26/10/18

இன்டர்போல் தேடும் அதன் தலைவர்


இன்டர்போல் என்ற  அகில உலக போலீஸ் நிறுவனத்தின் தலமையகம்  (Lyon, France) பிரான்ஸ் நாட்டின் லியான் நகரிலிருக்கிறது. இன்டர்போல் என்று உலகம் முழுவதும் அறியப்பட்டாலும்  இதன் பெயர் இன்டெர் நேஷனல் போலீஸ் கமிஷன்.  இன்டெர்போல் என்பது அதனுடைய பதிவுசெய்யப்பட்ட தந்தி விலாசம். உலக அளவில் கிரிமினல் குற்றஙளை தடுக்க, கண்டுபிடிக்க உதவும் 95 வயதாகும் இந்த  சர்வ தேச அமைப்பில்  இந்தியா உட்பட 192 நாடுகள் உறுப்பினர்கள். தனி நபர்களிடமிருந்து புகார்களை நேரிடியாக  பெறாத  இந்த அமைப்பிடம் அண்மையில் ஒரு பெண்மனி அளித்த புகார் “ ஒருவாரமாக என் கணவரைக் காணோம் தொடர்பு கொள்ள முடியவில்லை கண்டுபிடியுங்கள்”



அந்தப்பெண்ணின் கணவர்  மெய்ங் ஹாங்வாய். அவர்    இன்டர்போல் அமைப்பின்  தலைவர். ஆம். இன்ட்ர்போலின் தலைவர் காணாமல் போயிருக்கிறார். தகவல் கிடைத்த்தும் அதிர்ந்து போனார்கள் அதிகாரிகள்.

 இன்டர்போல் அதிகாரிகளின்  பயணங்கள் திட்டங்கள் ரகசியமானவையென்பதால்  திரு மெய்ங் ஹாங்வாய் அலுவலகத்திற்கு வராதால் அவர் பணி நிமித்தும் ஏதோ பயணத்திலிருக்கிறார் என்று எண்ணிக்கொண்டிருந்தார்கள். ஆனால் அவர் காணாமல் போயிருக்கிறார் என்றதும் செயலில் இறங்கினர் பிரான்ஸ் போலீஸ் குழுவினர்
இந்த சர்வதேச காவல்துறையான இன்டர்போல் அமைப்பின் தலைவர் மெங் ஹாங்வெய் சீன நாட்டை சேர்ந்தவர் இவர் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் லியான் நகரில்  வசித்து வருகிறார். இன்டர்போலின் தலமை அதிகாரி  உறுப்பு நாடுகளால் பரிந்துரைக்கப்பட்ட அவர்களின்  உயர் மட்ட போலீஸ் அதிகாரிகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்படுபவர்
.அண்மைக்காலமாக சீனா சர்வ தேச  அமைப்புகளில் பங்கு பெறவும் தலமைப் பதவிகளைப் பெறவும் ஆர்வம் காட்டி வருகிறது  அதன்படி 2016ல் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் சீன நாட்டின் பாதுகாப்பு துணை அமைச்சராகயிருந்த மெங் ஹாங்வெய் தேர்ந்தெடுக்கபட்டார்.  இவரது பதிவிக்காலம் 2020 வரை. இன்டர்போலில்  இம்மாதிரி பதவி  பெற்றாலும் தங்கள் நாட்டின் போலிஸ் பதவியிலும் தொடர்ந்து நீடிப்பார்கள் இம்மாதிரி அதிகாரிகள்
இந்த நிலையில் தான் கடந்த  செப்மாத இறுதியில் இவர் காணாமல் போய்விட்டார்.  செல் போனில் தொடர்பு கொள்ள முயன்ற இவரது மனைவிக்கு எஸ்எம்எஸ்ஸில்  வந்தது ஒரு சின்ன கத்தியின் படம் (emogi)    . “நான் ஆபத்திலிருக்கிறேன்” என்பதின் ரகசிய அடையாளம் அது. . அதனால் அவர் உடனே இன்ட்ர்போல் அலுவலகத்தைத் தொடர்புகொண்டு காணவில்லை என்ற தகவலை சொல்லியிருகிறார். .
காணமல் போனவரைத்தேட ஆரம்பித்த பிரான்ஸின் போலீஸ் ஆராய்ந்து கண்டுபிடித்த விஷயம் அவர் கடைசியாக சீனாவிற்குப் பயணம் செய்திருக்கிறார் என்பது. இன்டர்போலின் கேள்விகளுக்கோ பிரான்ஸ் போலீஸின் விசாரணைகளுக்கோ  சீன அரசு உடனடி பதில் எதுவும் தெரிவிக்க வில்லை.
10 நாட்களுக்கு பின்னர்  இன்டர்போலுக்கு மெங் ஹாங்வெயின் ராஜினாமா கடிதம் இ மெயில் வந்தது. அதே நாளில்  சீன அரசிடமிருந்து இன்டர்போல் நிறுவனத்துக்கு  வந்த கடிதம்.  ‘திரு மெங் ஹாங்வெய்,, சட்ட விதிமீறல் குற்ற சந்தேகங்களை விசாரிக்கும் தேசிய கமிழனின் விசாரணியிலிருக்கிறார், என்றது. ..சீன அரசு அழைத்துப்போனாரா? அல்லது அழைத்துக்கொண்டு போகப்பட்டாரா? என்ற கேள்வி  இப்போது எழுந்திருக்கிறது.
சீனாவில் உயர் பதவியிலிருக்கும் அதிகாரிகளில் சிலர்  இப்படி  காணமல் போவதும்  சில நாட்களுக்குப் பின்னர் அவர்கள் விசாரணைக்காக அழைத்துசெல்லபட்டிருக்கிறார்கள் எனறு செய்தி வருவதும் வாடிக்கை. ஆனால் உலகின் உயர் போலீஸ் அதிகாரியாகயிருந்தாலும்  அதேதான் நிலை என்பது ஆச்சரியமாகயிருக்கிறது. 

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்கள்