23/8/14

உயிர் துறக்கும் உரிமை



ஒரு மனிதனுக்கு தான் உயிரை விரும்பிய போது துறக்கும் உரிமை உண்டா? தன்னுயிரை தானே மாய்துகொள்வது என்பது  தற்கொலை அதுவும் அதற்காக முயற்சிப்பதும்  உலகின் பல நாடுகளில் சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும். ஆனால் ஸ்விஸ் நாட்டில் இது  குற்றமில்லை. சட்ட விதிகளுக்குட்பட்டு ஒருவர் தன் மரணத்தை தீர்மானித்துகொள்ள முடியும்.
ஸூரிச் நகரில் இதை செய்து கொடுப்பதற்காகவே ஒரு அமைப்பு செயல் படுகிறது. அதன் பெயர் டிகினாட்ஸ் (DIGNITAS) இவர்கள் தன் உயிரைப்போக்கிக்கொள்ள விரும்புகிறவர்களுக்கு, உடல் ரீதியாக எந்த பிரச்ச்னைகள் இல்லாவிட்டாலும் கூட, மரணத்தை அவர் விருப்பம்போல செய்ய திட்டமிட்டுகொடுத்து அனுமதிகள் பெற்று செய்துகொடுக்கிறது.
இதைப்போல  உலகின் 23 நாடுகளில, உயிரை விரும்பி போக்கிகொள்ளு விரும்புபவர்களின் 38 சொஸைட்டிகளின் கூட்டமைப்பு ஒன்றும் 1980லிருந்து இயங்கி வருகிறது.  1998ல்  துவக்கபட்ட டிகினாட்ஸ் அமைப்பில்  உலகின் பல பகுதிகளிலிருந்தும் பதிவு செய்துகொண்டிருக்கும் உறுப்பினர்களின் எண்ணிக்கை 7000 த்த தாண்டுகிறது.  உயிர் போக்கி கொள்ள விரும்புகிவர்களைத்தவிர இந்த அமைப்புக்கு உதபவர்களும் இதில்  அடக்கம். இதுவரை  உலகின் வெவேறு நாடுகளைச்சேர்ந்த 1800 பேருக்கு  அவர்கள் விரும்பியபடி உயிரை போக்கிகொள்ள உதவியிருக்கிறது.  அதிகமாக பயன் படுத்தியவர்கள் ஜெர்மானியர்கள் இதுவரை 840 பேர். குறைவாக  செய்துகொண்டிருப்பவர்கள் இஸ்ரேலியர் 19 பேர். மிக குறைவாக பயன்படுத்திய நாடுகளில் இந்தியா ஒன்று. இதுவரை இதைப்பயன்படுத்திய இந்தியர் ஒருவர் மட்டுமே. இந்த சேவைக்கு இவர்கள் வசூலிக்கும் கட்டணம்10,500 ஸ்விஸ்பிராங்க்கள் இந்திய மதிப்பில் ரூபாய் 7 லட்சம்
ஏன் இவ்வளவு கட்டணம்?  இதில் பதிவுகட்டணம். ஆலோசனை கட்டணம், உயிரைபோக்கிக்கொள்ள உதவும் சேவைக்கான கட்டணம் உதவும் டாக்டரின் பீஸ்,அரசாங்கத்துக்கு அனுப்பும் ரிப்போர்ட்,  எரிப்பது புதைப்பது மற்றும் இறுதிச்சடங்குகளுக்கான செலவு, அவசியமானால் குடும்பத்தினருக்கு பதில் கோர்ட் கேஸ்களை சந்திக்க நேரும் செலவு  எல்லாம் அடங்கும் என்கிறார்  இந்த அமைப்[பின் தலைவர்  லூட்விக் மின்லி.
 81 வயது ஆகும் இவர் ஒரு வழக்கறிஞர், மனித உரிமை ஆர்வலர்.. விரும்பும் நேரத்தில் விரும்பும்படி இறப்பது தனிமனித உரிமைகளில் ஒன்று என்பது இவர் வாதம்.  சரி இதில் டாக்டர் எங்கிருந்து வருகிறார்.? உயிரை போக்கிகொள்ள வேதனை தராத விஷ ஊசி போட்டுகொள்ள ஒரு டாக்டரின் மருந்து சீட்டு வேண்டும். அதற்காக தான் அவருக்கு பீஸ். நல்ல உடல் நிலையில் இருப்பவருக்கு அத்தகைய விஷமருந்துக்கு  டாக்டர் அனுமதி தரலாமா?. இது இன்னும் ஸ்விஸ்  சட்டம் மறுக்காத விஷயம். என்கிறார் லூட்விக்.

 ஸ்விஸ் நாட்டு சட்டங்களின் படி  தன் சொந்த நலனுக்காக ஒரு தற்கொலையை மறைத்தால் குற்றம். ஆனால் கெளரமாக இறக்க விரும்பும் ஒருவருக்கு விஷ மருந்து கொடுத்து இறக்க உதவிசெய்தால் அது குற்றமாக கருத படமாட்டாது.
 ” நாங்கள் செய்வதில் சொந்த நலனோ அல்லது நிகழந்ததை மறைப்பதோ இல்லை.  உருப்பினர் விரும்புவதைச் செய்கிறோம்  அதனால் சட்டபடி  இதில் எந்த தவறும் இல்லை” என்கிறார்.

ஆனால் இவரின் இந்த அமைப்பை கண்டனம் செய்பவர்களும் இருக்கிறார்கள். இந்த மனிதனினால் ஸ்விஸ் நாட்டின் பெருமை குறைகிறது. தற்கொலை செய்யதுகொள்ளவிரும்புவர்களின் சொர்க்கமாக ஸ்விஸ் மாறுவதை  நாங்கள் விரும்பவில்லை என்கிறார்கள் இவர்கள்

 தற்கொலை செய்துகொள்வது  தடைசெய்யபட்டிருக்கும் இந்தியா போன்ற நாடுகளிலிருப்போருக்கு இது நல்ல வாய்ப்பாகிடாதா? மேலும் இம்மாதிரி வசதிகள்  அதிகமான தற்கொலை முயற்சியை ஊக்குவித்துவிடாதா?
இல்லை என்கிறார் லூட்விக்.” இந்திய சட்டங்கள் பிரிட்டிஷாரால்  இந்திய வாழ்க்கைமுறைகளை  நெறிகளை பின்பற்றாமல் இயற்றபட்டவை. இந்திய வேதங்களில் ஒரு மனிதன் தன் குடும்ப பொறுப்புகளை முடித்தவுடன் உணவு நீர் இவற்றை துறந்து  நீண்ட பயணம் செய்து உயிர் துறக்கும் உரிமை தரபட்டிருக்கிறது  இந்திய ஜெயின் சமூகம் இதை அனுமதிப்பதோடு  கெளரவமாகவும் கருதுகிறதே என்கிறார்.  மேலும் இந்த அமைப்பினால் தற்கொலைகள் பெறுகாது  ஒவ்வொரு வெற்றிகரமான தற்கொலைக்கும் பின்னால் 49 தோற்ற முயற்சிகள் இருக்கிறது. மேலும் எங்களிடம் விரும்பி வருவர்களை மறுநாள் காலையில் நாங்கள் கொன்று விடிவதில்லை. 3 கட்ட ஆலோனைகள் வழங்க படுகிறது, மனம் மாற, வாழும் வழிக்கான வெளியேரும் கதவுகள் திறந்தே இருக்கும். அந்த பச்சை விளக்கு காட்டப்படும் கட்டத்தில் பலர் மனம் மாறியவர்கள் பலர். இருக்கிறார்கள்.””
 இந்தியாவில் சட்டம் என்ன சொல்லுகிறது.?
தற்கொலை மரணங்களில் பல வகைகள். உணர்ச்சி வசப்பட்டு உயிர் போக்கிக்  கொள்வது,  உடல் உபாதைகள் பொறுக்காமல் உயிரைபோக்கிகொள்வது, டாக்டரின் உதவியோடு கருணைக்கொலை செய்ய வேண்டுவது எல்லாம் இந்தியாவில் குற்றம்.  உடலில் உயிர் மட்டும் தங்கி மற்றவை செயலிழந்த கட்டத்தில் கூட கருணைக் கொலையை கூட கோர்ட் அனுமதியில்லாமல் டாக்டர்கள் செய்ய முடியாது.  1994ல்  தற்கொலை முயற்சி  என்ற குற்றவியல் சட்டமே சட்டவிரோதமானது என  உச்ச நீதி மன்றம் ஒரு அதிரடி தீர்ப்பு வழங்கியிருந்தது. ஆனால் 1996ல் மற்றொரு  தீர்ப்பில் “வாழும் உரிமைகள் என்பதில் சுய மரணத்தை வரவழைத்துகொள்வது அடங்காது” என்றும் 1994 தீர்ப்பு தவறு என்றும் சொல்லபட்டது. கருணைக்கொலைகளுக்கு அனுமதிக்க அரசின் சட்டம் தேவை என்று சொன்னது இந்த தீர்ப்பு. இதுவரை  மரணம் அடையமுடியாமல் தவித்து கொண்டிருக்கும் உடல்நிலையை காரணம் காட்டி உறவினர்கள் கருணைக்கொலைக்கு அனுமதிகோரி 15  வழக்குகள் தொடரபட்டிருக்கின்றன. எதற்கும் அனுமதி தரப்படவில்லை.  இது நாடுதழுவிய அளவில் விவாதிக்க பட வேண்டிய ஒரு முக்கியமான விஷயம் என்பதால் சமீபத்தில் உச்சநீதி மன்றம்  மாநில அரசுகளின் ஆலோசனைகளை கேட்டிருக்கிறது
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ? 





______________________________________________________
கருணைக்கொலை தவறில்லை: சிவசங்கரி
கருணைக்கொலை என்ற வார்த்தையே புதிதாக இருந்த 1980-களில் கருணைக்கொலைஎன்ற நாவலை எழுதியவர் எழுத்தாளர் சிவசங்கரி. நாவல் வெளிவந்து 30 ஆண்டுகள் ஆகியும் கருணைக்கொலை குறித்த விவாதங்கள் தொடர்கதையாகவே இருக்கின்றன . “கருணைக்கொலை என்பது சட்டத்தால் மட்டும் முடிவு செய்யப்படக்கூடியது அல்ல. அது உணர்வுப்பூர்வமானது. அது தற்கொலையின் இன்னொரு வடிவம் என்று மத்திய அரசு சொல்வதும் ஏற்றுக் கொள்ளத்தக்கது. அதே சமயம், நோயின் இறுதி நிலையில் இருக்கிற ஒருவர், அதன் வலியை தாங்க முடியாமல் கருணைக்கொலை முடிவை எடுப்பதில் தவறில்லை.
நான் வாழ்ந்தது போதும், என்னால் இந்த வேதனைப் பொருத்துக்கொள்ள முடியவில்லை என்று கதறுகிறவரை, ‘நீ வாழ்ந்துதான் ஆக வேண்டும்என்று நிர்பந்திப்பது நியாயமில்லை. எனவே இதுபோன்ற வழக்குகளில் நான் கருணைக்கொலையை ஆமோதிக்கிறேன்என்கிறார் சிவசங்கரி.
 _______________________________________________________________________________

7 கருணைக் கொலையை அரங்கேற்றிய மருத்துவர்


பிரான்ஸ் நாட்டை சேர்ந்த மருத்துவர் ஒருவர் 7 நபர்களை கருணைக் கொலை செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.
கருணைக் கொலை என்பது பிரான்ஸ் நாட்டில் ஏற்றுக்கொள்ளப்படாத ஒன்றாகும், இதற்கு அந்நாட்டு ஜனாதிபதி பிரான்சிஸ்கோ ஹோலண்டேவும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.
இருப்பினும், மிகவும் தீவிரமான கட்டத்தில் நடைபிணமாய் வாழும் ஒரு சிலரை, மருத்துவர்கள் சேர்ந்து ஆலோசித்து கருணைக்கொலை செய்யலாம்.
இந்நிலையில், மருத்துவர் நிக்கோலஸ் என்பவர், தன்னுடைய நோயாளிகளில் 7 பேரை கருணைக்கொலை செய்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, இது தொடர்பாக நடைபெற்ற வழக்கில், கருணைக்கொலை செய்யப்பட்ட குடும்ப நபர்கள், இந்த மருத்துவர் செய்தது எங்களுக்கு பெரிய உதவி என்றும் அவரை கைது செய்து சிறையில் அடைக்க கூடாது எனவும் சாட்சி கூறியுள்ளனர்.
இதனால் டாக்டரை விடுதலை செய்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது







கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்கள்