21/10/14

அதிகம் அறியப்படாத இந்தியருக்கு அமைதி நோபல்

அம்மா என் பள்ளிக்கூடத்தின் வாசலில் என்னை மாதிரி ஒரு பையன்  தினமும் அவன் அப்பாவுடன் செருப்பு தைத்து கொண்டிருக்கிறான். அவன் ஏன் படிக்க போகாமல் வேலைசெய்து கொண்டிருக்கிறான்?”   8 வயது மகனின்  எதிர்பாராத கேள்விக்கு அவனும் உழைத்தால் தான் அந்த குடும்பத்தினர் சாப்பிடமுடியும்என்ற பதிலை தந்தார் அந்த தாய்.
அப்படியானால் அவன் படித்து வேறு வேலைக்கு போகவே முடியாதா?” என்ற அடுத்த கேள்விக்கு அம்மாவால் உடனே பதில் சொல்லமுடியவில்லை.
விதிஷா என்பது போபால்  நகரிலிருந்து 50கீமி தொலைவிலுள்ள சின்னஞ்சிறிய கிராமத்தில்ஒரு மத்தியதரகுடும்பத்தில்  தந்தையையிழந்து தாயாரால் வளர்க்கபட்ட  கைலாஷ் சத்யார்த்தி தான்  அந்த கேள்வியை கேட்ட சிறுவன்இன்று நோபல் பரிசு பெற்றிருக்கிறார்.
சிறுவயதிலிருந்தே அடிமனத்தில்  இவருக்கு எழுந்தகேள்வி  ஏன் சிலகுழந்தைகள் மட்டும் மற்ற குழந்தைகள் போல சந்தோஷமாக இல்லாமல்   கஷ்டப்டடு வேலை செய்யவேண்டும்? பள்ளியில், கல்லூரியில் படிக்கும்போது இவர்களுக்கு உதவிகள் செய்து  கொண்டிருந்தாலும் இதை ஒழிக்கவேமுடியாத எனற எண்ணம் எழுந்துகொண்டிருந்தது. எஞ்னியரிங்படிப்பை முடித்து பணியில் சேர்ந்த போதும் இதற்காக ஏதாவது செய்தே ஆக வேண்டும் என்ற எண்ணம் வளர்ந்து கொண்டே இருந்தது.. கிராமங்களில் மட்டுமில்லாமல்  பணி செய்த நகரங்களில்  எல்லாம்கூட படிக்க வேண்டிய வயதில் தொழிலாளி ஆகும் குழந்தைகளுக்கு அடிப்படை வசதிகள் எதுவும் கிடைக்காமல். காலையில் இருந்து நள்ளிரவு வரை கொத்தடிமைகளாக நடத்தப்படுவதும் சிறுமிகள்  பாலியல் கொடுமைகளுக்கு ஆளாவதும்  இவரை நிலைகுலைய வைத்தது.

இதை வேரோடு வெட்டி சாய்க்க 1980ல் தனது 26 ஆம் வயதில் "பச்பன் பசாவோ அந்தலன்" (குழந்தை பருவத்தை காப்போம்) என்ற அமைப்பை ஏற்படுத்தி அறவழிப்போராடத்தை தொடங்கினார். நேரடியாக காவல்துறையை அணுகி புகார் செய்தால் புகார் செய்தவருக்கு ஆபத்து நேரிடலாம் என்பதால்  ; இந்த அமைப்பின் மூலம் குழந்தை தொழிலாளர்களை மீட்க வழி செய்தார்.
இங்கு வரும் புகார்களை வைத்து அமைப்பில் உள்ள தன்னார்வலர்கள் முதலில் அங்கு நடக்கும் அவலங்களை ரகசியமாக  கண்காணிப்பார்கள். புகார் உறுதி செய்யப்பட்டதும் ; அந்த ஊரின் லோக்கல் மாஜிஸ்ட்ரேட் மற்றும் காவல்துறை உதவியுடன் ரெய்டு நடத்தப்பட்டு குழந்தைகளை மீட்பார்கள். பின்னர்  சத்யார்த்தி அவர்களால் ஆரம்பிக்கப்பட முக்தி ஆசிரமத்தில்  அக்குழந்தைகள் சேர்க்கப்பட்டு பெற்றோருடன் அனுப்பிவைக்கப்படும் வரை அங்கு தங்கவைக்கப்படுவார்கள்.
தற்போது டெல்லியில் வசித்து வரும் 60 வயதாகும் கைலாஷ் சத்யார்த்தி, 1990 ஆம் ஆண்டு முதல் குழந்தைத் தொழிலாளர்கள் என்ற சுரண்டலை எதிர்த்து அறவழியில் போராட்டம் நடத்தி வருகிறார். கடந்த 30 ஆண்டுகளில் இவரது குழந்தைகள் மீட்பு அமைப்பு இதுவரை 80,000 குழந்தைகளை பல்வேறு விதமான சுரண்டல்களிலிருந்து மீட்டு மறுவாழ்வு அளித்துள்ளது.குழந்தைகளுக்கு கல்வி அளிக்காமல் சிறுவயதிலேயே வேலைக்கு அனுப்பப் படுவது ஒரு குற்றம் என்று கூறும் சத்யார்த்தி, இதுவே வேலையில்லாத் திண்டாட்டம், நாட்டின் வறுமை, கல்வியறிவின்மை ஆகியவற்றுக்குக் காரணம் என்கிறார். இவரது இந்த கருத்துக்கள் பல்வேறு ஆய்வுகள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளன.அனைவருக்கும் கல்வி என்ற திட்டம் உருவானதில் கைலாஷ் சத்யார்த்தியின் பங்களிப்பு உணடு
சினிமா, அரசியல், சினிமாவில்-அரசியல் பாலியல் குற்றங்கள் பற்றி அதிகம் பேசும் மீடியாக்கள்  இவரைபோன்றவர்களை பற்றி  மிக குறைவாகவே பேசுவதால்நம் நாட்டுகாராரன இவரைப்பற்றி நமக்கு அதிகம் தெரிந்திருக்கவில்லை. ஆனால் பிபிசி, சின்பிசி போன்றவைகள்  இவரது கருத்துக்கள், இவரது இயக்கம் ஆகியவைகள் பற்றி  நிறைய ஆவணப் படங்கள், தொலைக்காட்சித் தொடர்கள், விழிப்புணர்வு படங்கள் வெளியிட்டு உலகளவில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. இவரது இந்த தன்னலமற்ற அயராத பணிக்காக இதற்கு முன்னர் ஏகப்பட்ட விருதுகளை வென்றி ருக்கிறார்.  அமெரிக்க அதிபர் கிளிண்டன் விருது கொடுத்து கெளரவித்திருக்கிறார். உஅகின் 144 நாடுகளில் இவரது அமைப்புக்கு தொடர்புகள் இருக்கிறது. அதன் மூலம் அங்குள்ள குழந்தைகளை காப்பாற்றவும் உதவுகிறார். சாக்ஸ் (SAACS) என்றும் அமைப்பின் தலைவர் இவர்இது  தெற்காசியா முழுவதும் உள்ள தன்னார்வ நிறுவனங்கள் உதவியுடன் குழந்தை தொழிலாளர்களை வேலைக்கு சேர்க்கும் நிறுவனங்களை கண்காணிக்கிறது. நாட்டின் அதிபர்களும், பிரதமர்களும் உறுப்பினராக இருக்கும் யுன்ஸ்கோவின் உயர்மட்டகுழுவில் இவரும் ஒரு உறுப்பினர்,. 2006 ஆம் ஆண்டே நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கபட்டவர். ஆனால் அந்த ஆண்டு பங்களாதேஷில் கீராமியன் வங்கியை துவக்கிய மக்மத் யூனஸ்க்கு வழங்கப்பட்டது., இந்த ஆண்டு பரிந்துரைக்கபட்ட 278 பெயர்களில் இவர் தேர்ந்தெடுக்கபட்டிருக்கிறார். இதுவரை இவ்வளவு பெயர்கள் பரிந்துரைக்கபட்டதில்லை. 2000ஆம் ஆண்டில் உலகில் குழந்தை தொழிளார்களின் எண்ணிக்கை 246 மில்லியன் ( ஒரு மில்லியன் =10லட்சம்) இன்று அது 168மில்லியனாக ஆக குறைந்திருக்கிறது இந்த நிலைக்கு கைலாஷ் சத்யார்த்தியின் பங்கு முக்கியம் வாய்ந்தது என்கிறது நோபல் பரிசு குறிப்பு.
இந்த ஆண்டுக்கான நோபல் பரிசை இவர் பாக்கிஸ்தான் மலாலாவுடன் இணைந்து பெறுகிறார். இதுவரை நோபல் பரிசுபெற்றவர்களின் சராசரி வயது 60. முதல் முறையாக 17 வயதுபெண் பரிசு பெறுகிறார்இவர் கைலாஷுடன் இணைந்தும் உலக குழந்தைகள் கல்விக்காக செயல்படுவேன் என அறிவித்திருக்கிறார்.
பரிசு அறிவிக்கபட்டவுடன் பிரதமர் மோடி நாட்டுக்கே பெருமைஎன பாராட்டியிருக்கிறார். பேஸ்புக்கிலும் டிவிட்டரிலும் வாழ்த்துகள் மழையாக கொட்டின. அதில் கவர்ந்தவைகளில் ஒன்று  பாடகர்  எஸ் பி பியின் பேஸ்புக் கமெண்ட்..” இன்று இந்திய பாக்கிஸ்தான் சரித்திரத்தில் ஒருமறக்க முடியாத நாள். இவர்களுக்கு தலைவணங்குகிறேன் மலாலாவின் பேச்சு  என் மனதைத்தொட்டது. ” எங்கள் இருவருக்கும் கிடைத்திருக்கும் இந்த கெளரவம்தலைவர்கள், அரசியல்வாதிகள், ராணுவதளபதிகளின் கண்களை திறக்கட்டும்இனம், மதம், ஜாதி போன்ற நம்மைபிரிக்கும் அற்ப விஷயங்களுக்கு அப்பாற்பட்டது மனிதம், கடவுளுக்கு அடுத்தபடியாக மதிக்கபடவேண்டியது அது என்பதை. அவர்கள் புரிந்து கொள்ளட்டும்.” என்று பேசியிருக்கிறது இந்த குழந்தைமலாலா நீங்கள், அவர்களை மன்னித்துவிடுங்கள்’”.உலகம் உங்கள் தன்னலமற்ற பணிகளை பெரிது மதிக்கிறது எனகேட்டுகொள்கிறேன்.   
டெல்லியில் கைலாஷ் சத்யார்த்தி மனைவி, மகள், மகன் மற்றும் மருமகள்  என முழுக்குடும்பமே  இவரது அமைப்பில் ஈடுபட்டு உதவுகிறார்கள்.
______________________________________________________________________________________
  • அன்னை தெரசா , பாரக் ஓபாமா , நெல்சன் மண்டேலா , தலாய்லாமா வரிசையில் அமைதிக்கான நோபல் பரிசை இம்முறை  பாகிஸ்தானின் 17 வயது  மலாலாவுடன் இணைந்து இந்தியாவின் 60 வயதான கைலாஷ் சத்யார்த்தி அவர்களும்  பெற்றுள்ளார். 1901 ஆண்டு முதல் ஆண்டு தோறும் வழங்கப்படும் நோபல் பரிசை பெரும் எட்டாவது இந்தியர் இவர. அமெரிக்காவில் வாழும் இந்தியர் வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் அவர்களுக்கு வேதியியல் துறையில் செய்த ஆராய்ச்சிக்காக 2009 ஆம் ஆண்டு நோபல் பரிசு வழங்கப்பட்டது. 

 ________________________________________________________________________________________

  • நோபல்  பணத்தை என்ன செய்யபோகிறார். எங்கள் அமைப்பில் 400 கிராமங்களைச் சேர்ந்த குழந்தைகளால் தேர்ந்தெடுக்கப்ட்ட பாய் ம்ஹா பஞ்சாயத் என்ற அமைப்பு இருக்கிறது. அதன் கூட்ட்த்தில் முடிவு செய்வோம். ஆனால் நிசியமாக ஒரு பைசாவைக்கூட வீணாக்க மாட்டோம் என்கிறார் சத்யார்த்தி.


 __________________________________________________________________________________________

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்கள்