சமுக பிரச்சனைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சமுக பிரச்சனைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

30/6/15

ஒபமா நல்லவரா? கெட்டவரா?


அமெரிக்காவில் கடந்த 1980ல் 2 லட்சம் இந்தியர் வேலைப் பார்த்தனர். இப்போது இந்தியாவில் இருந்து சென்று அங்கு வேலைப் பார்ப்போர் எண்ணிக்கை 20 லட்சமாக அதிகரித்து இருக்கிறது. அமெரிக்காவுக்கு வேலை நிமித்தமாகச் செல்வோருக்கு எச்1பி என்ற விசா வழங்கப்படுகிறது.. அவர்கள் பணியாற்றும் நிறுவனங்களே இந்த விசாவுக்காக விண்ணப்பிக்கும். அமெரிக்காவில் சாப்ட்வேர் பணிக்கு ஆள் தேவைப்படும் நிறுவனங்களில் இந்த ஊழியர்கள் ஒப்பந்த அடிப்படையில் அமர்த்தப்படுவர். இப்படிப் பணியமர்த்தப்படுவோர் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்தவண்ணம் உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக எச்1பி விசா எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்து வரும் நிலையில், இந்த விசா மூலம் வரவழைக்கப்பட்டு அமெரிக்காவில் பணியமர்த்தப்படும் இந்தியர்களால் அமெரிக்கக் கம்பெனிகளுக்கு நல்ல லாபம் . இவர்களை அனுப்பும் டிசிஎஸ் உட்பட நிறுவனங்களுக்கும் லாபம். ஆனால், அமெரிக்காவில் இப்படி எச்1பி விசா மூலம், உள்ளூர் நிறுவனங்களில் பணியமர்த்தப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த அமெரிக்கர்களுக்கு வேலைப் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.. அமெரிக்கர்களை நியமித்தால் அதிகச் சம்பளம் தர வேண்டும் என்பதால் அமெரிக்கக் கம்பெனிகள்,  இப்படி வெளிநாடுகளில் இருந்து ஊழியர்களை இறக்குமதி செய்கின்றன. இந்த விவகாரம் இப்போது பரபரப்பான பிரச்சினையாகியிருக்கிறது. . தெற்கு கலிபோர்னியாவில் உள்ள எடிசன் எலக்ட்ரிக் கம்பெனி,டிஸ்னி வேர்ல்ட் போன்ற நிறுவனங்களில் சமீபத்தில் சில நூறு அமெரிக்க ஊழியர்கள் வேலையில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்குப் பதில் இந்தியர்களை நியமித்தது தான் இது பெரியஅளவில் வெடிக்க எழுந்த முதல் புள்ளி 
வெளிநாட்டினருக்கு வேலைப் அளித்து மண்ணின் மைந்தர்களுக்கு வேலை தரவில்லை என்பது எதிர்காலத்தில் பெரும் பிரச்னையை ஏற்படுத்தி விடும். இப்போதே கட்டுப்படுத்தி விடுவது நல்லது என்று அமெரிக்காவில் வேலையின்மைக்கு எதிராகவும், மண்ணின் மைந்தர்களுக்கு ஆதரவாகவும் போராடும் அமைப்புகள், குடியேற்றத்துறை அமைச்சகத்துக்கு மனுக்களை அனுப்பியிருக்கின்றன.. 

இந்திய நிறுவனங்கள் தங்களது எ 1 விசா பெறும் உரிமைகளைத் தவறாகப் பயன் படுத்தி இந்தியாவிலிருந்து கொண்டுவரும் நபர்களை வேறு நிறுவனங்களில் வேலைசெய்ய அனுமதிக்கின்றனர் என்பது இப்போது எழுந்திருக்கும் குற்றச் சாட்டு டிசிஎஸ், இன்போசிஸ் உட்பட முக்கியநிறுவனங்களூம் இதைச்செய்கின்றன என்று சொல்லுகிறது அமெரிக்கக் குடியேற்றத் துறை. விசாரணை துவங்கியிருக்கிறது. இதனால் முன்னணி நிறுவனங்களில் சார்பில் அமெரிக்கா சென்று பணியாற்றும் ஊழியர்களின் வேலைக்குச் சிக்கல் ஏற்படலாம்; அவர்களின் எச்1பி விசா ரத்து செய்யப்படலாம் வருங்காலத்திலும் இந்த நிறுவனங்கள் அனுப்பும் ஊழியர்களுக்கு எச்1பி விசா கிடைப்பதில் சிக்கல் ஏற்படலாம் என்ற அச்சம் எழுந்திருக்கிறது கடந்த ஆண்டே இதுபோல் பிரச்சனை எழுந்து 13 நிறுவனங்களுக்குத் தடை விதிக்கப் பட்டது. 
அதிபர் ஒபாமாவின் நிர்வாகத்தின் இந்த அதிரடி இந்திய நிறுவனங்களால் ஒரு கெட்ட செய்தியாகப் பார்க்கப்பட்டு ஆடிப்போயிருக்கும் நேரத்தில் மற்றொரு ‘நல்ல’ செய்தியை அறிவித்து இந்தியர்களை ஆச்சரியப் படுத்தியிருக்கிறது ஒபாமா நிர்வாகம். 
அமெரிக்காவில் மேற்படிப்பு படித்து முடித்ததும், இந்திய மாணவர்களுக்கு உடனே வேலைப் கிடைக்கும். சூப்பர் சலுகை திட்டம் அது. 
அமெரிக்காவில் படிக்கச் செல்லும் இந்திய மாணவர்களுக்கு அளிக்கப்படும் விசா எப்1. இதைப் பெற்று அவர்கள் பட்ட, மேற்படிப்பை முடிக்கலாம். ஆனால் படிப்பு முடித்தபின் வேலைப் செய்ய முடியாது.. இந்தப் புதிய முறைப்படி, 6 ஆண்டு தங்கிக் கொள்ளலாம் வேலைகளில் பயிற்சி பெறலாம்.. அதற்காக அவர்களுக்கு விசா தரப்படும் இந்த ஆண்டுப் படிப்பை முடிக்கும் மாணவர்கள் சந்தோஷமாக இருக்கிறார்கள் 

வெளிநாட்டு மாணவர்களுக்கு அளிக்கப்படும் இந்த விசா சலுகையை எதிர்க்கிறார்கள் திரு சக் கிராஸ்லி போன்ற எம்பிக்கள், . இந்தத் திட்டத்தின் மூலம் எச்1 விசா அளிக்கப்படும் வெளிநாட்டு மாணவர்கள், அமெரிக்காவிலேயே தங்கிவிடுவார்கள் இது அமெரிக்க மாணவர்களுக்கு ஆபத்து’ என்பது அந்த எம்பிக்களின் பார்வை. 

ஒபாமவின் முந்திய ஆட்சி காலத்திலும், இரண்டாம் முறை அதிபர் பதவி ஏற்றபின்னரும், அமெரிக்கஇந்தியர்கள் பலர் உயர் பதவியில் நியமிக்கப் பட்டிருக்கின்றனர். எச்1பி விசாவில் பணி செய்யும் வெளிநாட்டவர், தன் மனைவியை அழைத்து வரலாம்; அது மட்டுமின்றி, அவர்கள் அமெரிக்காவில் பணியும் செய்யலாம் என்றும் சலுகையும் அளித்தார். 
ஏன் ஓபமா இப்படி வாரி வழங்குகிறார்? 

ஒபாமா, இந்தியர்கள் மட்டுமல்ல, வெளிநாட்டவர்களின் திறமைக்கு அதிகம் மதிப்பு தருபவர். இந்திய மாணவர்களிடம் உள்ள கணித, அறிவியல், தொழில்நுட்ப அறிவைப் போல அமெரிக்க மாணவர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று முன்பே ஒருமுறை அவர்களுக்கு அறிவுரை கூறியிருந்தார். 

அமெரிக்காவில் மேற்படிப்பில் முக்கியமானது ‘ஸ்டெம்’ என்று செல்லமாக அழைக்கப்படும் படிப்புகள் தான். STEM என்பது முதலெழுத்தில் துவங்கும் சயின்ஸ், டெக்னாலஜி, இன்ஜினியரிங், கணிதம். இந்தப் படிப்புகளில் படித்து மேற்படிப்பு முடித்த அமெரிக்க மாணவர்கள் குறைந்து வருகின்றனர். இதில் திறமையான மாணவர்கள் இந்தியா, சீனாவைச் சேர்ந்தவர்கள் தான். அவர்களை இப்படி ஈர்ப்பதன் மூலம் வருங்காலத்தில் அமெரிக்கா பெரும் பயன்பெறும் என்ற தொலை நோக்கு என்கிறார்கள் கல்வி, சமூக ஆய்வாளார்கள் 
நாம் வல்லரசாவதைப்பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறோம். ஒபமா.அமெரிக்கா தனது வல்லரசு நிலையை இழந்துவிடக்கூடாது என்பதற்கான தேவையானதைச் செய்யத் துவங்கி விட்டரோ ?.

944902215

17/6/15

நொந்து நூலாகிப் போன மேகி நூடுல்ஸ்

இரண்டே நிமிடங்களில் தயாரிக்கக்கூடிய சத்தான உணவாக நம்பபட்டு லட்சக்கணக்கான இந்தியக் குடும்பங்களால் வாங்கப்பட்டுவந்த மேகியின் ரூ 3000கோடி மார்க்கெட் இரண்டே நாளில் சரிந்தது. அதைத் தயாரிக்கும் நெஸ்லே நிறுவனத்தின் ஷேர்கள் வரலாறு காணாத வீட்சியைச் சந்தித்தது. எத்தனை கோடி ரூபாய்கள் செலவழித்தாலும் ஏற்படுத்த முடியாத உணவு பாதுகாப்பு விழிப்புணர்வை நெஸ்லேயின் இந்த மேகி இரண்டே நாளில்.ஏற்படுத்திவிட்டது. அலுவலகங்கள், குடும்பங்கள், பள்ளிகள் என எல்லா இடங்களிலும் அச்சத்துடன் இதுகுறித்து விவாதங்கள் நடைபெறுகின்றன.
என்ன நடந்தது?
இந்தப் பிரச்சனையின் துவக்கப்புள்ளி கடந்த ஆண்டு(2014) மார்ச் மாதத்தில் துவங்கியது உத்திரப்பிரதேச மாநிலத்தில் பாரப்பங்கி என்ற மாவட்ட தலைநகரில் இருக்கும் வி. கே பாண்டே என்ற உணவு பாதுகாப்பு மற்றும் நிவாக அதிகாரி திடுமென ஒரு நாள் கடைகளில் இருந்து மேகி பாக்கெட்களைச் சாம்பிளாக எடுத்து கோரக்பூரில் இருக்கும் பரிசோதனை சாலைக்கு அனுப்பினார். அந்தச் சோதனையின் ரிப்போர்ட் அவருக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது. காரணம், மேகி நூடுல்ஸ் பாதுகாப்பாற்றது. அதில் சோடியம் குளுட்டாமெட்(SGM) என்ற சுவை கூட்டும் ரசாயனம் அளவுக்கு அதிகமாக இருப்பதாகச் சொல்லப்பட்டிருந்தது.
 இந்த இந்த ரசாயனம் குழந்தைகளின் நரம்பு மண்டலத்தின் இயல்பான வளர்ச்சியைப் பாதித்து, மூளைச் செயல்பாட்டை மந்தமடையச் செய்யக்கூடியது. உடல் பருமன், மனஅழுத்தம் ஏற்படுத்தக் கூடியது. அதிகக் கொழுப்புச்சத்துக் கொண்ட இந்த வகை உணவுகள்குழந்தைகளுக்குக் கற்றல் குறைபாடு, மறதி, விழிப்புநிலை குறைபாடு, புலன் உணர்வு செயல்பாட்டில் மந்தம் ஆகியவற்றையும் ஏற்படுத்துகின்றன என்று பல்வேறு அறிவியல் ஆய்வுகள் தெரிவித்திருக்கின்றன.
உடனடியாக நெஸ்லே நிறுவனத்துக்கு நோட்டிஸ் அனுப்பினார். மிகச் சக்திவாய்ந்த அந்தச் சர்வ தேச நிறுவனம் உடனடியாகப் பதில் அனுப்பாதால் வழக்குப் போடப்போகிறோம் என ஒரு நோட்டிஸ் அனுப்பினார். அதிர்ந்து போன நிறுவனம் சோதனை சரியில்லை என்றும் கல்கத்தாவிலுள்ள பெரிய சோதனைக்கூடத்துக்குத் தங்கள் செலவில் கட்டணம் செலுத்தி அனுப்ப கோரியது. கல்கத்தா சோதனையில் நிறுவனத்துக்குப் பேரிடி காந்திருந்தது. அந்தச் சோதனையின்போது எம்.எஸ்ஜி மட்டுமல்லாமல் வேறு சில காரீயம் போன்ற அபாயகரமான பொருட்களும் இருப்பதாக அது சுட்டிக் காட்டியதால் மேகி சிக்கல் மேலும் சிடுக்கானது.
 இந்த அதிகாரி பாண்டே, இதற்கு முன்பு வட இந்தியாவைக் கலங்கடித்த பிரிட்டானியா கேக், வாஹித் பிரியாணி ஆகியவற்றுக்கு எதிராகவும் வழக்குப் போட்டு திணறடித்தவர். இவர் போட்ட வழக்கால், தனது விளம்பரத்தில் இது அசைவ கேக் என்று குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய நிலைக்குப் பிரிட்டானியா தள்ளப்பட்டது. முன்பு இந்த வாசகத்தை அது கண்ணுக்குத் தெரியாத பிரவுன் நிறத்தில் போட்டு வந்தது. ஆனால் பாண்டே நடத்திய சட்ட போரட்டத்தால் சிவப்பு நிறத்தில் போட ஆரம்பித்தது. இதே போல வாஹித் பிரியாணி என்று வடஇந்தியாவில் பிரபலமாக இருக்கும் பிரியாணி தயாரிப்பு நிறுவனத்தின் மேலும் அதில் சேர்க்க படும் நிறம் குறித்து வழக்குதொடர்ந்திருக்கிறார்.
ல்கத்தா சோதனைச்சாலையின் அறிக்கையின் அடிப்படையில் உ.பி மாநில அரசு நெஸ்லே மீது வழக்குத் தொடர்ந்தது. நீதிபதி நிறுவனத்தின் மீது மட்டுமில்லாமல் மிகப்பெரிய அளவில் மேகிக்காக டிவி பத்திரிகை விளம்பரங்களில் பங்கேற்ற அமிதாப், மாதுரி தீட்சித, பிரித்துஜிந்தா ஆகியோர் மீதும் FIR போட ஆணயிட்டது. வழக்குப் போடப்பட்டிருப்பது உ.பி மாநிலத்தில் என்றாலும் செய்தீயாக பரவிய வேகத்தில் 2 நாட்களில் பல மாநிலங்கள் விற்பனைக்குத் தடை விதித்தன. சில விதிக்கவில்லை. என்ற நிலையில்திரடியாக மத்திய அரசின் உணவுத்துறை நாடு முழுவதற்கும் இதன் விற்பனைக்குத் தடைவிதித்துவிட்டது.

நூடுல்ஸ் என்ற தீடிர் உணவு உலகப்போருக்குப் பின் எழுந்த உணவுபற்றா குறையைச் சமாளிக்க மோமோஃபுக்கு அன்டொ (momofuku Ando) என்ற ஜப்பானியரால் கண்டுபிடிக்கப் பட்டது. பின்னாளில் அமெரிக்கர்கள் அதன் தயாரிப்பு முறையில் மாறுதல்களைச் செய்து மாரக்கெட்டுக்குக் கொண்டுவந்தார்கள். சதாரண மாவில்பிழியபட்ட இழைகளின் மீது 176 டிகிரி சூடான காற்றை 30 நிமிடம் செலுத்தி அதன் ஈரப்பதத்தை நீக்கிவிட்டால் பின் அதை எப்போது வேண்டுமானுலும் சூடான நீரில் இட்டுப் பயன்படுத்தலாம் என்பதே அது. இதன் உரிமைகளைப் நெஸ்லே என்ற ஸ்விஸ் நாட்டு நிறுவனம்  பெற்று உலகெங்கும் பல நாடுகளில் தயாரித்து விற்பனை செய்கிறார்கள்.. இன்று உலக உணவாக அறியப்பட்டிருக்கும் இதைக் கடந்த ஆண்டு சாப்பிட்டவர்களின் எண்ணிக்கை 10200 கோடிக்குமேல். இது 1983ல் இந்தியாவில் அறிமுகப்படுத்தப் பட்டபோது பள்ளிகளில் இலவசமாகவும், மிக்குறைந்தவிலையிலும் கொடுக்கப்பட்டது. இன்று உலகளவில் சாப்பிடுவோரில் இந்தியா 4 வது இடத்திலிருக்கிறது( ஆண்டுக்கு(54 கோடி பாக்கெட்கள்விற்பனை) இந்தியாவில் இப்போது மேகியை பயன்படுத்தியவர்கள் இரண்டாம் தலைமுறையினர்.
புரியாத கேள்விகள்
அதரடியாக வெடித்திருக்கும் இந்தப் பிரச்சனை அடுக்கடுக்கான பல கேள்விகளை எழுப்புகிறது. எப்படி இத்தனை நாள் இது அனுமதிக்கப்பட்டது? எந்த மத்திய மாநில அரசுகளின் உணவு தரகட்டுபாட்டு நிறுவனங்களுமே  இதை ஏன் சோதனையிடவில்லை.? 30 ஆண்டுகளுக்கு மேல் விற்கபட்டுகொண்டிருக்கும் ஒரு சர்வ தேச நிறுவனத்தின் தயாரிப்பில் காரீயம் போன்ற ஆபத்தான பொருட்களைக் கலக்கப்படுவதை அனுமதிருப்பார்களா? லெட்(lead) கலந்திருப்பதாகச் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. (இதை ஈயம் சிலபத்திரிகைகள் எழுதுகின்றன.) உண்மையில் ஈயம் வேறு, காரீயம் (Lead) வேறு, அலுமினியம் வேறு. ஈயம் என்பது Tin ஆகும். ஈயம் உடலுக்குக் கெடுதல் செய்யக்கூடியது அல்ல. Lead அதாவது காரீயம் விளைவுகளை ஏற்படுத்தகூடியது. . காரீயம் நுண்ணியத் துகள் வடிவில் காற்றில் கலந்து சுவாசிக்கும் போது உடலுக்குள் சென்றாலும் சரி, தண்ணீர் அல்லது உணவில் கலந்து உடலுக்குள் சென்றாலும் சரி உடலின் பல உறுப்புகள் பாதிக்கப்படும் காரீயம் குறிப்பாகக் குழந்தைகளுக்கு மிகவும் கெடுதல் விளைவிக்கும். மூளை வளர்ச்சி , உடல் வளர்ச்சி பாதிக்கப்படும். என்கிறார்கள் வல்லுநர்கள் .அப்படியானல் இத்தனைநாள் இதை உண்டவர்கள் பக்க விளைவுகளினால் பாதிக்கப் பட்டிருக்கவேண்டுமே.? போன்ற பல கேள்விகளை எழுந்திருக்கிறது.. சோதனைகளின் முடிவு வந்தால் தான் இவற்றுக்கு எல்லாம் விடைகிடைக்கும்.
கலப்படம் மேகியில் இருக்க வாய்ப்புக் குறைவு. சுவைக்காக அதனுடன் தரப்படும் மசாலாவில் இருக்கும் சோடியம் குளுட்டாமெட்(எஸ் ஜி எம்) என்ற உப்பான அஜினோமோட்டாவில்தான் இருக்கிறது. இது பலநாடுகளில் தடை செய்யப்பட்ட ஒரு பொருள். இந்தச் சுவைகூட்டி பேக் செய்துவரும் சாஷே கவர்களிலும் இருக்கலாம் என்பது சிலரின் கருத்து.
எங்கள் நிறுவனம் தரத்திற்கு உலகளவில் நற்பெயர் பெற்ற நிறுவனம் நாங்கள் இந்த மசாலாவை இந்திய பொருட்களைக் கொண்டுதான் தயாரிக்கிறோம். அதில் சேர்க்கப்படும் வெங்காயம் , மஞ்சள் போன்றவை விளையும் மண் காரீய தாது நிரம்பியவையாகவிருக்கலாம் என்கிறது நெஸ்லே.
தயாரிப்பில் பயன்படுத்தும் பொருட்களின் தரத்திற்கும் அவர்கள்தானே பொறுப்பு. இது தப்பிக்க முயற்சிக்கும் தந்திரம் எனச் சீறுகிறார்கள் சமூக ஆர்வலர்கள்.
இந்தச் சிக்கலில் நாம் புரிந்துகொள்ளும் சில விஷயங்கள்.
1) இம்மாதிரி விஷயங்களைத் தடுப்பதற்கு ஒருங்கிணைந்த கடுமையான சட்டங்கள் இல்லை .மத்திய அரசிலிருந்து நகராட்சி வரை ஒவ்வொரு அதிகார அமைப்பும் வெவ்வேறான அதிகாரங்களைப் பெற்றுள்ளன. அகில இந்திய அளவில் நாடு முழுவதுக்குமான சோதனை, தடைகளுகு சட்டம் இல்லை. ஆகவே தான் ஒவ்வொரு மாநிலமும் நூடுல்ஸை சோதிக்கத் தனித்தனியே நடவடிக்கை எடுக்கிறது.
2) பிரபலங்கள் விளம்பரங்களில் நடிப்பது அவர்கள் விளம்பரப்படுத்தும் பொருட்களின் தரம் குறித்து பேசுவது அதற்கு உத்தரவாதம் அளிப்பது போல் ஆகாதா என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது.. ஆம் என்றால் பத்திரிகைகளில் வருகின்ற விளம்பரங்களில் இடம் பெறுகின்ற பொருட்களுக்கு அந்தப் பத்திரிகை உத்தரவாதம் அளிப்பதாகக் கருதப்படும் நிலையும் எழும்.
இந்த மோசமான விளவில் ஏற்பட்டிருக்கும் ஒரு நன்மை மக்களிடம் ரெடிமேட் உணவு வகைகள் பற்றி எழுந்திருக்கும் விழுப்புணர்ச்சி.   பாக்கெட்களில் விற்கப்படும் எல்லாவித உணவுவகைகளை ஆய்வுசெய்ய ஆணையிடவும், தடைசெய்யவும் ,நமது பாரம்பரிய உணவுவகைகளை ஊக்குவிக்கவும் அரசுக்குக் கிடைத்திருக்கும் அருமையான தருணம். இது
தவறவிடாமல் மக்களின் உடல் நலம் கருதி அதை உடனே செய்வார்களா?
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------
பள்ளிக்காலங்களில் நானும் என் அண்ணனும் ஸ்கூலிலிருந்துவந்தவுடன் மேகி சாப்பிட்டவர்கள். அப்போது இதுபோல் மசாலாக்கள் வராது. வீட்டில் தயாரிக்கப் படும் சைட் டிஷ் தான். ஆனால் கடந்த சில ஆண்டுகளாகவே மேகியுடன் வரும் டேஸ்ட் மேக்கர்களில் கெமிகல்கள் இருப்பதைப் பற்றிய செய்திகளைப் பார்ப்பதால். என் குழந்தைகளுக்கு நான் மேகி தினசரி கொடுப்பதில்லை. நண்பர்கள், டிவி விளமபரங்களினால் ஈர்க்கப்பட்டு அவர்கள் கேட்டாலும் ஒரு சில நாட்களில் மட்டும் தருவதுண்டு. நான் மட்டுமில்லை என்போன்ற பல தாய்மார்களும் அப்படித்தான். செய்கிறார்கள். ஆனால் 9 வயதுக்கு மேல் பள்ளி செல்லும் குழந்தைகள் பள்ளி கேண்டினிலேயே வாங்கிச் சாப்பிடுவதைப் பெற்றோர்களினால் கட்டுப்படுத்தமுடியாது. மலிவான விலையில் கிடைக்கும் அதன் ருசிக்கு அடிமையாகி விடுகிறார்கள். அதனால் இந்தத் தடையை வரவேற்கிறேன்.
பழக்கத்திலிருந்து மாற இது ஒரு வாய்ப்பு. நல்ல தரமான அரிசியில் தயாரிக்கப்பட்ட நூடுல்கள் மற்றும் நிறையச் சிறுதானிய வகைகள் பல வடிவங்களில் கிடைக்கிறது, அதனுடன் காய்கறிகள் சேர்த்துக் குழந்தைகளுக்கு கொடுக்கலாம். 2 நிமிடத்தயரிப்பு என்பது பெரிய விஷயமிலை. தன் குழந்தைகளுக்குத் தரமானதைத் தர எந்த அம்மாவும் நேரத்தை ஒரு பெரிய விஷயமாகக் கருத மாட்டார்கள்.
(திருமதி சுபா குகன் -குடும்பத் தலைவி) 
அஜினோ மோட்டோ என்பது ஒரு வகை உப்பு. மிக மலிவானது. சீன உணவுவகைகளில் நூறு ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பயன்படுத்தபட்டுவருகிறது. ஆனால் அவர்கள் 20 பேருக்கான உணவில் ஒரு சிட்டிகை என்ற மிகமிகக் குறைந்த அளவிலேயே பயன்படுத்துவார்கள். காலப்போக்கில் உலகெங்கும் பரவிய இதை மசாலாக்களில் பயன்படுத்தினால் அதன் மற்ற இடுபொருட்களின் அளவு குறைகிறது என்பதை உணர்ந்தவுடன் லாபநோக்கில் அதிக அளவில் சேர்க்க ஆரம்பித்துவிட்டார்கள். நீண்ட நாட்களுக்குப் பின்னர் பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் இதை இந்தியாவில் தடை செய்ய முயன்று தோற்றுவிட்டார்கள். இது மேகியில் மட்டுமில்லை. எல்லா ரெடிமேட் உணவுகளிலும், நாம் ஹோட்டலில் விரும்பி சாப்பிடும் எல்லா உணவிலும் இருக்கிறது. அது அஜினோ மோட்டோவா அல்லது அந்தவகையில் வேறு பொருளா என்பதையும் அது எந்த அளவில் இருக்கிறது என்பதையும் எளிதில் கண்டுபிடிக்க முடியாது. தேசிய அளவில் அதிநுட்ப வசதிகளுடன் பரிசோதனைச் சாலைகளும், தடைசெய்யச் சட்டங்களும் இல்லாததுதான் நம் துரதிர்ஷ்டம்
(திருமதி ஸ்மித்தா குட்டையா -உணவுக் கலை வல்லுநர்)

மேகி சிக்கல் வெடித்ததிலிருந்து டீவிட்டர்லும் முகநூலிலும் பரவிய கிண்டல்கள்
  •    மேகி சாப்பிடுவது உடலுக்குக் கேடு என்ற வரிகளுடன் சென்சார் தீபீகாவின் விளம்பரத்தை அனுமதிக்கலாம்
  •     என் ஆபிசில் ஒருவர்மேகி சாப்பிடுகிறார். அவர் தற்கொலை முயற்சியில் இருக்கிறார் எனப் போலீசுக்கு போன் செய்ய வேண்டுமா?
  •    சீனாவிலிருந்து வரப்போகிற ஒரு புதுமேகிக்காக மாரக்கெட்டை ரெடி பண்ணுகிறார்கள். இது பிரதமர் மோடியின் சீன பயணத்தின் விளைவாக இருக்குமோ?
  •      கமல்ஹாசன் பஞ்சதந்திரம் படத்திலே சொன்னார் .மேகியின் பழக்கம் வேண்டாம் நல்லதில்லை. என்று

  • Pitchumani Sudhangan கட்டுரை படித்தேன் மூன்று பக்கங்களில் அருமையான பயனுள்ள கட்டுரை
  • Sumitha Ramesh எக்ஸ்லண்ட் ஆர்ட்டிகிள்..முழுமையான அலசல் ! 
    ஏன்..எதற்கு..என்ன ஆகிடும் எனும் பல கேள்விகளுக்கான பதில்..அருமை..
  • Rohini Krishna நல்ல கட்டுரை! பலதரப்பட்ட கருத்துக்களை நடுநிலைமையுடன் அலசியுள்ளீர்கள்...
    Like · Reply · 1 · June 15 at 3:01pm
  • Aswath Mohan · Friends with Rohini Krishna
    RK! Enna aaalaye kaanum?
    Like · Reply · 1 · June 15 at 9:02pm

6/5/15

சின்னத் திரை மொழிமாற்றுத் தொடர்கள் அவசியமா? ஆபத்தா?


சிலவாரங்களுக்கு முன் தமிழ்நாடு சின்னத்திரை கலைஞர்கள் கூட்டமைப்பு மற்றும் தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர் சம்மேளனமாகிய அமைப்புகள் இணைந்து ஒருநாள் வேலை நிறுத்தத்த போராட்டத்தை அறிவித்தனர். காரணம் டிவி சானல்களில் அதிக அளவில்மொழிமாற்றபட்ட தொடர்களைக் காட்டப்படுகிறது. தொலைக்காட்சி மெகா தொடர்கள் பல ஆயிரம் கலைஞர்களுக்கும்,தொழிலாளர்களுக்கும் வாழ்வதாரமாகத் திகழ்கிறது மொழி மாற்றுத் தொடர்களின் வரவு பல ஆயிரம் தொழிலாளர்களின் வேலைவாய்ப்பினை பறித்து வருகிறது. இதனைத் தடுத்து நிறுத்திப் பல ஆயிரம் குடும்பங்களைக் காப்பாற்றுமாறு சின்னத்திரைக் கூட்டமைப்புமற்றும் பெப்ஸி அமைப்பின் சார்பாகத் தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டு வந்தது. அதற்கு அவர்கள் செவிசாய்க்காததால் இந்தப் போராரட்டம் 
உண்மையில் இந்த மொழிமாற்றப்பட்ட தொடர்களினால் தமிழ்சின்னதிரைக்கு ஆபத்தானதா? 
தமிழில் டிவி சீரியல்கள் டப் செய்யபட்டு வெளியிடப்படுவது புதிது இல்லை. 1990களிலேயே தூர்தர்ஷன் துவக்கி வைத்த ஒரு விஷயம் இது..பொழுதுபோக்குக்கான தனியார் சானல்கள் இல்லாத, ,தூதர்ஷன் மட்டுமே இலுப்புபூ சக்கரையாக இருந்த அந்தக் காலகட்டத்தில் மிகமோசமாக மொழிபெயர்ப்புடன், அதைவிட மோசமான குரல்களில் டப் செய்யப்பட்ட ஹிந்தி சீரியல்களைக் கிண்டல் செய்துகொண்டே மக்கள்ரசித்தார்கள். ஆனால் டிவி யில் தனியார் சானல்கள் பொழுதுபோக்குகாக அனுமதிக்கபட்டபின் இந்த டிவி தொடர்கள் புதிய அவதாரம் எடுத்தது.குறுந்தொடர்கள், நீண்ட தொடர்கள், மெகா தொடர்கள் எனப் பல வடிவங்களில் மிகப்பெரிய அளவில் வளர்ந்துவிட்டது இன்று சீரியல் பார்ப்பதுஎன்பது பலக் குடும்பங்களின் அன்றாட வாழ்வில் ஒரர் அங்கமாகவே ஆகிவிட்டது 
தொலைக்காட்சி மெகா தொடர்கள் பல ஆயிரம் கலைஞர்களுக்கும், தொழிலாளர்களுக்கும் வாழ்வதாரமாகத் திகழ்கிறது. ஆனால், சமீபகாலமாக அதிகரித்துள்ள மொழி மாற்றுத் தொடர்களின் வரவு பல ஆயிரம் தொழிலாளர்களின் வேலை வாய்ப்பினை பறித்து வருகிறது. இதன்விளைவால் சின்னத்திரையை மட்டுமே முழுமையாக நம்பியுள்ள பல பேர் வேலையில்லாமல் கடன் தொல்லையால் அவதிப்பட்டுவருகின்றனர். தமிழில் தயாரிக்கப்படும் ஓர் அரை மணி நேர எபிஸோட்டின் பின்னே கிட்டத்தட்ட 150 பேரின் உழைப்பும் வருமானமும்இருக்கிறது. மொழிமாற்ற தொடர்களினால் இவர்கள் வாழ்க்கை மட்டுமில்லை துறையே மெல்ல அழிந்து கொண்டிருக்கும் ஆபத்துஉருவாகியிருக்கிறது இதைத்தடுக்கவே களத்தில் இறங்கியிருக்கிறோம் என்கிறார் கவித்தா பாரதி. இவர் சின்னதிரை கலைஞர்களின்கூட்டமைப்பின் தலைவர். பலதொடர்களை இயக்கியவர். 
5 ஆண்டுகளுக்கு முன் சிறிய அளவில் துவங்கிய இந்த மொழிமாற்ற தொடர்கள் மெல்ல படிப்படியாக வளர்ந்து இன்று மிகப்பெரிய அளவில்சானல்களில் ஆக்கரமித்தவிட்டன. தமிழில் முன்னணியில் இருக்கும் 8 சானல்களில் இப்போது குறைந்த பட்டசம் 2 அல்லது 3 மொழிமாற்றதொடர்கள் தினசரி ஒட்டிக்கொண்டிருக்கின்றன. இவ்வளவும் தமிழ் தொடர்களின் இடம் என்கிறார் இவர். 
ஏன் சானல்கள் இந்தத் தொடர்களை ஓளிபரப்புகின்றன? 
ஒரு வார்த்தையில் சொல்ல வேண்டுமானல், ரிஸ்க் இல்லாத லாபகரமான பிஸினஸ். மிக வெற்றிகரமாக ஹிந்தியில் ஒடிய ஒரு சீரியலைஎப்பிசோடுக்கு 5 அல்லது 10 ஆயிரத்துக்கு வாங்கி அதைக் குறைந்த செலவில் டப் செய்தால் போதும். தேவையானதெல்லாம் ஒரு டப்பிங்ஸ்டூடியாவும் குரல் கலைஞர்களும்தான். இந்திய டிவிக்களின் விளம்பரங்களின் விதிகளை நிர்ணயக்கும் “கடவுள்” களான விளம்பரஏஜெண்ட்கள் எல்லஓரும் மும்ம்பயில் இருக்கிறார்கள். இம்மாதிரி மொழி மாற்ற தொடர்கள் ஏற்கனவே ஹிந்தியில் வெற்றிப் பெற்றிருப்பதால்தயங்காமல் ட்ப்பிங் சீரியல்களுக்கும் விளம்பரங்களை வழங்குகிறார்கள்.. கடந்த சில ஆண்டுகளில் துவங்கப்பட்ட புதிய சானல்கள்முன்ணனியிலிருக்கும் பெரிய சானல்களுடன் போட்டியிடவும், நிகழ்ச்சிகளின் தயாரிப்பு செலவுகளைக் குறைக்கவும் ஒரு எளிதான வழியாகஇதைப்பார்க்கின்றன. மேலும் இந்த இந்தி டிவி சீரியல்கள் தொழில்நுட்ப ரீதியாகவும் மிக உயர்ந்த தரத்தில் இருக்கிறது. விளம்பரதார்கள்விரும்புகின்றனர். இதில் முன்னோடிகள் ஜீ டிவியும், ஸ்டார் டிவியும் தான். இவர்களுக்கு ஹிந்தி சீரியகல்களை வாங்கும் செலவு கூடஇல்லை. அவர்கள் சானலில் இந்தியில் ஓளிபரப்பும் போதே அனைத்து மொழிகளுக்கான உரிமையுடன் தான் தயாரிக்கிறார்கள் எனவே அந்தச்செலவும் இந்தச் சானல்களுக்கு மிச்சம். 
இதுபோன்ற காரணங்களால் இந்தசானல்கள் மேலும் அதிக எண்ணிக்கையிலான தொடர்களை மொழி மாற்றம் செய்து ஒளிபரப்பி வருகின்றன.இப்போது ஹிந்தியில் பாப்புலாராக ஓடிக்கொண்டிருக்கும் சானல்களுக்கு அடுத்த வருடத்திற்கு இப்போதே அட்வான்ஸ் புக்கிங் செய்யுமளவிற்கு இந்தத் தொழிலின் டிரண்ட் வளர்ந்துகொண்டிருக்கிறது. 
மக்கள் விரும்புகிறர்களா? 
மக்களிடம் வரவேற்பு இருக்கிறது என்பதுதான் ஒரு ஆச்சரியமான உண்மை. பிரம்மாண்ட சினிமாவிற்கு இணையான தயாரிப்பு, அழகான்வண்ணங்கள், தமிழ்ச் சூழலில் பார்க்க முடியாத புதிய இடங்கள் ஆடம்பரமான செட்கள், ஆடைகள் இவைகள் பார்வையாளர்களைக்கவர்கின்றன. ”தமிழ் மெகா தொடர்கள் வீட்ல பெரியவங்க பார்த்தப்ப சீரியல் மேலே நிறையக் கோபம் வந்தது எப்ப பார்த்தாலும் அழுகைகாட்சி ,மாமியார் மருமக சண்டை, அபத்தமான வார்த்தைகள் . இப்ப ஹிந்தி சீரியல் வந்த பிறகு தான் இப்ப இருக்கிற இளைய தலைமுறைசீரியல் பக்கம் திரும்பி இருக்கோம்.எங்களுக்குத் தேவையான லவ் , பொழுதுபோக்கு ,ஆடை அலங்காரம் இதுல இருக்கு அதனால ஹிந்திசீரியல் ஓகே” . என்கிறார் ஒரு கல்லூரி மாணவி .மருமகள் IPS , சமைக்கத் தெரியுமா, அதைப் பார்க்க மாமியாரின் நண்பிகள் வருவார்கள், அதைமாமியாரும், மருமகளும் எப்படிச் சமாளிகிரர்கள் போன்ற லைட்டான விஷயங்கள்.... புதிய மாதிரி புடவை டிசைன்கள் நகைகள் மேலும்.......குடும்பத்தோடு உட்கார்ந்து, பார்க்கலாம், நகைச்சுவை தொடர்கள் ஏராளம், கபிலம் சித்து வும் கலக்கும் தொடர்கள், போன்றவைகள்இளைஞர்களை இதன் பக்கம் இழுக்கின்றன. 

கலைஞர்களுக்கு ஏது மொழி இனம் என்று சொல்லுவார்கள்..! மொழி மாற்றத் தொடரை பார்க்க வேண்டுமா இல்லையா என்பதை முடிவு செய்யவேண்டியவர்கள் மக்கள். இன்னும் கொஞ்சம் காலம் போனால் எங்களது தொடரைத்தான் ஒளி பரப்ப வேண்டும் என்று கோரிக்கைவைப்பார்களோ..! மொழி மாற்றத்தில் வருகின்ற ஒரு தொடரை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பிப் பார்க்கிறார்கள். அதுபோன்றதொடர்களை ஏன் இவர்கள் கொடுப்பது இல்லை. தொடரில் திருப்பங்கள் வேண்டும் என்பதற்காக நடைமுறையில் சாத்தியப்படவே முடியாதகதாப்பாத்திரங்களைக் காட்டி... குழந்தைகளோடு உட்கார்ந்து பார்ப்பதற்குக் கூசுகின்ற தொடர்களை விட மொழி மாற்றத் தொடர்கள் மிகவும்ரசிக்கத்தக்க அளவில் இருந்தால் அதை ஒளி பரப்புவதில் தவறொன்றும் இல்லை. இந்த மொழி பேசுபவர்கள்தான்.. இந்த மாநிலத்தைச்சேர்ந்தவர்கள்தான் நடிக்க வென்றும் கோரிக்கை வைத்தாலும் வைப்பார்கள். இது சின்னத்திரை கலைஞர்களால் காட்டப்படும் எதிர்ப்பல்ல...தங்களது தொடரைத்தான் மக்கள் பார்க்க வேண்டும்... அனைத்து வருமானமும் தங்களுக்குத்தான் கிடைக்க வேண்டும் என்ற பேராசையால்....அவர்கள் முன்னிறுத்தப்படுகிறார்கள். அவ்வளவே. என்று முக நூலில் தன் கருத்தை பதிவு செய்கிறார் ராமராசு என்ற இளைஞர். 
”அன்பாலே அழகான வீடு”, ”நிலவே மலரே”, ”என்கணவன் என்தோழன்” போன்ற தலைப்புக்கள் மட்டுமில்லை. மொழிபெயர்ப்பும் உச்சரிப்பும்கூட நன்றாகத்தான் இருக்கிறது அதனால்தான் உதட்டசைவும் குரலும் ஒத்துப் போகாவிட்டாலும் உள்ளத்துடன் ஒத்துப் போகிறது. புடவைஅணிந்திருக்கும் முறையும், முகங்களும் தான் அவ்வப்போது நாம் ஏதோ வேறு மொழி தொடர் பார்க்கும் என்ற உணர்வைத்தருகிறது. மற்றபடிநன்றாக ரசிக்க முடிகிறது. பல மொழி மாற்றுத் தொடர்களில் அருமையான தமிழ் வசனங்களைப் பயன்படுத்துகிறார்கள். விஜய டிவிமகாபாரதம் தொடரில் பயன்படுத்தும் தூய தமிழ் அற்புதமாக இருக்கிறது. இவர்கள் நல்ல தொடர்களைக் கொடுத்தால் மக்கள் ஏன் மொழிமாற்று தொடர்களுக்குப் போகிறார்கள். என்கிறார் ஒரு குடும்பத்தலைவி. இவர் தினசரி 4 மணிநேரம் சீரியல்கள் பார்ப்பதற்காகச் செலவிடுபவர். 
”மிக அருமையான விஷுவல் குவாலிட்டி, பெரிய பட்ஜெட்டில் தயாராகும் ரிச்சான தயாரிப்புகளுக்கு விளம்பரம் கொடுப்பதைப் பரியநிறுவனங்கள் விரும்புகின்றன. அதிகப் பார்வையாளர்கள் இந்தப் படைப்புகளுக்கு இருப்பதை டிஆர்பி ரேட்டிங்கள் சொல்லுகின்றன. என்பதுஉண்மையானாலும் டிவி நிறுவனங்களின் கொள்கைகளுக்கு ஏற்ப காட்டப்டும் சீரியல்களின் எண்ணிக்கைகள் மாறும் என்கிறார் மக்கள்டிவியின் விள்மபர தொடர்பு அதிகாரி திரு. சதீஷ். நல்ல தமிழ் நிகழ்ச்சிகளை ஊக்குவிக்கும் மக்கள் டிவி மிகக் குறைந்த அளவிலேயேமொழிமாற்ற தொடர்களை ஒளிபரப்புகின்றன. என்கிறார். . 

தமிழகத்தின் சின்னதிரை கலைஞர்களும், தொழிநுட்பபணியாளர்களும் எவருக்கும் சளைத்தவர்கள் இல்லை. மிகதிறமையானவர்கள்.சினிமாவில் அகில இந்திய அளவில் தங்களை நிலை நிறுத்திகொண்டிருப்பவர்கள். ஆனால் சின்னத் திரையில் சில தனித்துவ்மானபிரச்னைகள் இருக்கின்றன. ஹிந்தியில் மார்க்கெட் மிகப்பெரியதாக இருப்பதால் சிரியலின் ஒரு எபிஸோடை எடுக்க 25 லட்சங்கள் கூடச்செலவழிக்கிறார்கள். தமிழில் ஒரு சானலுக்குத் தொடர் தயாரிக்க ஒரு எப்பிஸொட்டுக்கி அதிகப் பட்சம் 1 லட்சம் தான் கொடுப்பார்கள். இதில்தான் கலைஞர்கள் சம்பளம் உட்பட அத்தனை செலவுகளும் அடக்கம். இந்த நிலையில் ஆடம்பர செட், பிரம்மாண்ட தயாரிப்பு என்பதெல்லாம்சாத்திய படாது. என்கிறார் கவித்தா பாரதி. ஹிந்தியில் பாதி அளவு செலவழித்தால் கூட [போதும் இங்கு இருப்பவர்கள் அதைவிடப் பிரமாதமாகத்தயாரிப்பார்கள் என்று சொல்லும் இவர்.மஹாபாரதம் போன்ற இதிகாசங்களை மொழிமாற்றம் செய்வதை நாங்கள் எதிர்க்கவில்லை.ரமாயாணம், பாரதம் போன்றவைகள் பலக் காலமாக மொழிமாற்றம் செய்யப்பட்டுவருபவை தமிழ்ச் சூழலில் சமூகக் கதைகளைத் தயாரிக்கஎல்லா வசதிகளும் இங்கு இருக்கும்போது சானல்கள் அதை விடுத்து கலைஞர்களின் வாழ்வாதரத்தையே கேள்விக்குறியாக்கும் இப்படிபட்டமொழி மாற்றிய தொடர்கள் அவசியமா? என்பது தான் பிரச்சினை. மேலும் டிவி தொடர் தயாரிப்பு என்பது வெறும் பணமூதலீட்டு விஷயமில்லை. சானலின் ஆதரவு இருந்தால் மட்டுமே தொடர் தயாரிக்க முடியும். 150 தயாரிப்பு நிறுவனங்களுக்கு மேல் இருக்குமிந்த துறையில்அவர்களுக்கு வாய்ப்பு அளிக்காமல் போனால் அவர்கள் துறையை விட்டு வெளியேறிவிடும் அபாயமிருக்கிறது. என்பதால் தொலைக்காட்சிநிறுவனங்கள் மொழி மாற்றுத் தொடர்களை நிறுத்தி விட்டு, நேரடி தொடர்கள் மூலம் வேலை வாய்ப்பைப் பெருக்கித் தந்து பல ஆயிரம்குடும்பங்களைக் காப்பாற்ற வேண்டும்.இதனை வலியுறுத்தும் விதமாகத் தேதி ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டோம்.. .சம்மந்தப்பட்ட தொலைக்காட்சி நிறுவனங்களின் நிர்வாகிகளைச் சந்தித்து எங்களது கோரிக்கையைத் தெரிவித்திருக்கிறோம்.. அவசியமானால்அடுத்தக் கட்டமாக அரசின் தலையீட்டை வேண்டுவோம். இது வெறும் வியாபார பிரச்சினை மட்டுமில்லை. தமிழ் கலைஞர்களின் வாழ்க்கைப்பிர்ச்னை அதனால் அரசின் தலையிடு அவசியம் என்கிறார் கவித்தா பாரதி 
”இது ஒரு தொழில் முழுக்க முழுக்க வியாபாரம் இதில் அரசு எப்படித் தலயீடும் என எதிர்பார்க்கிறீர்கள்?” எனக் கேட்டபோது. கோக்க்கோகோலாநிறுவனத்துக்கு அனுமதி கொடுத்த பின்னரும் மக்கள் எதிர்ப்பால் நிறுத்த வில்லையா? அது போலத்தான் இதுவும். மேலும் மஹராஷடிரத்திலும்கர்நாடகத்திலும் மொழிமாற்றுத் தொடர்களுக்கு அனுமதியில்லை, ஆந்திராவில் 30% நிகழ்ச்சிகளை அனுமதிக்கிறர்கள், இது போலச் சிலநெறிமுறைகளை வரையறுப்பதைத்தான் கோருகிறோம் என்கிறார் கவித்தா பாரதி. . 

, திறமையற்ற சமூகம்தான் , தன்னுடன் போட்டியிடுபவனை முடமாக்கித் தான் மட்டும் வெல்ல நினைக்கும். எந்தத் தொழிலும் கடும்போட்டியையும் சவால்களையும் சந்திப்பதுதான் அதன் திறனை மேம்படுத்திக்கொள்ளக் கிடைக்கும் வாய்ப்பு, இன்று தமிழ் சின்னத் திரை அந்தக்கட்டத்தில் இருக்கிறது. 
இந்தக் கலைஞர்களின் கோரிக்கை நியாமானது என்றாலும் தமிழ் தொடர்களின் தரம் ரசிகர்களை அதை ஏற்க யோசிக்க வைக்கிறது. ..எப்படிகும்பங்களைக் கெடுப்பது, பெண்கள் எத்தனை விதமான துரோகங்களைச் செய்வது, தவறான உறவுகளை ஆதரிப்பது,................என வித விதமானமட்டரகமான களங்களை வைத்து கதைகளைப் பின்னுகிறார்கள். பெரும்பாலான தொடர்கள் பெரும்பாலும் கொலை, கொள்ளை, திருட்டு,வஞ்சகம், இன்னும் எண்ணற்ற தீய சிந்தனைகளைச் சொல்லுவதால் மெல்ல மக்கள் தமிழ் தொடர்களை ஒதுக்கி இந்தப் பிறமொழிதொடர்களுக்கு ஆதரவு தரத்துவங்கியிருக்கிறார்கள். ஒரு நல்ல தொடரை உருவாக்கப் பிரமாண்டங்களும் ஆடம்பரங்களும் அவசியமில்லைநல்ல தரமான கதைகள், பெண்களை வீறு கொண்டு முன்னேறச் செய்யும் கதை களங்கள், மர்மத் தொடர்கள் எல்லாம் சின்னத் திரையில்கொடுத்தவர் கே பாலசந்தர். அதை நமது சானல்களும் கலைஞர்களும் மறந்து போனது தமிழ் சின்னத் திரை ரசிகர்களின் துரதிர்ஷடம் தான்

  • Vedha Gopalan மக்கள் விரும்புகிறர்களா? 
    மக்களிடம் வரவேற்பு இருக்கிறது என்பதுதான் ஒரு ஆச்சரியமான உண்மை!!
    பிறகென்ன செய்ய!!
    ...See More
    Like · Reply · 4 · 14 hrs · Edited
  • Vedha Gopalan நடுவில் பாபியும் யாதோன் கிபாராத்தும் தோரஹாவும் பார்க்கப் ஓடியவர்கள் பாரதிராஜா வந்தவுடன் கவனம் திருப்பவில்லையா!!
    Like · Reply · 1 · 14 hrs · Edited
  • Muthuswamy Krishnamurthy கன்னடத்தில் சின்னத் திரையோ பெரிய திரையோ எதுவாக இருந்தாலும் மொழி மாற்றம் (டப்பிங் ) அனுமதிக்கப் படுவது இல்லை!
    Like · Reply · 1 · 14 hrs
    • Ramanan Vsv மஹாராஷடிரத்திலும் அனுமதியில்லை. அதையும் கட்டுரையில் எழுதியிருக்கிறேன் சார்.
      Like · 14 hrs
  • Ganesh Balasubramaniyam உறவுகளுக்கிடையே இருக்கும் இயல்பான உரசல்களை விட்டு விட்டு, எல்லா தொடரிலும் உறவுகளை ஜென்ம விரோதிகள் போல் கதை எழுதி, பார்க்கும் வீடுகளில் எல்லாம் கைகேயி போல் நுழைந்து விஷம் விதைப்பதை நிறுத்தட்டும். கண்டிப்பாக நிலை மாறும் .
    Like · Reply · 13 hrs
  • Shah Jahan எனக்கு கருத்துக்கூற தகுதியே இல்லை. ஒண்ணுகூடப் பாத்ததில்லே. ஆனா, பெரிய மீன் சின்னமீனை முழுங்குற கதைதான். டப்பிங்கிலும்கூட 1-2 கேங் கையில்தான் மொத்த இண்டஸ்ட்ரியும் இருக்குன்னு நினைக்கிறேன். முன்னாடியெல்லாம் நானும் நிறைய டப்பிங்குக்கு குரல் கொடுத்திருக்கிறேன் - கடைசியா சுமார் பத்து வருசமாச்சு. நோ டப்பிங்.
    Unlike · Reply · 2 · 13 hrs
  • Ramanan Vsv இப்போது சென்னையில் டப்பின் ஆர்ட்டிஸ்ட்டாக வேண்டுமனால் 50, 000 கொடுத்து யூனியனில் மெம்பராக வேண்டும், அப்புறம் சான்ஸ் வாங்க உதவுபவர்களுக்கு செலவு. மும்பயிலிருந்து வரும் மோசமான மொழிபெயப்பை ரிப்பேர் செய்து கொண்டு பேசவேண்டும். ஸ்டூயோக்கள் அதிகமாகிவிட்டாலும் பலருக்கு வாய்ப்பில்லை எனப்து தான் உண்மை. பட்டி மன்றங்களைப் போல செட்களாக தான் இயங்குகிறார்கள்.
    Like · Reply · 4 · 13 hrs
  • Krishnaswami Cvr this is a reflection of free market principles...will be reflected in many ways in our life...
    Unlike · Reply · 1 · 13 hrs
  • Shah Jahan செட்களாக இயங்குவதையும் தவறு என்று கூற முடியாது. ஆளைப் பிடித்து, பயிற்சி கொடுத்து, ஓரளவுக்கு அனுபவமும் பெற்று குழுவோடு ஒத்துப் போன பிறகு சட்டென புதிய ஆளை ஏற்பது கொஞ்சம் கஷ்டம்தான். இதுதான் என் அனுபவமும்கூட. உதாரணமாக, நான் நானாகவே ஒரு செட்டிலிருந்து விலக...See More
    Unlike · Reply · 1 · 12 hrs
  • Rajaraman Subramanian வினோதமான மக்கள் பண்பாடு............?.
    Like · Reply · 8 hrs
  • Sundararaman KN இது ஒரு வீண் போராட்டம். தொலைகாட்சியினால் மேடை நாடகங்களுக்கு பாதிப்பு என்று ஒரு கதாசிரியனாகவும், மேடை நாடக தயாரிப்பாளாராகவும் நான் சொல்லி அதனால் தொலை காட்சியில் வரும் தொடர் நாடகங்களை நிறுத்த வேண்டும் அல்லது குறைக்க வேண்டும் என்று தமிழ் நாடக தயாரிப்பாளர...See More
    Like · Reply · 1 · 6 hrs