1/7/24

தரம்சாலா-தபோவனம்-தலாய்லாமா 3

ஹிமாசலப் பிரதேஷின் இரண்டாவது தலைநகர் தரம்சாலா. அங்கிருந்து 8 கீமீ தொலைவில் சித்தபாரி என்ற மலைக்கிராமம். காடுகள் தொடங்குமிடம். இங்குதான் அமைந்திருக்கிறது சின்மையானாந்தா முதன் முதலில் அமைத்த தபோவனம், இப்போது பல கட்டிடங்களுடன் பெரிய அளவில் வளர்ந்து பிரம்மச்சாரிகளுக்கு வேதாந்தப் பாடங்கள் பயிற்சிகள் அளிக்கப்படும் பயிற்சிகேந்திரமாகயிருக்கிறது.
இந்தக் கேந்திரத்தைச் சேர்ந்த CORD என்ற அமைப்பு (CHINMYA ORGANASATION FOR RURAL DEVLOPMENT) உள்ளூர் சமூக ஆர்வலர்களுடன் இணைந்து நிறைய சமூகப்பணிகளும் செய்கின்றனர்.
அந்தக்குழுவினருடன் அருகிலுள்ள ஒரு மலைக்கிராமத்துக்குப் போயிருந்தேன். நாம் கற்பனை செய்து கூடப் பார்க்கமுடியாத அளவிலான பிற்பட்ட கிராமம். ஒரு காலத்தில் சாலையாகயிருந்த அடையாளம், மண்சுவர்களுடன் தாழ்ந்த தகரக் கூரை வீடுகள். வீடுகளுக்கு மின்சாரம் கிடையாது. பொதுக்கட்டிடத்திலும், தெருவிளக்குகளுக்கும் மட்டும் தான். வீடுகளுக்கான செங்கற்களை அவர்களே தயாரித்துக்கொள்கிறார்கள்.
அங்குள்ள சுய உதவிக்குழுக்குளுக்கு உதவி செய்யும் குழு CORD.. அதில் கனராவங்கியின் இரண்டு மேனாள் அதிகாரிகள். அது எனக்கு மகிழ்ச்சி தரும் விஷயமாகயிருந்தது. (நான் வாழ்க்கையின் பெரும்பகுதியை அந்த வங்கியுடன் வாழ்ந்தவன்) சுயவுதவிக்குழுக்களுக்குக் கடன் கொடுக்க எல்லா வங்கிகளும் மகிழ்ச்சியுடன் முன் வரும். காரணம். குழுத்தலைமை ஒழுங்காகக் கடனை உரிய நாளில் செலுத்திவிடும். ஆனால் கடனாகக் கொடுத்த பணம் சொல்லப்பட்ட திட்டத்துக்குத்தான் செலவழிக்கப்பட்டிருக்கிறதா? என்று வங்கிகள் கவலைப்படுவதில்லை (ensuring end use)விதிகள் இருக்கின்றன. அது.பேப்பரில் மட்டும்தான். (இந்தக் கற்பனையான கிராமபொருளாதா வளர்ச்சி, சுரண்டல் குறித்து விரிவாகப் பின்னால் எழுதுகிறேன்)
இங்குத் தான் இந்த CORD உதவுகிறது. மலை விளைபொருட்களின் உற்பத்தி, விற்பனை போன்ற பல விஷயங்களுக்குப் பயிற்சி கொடுக்கிறார்கள். ஒவ்வொரு கட்டத்திலும் உதவி செய்கிறார்கள். இடைத்தரகர்களை ஒழித்திருக்கிறார்கள்.
நான் சந்தித்த மற்றொரு சுய உதவிக்குழுவின் தலைவி CORD குழுவினரிடம் இந்தத் தவணையுடன் கடன் முடிகிறது. எங்களுக்கு இனிக் கடன் வேண்டாம் என்று சொன்னார். அவர்களுக்கு working capital, expansion அவசியம் குறித்து நண்பர் விளக்கினார். அப்போதும் தயங்கிய அந்தப்பெண்மணி "அடுத்த கூட்டத்துக்கு வந்து எல்லோருக்கும் சொல்லுங்கள்" என்றார்.
இனிக் கடன் வேண்டாம் என்று சொல்லும் வங்கி வாடிக்கையாளரைக் காண்பது அரிது. அன்று கண்டேன்
நானும் இம்மாதிரி ஒரு மாதம் CORD குழுவுடன் பணி செய்யத் தபோவன் ஸ்வாமிஜியிடம் இன்று இரவு சந்திக்கும்போது அனுமதி கேட்க வேண்டும்
All reactions:
Vidya Subramaniam, Bhaskaran Jayaraman and 73 others

30/6/24

தரம்சாலா-தபோவனம்-தலாய்லாமா4

“நீங்கள் விரும்புவது போல் ஒரு மாதம் எல்லாம் ஹாபி மாதிரி செய்யக்கூடிய பணியல்ல அது. இரண்டுவருடமாவது செய்ய வேண்டும். மேலும் நீங்கள்”pahari” மொழியைக் கற்றுகொள்ளவேண்டும்”. (ஹிந்தி தான் மாநில மொழியானாலும் பழங்குடி கிராம மக்கள் அதைப்பேசுவதில்லை) என்பது CORDல் நான் தன்னார்வலாராக இணைந்து பணியாற்ற அனுமதி கேட்டதற்கு ஸ்வாமிஜி பிரகாஷானந்தா. (இவரை ரெஸிடென்ட் ஆச்சார்யா என்றழைக்கிறார்கள்.)
“ஹிந்தியே தடுமாறும் உங்களால் இனிமேல் ஒரு புதிய மொழியை கற்க முடியாது” என்று மனைவி சொல்ல (அவருக்கு நான் இங்கேயே தங்கிவிடுவேனோ என்ற பயமும் ஒரு காரணம்) எண்ணத்தை அடுத்த பிறவிக்கு ஒத்தி வைத்தேன்.
இங்கு நாள் காலை5.45க்கு குருதேவரின் சமாதி ஸ்தலத்தில் வழிபாடு ஆர்த்தியுடன் தொடங்குகிறது. நாம் அதற்குள் ரெடியாக வேண்டும். நம் மாதிரி விஸிட்டர்களுக்கு கட்டாயம் இல்லை. ஆனால் நம்மோடு எழுந்து . இமயத்திலிருந்து பால்கனிவழியாக எட்டிப்பார்க்கும் சூரியனும் ஒலிக்கும் வேதங்களும் நம்மை அழைக்கிறது.
6.15க்கு முடிந்த குருதேவரின் ஆர்த்திக்கு பின் அருகிலுள்ள ராமர் கோவிலில் பூஜை, வாழ்நாள் முழுவதும் கீதையை பல வடிவங்களில் போதித்த சின்மையானந்தா கிருஷ்ணருக்கு ஒரு கோவில் எழுப்பாமல் இங்கு எந்த ஆர்பாட்டமும் இல்லாமல் 1983ல் ராமருக்கு ஒரு கோவில் உருவாக்கியிருக்கிறார். ஒரு கோடிக்குமேல் 24 நாடுகளிலிருந்து வந்த ராமநாமம் எழுதப்பட்ட நோட்டுபுத்தகங்கள் கருவரையின் அஸ்திவாரத்திலிருப்பதாக தகவல் பலகை சொல்லுகிறது.
பளிரென்று ஒளிரும் கருங்கற்களில் கேரள அம்பலம். (நுழை வாயிற்படியில் ஆமை(கூர்மம்) பாணியில் வட்ட வடிவ கருவறை, முன்னால் விஸ்தாரமான ஹால். கண்ணாடி பேழையில் வேதங்கள் எழுதப்பட்ட பெரிய புத்தகம். கோவிலின் கோபுரமாக ராமர் கீரிடம். வடிவமைத்து கட்டியிருப்பது தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு பொறியாளார் நிறுவனம்.
சன்னதியின் எதிரில் தரையில் உட்கார்ந்து பிரார்த்தனை செய்ய முடிவதால். ராமர் நம்முடன் பேசும் உணர்வு எழுகிறது. மூலவர் வன வாசகோலம். உற்சவர் சீதை,இளவல், மற்றும் ஆஞ்சநேயருடன்.. வடித்த சிற்பி யாரோ அழகும் அமைதியும் கொஞ்சுகிறது. இது இந்த மாநிலத்தில் எழுப்பட்ட முதல் ராமர் கோவில்.
இங்கு பூஜைகள் முடிந்த பின்னரும் அங்கேயே அமர்ந்திருக்கிறோம். தொடர்ந்து அந்த வளாகத்திலிருக்கும் ஒரு பிரமாண்ட ஆஞ்னேயருக்கு பூஜை. ஏன் ஆஞ்சேனேயருக்கு இவ்வளவு பெரிய சிலை? என்பது ஒரு சுவாரஸ்யமான தகவல். காலை உணவு மணி அழைக்கிறது. அதை அடுத்த பதிவில் பேசுவோமே
All reactions:
Vidya Subramaniam, Manthiramoorthi Alagu and 66 others
20
1
Like
Comment
Send
Share