ஆதித்தியா
அரியானா
மாநிலம் ஹிசார் மாவட்டத்தில் உள்ள சின்சுவாஸ்
கிராமத்தை சேர்ந்த விவசாயி கபூர்சிங். இவர் ஒரு பெண் எருமையை லட்சுமி என பெயரிட்டு அன்புடன் வளர்த்து பராமரித்து வந்தார். அரியானா
மாநிலத்தின் முர்ரா எருமை மாடுகள் உலக அளவில் மிகவும் பிரசித்தி பெற்றது. அவை
நாளொன்றுக்கு 32 கிலோ அளவிற்கு கூட
பால் கறக்கும் அந்த இனத்தை
சேர்ந்த லட்சுமி நாள் ஒன்றுக்கு சராசரியாக 22.5 லிட்டர்
முதல் 28 லிட்டர் வரை பால் கறக்கிறது..
லட்சுமி பல கால் நடை கண்காட்சிகளில் கலந்து கொண்டு பல லட்சம் மதிப்புள்ள
பரிசுகளை பெற்றுள்ளது. சமீபத்தில் முக்ஸ்டார் என்ற இடத்தில் நடந்த கண்காட்சியில்
”அழகி போட்டி” ”அதிக அளவு பால் வழங்கும்
எருமை” போன்ற பல்வேறு
போட்டிகளில் வெற்றி பெற்று ரூ.3 லட்சம் பரிசை வென்றதினால்
இந்த கருப்பு அழகி மாநிலம் முழுவதும்
பாப்புலர்..
பலர் விலைக்கு கேட்டும் தர
மறுத்துகொண்டிருந்தார் அதன் உரிமையாளர். . கடந்த மாதம் ஆந்திர
மாநிலத்தை சேர்ந்த விவசாயி ராஜீவ் சார்பாஞ்ச் என்பவர் மிக அதிக விலையாக
லட்சுமிக்கு 19 லட்சம் தருவதாக கேட்டபோது அவரை தவிர்ப்பதற்காக விலை 25 லட்சம் என்று சொல்லியிருக்கிறார். ராஜீவ் அதை தர சம்மதித்து
உரிமையாளர் கபூர் சிங்கை ஆச்சரியபடுத்தினார்,
இவ்வளவு பெரும் பணத்தை தனக்கு அளித்த அருமை லட்சுமியை ஒரு பிரிவுபசார விழா
நடத்தி மரியாதையோடு அனுப்ப விரும்பினார் கபூர் சிங்.விழாவிற்கு நாள் குறிக்க
பட்டது. அன்று லஷ்மிக்கு விசேஷமாக தயாரிக்கப்பட்ட ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள வெள்ளி நகைகளை அணிவித்து அலங்கரித்தார்.
இதை கடந்த 2 ஆண்டுக்கு முன்பு கபூர்சிங் இதை வாங்கிய விலை 2 லட்சம். தற்போது இது 3-வது தடவை கர்ப்பமாக உள்ளது. இன்னும் ஒரு மாதத்தில் கன்று ஈனும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆந்திராவிலிருந்து அரியான வந்து
ஒரு பென்ஸ்காரின் விலையில் ஏன் இப்படி இந்த எருமை மாட்டை வாங்குகிறார் ? 2014 ஜனவரியில் ஆந்திர அரசு நடத்தவிற்கும்
கால்நடை கண்காட்சியில் தேர்ந்தெடுக்கபடும்
சிறாந்த எருமைக்கு கிடைக்க போகும்
பரிசு ஒரு கிலோ தங்கமாம்.
ஆதித்தியா
அருமையான் விஷயம் ஆனால் பென்ஸூடன் ஒப்பிடுவது சற்ரு அதிகம்தான்.
பதிலளிநீக்குகண்ணன்