எழுதுபவனின் வாழ்க்கையில் மகிழ்ச்சியான தருணங்களில்
ஒன்று அவனது புத்தகம் சிறப்பாக வெளியிடப்படுவது, அவனது எழுத்துக்காக கெளரவிக்கபடுவது,
எனக்கு அத்தகைய தருணம் 12/1/15 அன்று வாய்த்தது.
அதிலும் மாலனுடன் சேர்ந்து அந்த கெளரவத்தை பெற்றது மிக சந்தோஷமாக இருந்தது. இருவரும்
சேர்ந்து எழுத ஆரம்பித்தது 1975ல் மணியனின் இதயம் பேசுகிறது இதழில். பின் மாலன் எழுத்தையே
வாழ்க்கையாக்கி கொண்டார். நான் வாழ்க்கையின் நடுவே அவ்வப்போது எழுதிக்கொண்டிருந்தேன்.
இப்போது சற்று அதிகமாக எழுதுகிறேன். ஆனால் இருவரும் ஒரே மேடையில் கெளரவிக்க பட்டது
இதுதான் முதல் முறை.. தங்கள் பிளைகள் எழுதுவதில் பெருமை கொண்ட எங்கள் பெற்றோர்கள் சொர்க்கத்திலிருந்து
பார்த்து சந்தோஷபட்டிருக்கும் இந்த காட்சிகளை காண அருமை மனைவியும் அன்பு மகனும் நேரில் பங்கேற்றது மகிழ்ச்சியின் கனத்தை கூட்டிற்று.
தமிழகத்தின் சிறு கிராமம் ஒன்றில்
பிறந்த பால. பாலச்சந்திரன் இன்று உலகம் அறிந்த ஒரு மேனேஜ்மெண்ட்
குரு.சிகாகோவில் வசிக்கிறார். கிரேட் லேக்ஸ்
எனற மேலாண்மைக் கல்லூரியை நிறுவி 10 ஆண்டுகளில் அதைமுதல் 10 நிறுவனங்களுக்கள் நிலைநிறுத்தியிருப்பவ்ர். சவாலான, சாதனையான
அவரது
வாழ்க்கைக் கதையை நான் புதிய தலைமுறையில் தொடராக ”வெற்றி வெளியே
இல்லை” என எழுதியிருந்தேன். அடுத்த வாரம் அது புத்தகமாக
வெளிவருகிறது.
அதன் ஆங்கில மொழிபெயர்ப்பான “DARE TO DREAM” மும்பை
தாஜ் ஹோட்டலில் இந்திய கார்ப்ரேட்டின் முன்னணித் தலைவர்கள் கேக்கி டாடிசேத் (Mr.Keki
Dadiseth) (இந்துஸ்தான் லீவர் தலைவர், ஆதி காத்திரஜ், ஜெரிராவ் (சிட்டி வாங்கியின் முன்னாள்தலைவர் விருந்தினர்களாக பங்கேற்ற விழாவில்
வெளியிடப்பட்டது.உடல் நல குறைவால் ரத்தன் டாட்டா பங்கேற்கவில்லை. மும்பயின் பல கார்ப்பெரேட்களின் ”தலை”கள் பங்கேற்ற
இந்த விழாவில் ஜெரிராவ் புத்தகத்தைவெளியிட்டு பேசினார். அழகான ஆங்கில உரை. அவருக்கு தமிழும் நன்றாக தெரிந்திருப்பது ஒர். ஆச்சரியம் குறளை மேற்கோள் காட்டி, ஆங்காங்கே
புத்தக பக்கங்களைசுட்டிகாட்டி பேசினார். பேராசிரியர் பாலாவின் வாழ்க்கை சாதனை தமிழ்நாட்டுக்கு
பெருமை என்றார்.
ஆங்கில புத்தகங்களின் வீச்சு அதிகம் என்பதை அறிந்திருந்தாலும்
அன்று மும்பைவிழாவில் அதை உணர முடிந்தது. மொழிபெயர்ப்பினால் என் எழுத்து புதிய திசையில
பயணிக்க துவங்கியிருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.
கருத்துகள் இல்லை :
கருத்துரையிடுக
உங்கள் கருத்துக்கள்