5/4/24


அக்பரின் தாயார் வாசித்த இராமாயணம்


மத்தியக் கிழக்கு நாடுகளில் ஒன்றான கத்தார் மிகப்பழமையானது. பாரம்பரிய இஸ்லாமியக் கலாசாரங்களைப்போற்றும் நாடு.

பல ஆண்டுகள் இங்கிலாந்து அரசால் பாதுகாக்கப்பட்ட ஒருநாடாயிருந்த இது 1971ல் சுதந்திரம் பெற்றது. இன்றும் மன்னர்

ஆட்சி முறையைத் தொடரும் இந்த நாடு கடந்த 20 ஆண்டுகளில் பிரமிக்கத்தக்க வளர்ச்சியை அடைந்திருக்கிறது. இதன் தலைநகரம் தோஹா.

அண்மைக்காலமாக உலகக் கால்பந்துப்போட்டி முதல் பலவிதமான சர்வதேச விளையாட்டுப் போட்டிகளை நடத்திக்கொண்டிருப்பதால்நகரில் நவீன பாணிக் கட்டிடங்கள்சர்வதேசஅரங்குகள்ஆடம்பர ஹோட்டல்கள் உருவாகியிருக்கின்றன,

நகரின் கடற்கரையில் அப்படி எழுந்திருக்கும் ஓர் அதிநவீனக்கட்டிடத்தில் தான் இயங்குகிறது மியூசியம் ஆஃப் இஸ்லாமிக்ஆர்ட் என்ற அருங்காட்சியகம்.


இஸ்லாமியப் பண்பாக்களின் முறைப்படி தோன்றி வளர்ந்த பலகலைகளின் காட்சியகமாயிருக்கும் இந்த அருங்காட்சியகத்திற்காகக்கத்தார் மன்னர் குடும்பத்தினர் உலகெங்குமிருக்கும் பண்டையஇஸ்லாமியக் கலைப்படைப்புகளை வாங்கிச் சேமிக்கிறார்கள்.இந்த அருங்காட்சியகத்திலிருக்கும் ஒரு காட்சிப் பொருள்அண்மையில் பேசு பொருளாகியிருக்கிறது. 

அது ஒரு ராமாயணக்காவியத்தின் பிரதி.

உலகின் பல நாடுகளின் அருங்காட்சியகங்களில் இராமாயணத்தின் பிரதிகளும் படங்களும் இருக்கின்றன. ஆனால் இந்தராமாயணத்தின் பிரதி வித்தியாசமானது. முகலாய அரசவையின்அரச குடும்பத்தினரும்பேரரசர் அக்பரின் தாயுமான ஹமிதாபானுபேகம் அவரது கைப்பட எழுதப்பட்ட ராமாயண உரையை வைத்திருந்தார். இது சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட வால்மீகிஇராமாயணத்திலிருந்து பாரசீகத்திற்கு மொழிபெயர்க்கப்பட்டது.

மன்னர் அக்பர் பெரிய இலக்கிய ரசிகர். உலகின் சிறந்த காவியங்கள்இலக்கியப் படைப்புகள் எல்லாம் பெர்ஷ்யன்மொழியில் மொழிபெயர்க்கப்பட வேண்டும் என்று விரும்பினார். இதற்காகவே அவரது அவையில் பன்மொழி வல்லுனர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர்.மன்னர் விரும்பியதின் பேரில் வியாசரின் மஹாபாரதமும்,வால்மீகியின் ராமாயணமும் பாரசீக மொழியில்   மொழிபெயர்க்கப்பட்டன. சம்ஸ்கிருதத்திலிருந்து முதலில் இந்தியிலும் பின்னர் பெர்ஷ்யமொழியிலும் மொழிபெயர்க்கப் பட்டிருக்கின்றன.மொழிபெயர்ப்புகளில் சில பெயர்கள் சிதைந்து மாறியிருக்கின்றன.

தசரதன் ஜெஸ்ரதன் ஆகியிருக்கிறார்.அகஸ்தியரை ஒரு நட்சத்திரமாகப் புரிந்து கொண்டு பெர்ஷ்ய மொழியில் உள்ள அந்த நட்சத்திரத்தின் பெயரையே அவருக்குச்  சூட்டியிருக்கிறார்கள். அசோகவனம் ராவணனின் அரண்மனையாகியிருக்கிறது.

பாரசீக மொழியில் அச்சிடும் வசதிகள் இல்லாத அக்காலகட்டத்தில் புத்தகங்கள்அழகான கையெழுத்துப் பிரதிகளாக உருவாக்கப்பட்டன. அழகான எழுத்துகளை எழுதுவது ஒரு கலையாகவே (calligraphy)  மன்னர் அக்பர் காலத்தில் போற்றப்பட்டது


.

அப்படி மன்னர் அக்பருக்காக அழகாகஉருவாக்கப்பட்ட புத்தகப் பிரதிகளில் அவர் அரசு முத்திரையிடப்படும். இதைப் பார்த்துமன்னரின் அனுமதியுடன் அரசவையில் இருந்தவர்களில் பலர் தங்கள் சொந்தப் பிரதிகளை உருவாக்கிக்கொள்வார்கள்.

ஆனால் பேரரசர் ஹூமாயூனின் மனைவியும் மன்னர் அக்பரின் தாயாருமான அரசி ஹமீதாபானு இப்படிப் பிரதி எடுக்கச் சொல்லாமல் அவருடைய இராமாயணப் பிரதியை அவரே கைப்படப் பாரசீக மொழியில் எழுதியிருக்கிறார்.

அவரது ராமாயணத்தின் பிரதி முதலில் 56 பெரிய விளக்கப்படங்களுடன் 450 பக்கங்களைக் கொண்டது. புத்தகம் மென்மையான தங்கஉருவங்கள் மற்றும் மலர்களுடன் திறக்கிறது. காதா மற்றும் ஸ்லோகா என்ற சமஸ்கிருத வார்த்தைகளுடன் அத்தியாயங்கள் குறிக்கப் பட்டிருக்கின்றன.

அரசியின் ஆலோசனைப்படி பாடல் வரிகளுக்கான படங்கள் லாகூரில் உள்ள ஒரு சிறிய ஓவியக் கலைஞர்களின் குழுவால் உருவாக்கப்பட்டன என்கிறது குறிப்பு.. இந்தப் புத்தகப் பொக்கிஷம் தான் இப்போது தோஹா அருங்காட்சியகத்திலிருக்கிறது.

இந்த நூல் தோஹா அருங்காட்சியகத்தை அடைவதற்கு முன் நீண்ட பல பயணங்களைச் சந்தித்திருக்கிறது 1604 ஆம் ஆண்டில் ஹமிதா பானோ மறைந்த பின்னர் அரச குடும்பம் நூலை மத்திய முகலாய நூலகத்திற்கு மாற்றியதுபின்னர் அங்கிருந்து காணாமல் போய் பலருக்கு விற்கப்பட்டிருக்கிறது .

இந்தப் பயணத்தில் புத்தகம் நீரினாலும், பூச்சிகளினாலும் சேதமடைந்திருக்கிறதுசிலபக்கங்கள் காணாமல் போயிருக்கின்றன.புத்தகத்தின் அட்டைகளின் விளிம்புகள் கிழியத் தொடங்கியிருந்தன.


ஆனாலும் 2000 ஆம் ஆண்டு கத்தார்அரசர் ஷேக் சவுத் அல் தானி பெரும் விலை கொடுத்து இந்தப் பொக்கிஷத்தை வாங்கி நூலகத்தில் சேர்த்திருக்கிறார். காணாமல் போன பக்கங்களிலிருக்கும் பெரும்பாலான படங்களை மீண்டும் உருவாக்கிப் புத்தகத்தில் சேர்த்திருக்கிறார்..1990கள் வரை இந்த ராமாயணம் பற்றிஎ வருக்கும் தெரியாதிருந்த நிலையில் இன்று தோஹா ராமாயணம் என்று உலகெங்குமிருக்கும்ஆர்வலர்களால் பேசப்படுகிறது

இந்தப் புத்தகம் மொகலாயர்களுக்கு இராமாயணத்தில் எவ்வளவு ஆர்வமிருந்தது?     ன்பதையும் அதை எப்படி போற்றியிருக்கிறார்கள்? என்பதையும் மட்டுமல்ல இன்றைய அரபு நாட்டு மன்னர் பரம்பரையினர் அதை எப்படித் தொடர்கிறார்கள் என்பதையும் சொல்கிறது.

அமுத சுரபி 2024 ஏப்ரல் இதழில் எழுதியது 

 




 


1 கருத்து :

  1. இதுவரை தெரியாத கருத்து. தோஹா செல்லும்போது இந்த நூலைப் பார்க்க முடியுமா என்று முயற்சிக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்கள்