27/1/19

அலஹாபாத் அழகாகிக்கொண்டிருக்கிறது


4 நகரங்கள்,  இரண்டுகோடி. பக்தர்கள் ஒரே திருவிழா

கங்கையும் யமுனையும் கண்ணுக்கு தெரியாத சரஸ்வதியும்  சங்கமிக்கும்  இடத்தில் 1580ஆம் ஆண்டு, மன்னர் அக்பர் புதிய நகரம் ஒன்றை உருவாக்கி, அதற்கு 'இலாஹாபாத்' என்று பெயரிட்டார். பின்னர்,  அது ஷாஜகான் காலத்தில் 'அலகாபாத்' என்று மாற்றப்பட்டதாக வரலாறு  சொல்லுகிறது. இப்போது. அதன் புதியபெயர்  பிரயாக்ராஜ்:

இந்த பிரயாக்ராஜ் இப்போது மிக அழகாகிக்கொண்டிருக்கிறது. புதிய சாலைகள்,, பாலங்கள் கட்டிடங்கள் மட்டுமில்லை. எப்போதும் சற்று அழுக்காகவே இருக்கும் நகரின் பல தெருக்களின் சந்துகளின் சுவர்களைக்கூட அழகான ஓவியங்கள் அலங்கரிக்கின்றன. பெரிய அளவில்  தெய்வ, மற்றும் இயற்கை காட்சிகள் வண்ணப்படங்களுடன் ஒரு  ஓவியகண்காட்சி போலிருக்கிறது.






12 ஆண்டுகளுக்கு ஒரு முறை வருவது கும்பமேளா என்ற திருவிழா இதை  ஆர்த கும்பமேளா அல்லது  பூர்ண கும்ப மேளா என்கிறார்கள்  6 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுவது. அர்த்த கும்ப மேளா.  இந்த கும்பமேளா ஹரித்துவாரில் முதலில் தொடங்குகிறது. இதனைத் தொடர்ந்து பிரயாக், நாசிக், உஜ்ஜயினி நகரில் நடைபெறும் மூன்று நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடுவது மிகப் புண்ணியம்  என்பதால்   பிரயாக்ராஜ் நகரின்(அலஹாபாத்) விழா மிக முக்கியத்துவம் பெறுகிறது. இந்த ஆண்டு அர்த்த கும்ம மேளா  ஜனவரி 15  மகரசங்கராந்தி தினத்தன்று அதிகாலை 4 மணிக்குத் திரிவேணி சங்கமத்தில்  பக்தர்கள்,,சாதுக்கள் என 2 கோடி பேரின்   புனித நீராடலுடன் தொடங்கியிருக்கிறது என்கிறது கும்பமேளா ஆணையம். இந்த விழா மார்ச் 4ஆம் தேதிவரை  நடைபெறும்.


இந்த நகரங்களில் மட்டும் ஏன் கும்பமேளா நடைபெறுகிறது? என்பது ஒரு சுவாரஸ்யமான கதை. இந்த நகரங்களில் மட்டும்  அமுதம் சிந்தியிருக்கிறது. . புராணக் கதையில் தேவாசுரர்கள் பாற்கடலைக் கடைந்து அமிர்தம் எடுத்தபோது, இந்திரனின் மகன் ஜெயந்தனுக்கு அவசரம் தாங்கவில்லை. பறவை வடிவில் வந்து அமுதக் கும்பத்தைத் தூக்கிக்கொண்டு பறந்தான். அசுரர்கள், வாயு வேகத்தில் அவனைத் தொடர்ந்தார்கள். இருவருக்கும் இடையே பன்னிரண்டு நாட்கள் (அதாவது பன்னிரண்டு வருடங்கள்) இழுபறிப் போர் நடந்தது. அந்தச் சமயம் சந்திரன் கும்பத்திலிருந்து அமுதம் சிந்தாமல் தடுக்க முயற்சி செய்தான். சூரியன், கும்பம் உடைந்து விடக்கூடாதே என்று வருத்தப்பட்டான். பிரகஸ்பதி அசுரர்கள் அபகரித்துச் சென்றுவிடாமல் காப்பாற்ற முயன்றான். சனி பகவானோ, ஜயந்தன் ஒரே மிடறில் சாப்பிட்டுவிட்டால் என்ன செய்வதென்று கவலைப் பட்டான். இப்படி நால் வரும் கூடி முயன்றும் நான்கு இடங்களில் அமுதம் சிந்திவிட்டது. அதன் விளைவால் அந்த இடங்களின் புனிதம் பலமடங்கு உயர்ந்தது. அந்த இடங்கள்தான் ஹரித்வார், பிரயாகை, உஜ்ஜயினி, நாசிக் ஆகியவை.. அதனால் அங்குள்ள நதியில் குறிப்பிட்ட நாட்களில்  நீராடினால் புண்ணியம் என்று நமப்ப்படுகிறது


உலகிலேயே மிகப்பெரிய எண்ணிக்கையில் மக்கள் கூடும்  இந்த நிகழ்விற்கு உலகின் மிகப்பெரிய கலாச்சார மற்றும் சமய நிகழ்வு என்ற பெருமையை யுனெஸ்கோ அளித்திருக்கிறது.


ஓவ்வொரு கும்ம்மேளாவிற்கும் பாதுகாப்பு, மற்றும் சுகாதார ஏற்பாடுகளுக்காக மாநில அரசுதான் செலவிடும் என்றாலும், இந்த ஆண்டு யோகி ஆதித்தனார் அரசு  4300 கோடி பட்ஜெட்டில் திட்டங்களை உருவாக்கிக் கடந்த ஆண்டு முழுவதும் 1000 கணக்கான அதிகாரிகளுடன்  அதைச்செயலாற்றிக்கொண்டிருக்கின்றது புதுப்பிக்கப்பட்ட விமான நிலையம், 6 வழிச்சாலைகள் மேம்பாலங்கள் என்று அசத்திக்கொண்டிருக்கிறார்கள். நகரம் முழுக்க சாலைகள் விரிவுபடுத்தப் பட்டுள்ளன, மேம்பாலங்கள் கட்டப் பட்டுள்ளன. மேளா நடைபெறும் பகுதிக்குள் 300 கிலோ மீட்டர் நீளத்துக்குச் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. 50 லட்சத்துக்கும் மேற்பட்ட வாகனங்களை நிறுத்தும் வகையில் நகரம் முழுக்க பெரிய கார் நிறுத்தும் வளாகங்கள் அமைக்கப்பட்டிருக்கிறது.


கங்கையாற்றங்கரையில் 250 கி.மீ நீளம் கொண்ட ‘கும்ப்நகரி' என்ற தற்காலிக  பெரிய  கூடார நகரம் உருவாக்கப் பட்டுள்ளது.  பாதுகாப்பு தேவைகளைக் கையாள்வதற்கு 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவல் துறையினரும், துணை ராணுவத்தினரும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.. விழா நாட்களில்  நகரில் அசைவம் சாப்பிட  அனுமதியில்லாதால் . இவர்களுக்கும்  அனுதியில்லை 
•ஏழு வார காலத்திற்கு நடைபெறும் இந்த ஆண்டுக்கான விழாவில் 2 கோடி பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு செளதி அரேபியாவுக்கு வந்த ஹஜ் யாத்திரிகர்களின் எண்ணிக்கையைவிட இது அதிகம்.

இந்த கும்மமேளாவிற்காக  இமயமலைப்பகுதிகளிலிருந்து சாதுக்கள் பலர் கூட்டம் கூட்டமாக வருவார்கள். அவர்களில்  பல குழுக்கள். பிரிவுகள். அரை ஆடைஅணிந்தவர்கள்,, அதுவுமில்லாதவர்கள்  ஆயுதங்களுடன், வாதியங்களுடன்  இப்படி பலவகையான குழுக்கள். இவர்கள் கங்கைக்கரையிலேயே 50 நாளும் தங்கிவிடுவார்கள்.


இவர்கள் தங்க வசதியாக தனித்தனிக் கூடாரங்கள்,  அதில் மின் வசதி நீண்ட வரிசையில்  டாய்லெட்கள். சுத்தமான குடி நீர்  போன்ற எல்லா வசதிகளையும்  செய்திருக்கிறார்கள்.  இந்த சாதுகளுக்கும், மதம் சார்ந்த குழுவினர்களுக்கும்  அவர்களே உணவு தயாரித்துகொள்ள வசதிகள் செய்யப்பட்டிருக்கிறது.
இவர்களுக்காகவே  முகாமில் 160 நியவிலைக்கடைகள். இதில் மத முகாம்களுக்கு இலவசம். மற்ற பத்தர்களுக்கு நியாவிலையில்  அரிசி கோதுமை மாவு சர்க்கரை வழங்கப்படுகிறது. இதற்காகத் தற்காலிக ரேஷன் கார்ட்கள் தரப்பட்டிருக்கின்றன. இந்த ரேஷன் கடைகளுக்கான சப்ளைகளைத்தர உள்ளேயே ஒரு கோடவுனுமிருக்கிறது.


100க்குமேற்பட்ட மருத்துவர்களுடன் 10 சிறு மருத்தவ மனை  எக்ஸ்ரே எடுக்கும் வசதிகள், பல் மருத்துவர்கள்,  தவிர 80 ஆயுர்வேத மருத்துவர்களும் தயாராக யிருக்கின்றனர். இவர்களைத்தவிர 80 ஆம்புலன்ஸ்கள்   நதியையில் மிதக்கும் 9  ஆம்புலன்ஸ், ஒருவிமான ஆம்புலன்ஸ்  எல்லாம்  அவசரத்தேவைகளை  சமாளிக்கக் காத்திருக்கிறது..



இம்முறை உபி   முதல்வரின் நேரடிப் பார்வையில் விழா ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. மத்திய அமைச்சர்களும், பல விஐபிகளும் விழாவிற்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது..வி.ஐ.பிக்கள் ஹெலிகாப்டரில் வந்து செல்ல வசதியாக ஹெலிபேட் அமைக்கப்பட்டுள்ளது. நகரின் பல பகுதிகளில் உச்சகட்ட போலீஸ் பாதுகாப்பு..

வி.ஐ.பிக்கள், முக்கியப் பிரமுகர்கள், வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள்  தங்குவதற்கு வசதியாக 4,000 சொகுசு  கூடாரங்கள்  அமைக்கப்பட்டுள்ளன. 5 நட்சத்திர ஹோட்டல் அறைகளுக்கு இணையான வசதிகளுடன் இருக்கும் இந்தச் சொகுசு குடில்களில் தங்குவதற்கு ஒரு நாளைக்கு 15,000 ரூபாயில் இருந்து 24,000 ரூபாய் வரை கட்டணம் 

சுருக்கமாகச் சொல்வதானால் கும்மமேளாவிற்காக அலகபாத் நதிக்கரையில்  சகலவசதிகளுடன் ஒரு நகரையே நிர்மாணித்திருக்கிறார்கள்..


கும்பமேளா காலத்தில் திரிவேணி சங்கமத்தில் நீராடியவர்களுக்குப் புண்ணியம் சேருகிறதோ என்னவோ  அலஹபாத் நகரம்   இப்படி ஒரு புதிய பெயருடன் புதுப்பொலிவைப்பெற  நிச்சியமாகப் புண்ணியம் செய்திருக்கிறது

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்கள்