2
இன்றுடன் விஜய் டிவியின் மஹாபாரதம் முடிகிறது. சில மாதங்களுக்கு முன் கல்கியில் எழுதியதின் மீள் பதிவு
விஜய்
டிவி ஒளிபரப்பும் தமிழ் மஹாபாரதம் சிறுவர்கள், இளைஞர்கள்,குடும்பத்தலைவிகள், முதியோர் என அனைவரையும்
கவர்ந்திழுத்து இரவு 7மணி முதல் அரை மணி நேரம்
கட்டிப்போடுகிறது. தமிழை பள்ளியில் படிக்காத, ஆங்கிலமே அதிகம் பேசும் இளந்தலைமுறையினரையும் வசிகரிக்கிறது இந்த தொலைகாட்சி
தொடர்.
பிரமிக்கவைக்கும்
பிரமாண்டமான செட்கள், பளபளக்கும் காஸ்ட்யூம்கள்,
ஹோலி வண்ணங்கள் சற்று ஓவரான மேக்கப், ஒரே மாதிரியான சாயலில் வட இந்திய முகங்கள், பயில்வான்கள் ஸ்டையில் பாண்டவர்கள் என்று
காட்டபடும் மாறுபட்ட ஒரு தொடராக இருந்தாலும்
அதை எல்லோரையும் பார்க்க வைப்பது, அழகான தமிழ்
வசனங்களும், இனிய பாடல்களும் தான். ஸ்டார் விஜய்க்காக இதை தமிழில் டப்பிங் செய்பவர்கள் 7த் சானல் நிறுவனத்தினர். அதன் தலைவர் மாணிக்கம் நாராயணனை
தொடர்பு கொண்ட போது. ”நானும் உங்களைப்போல ரசிக்கிறேன். எங்களது திறமையான
டப்பிங் டீமின் கடைன் உழைப்பின் வெற்றி இது.
அவர்கள் பணிகளில் நான் தலயிடுவதில்லை. டீமின் தலவர் மகேஷிடம் பேசுங்களேன்”.
என்றார்.
டப்பிங் துறையை நேசிக்கும் மகேஷ் ஒரு பிரபலமான ஆடியோ என்ஞ்னியர். மொழிபெயர்ப்பு வசனங்கள்
மேற்பார்வை. டப்பிங் கலைஞர்கள் தேர்வு, அவர்களுக்ககு
பயிற்சி, ஒலிப்பதிவு போன்ற எல்லாவற்றையும் நேரடியாக செய்கிறார். இந்தியில் வசனங்கள் அருமையாக இருந்தாலும் அதை அப்படியே
மொழிபெயர்த்தால் தமிழில் அவ்வளவு சரியாக இருக்காது
என்பதால் தகுந்த தமிழ் வார்த்தைகளுடன் மாற்றி கொள்கிறோம். மொழிபெயர்ப்பு என்பதை விட தமிழாக்கம் என்பது சரியாக
இருக்கும். பாத்திரங்களுக்கு ஏற்ற குரல் தரும்
கலைஞர்களை கவனமாக தேர்வு செய்து பயிற்சி அளித்திருக்கிறோம். அவர்களும் மிகுந்த கவனத்துடன்
செய்திருக்கிறார்கள் என்கிறார்.
ஹிந்தியில்
காட்சிகளை பார்க்கும் போது எழும் கேள்விகளுக்கு உடனே பதில் வரும்படி வசன்ங்கள் அமைந்த இந்த படத்திற்கு டப்பிங்க் வசனம் எழுதுவது கடினமான
வேலை. எழுதும் வசனம் சரியாக பேசும் இடங்களில் பொருந்த வேண்டும். எல்லா மொழிகளிலும்
வார்த்தைகளின் நீளம் ஒரே மாதிரியாக இருக்காது. அதனால் இதற்கு வசனம் எழுதும் பாலகிருஷ்ணன்
ஒரு டெக்னிக்கை கண்டுபிடித்திருக்கிறார். அவரே ஒரு டப்பிங் ஆர்ட்டிஸ் என்பதால் வசனங்கள்
எழுதபட்டபின் ஒவ்வொரு எபிசோடிலும் முதலில் பாத்திரங்களுக்காக அவரே அதைப் பேசி
தேவையான நீளம் சரியான நேரம் போன்றவைகளை உறுதி செய்துகொண்டு வாயசைப்புக்கு ஏற்ப வார்த்தைகளை தேர்ந்தெடுத்து வசனங்களை மாற்றி அமைக்கிறார். அதன்பின்னர் அது அச்சிடப்பட்டு
டப்பிங் ஆர்ட்டிஸ்ட்களுக்கு அளிக்க படுகிறது. பயிற்சிகளுக்கு பின் அவர்கள் பேசுகிறார்கள்.
இந்த முறையில் ரீ டேக், எடிட்டிங் போன்ற வேலைகளை குறைவதால் நேரம் வீணாவதில்லை என்கிறார்.
இவர் 25 ஆண்டுகளுக்கு மேலாக டப்பிங் படங்கள், தொடர்களுக்கு வசனம் எழுதிக்கொண்டிருப்பவர். இந்த தொடரில் இவர் தத்துவங்களை எளிமையாக்கி கவிதை
நடையில் வசனங்களாக மெருகேற்றி தருவதால், தொடரைப்பார்க்கும் போது இது டப்பிங் செய்யபட்ட
தொடர், நடிப்பவர்களின் நடிப்புதிறன் அவர்களின் பாத்திர பொருத்தம் போன்ற எண்ணங்களை எழாமல்
செய்கிறது.
ஹிந்தி
தொடரில் வரும் அதே இசையை பயன்படுத்தி கொண்டு
மெட்டுக்கு களுக்கு ஏற்ப தமிழ் பாடல்களை அமைக்கிறார்கள். பாடல்களையும் பாலகிருஷ்ணனே எழுதுகிறார். வரிகளிலும், வார்த்தைகளிலும் அவருள் ஒளிந்திருக்கும் கவிஞர் தெரிகிறார்., எங்களது டீமில் இருக்கும் 50க்கும் மேற்பட்ட குரல்கலைஞர்களின் ஆர்வமான, அர்ப்பணிப்பான உழைப்பின் வெற்றி இது .
சகுனி, கிருஷ்ணன் போன்ற பாத்திரங்களின் நடிப்புக்கு உயிர் கொடுத்திருப்பது இவர்களின்
குரல் என்கிறார். மகேஷ்..பல ஆண்டுகளுக்கு முன் என் டி டிவிக்காக ராமாயணத்தை தமிழாக்கியதும்
இவர்தலமையிலான டீம்தான்
இதிகாசங்களின்
மீதுள்ள பாசத்தினால் மூத்த தலைமுறையினர் மட்டும் ரசித்து கொண்டிருந்த இம்மாதிரி தொடர்களை அடுத்த தலமுறையினரையும்
ரசிக்கவைக்கும் விஜய் டிவிக்கும் 7த் சானலுக்கும் ஹாட்ஸ் ஆஃப்.
கருத்துகள் இல்லை :
கருத்துரையிடுக
உங்கள் கருத்துக்கள்