கங்கைக்கரை ரக்சியங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கங்கைக்கரை ரக்சியங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

10/2/14

கங்கை கரை ரகசியங்கள் ...5


புதிதாக பிறக்கும்ஒவ்வொரு நாள் காலையிலும் புத்துணர்ச்சியும் சக்தியும்  தரும் எம். எஸ் அவர்களின் கணீர் குரலில் ஒலிக்கும் சுப்ர பாதத்தில் வரும்  ”வாரணாஸீ குலபதே மம சுப்ரபாதம் “ என்ற  வார்த்தைகள் நினைவிருக்கிறதா?   இந்த வாரணாஸீ  என்பது தான் பிறை வடிவில் கங்கை
வளைந்து ஒடும் , இப்போது படித்துறைகளால் நிரம்பிக்கிடக்கும் கங்கையின் கரைப்பகுதி  ஏன்  இங்கு மட்டும் இவ்வளவு படித்துறைகள்?  என்ற நமது கேள்விக்கு  இதற்கு காசி நகரின் அமைப்பை புரிந்துகொள்ள வேண்டும் என்று பதில் சொல்லபட்டிருந்தது.
பல கோவில்களை உள்ளடக்கிய வட்டவடிவமாக ஒரு சக்தி இயந்திரமாக உருவாக்கபட்டிருப்பது காசி நகரம்.  மூன்று முக்கிய சிவன்கோவில்கள் ஒரு நேர்கோட்டிலும் சக்தி வளையமாக நிறுவபட்ட மற்ற கோவில்ககளை இணைக்கும் ஆரமாக சிறிய கல்பாவிய நடைபாதைகள். அமைக்க பட்டிருந்திருக்கிறது. ஒரு கால கட்டத்தில் இந்த வாளாகத்திலிருந்த 468 கோவில்களிலும் ஒரே நேரத்தில் சப்தரிஷி பூஜைகள் நடந்திருக்கின்றன. கங்கைநதி  காசிநகருக்கு வெளியே   ஒரு வட்டத்தின் பரிதியைப்போல சற்றே வளைந்து ஒடுகிறது   கங்கையில்  நீராடியபின் எளிதாக பக்தர்கள் விரும்பும் கோவில்களுக்கு நேரடியாக போய் வழிபடும் வகையில் இந்த படித்துறைகள். அமைக்கபட்டிருக்கின. இன்றும்  எந்த படித்துறையிலிருந்து நேராக நடந்தாலும் ஒரு கோவிலுக்கு போகும் பாதை வருகிறது.  இன்று சிறு சந்துகளாகிவிட்ட அந்த பாதைகள் தான் சக்தி வளையத்தின் ஆரங்கள்..   கோவில்களில் பூஜிப்பவர்களை தவிர மற்றவர்கள் வசிக்க அனுமதியில்லாத.  அந்தபுனிதமான பாதைகள் தான் காலசக்கர சுழற்சியில் பலரின் வாழ்விடமாகவும், அவர்களின் வாழ்வாதரத்திற்கான வியாபாரஸ்தல்மாகவும் நிறைந்து ”கல்லி” களாகியிருக்கின்றன.  இந்த செய்தியை அறிந்ததும் காசியின் குறுகிய சந்துகளின்  புனிதமான அகலமும்  அதை  நாசமாக்கிய நம்மவர்களின் குறுகிய மனமும் புரிந்தது.   


பயண குழுவிலிருந்த ஒரு நண்பர் தான் கங்கையில் குளிக்க ஒரு நல்ல இடத்தை கண்டுபிடித்திருப்பதாகவும் விரும்புகிறவர்களை அழைத்து போவதாகவும் சொன்னார்.   200 பேர் கொண்ட ஈஷாவின்  இந்த பயணத்தில் இரண்டாம் நாளே புதிய நட்பு வட்டங்கள் சிறு குழுக்களாக உருவாகியிருந்தது.வெளிநாட்டவர்கள்,பிறமாநிலத்தவர் என்று பலரை இந்த பயணம் இணைக்கிறது அதனால் எங்குபோனாலும் ஒரு சின்ன டீம்தான்.  காலை உணவு முடிந்ததும் கங்கைக்கு போகும் ஒரு குழுவுடன் போகிறோம். காசியில்  இயங்கும் சைக்கிள் ரிக்‌ஷா  சிஸ்டம் மிக பிரமாதமாக இருக்கிறது.. பஸ்களில் வரும் பெரிய பயணகுழுக்களுக்கு  தேவையான அதிக ரிக்‌ஷாகளை ஏற்பாடு செய்ய ஒரு குருப் லீடர். நிர்ணயக்கபட்ட கட்டணத்தை அவரிடம் மொத்தமாக செலுத்த வேண்டும். அவர் விசில் கொடுத்தால் தெருவில் போகும் காலி ரிக்‌ஷாக்கள் அணிவகுத்து வந்து நிற்கிறது. ஒரே எண் எழுதிய இரண்டு சீட்டு நம்மிடம் தருகிறார்கள். இறங்கும் இடத்தில் அதில் ஒன்றை கொடுத்தால் போதும்.  பேரம் பணம் எதுமில்லை.. திரும்பும் பயணத்திற்கு நம்மிடமுள்ள அடுத்த சீட்டை பயன்படுத்திகொள்ள வேண்டும். எந்த ரிக்‌ஷாவிலும் பயணிக்கலாம்.
அந்த ரிக்‌ஷாகாரர் இதுபோல் சேரும் சீட்டுகளை மாலையில் கொடுத்து பணம் வாங்கிகொள்கிறார் இந்த பீரிபெய்ட் முறையினால்  மொழிப்பிரச்னை, கட்டணபேரம், சரியான இடத்துக்குதான் போகிறோமா என்ற பயம் என்பதெல்லாம் இல்லை 
கங்கையின் நடுவில் சில இடங்களில் மண்மேடிட்டு திட்டுகள் உருவாகியிருக்கிறது.  காலை 10-11 மணிக்கு அங்கு நீரின் மட்டம் சற்று குறைந்திருக்கிறது, படகுகாரர் அப்படி ஒரிடத்திற்கு நம்மை அழைத்து செல்லுகிறார். தெளிவான கங்கை, அதிக ஆழாமில்லாமல் காலடியில் மணல்.ஆனந்தமான குளியல்.நதிக்குளியல் சுகமான இதமான அனுபவம், எத்தனையோ நதிகளில் குளித்திருந்தாலும் கங்கை குளியல் சர்வ நிச்சியமாக சிலிர்ப்பை கொடுக்கும் விஷயம். கங்கைத்தாய் அனபுடன் தன் மெல்லிய அலைகளால் தொடர்ந்து நிராடச்சொல்லி அழைத்தாலும் படகுக்காரின் அழைப்பு முக்கியமாக பட்டது. நடுகங்கையில் நம்மை விட்டுவிட்டு அவர் போய்விட்டால் நம் கதி என்ன ஆவது?  மெல்ல படகில் கரை திரும்பும் போது கண்ணில் பட்ட  சிவப்பு வெள்ளை  வண்ணகளில் பட்டையிட்ட கோவில் சுவர்களுடனும் தமிழகபாணி கோபுர முகப்புகளுடன் ஒரு படித்துறை. அது கேதார் படித்துறை என்றும் உள்ளே ஜோதிர் லிங்கமான ராமேஸ்வரத்தின் ராமநாதஸ்வாமி   என்றும் அதற்கு போனால் ராமேஸ்வரம் போக வேண்டாம் என்றும் படகுகாரர் சொன்னார். அதன் அருகில் படகை நிறுத்த சொல்லி இறங்குகிறோம்.

நிறைய படிகளுடன் மிக உயரத்தில் இருக்கும் அதன் முன்னே ஒரு சின்ன குளம் கட்டியிருக்கிறார்கள். கண்ணெதிரே, கால் அடியில் கங்கை இருக்க எதற்கு குளம்? ராமேஸ்வரம் இல்லையா தீர்த்த குண்டம் அமைத்திருக்கிறார்கள். கோவில் வெளிப்புற சுவர் முழுவதும் சலவைகற்களில் தமிழ் பாடல்கள் யார் எழுதியது என்றவிபரம் இல்லை. சிலபுரியவும் இல்லை. பழுப்பேறி, மங்கிய அதன் வண்ணம்  வயதை சொல்லியது. உள்ளே கோவில் முகப்புக்கு துளியும் சம்பந்தமிலாமல் வடநாட்டு கோவிலின் சாயலில் பளபளப்பான தரை. மற்ற கோவில்களைபோல கூட்டம் இல்லாதால் அர்ச்சகரும் இல்லை. தரிசித்தபின்னர் படித்துறையிலிருந்து காசிநகர வீதிக்கு வருகிறோம்  மூன்று நாட்களில் நகர வீதிகள் பழகிபோயிருந்தன.  ஷாப்பிங், மற்ற கோவில்களைப் பார்க்க என குழு பிரிகிறது. ”நல்ல தமிழ் நாட்டு சாப்பாடு சாப்பிட வருகிரீர்களா? என ஒரு நண்பர் கேட்டவுடன் நதியில் குளித்திருந்தனால் வாயை திறப்பதற்கு முன்னதாகவே வயிறு ”ஓ யெஸ்” என்று  பதில் சொல்லியது. சிலர் உலகின் எந்த முலையிலும் நம் சாப்பாடு எங்கே கிடைக்கும் என்பதை கண்டு பிடித்துவிடுவார்கள்  சைக்கிள் ரிக்‌ஷாவில் ஏறியதும் ”நாட்கோட் சட்டர்” என்றார். ஏதோ குஜராத்தி ரெஸ்டோரண்ட் என நினைத்த நமக்கு ஆச்சரியம் காத்திருந்தது. நண்பர் அழைத்து சென்றது  காசி நாட்டுகோட்டை நகரத்தார் சத்திரத்திற்கு.  காசியின் எல்லா பிரதான இடங்களைபோல்  நடந்து மட்டுமே போகக்கூடிய ஒரு சிறிய சந்தில்
செட்டிநாட்டு பாணி வீட்டின் முகப்புடன் இருக்கும் இந்த சத்திரம் காசிக்கு வரும் பயணிகளுக்கு உதவுவதற்காகவே 1863ல் உருவாக்க பட்ட  ஒரு அறக்கட்டளை. என்பதை  அன்றைய தமிழிலில் தெரிவிக்கும் கல்வெட்டு. வரவேற்கிறது. மிக அழகாக நிர்வகிக்கிறார்கள். சுத்தமான அறைகள் 100க்கு மேல் இருக்கிறது, கட்டணம் நம்ம முடியாத ஒர் அதிசயம். நிறைய பணியாட்கள். சாப்பாடும் அதை போடுவர்களின் அன்பான சேவையும் அன் லிமிட்டெட்,  விலை? நம்ம ஊரில் ஹோடல்களின் இரண்டு காபியை விட குறைவு!  காலையில் 8 மணிக்குள் கூப்பன் வாங்கிவிட வேண்டும்.  அங்கு தங்கியிருப்பவர் நமக்காக வாங்கிவைத்திருந்தார்.
சுத்தமான அறைகள். நவீன கிச்சன், லிப்ட் என சுற்றி காட்டிய  மனேஜர் குழுவாக வருபவர்கள் மண்டபத்தில் தங்கினால் இலவசம் படுக்க ஜமுக்காளம் தலயணை தருகிறோம். என்று சொல்லி ஆச்சரியத்தில் ஆழத்தினார். எவரும் வரலாம். சிபார்சு கடிதம் எல்லாம் வேண்டாம் முன்பதிவு செய்தால் எமாற்றத்தை  தவிர்க்கலாம். இதைப்போல வசதி கயா, அலகாபாத் அயோத்தியா, நாஸிக்  நகரங்களிலும் இருக்கிறதாம். கல்கியில் எழுதுங்கள் என்றார். எழுதிவிட்டோம்.  
மகா கவி பாரதியார் காசியில் சில காலம் வாழந்திருக்கிறார். அவர் வாழ்ந்த இடத்தில்   ஒரு சிலை இருப்பதை பற்றி படித்திருப்பதால் அது எங்கே இருக்கிறது? என்று கடந்த இரண்டுநாட்களாக விசாரித்துகொண்டிருந்த நாம் அதை இவர்களிடமும் கேட்க, சந்துகளின் வழியே எளிதாக  அங்கே போக ஒரு டெக்னிக்கைச்சொன்னார்கள்.. சந்துகளில் தரையில் பாவியிருக்கும் கற்கள் ஒரேமாதிரி டிசையினில் இருக்கிறதா? எனறு கவனித்து கொள்ளுங்கள். திருப்பங்கள் இருந்தாலும் டிசைன் ஒரே மாதிரியா இருந்தால் நீங்கள் திசை மாறாமல் போகிறீர்கள் என்று அர்த்தம். வழியை தவறவிட வாய்ப்பில்லை. என்றார். சூப்பர் டெக்னிக், இதையும் காசியின் பெருமையாக அரசின் டூரிஸம் விளம்பரபடுத்தலாம்.  அதிகம் பேர் அறியாத அந்த சிலை இருக்கும் இடத்தை அடைந்த நமக்கு அதிர்ச்சி.
ஒரு தெருவின் துவக்கத்தில் நன்கொடையாக பெறபட்ட மனையில் சிலையை நிறுவி அதற்கு காம்பெண்ட் சுவரும் கதவும் இட்டிருக்கிறார்கள். ஆனால் அதன் எதிரே பகலில் லஸ்ஸியும் இரவில் பாலும் விற்கும் ஒரு நடைபாதை கடைகாரர் தன் பாத்திரங்களை கழுவி கவுத்தும் இடமாக பயன்படுத்திக்கொண்டிருக்கிறார்.  அசலான ஆக்ரமிப்பு.  ”நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்”  என்று புலம்பவதை தவிர வேறு வழியில்லை நமக்கு. 
காசிநகரின் வீதிகளில் நடந்து கொண்டிருக்கிறோம். பல்லாயிரம் ஆண்டுகள் பழைமையான இந்த நகரில் தான் எத்தனை விதமான சக்திகளின் வெளிப்பாடு?  உலகிற்கு பூஜ்யத்தின் மகிமையை சொன்ன ஆர்யபட்டாவிலிருந்து  எல்லாம் இந்த நகரில் பிறந்தவை. ஆயுர்வேதம் காசியில் எழுதப்பட்டிருக்கிறது. யோக அறிவியலின் தந்தையான பதஞ்சலி முனிவர் யோக சூத்திரத்தை இங்கிருந்தான் படைத்திருக்கிறார். துளசிதாசரின் ராம சரிதம் மானஸம் உருவானதும் இங்கே தான். நம் தலமுறையில் அறிந்த இசை மேதைகளான சித்தார் பண்டிட் ரவிசங்கர், ஹிந்துஸ்தானி இசை மேதை உஸ்ஸாத் பிஸ்மிலாகான் ஆகியோர்களை தந்ததும் இந்த புண்ணிய நகர் தான். இப்படி இசை, கலை, அறிவியல் போன்ற பல விஷயங்களை தந்த இந்த நகரில் நாம் இன்று நாமும் நடந்துகொண்டிருக்கிறோம்  என்ற எண்ணமே நம்மை பெருமை கொள்ளசெய்கிறது. சுவாமி விவேகானந்தர் சொன்னது போல எந்த ஒரு இந்தியனும் தனியே நடப்பதில்லை. ஐந்தாயிரம் ஆண்டுப் பாரம்பரியமும் கலாசாரமும் விழுமியமும் இந்தியாவின் பொக்கிஷமாக அவ்னோடு கூட நடக்கின்றன.
தெருக்களின் சந்திப்பில் ஒரு லஸ்ஸி கடை என்பது பார்த்ததும் தெரிகிறது. போர்டு வித்தியாசமான மொழியில் இருப்பதை பார்த்து கேட்டபோது அது கொரியன் மொழி.  எனக்குஅந்த மொழி தெரியாது. வந்த சாப்பிட்ட ஒரு கொரியாகாரர் எழுதி கொடுத்தது. அதனால் நிறைய கொரியர்கள் அங்கே வருகிறார்கள் என்று அவர்களுக்காக தயாரிக்க பட்ட மெனுகார்டையே காட்டுகிறார். இங்கு கொரியர்கள்மட்டுமில்லை,  சீனர்கள் ஜப்பானியர், தாய்லாந்தினர், மியாமரினர் எல்லோரையும் காசியில் பார்க்கலாம். புத்த மதத்தினருக்கும் காசிக்கும் என்ன சம்பந்தம் என்று தோன்றுகிறதல்லவா? ரம்மியமான இந்த கங்கைக்கரை சொல்லும் பல ரகசியங்களில்  சித்தார்த்தனை புத்தனாக்க வழிகாட்டியதும் ஒன்று. அவன் தன் போதனைகளைத் துவக்கி, வாழ்ந்த அருகிலிருக்கும் புத்த தேசத்திற்கு நாளை போகப்போகிறோம்



சத்குரு எல்லா நதிகளும்  நாம் வழிபடவேண்டிய புனிதமானவைகள்தானே? அப்படியானால் கங்கை மட்டும் எந்தவகையில் உயர்ந்தது?

இப்போ நீங்க ஒரு கிளாஸ்லே தண்ணீர் எடுத்து  என் கையில் தந்தால் ஒரு நிமிஷத்தில் அதனுடைய அதிர்வை மாத்தி கொடுத்திடுவேன், நீங்க அதை ஆன்மிக பலம் அப்படின்னு சொல்லிடுவிங்க.  ஆனா இதையெல்லாம் இப்போ  விஞ்ஞான பூர்வமாக நீருபித்திருக்கிறார்கள். நீரில் பாசிட்டிவ், நெகட்டிவ் எனஜர்ஜிக்களை பாய்ச்சலாம்., சதா தண்ணீரை ஹெவி வாட்டராக மாற்றமுடியும் என்கிறது இன்றைய விஞ்ஞானம். பல ஆயிரம் வருடங்களுக்கு முன்னரே நம்ம ஆட்கள் நமக்கு இதை சொல்லிட்டு போயிருக்காங்க. உங்கள் பாட்டி, அம்மா சொல்லியிருப்பாங்களே. தாமிரப் பாத்திரத்தில் வைத்த தண்ணியை  மறுநாள் குடித்தால் சக்தி என்று. சாதாரண தண்ணிரை  தீர்த்தமாக மாற்றும் ஆன்மீக ரசாயனம் இயற்கையாகவே அமைந்த ஒன்று. இந்த கங்கை ஹிமாலய பர்வதத்திலிருந்து ஒடிவருது. வரும்போது  அதன் வழியில் சேர்த்துகொள்ளும் சக்தி அதிர்வு எல்லாம் இந்த இடத்தில் அதிகமாக இருக்கிறது. அந்த உணர்வு நமக்கு அதில் குளிக்கும்போது முக்தியை நோக்கி தள்ளுதுன்னு முன்னாடி சொன்னாங்க. இப்போ விஞ்ஞான பூர்வ்மாக ஒரு இம்பாக்ட் இருக்குன்னு சொல்லுறாங்க. முக்தியோ இல்லையோ நிச்சியமாக நமக்கு நன்மை செய்யும் ஒரு சக்தி.   ஒரு நதியில் இயற்கையின்  சக்தி அதிர்வுகள் இணைந்தால் தான் அது தீர்த்தம். இப்போது ஒரு குளத்தை கட்டி அதை தீர்த்தம் என்கிறார்கள் அதுவியபாரம்.

காசி கங்கை கரையில் வசதியாக நிம்மதியாக குளிக்க ஈஷா எதாவது செய்ய முடியாதா?
நாம் எல்லோரும் சுத்தமாக இருக்கவேண்டும் என விருபுகிறோம். ஆனால் அதை யாராவது செய்துவைக்க வேண்டும் என நினைக்கிறோம் அதுதான் பிரச்னையே. மாசற்ற சுழலை உருவாக்க ஈஷாவின் முயற்சிகளை அறிந்திருப்பீர்கள். அதன் ஒரு பகுதியாக காசியிலும் ஒரு தீர்த்தகட்டத்தை தேர்ந்தெத்து ”நிர்மல் கங்காவாக” பராமரிக்க திட்டமிட்டிருக்கிறோம். இதற்கு  உள்ளூர் நிர்வாகம், அரசாங்கம், அங்குள்ள கடைக்கார்கள் அரசியல்வாதிகள் என பலரின்  ஆதரவு அதிகம் தேவையாக இருக்கிறது. முயற்சிகளை துவக்கியிருக்கிறோம். இன்னும் சில ஆண்டுகளுக்கு பின் நீங்கள் வந்து நீராடலாம். 




19/1/14

கங்கைக் கரை ரகசியங்கள் 2


காசி நகரம் இந்த பிரபஞ்சத்துக்கே ஒரு பக்தியை,,பக்தி அதிர்வுகளை உருவாக்கிற, மனிதர்களில் ஆன்மீக நாட்டம் கொண்டவர்களுக்கு மனதுக்கு நெருக்கமான ஒரு புனித ஸ்தலம். சிவபெருமானே தான் வாழ வடிவமைத்துகொண்ட நகரம். இங்கு ஆம்கார் ஈஸ்வர், விஸ்வநாதர், கேதர் ஈஸ்வர் மிக முக்கியமான கோவில்கள்.. இதனுடன் ஐம்பத்தாறு விநாயகர் கோவில்கள், எட்டு திசைகளில் ஏழு அடுக்குகளில் அமைந்துள்ளன. இவை மட்டுமின்றி, அறுபத்துநான்கு யோகினி கோவில்கள், நவதுர்கா கோயில்கள், பத்து சண்டி கோவில்கள் மற்றும் பன்னிரெண்டு ஆதித்ய கோவில்கள் சேர்ந்து நானூற்றி அறுபத்தெட்டு கோவில்கள் இங்கு உள்ளன. இந்த பன்னிரெண்டு ஆதித்ய கோவில்கள் சூரியன் தக்ஷிணாயத்திலிருந்து உத்தராயணத்திற்கு பயணமாகும் பாதையை ஒத்து அமைந்துள்ளது.  இதைத் தவிர் 12 ஜோதிலிங்கங்களும் ஒருசேர அமைந்த ராமேஸ்வரம் கோவில்.  இந்தியாவில் மட்டுமில்லை, உலகின் எந்த நகரத்திலும் இவ்வுளவு கோவில்களோ வழிபாட்டுதலுங்களோ கிடையாது.  எல்லா கோவில்களிலும் சரியான நேரங்களில் தரிசனம் செய்ய வேண்டுமானால் நாம் காசியில் குறைந்தது ஒரு மாதம் தங்க வேண்டும். அப்படி செய்பவர்களும் சிலர் இருக்கிறார்கள்.  ஆனால் நமது குறுகிய கால பயணத்தில் முக்கியமாக நாம் பார்த்து தரிசிக்க வேண்டிய கோவில்களை சத்குருவின் வழிகாட்டுதலின் படி குழு தலவர்கள் அழைத்து செல்லுகிறார்கள்





காசிகோவில்களின் நகரமாக இருந்தாலும், முக்திக்கான நுழைவாயிலாக மதிக்கபட்டாலும். கோவில்களுக்கு செல்ல நல்ல பாதைகள் கிடையாது. எல்லாகோவில்களுமே  எதாவது ஒரு குறுகிய சந்தில் தான் அமைந்திருக்கிறது. அதிகபட்சம் 5 அல்லது 6 அடி அகலமுள்ள அந்த கல்பாவிய குறுகிய தெருக்களில் சதாரணமாகவே எளிதாக நடக்க முடியாது. பசுமாடு, சைக்கிள், மோட்டார்சைக்கிள், ஸ்கூட்டர், என்று எதாவது ஒன்று உங்களை முன்புறமோ அல்லது பின்புறமோ இடித்துகொண்டே இருக்கிறது. சிரமபட்டு அவைகளை தவிர்த்தாலும் கூட அந்த குறுகியதெருவின்  இருபுறமும் இருக்கும் கடைகளில் பிஸியாக வியாபாரம் செய்துகொண்டிருப்பவர்களை இடித்துகொண்டுதான்  நாம் நகர முடியும். பகல் நேரத்தில் இருக்கும் இந்த பிரச்னையை தவிர்ப்பதற்காக மட்டுமில்லாமல். காலையில்  3 மணிக்கு  துவங்கும் மங்கள் ஆர்த்தி மிக விசேஷமானது என்பதால் அதை தரிசிக்க திட்டமிட்டு  அந்த அதிகாலை நேரத்தில் நம் குழுவினருடன் சென்றுகொண்டிருக்கிறாம். அந்த குறுகிய சந்துகளில் இப்போது பிரச்னை மாடுகள் இல்லை. அவைவிட்டுபோன எச்சங்களும்  இருட்டும். அந்த வீதிகளில் தெருவிளக்குகள் கிடையாது. கடைகளின் விளக்குகள் மட்டும் தான் தெருவிற்கு வெளிச்சம். அவைகள் மூடபட்டிருப்பதால் ஒரே இருட்டு. . மிக கவனமாக அந்த இருட்டில் அசுத்தங்களை மிதிக்காமல் வழுக்கிவிழாமல் நடக்க பழகி ஒரு வழியாக கோவிலின் முகப்பை அடைகிறோம்.  செருப்புகளை வைக்ககூட வசதி இல்லையே தவிர செக்கியூரிட்டி கெடிபிடிகள்  உண்டு. கதவை திறந்தவுடன் உள்ளே நுழையும்போது நாம்தான் முதலாவாதாக இருப்போம் என நினைத்து ஏமாறுகிறோம்.  அனுமதி நேரத்திற்கு முன்னரே நுழைந்திருந்த விஐபிகள் நூறு பேர். அங்கிருந்தார்கள்.
வெண்சலவைக்கல் விரிந்திருக்கும் ஓரு பறந்த முற்றத்தின் நடுவே  நான்கு புறமும் வாயில்கள் கொண்டஒரு மண்டபம்.அதுதான் சன்னதி. நடுவே தரையின் ஒருபுறத்தில் தரையிலேயே மூர்த்தீ. சுற்றி நான்குபுறமும் பூஜைசெய்யும் அர்ச்சர்கள்.அவர்கள்தங்கள் உடலாலும்,பூஜைப்பொருட்களாலும் நுழைவாயிலை மறைத்துக்கொண்டிருப்பதாலும் அதற்கு வெளியே மக்கள் நெருக்கியடித்துக்கொண்டு நிற்பதாலும் நமக்கு  சன்னதி ஸ்வாமி எதுவும் தெரியவில்லை. அனேகமாக இந்தியாவின் எல்லா மாநில முகங்களை பார்க்கமுடிந்த அந்த கூட்டத்தில் அதில் தெரிந்த எமாற்றத்தையும் உணரமுடிந்தது. நன்றாக பார்ப்பதற்கு எதாவது  எற்பாடு செய்யதிருக்கலாமே என்று ஆதங்கப்பட்டு அவரவர் மொழிகளில் முணு முணுப்பது புரிகிறது, ஆனால் மந்திரங்களுடனும் வேதகோஷத்துடனும் காட்டப்படும் ஆரத்தியின் உச்சகட்டத்தில் எழும் கோஷத்தில்  எல்லாம் கரைந்துபோகிறது அபிஷேகம் ஆர்த்திமுடிந்தபின் சந்நதியின் ஒரு வாயில் வழியே நம்மை  அனுமதிக்கிறார்கள். அருகில் சென்று பார்க்கிறோம். வெள்ளியிலான நாக கவசம் அணிவிக்கப்பட்டு, பளீரென்று சிவப்பு மஞ்சள் மலர்களில் அலங்கரிக்கப்பட்டிருக்கிறார் விஸ்வநாதர்.  சில நிமிடங்களில் மலர் அலங்காரங்கள் களையப்படுகிறது ,  நாம் பூஜிக்க அனுமதிக்கபடுகிறோம்
. தரையோடு தரையாக இருக்கும்  அந்த மூலவரை மண்டியிட்டு வணங்கி  பேப்பர் டம்பளரில் அவ்வளவு நேரம் பத்திரமாக வைத்திருந்த பாலை ஊற்றி அபிஷகம் செய்கிறோம். அந்த மூர்த்தியை தொட அனுமதிக்கிறார்கள்.  அந்த ஒரு வினாடி ஸ்பரிசம் மனதில் தீயாக பரவுகிறது. நமக்கு மெய்சிலிர்க்கிறது. தரிசனத்திற்குபின்னர் வெளியே வந்த நாம்   ஒரு மகத்தான காரியம் செய்து விட்டதைபோல உணர்கிறோம் இம்மாதிரி தான் பெற்ற அனுபவத்தை எழுதியிருக்கும் மரபின் முத்தையா வின் கவிதை நினைவில் வந்து போயிற்று.
வினாடி நேரம் விரல் பிடித்த விஸ்வநாதம்
என் வினைகளெல்லாம் அவன் மடியில் விழுந்த நேரம்
கனாவில் அவன் முகம் குழாவுவும் தினம் தினம்
வினா மலர்ந்த நேரம் அவன் விடைகள் சாஸ்வதம்
 அந்த பிரம்ம மூஹூர்த்த நேரத்தில்  சன்னதிக்கு வெளியே மண்டபத்தில் அமர்ந்து குழுவினர் தியானிக்கின்றனர். இந்த கோவிலின் வளாகத்தில் தேவிக்கு சன்னதி இல்லை. சற்று அருகில் உலகிற்கே உணவிடும் அன்னபூர்ணியின் தனிக் கோவில் இருக்கிறது. இங்கு தினசரி  தேவிக்கு நைவேத்தியம் முடிந்த பின் 100 ஏழைக்களுக்கு உணவு வழங்கும் அறகட்டளை நிறுவி கடந்த 100 ஆண்டுகளாக நடத்திகொண்டிருப்பவர்கள் தமிழ் நாட்டு நகரத்தார் சமூகத்தினர். நுழைவாயிலில் இந்த விவரத்தை தமிழ் எழுத்துகளில் சொல்லும்  கல்வெட்டு நம்மை சந்தோஷபடுத்துகிறது.
கோவிலை விட்டு வெளியே வந்து மெல்ல விழிக்க துவங்கியிருக்கும் காசிநகர வீதியில் சூடான  சுவையான டீ சிறிய மண் கப்புகளில்
தருகிறார்கள். ஆஹா! பிளாஸ்டிக், பேப்பர் குப்பையில்லை என நினைத்துகொண்டிருக்குபோதே டி குடித்தவர்கள் அந்த கப்பை தரையில் எறிந்து உடைத்துபோட்டிருக்கும் குட்டி மலை கண்னை உறுத்துகிறது.   நடந்து பஸ்களுக்கு செல்லுகிறோம், குழுக்கள் பிரிந்து போகாதிருக்க ஒவ்வொரு பஸ் குழுவிற்கு ஒரு வண்ண கொடி. அந்த குழுவின் தலைவர் கொடியோடு முன்னே நடக்க நாம்  பின் தொடர வேண்டும்.
ஆரஞ்சு. சிவப்பு பச்சை நீல, என பல வண்ணங்களில் கொடிகள் ஏந்தி காலை நேரத்தில் அனிவகுக்கும் இவர்கள்  எந்த கூட்டணி? தேர்தல் இன்னும் வரவில்லையே   என்று பார்ப்பவர்கள் நினைத்திருக்கலாம். அந்த அளவிற்கு அழகான ஊர்வலம்.  இன்று காலை உணவிற்கு பின் மாலை வரை நீங்கள் காசிநகரில் விரும்புவதை பார்க்கலாம் என்று அறிவித்திருப்பதால் எதைப்போய்  பார்க்கலாம் என யோசித்து கொண்டே பஸ்ஸில்  ஏறுகிறோம்.




மிகவும் சக்தி வாய்ந்த்தாக சொல்லுப்படும் காசி விஸ்வநாதர் ஒரு லிங்கத்தின் வடிவத்தில் இருப்பதாக தெரியவில்லையே.? மிகசிறியதாக தோன்றுகிறதே?
ஒரு அழகான கம்பீரமான லிங்க வடிவத்தை மனதில் நினைத்து வந்ததினால் ஏமாற்றம் ஏன்? அதிர்ச்சி கூட அடைந்திருப்பீர்கள். உருவம் பெறாத சக்தி ஒரு உருவத்தைப்பெறும்போது அதன் முதல் வடிவம் லிங்க வடிவமாக இருக்கிறது. லிங்கம் என்ற சொல்லுக்கு வடிவம் எனறு பொருள். இந்த இடத்தை விட்டு செல்லவே மாட்டேன் என்று சிவன் வாக்களித்து உருவாக்கிய இடம் காசி. நகரத்தின் வடிவமைப்பே நம்மை பிரபஞ்சத்துடன் இணைக்க ஒரு தொடர்பு ஏற்படுத்தும் வகையில அமைக்கபட்டிருக்கிறது.  நம் உடலில் இருக்கும் 108 சக்கரங்களுக்கு ஏற்றார்போல் 54 சிவன் கோயிலும் 54 சக்தி கோயிலும் இருக்கிறது காசியின் வடிவமைப்பை கவனித்தீர்களேயானால்  அதன் மையத்தில்  இருப்பது காசி விஷ்வநாதர் கோயில், அந்த வடிவமைப்பு பிரகாரம் காசி விசாலாக்ஷி கோயில் அன்னப்பூரணி கோவில் என்று காசி நகரத்தின் ஒவ்வொரு மூலை முடுக்கும் விஞ்ஞான முறைப்படி அமைக்கப் பட்டிருந்தது.
மேலும், “காசியில் மொத்தம் 26,000 கோயில்கள், ஆனால் அதில் இப்போது 3000 கோயில்கள் மட்டுமே உள்ளன. மற்றவை முகலாயர்களின் படையெடுப்பின் போது அழிக்கப்பட்டுவிட்டது. இந்த சக்தி வட்டத்தின் மையத்தில் காசி விஷ்வநாதர்.காசி விஷ்வநாதர் தான் இந்த அமைப்பின் உச்சபட்ச சக்திநிலையை கொண்டுள்ளார். (Kashi Viswanathar temple is the core of this geometry). இதை எடுத்துவிட்டால் காசி அழிந்துவிடும் என்று எண்ணி முகலாய படையெடுப்பின்போது காசி விஷ்வநாதரை மட்டும் அங்கிருக்கும் இடத்திலிருந்து அகற்றி கிணற்றிற்குள் தூக்கி எறிந்து விட்டனர். பின்பு பல வருடங்களுக்கு பிறகு அந்த கிணற்றிலிருந்து லிங்கம் கண்டெடுக்கப்பட்டு அங்கே பொருத்தப்பட்டு விட்டது.  அந்த கிணற்றை நீங்கள் இப்போதும் பார்க்கலாம்அப்போது முழு வடிவம் கிடைக்காதால் கிடைத்தை வைத்து பூஜை செய்ய ஆரம்பித்துவிட்டார்கள் அதனால் தான் ”காசிக்க கங்கர் சிவசங்கர்” என்று சொல்லுகிறார்கள். அப்படின்னா இங்க இருக்கிற ஒரு கல்லு கூட சிவன் தான் என்று அர்த்தம்.  எப்போ இந்த நகரத்தையே ஒரு சக்திஸ்தலமாக படைத்துவிட்டானோ இங்கே இருக்கிற ஒவ்வொரு கல்லுக்கும் அந்த தன்மை வந்துவிடுகிறது.  நீங்கள் இருப்பது அப்படி ஒரு சக்தியான சூழ்நிலை என்பதை நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும்
காசி விஷ்வநாதர் கிணற்றில் கண்டெடுக்கப்பட்டது உண்மையாகவும் இருக்கலாம். உண்மை இல்லாமலும் இருக்கலாம். ஆனால் காசியின் சக்திநிலை பெருமளவு அழிக்கப்பட்டுவிட்டது. ஆனால் முழுமையாக அழிக்கப்படவில்லை. நீங்கள் காண்பது அதன் மிச்சம்தான். அதனால் அந்த கோவில் இருக்கும் இடத்தின் சக்தியை அது அங்கு நிறுவபட்டிருப்பதை நீங்கள் உனர வேண்டும். லிங்க உருவம் ஒரு அடையாளம் தான். பூஜைகள் முடிந்ததும் நீங்கள் அங்கு சில நிமிடங்கள் உட்கார்ந்து பாருங்கள் புரியம். 



15/1/14

கங்கைக் கரை ரகசியங்கள்





  இன்னும் இருள் பிரியாத,  ஒளி பிறக்காத காலைப்பொழுது. சில்லிடும் காற்று மிதந்துபோகும் மெல்லிய பனிப்புகை. கண்ணெதிரே கடலாக விரிந்திருக்கும் கங்கை. அதன்பிரமாண்டம் நம்மை பிரமிக்கசெய்கிறது. மறுகரையே கண்ணில் தெரியாத அந்த மகாநதி அந்த இருட்டிலும்,நிசபத்திலும் தன் கம்பீரத்தை சொல்லுகிறது.  காசி நகரில் புனித கங்கையின் கரையில் அந்த அதிகாலைப்பொழுதில் ஆதவனின் வருகையின் போது தரிசிக்க காத்திருக்கிறோம். நாட்டின் பல பகுதிகளிலிருந்து வந்திருக்கும் பலர் துறையின் படிக்கட்டுகளில் நடுங்கும் குளிரிலும் ஆதவனை தரிசித்தபின்  முழ்கிகுளிக்க காத்திருக்கின்றனர். மெல்லிய குரல்களில் பலமொழிகளில் பிராத்தனைகள் ஸ்லோகங்கள் கேட்கின்றன.  “கங்கையிரு கரையுடையான் கணக்கிறந்த நாவாயான்" என்று குகனை அறிமுகப்படுத்துவார் கம்பர்.இன்றும் கங்கைக்கரையில் கணக்கில்லாத நாவாய்கள் நிற்கின்றன.  எல்லா குளிக்கும் துறைகளிலும் நீக்கமற நிறைந்திருக்கும் இவைகளின் இடையில் நமக்கோர் இடத்தை கண்டுபிடித்து நிற்கிறோம். ஓடும் கங்கையின் வேகத்தை கால்கள் நமக்கு சொல்லுகிறது. மனம் கங்கையில் இறங்கியிருக்கிறது. ஆயிரமாயிரம் ஆண்டுகளாக பிரவாகத்தில் இருக்கும் வாழும் நதியில் இன்று நாமும் இறங்கியிருக்கிறோம் என்ற எண்ணம் மேலோங்குகிறது. நிற்கும் படகுக்காரர்களும் அந்த நேரத்தில் நகராத  படகில் உட்கார்ந்து தியானிக்கவிரும்பும்   வாடிக்கையாளர்களைக் கண்டுபிடிக்க காத்திருக்கிறார்கள் .பளிச்சென்று பெரிய ஆரஞ்சு வண்ணபந்தாக எழுந்து தங்க தாம்பாளமாக விரிந்து  சிலநிமிடங்களில் ஓளியுடன் உயிர்பிறக்கிறது அந்த நதியில். மெள்ள வளரும் காலை ஓளியில் கங்கையின் வண்ணங்கள் மாறுகின்றன.  அழகான ஒவியமாக பரவும் அந்த சூரியயோத காட்சியில் மனதை பறிகொடுத்து நிற்கும்  நாம் அருகிலிருப்பவர்கள் குளிக்க துவங்கியதைப்பார்த்த பின்னர்தான்  நாம் காத்திருந்ததும் அதற்குதானே என்பது உறைத்து. உடனே மூழ்கி எழுகிறோம். தெளிந்தோடிக்கொண்டிருக்கும் கங்கை அன்னையின் அழைப்பு அலைகள். நீண்ட நேரம் நீராடச்சொல்லுகிறது.

.
இரு கைகளால் கங்கயை ஜலத்தை எடுத்து சூரியபகவானுக்கு நதியிலேயே அர்பணம் செய்யும் பலர்,  கூப்பியகைகளை தலைக்குமேல் உயர்த்தி நிஷ்டையில் நிற்பவர்கள், தன் சின்னகுழந்தையை மிக்கவனமாக பிரார்த்தனையோடு குளிப்பாட்டும் அன்னை என அந்த இடமே கங்கயின் நீரைப்போல பக்தியால் நிரம்பியிருக்கிறது.  மெல்லகூட்டம் வரத்துவங்குகிறது. எங்கிருந்தோ ஒலிக்கும் பக்திபாடல்கள் சூழலின் அமைதியைக்கலைக்கிறது படிக்களை கடந்து சாலைக்கு வருகிறோம். காசிநகரம் விழித்துகொள்ள ஆரம்பிக்கிறது. இந்த காசி நகரம் எப்போது உருவானாது? இந்த கேள்விக்கு இன்னும் சரியான விடைகிடைக்கவில்லை.
மனித சமுதாயம் உருவான காலம்தொட்டே உலகில் பல்வேறு நகரங்கள் நாகரீகம் மற்றும் ஆன்மீகத்தின் உச்சியை அடைந்தன.  சில ஆயிரம் வருடங்களுக்கு பிறகு சுவடே இல்லாமல் அழிந்துவிட்டன. கிரேக்க, எகிப்து, ரோமாபுரி நாகரீகங்கள் சில உதாரணங்கள். இவற்றிக்கு எல்லாம் முன்பே கலாச்சாரத்திலும், ஆன்மீகத்திலும் அறிவியலிலும் . தனது மேன்மைக்கு பல இடையூறுகள் வந்தபோதும், ஒவ்வொரு முறையும் சரிவில் இருந்து மீண்டு எழுந்திருப்பது பாரதம்.. இதற்கு ஒரு அடிப்படைக் காரணம் இந்த புண்ணிய பூமியில் பிரதிஷ்டை செய்யப்பட்ட பல ஆயிரம் கோயில்களில் சக்தி அதிர்வுகள் இந்த கலாச்சாரத்தின் வேர்களாக இருப்பது. இவற்றில் மிக முக்கியமான ஷேத்திரமாக திகழ்வது காசி. தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் காசி நகரம் பன்னிரெண்டாயிரம் வருடங்களுக்கு முன்னரே உருவாகியிருக்க கூடும் என்று சொல்கின்றனர்.

காசி என்ற பெயருக்கு பிரகாசமானது என்று பொருள். ஸ்கந்தபுராணத்தில்  பதினைந்தாயிரம் பாடல்கள் பாடப் பெற்றது காசி. நூற்றுக்கணக்கான  சக்திவாய்ந்த கோயில்களால் சூழப்பட்டு ஒரு க்தி வளையமாக திகழ்கிறது  ஆயுர்வேதம் காசியில்தான் எழுதப்பட்டது. யோக அறிவியலின் தந்தையாக போற்றப்படும் பதஞ்சலி முனிவர் இங்குதான் யோக சூத்திரத்தினை இயற்றினார். துளசிதாசரின் ராமசரிதம் மானசம் உருவானதும் இங்குதான்.

 காசி நகரமே ஒரு யந்திர வடிவில் அமைந்திருக்கிறது. இந்த வடிவில்
நானூற்றி அறுவத்தெட்டு முக்கிய கோவில்கள் உள்ளன. காசி விஸ்வநாதர் கோயிலை மையமாக கொண்டு இக்கோயில்கள் ஐந்து அடுக்குப் பாதைகளில் அமைந்திருக்கின்றன. காசி காண்ட புராணத்தில் காசி நகரமே சிவனுடைய திரிசூலத்தின் மீது இருப்பதாக சொல்லப்பட்டு இருக்கிறது. திரிசூலத்தின் மூன்று முனைகளை போல், காசியின் சக்தி வடிவத்திற்கும் மூன்று கோயில்கள் மையமாக இருக்கின்றன. இவை வடக்கில் ஆம்கார் ஈஸ்வரர், மையத்தில் விஸ்வநாதர் மற்றும் தெற்கில் கேதார் ஈஸ்வரர். இந்த ஒவ்வொரு கோயிலும் தனியாகவும், ஒன்று சேர்ந்தும் தங்களுடைய சக்தி பிரவாகத்தை வெளிப்படுத்துகின்றன  இந்த  பயணத்தில் இந்த கோவில்களில் நல்ல தரிசனம் கிடைக்கவேண்டும் என்று எண்ணியபடியே சாலையில் நடக்கிறோம். கங்கைநதியின் படித்துறைகளுக்கு வரும் நகரின் அந்த சாலைகளில் எந்த வாகனங்களுக்கு அனுமதியில்லாதால் சாலை முழுவதும் மக்கள். வேகமாக நதியையை நோக்கி நடந்துகொண்டிருக்கிறார்கள். பலமாநில முகங்கள், மொழிகள். குறிபிட்ட இடம் வரை நடந்தபின்னர் சைக்கிள் ரிக்‌ஷாவில் நாம் தங்கியிருக்குமிடத்திற்கு திரும்புகிறோம். காசியில் தினசரி வரும் டூரிஸ்ட்களின் எண்ணிக்கைவிட அதிக அளவில் இருப்பது சைக்கிள் ரிக்‌ஷாக்கள்.பல இடங்களில் இவர்கள் வாகனத்திற்கு மட்டுமே அனுமதி என்பதால் சைக்கிள் ரிக்‌ஷாவில் ஏறாமல் நீங்கள் காசியில் எதையும் பார்க்கமுடியாது. கட்டணபேரம் சண்டை சத்தம் எதுவும் கிடையாது. தமிழ்நாட்டுகார்களுக்கு அநியாயத்துக்கு குறைந்த கட்டணமாக இருக்கிறதே என்ற எண்ணத்தை ஏற்படுத்தும் அளவில்தான் கேட்கிறார்கள்.:. நீங்கள் அதிகம் கொடுக்க விரும்பினாலும் பலர் ஏற்க மறுக்கிறார்கள். ஏற்றுகொள்பவர்கள் மிகுந்த பணிவுடன் பலமுறை நன்றி சொல்லுகிறார்கள். ஹோட்டலுக்கு வந்த பின்னர் நம்மோடு இந்த பயணத்தில் பங்கு  கொள்ள வந்துசேர்ந்திருக்கும் புதிய நண்பர்களை சந்திக்கிறோம்.
ஈஷா அமைப்பு கடந்த சில ஆண்டுகளாக புனித பயணங்கள் (Sacred walks) என்ற திட்டத்தில் அதன் உறுப்பினர்களை இந்த தேசத்தின்  மிகபுனிதமான இடங்களான கைலாஷ். காசி, ரிஷிகேஷ், பத்ரிநாத் போன்ற இடங்களுக்கு அழைத்து செல்கின்றனர்.ஏதோ மத நமபிக்கைகளின் அடிப்படையில் வெறும்சடங்குகள், சம்பிராத்யங்களை மட்டுமே நோக்கமாய் கொள்ளாமல் அந்த இடத்தின் பெருமை, சக்தி அதை முழுமையாக உணர பயிற்சி போன்ற விஷயஙகளுக்கு சத்குருவின் வழிகாட்டுதலுடன் இந்த  புனித பயணங்கள் நடத்படுகின்றன. இந்த ஆண்டு  200க்கும்மேற்பட்டவர்களுடன் கங்கையின் கரையில் காசிக்கும் தொடர்ந்து அங்கிருந்து புத்தரின் தேசத்திற்கும்  பயணம் செய்தகுழுவுடன் இணைந்து நாமும் இந்த புனித  பயணத்தில் பங்குகொள்ள போகிறோம்.
பேராசியர்கள், டாக்டர்கள், முன்னாள் அரசு அதிகாரிகள், நிர்வாகிகள் வாழ்க்கையை துவக்கியிருக்கும் இளைஞர்கள், வெளிநாட்டில் படிப்பைதொடர போகும் மாணவர்கள், வயதான பெற்றோர்களை அழைத்துவந்திருக்கும் இல்லத்தரசிகள் வெளிநாட்டவர்கள், என பலதரப்பட்டவர்கள் நிறைந்த பெரிய குழு அது. அனைவரும் ஒரே இடத்திற்கு அழைக்கபட்டு இந்த பயணத்தில் பங்கேற்பவர்களுக்காக சத்குரு பேசிய விடியோ காட்டபடுகிறது.  பின் குழுதலைவர் ஸ்வாமி பிரோபோதா பயணத்தில் குறிப்பாக காசியில் செய்யவேண்டியது கூடாது பற்றி விளக்குகிறார்.  அன்றிரவு 2.30 மணிக்கு எல்லோரும்  காசிவிஸ்வநாதர் கோவிலுக்கு போகப்போவதையும் அதற்காக எல்லோரும் இரவு 1.30க்கு பஸ்சில் இருக்கவேண்டும் என்பதையும் அவர் அறிவிக்கிறார்.  இரவு 1.30க்காக? ஏன் அந்த நேரம்? என அந்த கூட்டத்திலிருந்த  எவரும் கேட்கவில்லை. ஒரு சின்ன முணுமுணுப்புகூட இல்லை. காரணம் அவர்கள் ஈஷாவில் பயிற்சிபெற்றவர்கள். நேரதிட்டமிடலின் அவசியத்தையும் சத்குரு தீர்மானித்திருக்கும் நேரத்தின் அருமையையும் உணர்ந்தவர்கள். அன்றிரவு 1.30க்கு  5 பஸ்களிலும் அனைவரும் அவரவர் இடத்தில் இருந்தனர். ஒரு பஸ்சின் டிரைவர் மட்டும் வராததால் காத்திருக்கிறோம்.
----------------------------------------------------------------------------------------------------------------------------------

சத்குரு, வாழ்க்கையில் ஒரு முறையாவது  காசிக்கு போகவேண்டும் என சொல்லுகிறீர்கள். எதற்காக அங்கு  போகவேண்டும் ?

ல காலமாக என்னை அறிந்திருப்பவர்கள் சத்குரு ஏன் காசி யாத்திரை செய்யச் செல்கிறார்? வயதாக ஆக அவர் சற்றே மென்மையானவராக ஆகி வருகிறாரோ,” என்று யோசிக்கத் துவங்கி விட்டனர். சரி, எதற்காக இந்த காசி யாத்திரை?
இந்த படைப்பை அடிப்படையாக இரண்டு விதங்களில் பார்க்கிறார்கள். ஒரு விதம் எங்கோ ஒர் இடத்தில் கடவுள் இருப்பதாகவும், அவருக்கு வேலை ஒன்றும் இல்லாத பட்சத்தில் அவர் இந்த படைத்தலை செய்கிறார் என்பது. இது ஒருவிதமான நம்பிக்கை முறை. இதை இன்னொரு விதத்தில் சொல்ல வேண்டுமென்றால், கடவுள் என்று மக்கள் எதை அழைக்கிறார்களோ அது இயற்கைக்கு அப்பாற்பட்ட ஒரு சக்தி. அவர் படைத்தலுடன் தொடர்பில் இல்லை, படைத்தல் என்பது அவர் வீசி எறியும் ஒரு சமாச்சாரம்.
படைத்தலை மற்றொரு விதத்தில் பார்ப்பதை – “காஸ்மோஜெனிக்என்று சொல்லலாம். காஸ்மோஜெனிக்” (Cosmogenic) என்னும் வார்த்தை இரண்டு வார்த்தைகளில் (Cosmo+Genic) இருந்து தோன்றியுள்ளது. கிரேக்க மொழியில் காஸ்மாஸ்என்றால் ஒரு திட்டத்தின்படி உருவாக்கப்பட்டதுஎன்று பொருள். அதாவது எதேச்சையாக நிகழவில்லை. இது யாரோ ஒருவர் வாயிலிருந்தோ அல்லது கையிலிருந்தோ வந்து விழவில்லை. மாறாக விழிப்புணர்வுடன் உருவாக்கப்பட்டது. கொஞ்சம் கவனம் செலுத்தும் யாரொருவருக்கும் இந்த படைப்பு ஏனோ தானோவென்று நிகழவில்லை என்பது தெளிவாகத் தெரியும்.
இந்த பிரபஞ்சத்தை தனக்குள்ளேயே உருமலர்ச்சியும் எல்லையில்லாமல் விரிவடையும் சாத்தியமும் கொண்டதாக பார்த்த யோகிகள், அதே இயல்பை தங்களுக்கும் உரித்தாக்கிக் கொள்ளத் தூண்டப்பட்டனர். பல அற்புதமான முயற்சிகள் இந்த தேசத்தின் பல பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. உலகின் வேறு சில பகுதிகளிலும் இம்முயற்சி நடந்துள்ளது.கிரேக்க நாட்டில் டெல்ஃபி நகரில் காசியை போன்ற சிறு பிரதிபலிப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
அடிப்படையாக இது எதைக் குறிக்கிறது என்றால், இங்குள்ள படைத்தல் ஒவ்வொன்றுமே, ஏதோ ஒரு விதத்தில், இந்த பிரபஞ்சத்தின் சிறு நகல் என்பதைத்தான். இது மனித உடலுக்கும் பொருந்தும். படைப்பில் உள்ள ஒவ்வொன்றுமே அளப்பரிய சாத்தியம் உடைய இந்த பிரபஞ்சத்தின் சிறிய நகல்தான். இந்த அடிப்படையில் பல விஷயங்கள் செய்யப்பட்டுள்ளன.
காசியில், ஒரு நகரின் தோற்றத்தில் ஒரு குறிபிட்ட வகையான இயந்திரம் ஒன்றை உருவாக்கியுள்ளார்கள். காசியை போன்ற ஒரு நகரத்தை உருவாக்குவது மதிமயக்கமுறச் செய்யும் அசாத்திய கனவு. இதனை அவர்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் நிகழ்த்தினர். மனித உடலில் 72,000 நாடிகள் இருப்பதைப் போல காசியிலும் அப்போது 72,000 கோயில்கள் இருந்தன. இந்த முழு செயல்முறையுமே அகண்ட அண்டத்தின் உடலுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொள்வதற்காக பிரம்மாண்டமான மனித உடல் போன்ற ஒரு அமைப்பை உருவாக்குவதாக இருந்திருக்கிறது. இதனால் தான், “நீங்கள் காசிக்கு போனால் போதும், எல்லாம் முடிந்துவிட்டது,” என்னும் நம்பிக்கை உருவானது. நீங்கள் காசியை விட்டு வெளியே வரவே விருப்பப்பட மாட்டீர்கள், ஏனென்றால் நீங்கள் அண்டத்தின் உயிராற்றலுடன் தொடர்பில் இருக்கும்போது, வேறெங்கு செல்ல விருப்பப்படுவீர்கள்?

கல்கி 18/01/14


I