2/7/24

தரம்சாலா-தபோவனம்-தலாய்லாமா 2

காலையில் காபி, பேப்பர், கிடையாது. இன்டர்நெட் செல்போன் அனுமதியில்லை. டிவி இல்லை.
பசியைத் தூண்டும் மணியோசைக்குப் பின்னர் காலை, மதியம் . இரவு அட்டவணைப்படி சாத்விக உணவு. இன்று காலை உணவு நண்பர் பெ.கருணாகரனின் பேவரிட்.
எப்படி ஒரே நாளில் மனமும் உடலும் இதையெல்லாம் ஏற்றுக் கொண்டது என்பது எனக்கே ஆச்சரியமாகயிருக்கிறது
இங்கு நிலவும் சூழல் தான் காரணம் என நினைக்கிறேன். இந்த காட்டுப் பகுதியின் நடுவில் எழுப்பபட்டிருக்கும் சோலை.
பளீரெனத் தெரியும் இமயம், எங்கும் மரங்கள் மலர்கள் . செண்பக மாம்பூக்களின் மெல்லிய மணம் (தரையெல்லாம் மாவடுக்கள்) அமைதி எல்லாம்.இணைந்து எழுப்பும் அதிர்வுகள்
-
இயற்கைக்கு மனித மனங்களை இயக்கும் வலிமை இருப்பதை உணர்கிறேன். குறிப்பாக நிலவும் அமைதி. இங்கு பிரம்மச்சாரிகளும் ஊழியர்களும் பேசிக் கொள்ளும் போது கூட ரகசியம் சொல்வது போலத்தான் பேசிக் கொள்கிறார்கள். மரங்களுக்கும், செடிகளுக்கும் கூட ஓசையில்லாமல் அசையச் சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள்.
இசைக்கவி சொல்வது
போல தியானம் செய்ய சிறந்த இடம்
மரத்தடியிலோ புல்தரைகளிலோ . குருதேவரின் குடிலிலோ
மண்டபங்களிலோ நீங்கள் விரும்பும் வரை தியானம் செய்யலாம். படிக்கலாம் ,எழுதலாம்
நீண்ட நாளுக்குப் பின் பேனாப்பிடித்து நீண்ட நேரம் எழுதினேன். (மோசமான கையெழுத்து முன்னேறி இன்னும் மோசமாகியிருக்கிறது)
காலை உணவுக்கு பின் இன்று காட்டினுள் இருக்கும் ஒரு கிராமத்திற்குப் போகத்திட்டம்
All reactions:
Vidya Subramaniam, Manthiramoorthi Alagu and 165 others
84
3
Like
Comment
Send
Share
View more comments

1/7/24

தரம்சாலா-தபோவனம்-தலாய்லாமா 3

ஹிமாசலப் பிரதேஷின் இரண்டாவது தலைநகர் தரம்சாலா. அங்கிருந்து 8 கீமீ தொலைவில் சித்தபாரி என்ற மலைக்கிராமம். காடுகள் தொடங்குமிடம். இங்குதான் அமைந்திருக்கிறது சின்மையானாந்தா முதன் முதலில் அமைத்த தபோவனம், இப்போது பல கட்டிடங்களுடன் பெரிய அளவில் வளர்ந்து பிரம்மச்சாரிகளுக்கு வேதாந்தப் பாடங்கள் பயிற்சிகள் அளிக்கப்படும் பயிற்சிகேந்திரமாகயிருக்கிறது.
இந்தக் கேந்திரத்தைச் சேர்ந்த CORD என்ற அமைப்பு (CHINMYA ORGANASATION FOR RURAL DEVLOPMENT) உள்ளூர் சமூக ஆர்வலர்களுடன் இணைந்து நிறைய சமூகப்பணிகளும் செய்கின்றனர்.
அந்தக்குழுவினருடன் அருகிலுள்ள ஒரு மலைக்கிராமத்துக்குப் போயிருந்தேன். நாம் கற்பனை செய்து கூடப் பார்க்கமுடியாத அளவிலான பிற்பட்ட கிராமம். ஒரு காலத்தில் சாலையாகயிருந்த அடையாளம், மண்சுவர்களுடன் தாழ்ந்த தகரக் கூரை வீடுகள். வீடுகளுக்கு மின்சாரம் கிடையாது. பொதுக்கட்டிடத்திலும், தெருவிளக்குகளுக்கும் மட்டும் தான். வீடுகளுக்கான செங்கற்களை அவர்களே தயாரித்துக்கொள்கிறார்கள்.
அங்குள்ள சுய உதவிக்குழுக்குளுக்கு உதவி செய்யும் குழு CORD.. அதில் கனராவங்கியின் இரண்டு மேனாள் அதிகாரிகள். அது எனக்கு மகிழ்ச்சி தரும் விஷயமாகயிருந்தது. (நான் வாழ்க்கையின் பெரும்பகுதியை அந்த வங்கியுடன் வாழ்ந்தவன்) சுயவுதவிக்குழுக்களுக்குக் கடன் கொடுக்க எல்லா வங்கிகளும் மகிழ்ச்சியுடன் முன் வரும். காரணம். குழுத்தலைமை ஒழுங்காகக் கடனை உரிய நாளில் செலுத்திவிடும். ஆனால் கடனாகக் கொடுத்த பணம் சொல்லப்பட்ட திட்டத்துக்குத்தான் செலவழிக்கப்பட்டிருக்கிறதா? என்று வங்கிகள் கவலைப்படுவதில்லை (ensuring end use)விதிகள் இருக்கின்றன. அது.பேப்பரில் மட்டும்தான். (இந்தக் கற்பனையான கிராமபொருளாதா வளர்ச்சி, சுரண்டல் குறித்து விரிவாகப் பின்னால் எழுதுகிறேன்)
இங்குத் தான் இந்த CORD உதவுகிறது. மலை விளைபொருட்களின் உற்பத்தி, விற்பனை போன்ற பல விஷயங்களுக்குப் பயிற்சி கொடுக்கிறார்கள். ஒவ்வொரு கட்டத்திலும் உதவி செய்கிறார்கள். இடைத்தரகர்களை ஒழித்திருக்கிறார்கள்.
நான் சந்தித்த மற்றொரு சுய உதவிக்குழுவின் தலைவி CORD குழுவினரிடம் இந்தத் தவணையுடன் கடன் முடிகிறது. எங்களுக்கு இனிக் கடன் வேண்டாம் என்று சொன்னார். அவர்களுக்கு working capital, expansion அவசியம் குறித்து நண்பர் விளக்கினார். அப்போதும் தயங்கிய அந்தப்பெண்மணி "அடுத்த கூட்டத்துக்கு வந்து எல்லோருக்கும் சொல்லுங்கள்" என்றார்.
இனிக் கடன் வேண்டாம் என்று சொல்லும் வங்கி வாடிக்கையாளரைக் காண்பது அரிது. அன்று கண்டேன்
நானும் இம்மாதிரி ஒரு மாதம் CORD குழுவுடன் பணி செய்யத் தபோவன் ஸ்வாமிஜியிடம் இன்று இரவு சந்திக்கும்போது அனுமதி கேட்க வேண்டும்
All reactions:
Vidya Subramaniam, Bhaskaran Jayaraman and 73 others