30/3/14

கஙகைக்கரை ரகசியங்கள் 11




நேற்று செய்தது போல
உலகின் முதல் பல்கலைகழகம் என  வர்ணிக்கபடும் நாளந்தா இந்த புத்த தேசத்தில் தான் இருக்கிறது. பல்கலை கழகத்தை தவிர ஒர் பெரிய புத்த மடாலாயமும் இருந்திருக்கிறது. ராஜ்கீரிலிருந்து புத்தர் இந்த இடத்திற்கு தான் வந்திருக்கிறார். அந்த பல்கலைகழகத்தில் தான் கண்ட உண்மையை போதித்தாரா? அல்லது  அங்கிருந்த மற்ற சமய அறிஞ்கர்களுடன் தன் கொள்ககைகளை விவாதித்தாரா என்பதில் ஆராய்ச்சியாளார்கள் வேறுபடுகிறார்கள்.   இன்று  உலகின் பல பல்கலைகழகங்களுக்கு நம் மாணவர்கள் போகிறார்கள். ஆனால் கி,மு 5 ஆம் நூற்றாண்டிலேயே உலகின் பல பகுதிகளிலிருந்து மாணவர்கள் படிக்க இந்த மண்ணிற்கு வந்திருக்கிறார்கள். அந்த இடத்தில் இன்று இருக்கும்  அடையாளங்களை பார்க்க போய்க்கொண்டிருக்கிறோம். ராஜ்கீர்- நாளந்தா பகுதி பல பெரிய கல்விக்கூடங்களின் தொகுதியாகயிருந்திருக்கிறது. இசை, நடன நாடக கலைகள் முறையாக கற்பிக்க பட்டிருக்கின்றன.
 ராஜ்கீரிலிருந்து நாளந்தா போகும் வழியில் ஏதேனும் ஒரு  அழகான கிராமிய மணம் கமுழும் சூழலை கண்டுபிடித்து   பிக்னிக் போல   மதிய உணவை குழுவினர் முடிக்கவேண்டும் என்பது திட்டம்.  ஆனால் அதைச்செயாலாற்றியதில் ஒரு சின்ன சறுக்கல். மொத்த குழுவினரும்  5 பஸ்களில் பயணித்து கொண்டிருந்தோம்.  ராஜ்கீரிலிருந்து  புறப்பட்டபின் நாளந்தா விற்கு வரும் வழியில்  முதல் பஸ் ஒரு பாதையிலும் மற்றவை பிரிந்து  மற்றோர் பாதையிலும்  போய்விட்டது. இன்றறைய செல்போன், ஜிபிஎஸ்  யுகத்திலும் இத்தகைய தவறுகள் நேரத்தான் செய்கின்றன.  சாப்பாடு பாக்கெட்டுகள் அனைத்தும் ஒரு பஸ்ஸில் இருந்ததால் அனைவரின் வருகைக்காக ஒரு  வயல்வெளியில் காத்திருக்க நேர்ந்தது.  நெல்வயல்கள், தோப்புகள்  சுடாத வெய்யில்,மெல்லியகாற்றுஇருந்தும்,,நேரம்விணாகிக்கொண்டிருக்கிறதே
சாப்பாடு சங்கிலி
என்ற உணர்வும்,பசியும் சுழலை ரசிக்க முடியாமல் செய்தது. பஸ்கள் வந்ததும் எல்லோருக்கும்உடனே உணவு பாக்கெட்கள் கிடைக்க ஈஷா தொண்டர் படை செய்த காரியம் அவர்களின் அனுபவத்தை காட்டியது. ஓவ்வொரு பஸ்முன்பும் 10 பேர்களின் மனித சங்கிலி. பாக்கெட்கள் சர சரவென கைமாறியது. கடைசிபஸ்ஸில் இருப்பவர்களுக்கு கிடைத்தவுடன் அந்த சங்கிலி அங்கே துண்டிக்கபட்ட்து.  அதேபோல் அடுத்தடுத்த பஸ்களுக்கும். இப்படி 10 நிமிடத்திற்குள் 200 பேர் கையிலும் பாக்கெட்கள். இந்தப் பயணத்தில் இந்த தொண்டர் படையினரின் பணி நம்மை ஆச்சரியபடுத்திய விஷயங்களில் ஒன்று. தண்ணீர் பாட்டிலா, தலைவலி மாத்திரையா, செல்போன் சார்ஜரா,  எதுவாகயிருந்தாலும் நிமிடங்களில் வந்தது. இவர்கள் ஈஷா செண்டரில்  ஆடிட்டிங், பதிப்புகள், யோகாஆசிரியர் என வெவ்வேறு பிரிவுகளில் இருக்கும் முழுநேர தொண்டர்கள்.  இந்த  பயணப் பணிகளை செய்ய பணிக்கப்பட்டிருப்பவர்கள். எவ்வித தயக்கமும் இல்லாமல் எல்லாப் பணியையும் செய்கிறார்கள். ஒரு ஹோட்டலில் உணவு தாமதமானது. இவர்களே கிச்சனில் நுழைந்து  அவர்களுக்கு தயாரிப்பில் உதவினார்கள்.
பஸ் குழப்பத்தினால் நேர்ந்த தாமதத்தை தவிர்க்க  நளாந்தா பயணத்தை தவிர்த்து நேரடியாக பாட்னா செல்வது என்ற முடிவை அறிவிக்கிறார்கள். பலருக்கு ஏமாற்றம். குழுவில் இந்தியாவின் பல பகுதிகளுக்கும் திரும்பிச்செல்லபவர்களுக்கு அங்கிருந்து  அன்றிரவு பயண ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததால் மனமில்லாமல் ஏற்கிறார்கள். இவ்வளவு தூரம் வந்து நாளந்தா பார்க்கமல் திரும்ப விரும்பாத அதைப்பார்க்க போகமுடிவுசெய்த ஒரு சிறுகுழுவுடன் நாம் இணைந்து கொண்டு நாளந்தாவிற்கு பயணத்தை தொடர்கிறோம்.
கங்கையின் கிளைநதிகளில் ஒன்றின் அருகில் படா கோவன் என்ற சின்ன கிராமத்தின்  நடுவே இருக்கிறது அன்று நாளந்தாபல்கலைகழகம் இருந்த இடம்.  நாளந்தா என்றால் தாமரையின் உறைவிடம் என்று பொருள். தாமரை மலர் நமது மரபில் வேதகாலம் முதல் கல்வியின், ஞானத்தின் அடையாளமாக மதிக்கப்பட்டிருக்கிறது. இன்று வெறும் செங்கல் கட்டிட இடிபாடுகளாக இருக்கும் இந்த இடத்தில் தான் புத்தருக்கு முன்னரே கி.மு 5 நூற்றாண்டிலேயே வானியல், சோதிடம்,மருத்துவம், இலக்கணம், மதவியல், கணிதம்  போன்றவைகளை கற்பிக்க தனித்தனிதுறைகளுடன்   
டெரக்கோட்டா சீல்
ஒரு பல்கலைகழகம், மாணவர்கள் தங்கி படிக்கும் வசதியுடன் இயங்கியிருக்கிறது.  உலகிலேயே அனைத்து கல்விகளையும் ஒரே குடையின் கீழ் ,ஒருபல்கலைகழகழகமாக்கும் முறை இங்குதான் முதலில் அறிமுகபடுத்தபட்டிருக்கிறது. 10,000 மாணவர்களும், 2000 ஆசிரியர்களும் இருந்திருக்கிறார்கள். கிபி 12ஆம் நூற்றாண்டுவரை இயங்கியிருக்கிறது. 1700 வருடங்கள் முன்,இன்று உலகின் புகழ் பெற்ற பலகலைகழகங்கள் இருந்த நகரங்கள் கூட பிறக்காத காலத்திலியே ஒரு பல்கலைகழகமிருந்த இடம் இது.   மொழி இலக்கணத்தை படைத்த பாணிணி, வானியல்விற்பன்னர் ஆரியபட்டர், மருத்துவத்தின் தந்தை வராஹமிஹிரர் போன்றவர்கள் இங்கிருந்து தான் ஆராய்ச்சிகளைச் செய்திருக்கிறார்கள்.
வளாகத்தின் நடுவே ஒரு ஸ்தூபி சுற்றிலும்  பெரிய கட்டிடங்களின் அடிச்சுவர்களின் மிச்சங்கள். மேற்பகுதி மரத்தாலானவைகளாக இருந்து அழிந்திருக்கலாம். இன்று காலச்சுவடுகளாக வெறும் கற்களாக நிற்கிறது.  புத்தருக்குமுன், புத்தர் காலத்தில், புத்தருக்குபின் மன்னர்  ஹர்ஷவர்தன் காலம் என்று மூன்று காலகட்டத்தை கடந்து நின்றிருக்கிறது.  சமண தீர்தங்கள்  மாகவீர்ர் உள்பட பலர் வந்திருக்கிறார்கள். சீன யாத்திரிகர் யூவான் சுவாங் இந்த பலகலை கழகத்தை பார்க்கவந்தவர் 5 ஆண்டு காலம் தங்கி சம்ஸ்கிருதமும், பெளத்தமும் பயின்றிருக்கிறார்.  அவர் எழுதி சீனாவில் இருக்கும் குறிப்புகள் தான் இந்த பெருமைமிக்க இடத்தை அடையாளம் காட்டியிருக்கிறது.
டெல்லிக்கு வந்த முகம்மதியர்  ஆட்சியில் பக்தியார் கில்ஜி 1203ல்  தன் எல்லைகளை விரிவாக்கிய படையெடுப்புகளில் இது அழிந்திருக்கிறது. 10000 பிட்சுகள் கொல்லபட்டு பிரமாண்டமான சுவடி நூலகம் எரிக்கபட்டிருக்கிறது. முகமதிய ஆக்ரமிப்பாளார்கள் கண்டு பயந்த ஆயுதம் கல்வி,  கல்வியாளர்களையும், அவர்களின் சேமிப்புகளையும். அழித்துவிட்டால் அந்த சமூகத்தையே அழித்துவிடலாம் என கருதியிருக்கிறார்கள். ஆனால்  எரித்து சூறையாடபட்ட நாளந்தாவில் 1235ல் ஒரு 90 வயது ஆசிரியர் ராகுல ஸ்ரீபத்ரா 70  மாணவர்களுக்கு பாடம் நடத்திக்கொண்டிருந்தார் என எழுதுகிறார் யுவான் சுவாங்.  எரிந்த சுவடி நூலகத்தில் மிஞ்சியவை இன்று திபேத்திய  நூலகத்தில் இருக்கின்றன.
 வளாகத்தின் எதிரில் ஒரு சிறிய  அருங்காட்சியகம். அங்கு  அகழ்வாராய்ச்சியில் கிடைத்தவைகளை சேமித்திருக்கிறார்க்ள். நிறைய புத்தர் சிலைகள், கருவிகள், கல்வெட்டுக்கள்.  கருப்பு வண்ணத்தில் ஒரு வலது கை தரையை நோக்கி இருக்கும் ஒரு  புத்தர் கருங்கல் சிலை  நேற்று செய்ததைப்போல் பொலிவுடன்  இருக்கிறது. பல்கலைகழகம் எப்படியிருந்திருக்கும் என்பதை காட்டும் வரைந்த படம் நமக்கு அதன் கம்பீரத்தைப் புரிய வைக்கிறது. யூவான் சுவாங்க்கு ஒரு நினைவு மண்டபம் அதன் முன் அவர் சிலை. உடை அலங்காரம் சற்று வினோதமாகயிருக்கிறது.

 சீனத் தலைநகரில்  துவங்கி ஆப்கானிஸ்தான்,பாக்கிஸ்தான் வழியாக இந்தியாவிற்கு வந்த யூவான் சுவாங் தமிழகத்தின் காஞ்சிபுரம் வரை வந்து பின்னர்  பாட்னா வழியாக இங்கு வந்து  இந்த பல்கலைகழகத்தை கண்டு மயங்கி  5 ஆண்டுகள் யோகசாஸ்திரமும், சமஸ்கிருதம் கற்றிருக்கிறார்.  இங்கிருந்து தாய் நாட்டுக்கு திரும்பும்போது 22 குதிரைகளில் 620 புத்தகங்களையும் புத்தர் பொற்சிலையும் சீனாவிற்கு எடுத்துசென்றிருக்கிறார். பல சமஸ்கிருத புத்தகங்களை  தன் இறுதிக்காலத்தில் சீன மொழியில்  மொழிபெயர்த்திருக்கிறார் இந்த ஆச்சரியமான உலகம் சுற்றிய பயணி.
 அருங்காட்சியகத்தில் எரிக்கப்பட்ட நாளந்தாவிலிருந்த கிடைத்த அரிசி என ஒரு தட்டில் கறுப்பு வண்ண அரிசி கண்ணாடிப்  பேழைக்குள் காட்சிக்கு வைத்திருக்கிறார்கள்.
இன்றுஇதே பலகழகத்தை மீண்டும் உருவாக்க முடியாது என்றாலும் பீஹார் அரசு இந்த பகுதி முழுவதிலும் அத்தனைவிதமான உயர் கல்வி நிலயங்களையும் நிறுவி  கல்விநகரமாக்க வேண்டும், அவைகளை இணைத்து ஒரு புதியமாதிரி பல்லைகழகத்தை நிறுவவேண்டும்
என்று  நோபல் அறிஞர் அமிர்தாசென்னின் தலமையில் ஒரு குழு அமைத்து செயல்பட்டுகொண்டிருக்கிறது. எந்தவிதமான ஒதுக்கீடுமுறைகளும் இல்லாமல்,தகுதியின் அடிப்படையில் மட்டுமே உலகின் எந்த பகுதியிலிருக்கும் மாணவர்கள் இந்த புதிய நளாந்தாவில் சேர்க்கப்படபோகிறார்கள் என்ற மகிழ்ச்சியான செய்தியை அறிந்து கொண்டு  இரவு பட்னா நகர் திரும்புகிறோம்.
-----------------------------------------------------------------------------------------------------
 சத்குருவின் பதில்கள்
இந்தியாவில் தோன்றிய பௌத்த மதம் ஏன் இந்தியாவில் வேர் விட்டு வளராமல் போனது?

ஒரு மதத்தை உருவாக்கும் நோக்கம் புத்தருக்கு அப்போது இல்லை. இந்தியாவில் பௌத்தம் வளராமல் வெளிநாட்டில் போய் இருக்கிறது என்றால், அதற்குப் புத்தர் செய்த வேலைதான் அடிப்படைக் காரணம். இந்த நாட்டில், இந்த கலாச்சாரத்தில் அவர் சொன்னது ஒன்றும் புதிதல்ல. முதலில் இருந்தே இருந்த ஒன்றுதான். ஆரம்பத்தில் சிலர் ரொம்ப முக்கியான படிநிலையாக ஆன்மிகம் என்பது வெறும் சமஸ்கிருத பாஷையில் மட்டும்தான் இருக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு வைத்திருந்தார்கள். இந்த சமஸ்கிருத பாஷை ஏதோ ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கு மட்டும்தான் வாய்ப்பாக இருந்தது. அப்போ சாமானிய மக்களுக்கு இந்த ஆன்மீகத்தின் வழியை அடைய வாய்ப்பில்லாத சூழல் இருந்தது. புத்தர் வந்தபோது முக்கியமான வேலை என்ன செய்தார் என்றால், சாமானிய பாஷையில் பேச ஆரம்பித்தார். அதுவே ஒரு பெரிய புரட்சியாக நடந்தது. சாமானிய மக்கள் அதையெல்லாம் காதில் கேட்டதே இல்லை. ஆனால், மேற்கத்திய வெளிநாடுகளின் பக்கம் போனால், அவர்கள் இதையெல்லாம் கேள்விப்பட்டதே இல்லை.மனிதன் உள்நோக்கிச் செல்லும் நிலையே அவர்களுக்குத் தெரியாது. எல்லாவற்றிற்கும் கடவுளைக் கூப்பிட வேண்டும் என்ற மனநிலையில் இருக்கிறார்கள். மதமில்லாத ஆன்மிகம் இங்கேதான் பிறந்து வளர்ந்திருக்கிறது. அதனால் அது அங்கே வளர்ந்தது.
புத்தர் சொன்ன முக்கியமான புரட்சி என்னவென்றால், இந்துக் கலாச்சாரம் அந்தக் காலத்தில் சடங்குகளால் சிக்கிக் கிடந்தது. அதனால் தியான நிலையில் அதுக்கு மேல ஒரு விஷயத்தைச் செதுக்க முடியும் என்று இந்தத் தியான வழியைக் காட்டினார். ஆனால் இப்போ இருக்கும் புத்தம் இந்த இந்துக் கலாச்சாரத்தில் என்ன சடங்குகள் இருக்கோ, அதற்கும் மேலே சடங்குகள் வைத்திருக்கிறார்கள். அதனால் இந்த நாட்டில் இப்போது அது செல்லாது போய்விட்டது
















1 கருத்து :

  1. கல்பனா ஆனந்த்24 மார்ச், 2014 அன்று PM 5:44

    உலகின் முதல் பல்கலைகழகம் இந்தியாவில் என்பது புதிய செய்தி. சீனாவில் என நினைத்து கொண்டிருந்தேன், புதிய நாலந்தாவில் கோட்டா கிடையாதா? அரசாங்க எப்படி பணம் கொடுக்கும்?

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்கள்