17/12/13

குதிரை சொல்லும் கதை


இந்த ஆண்டு அமுத சுரபி தீபாவளி மலர் வெளியிட்டிருக்கும் எனது கட்டுரை 



சென்னை தீவுதிடலின் எதிரில் கடலை பார்த்து   சற்றே கழுத்தை  சாய்த்து கம்பீரமாக  தன்மீது வாளூடன்  அமர்ந்திருக்கும் ஒரு வீரனுடன்  கடந்த 175 ஆண்டுகளாக  நிற்கிறது. கிரேக்க பாணியில் வடிவமைக்கபட்ட அந்த குதிரை சிலை.  உலகில்  குதிரை மீது மனிதர் அமர்ந்த நிலையில் இருக்கும் சிலைகள்  ஐந்து இடங்களில் மட்டுமே இருக்கிறது. மன்னர்களுக்கு மட்டுமே அளிக்கபட்ட இந்த கெளரவம்  இந்தியாவில் ஒரு ஆங்கில கவர்னருக்கு அளிக்கபட்டிருக்கிறது,  அவர் தாமஸ் மன்றோ. இந்தியாவில் ஒரு சிப்பாயாக வாழ்க்கையைத் தொடங்கி, 12 ஆண்டுகள் ராணுவத்தில் பணியாற்றிய பிறகு, நிர்வாகப் பணிக்கு மாற்றம் செய்யப்பட்டவர் தாமஸ் மன்றோ.  தனது கடின உழைப்பால் முன்னேறி ஆளுனராக உயர்ந்தவர்.  1820 முதல் 1827 வரை சென்னை மாநில கவர்னாராகயிருந்தவர். தனது நேர்மையான நிர்வாகத்தால் மக்கள் மனதில் இடம் பெற்றிருந்த ஒரு சில ஆங்கிலேய அதிகாரிகளில் இவரும் ஒருவர் . இன்றுள்ள தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களின் பெரும்பான்மையான பகுதியும் திருப்பத்தூர் பகுதியும் ஒன்றாக  பாராமகால் என்று அறிய பட்டபகுதியில் ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக, கலைக்டராக இருந்தவர். மாவட்டம் முழுவதும் குதிரையில் அலைந்து திரிந்து விவசாயிகளின் உண்மை நிலைமையை நேரடியாக அறிந்துகொண்ட மன்றோ. விவசாயிகளின் வரிச்சுமையை மாற்றி அமைக்க முற்பட்டவர்.தன் பதவிகாலம் முடிந்ததும் இங்கிலாந்து செல்லும் முன் தன்பணியாற்றிய கடப்பா பகுதியில் பயணம் செய்தபோது  1827ல் இறந்துபோனார். இவர்அந்த பகுதியிலிருக்கும் ராகவேந்திரர் சமாதியில் வழிபட்டபோது அவர் இவருக்கு காட்சி கொடுத்தாதாக அரசு குறிப்புகளில் பதிவாகியிருக்கிறது. இப்போதும், கடப்பாவில் உள்ள ஒரு அனுமார் கோயிலில் ராமர் சீதை படங்களுடன் தாமஸ் மன்றோவின் படமும் இருக்கிறது. அங்கே, தினமும் நடக்கும் பூஜையில் மன்றோ படத்துக்கும் தீபாராதனை காட்டப்படுகிறது.
மக்களின் நன்மதிப்பை பெற்றிருந்த இந்த அதிகாரிக்கு  மக்களிடம் நன்கொடை பெற்று ஒரு சிலை வைக்கமுடிவு செய்யபட்டவுடன்  இங்கிலாந்தின் எஃப் சான்ட்ரீ என்ற புகழ்பெற்ற சிற்பி நியமிக்கபடுகிறார். மாடலுக்கான அரபிகுதிரையை  4ம் ஜார்ஜ்  மன்னரின் லாயத்திலிருந்து தேர்ந்தெடுத்து பணியை  செய்யத அந்த கலைஞன் சந்தித்த அடுத்த சவால் மன்றோவின் முழு உருவபடம் எதுமில்லாததினால்  கிடைத்த மார்பளவு படத்திலிருந்து  உருவாக்கவேண்டியிருந்தது
இந்த 6 டன் எடையுள்ள சிலை முதலில் பிளாஸ்ட் ஆப் பாரிஸ்ஸில் வடிவமைக்கபட்டு பின்னர் வெண்கலத்தில் வார்க்கபட்டிருக்கிறது. குதிரை, வால்பகுதி,  மன்றோவின்உருவம், வாள்இருக்கும்பகுதி என 5 தனிதனிப்பகுதிகளாக  கப்பலில் கொண்டுவரபட்டு  இங்கு இணைக்கபட்டிருக்கிறது.  அன்று சென்னையில் பெரிய அளவில் துறைமுகமேஇல்லாத  நிலையில் கப்பலிலிருந்து சிறுபடகுகளில் பகுதிகளாக கரைக்கு கொண்டுவந்திருக்கிறார்கள். இந்த 15 அடி சிலையை மேலும் கம்பீரமாக்க 25 அடியில் ஒரு பீடம் உள்ளூர் கலைஞர்களின் உதவியுடன்  செய்திருக்கிறது ஆங்கிலேய நிறுவனம்.



.இந்த சிலையை படைத்த சிற்பியிடம் ஏறி அமர்வதற்கு சேணத்திலிருந்து 

 தொங்கும் கால்வைக்கும் வளையங்கள் இல்லையே என அவரது சிறுவயது

 மகன் கேட்டதால் தற்கொலை செய்துகொண்டுவிட்டாதாக  சொல்லப்படுவது

 ஒரு வளமான கற்பனை கதை என்கிறார் வி. ஸ்ரீராம். இவர் சென்னை நகரின்

பாரம்பரியத்தை பற்றி ஆராயந்து கட்டுரைகள் எழுதியிருப்பவர். படைத்த

 சிற்பி சான்ட்ரீ பல ஆண்டுகளுக்கு பின்னர் இதய நோயால் இறந்ததற்கான

குறிப்புகள் இருக்கின்றன என்கிறார் இவர். செம்மொழி மாநாட்டிற்கு முன்

  ஆங்கிலேயர்களின் பெயரில் இருந்த தெருக்களை மாற்றியபோது இந்த

சிலையையும் எடுக்க தீர்மானித்திருந்த அரசின் முடிவு எதனாலோ

 கைவிடபட்டது


 40 ஆண்டுகாலம் உதவிகலைக்டெர் முதல் கவர்னர் வரை நேர்மையாக ஊழல்புரியாத அதிகாரியாக பணியாற்றிய தாம்ஸ் மன்றோ அன்றைய ஆட்சியில் துளிர்விட  துவங்கிய லஞ்சம் பற்றி 1795ல்  எழுதிய குறிப்பு இது

  இந்தியாவின் வறுமைக்கு முக்கியக் காரணம், அரசு இயந்திரத்தின் நிர்வாகக் குளறுபடிகளே. ஒரு மாவட்ட ஆட்சித் தலைவரே முறைகேடான செயல்களுக்கு துணை நின்றால், அவரால் எப்படி ஒரு நேர்மையான நிர்வாகத்தை நடத்த முடியும் "கலெக்டர்கள் தாங்கள் பதவிக்கு வந்து சில ஆண்டுகளிலேயே சொத்துகளைக் குவித்துவிடுகிறார்கள். வருவாய்க்கு மேல் டாம்பீகமாகச் செலவு செய்கிறார்கள். நாட்டைச் சுரண்டும் கலெக்டர் (அன்றைக்கு அமைச்சர்கள் கிடையாது; கலெக்டர்கள்தான் ஆட்சியாளர்கள்) நாடு  எப்படி முன்னேறும்?

 மூதறிஞர் ராஜாஜி பதவிஏற்கும் முன் தன்னை சந்திக்கவரும் இளம்

அதிகாரிகளுக்கு  நிர்வாகத்தில் மன்றோவின் அணுகுமுறை பற்றி படிக்க

 சொல்லுவாராம்.

பொதுவாழ்வில் தூய்மைக்கும்  நிர்வாகத்தில் நேர்மைக்கும்   குரல் கொடுத்த

முதல் மனிதன்  இவர் என அறியும்போது மக்கள் வரிப் பணத்தில் இல்லாமல்

 நன்கொடைகள் மூலம் எழுப்பபட்ட இந்த சிலை இன்னும்  கம்பீரமாக

தெரிகிறது.



11/12/13

111213


11, 12,13
 இந்த தேதியை இன்னும் 100 ஆண்டுகள் கழித்துதான் எழுத முடியும்.

இந்த முறை என்ன செய்ய போகீறீர்கள்?  I am waiting to see your new document, முடிவு பண்ணிட்டீங்களா?   கல்வெட்டு ஐடியா என்ன வாயிற்று? இப்படி பல கேள்விகள் ,மெயில்கள்


கடந்த ஆண்டுகளில் இப்படி பட்ட வினோதமான டேட்களை பதிவு செய்ய வங்கி வாழ்க்கையில் உருவாக்கிய முக்கிய ஆவணங்கள், முக்கிய அறிவிப்புகள், போன்றவகைகளை  மறக்காத நணபர்கள் கேட்டுகொண்டே இருந்தார்கள். புதிதாக ஏதுவும் தோன்றவில்லை.

சுவடுகளை  இந்த தேதியில் என்  பேஸ்புக்கில் இணைத்துவிடலாமா அல்லது ஒரு இனைப்பை  கொடுக்கலாமா? என யோசிக்கிறேன்.  விரைவில் விபரம் அறிவிப்பேன்
131211

10/12/13

சபாஷ் சுஜாதா !

இதாண்டா போலீஸ் 


பரபரப்பான மும்பாய் நகரின் சயான் பகுதியின் முக்கிய வீதி.   முந்திய கார்களின் பம்பரை தொட்டு முண்டிக்கொண்டிருக்கும் நெருக்கமான  டிராபிக். வேகமாக வந்து கொண்டிருக்கும் ஒரு கார்  வேகம் தணிந்து மெதுவாக ஒதுங்கி   நிற்கிறது, பின்னல் வரும் வாகனங்களுக்கு இடைஞ்சலாக நிற்கும்  அந்த காரைக்கண்டு  எரிச்சல் அடைந்த  போக்குவரத்து போலீஸ்கார்   நெருங்கி பார்த்ததும் அதிர்ச்சியடைகிறார். காரை ஓட்டி வந்தவர்  ஸ்டியரிங்கில் சாய்ந்து கிடக்கிறார். உடல் முழுவதும் வேர்வையினால் நனைந்திருக்கிறது. மனிதருக்கு மாரடைப்பு என்பதை புரிந்து கொள்கிறார். உடனே அருகில் இருக்கும் சிக்கனிலில் பணியிலிருக்கும்தன்  இன்ஸ்பெக்டர் சுஜாதாவிற்கு தனது வாக்கி டாக்கி மூலம் தகவல் தருகிறார்.கான்ஸ்டபிள்  குமார்தத் அடுத்த நிமிடம் அங்கு வந்த சுஜாதா, கன்ட்ரோல் ரூமுக்கு சொல்லி, லீலாவதி ஆஸ்பத்திரி வரையில் சாலையில் போக்குவரத்தை ஓரமாக தள்ளுமாறும் சிக்னல்களை பச்சையில் நிறுத்தி வைக்குமாறும் வேகமாக உத்தரவுகள் பிறப்பிக்கிறார்.. சாலையில் சென்றுகொண்டிருந்த ஒரு காரை நிறுத்தி, ஆஸ்பத்திரி வரை அந்த காரை ஓட்டி வருமாறு  அதன் டிரைவரை கேட்டுக் கொள்கிறார்.  அந்த காரில் வந்த மாரடைப்பால் தாக்கபட்டிருப்பவரை   பத்திரமாக  அணைத்து பிடித்து,  அவர் மார்பை மசாஜ் செய்தபடி வருமாறு கான்ஸ்டபிளுக்கு கட்டளையிடுகிறார்.

  தனது போலிஸ்ரோந்து காரை  முன்னால் வேகமாக  செலுத்தி வழி ஏற்படுத்திய படி 12 நிமிடங்களில் ஆஸ்பத்திரியை அடைகிறார். போகும்போதே இவர் கண்ட்ரோல் மூலம் சொன்ன தகவலினால் தயாராகயிருந்த டாக்டர்கள் சிகிச்சையை துவக்குகின்றனர்..  காரில் இருந்தவரின்  பிஸினஸ் கார்டை பார்த்து அவர் வீட்டிற்கு தகவல் கொடுத்திருந்தனால் அவரின் மனைவியும் ஆஸ்பத்திரிக்கு விரைந்து கொண்டிருந்தார்.  
அந்த மனிதர் உயிர் பிழைத்து கொண்டார்.
அவர் இந்திய முன்னாள் கிரிகெட் வீர்ர் வினோத் காம்ப்ளி.
அடாவடி, அத்துமீறல், அற்பமான கையேந்தல், அதிகாரத்துக்கு அடிபணிதல்,பிரச்சனைகள் வரும்போது மேல் அதிகாரிகள் சொன்னால் மட்டுமே செயல் படுவது என்ற போலீஸ் அதிகாரிகளிடையே,  மாறுபட்டு சமயோசிதமாக மின்னல் வேகத்தில் இயங்கிய பெண்போலீஸ் இன்ஸ்பெக்டர் சுஜாதா. இவருக்கு ஒரு சபாஷ் சொன்னால என்ன?
 இவரைபோல  எல்லா போலீஸ் அதிகாரிகள் இருந்தால் இந்தியா எப்படி இருக்கும்? 

ரமணன்