4/3/13

சத்திய சோதனையை சந்தித்தவர்.


“என் வாழ்க்கையில் நான் சந்தித்த மிகப்பெரிய சவால்: என் நேர்மைக்கும் நான் நேசிக்கும் என் தொழிலுக்கும் களங்கம் விளைவித்த ஆபத்தான சவாலான அதை “சத்தியம் ஒரு நாள் நிச்சியம் ஜெயிக்கும் என்ற என நம்பிகையினாலும் தெய்வத்தின் அருளாலும் ஜெயித்தேன் “ என்கிறார் நம்பி நாராயணன்.
 எதிர்பாராத நேரத்தில் சவால்கள் எழுவதும் அதை எதிர்கொண்டு வெற்றிகொள்வது என்பதும் பெரிய நிருவனங்களில், அல்லது துணிவுடன் எதிர்நீச்சல் போட்டவர்களின் வாழ்க்கையில் மட்டுமில்லை. ஒரு தனிமனிதன் வாழ்க்கையிலும் நிகழக்கூடியது என்ற நிதர்சனமான உண்மையை புரிய வைக்கிறது இந்த விஞ்ஞானியின் வாழ்க்கை.
நம்பி நாராயணன் ஒரு விண்வெளியியல்விஞ்ஞானி. ஏரோநாட்டிகல் எஞ்ஞினியரிங்கும், ராக்கெட் சையின்ஸும்படித்த பின் இந்திய விண்வெளித்துறையில் (ISRO)அப்துல் கலாம் சதிஷ் தாவன் போன்றவர்களுடன் 1970களில் பணியாற்றியவர். திரவ எரிபொருளின் சக்தியில் இயங்கும் ராக்கெட்மோட்டர்களை. எந்த வெளிநாட்டின் உதவியுமில்லாமல் 1970லேயே உருவாக்கியவர். மிக பெரிய வல்லரசுநாடுகள் மட்டுமே அறிந்தந்திருந்த அதிவேக ராகெட்களை செலுத்த தேவையான கிரையோஜினிக் என்ற திரவ எரிபொருளை உள் நாட்டிலியே தயாரிக்க ரஷ்ய பிரெஞ்ச் அரசு நிறுவனங்களுடன் 20 ஆண்டுகளுக்கு மேல் கடுமையாக உழைத்து அதை கற்றவர்.செய்யும் தொழிலையே தெய்வமாக நினைக்கும் இந்த மனிதருக்கு தன் தொழிலைத்தவிர வேறுஎதுவும் தெரியாது.
1994லில் ஒரு நாள் திருவனந்தபுரத்தில் இவர் வீட்டுக்கு வந்த போலீஸ் படைஇவரை கைது செய்கிறது. மறுநாள் தலைப்பு செய்திகள் சொன்ன தகவல் இவர் ராக்கெட் ரகசியங்களையும் ராணுவ ரகசியங்களையும்  பாக்கிஸ்தானுக்கு விற்கிறார். என்பது.இன்று போல் செய்திகளை துரத்தும் டிவி சேனல்கள் அன்று இல்லை. ஆனால் மாநில மற்றும் தேசிய நாளிதழ்களில்  தொடர்ந்து ஊகங்களின் அடிப்படையில் எழுந்த பல செய்திகள் விஸ்வரூபம் எடுத்து நம்பி நாராயணணையும், அவரது சகா சிகுமாரையும் தேசதுரோகிகளாக வர்ணித்தன. மலையாளத்திலும் தமிழிலும் பல வாரபத்திரிகைகள் தொடர்களில் உண்மை”கதைகளை” வெளியிட்டன. ஒவ்வொருமுறையும் கோர்ட்டுக்கு அழைத்துசெல்லும்போது துரோகி என முகத்தில் குத்தி காரி உமிழ்ந்தனர் சிலர்... சிறையில் ”உன்னை சரியாக நடத்தாத மேலதிகாரியை மாட்டிவிடு” என்று கொடுத்த அட்வைஸை ஏற்காததால் நிர்வாணப்படுத்தி சித்திரவதை செய்யபட்டார்.. இரண்டாண்டு நீண்ட பலவிசாரணைக்கு பின் சிபிஐ 1996ல்அறிவித்த முடிவு  ”இது பொய்யாக புனையபட்ட ஒரு வழக்கு. வழக்கை தொடர்ந்த அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கையும், அவர்களுக்கு கோர்ட்மூலம்தகுந்த  தண்டனையும் தரபடவேண்டும்”
இதைத் தொடர்ந்து நீதிமன்றத்தில் 1998ல் இவர் குற்றமற்றவர் என அறிவிக்கபட்டார். ஆனாலும் மாநிலபோலீஸ் கேரள உயர்நீதிமன்றத்திற்கு போனது. அங்கும் வழக்குதள்ளுபடி செய்யபட்ட நிலையில் நம்பி நாராயணன் சந்தித்த அடுத்த சோதனை மாநில அரசு முழுவழக்கையும் மீண்டும் மாநிலபோலீஸ் மறுவிசாரண செய்ய இட்ட உத்தரவு.
ஏன் இவருக்கு இது நேர்ந்தது.? போலீஸ் அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் செல்வாக்குள்ள பணக்கார்களும் வில்லனின் கூட்டாளியாக கூட்டு சேர்ந்து அப்பாவி கதாநாயகனை பலிகடாவாக்கி தங்கள் பிரச்னைகளை தீர்த்துகொள்ள முயலும் தமிழ் கிரைம் திரில்லர் சினிமா திரைக்கதையின் உண்மைவடிவம்தான் இவரது கதை. தனது உயர் அதிகாரியை பழிவாங்க ராணுவ ரகசியம் கடத்தல் என ஒர் கற்பனை செய்தியை கசிய விட்ட போலீஸ் அதிகாரி, ஒரு பெரிய பத்திரிகை குடுமபத்தில் எழுந்த வாரிசு போரட்டத்தில் தனக்கு உதவாத அதே உயர் போலீஸ் அதிகாரியை வஞ்சம் தீர்க்க காத்திருந்த செல்வாக்குள்ள ஒருதினபத்திரிகையின் அதிபர், பொறியாக இருந்த இந்த பிரச்சனையை பெருந்தீயாக வளர்த்து, ”தேசத்ரோகிகளை காப்பற்ற முயல்கிறார் இந்த முதல்வர்” என சொல்லி அரசியல் பிரச்னையாக்கி. முதல் அமைச்சரையே பதவியிழக்க செய்த  அரசியல்வாதிகள் என சேர்ந்த ஒரு கூட்டணியின் வெற்றி இந்த மனிதரின் வாழக்கையை பகடைகாயாக்கி ஆடியதில் பெற்றது..
வழக்கு நடைபெற்ற காலங்களில் நாரயணன் அடைந்த துயரங்களின் உச்சம் மன அழுத்தினால் அவர் மனைவி தன் செயல் திறன்களை இழந்து நின்றது. ”என்னால் கோவிலுக்கு கூட போகமுடியவில்லை. நான் தேசதுரோகி என என் காதுபடவே பேசுவார்கள்” என்கிறார் நாராயணன். நிரபராதி என அறிவிக்கபட்ட பின்னரும் அரசின் மறு விசாரணை அறிவிப்பினால் வெகுண்ட நம்பி சுப்ரீம் கோர்ட்டுக்கு போனார். அங்கும் கேரள அரசின் அணுகுமுறையை மிக கடுமையான வார்த்தைகளினால் விமர்சித்து கடிந்துகொண்டு வழக்கை தள்ளுபடி செய்து உத்திரவிட்டது. உச்சநீதிமன்றம். அரசு பதவி திரும்ப கிடைத்தாலும் கெளரவங்களை இழந்தார். மூத்த விஞ்ஞானியான இவருக்குஅதிகாரமில்லாத நிர்வாக பணிகளே தரபட்டது. மனிதனை சந்திரனுக்கு அனுப்ப இன்று திட்டமிடுகிறது இந்திய விண்வெளிதுறை. அதற்கான அடிப்படை வசதிகளை உருவாக்க ,உழைத்த , விருதுகள் வழங்கபட்டிருக்கவேண்டிய இந்த விஞ்ஞானி, எந்த கெளரவவும் இல்லாமல் 2001ல் பதவி ஓய்வு பெற்றார்.பொய் வழக்கு போட்டதற்காக குற்றம் சாட்டபட்டபட்டிருந்த வழக்கு நிலுவையில் இருந்தபோதும், அந்த போலீஸ் அதிகாரிகள் பதவிஉயர்வு பெற்றார்கள். அதில் ஒரு மூத்த அதிகாரி ஓய்வுக்கு பின்னரும் பெரிய அரசு பதவி அளிக்கபட்டு கெளரவிக்கபட்டிருக்கிறார், கிளைமாக்ஸாக சிபிஐயின் பரிந்துறையின் பேரில் இந்த பொய்வழக்கை போட்ட போலிஸ் அதிகாரிகளின் மீது தொடர்ந்த வழக்கை அரசு கைவிட்டது. சொன்ன காரணம்  “பலர் ஓய்வு பெற்றுவிட்டார்கள். நீண்ட காலமாகிவிட்டது.”
தவறாக குற்றம்சாட்டபட்டு பொய்வழக்குகள் போடபட்டு தாமதமாக கிடைத்த நீதியினால் தன் வாழ்க்கையின் வசந்தத்தை இழந்து போன நம்பி மனித உரிமை ஆணையத்தில்  தொடர்ந்த வழக்கில் அது கேரள அரசுக்கு இட்ட ஆணை நஷ்ட ஈடாக 1 கோடி ரூபாய். கொடுக்க வேண்டும் என்பது. ஆணை இடபட்டது 2001ல். 2012 வரை கேரள அரசு அசையவில்லை.. வேறு எந்த மனிதனும் வீபரிதமான முடிவுகளை கூட எடுத்திருக்க கூடும் என்ற நிலையில் நம்பி நம்பிக்கையுடன் உயர் நீதிமன்றத்தை அணுகியதில் ”உடனடியாக 10 லட்சம் கொடுங்கள். பிரச்னைகளை பிறகு பேசுங்கள் என மாநில அரசை. எச்சரித்திருக்கிறது. ஆனால் இன்னமும் (இந்த கட்டுரைஎழுதும்வரை) அந்த பணமும் தரப்படவில்லை.
”எனது பிரச்னை பணமில்லை. என் நேர்மையும் அநீதியை எதிர்த்ததில் நான் சந்தித்த சத்திய சோதனைகளும் பதிவு செய்யபடவே போராடுகிறேன்” என்கிறார் நாராயணன்.
”பத்திரிகைகளும், காவல்துறையும் அரசியல்வாதிகள் செய்த பொய்பிரசாரத்திற்கு அப்பாவி கேரளமக்கள் பலியாகிவிட்டனர். உங்களிடம் கேரள மக்கள் சார்பில்மன்னிப்பு கேட்கிறேன், கேரள எழுத்தாளர்கள், அறிவிஜிவிகள் சார்பாக மன்னிப்புகேட்கிறேன் பத்திரிகைகள் சார்பில் மன்னிப்புகேட்கிறேன் “எங்களை மன்னித்துவிடுங்கள் நம்பி சார்” என்று மிகசிறந்த கேரள இலக்கிய வாதிகளில் ஒருவரான பால்சக்காரியா கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் திருவனந்தபுரத்தில் ஓரு பத்திரிகையாளார் கூட்டதில் பேசியபோது அங்கிருந்தவர்களும், அதை மறுநாள் செய்திதாட்களில் படித்தவர்களும் அதை தாங்கள் கேட்ட மன்னிப்பாகவே உணர்ந்து நெஞ்சம் நெகிழந்தது நிஜம்.
’9கல்கி 3/3/13)

26/2/13

சம்பிராதயங்களை உடைத்த சந்துரு


  


மாண்புமிகு தலமை நீதிபதிஅவர்களுக்கு,

வரும்  மார்ச் 8ம் தேதி நான் பதவியிலிருந்து ஓய்வு பெறுகிறேன்., சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் ஓய்வுபெற்றால் அவர்களுக்கு பாராட்டு விழா நடத்துவது வழக்கம். அந்த நாளில் அரசு தலைமை வழக்குரைஞர் பிரிவு உபசார நாள் வாழ்த்துரை நிகழ்த்துவதும், அதற்கு ஓய்வு பெறும் நீதிபதி ஏற்புரை நிகழ்த்துவதும், தேநீர் விருந்து கொடுப்பதும், குழுவாகப் புகைப்படம் எடுப்பதும், ஐந்து நட்சத்திர ஓட்டல்களிலோ அல்லது வேறு ஏதேனும் இடத்திலோ விருந்து ஏற்பாடு செய்வதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது
வெறும் சடங்காக நடத்தப்படும் இந்த நிகழ்வுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும். எனவே மார்ச் 8-ஆம் தேதி நான் பணியிலிருந்து ஓய்வு பெறும் நாளில் எனக்காக அதுபோன்ற பணி ஓய்வு பாராட்டு விழா எதுவும் ஏற்பாடு செய்ய வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.
நான் இந்த நீதிமன்றத்தில் கழித்த மற்ற நாள்களைப் போலவே மார்ச் 8-ஆம் தேதியும் ஒரு சாதாரண நாளாகவே இருந்து விட்டால் நான் மிகவும் மகிழ்ச்சியடைவேன்

இந்த கடித்தை, எழுதியிருப்பவர் தனக்கென ஏராளமான தனித்துவங்களைக் கொண்டிருக்கும் நீதிபதி கே.சந்துரு. நீண்ட பாரம்பரியம் கொண்ட சென்னை உயர் நீதிமன்றத்தின் சரித்திரத்தில் இம்மாதிரி ஒரு நீதிபதி கேட்டுகொண்டது 84 வருடங்களுக்கு முன். 1929-ஆம் ஆண்டில் ஓய்வுபெற்ற எம்.ஜி.எச்.ஜாக்சன் என்ற ஆங்கிலேய நீதிபதி, "எனது கடமையை நான் செய்தேன், எனக்கு ஏன் பாராட்டு" என்று சொன்னார். அதையேதான் இன்று நீதிபதி சந்துருவும் சொல்லியிருக்கிறார்.
பல வகைகளில் உயர் நீதிமன்ற சம்பிராதயங்களையும், ஆடம்பர மரபுகளையும் உடைத்தெரிந்தவர் இவர்.



தான் கோர்ட்டுக்குள் நுழையும்போதும் வெளியேவரும்போதும முன்னால் வெள்ளிதடியேந்தி டவாலி அணிந்த ஊழியர் வருவதை ஆடம்பரம் என நிறுத்தியவர். தனது பாதுகாப்புக்காக ஒதுக்கபட்டிருந்த போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் மட்டுமில்லை ஒரு கான்ஸ்டபிள் கூட வேண்டாம் என மறுத்தவர். தனது கோர்ட்களில் தன்னை மை லார்ட் என அழைக்க்படவேண்டியதில்லை சார் என சொன்னால் போதும் என்பதை வழக்கறிஞர்களுக்கு ஆணையாகவே சொன்னவர். ஒருமுறை வழக்கறிஞர் நீதியரசர் என்று அழைத்தபோது அந்த வார்த்தை தனிநபர் துதி அதை பயன்படுத்தாதீர்கள் என்றார்.
கடந்த 7 ஆண்டுகளில் சுமார் 96 ஆயிரம் வழக்குகளை விசாரித்து முடித்து வைத்துள்ளவர் இந்த நீதிபதி.  இந்த சாதனை இதுவரை எந்த இந்திய கோர்ட்களிலும் நிகழந்ததில்லை. ஒரே நாளில் 75 கேஸ்களில் தீர்ப்பு அளித்தவர் இவர். சராசரியாக மாதத்திற்கு 1500 தீர்ப்புகள் வழங்கியிருக்கிறார். இவ்வளவு தீர்ப்புகளுக்கு பின்னே இருக்கும் கடுமையான உழைப்பை கோர்ட் நடவடிக்கைகளை அறிந்தவர்கள்தான் புரிந்துகொள்ள முடியும்.  இந்திய நீதி வரலாற்றில் இடம் பெறும் படியான மிகமுக்கியதீர்ப்புகளை வழங்கிய இவரது தீர்ப்புகள் மிக கூர்மையாக, தேர்ந்தெடுத்த  வார்த்தைகளில் இருக்கும்
 ”நூறு மலர்கள் பூக்கட்டும்! ஆயிரம் எண்ணங்கள் உதிக்கட்டும்! பெரியாரின் கொள்கைகள் ஒரு கட்டுக்குள் இருக்காமல் திசையெட்டும் பரவட்டும் என்பது  இரண்டு திராவிடகழக பிரிவுகள் பெரியாரின் எழுத்துகளுக்கு உரிமை கொண்டாடிய வழக்கில் சொன்ன தீர்ப்பிலிருக்கும் வாசகங்கள்:.  தமிழருவி மணியனை வீட்டுவசதி வாரிய குடியிருப்பிலிருந்து வெளியேற்ற அரசு தொடர்ந்த வழக்கில் அளித்த தீர்ப்பு இதுகொள்கை ரீதியான மாறுபாடுகள் இருந்தாலும் மனுதாரரைப்போன்ற தமிழ் எழுத்தாளர்கள்,தமிழ் அறிஞர்கள்,தமிழ் சிந்தனையாளர்களை கவுரவப்படுத்த வேண்டும்.தமிழ் சிந்தனையாளர்களை பாதுகாப்பதன் மூலமே தமிழ் வாழும்.அப்போது தான், நியான் விளக்குபொருத்தப்பட்ட போர்டில் உள்ள,“தமிழ்வாழ்கஎன்கிற வாசகம் மேலும் மிளிரும்
கல்லூரியில் படிக்கும் காலத்திலேயே தொழிளார் பிரச்சனைக்கு குரல் கொடுத்தற்காக கல்லூரியிலிருந்து இடைநீக்கம் செய்யபட்டவர் இவர் கம்யூனிஸ சித்தாங்களால் ஈர்க்க பட்டதால் சட்டம் படித்தபின் எவரும் அணுக்கூடிய, சமூக, தொழிற்சங்கபிரச்னைகளுக்கு முன்னுரிமை கொடுத்து வழக்காடி  பணியாற்றி கொண்டிருந்தார். சீனியர் வழக்கறிஞரான இவர் 7 ஆண்டுகளுக்கு முன் நேரிடையாக உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க பட்டவுடன் முதலில் செய்த காரியம் தன் சொத்துவிவரத்தை தலமை நீதிபதியிடம் ஒரு சீலிட்ட கவரில் கொடுத்தது. எப்போதும் ஏதேனும் பணிகளில் ஆழ்ந்திருக்கும் இந்த நீதிபதியிடம் பணியிலிருந்து ஓய்வுபெற்ற பிறகு என்ன செய்யப் போகிறீர்கள் என்று கேட்ட போது, சுப்ரீம் கோர்ட்டில் பிராக்ட்டிஸோ தீர்ப்பாயங்களுக்கு நீதிபதியாவோ ஆகமாட்டேன்
சட்ட ஆலோசனை மையம் நடத்துவது, சட்ட நூல்களை பதிப்பிப்பது மற்றும் மக்கள் நலன் சார்ந்த மிக முக்கிய பிரச்னைகளில் தலையிடுவது என நிறைய திட்டம் உள்ளது என்கிறார் .

சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ஒருவர் சொன்னது “சட்டத்திற்கும் அப்பால் ஒரு, சமூக பார்வையுடன் வழக்குகளை பரீசிலித்து வேகமாக செயல்பட்ட ஒரு நீதிபதி அவர், இந்தகோர்ட் இன்னொரு சந்துருவை பார்க்க இன்னும் எவ்வளவு நாளாகுமோ?

23/2/13

சீனப் பெண் எழுதிய முதல் தமிழ்புத்தகம்



சீனா ரேடியோ இண்டெர்நேஷனல் (CRI) என்பது சீன அரசு வெளிநாட்டினருக்காக பல நிகழ்ச்சிகளை ஒலிபரப்பும் வானொலிநிலையம். 70 ஆண்டுகளாக இயங்கி கொண்டிருக்கும் இந்த நிலையம் இப்போது 60  நாடுகளுக்கு அந்தந்த நாட்டு மொழிகளில் நிகழச்சிகளை வழங்குகிறது. இந்திய மொழிகளில் கடந்த 49 ஆண்டுகளாக நிகழ்ச்சிகளை வழங்கும். இதன் தமிழ் ஒலிபரப்பு மிகவும் பாப்புலர். 22000க்கும்மேல் பதிவு செய்து கொண்ட நேயர்கள் இருக்கிறார்கள். 150 நேயர் மன்றங்களும் செயல்பட்டுவருகின்றன. இந்த தமிழ் ஒலிபரப்பின் தலமைப்பொறுப்பில்லிருப்பவர் திருமதி ஸ்ஹோ ஜியாங். இவர் 

”சீனாவில் இன்ப உலா” என்று ஒரு தமிழ் புத்தகமெழுதியிருக்கிறார். கலைமகள் என்ற தன் தமிழ் பெயரில் எழுதுகிறார்.  ’சீனர் எழுதிய முதல் தமிழ் புத்தகம்’ என்ற பெருமையைப் பெற்றிருக்கும் இந்த  புத்தகத்தை கெளதம் பதிப்பகத்தினர் வெளியிட்டிருக்கிறார்கள். இந்த ஆண்டு சென்னை புத்தக கண்காட்சியில்  இந்த புத்தகம் விற்பனையிலிருந்தது.
சீனாவில் இன்ப உலா என்ற இந்த புத்தகம் சீன கலாசாரம் மற்றும் சீன நகரங்களான பெயிஜிங்,ஷாங்காய் தோன்றிய வரலாறு, திபெத்திய நாகரிகம் போன்றவைகளைப் பேசுகிறது. மாறிவரும் சீன நாகரிகங்கள் வாழ்க்கைமுறை படு வேகமாக இயங்கும் புதிய மெட்ரோ ரயில், ”798” என்ற பெயரில் இயங்கும் கலைகூடங்கள் நிறைந்த பகுதி போன்றவைகளை விளக்கி இதிலிருக்கும் 26 கட்டுரைகள் சொல்லுகிறது சுருக்கமாக சொன்னால் மாறிவரும் சீனாவை பார்க்க விரும்புபவர்களுக்கு  ஒரு. தமிழ் கைடு.
 ”எங்கள் நிலயத்தின் 61 மொழி ஒலிபரப்புகளுக்கு உலகெங்குமிருந்து ஆண்டுக்கு 5 லட்சம் கடிதங்கள் வருகின்றன. அதில் மிக அதிகம் வருவது தமிழ் கடிதங்கள் தான்.அவைகளில் பல சீனாவில் பயணம் செய்வதையும் இடங்களையும் பற்றிய கேள்விகள். இதுதான் என்னை இந்த புத்தகத்தை எழுத தூண்டியது” என்கிறார் இவர்.

திருமதி ஸ்ஹோ ஜியாங் . 15 ஆண்டுகளுக்கு முன் சீன பல்கலைகழகத்தில் தமிழ் படித்தவர் சீனாவில் தமிழ் கற்பிக்க படும் ஒரே இடமான கம்னியூகேஷன் யூனிவர்ஸிட்டி யில் பட்டபடிப்பு முடித்தவர்.  “.புரிந்துகொள்ளவே முடியாத தமிழ் எழுத்துகளுடன் போராடி கற்று கொண்டேன்” என்று சொல்லும் இவர் இன்று சரளமாக இலங்கைத்தமிழ் வாசனையுடன் தமிழ் பேசுகிறார். 2003. 2004 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் சீன வானொலி தமிழ் நேயர்மன்ற கூட்டங்களில் பங்கேற்க பயணங்கள் செய்திருக்கிறார். 13 ஆண்டுகளாக நிலையத்தில் பணியாற்றும் இவர் இப்போது அந்த நிறுவனத்தின் துணைத்தலைவராக பதவி உயர்ந்திருக்கிறார்.
அடுத்த ஆண்டு மொழி தொடர்பாக ஒரு களப்பணி செய்ய தமிழ்நாட்டில் தங்கபோவதாக சொல்லும் இவர் தன் அடுத்த புத்தகத்தை சீன மொழியில் தென் இந்தியாவைப்பற்றி எழுதப்போகிறார். ”இந்தியாவை பார்க்கவரும் சீனர்கள் புது டெல்லி வந்து பார்த்த பின் அங்கிருந்து வட இந்தியாவிலுள்ள சில புத்தர் கோவில்களுக்கு  மட்டும் சென்று திரும்புகின்றனர். அவர்களுக்கு தென் இந்தியாவை அறிமுகபடுத்த விரும்புகிறேன்.  இப்போது சீனாவில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் லைப் ஆப் பை படத்தினால் சீனர்களுக்கு தெனிந்தியாவின் மீது ஒரு ஆர்வம் ஏற்பட்டிருக்கிறது”  என்கிறார்.




19/2/13

மனித உரிமைகளை காக்க போராடும் அமெரிக்காவின் மறுபக்கம்



உலக  அளவில் மனித உரிமைமீறல்கள், சமூக அநீதிகள் சர்வதேச விதிகள்மீறல்கள் குற்றவியல் சட்டங்களை தவறாக பயன்படுத்தல்  போன்றவைகள் நிகழும் நாடுகளில் அவற்றை ஆராய்ந்து  கண்டறிந்து  வெளிச்சதிற்கு கொண்டுவந்து நீதி கேட்டு போராடும்  ஒரு அமைப்பு ஓப்பன் சொஸைட்டிஸ் ஃபவுண்டேஷன் (OPEN SOCIETY FOUNDATION). 14 நாடுகளில் அலுவலகங்களுடன் இயங்கும் இதன் தலைமை அலுவலகம் அமெரிக்காவில் நியூயார்க் நகரில் இருக்கிறது.

ஜார்ஜ் ஸொரோஸ்(GEROGE SOROS) என்ற செல்வந்தரால் அரசாங்களின் ஆதிக்கத்தினால் மனித உரிமைகள் அழிக்கபடாமல் காப்பற்ற பட வேண்டும் என்ற குறிக்கோளுடன் 1979ல்  துவக்கபட்ட  ஒரு அறகட்டளை இது. இன்று  ஒரு மிகப்பெரிய  சர்வ தேச அமைப்பாக  உயர்ந்திருக்கிறது. ஐக்கிய நாடுகள் சபை அங்கீகரித்திருக்கிறது. இந்த அமைப்பின்   நீதி மற்றும் சட்டபிரிவு சமீபத்தில் ஒரு அதிர்ச்சியான அறிக்கையை வெளியிட்டிருகிறது.. அமெரிக்க அரசின் வலிமைமிகுந்த உளவுத்துறையான சிஐஏ விசாரணை என்ற பெயரில் பல இஸ்லாமியர்களை வழக்குகள், கோர்ட் ஆணைகள் எதுவுமில்லாமல்  பிடித்து துன்புறுத்தி சித்தரவதை செய்துகொண்டிருக்கிறது.. பல கொலைகளும் அடங்கிய இந்த மிருகத்தனமான சித்தரவதைகள் செய்யபட்டது  அமெரிக்காவில் இல்லை. உலகின் மற்ற பல நாடுகளில், சிஐஏ நடத்தும் அதிகார பூர்வமற்ற ”கறுப்பு சிறை”களில். இந்த மாதிரி சித்திரவதைகளை அமெரிக்க அரசு செய்ய ஆரம்பித்ததின் நோக்கம்,  இந்த சிறைகள் இருக்கும் நாடுகள், இதுவரை கொடுமைபடுத்தபட்டவர்களின்  எண்ணிக்கை ஆகியவைகளை மிக தெளிவாக விரிவாக பதிவு செய்திருக்கிறார் இந்த அறிக்கையை தயாரித்தவர்.216
பக்கங்களில்1600 க்கும் மேற்பட்ட ஆவணங்களின் சான்றுகளுடன் புத்தகமாக வெளிவந்திருக்கும்  இந்த அறிக்கையின் சிலபகுதிகளை அதுவும் சித்தரவதைகள் செயப்பட்ட முறைகளை அனுபவித்தவர்களின் வார்த்தைகளில் பதிவு செய்யபட்டிருப்பதுபடிப்பவரின் மனதில் வலியை உண்டாக்கும்..அறிக்கையில் பாக்கிஸ்தான் உள்பட இம்மாதிரி கறுப்பு சிறைகள் இருக்கும் 54 நாடுகள் பட்டியிலிடப் பட்டிருக்கிறது.  ஆப்கானில் துவங்கி அகரவரிசையில் பட்டியலிடபட்டிருக்கும் நாடுகளில் அதிகம் அறிமுகம் இல்லாத குட்டி நாடுகளிலிருந்து இங்கிலாந்து, ஜெர்மனி, இத்தாலி டென்மார்க் போன்ற பெரிய ஐரோப்பிய நாடுகளும் அடக்கம். அதில் இந்தியாவின் பெயர் இல்லாததில் ஒரு நிம்மதி.  இல்லாதிருப்பதின் காரணம் நமது அரசின் ராஜதந்திரமா அல்லது நம்நாட்டின் மீது அமெரிக்காவிற்கு நமபிக்கையில்லையா? என்பது தெரியவில்லை.
 இந்த சிறைகளில் சித்தரவதைக்குள்ளான 136 பேர்களின் பெயர்,பின்னணி, எங்கே எப்படி கைது செய்யபட்டு, எந்த சிறைக்கு என்று கொண்டு செல்லபட்டார்கள் போன்ற விபரங்களையும் அவர்கள் அனுபவித்த தண்டனைகளையும்  இந்த அறிக்கை விவரிக்கிறது..  
2001 செப்டம்பர் 11ல் நிகழ்ந்த அதிபயங்கர தீவிர வாத தாக்குதலின் பின்விளைவாக  அமெரிக்க அரசு எடுத்த முடிவுகளில் ஒன்று சிஐஏக்கு வழங்கபட்ட  சில சிறப்பு அதிகாரங்கள்.  உலகம் முழுவதும் இருக்கும் தீவீரவாதிகளை அந்த நாட்டு அரசுகளின் உதவியுடன் சிஐஏ தேடிகண்டுபிடித்து விசாரணை குழுவினரிடம் ஒப்படைக்க வேண்டும். அவர்களை  ஒரு ரகசிய சிறையில் சிஐஏ  தீர விசாரித்து யார் அந்த தீவிர வாதி,யார் அந்த குழுவின் மூளை எனபதை கண்டறிந்து தண்டிக்கும். இதற்காக சிஐஏ மேன்மைபடுத்த பட்ட சில விசாரணை டெக்னிக்களை கையாளாலாம். என்பது தான் அந்த ரகசியமாக வழங்கபட்ட  சிறப்பு அதிகாரம். அன்றைய அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் ஆல் வழங்கபட்டது. கடந்த ஆண்டோடு முடிவுக்கு வந்த இந்த விசேஷ அதிகாரத்தை மேலும்  நீட்டிப்பு செய்திருப்பவர் ஒபாமா.
இதைப் பயன் படுத்தி உலகின்  பல பகுதிகளில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்க்க இயங்கும் தீவீரவாத அமைப்புகளுக்கு உதவுபவர்களை கண்காணித்து அவர்களை குண்டுகட்டாக  தூக்கி இரவோடு இரவாக ஒரு தனிவிமானத்தில் ஏதேனும் ஒரு நாட்டிலிருக்கும் கறுப்பு சிறைக்கு “விசாரணைக்கு” கொண்டு போய்விடுவார்கள். இந்தமாதிரி சிறைகள் அந்த நாடுகளில் அடர்ந்த காட்டு பகுதிக்குள்ளாகவோ, அல்லது ஆளரவமற்ற ஒரு தீவுபகுதியிலோ இருக்கும். அந்நாட்டினருக்கே இப்படி பட்ட  சிறைகள்  தங்கல் நாட்டில் இயங்குவது தெரியாது.    தான் எங்கே கொண்டுவரபட்டிருக்கிறோம்  என்பது அப்படி கொண்டுவரப்பட்டவருக்கு தெரியாதது மட்டுமில்லை, அந்த கருப்பு சிறை இருக்கும் நாட்டின் அரசுக்கு கூடகொண்டுவரபட்டிருப்பவர்கள் யார் என்று தெரியாது. காரணம் எங்கும் இவர்களின் பயணம் பதிவு செய்யபடுவதில்லை.  இரவு நேரங்களில் விசேஷ அனுமதியுடன் தரையிறங்கும் சிஐஏயின் விமானம் அங்கிருந்து ”சிலசரக்குகளுடன்” திரும்பியதாக விமான நிலையங்களில் பதிவு செய்யப்படும். தேச பாதுகாப்பை காரணம் காட்டி அந்த  விபரங்கள் கூட வெளியே அறிவிக்கபடுவதில்லை. அரசாங்கள் செய்யும் பயங்கரமான ஆள் கடத்தல்கள் இது என சொல்லுகிறார் புத்தக ஆசிரியர்.  கறுப்பு சிறையில் அமெரிக்க ராணுவ அதிகாரிகளும்.சிஐஏ அதிகாரிகளும் விசாரணைய தொடர்வார்கள். மிருகத்தனமான மனித உரிமை மீறல்கள். சித்திரவதைகள் இங்கே அரங்கேறும். நிர்வாணமாக நிற்க வைத்து அடிப்பது, நாய்களை கடிக்க விடுவது,   உடலில் வயர்களை இணைத்து தொடர்ந்து மெல்லிய மின்சாரம் செலுத்தி நீண்ட நேரம் நிற்க செய்வது போன்ற பல தண்டனைகள். சிலர் இத்தகைய கொடுமைகளுக்கு பின்னர் தவறாக கொண்டுவரபட்டவர்கள் என முடிவு செய்யபட்டு  விடுதலையும் செய்யபட்டு கொண்டு வரப்பட்டதைபோலவே திருப்பி கொண்டுவிடபட்டும் இருக்கிறார்கள்
தீவிர வாதிகளை கண்டுபிடிக்க அமெரிக்க அரசு செய்யும்  இந்த சட்ட விரோதமான மனித உரிமை மீறல் கொடுமைகளுக்கு  எப்படி பல நாடுகள் -கிட்டதட்ட உலகின் கால்பங்கு நாடுகள்= ஆதரவளிக்கின்றன் என்பது ஒரு ஆச்சரியம். செப் 11 நிகழ்விற்கு பின்னர் உலகம் முழுவதும் தீவிர வாதம்  மிகவேகமாக தலையெடுத்து கொண்டிருக்கிறது. அடுத்த இலக்கு உங்கள் நாடாகவே இருக்கலாம்  என்று  பெரிய நாடுகளை நம்ப வைத்திருக்கும்,    உலக அமைதியை காக்கும்  போலீஸ்காரனாக தன்னை சித்தரித்து கொண்டிருக்கும் அமெரிக்காவின் ராஜதந்திர டெக்னிக்கள் இதற்கு கைகொடுக்கின்றன. சிறிய நாடுகள் பொருளாதார ரீதியில் அச்சுறுத்தபடுகின்றன. அண்டை நாடுகளுடன் போரிடும் நாடுகளுக்கு ஆயூதங்கள் வழங்கி  அமெரிக்கா தன் வசப்படுத்தி வைத்திருக்கிறது.. சட்டம் நீதி ஆகியவைகளின் வரம்புகளை தாண்டி அமெரிக்க அரசு  இப்படி செய்வதை அந்த மக்கள் எப்படி பார்க்கிறார்கள்?  மாற்றம் வரும் என் முழங்கி முதல் முறை ஆட்சிக்கு வந்த ஒபாமா ஆப்கானிஸ்தானலிருந்து, ஈராக்கிலிருந்து போர்ப்டைகளை வாபஸ் பெறுவேன் என அறிவித்ததற்காக உலக அமைதிக்கான நோபல் பரிசு பெற்றார்.  ஆனால் அதைமுழுவதுமாக இன்னும் செய்யவில்லை. இரண்டாம் முறை வெற்றிக்கு பின் உலக அமைதிக்காக அமெரிக்கா செய்யவேண்டியவை இன்னும் நிறைய இருக்கிறது என்று தன் நன்றி அறிவிப்பில் சொல்லியது, -தங்கள் பாதுகாப்புக்காக தங்கள் அரசாங்கம் என்ன செய்தாலும் பரவயில்லை- என்ற பெரும்பாலான அமெரிக்க மக்களின் எண்ணங்களின்  பிரதிபலிப்பு தான்
அதனால் இப்படி உலகம்முழுவதும் அமெரிக்கா தன் சித்தரவதைடெக்னிகளை பரப்பிகொண்டிருக்கிறது என்பதால் தன் புத்தகத்திற்கு ”உலகமயமாகும்  சித்திரவதைகள் என பெயரிட்டிருக்கிறார் அதன் ஆசிரியர். முழு அறிக்கையியும்XXXX இணைய தளத்தில் படிக்கலாம்
  2009ல் வெளிவந்து உலகையே உலுக்கிய இராக்கின் போர்கைதிகள் அபு கரீஹி(Abu ghraih)  என்ற சிறையில்  மிக மோசமாக சித்தரவதை செய்யப்பட்ட போர்க்கைதிகளின் படங்களும் வீடியோக்களும் நினைவிருக்கிறதா? அதையும் அது சம்பந்தபட்ட அத்தனை ஆவணங்களையும்  அமெரிக்க அரசின் தகவல் அறியும் சட்டத்தின் கீழ்  பல கோர்ட்களில் போரடி அதிகாரபூர்வமாக பெற்று  வழக்கு தொடர்ந்து அந்த சிறை அதிகாரிகளுக்கு தண்டனை வாங்கிகொடுத்த வழக்கறிஞர்களில் இவரும் ஒருவர்.  அதன் தொடர் விளவாக இவர் மேற்கொண்ட ஆராய்ச்சிகளின் அடிப்படையில் எழுந்ததுதான்  இந்த புத்தகம்.. உண்மையை வரவழைப்பதற்காக ஒரு நபரை சித்தரவதை செய்வது என்பது அமெரிக்காவில் மட்டுமிலை எந்த நாட்டிலும்  சட்டபடி குற்றம். கடந்த 10 ஆண்டுகளாக அதை பயன்படுத்தி பெரிய உண்மைகளை  எதுவும் கண்டுபிடிக்கபடவில்லை என்பதையும், மாறாக இத்தகைய சித்திரவதைகளினால் தீவிரவாதம் உலகம் முழுவதும் வேகமாக வளர்கிறது என்பதையும்  முன்னாள் சிஐஏ அதிகாரிகளின், செனட்டர்களின் பேட்டிகள் மூலம் தன் புத்தகத்தில் பதிவு செய்திருக்கும் இந்த புத்தகத்தின் ஆசிரியர் ஒரு  இந்திய பெண். பெயர் திருமதி அம்ரித் சிங். அடே! சபாஷ் என நீங்கள் சொல்லி முடிப்பதற்குள் ஆச்சரியமான அடுத்த செய்தி அவர் நம் பிரதமர் மன்மோஹன் சிங்கின்  இளைய மகள்.

தன் தந்தையைபோல, தன் மூத்த இரண்டு சகோதரிகள் போல(ஒருவர் பேராசியர்) நிறைய படித்தவர் கேம்பிரிட்ஜிலும், ஆக்ஸ்போர்டிலும் பொருளாதாரம் படித்த இவர்  சர்வ தேச நிதி ஆணையத்தில் எக்கானமிஸ்டாக பணிபுரிந்த பின் யேல் பல்கலைகழகத்தில் சட்டம் படித்து நியூயார்க் கோர்ட்டில் வழக்கறிஞராக இருந்தவர். 2009ல் இந்த அமைப்பில் நாடுகளின் பாதுகாப்பு, மற்றும் தீவீரவாத தடுப்பு பற்றி ஆராயும் பிரிவில் மூத்த சட்ட வல்லுனராக பணியாற்றுகிறார்.
பின்விளைவுகளை எதிர் நோக்கும் துணிவுடன் அமெரிக்காவின் அருவருப்பான மறுபக்கத்தை வெளிச்சமிட்டு காட்டியிருக்கும் திருமதி அம்ரித் சிங் தான் உண்மையான சமூக நீதி காக்கும் விராங்கனை.

புதிய தலைமுறை 14/2/13 






14/2/13

இங்கிலாந்து போய் திரும்பிவந்த இந்திய பிஸ்கட்



பெயரைச்சொன்னாலே சின்ன குழந்தைகூட பிஸ்கட் எனறு புரிந்து கொள்ளும் பெயர் பிரிட்டானியா. 120 ஆண்டுகளுக்கு முன் கல்கத்தாவில் ஒரு சிறிய வீட்டில் 295 ரூபாய் மூலதனத்தில்  பிஸ்கட் பேக்ரியாக ஒரு இந்தியரால் துவக்க பட்ட இந்த நிறுவனத்தை இரண்டாம் உலகபோரின் போது பிஸ்கட்டுக்கு ஏற்பட்ட டிமாண்டால் கல்கத்தாவிலிருந்த வெள்ளைகாரார்களால் வாங்கி விரிவாக்கபட்டது. மிகப்பெரிய அளவில் பணம் ஈட்டிய அந்த நிறுவனம் பம்பாயில் பெரிய தொழிற்சாலையை நிறுவி இங்கிலாந்துக்கே இங்கிருந்து பிஸ்கட் தயாரித்து அனுப்பிக்கொண்டிருந்தது. 1821லியே இறக்குமதி செய்யபட்ட கியாஸ் அடுப்புகளிலும்  தொடர்ந்து மின்சார அடுப்புகளிலும் தரமான பிஸ்கட்கள் தயாரித்த இந்தநிறுவனம் அந்த கால்கட்டத்திலியே 1 கோடி ருபாய் விற்பனையை எட்டியிருக்கிறது. ஆனால் முழு முதலீடும் இங்கிலாந்துகாரர்கள் வசமாகிவிட்டதால் கம்பெனியின் தலமையகம் இங்கிலாந்துக்கு மாறியது.  தொடர்ந்து இந்தியாவில் பிஸ்கட் தயாரித்து விற்பனையை மற்றொரு ஆங்கில நிறுவனம் மூலம் செய்து கொண்டிருந்த இந்த பிரிட்டானியா இந்திய நிருவனமாக மாறியது  பல போராட்டங்களுக்கும் திருப்பங்களுக்கும் பின்னர் தான்.
டெல்லி கிளாத் மில்ஸ்(DCM) என்ற நிறுவனத்தின் அதிபர் ,நுஸ்லி வாடியா (Nusli Wadia)மிக வேகமாக வளரும் தொழிலை நிறுவ எண்ணிக்கொண்டிருந்தவர். இந்த பிஸ்கட் நிறுவனத்தை இந்தியாவிற்கு கொண்டுவர விரும்பி இங்கிலாந்திலேயே  மற்றொரு ஆங்கிலேய நிறுவனத்துடன் இணைந்து முதலீடு செய்தார். அப்போது அந்த நிறுவனத்தின் தலமைப்பொறுப்பிலிருந்த ஒரு இந்தியர் அவர்கள் நிருவனத்திற்கே தெரியாமல் நிறுவனத்தின் பெரும்பாலான பங்குகளை ஒரு அமெரிக்க பிஸ்கட் நிறுவனத்திற்கு விற்றுவிட்டார். இந்த மோசடியை மறைக்க அவர்பிரச்சனைகளை எழுப்ப, வாடியா பணம் முதலீடு செய்த நிறுவனத்துடன் போராடவேண்டியிருந்தது.இங்கிலாந்து கோர்ட்களில் வழக்குகள், அமெரிக்க கோர்ட்களில் வழக்குகள் எனத்துவங்கி பல திருப்பங்கள், வழக்குகள் எல்லாம் ஒய ஆன காலம் 7 ஆண்டுகள். ” கோர்ட்களிலும் போர்ட் ரூம்களிலும் நடந்த இந்தியாவின் மிகப் பெரிய கார்பேரட் போராட்டம்” என  இதை எக்னாமிஸ் டைம்ஸ் வர்ணித்தது எல்லாம் முடிந்து தொழிற்சாலையின் விரிவாக்கம் என்ற திட்டங்களுடன் களம் இறங்கிய வாடியா சந்தித்தது இன்னொரு புதிய பிரச்னை. வெளி நாடுகளில் போராட்டங்களை கூடவே இருந்து கோர்ட், வழக்கு பிரச்சனைகளை சந்தித்த பிஸினஸ் பார்ட்னர்களான டானொன்  (Danone) என்ற பிரஞ்ச் நிருவனம் பிரிட்டானியாவையே தங்கள் வசபடுத்தம் முயற்சியில் இறங்கிவிட்டது. அதுவும் இந்தியாவிலேயே ஒரு பிஸ்கட்  ஆலையை. முதற்கட்டமாக பங்களூரில் ஒரு உள்ளூர் நிருவனத்துடன் இணைந்து ரொட்டிகள் தயாரிக்கும் கம்பெனியையாக துவக்கிவிட்டார்கள், இதுஅன்னிய நாட்டு நிறுவனங்கள் பங்கு கொள்ளும் ஜாயிண்ட் வென்ச்சர்கள் என்ற திட்ட விதிமுறைகளுக்கு எதிரானது. இந்த திருப்பத்தை சற்றும் எதிர் பார்க்காத வாடியா மீண்டும் அரசின் துறைகளையும் நீதிமன்றங்களையும் நாடவேண்டிய நிலைக்கு தள்ள பட்டார். அரசின் விதிமுறைகளை சுட்டிகாட்டி வாதிட்டது இங்கிலாந்து நிறுவனம். நீண்ட போராட்டங்களுக்கு பின்னர் அரசு அந்த நிறுவனத்தின் பணிகளை முடக்கியது. . பிரச்னைகள் தொடர்ந்தாலும் இந்த இந்திய தயாரிப்புக்கும் இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் வரவேற்பு இருக்கும் என வாடியா நம்பினார். அதன்படியே திட்டமிட்டு படிப்படியாக வளர்ந்த இந்த நிருவனம் 2004ம் ஆண்டில் ஆண்டுக்கு நாலு லட்சம் டன் பிஸ்கட்கள் தயாரிக்கும் நிருவனமாக உயர்ந்தது. ஆனால் அந்த ஆண்டு இவர்கள் சந்தித்த சவால் வினோதமானது. பிரிட்டானியா பலவகைகளான பிஸ்கட்களை தயாரித்து வந்தது. அதில் ஒன்று ”டைகர்” என்ற வகை. இந்த தயாரிப்பை இங்கிலாந்திலிருக்கும் இவர்களது  பார்ட்னர்கள் தற்போது போட்டியாளார்ளாகிவிட்டனர். அந்த நிருவனம் உலகின் பல நாடுகளில் டைகர் பிஸ்கட்களை தயாரித்து விற்க ஆரம்பித்து விட்டனர். அது எங்களுடைய தயாரிப்பு. மற்றவர்கள் எங்கள் ஒப்புதல் இல்லாமல் அதை தயாரிப்பது  அறிவார்ந்த சொத்து உரிமை (intellectual propertyright)   மீறல் வகையில் குற்றம் என விற்கபடும் ஒவ்வொரு நாட்டிலும் வழக்குகள் தொடர்ந்து போராடினார் வாடியா.. ஒரு இந்திய நிறுவனம் தனது படைப்புக்கு இப்படி போராடியது இதுவே முதல் முறை. சில நாடுகளில் இதற்கான சட்டங்கள் மிக ஆரம்ப நிலையில் அல்லது இல்லாமலேயே இருந்தனால் வழக்குகளில் வெற்றி கிடைக்கவில்லை, ஆனாலும் அயராது வாடியா குழுமத்தினர் போராடினர் மலேசியா சிங்கபூர் நாடுகளில் நடந்த இந்த வழக்கில் இறுதியில் பிரிட்டானிய வெற்றியும் 22 ருபாய் கோடி நஷ்ட ஈடும் பெற்றது.
ஆனாலும் அடுத்த சில ஆண்டுகளில் அந்த  நிறுவனம் இதை  மீண்டும் தயாரிக்காமலிருக்க  250 மில்லியன் டாலர்கள் கொடுத்து தங்களது பங்கு மூதலீட்டை திரும்ப பெற்றதோடு அவர்கள் பிஸ்கட் தயாரிப்பு தொழிலிருந்தே விலகும்படி ஒரு ஒப்பந்தத்தையும் பெற்றனர்.. எங்கள் தயாரிப்புக்கே நாங்கள் கொடுத்த ”நியாமான” விலை இது என்கிறார் வாடியா. இவர் தனது நிருவனத்தின் தயாரிப்பை ஒரு பிஸ்கட் என்ற அளவில் பார்க்காமல் அதை கம்பெனியைன் சொத்தாக பார்ப்பதை உலகம் புரிந்து கொண்டது. ஒரு இந்திய தயாரிப்பை காப்பிஅடித்து தங்களது தயாரிப்பாக காட்ட இனி மற்ற நாட்டு நிருவனங்கள் தயங்கும் என சொல்லுகிறார். நாடு முழுவதும் 2500 க்கும்மேபட்ட மிக பெரியஸ்டாக்கிஸ்ட்கள்மூலமும் எண்ணற்ற சிறு கடைகள் மூலமும் ஒரு நாளைக்கு விற்கும் பிஸ்கட் களின் எண்ணிக்கை 1.5 கோடிகளுக்கு மேல். மிக திறமையான நிர்வாகிகள் நிர்வகிப்பில் விற்பனை ஆண்டுதோறும் உயர்கிறது. ஒரு குறிபிட்ட வகை நாடு முழுவதும் வாரம்தோறும் வாங்கபடுவதையும் பள்ளி விடுமுறைகாலங்களில் குறைவதையும் கவனித்த இவர்கள் அதை ஆராயந்தபோது,  அந்த பிஸ்கட் குழந்தைகளுக்கு பள்ளிக்கு அனுப்பும்போது கொடுத்து  அனுப்படுவதையும்  அது பிரஷ் ஆக இருப்பதற்காக பெரிய பாக்கெட் வாங்கமல் சிறிய பாக்கெட்களை வாங்குகிறார்கள் என்பதையும் அறிந்தார்கள். வாடியாவின் ஆலோசனைப்படி மூன்று பிஸ்கட்களை  சீலிட்ட சின்னபாக்கெட்களில் இட்டு  அவைகளை பெரிய பாக்கெட்களிலிட்டு அறிமுகபடுத்தினார்கள். பிஸ்கட் பாக்கிங் முறையில் இந்த திருப்பு முனை விற்பனையை இரட்டிபாக்கியிற்று.. பல நிறுவனங்கள் இன்று இதை பின்பற்றுகின்றன.  உற்பத்தியை பெருமளவில் அதிகரிப்பதின் மூலம் விலையை குறைக்கும் மாடலை இந்த நிறுவனம் கையாளுகிறது. மாநில அரசுகள் சத்துணவிற்காக செலவிடும் பணத்தில் ஒரு பகுதியை ஒதுக்கி ஊட்ட சத்து செறிவுட்டபட்ட  கேக்காக தயாரித்து  குழந்தைகளுக்கு வழங்கலாம்.  நாட்டின் எல்லா பிஸ்கட் நிறுவங்களும் அரசும் இணைந்து இதைசெய்யலாம் என்கிறார் இதன் மேலாண்மை இயக்குநர் திருமதி வினிதா பாலி. இவர் அமெரிக்காவில் பெப்சிகோலாவில் மார்கெட்டிங் பிரிவு தலைவராகயிருந்தவர்.
இன்று டைகர் உட்பட16 வகைகளுக்கு மேல் பிஸ்கட்களும் ரொட்டி, கேக் போன்றவைகளை தயாரிக்கும் இந்த நிருவனத்தின் கடந்த ஆண்டு மொத்த வியாபாரம் 2000 கோடிக்கும் மேல். எதிர்கால திட்டம்? பல இருக்கிறது  எதிர்வரும் எதிர்பாராத திருப்பங்களை திறமையாக சந்திப்பது உட்பட என்கிறார் நுல்சி வாடியா.
கல்கி17/02/13