6/4/15

அண்ணலின் ஆன்மா வாழ்கி’றது இங்கே …..


இந்த இனிய தேசத்தின் வரலாற்றில் அழியா இடம்பெற்றிருக்கும் சில மனிதர்கள் போல சில கட்டிடங்களும் உண்டு. அதில் ஒன்று புனே நகரில் இருக்கும் ஆகாகான்(AGAKHAN) மாளிகை. அண்ணல் காந்தியின் வாழக்கையின் நிகழந்த மறக்க முடியாத 2 சிலநினைவுகளுக்கு சாட்சியாக நின்ற இந்த மாளிகை, தனியாக நாடு இல்லாத ஒரு மன்னருடையது. முகம்மது நபியின் உறவினரின் வாரிசாக பெர்ஷிய நாட்டில்  பிறந்த முதலாம் ஆஹாகானை தொடர்ந்து வரும் பரம்பரயினர் முஸ்லீம் இனத்தின் ஒரு பிரிவினருடைய தலைவராகவும் மன்னராகவும் மதித்து போற்றப்படுபவர்கள்.  உலகின் பலநாடுகளில் பெரும் சொத்துக்கள் இருக்கும் உலகபணக்காரர்கள் பட்டியலில் இருப்பவர் இன்றைய கரீம் ஆகாகான்..உலகெங்கும் கல்வி, மருத்துத்துபணிகளுக்கு உதவுகிறது இவரது பல அறக்கட்டளைகள்

இவரது தாத்தா இந்தியாவிற்கு வந்த போதுவாங்கிய நிலத்தில் அந்த நாட்களில் இந்த பகுதியில் நிலவிய பஞ்சத்தின் வேலையிழந்த விவசாயிகளுக்கு வேலையும் கூலியும் கொடுத்து உதவுவதற்காக.1892ல் இந்த மாளிகையை எழுப்பியிருக்கிறார். 1000பேர் உழைப்பில் 5 ஆண்டுகாலம்  12 லட்சம் செலவில் உருவான இந்த மாளிகையில் மன்னர் குடும்பம் வாழந்த்தாக தெரியவில்லை. பிரிட்டிஷ் ஆட்சிகாலத்தில் இது அரசின்பொறுப்பில் இருந்தது. அதனால்1942ல் ”வெள்ளையனே வெளியேறு” என்ற போராட்டத்தை அறிவித்த அண்ணலையும் அவரது செயலாளர் மஹாதேவ்பாய் தேசாய், கஸ்தூர்பா,  சரோஜினி நாயுடு,சுசேதா கிருப்பளானி ஆகியோரும்  கைது செய்யபட்டு  இங்கே  இரண்டு ஆண்டுகள் சிறைவைக்கபட்டிருக்கிறார்கள்
அந்த காலகட்டம் காந்தியடிகளின் வாழ்க்கையில் மிக துயரமான நாட்கள். இந்த சிறைக்கு வந்த  ஒரே வாரத்தில்   அவருடன் கைது செய்யபட்ட 35 ஆண்டுகள் அவருடன் பணியாற்றிய அவரது செயலாளர் மஹாதேவ் பாய் ஜெயில் அதிகாரிகளூடன் தங்களுக்கு செய்தி தாட்கள் தரபடவில்லை என வாதாடிக்கொண்டிருக்கும் போது மாரடைப்பால் இறந்துவிடுகிறார்.

மாளிகையில் சிறையாக மாற்றப்பட்டிருந்த 6 அறைகள் இப்போது கண்காட்சி கூடங்களாகியிருக்கின்றன. அறைகளின் நடுவில் மாறுதலான காந்தி சிலைகள் நம்மை கவர்கின்றன.  சுற்று சுவரில் இருக்கும் குறிப்புகளும் படங்களும், அண்ணலின் பொருட்களும் அபூர்மானவை. அவரது செயலாளர் மரணம் குறித்து வைக்கபட்டிருக்கு இந்த குறிப்பைப் படிக்கும் போது மனம் நெகிழ்ந்தது நிஜம்.
மஹாதேவ்பாய்

யின் சடலத்தை குளிப்பாட்டி சந்தனமிட்டு பூக்கள் இட்டு  புத்தாடைஉடுத்தி  . ” இதையெல்லாம் நீ என் மரணத்துக்கு பின் எனக்கு  நீ தான்  செய்யப்போகிறாய் என நினைத்துகொண்டிருந்தேன்,  ஆனால் உனக்கு நான் செய்யும் துர்பாக்கிய நிலைக்கு என்னை ஆளாக்கிவிட்டுவிட்டு போய்விட்டாய்” என்று அழுதார்..
 மரணமடைந்த கைதியின் உடலை புதைக்கவேண்டியது அரசின் கடமை என்பதால் அந்த உடலை எடுத்துச்செல்ல லாரியுடன் போலீஸ் வந்தது. .”இறந்தவர் கிரிமினல் குற்ற கைதி இல்லை  அரசியில் கைதி அவருக்கு இந்த விதி பொருந்தாது, மேலும் இந்து சமய முறைகளின் படிஇறந்த மகனின் இறுதிச்சடங்குகளை செய்ய வேண்டியது தந்தையின் பொறுப்பு. மகனின் சடலத்தை மற்ற எவரிடமும் தந்தை கொடுக்க மாட்டார்”.  என்ற சொன்ன காந்தியிடம், இந்த சிறைகட்டிடத்தை விட்டு வெளியே போக உங்களுக்கு அனுமதியில்லை. என்கிறார் பிரிட்டிஷ் அதிகாரி. உங்கள் சிறை விதிகளை மதிக்கிறேன்.  அப்படியானால் இந்த மாளிகையின் தோட்டத்திலேயே அடக்கம் செய்ய வேண்டும் என்கிறார் காந்தி. திகைத்துபோன அதிகாரி  டெல்லியை தொடர்பு கொள்ள, அவர்கள் இங்கிலாந்தை தொடர்பு கொள்ள தந்திகள் பறக்கின்றன.  இறுதியில் காந்தியின் விருப்பத்தை நிர்வாகம் ஏற்கிறது. இந்த மாளிகையின் தோட்டத்திலேயே காந்தி தீ சட்டிஏந்தி இறுதிசடங்குகள் செய்ய மஹாதேவ் பாய் தேசாய் அடக்கம் செய்யபட்டார்..
இதைத்தொடர்ந்து நீண்டகாலம் நோய்வாய்பட்டிருந்த கஸ்தூரிபா காந்திக்கு டாக்டர்கள்   இங்கிலாந்திலிருந்து வந்த ஊசிமருந்துகளைச் செலுத்த காந்தி அனுமதிக்க வில்லை.    அவர் இறந்து போகிறார். அவரது உடலும் இந்த மாளிகையின் தோட்டத்திலேயே  தேசாயின் சமாதி அருகே அடக்கம் செய்யபட்டிருக்கிறது. கஸ்தூரிபா தன் இறுதி மூச்சை அண்ணலின் மடியையில் தான் விட்டிருக்கிறார். அந்த காட்சியை பெரிய அளவு ஓவியமாக்கி அந்த அறையில் நிறுத்தியிருக்கிறார்கள். மனதைத் தொடும் படம்.

இந்த சிறையிலிருந்த இரண்டு ஆண்டுகளும் ஜன 26ல் அண்ணல் இங்கு கொடியேற்றியிருக்கிறார்.. அவர் வாழ்வின் தொடர்புடைய இடம் என்பதால் காந்தியின் மறைவுக்கு பின் அவர் அஸ்தியின் ஒரு பகுதி இங்கு வைக்கபட்டிருந்த இடத்தில் நினைவுக்கல் எழுப்ப பட்டிருக்கிறது.

19 ஏக்கர் பரப்பில் 6ஏக்கர் பரப்பளவில்  கம்பீரமாக நிற்கும் இந்த அழகிய மாளிகையையும் தோட்டத்தையும் அண்ணலின் கொள்கைகளால் கவரப்பட்ட ஆஹாகான் இளவரசர் 1972ல் இந்தியாவந்தபோது இந்திய அரசுக்கே நன்கொடையாக கொடுத்திடுத்திருக்கும் செய்தி  மாளிகையைப் போல அவரது மனமும் பெரிது என்பதைச்சொல்லுகிறது
.

40களிலேயே ஒரு இஸ்லாமிய அரசரின் மாளிகையில்  ஆழ்ந்த மதப்பற்றுள்ள இரண்டு இந்துக்களின் சமாதி அமைக்குமளவுக்கு  நல்லுறவு இருந்த இந்த தேசத்தில் ஏன் மதங்களின் பெயரால்  இன்னமும் சச்சரவும் சண்டையும்   எழுந்துகொண்டிருக்கிறது?


படங்கள் :ரமணன்

20/3/15

புனே உயரமாகிக்கொண்டிருக்கிறது

அடுக்குமாடிவீடுகள் புனேயில் புதிதல்ல. 50 ஆண்டுகளுக்கு முன்னரே துவங்கிவிட்ட விஷயம். ஆனால் இப்போது பல அடுக்குமாடிகளுடன் களுடன் அதிகமான கட்டிடங்கள் மிக வேகமாக எழுந்திருக்கின்றன. 28  அல்லது 24  அடுக்குமாடி வீடுகள். 8 அல்லது 10 மாடி பிரமாண்ட அலுவலககட்டிடங்கள் நிறைய எழுந்திருக்கின்றன. எல்லா அடுக்குமாடி வீடுகளிலும். முதல் 4 மாடிகளுக்கு -1,-2,-3.-4 என நம்பரிட்டு 5  வது

மாடியைத்தான் முதல் மாடி என குறித்திருக்கிறார்கள். இது வாஸ்து சாஸ்த்திரமா இல்லை விதிமீறலை மறைக்கும் சமாச்சாரமா என தெரியவில்லை.   நான்கு புறமும்  அழகான பசுமை குன்றுகளால் சூழப்பட்ட புனே நகரில் அந்த குன்றுகளுக்கு 10 கீமி வரை கட்டிடங்கள் எழுப்ப கூடாது என்று சட்டமிருந்தது. சரத்பாவர் காலத்தில் விதிகள் தளர்த்தபட்டு இப்போது சுத்தமாக மறக்கபட்டு குன்றுகளுக்கு அருகிலேயே. கட்டிடங்கள் வளர்க்க பட்டுகொண்டிருக்கின்றன. இன்னும் சில ஆண்டுகளில் அந்த குன்றுகளிலும் இம்மாதிரி கட்டிடங்கள் எழந்து குன்றுகளே காணமல் போகலாம் நகரமே நான்கு திசைகளிலும் கான்கீரிட் காடுகளாக விரிந்து கொண்டிருக்கின்றன.  
ஹின்சஞ்ன்வாடி என்ற புறநகர் பகுதியில் அத்தனை முன்னணி சாப்ட்வேர் நிறுவனங்களும். பிரமாண்டமான பல கட்டிடங்களில் இயங்குகிறது. 138 ஏக்கரில் 3000 வீடுகளுடன் 200 அலுவலகங்களுடன் மாறிவரும் இந்தியாவின் முகத்தை காட்டும் ஷோகேஸ். தனியார் நிறுவனங்கள் உருவாக்கிகொண்டிருக்கிறார்கள். இதுபோல் இன்னும் மூன்று அருகே வரப்போகிறதாம். அலுவலகங்களுக்கு அருகிலேயே வசிக்க அடுக்கமாடிகள். Walk to work  என்ற வாழ்க்கை. பயண நேரம் மிச்சம் என சொல்லி அந்த நேரத்திலும் வேலை வாங்கும் புத்திசாலிகம்பெனிகள்.  பல கட்டிடங்களில் விளக்குகளை அணைப்பதே இல்லை. அமெரிக்க  கஸ்டமர்களின் பகல் நேர அலுவலகங்களுக்காக  இங்கே இரவெல்லாம் உழைக்கும். பெரிய இளைஞர் பட்டாளம்.  5 ஸ்டார் சம்பளம் வாங்குபவர்கள்  தெருவோர கையேந்திபவனில் வாங்கி பிளாட்பாரத்தில் உட்கார்ந்து ஜவா மொழியில் பேசிக்கொண்டே சாப்பிடுகிறார்கள். இம்மாதிரி கடைகள் 50க்கும் மேல் இருக்கிறது. ஆம்லெட் தோசை போடும் நம்மூர்காரர் கடையில் நல்ல கூட்டம். தமிழ் பாடல்களும் கேட்கிறது.

அடையாள அட்டையை அழுத்தினால் திறக்கும் கதவு. கிச்சனில்; புகைவந்தால் அலறும் அலாரம்  நடக்க நல்ல பாதைகள் மெத்தென்ற பசும்புல்வெளி பார்க்   நீச்சல் குளம், குழந்தைகள் விளையாட வெண்மணல்திடல்  கோல்ப்மைதானம் என மிக நவீன வசதிகளுடன் சுத்தமான குட்டி ஹைடெக் ஊர். கால்நகம்வெட்டிக்கொள்வதிலிருந்து சகல நகர வாழ்க்கையின் ஆடம்பரங்களும் இங்கேயே இருக்கிறது.
ஆனாலும்.  பனித்துளிகள் மின்னும்பயிர்களுடன் அருகிலிருக்கும் விளைநிலங்களையும் அதன் எதிரே மிதக்கும் மேகங்கள் தொட்டுசெல்லும்  உயர்ந்த கட்டிடங்களையும் நம் பால்கனியிலிருந்து ஒன்றாக பார்க்கும்போது ஒரு மாறுபட்ட வினோதமான  உணர்வு எழுகிறது.

”இன்னும் சில நாட்களில் நாங்கள் அங்கேயும் வந்துவிடுவோம்” என்று அந்த உயர்ந்த கட்டிடங்கள் சொல்லுவதைக்கேட்டு  அழும் அந்த நிலங்களின் கண்களில் நீர் கட்டியிருப்பது போல தோன்றிற்று. . 



  • 19 others like this.
  • Vedha Gopalan வாஸ்து சாஸ்த்திரமா இல்லை விதிமீறலை மறைக்கும் சமாச்சாரமா (ஏன் சார்! அதிகாரிகள் நேரில் வந்து பார்க்கும்போது கட்டடத்தின் உயரம்கூடவா கண்ணுக்குத் தெரியாது? ) இறைவா!!

    இந்தியாவின் முகத்தை காட்டும் ஷோகேஸ்

    கட்டிடங்களில் விளக்குகளை அணைப்பதே இல்லை.
    5 ஸ்டார் சம்பளம் வாங்குபவர்கள் தெருவோர கையேந்திபவனில்
    அழகிய வாக்கியங்கள் 

    . பனித்துளிகள் மின்னும்பயிர்களுடன்..நல்ல ரசனை தங்களுக்கு

    அய்யோ..அந்தக் கடைசி வரி மனசைப் பிசைகிறது!..சொல்லாதீங்க
    2 hrs · Edited · Like
  • Amirtham Surya நிலங்களின் கண்களில் நீர் கட்டியிருக்கிறது..செம ஜி
    2 hrs · Like
  • Bala Mukundhan அதே போல் பெங்களூரு தன் தனித்தன்மையை இழந்து வருடங்கள் பல ஆகி விட்டது. யஷ்வந்த்பூரிலிருந்து பனஷங்கரி செல்லும் Outer Ring Road வழியாகப் பயணித்தோமானால், குன்றுகள் அனைத்தும் அழிக்கப்பட்டு அதன் மேல் அடுக்கு மாடிக் கட்டிடங்களும், குடியிருப்புகளும்தான் தென் படுகின்றன. கார்டன் சிடி, கான்கிரீட் சிடியாக மாறி விட்டது. வட பெங்களுருவில் விமான நிலையம் செல்லும் வழியெங்கும் வயல் நிலங்கள் வானாளாவிய கட்டிடங்களைத் தான் தாங்கி நிற்கின்றன. Whitefield சுற்றிய பகுதியை பற்றி கேட்கவேவேண்டாம். இங்கே நிலங்களின் கண்களில் நீர் கூட கட்டாது. ஏனெனில், நீர் வழிந்தோட கூட இடமில்லாது கான்கிரீட் தரைகளும், கட்டிடங்களும் பூமிக்கும் மனிதனுக்கும் இடையே தடை எழுப்பியுள்ளது.

    இதை விட கோரம் ஒன்று உண்டென்றால், அது M G Road தான். எவ்வளவு அழகான ஒரு சாலையாக இருந்த அது இன்று உயர் மட்ட மெட்ரோ ரயில் பாதை அமைக்கப்பட்டதின் மூலம் தன்னிலை இழந்து ஒரு சவப்பாதையாக மாறியுள்ளது. 18 வருடம் கழித்து அந்தப் பாதையைப் பார்த்த என் கண்ணில் நீர்தான் முட்டிக் கொண்டு நின்றது. இந்த ஒரு வருடமாக அந்தப் பாதைப் பக்கமே செல்லவில்லை.
    2 hrs · Like
  • 1 hr · Like · 1
  • Shah Jahan இப்போதெல்லாம் கேடட் கம்யூனிட்டியில் வசிப்பதுதான் நாகரிகம் என்ற மனநிலை உருவாகிவிட்டது. கோவையில்கூட கேடட் கம்யூனிட்டி வந்தாயிற்று.
    1 hr · Like
  • Skrajendran S Krihsnasamy Naidu இன்னும் சில நாட்களில் நாங்கள் அங்கேயும் வந்துவிடுவோம்” என்று அந்த உயர்ந்த கட்டிடங்கள் சொல்லுவதைக்கேட்டு அந்த நிலங்களின் கண்களில் நீர் கட்டியிருப்பது போல தோன்றிற்று. 
    .
    1 hr · Like
  • Pitchumani Sudhangan கவிதை வடிவிலான ஒரு மனக் கலக்கத்தை, ஒரு சமூக அக்கறையை எத்தனை அழகாக ரசனையோடு சொல்லியிருக்கிறீர்கள் ரமணன் ஸார்!
    1 hr · Like · 1











16/3/15

வெற்றி வெளியே இல்லை- கல்கியில் விமர்சனம்



”வெற்றி வெளியே இல்லை” நூலை  மூத்த பத்திரிகையாளார் ‘சுப்ர பாலன்” இந்த வார(22/03/15) கல்கியில் விமர்சித்திருக்கிறார். அதை இந்த சுட்டியில் பார்க்கலாம் 

http://ramananvsv.blogspot.in/

8/2/15

கடைசிக்கோடு



என்னுடைய கடைசிக்கோடு புத்தகத்தை  திருப்பூர்  தமிழ்சங்கம் ”2013 இலக்கிய விருது”க்கு தேர்ந்தெடுத்து 5/2/15 அன்று விழாவில் பணப்பரிசும்,கேடயம், சான்றிதழ் தந்து கெளரவித்தார்கள்.. திருப்பூர்  தமிழ் சங்கம் தரும் இந்த விருது தனிமதிப்பு வாய்ந்தது..23 ஆண்டுகளாக தமிழின் சிறந்த படைப்புகளுக்கு வழங்குகிறார்கள்.
  அவர்கள் தேர்ந்தெடுக்கும் நடுவர்களின் குழுவை அறிவிக்க மாட்டார்கள். அதே போல்  அவர்களுக்கு வரும் படைப்புகளை நடுவர்களுக்கு அனுப்புதோடு சங்கத்தின் பணி முடிந்துவிடுகிறது. நடுவர்கள் முடிவுகளை அறிவித்தபின்  விருதுபெறும் படைப்பாளிகளை திருப்பூருக்கு அவர்கள் செலவில் அழைத்து  நல்ல முறையில் வரவேற்று வசதியாக தங்கவைத்து மகளின் திருமண விழாவிற்கு  வந்தவர்களைப்போல  அன்புடன் உபசரிக்கிறார்கள்.
விருது பெற்றவகளை விழா மேடையில் அமரச்செய்து விருதுகளை அளிக்கிறார்கள்.. விழா புத்தக கண்காட்சி அரங்கில் நடைபெற்றது. வாசிப்பதை நேசிக்கும் நல்ல மனிதர்கள் நிறைந்த மாபெரும் சபையில் மாலைகள் விழுந்ததால், . படைப்பாளிகளின் படைப்பின் பெருமையை பேசப்பட்டதால். விருதுபெற்றவர்கள்.உண்மையான கெளரவத்தை (சற்று கர்வத்தை கூட) உணர்கிறார்கள்.
தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் அவர்களும் லேனா தமிழ்வாணனும் பங்கேற்று விருகள் வழங்கினார்கள்.  என் வாழ்வின் மகிழ்வான தருணம் அது.

திருப்பூர் தமிழ் சங்கத்தலவர் டாக்டர் ஆ. முருகநாதன், செயலர்  ஆடிட்டர் அ.லோக நாதன். இருவரும் தத்தம் தொழிலில் உச்சத்தில் இருப்பவர்கள்.. ஆனலும் தமிழ் இலக்கியத்திற்கான சேவைகளில் தங்களை அர்பணித்துக்கொண்டவர்கள்

 தமிழ் படைப்பாளிகள் அனைவரும்   எழுதுபவர்களுக்கு இத்தகைய உயரிய கெளரவம் அளிப்பதற்காக இவர்களுக்கு  நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறார்கள்..
 திருப்பூர் டாலர் நகரம் என்பது தெரியும். பணத்தை மட்டும் நேசிக்காமல் தமிழையும் நேசிப்பவர்களும் நிறைந்த நகரம் என்பதையும் புரிந்து கொண்டேன்,  



1/2/15

தினமலர் வார மலர்


இன்றைய தினமலர் வாரமலர் மூத்தபத்திரிகையாளர் சுதாங்கன் எழுதியிருப்பது

பார்த்தது,படித்தது, ரசித்தது.
அந்த நெல்லைக் காரரின் புத்தகம் தபாலில் வந்தது!
பிறகு படிக்கலாம் என்று தான் புரட்டினேன்!
ஆனால் அந்த புத்தகம் என்னை அப்படியே உள்ளே இழுத்தது!
151 பக்கம் புத்தகத்தை ஒரே மூச்சில் படித்து முடித்தேன்!
புத்தகத்தின் தலைப்பு: நேருவின் ஆட்சி ! பதியம் போட்ட 18 ஆண்டுகள்!
எழுதியவர் ரமணன்!
இவரை எனக்கு 1980 களுக்கு முன்னாலிருந்தே தெரியும்!
நடுவில் பல ஆண்டுகள் அவருடைய வங்கி அதிகாரி வேலை அவர் அதிகமாக எழுதுவதிலிருந்து தள்ளி வைத்திருந்தது!
இப்போது படுவேகமாக எழுத ஆரம்பித்திருக்கிறார்!
எழுதுவதற்காக படிப்பது ஒரு வகை!
படிப்பதை ஒரு ஆர்வமான காதலாக கொண்டவர்கள் இன்னொரு வகை!
ரமணன் இரண்டாவது வகை!
அதனால்தான் இந்திய சுதந்திர ஆரம்ப நாட்களை இத்தனை ஆழமாகவும் அழுத்தமாகவும் இவரால எழுத முடிந்திருக்கிறது!
இது ரசனையுள்ள வாசகனுக்கான புத்தகம் மட்டுமல்ல! அரசு பணியில் சேர விரும்புகிறவர்களுக்காக ஒரு இந்திய சரித்திரத்தின் சுருக்கமான வரலாறு!
பா.ஜ.க ஆட்சிக்கு வந்தபிறகு நேரு ஆட்சி குறித்து பல விமர்சனங்கள் எழுந்திருக்கிறது!
திடிரென்று புதிய ஆட்சியாளர்கள் மறந்து போன வல்லபாய் படேலை தூக்கி வைத்துக் கொண்டாடுகிறார்கள்!
அவரை மதவாதி என்கிறது காங்கிரஸில் ஒரு கூட்டம் !
ஆனால் ஆர்.எஸ்.எஸ்.. இயக்கத்தை தடை செய்ய வேண்டுமென்று தீவிரமாக இருந்து அதை செய்தவர் அன்றைய உள்துறை அமைச்சர் படேல் என்பதை ஆழமாக பதிய வைத்திருக்கிறது இந்த நூல்!
பாரபட்சமற்ற ஒரு பத்திரிகையாளனுக்கே உரிய ஒரு நேர்மையான எழுத்தாளப் பார்வையை இந்த புத்தகத்தில் பார்க்கமுடிகிறது!
நேருவை போற்றவும், தூற்றவும் செய்வதற்கு முன்னால் படிக்க வேண்டிய மிக முக்கியமான புத்தகம் இது!
இன்றைய இந்தியாவின் பெருமைகள், சிறுமைகள் இரண்டிலுமே நேரு தான் கதாநாயகர்!
ஜனநாயகம்,நேர்மை, நல்லாட்சி , தொலைநோக்குப் பார்வை இவை நேரு ஆட்சிக் காலத்தின் அடையாளங்கள்!
மொழிப் பிரச்னை, எல்லைப் பிரச்னை, நதிநீர் விவகாரம், வெளியுறவுக் கொள்கை குளறுபடிகள் இதன் தொடக்கப் புள்ளியும் நேருவின் ஆட்சிக் காலமே!
காஷ்மீர் பிரச்னையை ஐ.நா. சபைக்கு கொண்டு போனதும் நேருதான் என்கிறார்கள்!
உண்மைதான்! அதை எந்தப் பின்னனியில் கொண்டு சென்றார்?
அதற்கு பதில் இங்கே உள்ளது!
சீனாவுடனான யுத்தத் தோல்விக்குக் காரணம் நேருவின் தவறான கணிப்பு என்கிறார்கள்!
இதன் பின்னனி என்ன ? இங்கே பதிவு உண்டு!
அடுத்த தலைமுறை மீது அக்கறை கொண்ட ஒரு சரியான மனிதரின் அக்கறையான பதிவு இந்த புத்தகம்!
இது சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன் வெளியிடு!
(நன்றி: நெல்லை தினமலர் வாரமலர்!)