4/12/14

திருப்பதியில் மொட்டை போட்டுக்கொண்டால் – தேசத்துக்கு டாலரில் வருமானம்

 

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் தங்கள் வேண்டுதலுக்கு ஏற்றவாறு தலைமுடிகளை காணிக்கையாக செலுத்தி வருகின்றனர். ஒருநாளைக்கு 15 ஆயிரம் முதல் 25 ஆயிரம் பக்தர்களும், வார விடுமுறை மற்றும் முக்கிய உற்சவங்களின்போது 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தங்களின் தலைமுடியை காணிக்கை செலுத்தி வருகின்றனர். இப்படி கழிக்க பட்ட முடிகளை என்ன செய்கிறார்கள்?  சில ஆண்டுகளுக்கு முன் உள்ளூர் காண்டிராக்டர்கள் மூலம்  அப்புறப்டுத்திக் கொண்டிருந்தார்கள். அவர்கள் ஏற்றுமதியாளர்களுக்கு அதை நல்ல விலையில் விற்கிறார்கள்  என்பதை அறிந்தபின்னர்  திருப்பதி தேவஸ்தானமே  அதை ஏலத்தில் ஏற்றுமதியாளர்களுக்கும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கும் விற்க ஆரம்பித்திருக்கிறார்கள். ஏலம் இ ஆக்‌ஷன் என்று சொல்லப்படும் ஆன் லயன் முறையில் நடக்கிறது. கடந்த ஆண்டு இம்மாதிரி ஏலத்தில் கிடைத்த பணம், 200கோடி..2011ல் இப்படி ஏலமுறை துவங்கியதிலிருந்து இதுவரை விற்கபட்டிருப்பது 1178 டன் முடி, கிடைத்த பணம்  618 கோடிகள்,

ஏலத்தை நடத்துவது திருப்பதி தேவஸ்தானமும், மெட்டிரியல் ஸ்கிராப் டிரெடிங்கார்ப்ரேஷன் என்ற அரசு நிறுவனமும். விலை சர்வ தேச மார்க்கெட் நிலவரத்தின் படி முடிவு செய்கிறார்கள், விற்பனைக்கு தயாராக இருக்கும் முடிகளின் நீளம் கனம் போன்றவிபரங்கள் அதற்கான வெப்சைட்டீல் படங்களுடன் விவரிக்க படுகிறது. நேரில் வந்து தொட்டுபார்த்து வாங்க விரும்புஅவர்களுக்கு சாம்பிளும் காட்ட படுகிறது.
திருப்பதியில்  600 முடிதிருத்தும் பணியாளர்கள் இருக்கிறார்கள். இவர்களில் பெண் பக்கதர்களின் வசதிக்காக 50 பெண்பணியாளர்கள். காணிக்கை செலுத்துமிடத்திலிருந்து  சேகரிக்க பட்ட முடிகள், அவற்றின் நீளத்திற்கேற்ப   9 வகைகளாக தரம் பிரிக்கபட்டுகிறது. காயவைக்கப்பட்ட பின் அவைகள் ரசயானங்களின் மூலம் சுத்த படுத்த பட்டு நீண்ட நாள் நிலைக்க பதப்படுத்தபட்டு,  முடிகளின் நீளங்கள் தரங்களுக்கேற்ப ஒரே அளவாக்க படுகிறது.. இவைகள் ஒரு குறிபிட்ட அளவு சேரும் வரை எர்கண்டிஷன் கோடவுண்களில் விசேஷமாக அமைக்கப்பட்ட பிளாஸ்டிக் தொட்டிகளில் வைத்து பாதுகாக்க படுகிறது.

 நல்ல கருப்புகலரிலிருக்கும்  31 அங்குல நீளத்திற்கு மேலிருக்கும் முடிகள்தான் முதல் தரம். அதற்கு சர்வ தேசமார்க்கெட்டில் பெயர் கறுப்பு தங்கம். விலை. கிலோ  ரூபாய் 25000க்கும் மேல். அதைதொடர்ந்து மற்ற ரகங்கள்.  கிலோ ரூபாய் 5000த்திலிருந்து 18000 வரை.   வெள்ளை முடிக்கும்  நல்ல விலை. சிறுசிறு துண்டுகளாகி தூளாகிப் போனதைக் கூட வாங்க ஆட்கள் இருக்கிறார்கள். அதற்கும் விலை நிர்ணயம் செய்திருக்கிறார்கள். ஆண்டுக்கு மூன்றுதரம் ஏலம் விடப்படுகிறது. குறிப்பிட்ட விலைக்கு போகவில்லை என்றால் அடுத்த ஏலத்துக்காக காத்திருக்கிறார்கள்.
வெளிநாட்டில் வாங்கி என்ன செய்கிறார்கள்.?
இந்த தலைமுடிகள் அனைத்தையும் பிரிட்டன், அமெரிக்கா, கனடா உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளை சேர்ந்த பேஷன் டெக்னாலாஜி மற்றும் மருந்து நிறுவனங்கள்  ஆண்டுதோறும் அதிகளவில் வாங்குகின்
றன. ஐரோப்பாவிலும், சில ஆசிய நாடுகளிலும் பேஷன் டிசைனகர்களுக்காக இங்கிருப்போர் வாங்குகிறார்கள். நல்ல தரமான விக் கள் தயாரிக்க மட்டுமில்லாமல், ஜரிகைகள் போல ஆடைவடிவமைப்பில், செருப்பு, கைப்பைகள், கோட்டுக்களில் இதை பயன் படுத்துகிறார்கள்.  சில ஹாலிவுட் நடிகைகள் இந்திய முடிகளில் தயாரிக்க பட்ட விக் களைமட்டுமே அணிவார்கள். மத்தியதர நீளத்தில் இருக்கும் முடிகளை  சீனாவாங்குகிறது. அவர்கள் வண்ணம் தோய்த்து விக் காளாக்கி அமெரிக்க ஆப்பிரிக்க நாடுகளில் விற்கிறார்கள். சிறிய முடிகளில் பிரஷ்கள் செய்து விற்கிறார்கள். அவர்கள் நாட்டில் இப்படி ஒரே இடத்திலிருந்து பெருமளவு கிடைக்காததும் ஒரு காரணம். இந்த ஆண்டு 200கோடிகள் வியாபாரம் ஆகும் என எதிர்பார்த்து துவங்கிய ஏலத்தில் 64 கோடிகள் மட்டுமே வியாபாரம் ஆயிற்று. காரணம் ஐரோப்பாவில் ஹேர்ஸ்டைல் பேஷன் மாறியிருக்கிறதாம்.  ஐரோப்பிய பேஷன் மார்கெட்டின்   தேவை திருப்பதியிலிருக்கும்  முடிகளின் விலையையும் விற்பனையையும்  தீர்மானிக்கிறது. ”இது ஒன்றும் புதிதில்லை. அடுத்த சீசனில் சரியாகும்” எனகிறார். கோவிலின் நிர்வாக அதிகாரி திரு எம் ஜி கோபாலன்.
அடுத்த முறை திருப்பதியில் முடி காணிக்கை செலுத்தும் போது உங்கள் பிராத்தனை நிறைவேறுவதுடன்  தேசத்துக்கு அன்னிய செலவாணியும் சேருகிறது என்பதையும் நினைத்து சந்தோஷப்படுங்கள்





கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்கள்