19/5/15

அட நம்ம ஊர்காரர் மாப்பிள்ளை!

இங்கிலாந்து தேர்தல் ஒரு புதிய பாடம் 


பொதுத் தேர்தலில் கருத்துக்கணிப்புகளும், மீடியாக்களின் ஜோசியங்களும் பொய்த்துப்போனது இந்தியாவில் மட்டுமில்லை இங்கிலாந்திலும் தான்.
இங்கிலாந்தில், சமீபத்தில் நாடாளு மன்றத் தேர் தல் நடை பெற்றது. இதில், பல்வேறு கட்சி கள் போட்டி யிட்டாலும், தற்போதை பிரதமர் டேவிட்கேம்ரூனின் கன்சர்வேட்டிவ் கட்சிக்கும், தொழி லாளர் கட்சிக்கும் இடையே தான் இதுவரை நடந்த எல்லாத் தேர்தல்களையும் விடக் கடுமையானபோட்டி நிலவியது. கருத்துக்கணிப்பு நடத்திய இங்கிலாந்தின் மிகப்பெரிய மீடியாக்கள் சொன்ன விஷயம் இந்தத் தேர்தலில் எவருக்கும் அறுதிப்பெரும்பான்மை கிடைக்காது. தொங்கு பாராளு மன்றம் அல்லது ஒரு பெரிய கட்சி உதிரிகட்சிகளுடன் இணைந்த கூட்டணி ஆட்சி என்பது. ஆனால் தற்போதை பிரதமர் டேவிட்கேமரூனின் இன்னும் 5 ஆண்டுகள் 10 டவுனிங்கில் ஸ்டீரிட்டில் வசிக்கட்டும் என்பது மகேசன்களான மக்கள் சொன்ன தீர்ப்பு

மொத்தம் உள்ள 650ல், 330 தொகு தி களில், கன்சர் வேட்டிவ் கட்சி வெற்றி வாகை சூடியது. இத்தனை இடங்கள் கிடைக்கும் என நாங்கள் எதிர்பார்க்கவில்லைஎன்று ஆச்சரியப்பட்ட டேவிட் கேமரூன்.இங்கிலாந்தின் பிரதமராக 2வது முறையாகப் பதவியேற்றிருக்கிறார். இந்தத் தேர்தலில் கன்சர்வேட்டிவ் கட்சியின் மாபெரும் வெற்றியைப் போலவே எதிர்க்கட்சியான லேபர் கட்சியும் அதன் தலைவர்களும் மிகப்பெரிய தோல்வியைச் சந்தித்திருப்பது மற்றொரு ஆச்சரியம். புதிய பாராளுமன்ற உறுப்பினர்களில் அதிக அளவில் இளைஞர்கள். 30%க்கு மேல் பெண்கள். ( இதற்கான சட்டம் எதுவும் இல்லை)

தேர்தலில் டேவிட் கேமருனின் இந்த வெற்றிக்கு கணிசமான அளவில் உதவியிருப்பவர்கள் இங்கிலாந்தில் வாழும் இந்திய வம்சாவளியினர். பொதுவாக இவர்களில் லேபர்கட்சியை ஆதரிப்பவர்கள்தான் அதிகம் என்ற நிலை இருந்தது. ஆனால் தலையெடுத்திருக்கொண்டிருக்கும் நாலவது தலைமுறை மாற்றிச் சிந்திக்கத் துவங்கியிருக்கிறது. இங்கிலாந்தில் மூதலீடு செய்திருக்கும் பெரிய நாடுகளில் இந்தியா 3 வது இடத்தில் இருக்கிறது. 700க்கும் மேற்பட்ட கம்பெனிகளலிட்டிருக்கும் மொத்த மூலதனம் 1.3 பில்லியன் பவுண்ட்கள்(100 கோடிகளுக்கு மேல்). கடந்த ஒர் ஆண்டில் மட்டும்3500 வேலைவாய்ப்புகளை உருவாக்கியிருக்கிறார்கள். கேரூனின் இந்திய- இங்கிலாந்து நட்புறவு 21ம் நூற்றாண்டின் மிகச்சிறந்த விஷயங்களில் ஒன்று
அறிவிப்பும் கடந்த 5 ஆண்டுகளில் 3 முறை இந்தியாவிற்குத் தொழில் அதிபர் குழுக்களுடன் இந்தியாவிற்கு வருகை தந்திருப்பதும் இந்த இளைய தலைமுறையினருக்கு நம்பிக்கையைத் தந்திருக்கிறது. நீண்ட காலமாக இந்தியவம்சாவளியினர் இங்கிலாந்தின் அரசியலில் பங்கு பெற்றிருந்தாலும் சமீபகாலங்களில் அதிக அளவில் இளைஞர்கள் எல்லாக் கட்சியிலும் இருக்கிறார்கள். தேர்தலிலும் போட்டியிடுகிறார்கள். இந்தத் தேர்தலில் போட்டியிட்ட 59 இந்தியர்களில் 10 பேர் வென்று எம்பியாகியிருக்கிறார்கள், அப்படி வென்றவர்களில் ஒருவர் ரிஷி சுனாக். ஆக்ஸ்போர்ட் ,ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகங்களில் படித்தவர். ரிச்மோண்ட் என்ற தொகுதியில் நல்ல வாக்கு வித்தியாசத்தில் வென்ற இந்தக் கன்சர்வேட்டிவ் கட்சி வேட்பாளர் , இன போ சிஸ் நிறுவனத் தின் நிறுவனர் நாராயண மூர்த்தியின் மருமகன்,

இங்கிலாந்தின் வளரும் தொழிலதிபரான இவர் நாராயணமூர்த்தியின் ஒரே மகள் அக்க்ஷதாவை(Akshata) திருமணம் செய்து கொண்டிருப்பவர். தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும்போது நாராயணமூர்த்தி லண்டனில் இருந்தார்.
இம்முறை பாரளுமன்றதேர்தலில்போட்டியிட்ட லண்டன் நகர மேயரும் வெற்றிபெற்றிருக்கிறார், இவரது மனைவி இந்தியவம்சாவளியினர். இந்திய மருமகன்கள் ஜெயித்துகொண்டிருக்கிறார்கள்எனச் செய்தி வெளியிட்டது ஒரு தினசரி.
.ஸ்காட்லாந்து பகுதி வாக்காளர்களின் முடிவு இந்தத் தேர்தலில் மற்றொரு ஆச்சரியம் அங்குத் தனிநாடு கேட்டுப் போராடிக்கொண்டிருக்கும் ஸ்காட்டிஷ் நேஷனல் பார்ட்டி அதிரடியாக 59 சீட்டுகளில் 56ல் வென்றிருக்கிறது.. 8 மாதங்களுக்கு முன் ஸ்காட்லாந்து தனிநாடாகவேண்டுமா? என்ற பொதுவாக்கெடுப்பில் வேண்டாம் என்பது பெரும்பான்மையினரின் விருப்பமாக இருந்தது. ஆனால் இந்தத் தேர்தலில் போட்டியிட்டஇளைஞர்கள் பெற்றிருக்கும் வெற்றி தனிநாடாக விரும்பும் ஒரு புதிய செய்தியைச் சொல்லுகிறது. இந்தக் கட்சியின் வெற்றி வேட்பாளர்களில் ஒருவர் மெய்ரி பிளாக். வயது 20. கல்லூரி மாணவி. இங்கிலாந்து பாரளுமன்றச் சரித்திரத்திலேயே இந்த வயதில் எம் பியானவர் இவர்தான். ஸ்காட்லாந்து அரசியல் இளைஞகர்ளின் தலமையில் எழுந்து கொண்டிருக்கிறது.
இதுதான் கேம்ரூனுக்குத் தலைவலியாக இருக்கப் போகும் ஒரு விஷயங்களில் ஒன்று. ஐரோப்பிய யூனியன் கூட்டமைப்பில் தொடர்வது குறித்துப் பொதுவாக்கெடுப்பு 2017ல் நடத்துவோம் எனத் தனது தேர்தல் அறிக்கையில் சொல்லியிருக்கிறார். ஸ்காட்லாந்து மக்கள் ஐரோப்பியயூனிலில் தொடரவே விரும்புகிறார்கள். இங்கிலாந்தில் அதை விரும்பாதவர்கள் தான் அதிகம். இந்த நிலையில் பொதுவாக்கெடுப்பின் முடிவுகள் ஸ்காட்லாந்து மக்களின் விருப்பத்திற்கு எதிராக அமைந்தால் அவர்கள் தனிநாடக பிரியும் அபாயமிருக்கிறது. ஐக்கியத் தேசம் ஒரு வலிமையான கூட்டமைப்பிலிருந்து வெளியேறி, ஸ்காட்லாந்து தனிநாடகி அதில் உறுப்பினாராகும் என்ற புதிய வரலாறு கேம்ருனின் ஆட்சி காலத்தில் நிகழ்ந்துவிடுமோ என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

., “நீங்கள் குறிப் பிட்டது போலவே, இந்த முறையும் கேமரூன் அரசு (பிர் ஏக பார், கேம ரூன் சரக் கார) அமைய உள்ளது. உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.என்று ததியிருக்கிறார்,இந்தத் தேர்தல் முடிவுகளுக்காகத் தனது இங்கிலாந்து பயணத்தை ஒத்திபோட்டிருந்த பிரதமர் மோடி.. இந்தியாவுடன் நட்புடன் இருக்கும் கேம்ருன் ஐக்கியநாட்டு சபையின் நிரந்தர உறுப்பினர் நாடாக இந்தியா வரஉதவுவதையும், இந்தியாவுடன் வணிக உறவுகள் அதிகரிக்கவும் விரைவில்மோடி இங்கிலாந்துக்குப் பயணம் செய்யவிருக்கிறார்.


ஒருகாலத்தில் இந்தியாவின்மீது ஆதிக்கம் செலுத்தி அனைத்தையும் முடிவு செய்து கொண்டிருந்த இங்கிலாந்தின் அரசியலின் தலைவிதியை நிர்ணயப்பதில் இன்று இந்தியர்களின் பங்களிப்பு இருப்பது என்பது உலக அரசியலில் ஒரு புதிய பாடம் .
கல்கி 24/05/15 இதழில் எழுதியது



கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்கள்