22/8/10

கதையெழுதும் கண் டாக்டர்




சென்னயின் அந்த பிரபல கண்மருத்துவ மனையின்  சிறிய ஹால் நிரம்பிவழிகிறது.டாக்டர்களின் வருகைக்காக காத்திருக்கிறார்கள்.. சிகிச்சைக்காக அல்லஅந்த மருத்துமனையின் டாக்டரின் காபி வித் வக்கீல் வரது   புத்தக வெளியிட்டுவிழாவின் துவக்கத்திற்காகபுத்தகத்தின் பெயரில் காபி இருப்பதலோ என்னவோ வந்தவர்களுக்கு கொதிக்கொதிக்க காபி பித்தளை டபரா செட்டில் தந்தார்கள்
பார்க்க காத்திருக்கும் பல பேஷண்ட்கள்அடுத்த சிலமணிநேரத்தில் செய்ய வேண்டிய  கண்  மாற்ற ஆப்ரேஷனுக்கான ஆயுத்தங்கள்ரோட்டரிகிளப்  கண் வங்கியின் டைரக்டர்பணி,தமிழ்நாடு கண் மருத்துவர்களுக்கான பத்திரிகையின் ஆசிரியர் என தினமும் பரபப்பாகயிருக்கும் டாக்டர் சுஜாதா மோகன் அதற்கிடையிலும் ஒருசிறுகதைகள் தொகுப்பை வெளியிட்டிருக்கிறார்இவர்   டாக்டர் ராஜன் கண்மருத்தவ மனையை நிர்வகிக்கும்  கண் டாக்டர் மோகனின் மனைவிஇந்த டாக்டர் தம்பதியினர் 90களிலியே கண்அறுவைசிகிச்சையில் உலகத்தரத்தில் புதிய நுட்பங்களை கொண்டுவந்து இன்றும் தொடர்ந்துகொண்டிருப்பவர்கள்.
 இவரது புத்தகத்தில் சிதம்பரத்தில் வாழ்ந்த ஒரு ஆச்சாரமான ஐங்கார் வரதாச்சாரி என்ற வக்கில் குடும்பத்தின் சொந்தகாரர்களை பாத்திங்களாக்கி 12 சிறுகதைகளாக உருவாக்கி ஒரு மெல்லிய இழையில் அவைகளை இணைத்து நாவலாக தொடுத்திருக்கிறார்எளிய அழகான நடைபாத்திரங்களின் சின்னசின்ன செயல்களில் கடந்த தலமுறை குடும்ப வழக்கங்கள்மதிப்பீடுகள்  போன்றவற்றை மெல்லிய நகைச்சுவையடன் சொல்லுகிறார்சீதாப்பாட்டி அப்புசாமியைப்படைத்த ஜெயராஜ் கதாபாத்திரங்களுக்கு உயிர்கொடுத்திருக்கிறார்படிக்கும் நடுத்திரவயதினருக்கு நிச்சியம் தங்கள் இளமைகாலம் நினைவில் நிழலாடும்.

இரண்டு பெண்களுக்கு தாயான  இவரின் முதல் புத்தகம் இதுபத்திரமான தலைப்பிரசவம் என  சொல்லும் இவர் ஒரு மருத்தவ குடும்பதின் மூன்றாவதுதலைமுறை டாக்டர். (இவது மகளும்  அரசு மருத்துவகல்லூரியில்  முதலாண்டு படிக்கிறார் !) இவர் எப்படி கதை எழுதத்துவங்கினார்எனக்கே ஆச்சரியமான விஷயம் இது என்று சொல்லும் இவர்  பள்ளியில் தன்னை எழுதத்தூண்டிய ஆசிரியர்களை நன்றியுடன் நினைவு கூறுகிறார் . தனது கணவரும் குடும்பத்தினரும் நண்பர்களும் தான் இது புத்தகமாக வந்ததற்கு காரணம் என்கிறார்.

தமிழ் தாய்மொழியாக இருந்தும்தமிழிலேயே பள்ளிப்படிப்பை முடித்திருந்தும் இதை ஆங்கிலத்தில் எழுதியிருப்பதற்கு காரணம் ஆங்கிலத்தில் பல ஆண்டுகள் தொடர்ந்த மருத்துவ படிப்பும் ஆங்கிலத்தில்  தொடர்ந்து மருத்தவ கட்டுரைகள் எழுதி ஆங்கிலம் சரளமாகிவிட்டதுதான்  என்கிறார்

பொதுவாக மருத்துவ துறை சம்பந்தப்பட்ட விழாக்களில் மட்டுமே பங்கேற்கும் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைகழக துணைவேந்தர் டாக்டர் மயில்வாகனன் நடராஜன் இந்த புத்தகத்தை வெளியிட்டது   ஒரு ஆச்சரியமான மகிழ்ச்சிஅதைவிட மகிழ்ச்சியான விஷயம் மருத்துவர்கள்  தங்கள் பணி¢யைதாண்டி இப்படி இலக்கிய பணிகள் செய்வது மிகவும் வரவேற்கவேண்டிய ஒன்றுமருத்தவ பல்கலைகழகமே தமிழில் டாக்டர்களின் இப்படிபட்ட இலக்கியபணிகளுக்கு பரிசு கொடுத்து கெளரவிப்பது பற்றி ஆலோசித்துகொண்டிருக்கிறதுஎன்ற அவரது அறிவிப்பு..


கண் மாற்று அறுவை சிகிச்சையில்  உலகின் சிறந்த முதல் 27 பேர்களின் பட்டியலில் இடம்பெற்றிருக்கும் இந்த கண் டாக்டர்தன்னிடம் வருபவர்களின் கண்களை கவனமாக பார்ப்பதுபோலதன் கண்களால் தன்னை சுற்றியிருப்பவர்க¨யும் அவர்களின் உலகத்தையும் கவனமாக பார்த்து கொண்டிருப்பவர் என்பது இந்த புத்தகதிலிருந்து புரிகிறது.
சந்திப்பு ; ரமணன்





கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்கள்