நிஜமாகவே ஒரு சிட்டியை சிருஷ்டிக்கிறார் இவர்
எந்திரன்
படத்தில் வந்த “சிட்டி”யை நினைவிருக்கிறதா?
எழுத்தாளார் சுஜாதாவின் கற்பனையில் பிறந்த, இயக்குனர் சங்கரின் கைவண்ணத்தில்
எழுந்த அந்த சிந்திக்கும் எந்திரனை நிஜமாகவே உருவாக்கியிருக்கிறார் ஒரு விஞ்ஞானி.
திரு. ஜெகன் நாதன் சாரங்கபாணி. தமிழ்
நாட்டுகாரர். அமெரிக்க மிஸ்சோரி பல்கலை கழகத்தில்
நீண்ட நாட்களாக ஆராய்ச்சி பணியிலிருப்பவர். ரோபோட்க்களை வடிவமைப்பதிலும், அதை மேம்படுத்துவதிலும்
உலகின் பல இடங்களில் ஆராய்ச்சிகள் நடைபெற்றுகொண்டிருந்தாலும் முன்னணியில் இருப்பது இவருடையது தான். சொன்னதை செய்வது ரோபோட். சொல்லாமலேயே மனிதனை போல பணியிலிருக்கும் போதே தன்னிச்சையாக சிந்தித்து ரோபோக்களை செயல்பட வைக்க முடியமா? என்பது தான் இவரது ஆராய்ச்சி.
நீண்ட கால தொடர் முயற்சிகளுக்கு பின்னர் இவரது தலமையில் குழுவினர் உருவாக்கியிருப்பது
ரோபோக்களுக்கான மூளை.. மனித மூளையில் இருக்கும் கட்டுபாட்டுகேந்திரத்தைபோல வடிவமைக்கப்பட்ட
ஒரு குட்டி கம்யூட்டர்முளை பொருத்த பட்ட ரோபோட்
மனிதனைபோலவே சிந்தித்து, தேவையானதை புரிந்து
கொண்டு வேலைகளை செய்யும். இவரது தலமையில்
இயங்கும் ஒரு 14 ரோபோடிக்ஸ் விஞ்ஞானிகளின் குழு இதை சாதித்திருக்கிறது. இந்த வகை ரோபோட்க்களுக்கு செய்ய வேண்டிய பணிகளையும் இலக்குகளையும் சொல்லிவிட்டால்
அதைபுரிந்து கொண்டு தேவையானதை செய்துகொள்ளும்.
ஒரு பாலம் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும்
பத்து புல்டோசர்களை கட்டளைகளின் படி இயக்கி கட்டுபடுத்துகின்ற தலைவன்
ரோபோட் அவைகளில் ஒன்று சரியாக இயங்கவில்லை என்றால் உடனே அதை பழுது பார்க்கும் பணியிலும் ஈடுபடும்.
அல்லது மாற்று ஏற்பாடுகளுக்கு கட்டளைகள் கொடுக்கும். தலமைரோட்டுக்கு ஏதாவது பிரச்சனை
என்றால் உடனே அடுத்த ரோபோ தலமைப்பொறுப்பை ஏற்கும்.
இப்படி
இதுவரை பெற்றிருப்பது 20 உரிமைகள். போயிங் போன்ற பல பெரிய நிறுவனங்களிலும், அமெரிக்க
ராணுவ துறையில் அவைகள் பயன்படுத்தபடுகின்றன. 109 ஆராய்சிகட்டுரைகளயும், பல புத்தகங்களையும்
எழுதியிருக்கிறார். அமெரிக்க பல்கலைகழங்களில்
ஆராய்ச்சி பணிகளை தொடரும் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் தேவையான நிதி ஆதாரத்தை
அதன் துறை தலைவர்களுக்குதான் அரசாங்கமும், தனியார் நிறுவனங்களும் வழங்கும். அந்த வகையில் இவர் பொறுப்பிலிருக்கும் நிதி 13 மில்லியன்
டாலர்கள். இவரிடம் ஆராய்ச்சி மாணவராக இருப்பதே மிகப் பெரிய கெளவரமாக கருதப்படுவதால்
உலகின் பலநாடுகளின் ஆராய்ச்சி மாணவர்கள் சேர காத்திருக்கின்றனர். இந்த துறையில் சாதிக்க இன்னும் பல வாய்ப்புகள் இருக்கின்றன
வாருங்கள் என ஆர்வமுள்ளவர்களை அழைக்கிறார்.
சிந்திக்கும்,
சிரிக்கும், கோப்படும் ரோபோட்க்கள் காதலிக்குமா?
”நாங்கள் படைக்கும் ரோபோக்கள் புத்திசாலிகள்” என்கிறார் ஜகன்நாதன்.
கல்கி 30/10/13
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குரமணன்,
பதிலளிநீக்குசுஜாதாவிற்கு முன்னரே பலஆண்டுகளுக்கு முன் மாலன் ரோபோக்கள் சுயமாக சிந்தித்து தலமைக்காக யுத்தம் செய்து கொண்ட கதை எழுதியிருக்கிறாரே மறந்துவிட்டீர்களா?
கண்ணபிரான்
Good it seems that malan has already projected even b4sujatha.
பதிலளிநீக்குGurumoorthy
Sent from my iPad