எனக்கு வேண்டாம் அந்த புதையல்
அந்த பென்ஸ் கார் திருவனந்தபுரம் கோவிலின் வடபுறமிருக்கும் நுழைவாயிலின் முன்னே
நிற்கிறது. நாலுமுழ வேஷ்ட்டியில் மேலே சட்டையில்லாமல் காலில் செருப்புமில்லாமல்
இறங்கும் அந்த மெலிந்த அதிக உயரமில்லாத மனிதர் நான்கு பேர்களுடன் உள்ளே நுழைகிறார், மெல்ல நடந்து அவர் சன்னதியை அடைந்ததும் அந்த சனனதியில் அனந்தசயனத்திலிருக்கும்
பெருமாள் பத்மாநாபருக்கு தீபாராதனை
காட்டிய பின் தலமை அர்ச்சகருடன் சன்னதியிலிருக்கும் அனைவரும் வெளியேறுகிறார்கள்.
சன்னதியில் அவரும் பெருமாளும் மட்டுமே 10 நிமிடங்கள் தனியே. பின்னர் வெளியே வரும் அவர் வந்த வாயில் வழியே திரும்புகிறார்.
வாயிலின் கதவு மூடப்படுகிறது. காரில்
ஏறுமுன் கால்களிலிருக்கும் மணலை தட்டிவிட்டு
செருப்பை அணிந்து கொள்கிறார். அவர்
தான் உலகிலியே பணக்கார கோவிலாக இப்போது
ஆகிவிட்ட திருவனந்தபுரம் கோவிலுக்கு
சொந்தகாரான திருவனந்தபுர மஹாராஜா .உத்திராடம்
திருநாள் மார்தாண்ட வர்மா. பல ஆண்டுகளாக அந்த சம்ஸ்தான மன்னர்கள் கடைபிடிக்கும் மரபு
இது. தினசரி மன்னர் வந்து பத்மநாபஸவாமியிடம் தனியாக பிரார்த்னை செய்து பேசி அவரது
ஆணைகளை பெறுகிறார். கோவிலின் மண் கூட காலில் ஒட்டி அரணமணைக்கு வந்து விடக்கூடாது
என்று மன்னர் பரம்பரை சாரட்டில் ஏறும் முன் செய்ததை இன்றைய மன்னரும்
பின்பற்றுகிறார்.
இன்றைய திருவன்ந்தபுர ம்ஹாராஜ மிக எளிமையான மனிதர். வயது 90. மிக ஆரோக்கிய்மாக இருக்கிறார்.
வாக்கிங்ஸிடிக் இல்லாமல் நடக்கிறார் காலையில் 4 மணிக்கு எழுந்து யோகா செய்துவிட்டு
வேதம் படித்தபின் கோவிலுக்கு செல்லுகிறார்.. சுத்த வெஜிட்டேரியன். பால் தவிர வேறு
பானகம் எதுவும் அருந்துவதில்லை. நிறைய
படிக்கும் இந்த மன்னர் செய்திதாளில் வரும்
முக்கிய செய்திகளை தானே கத்தரித்து ஒட்டிவைகிறார். 30 ஆண்டு கலக்ஷன் வைத்திருக்கிறார்..
வெளிநாட்டு பயணம் அல்லது தவிர்க்க முடியாத காரணத்த்தால் கோவிலுக்கு வர முடியாத
போனால் பதமாநாபர் கட்டளயிட்டிருப்பது போல மன்னர் கோவிலுக்கு 166ரூபாய் 35 பைசாஅபராதம்
கட்ட வேண்டும். 
தங்கள் கோவிலில் திடுமென
புதையல் போல கிடைத்திருக்கும் கோடிக்கணக்கான் செல்வம் யாருக்கும் சொந்தமானததில்லை.
நிச்சியமாக எங்கள் குடுமபத்தினுடையதில்லை. அது ஆண்டவனுடையது எனபதினால்
ஒரு பைசா கூட எங்கள் குடுமபத்திற்கு வேண்டாம். அரிய பொருட்களை மீயுசியத்திலும், மற்றவைகளை கோவில் மூலமாக அறப்பணிகளுக்கு செலவிடலாம் அற்வித்திருகிறார் இந்த்
மன்னர். பத்தமநாபா ஸ்வாமி இவருக்கு பெரிய
செல்வத்தை மட்டுமில்லை பெரிய மனதையும் கொடுத்திருக்கிறார். மோகன்லாலைப்ப்பொல
நாமும் வைப்போம் ஒரு சல்யூட்.

கருத்துகள் இல்லை :
கருத்துரையிடுக
உங்கள் கருத்துக்கள்