அடுக்குமாடிவீடுகள்
புனேயில் புதிதல்ல. 50 ஆண்டுகளுக்கு முன்னரே துவங்கிவிட்ட விஷயம். ஆனால் இப்போது பல
அடுக்குமாடிகளுடன் களுடன் அதிகமான கட்டிடங்கள் மிக வேகமாக எழுந்திருக்கின்றன.
28 அல்லது 24 அடுக்குமாடி வீடுகள். 8 அல்லது 10 மாடி பிரமாண்ட
அலுவலககட்டிடங்கள் நிறைய எழுந்திருக்கின்றன. எல்லா அடுக்குமாடி வீடுகளிலும். முதல்
4 மாடிகளுக்கு -1,-2,-3.-4 என நம்பரிட்டு 5 வது
மாடியைத்தான் முதல் மாடி என குறித்திருக்கிறார்கள்.
இது வாஸ்து சாஸ்த்திரமா இல்லை விதிமீறலை மறைக்கும் சமாச்சாரமா என தெரியவில்லை. நான்கு புறமும்
அழகான பசுமை குன்றுகளால் சூழப்பட்ட புனே நகரில்
அந்த குன்றுகளுக்கு 10 கீமி வரை கட்டிடங்கள் எழுப்ப கூடாது என்று சட்டமிருந்தது. சரத்பாவர்
காலத்தில் விதிகள் தளர்த்தபட்டு இப்போது சுத்தமாக மறக்கபட்டு குன்றுகளுக்கு அருகிலேயே.
கட்டிடங்கள் வளர்க்க பட்டுகொண்டிருக்கின்றன. இன்னும் சில ஆண்டுகளில் அந்த குன்றுகளிலும்
இம்மாதிரி கட்டிடங்கள் எழந்து குன்றுகளே காணமல் போகலாம் நகரமே நான்கு திசைகளிலும் கான்கீரிட்
காடுகளாக விரிந்து கொண்டிருக்கின்றன.
ஹின்சஞ்ன்வாடி
என்ற புறநகர் பகுதியில் அத்தனை முன்னணி சாப்ட்வேர் நிறுவனங்களும். பிரமாண்டமான பல கட்டிடங்களில்
இயங்குகிறது. 138 ஏக்கரில் 3000 வீடுகளுடன் 200 அலுவலகங்களுடன் மாறிவரும் இந்தியாவின்
முகத்தை காட்டும் ஷோகேஸ். தனியார் நிறுவனங்கள் உருவாக்கிகொண்டிருக்கிறார்கள். இதுபோல்
இன்னும் மூன்று அருகே வரப்போகிறதாம். அலுவலகங்களுக்கு அருகிலேயே வசிக்க அடுக்கமாடிகள்.
Walk to work என்ற வாழ்க்கை. பயண நேரம் மிச்சம்
என சொல்லி அந்த நேரத்திலும் வேலை வாங்கும் புத்திசாலிகம்பெனிகள். பல கட்டிடங்களில் விளக்குகளை அணைப்பதே இல்லை. அமெரிக்க கஸ்டமர்களின் பகல் நேர அலுவலகங்களுக்காக இங்கே இரவெல்லாம் உழைக்கும். பெரிய இளைஞர் பட்டாளம்.
5 ஸ்டார் சம்பளம் வாங்குபவர்கள் தெருவோர கையேந்திபவனில் வாங்கி பிளாட்பாரத்தில்
உட்கார்ந்து ஜவா மொழியில் பேசிக்கொண்டே சாப்பிடுகிறார்கள். இம்மாதிரி கடைகள் 50க்கும்
மேல் இருக்கிறது. ஆம்லெட் தோசை போடும் நம்மூர்காரர் கடையில் நல்ல கூட்டம். தமிழ் பாடல்களும்
கேட்கிறது.

அடையாள
அட்டையை அழுத்தினால் திறக்கும் கதவு. கிச்சனில்; புகைவந்தால் அலறும் அலாரம் நடக்க நல்ல பாதைகள் மெத்தென்ற பசும்புல்வெளி பார்க்
நீச்சல் குளம், குழந்தைகள் விளையாட வெண்மணல்திடல்
கோல்ப்மைதானம் என மிக நவீன வசதிகளுடன் சுத்தமான
குட்டி ஹைடெக் ஊர். கால்நகம்வெட்டிக்கொள்வதிலிருந்து சகல நகர வாழ்க்கையின் ஆடம்பரங்களும்
இங்கேயே இருக்கிறது.
ஆனாலும். பனித்துளிகள் மின்னும்பயிர்களுடன் அருகிலிருக்கும்
விளைநிலங்களையும் அதன் எதிரே மிதக்கும் மேகங்கள் தொட்டுசெல்லும் உயர்ந்த கட்டிடங்களையும் நம் பால்கனியிலிருந்து
ஒன்றாக பார்க்கும்போது ஒரு மாறுபட்ட வினோதமான
உணர்வு எழுகிறது.
”இன்னும்
சில நாட்களில் நாங்கள் அங்கேயும் வந்துவிடுவோம்” என்று அந்த உயர்ந்த கட்டிடங்கள் சொல்லுவதைக்கேட்டு அழும் அந்த நிலங்களின்
கண்களில் நீர் கட்டியிருப்பது போல தோன்றிற்று. .
வளரும் அடுக்குமாடி நாகரிகத்தைப் பற்றி மிக நேர்த்தியான பதிவு. நகரங்களின் வளர்ச்சியால் தொடர்ந்து விவசாய நிலங்கள் அழிக்கப்பட்டு வருவது வேதனையாக உள்ளது.
பதிலளிநீக்கு