8/8/10


என்ன செய்ய வேண்டும்?


மிக நேர்த்தியாக உள் அலங்காரங்கள் செய்யப்பட்ட அழகானபெரிய அந்த ஹாலில் ரமேஷயையும் சேர்த்து 7 பேர் காத்திருக்கின்றனர்ஒரு புகழ்பெற்ற கார் நிறுவனத்தின் மார்க்கெட்டிங் பிரிவின் அதிகாரிகளுக்கான நேர்முக தேர்வுமுதல் இரண்டு கட்டங்களைத்தாண்டி இறுதித்தேர்வுஅடுத்துவரப்போகும் தன் முறைக்காக காத்திருக்கும் ரமேஷக்கு,புதிய உடையின் கசகசப்பு பழக்கமில்லாத புதிதாக கட்டிக்கொண்டிருக்கும் டையின் இருக்கம் எல்லாம்சேர்ந்து அந்த சற்று பதட்டமாக எர்கண்டிஷன் அறையிலும் வேர்ப்பதுபோலிருந்தத்துஅடுத்து நீங்கள் போகலாம் எண்று  ஹாலின் ஒரு கோடியிலிருந்த பெண்மணி  சொன்னதைத்தொடர்ந்து நேர்முகம் நடக்கும் அறையை நோக்கி போகிறார்ரமேஷ்மூடிய கதவுகளிடையே சற்றே இடைவெளி அதன் வழியாக சற்று தயக்கத்துடண்பார்த்து   நின்ற பின்னர் கதவை திறந்துகொண்டு உள்ளே செல்லுகிறார்நேர்முக குழுவின் 3 உறுப்பினர்களும் இவரைபார்த்துக்கொண்டே இருக்கிறார்கள் உட்காரசொல்லவில்லை.நின்றுக்கொண்டேயிருந்த ரமேஷ் தனியே இருக்கும் அந்த் நாற்காலியின் நுனியில் உட்காருகிறார்அரைநிமிடம் நேர்முககுழு எதுவும் கேட்டகவில்லை.. ரமேஷும் எதுவும் பேசவில்லைஒரு கனத்த மெளனத்திற்கு பின்னர் குழுவிலிருந்த ஒருவர் “வெளியே காத்திருக்கும் போது எக்னாமிக்ஸ் டைம்ஸ் பார்த்க்கொண்டிருந்தீர்களே அதில் நீங்கள் படித்த  எதாவது செய்தி பற்றி சொல்ல முடியுமா”? என்றார்தன்னைப்பற்றிஅந்தநிறுவனத்தைபற்றி,இன்றைய கார் மார்கெட் பற்றி எல்லாம் தயாரித்திருந்த ரமேஷ் இந்த கேள்வியினால் ஆடிப்போனார்ரமேஷ் அந்த பேப்பரில் எதுவும் படிக்கவில்லை.சொல்லப்போனால் எக்கானாமிஸ் டைமை முதல் தடவையாக அன்று தான் பார்க்கிறார்.அதனால் பதில் ஏதும்சொல்லாமல் மேஜையில் வைத்த தன் பைலின் மீது   வைத்திருந்த கைவிரல்களை   கோர்த்து கைககளைப்பிசைந்துகொண்டிருந்தார்இவர் பதில் தராததைபற்றி எந்த ரியாக்கஷனும் காட்டாமல் குழுவில் மற்றொருவர் அடுத்த கேள்வியைக் கேட்டார்முதல் கேள்விக்கு தன்னால்  சரியாக பதிலளிக்கமுடியவில்லையே என்ற அழுத்தில் தொடர்ந்த கேள்விகளுக்கும் சரியாக பதில் சொல்ல முடிவில்லைஇள நிலை முதல் வகுப்பு பட்டதாரியாகயிருந்தும்மார்க்கெடிங் பட்டயம் இருந்தும் இந்த நேர்முகத்தினால் முடிவு என்னவாயிருக்கும் என்பதைச்சொல்வேண்டியதில்லை.
இது போன்ற நிகழ்வு நாம் நேர்முகத்தேர்விற்கு போகும்போது நடக்காமலிருக்க என்னசெய்யவேண்டும்என்பதற்கு பதிலாக ரமேஷ் என்ன செய்திருக்கவேண்டும் என்பதைப்பார்ப்போம்.
1.நேர்முகத்தேர்விற்கு புதிய ஆடை அணிந்துசெல்லக்கூடாது.ஏனெனில் நமது கவனம் அதிலிருந்துகொண்டேயிருக்க வாய்ப்பு அதிகம்.  தேர்வு இல்லாத நாளில்டை.ஷு அணிந்து நடந்து பழகிகொள்ளவேண்டும்.
நேர்முகத்தேர்வின் அறையின் நுழையும்முன்கதவு திறந்தேஇருந்தாலும் மெல்ல-(கவனியுங்கள்-மெல்லவிரல்களின் மேல்புறத்தால் தட்டிமை  கமின்?” என்று கேட்டக வேண்டும்அவர்கள் அழைத்துதான் வந்திருந்தாலும் இது ஒரு எதிர்பார்க்கபடும் சம்பிரதாயம்நுழைந்த 10வினாடிக்குள் தேர்வுக்குழு உட்காரச்சொல்லவில்லையாலால்மே  சிட் என்று கேட்டு நன்றாக ஆனால் ஆணவம் தொனிக்காத கம்பீரத்துடன் உட்கார்ந்து கொள்ளவேண்டும்.
3. யார் பேச்சைத்துவக்குவதுநாமாக பேச வேண்டுமானால் என்னபேசவேண்டும்எவருக்கும் எழும் இயல்பான கேள்விகள்தான்இந்த நிறுவனம் தேர்விற்கு வந்தவர் முதலில் பேச வேண்டும் என்பதை தங்களது மெளனத்தின் மூலம் தெரிவித்துவிட்டபின்.”உங்கள் நிறுவனம் இரண்டு கட்டங்களுக்கு பின் என்னை நேர்முகத்திற்கு அழைத்தையே நான் கெளவரவமாக கருதிகிறேன்இந்த தேர்வையும் வெற்றிகரமாக கடந்து நிறுவந்த்தில் சேர காத்திருக்கிறேன்” என்ற ரீதியில் ரமேஷ் பேச்சைத்துவக்கியிருக்கவேஎண்டும்.
அடுத்தது-எக்னாமிக்டைம்ஸ் விஷயம்அந்த நிறுவனத்தின் தேர்வுகுழு  தேர்விற்கு காத்திருப்பவர்களை கூட கவனமாக பார்த்துகொண்டிருந்திருக்கிறது என்பது புரிகிறதுஅப்படியானால் தேர்வு அங்கேயே துவங்கிவிட்டிருக்கிறதுநாம் பேசுவதுசெய்வதுஎல்லாம் மதிப்பிடப்படுகிறது. “ நான் அந்த பேப்பரில் எதுவும்  ஆழ்ந்து படிக்கவில்லைஅருகில் இருந்ததால் எடுத்துப்பார்தேன் அரசியல்,பரபரப்பு செய்திகல்  இல்லாமல் நிறைய மார்க்கெட் செய்திகள் இருப்பதுப்போல் தோன்றுகிறது இனி தொடர்ந்து படிக்கலாம் எனநினக்கிறன்” என்ற உண்மையான பதிலை ரமேஷ் சொல்லியிருக்கவேண்டும்
4. முதல் கேள்வி என்றில்லைஎந்த கேள்விக்குமே பதில் சொல்லமுடியாவிட்டால் அதனால் பாதிக்கப்பட்டுவிடக்கூடாதுஎந்த நேர்முகத்திலும் யாரும் எல்லா கேள்விகளுக்கும் சரியான பதிலைச் சொல்லிவிடமுடியாதுஅதுமட்டுமில்லை தேர்வுகுழுவினரும் ஒரு அல்லது சில கேள்விகளினால்  மட்டுமே முடிவு செய்ய மாட்டார்கள்இங்கே ரமேஷ் பதில் சொல்லாதாதோடு தான் குழப்பமாகிவிட்டதை தனது உடல் மொழியின்( body languge) மூலம் காட்டிவிட்டார்,

எந்த நேர்முகமும் இப்படித்தான் இருக்கும் என்று சொல்லமுடியாதுநிறுவனம்,பணியின் தன்மை,தேர்வுகுழுவின் அமைப்பு போன்றவகளினால் மாறுபடக்கூடியது.ஆனால் அழைக்கப்ட்ட நிறுவனத்தின் அமைப்பு  தேர்வானால் செய்ய வேண்டிய பணி பற்றி அறிந்திருந்த ரமேஷ் தன்னை  உடைஅணுகு முறை போன்றவற்றில் தன்னை தயார் படுத்திக்கொண்டிருந்தால் எளிதாக சமாளித்திருப்பார்..மார்க்கெட்டிங் அதிகாரியாக வரப்போகிறவர் தானே முன்வந்து முனைபவராக (proactive) இருப்பதையும்,எளிதாக பேசும் இயல்பு உள்லவராகவும் இருக்கவேண்டும் என அந்த் நிறுவனம் எத்ரி பார்ப்பதில் தவறல்லியேஇப்போது இதற்கு நிறைய புத்தகங்கள்பயிற்சிக்கூடங்கள் வந்துவிட்டனமிக எளிதாக வீட்டிலேயே நண்பர்கள் சகோதரர்கள் முலம் ஒரு மாடல் தேர்வு   கூட நடத்திப்பார்க்கலாம்நண்பர்கள் தெரிந்தவர்கள் எல்லோருடனும் நிறைய பேசி பேசி பழகவேண்டும்இது தன்நம்பிக்கையை வளர்க்கும்.நிறைய படிக்கவேண்டும் அதை நினைவிலும் வைத்துக்கொள்ளவேண்டும்அது தேர்வுகளிலும்  சமயோசிதமாக பதில் சொல்ல கைகொடுக்கும்.
சமீபத்தில் ஒரு வங்கியில் முதல் அதிகாரி நிலையிலிருந்து கிளை மேலாளர் நிலைக்குநேர்முகம். “இதுவரை தனியாக ஒரு கிளையை நிர்வகித்த அனுபமில்லாத நீங்கள் தேர்ந்தெடுக்கபட்டபின் ஒரு கிளைக்கு நிர்வாகியாக அனுப்பட்டால் எப்படி சமாளிப்பீர்கள்?” என்ற கேள்விக்கு தேர்விற்கு வந்தவர் தந்த பதில் “இருபது ஆண்டுகளுக்கு முன்  அதிகாரிநிலையிருந்து தெர்வுபெற்று நீங்கள் ஒரு கிளைப்பொறுப்பேற்று 5மடங்கு அதிகம் பிஸினஸ் செய்துகாட்டியதுபோல நம்பிக்கையுடன் முயற்சிப்பேன்” தேர்வுகுழுவிலுர்ந்து கேள்வியைகேட்ட பொதுமேலாளரிம் முகத்தில் புன்னகைகடந்த ஆண்டு அவர் போதுமேலாளராக தேர்வுசெய்யப்பட்டபோது அந்த வங்கியின் ஊழியர்களுக்கான மாதந்திர மடலில் படத்துடன் வெளியான வாழ்க்கைகுறிப்பிலிருந்த அந்த விஷயத்தை சரியான இடத்தில் சரியானமுறையில் பயன் படுத்திகொண்ட அவர் தெர்வுசெய்யப்போகும் அதிகாரி பற்றிய விபரங்களை சேகரிக்கும் திறன்,  வங்கியின்வெளியீடுகளை படிக்கும் பழக்கும்தனது நினைவாற்றல் போன்ற பல விஷயங்களை ஒரே பதிலில் உணர்த்திய  அவரின் தேர்வுமுடிவு என்னவாகயிருந்திருக்கும் என புரிந்திருக்குமே.
புதிய தலைமுறை)

1/8/10

30 கோடி முகங்களுடன் ஒரு புத்தகம்




காதலில் தோல்வியுற்ற ஒரு இளைஞன் என்ன செய்வான்? விரக்தியில் தாடி வளர்ப்பது, சோகத்தில் கவிதை எழுதுவது, என்பதலிருந்து மாறுபட்டு செயல்பட்ட ஒரு இளைஞனின் முயற்சியில் எழுந்ததுதான் இன்று உலகத்தையே கலக்கிகொண்டிருக்கும் ஃபேஸ் புக் என்ற சோஷியல் நெட்வொர்க்கிங்’ இணையதளம். 2004ம் ஆண்டு அமெரிக்க ஹார்வர்ட் பல்கலைகழக மாணவர் மார்க் ஸூக்கர்பெர்க்  (Mark Zuckerberg) தன் காதலை எற்காமல் போன காதலியின் நினைவுகளை மறக்க எதாவது சீரியஸாக செய்ய வேண்டும் என்று ஒரு இரவு முழுவதும் யோசித்ததில் பிறந்தது இது.. அமெரிக்க பல்கலைகழகங்களில் சேரும் மாணவர்கள், ஆசிரியர்கள் பற்றிய விபரங்களை ஒரு  முக அளவு போட்டோவுடன் ஒரு “ஃபேஸ்புக்காக” அச்சிட்டு வெளியிடுவார்கள். மார்க்ஸூக்கர்பெர்க்கு    அந்த காலகட்டதில் பிரபலமாகிக்கொண்டிருந்த    இணைய தள அமைப்பில் இதைச் செய்தால் என்ன என்று எழுந்த எண்ணத்தில் அறை நண்பர்களின் உதவியுடன் ஃபேஸ் ப்க் இணய தளமாக மலர்ந்த காதலி இவள்.. ஹார்வர்ட் பல்கலை மாணவர்களுக்கு மட்டும், என முதலில் துவங்கபட்ட இது பக்கத்து பல்கலைகழகம்,பக்கத்து மாநிலம், அமெரிக்கா முழுவதும் உள்ள மாணவர்களுக்கு மட்டும்,பின்னர் உலக மாணவர்களுக்கு எல்லாம்,என்று பல நிலைகளை கடந்து இன்று 13 வயதிற்கு மேற்பட்ட எவர் வேண்டுமானாலும் ஒரு இ மெயில் ஐடி இருந்தால் போதும் இலவசமாக உறுப்பினாராக முடியும் என்ற  பிரமாண்ட எல்லையை  தொட்டிருக்கிறது.  தொடர்ந்து வேகமாக வளர்ந்துகொண்டிருக்கும் இதன் மதிப்பு 300மில்லியன் டாலர்கள்(135 கோடி ரூபாய்கள்)   இதே போல் மைஸ்பேஸ், ஆர்குட் போன்ற தளங்கள் இருந்தாலும் இதுதான் உறுப்பினர் எண்ணிக்கையிலும், அதிக முறை அடிக்கடி பார்க்கப்படும் தளங்களிலும் முதலிடத்திலிருக்கிறது. உலகம் முழுவதும் 30 கோடி பேர் இதை பயன்படுத்துகிறார்கள். ஓரளவு முதலீடு செய்திருக்கும் மைக்ரோசாப்ட் உள்பட பல பெரிய நிறுவனங்களுக்கு இதன் மேல் ஒரு கண். வளைத்துபோட்டு இணைத்துகொள்ள தயாராகயிருக்கிறார்கள்.
அப்படி என்னதான் இந்த இணையதளத்திலிருக்கிறது?
 ஒரே வார்த்தையில் சொல்வதானால்-எல்லாமே. உறுப்பினர்கள் தங்களைப்பற்றிய விபரங்கள், படங்கள், சொந்த, சமுக பிரச்சனைகள், யோசனைகள்,விமர்சனங்கள்,பராட்டுகள், கவலைகள் படித்தவை,அதில் பிடித்தவை பார்த்த சினிமா அரட்டை,கோபம்  இப்படி எல்லாவற்றையும்  பதிவு செய்யலாம். பார்க்கும் உறுப்பினர்கள் தங்கள் கருத்துகளையும் பதிவு செய்வார்கள், இதனால் புதிய நட்புகள் அரும்புகின்றன. தொடர்பில்லில்லாத  பழைய நண்பர்களையும் இதன் வழியாக அடையாளம் காணமுடிகிறது. ஒரே துறையை சார்ந்தவர்கள், ஒருமித்த கருத்துடையவர்கள் குழுவாக இணந்து தகவல்களை பரிமாறிக்கொள்கிறார்கள், சில இடங்களில் நேரில் சந்தித்து விவாத கூட்டங்கள் கூட நடத்திக்கொள்கிறார்கள். இளைஞர்களை அதிகமாகவே ஈர்த்திருக்கும் இன்னும் அவர்களை கவர தொடர்ந்து பல புதிய விஷயங்களை அறிமுகப்படுத்தி கொண்டேயிருக்கிறார்கள். புறநகர் இளைஞர்கள் இப்போது தாங்கள் பேஸ்புக்கிலிருப்பதையும் அதை மற்றவருக்கு சொல்லுவதையும் கெளரவமாக கருதுகிறார்கள்.  உலகம் முழுவதும் 30 கோடிபேர் பயன்படுத்தும் இதில் ஒருகோடிபேர் இந்தியர்கள்.இந்தியாவில் செல்போன் பயன் படுத்துவர்களில் 20%க்கும்மேல்  ஃபேஸ்புக் உறுப்பினர்கள்.  உலகிலேயே செல்போன் உபயோகிப்போரின் எண்ணிக்கையில் முதலிடத்தை இந்தியா விரைவில் பிடிக்கும் என்பதால் இந்த நிறுவனம் இந்தியாவை தனது முக்கிய இலக்காக கொண்டிருக்கிறது. இப்போது ஹிந்தி, பஞ்சாபி, பெங்காலி, தெலுங்கு, மலையாளம் மற்றும் தமிழ் ஆகிய ஆறு மொழிகளில் ஃபேஸ்புக்கில் தகவல்களைப் பரிமாறிக் கொள்ள முடியும். விரைவில் இன்னும் பல இந்திய மொழிகளில் இந்த வசதியை வழங்க ஹைதராபாத்தில் அலுவலகத்தை திறக்கவிருக்கிறார்கள். ஆசிய நாடுகளிலேயே ஃபேஸ்புக்கின் அலுவலகம் திறக்கப்படுவது ஹைதராபாத்தில்தான்.
“என் நாய்குட்டி ஜிம்மிக்கு உடம்பு சரியில்லை.இரண்டுநாட்களாக சரியாக சாப்பிடவில்லை”என்ற செய்தியை நீங்கள் ஃபேஸ்புக்கில் போட்டால், உடனே ஆறுதல். ஆலோசனை, மருந்து,தொடர்புகொள்ளவேண்டியடாக்டர், தங்களின் நாய்க்கு நேர்ந்தது போன்ற செய்திகள் ஒரு 10 நண்பர்களிடமிருந்தாவது பறந்து வரும். மனித உறவுகள் பலவீனம் அடைந்து  சிறுகுடும்பத்தீவுகளாகிப்போன இன்றய சூழ்நிலையில் இத்தகைய நேசக்கரங்களை நிபந்தனையில்லமல் நீட்டும்  இதன் வசதி மக்களுக்கு பிடித்திருப்பதும் இதன் வெற்றிக்கு ஒரு காரணம்.
பிரபலமான விஷயங்களில் எதாவது பிரச்சனையிருக்கும் என்பதற்கு இது விதிவிலக்கில்லை.நம் சொந்த விஷயங்கள் எளிதாக எல்லோருக்கும் கிடைப்பதினால் பிரச்சனைகள் எற்பட வாய்ப்புகளும் உண்டு. இன்றைய இளைஞர்கள் இந்த தளங்களை பாதுகாப்புடன் கையாளுவது பற்றியும் அறிந்திருக்கிரார்கள்.இப்போது உறுப்பினர்களின் தகவல்களை யார் பார்க்கலாம் என்பதை அவர்களே முடிவுசெய்யலாம்.
உங்கள் வீட்டில்  இண்டர்நெட்டும்,15 வயதுக்கு மேல் குழந்தைகளும் இருந்தால் அவர்கள் ஃபேஸ்புக்கிலிருப்பார்கள் என்ற நிலையை தாண்டி வேலையிருந்துஓய்வு பெற்றவிட்ட  உங்கள் 65 வயது அப்பாவும் அம்மாவும் ஃபபேஸ்புக்கில் மெம்பர் என்ற நிலை உருவாகிக்கொண்டிருக்கிறது. ஆமாம். இப்போது வயதானவர்களுக்கு போரடிக்காமலிருக்க கிடைத்த வரப்பிரசாதங்களில் இதுவும் ஒன்று.
K(கல்கி01.08.10)



முப்பது கோடி முகமுடையா ளுயிர்
மொய்ம்புற வொன்று டையாள் - இவள்
செப்பு மொழி பதினெட்டு டையாள், எனிற்
சிந்தனை யொன்று டையாள்"
-பாரதியார்