மேடைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மேடைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

8/2/15

கடைசிக்கோடு



என்னுடைய கடைசிக்கோடு புத்தகத்தை  திருப்பூர்  தமிழ்சங்கம் ”2013 இலக்கிய விருது”க்கு தேர்ந்தெடுத்து 5/2/15 அன்று விழாவில் பணப்பரிசும்,கேடயம், சான்றிதழ் தந்து கெளரவித்தார்கள்.. திருப்பூர்  தமிழ் சங்கம் தரும் இந்த விருது தனிமதிப்பு வாய்ந்தது..23 ஆண்டுகளாக தமிழின் சிறந்த படைப்புகளுக்கு வழங்குகிறார்கள்.
  அவர்கள் தேர்ந்தெடுக்கும் நடுவர்களின் குழுவை அறிவிக்க மாட்டார்கள். அதே போல்  அவர்களுக்கு வரும் படைப்புகளை நடுவர்களுக்கு அனுப்புதோடு சங்கத்தின் பணி முடிந்துவிடுகிறது. நடுவர்கள் முடிவுகளை அறிவித்தபின்  விருதுபெறும் படைப்பாளிகளை திருப்பூருக்கு அவர்கள் செலவில் அழைத்து  நல்ல முறையில் வரவேற்று வசதியாக தங்கவைத்து மகளின் திருமண விழாவிற்கு  வந்தவர்களைப்போல  அன்புடன் உபசரிக்கிறார்கள்.
விருது பெற்றவகளை விழா மேடையில் அமரச்செய்து விருதுகளை அளிக்கிறார்கள்.. விழா புத்தக கண்காட்சி அரங்கில் நடைபெற்றது. வாசிப்பதை நேசிக்கும் நல்ல மனிதர்கள் நிறைந்த மாபெரும் சபையில் மாலைகள் விழுந்ததால், . படைப்பாளிகளின் படைப்பின் பெருமையை பேசப்பட்டதால். விருதுபெற்றவர்கள்.உண்மையான கெளரவத்தை (சற்று கர்வத்தை கூட) உணர்கிறார்கள்.
தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் அவர்களும் லேனா தமிழ்வாணனும் பங்கேற்று விருகள் வழங்கினார்கள்.  என் வாழ்வின் மகிழ்வான தருணம் அது.

திருப்பூர் தமிழ் சங்கத்தலவர் டாக்டர் ஆ. முருகநாதன், செயலர்  ஆடிட்டர் அ.லோக நாதன். இருவரும் தத்தம் தொழிலில் உச்சத்தில் இருப்பவர்கள்.. ஆனலும் தமிழ் இலக்கியத்திற்கான சேவைகளில் தங்களை அர்பணித்துக்கொண்டவர்கள்

 தமிழ் படைப்பாளிகள் அனைவரும்   எழுதுபவர்களுக்கு இத்தகைய உயரிய கெளரவம் அளிப்பதற்காக இவர்களுக்கு  நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறார்கள்..
 திருப்பூர் டாலர் நகரம் என்பது தெரியும். பணத்தை மட்டும் நேசிக்காமல் தமிழையும் நேசிப்பவர்களும் நிறைந்த நகரம் என்பதையும் புரிந்து கொண்டேன்,  



25/8/14

கண்ணனின் கனவு



 முன்னாள் நடிகை வைஜைந்திமாலா. 54 வருடங்களுக்கு முன் தான் கதாநாயகியாக நடித்த  கல்கியின் அமரகாவியாமான பார்த்திபன் கனவு  ஒரு ஒலிபுத்தகமாக வரும் என்றோ அதை தானே வெளியிடுவோம்  என்றோகனவிலும் நினைத்துகூட பார்த்திருக்கமாட்டார். சமீபத்தில்  பொன்னியன் செல்வன் நண்பர்குழுவினர் மூலம் திரு பாம்பே கண்ணன்  இந்த காவியத்தை  ஒலி புத்தகமாக்கி வெளியிட்டிருக்கிறார்.  இவர்  சிவகாமியின் சபதம், பொன்னியன் செல்வன் காவியங்களையும் ஒலி புத்தகமாக்கியிருப்பவர். தமிழ் படிப்பதை மெல்ல மறந்துவரும்  இன்றைய இனிய இளையதலைமுறையினர் படிப்பதைவிட கேட்பதையே அதிகம் விரும்புகிறார்கள் என்பதை உணர்ந்து இவர் இதுபோன்ற  ஒலிபுத்தகங்களை தயாரிக்கிறார். மேடை நாடகங்களில் நீண்ட அனுபவம்  கொண்ட இவர்  இதைவெறும் வியாபார முயற்சியாக இல்லாமல் ஒரு தவமாகச் செய்து கொண்டிருக்கிறார்.
மிகுந்தசிரமங்களுக்கிடையே தகுந்த குரல்களை தேடிபிடித்து பயிற்சி அளித்து ஒலிப்பதிவை மேற்பார்வையிட்டு தயாரிக்கிறார்.
நல்லி குப்புசாமி,  வைஜந்திமாலா, சிவசங்கரி, ஏ ஆர் எஸ்,இந்திரா செளந்தர்ராஜன்  கலந்துகொண்ட விழாவில் பேசியவர்கள் அனைவரும்  அமரர் ஆசிரியர் கல்கியின் பல்வேறு முகங்களைப் பற்றி பாராட்டி பேசினார்கள்
.தான் பிறப்பதற்கு மூன்பே தங்கள் குடுமபத்துக்கு அறிமுகமானவர் கல்கி  என்று ஆரம்பித்து  ”கல்கி மாமா” என்று உரிமையோடு பேசிய சிவசங்கரி தொழில்நுட்ப வசதிகளற்ற காலத்திலேயே அமரர் கல்கியின் கடின உழைப்பு ஆச்சரியத்தை தருகிறது என்றார்.  பார்த்திபன் கனவு எழுதிய பின் அதன் முந்தியகாலகட்ட கதையாக சிவகாமியின் சபதத்தை தொடர்ந்த (backword integration) டெக்னிக் பிரமிப்பூட்டும் விஷயம் என்றார்.  . முடிவு தெரியாமல் போய்ச் சேர்ந்துவிடுவோமோ என்கிற ஆதங்கத்தில் “நான் சாகறத்துக்குள்ள பொன்னியின் செல்வன் முடிஞ்சுடுமோன்னோ...” என்று அவரின் பாட்டி கேட்டு கொண்டே இருந்ததை சொன்னபோது அரங்கம் சிரிப்பில் அதிர்ந்த்து. 
 விழாவின் ஆரம்பத்தில், பார்த்திபன் கனவிலிருந்து சில காட்சிகளை நாடகமாக நடித்தது நிறைவாக இருந்தது உடை, மேக் அப், நடித்தவர்கள், தமிழ் உச்சரிப்பு, ஒலி/ஒளி அமைப்பு எல்லாமே அருமை,    நாயகன் விக்கரமனாக நடித்த சூரஜ், நாயகி குந்தவியாக நடித்த  அர்ச்னா நாளைய நம்பிக்கை நட்சத்திரங்கள் எனபதை நிருபித்தார்கள். இந்த டீமையை வைத்து முழு நாடகமாகவே போடலாம்.
வளரும் தொழில் நுட்பத்தில் இப்படி ஒலிபுத்தகங்கள் உருவாவது பரிமாணவளர்ச்சி, வருங்காலங்களில் இதுதான் புத்தகங்களின் வடிவமாக இருக்கபோகிறது.. தனது புத்தகங்களும் இப்படி ஒரு நாள் வெளிவரும் என்றார் இந்திரா செந்திர்ராஜன்.
ஒலிபுப்த்தகம் வெளிவர நண்பர் பாம்பே கண்ணன் அவர்களின் அயராத உழைப்பையும் தயாரிப்பாளர் சிகே வெங்கட்ராமன் அவர்களின் பெருந்தன்மையையும் மகிழ்ச்சியுடன் பாராட்டிய ஏஆர்ஸ்...  நாடக நடிகர்களின் சிறப்பான நடிப்பை பாராட்ட விட்டுபோனதற்காக மன்னிப்பு கேட்டு மீண்டும் மைக்குவந்து அவர்களை பாரட்டி நன்றியும் சொன்னார். 30 ஆண்டுகாலமாக நாடகமேடையை நேசிப்பவர் இலையா?
1960ல் கறுப்பு-வெள்ளை பார்த்திபன் கனவில் நடித்த வைஜயந்திமாலா பாலி  இப்பொழுதும் டிரிம்மாக இருக்கிறார். தன் மெல்லிய குரலில்  மெல்ல நாலுவரிகளில்பேசி  தன் பேச்சைமுடித்துகொண்டார். 
அரங்கம் நிறைந்திருந்தததைவிட ஆச்சரியம் நடுவே குத்துபாட்டு ரிங்டோன்கள் ஒலி  தொல்லையிலாததுதான்.
 ஒலிப்புத்தகத்தில் நடிக்கும் போது நடிகர்கள் வசனங்களைப் வெறுமனே படிக்காமல்.  நடிக்கிறார்கள்  அந்த பாத்திரமாகவேமாகி பேசுகிறார்கள்.  இதை நன்கு தெரிந்தவர் இயக்குனர் பாம்பே கண்ணன். ஆனாலும் ஒலிபுத்தகத்திற்கு குரலால் உயிர் கொடுத்தவர்களை அன்று  ஏன் மேடையில் கெளரவிக்கவில்லை என்று தெரியவில்லை. 
 மூன்று தலைமுறைகளை கடந்த கலாபூர்வமான கல்கியின் காவியங்கள்  அடுத்த தலமுறையையும் அடைந்து அதையும் தாண்டி நிற்க உதவும்  பாம்பே கண்ணனின் இந்த  ஒலிபுத்தக முயற்சி பெரிதும் பாராட்டபட வேண்டிய ஒன்று
(31/8/14 கல்கி)

9/8/14

மாலனின் பேஸ்புக்கிலிருந்து




மல்லிகை மாலை சூட்டி, மங்கல வாத்தியம் முழங்க, மாப்பிள்ளையை மணவறைக்கு அழைத்து வருவது போல் மேடைக்குக் கூட்டிவந்து, சிறந்த எழுத்தாளருக்கான விருதைக் கம்பன் கழகம் நேற்றுமாலை எனக்கு அளித்தது. மேனாள் உச்சநீதிமன்ற நீதிபதி லட்சுமணன் விருதை அளித்தார்.
எனக்குக் கம்பனை அறிமுகப்படுத்தியவர் பாரதி. உரைநடை எழுதப்பயின்ற காலத்தில் அதற்கான உதவிக் குறிப்புக்களைப் பட்டியலிடும் பாரதியார், ‘கம்பன் கவிதைக்குச் சொல்லியதைப் போலவே” எனக் குறிப்பிட்டு (கம்பன் வரிகளைச் சொல்லாமல்) உரைநடைக்கான நான்கு அம்சங்களை தெளிவு, ஒளி, தண்மை, ஒழுக்கம் எனப் பட்டியலிடுவார். இதில் ஒழுக்கமாவது தட்டுத் தடையின்றிச் செல்லும் நடை என்றும் விளக்குவார். என் அறிவுக்கு எட்டியவரையில் இன்றளவும் பாரதிக்குக் கம்பன் சொல்லிய இந்த ஃபார்முலாவை என் உரைநடையில் பின்பற்றி வருகிறேன். எனவே இது எனக்கு என் குருவின் குரு -பேராசிரியர்- அளித்த பிரசாதம்
இந்த விருதை நான் எழுதத் துவங்கிய நாளிலிருந்து என்னைச் சிகரங்களை நோக்கி உந்தி வரும் என் அண்ணன் ரமணனுக்கு சமர்ப்பிக்கிறேன்