பயணம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பயணம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

19/12/17

குடகு மலைக் காற்றினிலே ... 2



மடிக்கேரி ஒரு சிறிய மலை நகரம். நகரில் பல முக்கிய இடங்களில் கம்பீரமாக நிற்கும் ராணுவ அதிகாரிகளின் சிலைகள். டூரிஸ்ட் கூட்டம் இவைகளை கடந்து நகரின் கோடியில் ஒரு பெரிய பார்க். அதிலிருந்து மேற்கு மலைத்தொடரின்பசுமைச் சரிவுகளையும் சிகரங்கங்களையும் பார்க்க அந்தப் பார்க்கின் விளிம்பில் வசதி செய்திருக்கிறார்கள். ஒரு மலைச்சரிவை காலரியாக மாற்றி அதன் முன் ஒர் அரைவட்டவடிவ தளமுமாக அழகான amphitheatre அரங்கமாக வடிவமைத்திருக்கிறார்கள். விழா நாட்களில் இசை நடன நிகழ்ச்சிகள் நடைபெறுமாம்




இந்த இடத்திலிருந்து பார்த்தால் மாலையில் சன் செட் அழகாக இருக்கும் என்பதால் அதற்காகக் காத்திருக்கும் கூட்டம் காலரியை ஆக்ரமிதிருக்கிறது. உனண்மை தான்
ஆதவன் அணுவணுவாகக் கண்ணிலிருந்து மறையும் காட்சி அற்புதமாகத்தான் இருக்கிறது.  வாணத்தையே ஜொலிக்கும் தங்கத்தகடுகளாக்கியபின் .சட்டென்று பிங்க் கலந்த ஆரஞ்ச் வண்ணப் பந்தாக மாறி மெல்லிய நீலத்துடன் மாறிச் சட்டென்று மலைகளுக்குப் பின்னால் காணமல் போகும் அந்தக் காட்சியை எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காத ஒன்று மனத்ஜில் நிற்கும் ஓவியம்.  அஸ்தமனம் முடிந்தவுடனும்  எடுத்தவைகளுடன் திருப்தி அடையாமல் இன்னும் சில செல்பிகள் எடுத்துக்கொண்டு  திரைப்படம் முடிந்தவுடன் தியட்டர்காலியாவதைப் போல அரங்கம் காலியாகிறது. தினசரி வாக்கிங் வரும் உள்ளுர் மக்கள் சிலருடன் நாமும் உட்கார்ந்திருக்கிறோம். குளிர் மெல்ல தாக்க ஆரம்பித்தாலும் இதமாக்யிருக்கிறது.  தொலைவில் வளைந்த மலைச்சாலைகளில் செல்லும் வாகனங்களின் விளக்குகள் நகரும்  நட்சந்திரங்களகத் தெரிவதை ரசித்துக்கொண்டிருக்கிறோம்.
 இந்த இடத்திலிருந்து தான் குடகு மன்னர் தன் குடும்பத்துடனும் பரிவாரத்துடனும்  அமர்ந்து மாலைவேளைகளை இசை நடன நிகழ்ச்சிகளுடன் ரசிப்பாராம். அதனால் இந்த இடத்தை ராஜா சீட் என்று அழைக்கிறார்கள். அதை நினைவு கூறும் வகையில் ஒரு மண்டபமும் நிறுவியிருகிறார்கள். அதைப்பார்த்ததும் குடகு மன்னர்களைப்பற்றிக் காலையில் மீயூசியத்தில் பார்த்தறிந்த செய்திகள் மீண்டும்   மனதில் எழுந்தன.

மன்னர்கள் வாழ்ந்த  அரண்மனை இபோது அரசு அலுவலகங்களாகமாறி ப்பாழாகிக் கொண்டிருக்கிறது .அதிலிருந்த பொருட்களையும் படங்களையும் கொண்டு அருகில் ஒரு மியூசியம் அமைத்திருக்கிறார்கள். பிரிட்டிஷ் ஆட்சிகாலத்தில்இந்தச் சின்னஞ்சிறு குடகு தனி மலைநாடகவே 1600களிலிருந்து மன்னர் ஆட்சியிலிருந்திருக்கிறது. அண்டைநாடான மைசூர் அரசர்களால் வெல்லப்பட்டு அவர்களின் ஆட்சியின் கிழ் வந்திருக்கிறது. . பிரிட்டிஷ் ஈஸ்ட் இந்தியா கம்பெனியின் ஆட்சியில் தனி நாடகாவும் அரசபரம்பரம்பரையாகவும்  மீண்டும் அங்கீகாரம் பெற்றிருக்கிறது. ஆனால் தொடர்ந்து வந்த அரச பரமப்ரையினர் பிரிட்டிஷ் கம்பெனியின் மேலாதிக்கத்தை விரும்பாமல் புரட்சி செய்ததால் ஒரு போரைச் சந்தித்திருக்கிறார்கள். கோட்டைகள், மதில் சுவர்கள் எதுவும் இல்லாத போதும் நான்கு புறமும் காடுகளாகச் சூழபபட்ட இந்தக் குட்டி மலைநாட்டைபிரிட்டிஷார் எளிதில் நெருங்க முடியவில்லை. ஒரு போருக்குப் பின்னர் சரணடைந்த மன்னரைக் கைது செய்து வேலூரில் சிறை வைத்திருக்கிறார்கள். சிறையில் மன்னர் தான் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதாகும், பதிலுக்குத் தன் ஒரே மகளை லண்டனில் படிக்க வைக்க விரும்புதால் அதற்கு உதவி செய்யவும் கேட்டிருக்கிறார். சம்மதித்த ஆங்கிலேயே அரசு அவரையும் மகளையும் லண்டன் அனுப்பினார்கள். ஆனால் அங்கு இளவரசி படிப்பைத்தொடர கிருத்துவ மதத்திற்கு மாற நேர்ந்திருக்கிறது. ராணி விக்டோரியாவால் முன்பொழியப்பட்டு இளவரசி மதம் மாறியிருக்கிறார். சில நாட்களுக்குப் பின்னர் ஒரு ஆங்கிலேயரை மணந்திருக்கிறார். இங்கிலாந்திலேயே இறந்த மன்னரின் கல்லறை அங்கிருக்கிறது மடிகேரியில் இருக்கும்  மறைந்த மன்னர்களின் சமாதி வளாகம் மிகப்பெரியதாகயிருக்கிறது. வாசலில் துவாரபாலகர்கள் உருவங்கள் ஆச்சரியப்படுத்துகிறார்கள்.  இவர்கள் எப்படி அங்கு வந்தார்கள் எனத் தெரியவில்லை
 ஆனால் இங்கிலாந்தில் படித்த மன்னரின் மகள்  பின்னாளில் என்னவானார்? அவரது வாரிசுகள் எங்கே என்பது தெரியவில்லை.


மியூசியத்தில் பளிச்சென்று வீபூதி பட்டையுடன் இருக்கும் அந்த அழகான இளவரசியின் படத்தைப் பார்த்தபோது இளவரசியாக இருந்தபோதிலும் படிப்புக்காக மதம் மாறிய செய்தி மனதை  உறுத்தியது உண்மை.  இந்த மத மாற்றத்தைப் படிப்பின் மீதிருந்த ஆர்வம் என எடுத்துக்கொள்வதா? அல்லது அதிகாரத்துக்கு அடிபணிந்த அடிமைத்தனமாக எடுத்துக்கொள்வதா? என்று சிந்திக்கொண்டிருந்தேன்.

குடகு மன்னர்கள் மிகப்பெரிய சிவ பக்கதர்கள். கனவில் வந்து சொன்னதற்காகவே மன்னர் கட்டியிருப்பதாக வரலாறு சொல்லும் ஒம்காரஸ்வர் கோவில் நகரின் நடுவில் இன்றும் இருக்கிறது. கோபுரங்கள் எதுமில்லாத கேரளபாணிக் கோவில். அர்ச்சகர் பிங்க் வேஷ்டியில் இருக்கிறார். வரும் பக்தர்களுடன் பேசுவதில்லை. அவர் சொல்லும் பூஜை மந்திரங்கள் என்ன பொழியென்றும் புரியவில்லை. கோவில் மிகச்சுத்தமாகயிருக்கிறது.  பிறந்து சில மாதங்களே ஆன சின்னக்குழந்தைகளைக் கொண்டுவந்து சன்னதியின் முன் கிடத்துகிறார்கள்
பிரிட்டிஷாரால் தனி நாடாக அங்கிகரிக்கப்பட்டிருந்ததால், சுதந்திர இந்தியாவிலும் முதலில்  இது தனி மாநிலமாகவே இருந்திருக்கிறது. ஆம் ஸ்டேட் ஆப் கூர்க்.! 1956ல் மொழி வாரியாக மாநிலங்கள் உருவானபோது இது மைசூர் ராஜயத்துடன் இணைக்கப்பட்டிருக்கிறது அந்த இணைப்பின்போது  முன்னாளில் போரில் வென்று  மைசூர் எங்களை ஆட்சி செய்தபோது கொடுமைப்படுத்தியவர்கள். அதனால் அவர்கள் வேண்டாம் எங்களை மெட்ராஸ் ராஜதானியுடன் சேர்த்துவிடுங்கள் என்று போராடியவர்களும் இருந்திருக்கிறார்கள் என்பது நான் அறிந்த ஒரு புதிய செய்தி.
பிரிட்டிஷாரை துணிவுடன் ஈஸ்ட் இந்திய கம்பெனிகாலத்திலேயே எதிர்த்த பாரம்பரியத்தாலோ  இந்திய ராணுவ அதிகாரிகளில் பலர் இந்தப் பகுதியிலிருந்து தான் வந்திருக்கிறார்கள். கரியப்பாவைத்தொடர்ந்து பெல்லியப்பா, பொன்னப்பா போன்று பல அப்பாக்கள் இங்கிருந்து வந்த ராணுவ அதிகாரிகள். இன்றும் இது தொடர்வது பெருமைக்குரியவிஷயம்.

உலகிலேயே மிக விலையுர்ந்த காபி இங்குதான் விளைகிறது என்று கேள்விபட்டிருந்த்தால் அதைப் பார்க்க விரும்பி விபரங்கள் சேகரித்துக் கொண்டிருந்தேன். லண்டனிலிருந்து ஒரு நண்பர் கொடுத்திருக்கும் அறிமுகத்துடன் நாளைக் காலை அந்த இடத்துக்குப்  போகலாம் என்று எண்ணித் திரும்பினோம்
“வெளியிலேயே சாப்பிட்டுவிட்டீர்களா? அல்லது ஏதாவது தயாரிக்கவா? என நீத்து கேட்டபோது உண்மையிலேயே இது ஹோம் ஸ்டே தான் என்பது புரிந்தது

12/12/17

குடகு மலைக் காற்றினிலே 1



10/12/2017


பொன்படு நெடுவரைபயணம் எப்படியிருந்தது ? என்றார் நண்பர். விழித்தேன்.

 அதான் சார் கூர்க் (coorg) டிரிப் என்றார். புறநானூறு பாடலில் அப்படித்தான் அந்த இடம் சொல்லப்பட்டிருக்கிறது. பொன்போலத்தோன்றும் மலை என்று அர்த்தம் அங்கு மழைபொழிந்தால் காவிரியில் வெள்ளம் வரும். அதானால் தான் காவிரியாற்றுக்கு பொன்னி என்றும் எனப்பெயர் என்றார். மனுஷர் சங்க இலக்கியங்களைத் தினசரி படிப்பவர்,  அதை அக்குவேறு ஆணி வேறாக அலசுபவர்

அட! நாம் போன இடம் தமிழிலக்கியத்தில் பேசபட்ட இடமா? என்று ஆச்சரியத்துடன் பயணம் பற்றிப் பேசினேன். HOME STAY பற்றிக்கேட்டுக்கொண்டிருந்தார்.( நல்ல வேளையாக இதுவும் சங்க காலத்திலேயே இருந்தது என்று சொல்ல வில்லை.)

கர்நாடகத்தில் கூர்க் ஒரு மிகச்சிறிய மாவட்டம். 3 தாலுக்காக்கள்தான். மக்கள் தொகை 30000க்கும் கீழ்.மக்கள் வாழும் பகுதிகளைவிட மலைப்பகுதிகள்தான் அதிக. . 1000 மீட்டர் உயரத்திலிருக்கும் மடிக்கேரி நகர தான் மாவட்ட தலைநகரம் மைசூரிலிருந்து 120 கீமி. மலைப்பாதை வழியெங்கும் காபிதோட்டங்களும் அதன் அருகே நிற்கும் ஒக் மரங்களைத் தழுவிக்கொண்டிருக்கும் மிளகுக்கொடிகளையும் பார்த்தபோது





 
பார்க்கும் மரங்களெல்லாம் நந்தலாலா நின்றன் பச்சை நிறம் தோன்றுதையே நந்தலாலா என்று சொன்ன பாரதி நினைவிற்கு வந்தான்

இங்கு நல்ல ஹோட்டல்கள் இருந்தாலும் ஹோம் ஸ்டே என்பது மிகப் பாப்புலாரன ஒரு விஷயம். விருந்தோம்பலுக்குப் பெயர்போன குடகு மக்களிடம் தங்கள் வீட்டில் எல்லா வசதிகளுடனும் இருக்கும் ஒரு பகுதியை  தங்கள் நகருக்கு வரும் பயணிகளுக்கு  ஒதுக்கி அவர்களைக் கவனித்துக்கொள்ளும் வழக்கமிருந்திருக்கிறது.. இலவசமாகக் இப்படி கொடுக்கும் பழக்கம். நாளடைவில்  மெல்ல ஒரு பிஸினஸாக டெவலப்பாகியிருக்கிறது, இன்று அந்தச் சின்ன ஊரில் 1500க்கும் மேல் இப்படி ஹோம் ஸ்டே வீடுகள். இதற்கு நகரசபையில் லைஸ்ஸென்ஸ் வாங்க வேண்டும், ஒவ்வொரு விருந்தினருக்கும் வரி செலுத்த வேண்டும்(நம் பில்லில் வருகிறது). (லைசென்ஸ் இல்லாமல் நடத்துபவர்களும் நிறைய இருக்கிறார்கள்) இந்தப் பிஸினஸ் இன்ட்ர்நெட்டின் புண்ணியத்தில் கடந்த சில ஆண்டுகளில் பல மடங்கு வளர்ந்திருக்கிறது
.
டூரிஸ்ட்களுக்கு உதவும் பிசினஸ் ஆகிவிட்டதால், make my trip.com. Mytravel போன்ற நம் நாட்டு நிறுவனங்கள் இறங்கிவிட்ட இந்தப் பிஸினஸில் இப்போது airbnb போன்ற சரவதேச நிறுவனங்கள்  இறங்கி விட்டன.(அயர்லாந்திலிருந்து உலகளவில் பல நகரங்களில் இந்த வசதியைத் தருபவர்கள்)

இவர்கள் இப்படி ஹோம் ஸ்டே வசதி தருபவர்களைப் பற்றி அழகான படங்களூடன் தங்கள் தளத்தில் விளம்பரப்படுத்துகிறார்கள். பல நிறுவனங்கள் வசதிகளை நேரில் பார்த்து உறுதி செய்துகொள்வதாலும், சில கண்டிப்பான நிபந்தனைகள் வைத்திருப்பதாலும் நம்பி புக்  பண்ணலாம்..
 இந்த நிறுவனங்கள் ஹோம் ஸ்டே தருபவர்களுக்கு டூரிஸ்ட்களிடமிருந்து ஆர்டர் வாங்கிக்கொடுத்து தங்கள் கமிஷனைப்பெற்றுக்கொள்கிறார்கள். ஆனால் அவர்களிடம் நீங்கள் பணம் செலுத்தி புக் செய்யும் வரை host என்று சொல்லப்படும் அந்த வீட்டின் உரிமையாளாரை நீங்கள்  தொடர்பு கொள்ள முடியாது. (நேரடியாகப் பிஸினஸ்பேசிவிடுவதைத் தவிர்க்க)

ஒரு சின்ன இரண்டு பெட் ரூம் ஃபிளாட் +கிச்சன்(கியாஸ். பாத்திரங்களுடன்) வசதியிலிருந்து காபி எஸ்டேட்க்குள்ளிருக்கும் பெரிய பங்களாவரை கிடைக்கிறது. சின்ன காபி எஸ்டேட் வைத்திருப்பவர்கள் நகரிலிருக்கும் தங்கள் வீட்டைப் பெரிதாகக் கட்டி இப்படி கொடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள். வாடகை ஒரு நாளுக்கு 2000(4 பேர்)லிருந்து 25000 வரை இருக்கிறது. உணவு (ஸ்பெஷல் கூர்க் உணவுகள்) தயாரித்துத் தருவார்கள் அதற்குத் தனிக்கட்டணம், ஆனால் ஹோட்டல்களை விடக் குறைவு.
நாங்கள் நகருக்கு அருகில் அதே நேரத்தில் இயற்கைச் சூழலுடனும் இருக்கும் மலைச்சரிவிலிருக்கும் ஒரு வீட்டைப் படத்தைப் பார்த்துத்தேர்ந்தெடுத்திருந்தாலும் நேரில் எப்படியிருக்குமோ என்றுதானிருந்தது. நகரை நெருங்கும்போது எங்கள் ஹோஸ்ட் திருமதி நீத்து விடம் பேசி பாதைகேட்டபோது தெளிவாகச்சொல்லிக்கொண்டே வந்தார். அழகான வீட்டைப் பார்த்ததும் சந்தோஷமாக யிருந்தது. ஆனால் வீட்டை அடைந்த பின் தான் தெரிந்தவிஷயம் அவர் பெங்களூரிலிருந்து பேசிக்கொண்டிருக்கிறார் என்பது.


நான் ஒரு அவசர வேலையாகப் பங்களுர் வர வேண்டியதாகிவிட்டது. உங்களைக் கவனித்துக்கொள்ள என் பெற்றோர்கள் அங்கு வந்திருக்கிறார்கள் (நகரில் வேறு பகுதியில் இருப்பவர்கள்) என்று சொல்லிக்கொண்டிருக்கும் போதே வெல்கம் டூ கூர்க் எனக் காபியுடன்       (அருமையான காபி  ) வரவேற்றார் நீத்துவின் தந்தை பொன்னப்பா (78வயது). ந்த அளவுக்கு இதைப் பிஸினஸாக மட்டுமில்லாமல் குடும்பமே சந்தோஷமாகசெய்கிறார்கள். என்று புரிந்தது.
 நகருக்குள் நீங்கள் நுழையும் போதே நான் வீட்டில் இல்லை எனறு சொன்னால் நீங்கள் வருந்தக்கூடும் என்பதால் நான் முதலில் அதைச் சொல்லவில்லை. என் பெற்றோர்கள் உங்களுக்காக மத்தியானத்திலிருந்தே காத்திருக்கிறார்கள் நான் நாளை மாலை வந்துவிடுவேன் என்று நீத்து சொன்ன அந்த வினாடியே அந்த வீட்டை மட்டுமில்லை அந்தக் குடும்பத்தையே எங்களுக்குப் பிடித்துப் போய்விட்டது. மறு நாள் வந்தவுடன் எங்களுக்காக பிரேக்பாஸ்ட் தயாரித்துக் கொண்டுவந்தவருடன்  நிறையப் பேச முடிந்தது. ஹோம் ஸ்டே பிஸினஸ் நன்றாக் இருப்பதாகச்சொன்னார்.. டிசமபரில் இவரது மட்டுமில்லை அனேகமாக எல்லாவீடுகளுமே புக்காகி விட்டது என்றார். ஒவ்வொரு ஆண்டும் டூரிஸ்ட் எண்ணிக்கை உயர்கிறது என்கிறார்.


மெடிகல் டிரான்ஸ்கிரிப்பிஷன், கணவரின் எஸ்டேட்நிர்வாகத்தில் உதவி, இந்த ஹோம் ஸ்டே எல்லாவற்றையும் அழகாகக் கவனிக்கும் இந்தச் "சுப்பர் மாம்" மின்  இரண்டு மகன்கள் கல்லூரியில்.
குடகுப் பெண்கள் மிக ஸ்மார்ட் ஆனவர்கள் என்று நண்பர்கள் சொன்னதுண்டு. இன்று அதை நேரிடையாகப் பார்க்க முடிந்தது.

 அன்று மாலையில் அவர் பார்க்கச்சொல்லியிருந்த அழகான இடத்துக்கு இப்போது  போய்க்கொண்டிருக்கிறோம் .

2/9/17

100 வருடங்களாகத் தினமும் போட்டோ!





மெல்ல நம்மைத்தொட்டுச்செல்லும் இனிய தென்றலின் இதத்தில் வழியெங்கும் புன்னகைக்கும் பூக்களைப் பார்த்தவண்ணம் நடக்க பாதைகள். பசுமையாகப் பரந்திருக்கும் மலைசிகரங்களை தொட்டு மிதந்து கொண்டிருக்கும் வெண்பனிமேகங்கள். அமைதியாகயிருக்கும் அழகான ஏரி. வெள்ளிக்கம்பிகளாக அவ்வபோது பாய்ந்து கொண்டிருக்கும் மழைச்சாரல் என இயற்கை தந்த “கொடையாக” நாம் அறிந்திருக்கும் கொடைக்கானல் தான், கடந்த நூற்றாண்டில் விண்வெளி இயற்பியலில்(ஆஸ்ட்ரோபிஸிக்ஸிக்கில்) ஒரு மிக முக்கிய கண்டுபிடிப்பு நிகழ்ந்த இடம் என்பதும், அந்த வான் மண்டல கண்காணிப்பு தொலை நோக்கு நிலையம் கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாகத் தினசரி சூரியனின் நிலையைப் போட்டோ எடுத்துக்கொண்டிருக்கிறது என்பதும் பலருக்குத் தெரியாத செய்தி
.
நாள்தோறும் ஆதவன் ஒய்வு இல்லாமல் தன் பணியைச்செய்வதைப் போல நிறுவப்பட்ட நாளிலிருந்து சூரியனை தினமும் படமெடுத்துகொண்டிருக்கும் இந்த வான் மண்டல கண்காணிப்பு மையத் (0bservatory).திற்கு வயது 118. உலகில் நிறுவப்பட்டஇடங்களிலேயே நிலைத்து தொடர்ந்து 100 ஆண்டுகளுக்குமேல் தங்கள் பணியைத் தொடர்ந்து கொண்டிருக்கும் 3 மையங்களில் இது முதன்மையானாது. 1899ம்ஆண்டு சூரிய மண்டலத்தை ஆரயாய நிறுவப்பட்ட இந்த நிலயத்திலிருந்தது தினசரி சூரியனை படமெடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.
ஆம்! 100ஆண்டுகளாக தினசரி சூரியனை படமெடுத்து பதிவுசெய்துகொண்டிருக்கிறார்கள். உலகெங்குமிருக்கும் பல வான் மண்டல ஆராய்ச்சியாளார்கள் அதைப் பயன் படுத்திக்கொண்டிருக்கிறார்கள்
“ஓரு பேரிடரினால் சில நன்மைகளும் உண்டாகும்” என்ற வார்த்தைகளுக்கு ஏற்ப 1890-95 ஆண்டுகளில் ஏற்பட்ட மிகக் கொடிய பஞ்சத்தின் பின் விளவுகளில் ஓன்று தான் இந்திய வான் ஆராய்சி மையங்கள். கிழக்கிந்திய கம்பெனி தன் சாம்ராஜ்யத்தின் எல்லைகளை விஸ்தரித்துகொண்டிருந்த அந்தக் கால கட்டத்தில், எற்பட்ட மிக மோசமான பஞ்சத்திற்கு காரணம் தொடர்ந்து மழைபொய்த்ததும், அந்த நிலையை முன்கூட்டிய அறிய வாய்ப்பில்லாது போனதுதான் என்று உணர்ந்த நிர்வாகம் வானிலை ஆராய்சி நிலையங்களைத் துவக்கியது.


ஜான் எலியட் என்ற அதிகாரி கண்டுபிடித்த “தூசி மறைக்காமல் வானம் தெளிவாகத் தெரியக்கூடிய இடமான பழனி மலைத்தொடரின் இந்தப் பகுதி” தேர்ந்தெடுக்கபடுகிறது. பின்னாளில் இது சென்னை நுங்கம்பாக்கத்துக்கு மாற்றப்பட்டபின் இது சூரியனை ஆராயும் நிலையமாக மாற்றபட்டிருக்கிறது.


“இந்தக் கட்டிடத்தில் ஜனவரி 9ம் நாள் 1909 ஜான் எவர்ஷெட் சூரியனிலிருக்கும் கரும்புள்ளிகள் ஒரு குறிப்பிட்ட சுழற்சிமுறையில் உருமாறுவதை கண்டுபிடித்தார்” என்ற பதிவுக்கல் வரவேற்கும் அந்தச் சிறிய கூடத்திலிருக்கும் டெலிஸ்கோப் மூலம் தான் சூரியனின் படம் தினசரி பதிவு செய்யப்படுகிறது.
சூரியனில் உள்ள கரும்புள்ளிகள் 11ஆண்டுகளுக்கு ஒருமுறை உருமாறிக் கொள்வதும் அதன் விளைவாக நிகழும் மாற்றங்கள் தான் பருவ நிலை மாறக்காரணம் என்ற இவரது கண்டுபிடிப்பு “எவர்ஷெட் எபஃக்ட்’ என்ற அழைக்கப்படுகிறது. இன்றும் தொடர்ந்துகொண்டிருக்கும் பல ஆராய்ச்சிகளுக்கு இது தான் அடிப்படை.

வட்டவடிவ கட்டிடத்திற்கு கோளவடிவ ஹெல்மெட் போட்டதைப் போன்ற அமைப்பு. அந்தக் கோள வடிவ மேற்கூரையை நகரும் கதவுகளுடன் கோள வடிவத்தில் (2300ரிவிட்கள்!) அமைக்கவேண்டியிருந்த அந்தப் பணிக்கு உள்ளுரில் திறமையான தொழிலாளிகள் இல்லாதால் தானே தினந்தோறும் உழைத்து அமைக்கிறார் இதன் முதல் அதிகாரியான மைக் ஸ்மித்.


சுழுலும் சக்கர கைப்பிடிகளினால் எளிதாக இயக்கித் திறக்ககூடிய இந்தக் கதவுகள் இன்றும் இயங்குகிறது. சூரியன் நகரும் பாதையை நோக்கி மட்டும் திறக்கப்படும் இதன் கதவுகளின் வழியே டெலிஸ்கோப் சூரியனைபார்க்கிறது. 1901ல் நிறுவப்பட்ட 6” டெலிஸ்கோப் சிறந்த பாரமரிப்பினால் இன்றும் பணி செய்வதை விட ஆச்சரியம் அதன் மூலம் எடுக்கபட்ட அத்தனை படங்களும் பாதுகாக்கப்பட்டிருக்கிறது என்பது தான்
1999ம் ஆண்டு இதன் நூற்றாண்டுவிழா கொண்டாடப்பட்டபொழுது உலகெங்குமிருந்து 50 ஆராய்ச்சியாளர்கள் பங்கேற்று தங்கள் படைப்புகளைப் பதிவு செய்திருக்கிறார்கள்.



எப்படி படமெடுக்கிறார்கள்?. சூரியனை கேமிரா வழியாகக் கூட நேரடியாகப் பார்க்கமுடியாது. அதற்காக ஒரு மூன்று அடுக்கு அமைப்பு. மேல் மாடியில் சூரியனைப்பார்க்கும் டெலிஸ்கோப் தான் பார்ப்பதை ஒரு வட்டகண்ணாடியில் பிரதிபலிக்கிறது. அங்கிருந்து அது 45 டிகிரி கோணத்தில் இரண்டாவது மாடியிலிருக்கும் மற்றொரு கண்ணாடியில் தெரிகிறது.  அது மீண்டும் தரையின் கிழே பூமிக்கடியிலிருக்கும் மற்றொரு கண்ணாடியில் பட்டு அதன் முன்னே 60 அடி தொலைவில் இருக்கும் ஒரு வெண்திரையில் பிரதிபலிக்கிறது. அதை அதன் முன் நீண்ட பாதையில் நகரும்படி அமைக்கப்பட்டிருக்கும் கேமிரா படம்பிடித்துக்கொண்டே இருக்கிறது. ஒரு வினாடி கூடத் தவறாமல் கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக இப்படி படம் எடுத்துக்கொண்டே இருக்கிறது. கிராப் பேப்பர்களில் கோடுகளாகப் பதிவு செய்து கோண்டிருந்த இது இப்போது டிஜிட்டலாக்கபட்டு கம்யூட்டரில் பதிவு செய்யப்படுகிறது. 150 மில்லியன் கீமிக்கு அப்பால் இருக்கும்(ஒரு மில்லியன் 10 லட்சம்) சூரியனின் முழூ உருவத்தைக் கைக்கெட்டும் தூரத்தில் கண் கூசாமல் பார்க்கிறோம்

.
இப்படி சூரியனைத் தொடர்ந்து கண்காணிக்கும் மையம் உலகிலேயே இது ஒன்று தான் என்று சொல்லி நம்மை ஆச்சரியப்படுத்துகிறார் இந்த மைய இயக்குனர் திரு செல்வேந்திரன். விண்வெளியியலில் சிறப்புப் பட்டங்கள் பெற்றிருக்கும் இவர் இந்தத்துறையில் நீண்ட அனுபவம் கொண்டவர். மிக அழகாக நமக்கு எளிதில் புரியும்படி விளக்குகிறார். பென்சிலில் இடப்பட்ட புள்ளிபோல வெண்திறையில் நமக்குத் தெரியும் இந்தக் கருப்பு புள்ளிகள் தான் பிளாக் ஸ்பாட் எனப்படும் கரும்புள்ளிகள். ஒவ்வொன்றும் பூமியைவிடப் பெரிது என்கிறார்.
வளாகத்திலிருக்கும் கட்டிடங்களில் ஒரு சிறு நூலகமும், அருங்காட்சியகமும் இருக்கிறது மிகுந்த கஷ்டங்களுக்கிடையே காடாக இருந்த இடத்தில் நிலையம் உருவாக்கப்பட்டிருக்கிறது போன்ற பல தகவல்கள், ஓரு சுவையான நாவலைப் போல எழுதப்பட்ட பல குறிப்புகள்அடங்கிய புத்தகங்கள், 1000க்குக் மேற்பட்ட புத்தகங்கள் இருப்பதால் போதிய இடமில்லாதால் மேற்கூரை வரை அடுக்கியிருக்கிறார்கள் தேவயையானபோது பெரிய ஏணிகள் மூலம் எடுப்பார்களாம்

பல அரிய படங்கள் கருவிகளின் மாதிரிகள், படங்கள் கொண்ட அந்த அருங்காட்சியகத்தில் மனமும் நேரமும் இருந்தால் நாள் கணக்கில் செலவழிக்கலாம்.


எல்லோருக்கும் டெலிஸ்கோப் இருக்கும் கட்டிடத்திற்குள் அனுமதி இல்லை என்பதால் அது எப்படி செயல் படுகிறது என்பதை இந்த அருங்காட்சியகத்தில் அதன் சிறிய மாதிரியை அமைத்து ஒரு சிறிய டெலிஸ்கோப் வழியாகச் சூரியனின் பிம்பத்தைக் காட்டி அருமையாக விளக்குகிறார்கள் திரு செல்வேந்தரனின் உதவியாளர்கள்.

சென்னை SIET கல்லூரியில் 50 ஆண்டுகளுக்கு முன் ஒரே வகுப்பில் படித்தவர்கள் தங்கள் நீண்டகால நட்பைக் கொண்டாட கொடைக்கானல் வந்த குழு ஒன்று கேட்ட கேள்விகளினால் நாம் பல விஷயங்களைப் புரிந்து கொள்கிறோம். அவர்கள் கணிதத்துடன் வானியல் படித்தார்களாம். ஆர்வத்துக்கு வயது இல்லை என்பது புரிகிறது

.

வானியல் வரலாற்றில் மிக முக்கிய நிகழ்வு நடந்த இடம், 100 வருடங்களுக்கும் மேலாக ஆதவனை அலுக்காமல் பார்த்து உலகின் வானவியல் வித்தகர்களுக்குத் தொடர்ந்து புதிய செய்திகளை வழங்கிக்கொண்டிருக்கும் ஒரே இடத்தை நாம் பார்த்தோம் என்ற பெருமிதத்தோடு வெளியே வருகிறோம்.

 


16/4/17

நைனிதால் -தேவதைகள் வாழும் வீடு


பசுமையான ஊசிமுனை இலைகளுடன் ஓங்கிவளர்ந்திருக்கும் தேவதாரு மரங்கள் நிறைந்த அந்த மலைச்சரிவிலிருக்கும் விடுதியிலிருந்து பார்க்கும்போது எதிரே மரகதப்பச்சை வண்ணத்தில் அமைதியாக அழகாகப் பரந்து விரிந்திருக்கும் நைனிதால் ஏரியும் அதன் மீது அமர்வதற்காக மெல்ல மிதந்து கொண்டிருக்கும் வெண்பனிமேக கூட்டங்களும் அவை அந்த ஏரியிலிருக்கும் அழகான வண்ண வண்ண பாய்களிடனிருக்கும் சிறு படகுகளுடன் ஆடும் கண்ணாமூச்சி ஆட்டமும் இந்த உயரத்திலிருந்து பார்க்க மிக அழகாகியிருக்கிறது. ஏரியின் ஒரு கோடியிலிருக்கும் நைனா தேவியின் கோவிலும் அதன் மீது கொடியும் தெளிவாகத் தெரிகிறது
>
ஒரு மாவட்டத்தலைநகர் என்ற எந்த பந்தாவும் இல்லாத இந்த சின்னஞ்சிறிய ஊர் உத்திரபிரேதசத்திலிருந்து பிரித்து
உருவாக்கப்பட்ட உத்திரகாண்ட் மாநிலத்தின்  முக்கிய நகரம்...
மலைப்பகுதியான இந்த நகரம் ஒரு சுற்றாலத்தலமட்டுமில்லை, புராதன புண்ணிய பூமியும் கூட. . சுற்றிலிருக்கும்
7 மலைகளில் அழகான ஏரிகள் மட்டுமில்லை. வீரம், கல்வி,நீதி, கலை, செல்வம் போன்றவகளை காக்கும் தேதைகளின்கோவில்களும் இருக்கின்றன.
,
நகரின் நடுவே இருக்கும் நைனிதால் ஏரியின் ஒரு பக்க கரையின் மீது தான் சாலை. அது மக்கள் நடக்க மட்டுமே. அந்த சாலையில் பொது வாகனங்கள் செல்ல அனுமதியில்லை நடக்கமுடியாதவர்களக்கு சைக்கிள் ரிக்க்ஷா வசதி. அதற்கு Q வில் நின்று 3 ரூபாய் டோக்கன் வாங்கவேண்டும். ( இந்தியாவில் எங்கும் பார்க்க முடியாத பீரிப்பெய்டு சைக்கிள்ரிக்ஷாக்கள்!) .

ஏரியின் ஒரு முனையிலிருக்கிறது நைனாதேவியின் கோவில் அர்ச்சகர் நல்ல ஆங்கிலம் பேசுகிறார். "இது மற்ற இந்தியகோடை வாசஸ்தலம் போல வெள்ளைக்காரர்களால் கண்டுபிடிக்கப்படவில்லை.இந்தப் பகுதி முழுவதும் இந்து மதபுராணங்களுடன் சம்பந்தப்பட்டது,
தெய்வங்களும், தேவர்களும் வாழ்ந்த பூமி. 1000 கோவில்களுக்கு மேலுள்ள மலைத்தொடர்களில் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே சந்தன் வம்ச மன்னர்களின் ஆட்சியில் மக்கள் சந்தோஷமாக வாழ்ந்திருக்கிறார்கள் இந்த ஏரி தட்சனின் யாகத்தில் பங்கேற்தற்காக கோபத்தில் சிவ பெருமான் தேவியை வெட்டிஎறிந்தபோது பார்வதிதேவின் கண் விழுந்த இடம். அதனால்தான் நைனி-தால் எனப்பெயர்
. 100 மைல் தூரத்தில் 12 ஜோதிலிங்கங்களின் ஆதி ஜோதிலிங்கமிருக்கிறது. போய்பாருங்களேன்." என்று அந்த அர்ச்சகர் ஆர்வத்தைத் தூண்டியதால் அந்தமிகப் பழமையான, ஜோதி லிங்ககளின் ஆதி லிங்கத்தைத் தரிசிக்க . இப்போது ஜோகெஷ்வருக்குப் போய்க்கொண்டிருக்கிறோம்.
வளைந்து, வளைந்து செல்லும் மலைப்பாதை, இதமான குளிர் சாலையின் இரண்டுபுறமும் பளபளக்கும் பெரிய பச்சை கார்பெட் விரித்ததுபோல பசுமையான காடு. பார்க்குமிடமெல்லாம் நிந்தன் பச்சைநிறம் தோன்றுதடா என பாடவைக்கிறது. சிறு சிறு மலை கிராமங்களை கடந்துபோய்க்கொண்டிருக்கும் நம்மை பள்ளத்தாக்கில்
தெரியும் அந்த கிராமம் சட்டென்று கவர்கிறது. அல்மெடா (ஆங்கிலத்தில் அல்மோரா என எழுதுகிறார்கள்) என அறிவிக்கும் வரவேற்பு பலகையின் அருகில் ராமகிருஷ்ண மடத்து இலச்சினையுடன் ஒரு சிறிய போர்டு. ஆச்சரியப்பட்டு விசாரித்து மெல்ல அந்த மலைச்சரிவில்இறங்கினால்.அழகான பள்ளத்தாக்கை நோக்கிய எளிமையான கட்டிடங்களுடன் அமைக்கப்பட்ட ஆஸ்ரமம்.மற்ற ராமகிருஷ்ண ஆஸ்ரமங்களைப்போலவே அமைதியும்,அழகும்



மெல்ல முடிய பனிமேகங்கள் சட்டென்று விலகி பளிச்சென்று வெய்யில் தாக்கும் ஒரு வினோதமான வானிலையில் பயணத்தை தொடர்கிறோம். வழிநெடுக சிறிதும்பெரிதுமாக கோவில்கள்.உள்ளுர் காவல் தெய்வங்களிலிருந்து சிவபெருமான்
வரை பலவிதமான கோவில்கள். அதில் ஒன்று சிட்டை என்ற இடத்திலிருக்கும் கொலுதேவதா கோவில். வித்தியாசமாக இருக்கிறது. நுழைவாயில்,பாதை,மேற்கூரை கோவிலின் தூண்கள் மரங்கள் என்று எங்கு பார்த்தாலும் பெரிய,சிறிய மணிகள் கொத்துகொத்தாக தொங்குகிறது. விசாரித்ததில் நீதி தேவதையான அந்த தேவியிடம் கோர்ட் வழக்கு விவகாரங்கள்,வசூலிக்கமுடியாதகடன்,நிறைவேறாத ஒப்பந்தங்கள் போன்றவற்றின்,நகலுடன் ஒரு சிறிய மணியை இணைத்துக் கட்டி, நல்ல முடிவு வேண்டிப் பிரார்த்தித்து,கடவுளுக்கு கடிதம் எழுதுவார்களாம். வேண்டுதல் நிறைவேறியதும் பெரியமணிகட்டுவதாக வேண்டிக்கொள்கிறார்கள் என்றுதெரிந்தது.
பல மலைச்சரிவுகளையும் ஏற்றங்களையும் கொண்ட அந்த 35 கீமி மலைச்சாலையைக் கடக்க 2மணி நேரத்திற்கு மேலாகிறது. தேவதாருமரக் காடுகளுக்கே உள்ள மணம் நாசியைத்தாக்குகிறது. அடர்த்தியாக ஓங்கி வளர்ந்திருக்கும் தேவதாரு மரங்களும் ,வீசும் குளிர்ந்த காற்றும் அதிக உயரத்திற்கு வந்துவிட்டதை உணர்த்துகிறது. இங்கிருந்து ஜோகேஷ்வர் வளாகம் துவங்குகிறது என்ற தொல்பொருள் துறையினரின் அறிவிப்பு நம்மை வரவேற்கிறது 9ம் 10ம் நூற்றாண்டுகளில் பல காலகட்டங்களில் எழுப்பட்டதாகவும் முக்கியமான ஜோதிர்லிங்கம் இருக்கும் பெரிய கோவில் 3கிமீ தொலைவில் இருப்பதாகச் சொல்லும் அந்த குறிப்பைபார்த்துவிட்டு பயணத்தைத் தொடர்கிறோம் சட்டென்று திரும்பிய ஒரு திருப்பத்தில் பள்ளத்தாக்கில் பசுமையான மரங்களின் பின்னணியில் சிறிதும், பெரிதுமாகக் கும்பலாக பல கோவில்கள். சதுரமான கீழ்ப்பகுதியாக துவங்கி,
நுழைவாயிலைத்தவிர வேறு எந்த திறப்போ மாடமோ இல்லாமல் இறுக்கி அடுக்கிய கல்கோட்டையாக உயர்ந்து கோபுரமாக குவிந்த உச்சியின் மீது மரத்தால் செய்த சிறிய மண்டபத்தைத் தொப்பியாக அணிந்திருக்கும் ஒரு பெரிய கோவில்.
அதேவடிவத்தில் சிறிதும் பெரிதுமாக அருகருகே பல கோவில்கள்.வேகமாக நடந்தால் இடித்துக் கொள்ளுமளவிற்கு நெருக்கமாகப் பல குட்டி (100கும்மேலிருக்கும்)கோவில்கள். . கோவில் தொல்பொருள் சின்னம் என அறிவிக்கப்பட்டிருந்தாலும் பூஜைகள் உண்டு. பிரதான கோவிலில் மூர்த்தி ஜோகெஷ்வர் சுயம்புவாக எழுந்த லிங்கம். தரையிலிருந்து 1அடி உயரமிருக்கும்

மூர்த்தியைச் சுற்றி மூன்றுபக்கங்களிலும் பக்தர்கள் கர்ப்பககிரகத்தில் பொறுமையுடன் உட்கார்ந்திருக்க, பளபளக்கும் ஆரஞ்சு வண்ண உடையில்அர்ச்சகர் வந்து அவர் ஆசனத்தில் அமர்கிறார். பாலில் தோய்ந்த அரிசி தேவதாரு இலைகளுடன்அரளிப்பூ எல்லோருக்கும் தருகிறார்.அவருடன் நாமும் செய்யும் அபிஷகம் முடிந்ததும் மெல்லிய குரலில் உள்ளூர் மொழியில் ஒரு ஸ்லோகம் சொல்லுகிறார் இடையிடையே அவர் அர்ச்சிக்கும்போது நாமும் அர்ச்சிக்கிறோம். பின் தீபாரதனை. பூஜைமுடிந்தது.
பூஜைக்குக் கட்டணம் விஐபி தரிசனம் எதுவும் கிடையாது. முதலில்வருவபருக்கு ஸ்வாமியின் அருகே அமர முன்னுரிமை. நம் அருகிலிமர்ந்து பூஜை செய்தவர் உத்திராஞ்சல் மாநில உயர் நீதிமன்ற நீதிபதி என்பதை வெளியில் வந்தபின் அவருக்குள்ள பாதுகாப்பை பார்த்தபின்தான் தெரிந்துகொள்கிறோம்.
அருகில் ஒரு சின்ன குன்றின் மேல் குபேரனுக்கு ஒரு கோவில். மூர்த்தி லிங்க வடிவிலிருக்கிறார். நுழைவாயிலில்
"வேண்டிக்கொள்ளும் பக்தர்களுக்கு செல்வம் சேரும்" என எழுதப் பட்ட வாசகங்கள். அருகிலிருக்கு ஜோகேஷ்வருக்கு அவ்வளவு கூட்டமிருந்தும் இங்கு ஏன் அதிகமில்லை என்ற நமது கேள்விக்கு அந்த அர்ச்சகர் தந்த பதில் பற்றி சிந்தித்துக்கொண்டே நைனிதாலுக்கு திரும்பும் பயணத்தை துவக்குகிறோம்.

வேடிக்கைக்காகச் சொன்னதோ அல்லது வேதனையில் சொன்னதோ -நம்மைச் சிந்திக்கவைத்த அந்த வார்த்தைகள்
"செல்வம் சேர்ந்தால் பிரச்சனைகள் வரும் பிரச்சனைகளினால் வேதனை உண்டாகும் என்பதால் தேடிப்போய் வேண்டி வேதனையை வாங்கிக் கொள்வானேன் என்று பலர் நினைக்க ஆரம்பித்துவிட்டார்கள்"