கிச்சூடு, மனித உயிர் இழப்பு எதுவுமில்லை. ஒத்திகைப்பார்க்கபட்ட ஒரு சினிமா ஷூட்டிங் போல ராணுவத்துல்லியத்துடன் நிகழ்ந்த இதைக் கண்டு பிரான்ஸின் போலீஸ் திகைத்து நிற்கிறது. நாட்டின் நீதித்துறை துறை அமைச்சர் இது அழகாகத் திட்டமிடப்பட்டு அருமையாகச் செயலாக்கப்பட்டிருக்கும் சிறை உடைப்புதான் என்பதை ஒப்புக்கொண்டிருக்கிறார்
.
நிகழ்ந்த சில வினாடிகளில் வயர்லஸ், போன்களில் செய்தி பறந்தது. தேடிக்கொண்டிருந்த போலீஸ் ஒரு மணி நேரத்தில் கண்டுபிடித்தது நெடுஞ்சாலையில் 40 மைகளுக்கு அப்பால் எஞ்ஞின் எரிந்த நிலையில் நின்று கொண்டிருந்த ஹெலிகாப்டரையும் அதனுள் மயங்கிக்கிடந்த அதன் பைலட்டையும் தான். அந்த ஹெலிகாப்டர் அருகிலுள்ள ஒரு விமான கிளப்புக்கு சொந்தமானது. உறுப்பினர்களக்கு பயிற்சி அளிக்கும் பயிற்சியாளர் பைலட்டை துப்பாக்கி முனையில் கடத்தி அந்த ஹெலிகாப்படரில் சிறைக்குள்ளிருந்த ரொடோய்ன் ஃபெய்ட் யை அதிரடியாக மீட்டிருக்கின்றனர் அவரது நண்பர்கள்.
ஹெலிகாப்பட்டர் நின்ற இடத்திலிருந்து ஒரு அதி வேகக் காரில் 100 மையில் பயணம் செய்து பாதி வழியில் அதன் எஞ்ஞினையும் எரித்துவிட்டுத் தப்பியிருக்கின்றனர் குற்றவாளிகள். ஒரு ரயில் நிலையம். சின்ன விமான நிலையம் இருக்குமிடத்தின் அருகில் அந்த கார் இருந்ததால் அங்கிருந்து எங்கே எப்படி சென்றிருப்பார்கள் என இப்போது ஆராய்ந்துகொண்டிருக்கிறார்கள்
இந்தச் சிறை ஒரு அதி பாதுகாப்புச் சிறை ஹெலிகாப்டர்கள் இறங்க முடியாத மேல்தளம், வலையிடப்பட்டு மூடப்பட்டிருக்கும் மைதானங்கள் போன்ற பல பாதுகாப்பு ஏற்பாடுகள்.  சிறையிலிருந்து விடுதலையாகும் கைதிகள் சில நிமிடங்கள் நின்று கடக்க வேண்டிய ஒரு திறந்த வெளியில் மட்டும் இந்த ஹெலிகாப்டர் பாதுகாப்பு தடுப்பு அமைப்புகள் இல்லை. சரியாக அந்த இடத்தில் ஹெலிகாப்டரை இறக்கிக் காத்திருந்திருந்து காரியத்தை முடித்துவிட்டார்கள்.
.
சிசிடிவி கேமிராக்களில் புகை மூட்டத்தால் பதிவானவை எதுவும் தெளிவாக இல்லை. . இப்போது பிரான்ஸ் முழுவதும் 30000 போலீஸார் இவர்களைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள்
இப்படி சிறையிலிருந்து தப்பித்திருக்கும் ரொடோய்ன் ஃபெய்ட்.க்கு இப்படி சிறையிலிருந்து தப்புவது இது முதல் முறை இல்லை. வங்கிக் கொள்ளை, நகைக்கடை கொள்ளையென பலகுற்றங்களில்ஈடுபட்டிருக்கும் பெரிய கொள்ளைக்காரனா இவருக்குத் திட்டமிட்டு குற்றங்கள் செய்வதும்ஜெயிலிருந்து அட்டகாசமாகத்தப்பிப்பதும்  வாடிக்கை.

நீண்ட தேடுதலுக்குப்பின் 1990 களில் ஒரு வங்கிகொள்ளைக்காகக் கைது செய்யப்பட்டு 10 ஆண்டுகள் சிறையிலிருந்தபின் 2010ல். தண்டனைக்காலம் முடிந்தவுடன் “நான் திருந்திவிட்டேன், இனி திருடமாட்டேன் பாவமன்னிப்புக் கேட்டுப் புத்தகம் எழுதிக்கொண்டிருக்கிறேன், சமூக சேவை செய்யப் போகிறேன்” என்றெல்லாம் டிவிக்களில் பேட்டி கொடுத்துக்கொண்டிருந்தார்.  வெளிவரப்போகும் வரப்போகும் தன் புத்தகத்துக்காகப் பல நகரங்களில் கூட்டங்கள் நடத்திக்கொண்டிருந்தார்
.
ஆனால் மீண்டும் அடுத்த வருடமே ஒரு நகைக்கடை கொள்ளையில் பிடிபட்டு புத்தகம் வெளிவரும்முன்னரே உள்ளே போனார்.  அந்தக்கொள்ளையில்  ஒரு போலீஸ்காரரைக் கொன்றதால் 25 வருடத் தண்டனையுடன் 2013 ம் ஆண்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்

 ஆனால் ஒரே வாரத்தில் அந்தச் சிறையில் அவரைப் பார்க்கவந்தவர்கள் கொடுத்த டிஷ்யூ பேப்பர் பெட்டியிலிருந்த வெடிகுண்டுகளைவெடித்தும்  காவலாளிகளைப்  பிணைக்கைதிகளாகப் பிடித்துக்கொண்டும் சிறையிலிருந்து தப்பிவிட்டார். வலைவீசித்தேடி 6 வாரத்துக்குள் பிரான்ஸ் போலீஸ்  அவரைத் தேடிக் கண்டுபிடித்தது, மீண்டும் 25 வருடத் தண்டனை கொடுக்கப்பட்டு இந்த அதிபாதுகாப்புச்சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
அங்கிருந்துதான் உலக வரலாற்றிலேயே மிக துல்லிமாகத் திட்டமிடப்பட்டு வேகமாகச் செயலாக்கப்பட்டிருக்கும் இந்த சாகசச்செயலினால் இப்போது தப்பியிருக்கிறார்.

கடந்தமுறை விடுதலையாகி வந்தபோது இவர் டி வி பேட்டிகளில் சொன்னது. “நான் அல்பேஷினோ, ஸ்கார்ஃபேஸ், ஹீட் போன்ற ஹாலிவுட் படங்களைப் பார்த்துத்தான் என் கொள்ளைகளைத் திட்டமிட்டேன். 20 முறை பல மணிநேரம் அந்த படங்களைத் திரும்பத்திரும்பப் பார்த்துத்தான் என்னை வங்கிக்கொள்ளைக்கு தயாரித்துக்கொண்டேன். பாரிஸில் நடந்த உலகப்படவிழாவிற்கு வந்திருந்த ஹீட் என்ற படத்தின் டைரக்டர் மைக்கேல் மான் அவர்களிடமே “நீங்கள் தான் எங்கள் கொள்ளை முயற்சிகளின் டெக்னிகல் டைரக்டர்” என்று நான் சொல்லியிருக்கிறேன்
.
நிகழ்ந்த துணிகரமான சிறை உடைப்பு, வங்கிக்கொள்ளை போன்றவற்றைத்தான் நாங்கள் படமாக எடுக்கிறோம் என்று ஹாலிவுட்காரர்கள் சொல்லுகிறார்கள். . ஆனால் இவர்களின் படத்திலிருந்துதான் நான்  தொழிலைத் திறமையாகச் செய்யக் கற்றேன்  என்கிறார் இந்தக் குற்றவாளி.

உடனடியாக இல்லாவிட்டாலும் கூட அடுத்த கொள்ளை முயற்சியில் நிச்சியம் சிக்கிவிடுவான் என்று நம்பிக்கையுடன் இருக்கும் பிரான்ஸ் போலீஸின் கவலையே வேறு. 
பிடித்துச் சிறையில் அடைத்த பின் இவரை எப்படி தண்டனைக்காலம் வரை  பாதுகாப்பது என்பது தான் அது. 


10/7/18

திறமைகள் ஓய்வதில்லை.



சில தமிழ் சினிமாக்களின் கதாநாயகர்கள் எப்படி மக்கள் மனதில் நீங்காத இடத்தைப்பெற்றிருக்கிறார்களோ அதேபோல் சில தமிழக போலீஸ் அதிகாரிகளும் மறக்க முடியாதவர்களாக, மதிக்கப்படுபவர்களாகயிருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் திரு விஜயகுமார் ஐபிஎஸ்.
பள்ளியில் படிக்கும்போதே ஒரு போலீஸ் அதிகரியாக வேண்டும் என்ற தாகத்துடன் வளர்ந்தவர் விஜயகுமார். காரணம் அவரது தந்தை. மிடுக்கான, கண்டிப்பான போலீஸ் அதிகாரியான கிருஷ்ண நாயர்தான் அவரது ரோல் மாடல். அதனால் தான் 1975ல் ஆட்சிப்பணிக்கான தேர்வில் ஐஏஎஸ்ஸில் முதல் ரேங்க் பெற்றிருந்த போதும் காக்கியின் மீதிருந்த காதலால் இரண்டாவது இடம் பெற்றிருந்த ஐபிஎஸ்ஸை தேர்ந்தெடுத்தார்.

ஒரு காவல் துறைத் துணைக் கண்காணிப்பாளராகத் தன் வாழ்வைத் தொடங்கிய விஜயகுமார், தேசிய காவல் அகாடமியின் இயக்குநர் பதவிவரை காவல் துறையின் பெரும் பதவிகள் அனைத்தையும் பார்த்தவர். தமிழகப் போலிஸின் 20 ஆண்டு சவலாகயிருந்த வீரப்பனை வீழ்த்தியது இவர் அடையாளம். 

சில பதவிகள் அதிலிருக்கும் அதிகாரிகளால் பேசப்படும். விஜயகுமார் எந்தப் பதவியிலிருந்தாலும் அதில் தன் அடையாளத்தைப்பதித்தவர். மாவட்டங்களிலிருந்தபோதும் சரி சென்னைக் கமிஷனர்களாகயிருந்த போதும் சரி நிறைய ரவுடிகளை ஒடுக்கியவர். ஒரே வாரத்தில் 1000 பேரை கைது செய்தவர். தமிழகப் போலீஸில் எஃபி அருள். வால்ட்டர் தேவாரத்துக்கு அடுத்தபடியாகத்தமிழக ரவுடிகள்தல்காட்டாமல் இருந்தது இவர்காலத்தில் தான். அதற்காக  7 என்கவுண்டர்களை நடத்தி சர்ச்சைகளுக்கும் உள்ளானவர்
அபோது அவர் சொன்னது

“நான் எனக்குக் கீழ் பணியாற்றுவோரிடம் அடிக்கடி சொல்வது துப்பாக்கி வெறும் பொம்மை அல்ல என்பதைத்தான். ஒரு அரசாங்கம் யாரிடமாவது சும்மா துப்பாக்கியைக் கொடுத்துச் சுடச் சொல்லுமா? காவல் துறையிடம் கொடுத்திருக்கிறது என்றால், ஏன்? மக்களைக் காப்பாற்றுவதற்காக. அப்படிக் காப்பாற்ற நேரும்போது, உன் உயிருக்கு ஆபத்து வந்தால் உன்னைக் காத்துக்கொள்வதற்காக. ஆனால், எதற்கெடுத்தாலும், துப்பாக்கியைத் தூக்குபவனோ, தூக்கச் சொல்பவனோ அல்ல நான். தவிர்க்க முடியாத தருணத்திலேயே அவை வெடிக்கின்றன”
துணிவான இந்த அதிகாரி ராஜிவ் பிரதமாராக இருந்தபோது அவர் பாதுகாப்புகாக உருவாக்கபட்ட ஒரு விசேஷப்படைக்கு தலமைதாங்க நியமிக்கபட்டவர் மீண்டும் தமிழத்டில் ப[ல பதவிகளை வகித்தவந்த  வந்த இவரை மத்திய அரசு அனைத்திந்திய போலீஸ் உயர் அதிகாரிகளுக்குப் பயிற்சியளிக்குக்கும்  தேசிய போலீஸ் அகடமியின் தலைவராக நியமித்தது. தொடர்ந்து மத்திய ரிசர்வ் போலீஸின் தேசிய தலமைப்பொறுப்பை ஏற்று அதில் பல சிறப்பு பயிற்சி திட்டங்களை உருவாக்கியபின் ஒய்வு பெற்ற இவருக்கு அன்றைய உள் துறை அமைச்சர் திரு சிதம்பரம் உள்துறை அமைச்சகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் பதவி வழங்கினார். அந்தப்பதவியிலிருக்கும்போது விஜயகுமார், வெறும் ஆலோசகராக மட்டும் இல்லை; களத்தில் நின்றார். தேர்தல் புறக்கணிப்பைப் பிரகடனப்படுத்திய மாவோயிஸ்ட்டுகள் பஸ்தாரில் நடத்திய தாக்குதலில் பாதுகாப்புப் படை வீரர்கள் இறந்தபின்னர்  இவரின் திட்டப்படி கொடுக்கபட்ட பதிலடி இன்றும் பேசப்படும் ஒரு விஷயம்.
“ஐந்து லட்சம் பட்டதாரிகளிலிருந்து 150 பேர் காவல் துறை அதிகாரிகளாகத் தேர்ந்தெடுக்கப்படும் முறை உலகில் வேறு எங்கும் இல்லை. அவ்வளவு திறனும் அறிவும் நம்மிடம் இருக்கிறது. இது பலம். இந்தப் பலத்தைப் பயன்படுத்திக்கொள்ள முடியாதது பலவீனம். தேவை எதுவென்றால், சீர்திருத்தம்.” என்று துணிந்து போலீஸ் துறையைப் பற்றி எழுதியிருப்பவர் இவர்.

தன் அரசு ஆலோசகர் பதவிக்காலம் முடிந்த அன்று (கடந்த ஜுன்13ம் தேதி) அமைச்சருக்கும் அதிகாரிகளுக்கும், காவல்துறையினருக்கும் நாலு வரியில் தன் முக நூல் பக்கத்தில் நன்றியைத்தெரிவித்தபோது விஜயகுமாருக்கு அடுத்த ஒரு வாரத்தில் ஒர் ஆச்சரியம் காத்திருப்பது தெரியாது.

காஷ்மீர மாநில  அரசியல் சதுரங்கத்தில் தவறாகக் காய்கள் நகர்ந்தப்பட்டதின் விளைவாக ஆட்சி கவிழ்ந்து குடியரசு தலைவர் ஆட்சி அறிவிக்கபட்டவுடனேயே கவர்னருக்கு ஆலோசகர்களாக நியமிக்கபட்ட அதிகாரிகளில் ஒருவர் விஜயகுமார். திறமையான அதிகாரி என்பது மட்டுமில்லாமல் காஷ்மீரில் எல்லைக்காவல் படை ஐஜியாக இருந்த காலத்தில் இவர் பூட்ஸ் படாத காஷ்மீர் எல்லைப்பகுதி எதுவுமில்லை என்பதும் ஒரு காரணம்
காஷ்மீரத்தில் என்று தணியும் இந்த வன்முறை தாகம் என்று பல இந்தியர்கள் காத்திருக்கும் இந்த நேரத்தில் தொலைநோக்குப் பார்வையோடு கூடிய, ஆழமான ஆலோசனைகளை அரசுக்கு வழங்க ஒரு முன்னாள் தமிழகப் போலீஸ் அதிகாரி நியமிக்கபட்டிருப்பது நமக்குப் பெருமை தரும் விஷயம்.