3/1/14

மசாலா தோசையிலிருந்து மெல்போர்னுக்கு .

சென்னை  அடையார் பார்க் ஹோட்டல் டவரின் ஆறாவது மாடியில் நண்பருடன் கிளப் லெளன்ஞ்சில் பிரேக்பாஸ்ட். தவிர்க்க முயற்சித்து இயலாது போன ஒரு பிரேக்பாஸ்ட். கண்ணாடிகளின்வெளியே ஆச்சரியபடுத்திக்கொண்டிருக்கும் சென்னையின் பசுமை. நகரிலேயே காஸ்டிலியான. ஊத்தப்பம் சாப்பிட்டுகொண்டிருக்கிறோம். (நமக்கு பிடித்தது (தெரிந்தது?) வேறு எதுமில்லை) பக்கத்து டேபிளில் ஆரஞ்ச் கலர் ஜிப்பாவில் தங்க பிரேம் கண்ணாடியில் ஒருவர்.  யாருடனோ  போனில் யாழ் தமிழில் சென்னை திருவையாறு பற்றி கதைத்துக்கொண்டிருந்தார். பொதுவாக இம்மாதிரி ஹோட்டல்களில் பக்கத்து மேஜைக்கார்களுடன் பேசவே மாட்டார்கள் அதிக பட்சம் ஒரு செயற்கையான ஹலோ, மாறாக இந்த மனிதர் தான் சாப்பிட்ட மசாலா தோசையின் ருசி அற்புதம் என பேச தொடங்கினார். மசாலா தோசையிலிருந்து பேச்சு மெல்ல  மெல்போர்னுக்கு போனது. காரணம் அங்கு வசிப்பவர் அவர். சென்னை மீயூசிக் சீசனுக்கு  குடும்பத்துடன் வந்திருப்பதாகவும்,   கேட்கவேண்டிய கச்சேரிகளை  தேர்ந்தெடுத்து கேட்பதாகவும் சொன்னார். இம்மாதிரி இப்போது நிறைய NRI க்கள் வருவதால் அது எனக்கு பெரிய விஷயமாக தோன்றவில்லை.  ஆனால் தொடர்ந்து சொன்னது தான் என்னை கவர்ந்த விஷயம். இது தன் மகளுக்காக என்றும் அவர் 4 வயதிலிருந்து மெல்போர்னிலேயே கர்நாடக இசை கற்றுவருகிறார் என்றும்  ஆண்டு தோறும் இங்கு வந்து தன் மியூசிக்கை இம்ரூவ் செய்து கொள்கிறார் என்றும் சொன்னார். தன் மனைவி ஒரு கீரிஸ் தேச பெண் என்றார்.  அப்பா இலங்கை அம்மா கீரிஸ், பெண் கர்நாடக இசை கற்று கொண்டுவருகிறது என்பதை கேட்டதும்  என் பத்திரிகைகாரன் புத்தி முழித்துகொண்டது. அவர்களை சந்திக்க வேண்டுமே என்றேன்.
இரண்டு நாட்களுக்கு பின்  அந்த குடும்பத்தினரை சந்திதேன்.   ஒரு மயிலாப்பூர் பெண்ணைபோல பட்டுபுடவையில் வந்து ஆச்சரியபடுத்தியவர்  ஷக்தி  அவர் மகள் ! சென்னையில் இருக்கும்போது  இதுதான் டிரஸாம்.



 4 வயதில் கர்நாடக வாய்ப்பாட்டு, 5 வயதில் வயலின் 6 வயதில் பியானோவுடன் வெஸ்டர்ன் மீயூஸிக் 7 வயதில்.பரதம், விணை என்று சகலுமும் ஆஸ்திரேலியாவிலேயே கற்க ஆரம்பித்து தொடர்ந்து எல்லாவற்றிலும் டிப்பளமோ வாங்கியதை மிக பணிவுடன் சொல்லி பிரமிக்க வைத்தார். ஷக்தி. வீட்டில் அம்மாவுடன் லத்தின் அப்பாவுடன் இங்கிலீஷ் என்று பேசுவதால் தமிழ் பேச தெரியாது. என்று சொன்னவர் என்னுடன் பிரிட்டிஷ் ஆக்ஸஸெண்ட் ஆங்கிலத்தில் தான் பேசிக்கொண்டிருந்தார்.  எனக்கு பாடிக்காட்ட விரும்பியபோது. (நாம் ஓளெரங்க சீப் என்று அவருக்கு தெரியாது) சட்டென்று  ஹைஹீல் செருப்பை கழட்டிவிட்டு தரையில் உட்கார்ந்து ”குறை ஓன்றும் இல்லை” பாடினார். அவரது குரு  எங்கு பாடினாலும் தரையில் உட்கார்ந்துதான்  பாட வேண்டும் எனறு சொல்லியிருக்கிறாம். நல்ல குரல்வளம்,ராகம் எல்லாம்  கண்ணைமூடி கேட்டால் ஷக்தி தமிழ் தெரியாத ஆஸ்திரேலிய பெண் என்று யாரும் நம்ப மாட்டார்கள். அவ்வளவு அழகாக பாடுகிறார்.  சங்கீதத்தின் எல்லைகளை தொட முயலும் இந்த அழகான பெண்  ஸ்கூல்படிப்பு முடித்து மெடிசன் படிக்க கல்லூரியில் சேர்ந்திருக்கிறார். 10 வருடம் பரதம் கற்று கடந்த வருடம் அரேங்கேற்றம் செய்திருக்கிறார். படிப்பிலும் டாப். ஆஸ்திரேலியா மேக்ஸ் ஒலிம்ப்யார்ட் போட்டிகளில் முதல் 15% இடம் பெருமளவுக்கு கணக்கு தெரிந்திருக்கிறது.  டாக்டருக்கு படித்தாலும் கர்நாடக சங்கீதத்தை தொடர்வேன் Music is my life என்று சொல்லி  என்னை பிரமிக்கவைத்த  இந்த புத்திசாலிப்பெண்ணை பற்றி விரைவில் கல்கியில் எழதவிருக்கிறேன்.  இந்த வார இறுதியில் எங்கள் கீரின் ஏக்கர் கிளப்பிற்கு வந்து பாடும்படி  அழைத்திருக்கிறேன்.

நல்ல பயணங்களைப்போலவே, எதிர்பாராமல் ஆச்சரியப்படுத்தும் சந்திப்புகளும் அவ்வப்போது எனக்கு வாய்க்கிறது. 2013 ஆண்டின் இறுதிநளில்  கிடைத்த இதுவும் அத்தகைய ஓன்று இது

ஹேப்பி நீயூ இயர். 

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்கள்