19/9/10

யாருக்காக இந்த ஓட்டம்



கடந்த சில ஆண்டுகளாக மிகப்பெரிய  அளவில் விளம்பரங்கள் அரசியல், சினிமா பிரபலங்களின் கொடிசைப்புகள்,இசைகலைஞர்களின் நிகழ்ச்சிகள்  என்ற  ஆராவாரங்களுடன்துவக்கம்  என்று நிகழ்ந்து கொண்டிருக்குகிறது மாரத்தான் ஓட்டங்கள்முழுமராத்தான், அரை மாராத்தான், நகரின் பெயரில் ஒரு சிறியமினி மாராத்தான் என பல ஒட்டங்கள்சென்னைக்கு  4 ஆண்டுகள் முன் அறிமுகமான இந்த ஓட்டங்கள் அதற்கு முன்பே மும்பபையிலும் டெல்லியிலும் ஆண்டுதோறும் நிகழ்கின்றன. பல கோடிகளில் பணம்புரளும்  இந்த ஓட்டங்களுக்கு கார்ப்ரேட்களின் ஸ்பான்ஸ்ர்ஷிப் ஆண்டுதோறும் அதிகரித்துவருகிறது,
1981ல் புற்று நோய் பற்றிய விழிப்புணர்ச்சி ஏற்படுத்தவும் அதற்கான நிதி ஆதாரத்தை பெருக்கவும் கனடா நாட்டில் டெரிபாக்ஸ் எனபவரால் மிக எளிமையாக துவக்கபட்டு மிக பெரிய வெற்றியை எட்டிய இந்த சமூக விழிப்புணர்வு ஒட்டம் இப்போது உலகின் பல நாடுகளில் எதாவது  ஒரு சமுக பிரச்சனை விழப்புணர்ச்சிகாக நடத்தப்பட்டு பணம் சேர்க்கபடுகிறது.
ஆனால் இங்கே இது ஒரு பெரிய விளம்பர வியாபரமாகி விட்டது. பங்கேற்பவர்களுக்கு ஓட்டதின் நோக்கம் தெரிவதில்லை. ஸ்பான்ஸ்ர்களின் விளம்பரம் ஒட்டத்தின் நோக்கத்தையும் அது மக்களிடம் ஏற்படுத்தவேண்டிய தாக்கத்தை விட அவர்களின் நிறுவனம் அல்லது விற்பனை செய்யும் சாதனங்களை பற்றிய தாக்கத்தைத்தான் அதிகம் ஏற்படுத்துகிறது.  கடந்த ஆண்டு  துபாயில் வாழும் புற்று நோயால் தாக்கபட்ட  அக்காஷ் சென்னையில் டெரிபாக்ஸ் ஒட்டத்தை அறிமுகபடுத்தினார். இதற்காக பல பள்ளிகளில் காலை பிரார்த்தனை கூட்டதில் பேசினார். சில  வாரங்களக்கு முன் சென்னை  IIT யில் நிகழந்த இரண்டாமாண்டு ஆண்டு ஒட்டத்தில் கடந்த ஆண்டைவிட அதிகம்பேர் பங்கேற்றது மகிழ்ச்சியான விஷயம். ஆனால் அதில் பலருக்கு நோக்கம் தெரியாதிருந்ததுதான் வருத்தமானது. ஏன் ஒடினீர்கள்? எனற் கேள்விக்கு என் டிரையினர்  இது ஒரு நல்ல பயிற்சிக்கான வாய்ப்பு போ என்று சொன்னார்என் பிரண்டஸ் கூப்பிட்டார்கள் போன்ற பதில்கள் தான் கிடைத்தது.
அதேபோல் சமீபத்தில்  80000 பேருக்குமேல் பங்குகொண்டதாக அறிவிக்கபட்ட. சென்னை மாராத்தானில் பங்குகொண்ட பலருக்கு அது உதவுப்போகும் நிறுவனம் பற்றி எதுவும் தெரிந்திருக்கவில்லை. “எங்கள் வங்கி இதை ஸ்பான்ஸர் செய்திருக்கிறது.பெரிய அதிகாரிகள் பங்கேற்கிறார்கள் அவர்கள் கண்ணில் நான் பட வேண்டும்,” “சிவமணியின் டிரம்ஸ்சை இலவசமாக கேட்கலாம்எனபது போன்றது தான் பலரின் பதில். பல கோடிகளில் இந்த நிகழ்ச்சிகளுக்கு விளம்பரம்  செய்பவர்கள்  கடந்த ஆண்டுகளில் நடந்த ஓட்டங்களினால் சேகரித்த பணத்தில் என்ன தொண்டு செய்தார்கள் என்பதை பற்றி ஒரு சின்ன விளம்பரம் கூட கொடுக்காதபோது பங்குகொள்பர்களுக்கு தெரியாமல் இருப்பதில் வியப்பு ஒன்றுமில்லை என்றார், 50 குழந்தைகளை கூட்டிவந்த ஒரு ஆசிரியை.
ஒடியவர்கள் ஒடும்போழுதே குடித்துவிட்டு தூக்கிபோட்ட பிளாஸ்டிக் பாட்டில்களை பொறுக்க எழைக் குழந்தகள் ஒடிவந்த காட்சி மனதை உறுத்தியது.
பதவியிலிருக்கும் அரசியல்வாதிகளின் ஆசியோடு சிலர் தங்களை முன் நிறுத்திக்கொள்ளவும் ஸ்பான்ஸ்ர்கள் அவர்கள் உதவியோடு தங்களது தேவைகளை எளிதாக நிறைவேற்றிக்கொள்ளவும் இந்த ஓட்டங்கள் ஒரு எளிதான வழியாகிவிட்டது என்கிறார் ஒரு மூத்த பத்திரிகயாளார். கார்ப்ரேட்கள்  அவர்களது சமூக கடமையாக செய்த பணிகளை வெளியிடவேண்டியது(Corporate Social Responsblity) இபோது கட்டாயமாக்கபட்டிருக்கிறது. அதனால் சில நிறுவனங்கள்  அந்த கணக்கில் புத்திசாலிதனமாக இந்த விளமபரங்களை செய்கிரார்கள். தவிர்க்கமுடியாதாது   இது என்கிறார் பங்கு பெற்ற ஒரு நிறுவனத்தின் உயர் அதிகாரி.
1981 டெரிபாக்ஸ் கனடாவில் ஓட்டத்தை துவக்கியபொழுது தேடிவந்த ஸ்பான்ஸ்ர்களை நிராகரித்தார்.சொன்ன காரணம்விளம்பரங்கள் ஒட்டதின் நோக்கத்தை தகர்த்துவிடும்.” தொடந்து அந்த ஓட்டத்தை உலகமெங்கும் நடத்தி  பல கோடிகளை நிதியாக சேர்த்தளிக்கும்   அவரது அறக்கட்டளை  இன்றும் கார்ப்பெரட் விளம்பரங்களுக்காக ஸ்பாஸ்ர்களை ஏற்பதில்ல.

(கல்கி 19.09.2010)

12/9/10

வன்முறை நிகழ்ந்த இடத்தில் வழிபாடு


வன்முறை நிகழ்ந்த இடத்தில் வழிபாடு


10ஆண்டுகளாகிவிட்டது. ஆனாலும் உலகம் மறக்காத கறுப்பு தினங்களில் ஒன்று செப் 11. சற்றும் எதிர்பார்க்காத தருணத்தில் சிலநிமிஷங்களில்  அல் கொய்தா தீவிர வாதிகளின் தாக்குதலால் தரைமட்டமாகிப் போனது 2001 செப் 11 ல் நியுயார்க் வேர்ல்ட் டிரேட் செண்ட்டர் இரட்டை கோபுரங்கள். அணுகுண்டு விசி அழிக்கபட்ட இடம் கிரவுண்ட் ஜிரோ (ground Zero) என அழைக்கபடும். அந்த பெயரிடப்பட்ட இந்த இடத்தில்  இப்போது விசாரணையெல்லாம் முடிந்து,  அமையப் போகும்  புதிய பெரியு  பலமாடி கோபரங்களின்  பெயர் சுதந்திர கோபுரம். டிஸைன்களுக்கு போட்டி வைத்து மக்கள் ஒட்டளித்து தேர்ந்தெடுத்தது.  மறைந்தவர்களுக்கு நினைவுசின்னம், மியூசியம், அழிவில் மிஞ்சிய அடையாள சின்னங்களுடன் பார்க் என மெல்ல எழுந்து கொண்டிருக்கும் கட்டிடத்துடன் ஒரு பிரச்சனையும் எழுந்துகொண்டிருக்கிறது,
தாக்கபட்ட கட்டிடத்தின் மிக அருகிலிருந்த்த ஒரு தனியார் கட்டிடம் 100மில்லியன் டாலர் செலவில் ஒரு மசூதியாக புதுபிக்கபட்டுகொண்டிருக்கிறது.  திருமதி டெய்ஸிகான் தலமையில் இயங்கும் குழு நன்கொடை வசூலித்து செய்கிறது. இவர் அப்துல் ராஃப் என்ற இமாமின் மனைவி.ஆனால்  அல் கொய்தாவின் மறைமுக உதவி என்பது பரவலாக உலவும் வதந்தி.  இரட்டைகோபரங்கள் தாக்கபட்டதிலிருந்தே முஸ்லீம்கள் மேல் கோபமாகயிருக்கும் அமெரிக்கர்கள் இதனால் கொதிப்படைந்து போயிருக்கிறார்கள்.  வேறு இடத்தில் அமைக்கவேண்டும், அனுமதியே கூடாது என கண்டன, கூட்டங்களாக எழுந்த போராட்டம் வலுக்க ஆரம்பித்திருக்கிறது.
அமெரிக்க மக்களுக்கு அதிர்ச்சி தந்த  அடுத்த விஷயம் பல வாரங்களாக அமைதி காத்த அமெரிக்க அதிபர் இந்த மசூதி அமைப்பதற்கு ஆதரவு தெரிவித்து அறிக்கைவிட்டிருப்பது  “அமெரிக்காவில்.எந்த மதத்தினரும் தங்கள் மத வழிபாட்டு தலங்களை அமைத்துகொள்ள  உரிமை உள்ளது. அதை தடை செய்வது அவர்களூக்குக நம் சட்டம் வழங்கியிருக்கும் சுதந்திரத்தை பறிக்கும் செயலாகும்” என்கிறார் ஒபாமா. அல்-கொய்டா இஸ்லாம் இல்லை. அவர்களது செயலுக்காக ஒட்டுமொத்த முஸ்லீம்களை வெறுப்பது கண்ணியமற்ற செயல் எனபது அவர் கட்சியின் நிலை.
ஒமமா  ஒரு கிருத்துவராகயிருந்தாலும் இன்னும்  பெயரில் ஒட்டிக்கொண்டிருக்கும் தனது தந்தை பெயரான ஹூஸைணை நீக்கவில்லை.எந்த அமெரிக்க அதிபரும் செய்யாத இப்தார் விருந்தை வெள்ளை மாளிகையில் அளித்திருக்கிறார் அதனால் அவர் முஸ்லீம்களின் செயல்களைகளை நியாப்படுத்துவதில் ஆச்சரியமில்லை என அதிபருக்கு மதச்சாயம் பூசுகிறார்கள்  மசூதிக்கு எதிராக போராடுவோர்.

(கல்கி 120910)





,

22/8/10

சென்னைக்கு ஹேப்பி பெர்த்டே.. . . .


சென்னைக்கு  ஹேப்பி பெர்த்டே.. . . .


சென்னை நகர்  1639  ஆகஸ்ட் 22ல் பிறந்தது என கண்டுபிடிக்கபட்டு, 2004 ஆண்டுலிருந்து அந்த நாளில்  “சென்னை டே” கொண்டாடப்படுகிறது. முதல் ஆண்டு மூன்று  நிகழ்சிகளுடன் துவங்கிய இது “சென்னை வாரமாகி”  இந்த ஆண்டு, புகைப்பட, ஒவிய கண்காட்சிகள்,இசை நடனவிழாக்கள், கருத்தரங்கு  கூட்டங்கள் குறும்படங்கள் என நகரின் பல இடங்களில் 60 நிகழ்ச்சிகளுடன் நகரின் பல அமைப்புகள் கொண்டாடினார்கள். ரோஜா முத்தையா நூலகமும்  சிறப்பு கூட்டங்களை நடத்தியது.. அதில் “இருளில் கனவு உலகம்- சென்னையின் சினிமா அரங்குகள்” தலைப்பில் தமிழ் சினிமா வரலாற்று ஆராய்சியாளரான திரு தியோடர் பாஸ்கர் பேசியதிலிருந்து.. ..
v  சென்னையில் முதல் சினிமா 10 நிமிட பேசா படம். எக்மோர் அருகே ஒரு டெண்ட்டில் வெள்ளகாரகளால் காட்டபட்டது. மின்சாரமில்லாமல்  எரியும் மக்னீஷ்ய நாடாக்கள் ஒளியில் காட்டபட்டது.தெரு ஒரங்களில் துவங்கி, பின்னர் மத்தியான நேரங்களில் காலியாகயிருக்கும் நாடக அரங்ககளில் காட்டபட்டது.
v  வெள்ளையர்களிடமிருந்து இதை கற்ற  வின்ஸென்ட் சாமிகண்ணு என்பவர்1905ல் இந்த முறையில் நாட்டின் பல பகுதிகளிக்கு டெண்ட்டுடன் பயணம்செய்து படங்கள் காட்டியிருக்கிறார். வடஇந்தியாவில் பெஷாவர் வரை பயணித்து படம் காட்டி ஈட்டிய பணத்தில்தான் கோய,ம்புத்தூரில் ‘வெரைட்டி ஹால்’ என்ற அரங்கை கட்டியிருக்கிறார்.
v  சென்னையின் முதல் மூன்று அரங்கங்கங்களும்  ஒரே ஆங்கிலேயரால் முழுக்க முழுக்க வியாபர நோக்கில் கட்டபட்டிருந்தது. தீண்டாமை மிக பரவலாக இருந்த அந்த காலகட்டத்தில்  திரைப்பட அரங்குகள் தான்  சம உரிமை நிலவியிருந்திருந்த முதல் பொது இடம். ஜாதிமத பேதமில்லால் ஆங்கிளேயர்களும் எல்லா ஜாதி இந்தியர்களூம் ஒன்றாக படம் பார்த்திருக்கின்றனர்.
v  சினிமா அரங்கங்கள் தான்  கம்பெனி நாடகங்களுக்கு மாற்றான ஒரு பொழுதுபோக்கு சாதமாக வளர்ந்ததால் அது நாடககம்பெனி  பழக்கங்களை அடியொற்றி துவக்கதில் மணி அடிப்பது,இடைவேளைவிடுவது எல்லாம் கடைபிடிக்கபட்டது. இன்று உலகளவில் கடைப்பிடிக்கும் சினிமாவில் இடைவேளை என்பது சென்னையில்தான் துவங்கியிருக்கிறது. இடைவேளயில் தின்பண்டங்களை இருந்த இடத்திற்கே வந்து விற்பனை செய்யும் வழக்கமிருந்ததால் அது ஒரு தனி தொழிலாகவே வளர்ந்திருக்கிறது.
v  துவக்கத்தில் சினிமாவை மக்களை தூண்டும் பெரிய சக்திவாய்ந்த  ஒரு ஊடகமாக பிரிட்டிஷ் அரசு நினைக்கவில்லை. அதனால்  சினினா குறித்து எந்த சட்டமுமில்லை. மாக்னீஷ்ய நாடாக்கள் பயன் படுத்துவதால் அரங்கங்களில் தீ விபத்து அபாயம் கருதி பாதுகாப்பு விதிகள் மட்டும்  உருவாயின. சினிமாவில் புராண சரித்திர பாத்திரங்கள் கூட கதர் தொப்பி அணிந்து மறைமுகமாக தேசிய விடுதலை விஷயங்களைப் பேச ஆராம்பித்த பின்னர், சினிமா வந்து 20 ஆண்டுகளான் பின்னர்தான் சென்சார் முறை அறிமுகபடுத்தபட்டது. போலீஸ் கமிஷனர் தான் சென்சார் அதிகாரி.


v  அண்ணல் தன் வாழ்நாளில்  சினிமா அரங்கிற்கு சென்றதில்லை.. அவர் வந்த ஒரே சினிமா அரங்கம் சென்னையிலுள்ள   மிட்லாண்ட் அரங்கம். . அன்றைய சென்னை பல்ககைலலகழக மானவர்கள் அவருக்கு ஒருவரவேற்பு கொடுத்த இடம் அந்த சினிமா தியட்டர். அரங்கத்திலேயே  அந்த வரவேற்புரை பத்திரத்தை  ஏலமிட்டபொழுது அதை வாங்கியவர் சுதந்ததிர போரட்ட வீரர் திருமதி  லஷ்மி சாமிநாதன்.அந்த சமயத்தில் முழு ஏலத்தொகைக்கும் அவரிடம் பணமில்லாதால் தன் தங்க கைவளையல்களை கழட்டிகொடுத்தார்.



கதையெழுதும் கண் டாக்டர்




சென்னயின் அந்த பிரபல கண்மருத்துவ மனையின்  சிறிய ஹால் நிரம்பிவழிகிறது.டாக்டர்களின் வருகைக்காக காத்திருக்கிறார்கள்.. சிகிச்சைக்காக அல்லஅந்த மருத்துமனையின் டாக்டரின் காபி வித் வக்கீல் வரது   புத்தக வெளியிட்டுவிழாவின் துவக்கத்திற்காகபுத்தகத்தின் பெயரில் காபி இருப்பதலோ என்னவோ வந்தவர்களுக்கு கொதிக்கொதிக்க காபி பித்தளை டபரா செட்டில் தந்தார்கள்
பார்க்க காத்திருக்கும் பல பேஷண்ட்கள்அடுத்த சிலமணிநேரத்தில் செய்ய வேண்டிய  கண்  மாற்ற ஆப்ரேஷனுக்கான ஆயுத்தங்கள்ரோட்டரிகிளப்  கண் வங்கியின் டைரக்டர்பணி,தமிழ்நாடு கண் மருத்துவர்களுக்கான பத்திரிகையின் ஆசிரியர் என தினமும் பரபப்பாகயிருக்கும் டாக்டர் சுஜாதா மோகன் அதற்கிடையிலும் ஒருசிறுகதைகள் தொகுப்பை வெளியிட்டிருக்கிறார்இவர்   டாக்டர் ராஜன் கண்மருத்தவ மனையை நிர்வகிக்கும்  கண் டாக்டர் மோகனின் மனைவிஇந்த டாக்டர் தம்பதியினர் 90களிலியே கண்அறுவைசிகிச்சையில் உலகத்தரத்தில் புதிய நுட்பங்களை கொண்டுவந்து இன்றும் தொடர்ந்துகொண்டிருப்பவர்கள்.
 இவரது புத்தகத்தில் சிதம்பரத்தில் வாழ்ந்த ஒரு ஆச்சாரமான ஐங்கார் வரதாச்சாரி என்ற வக்கில் குடும்பத்தின் சொந்தகாரர்களை பாத்திங்களாக்கி 12 சிறுகதைகளாக உருவாக்கி ஒரு மெல்லிய இழையில் அவைகளை இணைத்து நாவலாக தொடுத்திருக்கிறார்எளிய அழகான நடைபாத்திரங்களின் சின்னசின்ன செயல்களில் கடந்த தலமுறை குடும்ப வழக்கங்கள்மதிப்பீடுகள்  போன்றவற்றை மெல்லிய நகைச்சுவையடன் சொல்லுகிறார்சீதாப்பாட்டி அப்புசாமியைப்படைத்த ஜெயராஜ் கதாபாத்திரங்களுக்கு உயிர்கொடுத்திருக்கிறார்படிக்கும் நடுத்திரவயதினருக்கு நிச்சியம் தங்கள் இளமைகாலம் நினைவில் நிழலாடும்.

இரண்டு பெண்களுக்கு தாயான  இவரின் முதல் புத்தகம் இதுபத்திரமான தலைப்பிரசவம் என  சொல்லும் இவர் ஒரு மருத்தவ குடும்பதின் மூன்றாவதுதலைமுறை டாக்டர். (இவது மகளும்  அரசு மருத்துவகல்லூரியில்  முதலாண்டு படிக்கிறார் !) இவர் எப்படி கதை எழுதத்துவங்கினார்எனக்கே ஆச்சரியமான விஷயம் இது என்று சொல்லும் இவர்  பள்ளியில் தன்னை எழுதத்தூண்டிய ஆசிரியர்களை நன்றியுடன் நினைவு கூறுகிறார் . தனது கணவரும் குடும்பத்தினரும் நண்பர்களும் தான் இது புத்தகமாக வந்ததற்கு காரணம் என்கிறார்.

தமிழ் தாய்மொழியாக இருந்தும்தமிழிலேயே பள்ளிப்படிப்பை முடித்திருந்தும் இதை ஆங்கிலத்தில் எழுதியிருப்பதற்கு காரணம் ஆங்கிலத்தில் பல ஆண்டுகள் தொடர்ந்த மருத்துவ படிப்பும் ஆங்கிலத்தில்  தொடர்ந்து மருத்தவ கட்டுரைகள் எழுதி ஆங்கிலம் சரளமாகிவிட்டதுதான்  என்கிறார்

பொதுவாக மருத்துவ துறை சம்பந்தப்பட்ட விழாக்களில் மட்டுமே பங்கேற்கும் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைகழக துணைவேந்தர் டாக்டர் மயில்வாகனன் நடராஜன் இந்த புத்தகத்தை வெளியிட்டது   ஒரு ஆச்சரியமான மகிழ்ச்சிஅதைவிட மகிழ்ச்சியான விஷயம் மருத்துவர்கள்  தங்கள் பணி¢யைதாண்டி இப்படி இலக்கிய பணிகள் செய்வது மிகவும் வரவேற்கவேண்டிய ஒன்றுமருத்தவ பல்கலைகழகமே தமிழில் டாக்டர்களின் இப்படிபட்ட இலக்கியபணிகளுக்கு பரிசு கொடுத்து கெளரவிப்பது பற்றி ஆலோசித்துகொண்டிருக்கிறதுஎன்ற அவரது அறிவிப்பு..


கண் மாற்று அறுவை சிகிச்சையில்  உலகின் சிறந்த முதல் 27 பேர்களின் பட்டியலில் இடம்பெற்றிருக்கும் இந்த கண் டாக்டர்தன்னிடம் வருபவர்களின் கண்களை கவனமாக பார்ப்பதுபோலதன் கண்களால் தன்னை சுற்றியிருப்பவர்க¨யும் அவர்களின் உலகத்தையும் கவனமாக பார்த்து கொண்டிருப்பவர் என்பது இந்த புத்தகதிலிருந்து புரிகிறது.
சந்திப்பு ; ரமணன்





15/8/10

நெசவுத்தொழில் பிரச்சனைகளின் நிஜங்கள் 4


நெசவுத்தொழில் பிரச்சனைகளின் நிஜங்கள் 4


திரு.  M. நடராஜன் டெல்லி  IITயில். டெக்ஸ்ட்டையல் டெக்னாலாஜியில் M.Tec படித்திருப்பவர். கடந்த 15 ஆண்டுகளாக ஜவுளித்துறை ஆலோசகராகயிருப்பவர். புதிய ஆலைகளை உருவாக்குவதற்கும் நலிந்த ஆலைகளை சீரமைத்து புத்துயிர் தருவதற்கும் ஆலோசனைகள் வழங்கும் நிபுணர். இந்த பிரச்ச்னையை ஆழமாக ஆராய்திருப்பவர். அவர்
சொல்லும் திர்வுகள்;
1.            .ஒவ்வொரு ஆண்டும் ஆண்டுத் துவக்க பருத்தி இருப்புபருத்தி உற்பத்திபருத்தி இறக்குமதிஉள்நாட்டு ஆண்டுத் தேவைஆண்டு இறுதி இருப்பு ஆகியவைகளை மதிப்பீடு செய்து உபரி பருத்தியை மட்டும் ஏற்றுமதிக்கு மத்திய அரசு அனுமதிக்க வேண்டும். ஒவ்வொரு ஆண்டின் இறுதி இருப்புஅந்த ஆண்டு உள்நாட்டுத் தேவையில் எவ்வளவு சதவிகிதம் இருக்க வேண்டும் என்ற மதிப்பீடும் சரிவர நிர்ணயம் செய்யப்பட வேண்டும். இந்த ஆண்டுக்கான இறுதிக் கையிருப்பை நிர்ணயம் செய்வதில் தவறிழைத்தால் அடுத்த ஆண்டு பருத்தி விளைந்து உற்பத்தியாகும் வரை காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்படும். சீன நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் அந்த ஆண்டு இறுதி இருப்பாக அந்த ஆண்டுத் தேவையின் 40 சதவிகிதம் பஞ்சு இருப்பு வைக்கப்படுகிறது. நமது நாட்டில் இந்த ஆண்டு இறுதி இருப்பாக இந்த ஆண்டுத் தேவையின் 20 சதவிகிதம் கூட பஞ்சு இருப்பு வைக்க முடியாது போல் தோன்றுகிறது.

2.            .நூல் பற்றாக்குறைவிலைஉயர்வை தவிர்க்கஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் நூற்பாலைகளில் நிறுவப்பட்டுள்ள கதிர்களின் எண்ணிக்கைநூல் உற்பத்திஉள்நாட்டுத் தேவை ஆகியவைகளை மதிப்பீடு செய்து உபரி நூலை மட்டுமே ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதிக்க வேண்டும்.

3.            பாரம்பரிய நெசவுத் தொழில் என்ற அடிப்படையில் விசைத்தறிகைத்தறி ஆகிய பிரிவுகளில் லட்சக்கணக்கான சாமானிய ஏழைஎளிய உழைப்பாளிகள் வாழ்க்கை நடத்தி வருகின்றனர். முந்தைய காலங்களில் நூல் விலை உயர்வு சமயங்களில் இந்த தொழில்களுக்கு மத்திய அரசு நூல் விலைக்கு மானியம் வழங்கிய வரலாறு உள்ளது. தற்போது வரலாறு காணாத வகையில்முன்னெப்போதைக் காட்டிலும் கூடுதலாக நூல் விலை உயர்ந்துள்ள நிலையில் உள்நாட்டு நெசவுத் தொழிலைப் பாதுகாக்க வேண்டும் என்று இத்தொழில்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். உடனடியாக கைத்தறிவிசைத்தறி நூலுக்கு மானியம் வழங்க வேண்டும்
4.            பருத்தி விவசாயிகளுக்கு விவசாய இடுபொருள் செலவினங்களுக்கான தொகையை குறைந்த வட்டியில் கடனாக வங்கிகளின் மூலமாக மத்திய அரசு கொடுக்க வேண்டும்.
5.            விவசாயிகள் விளைவித்த பருத்திக்கு நியாயமான குறைந்தபட்ச ஆதார விலைக்கு இந்திய பருத்திக் கழகத்தின் (ஊஊஐ) மூலம் மத்திய அரசே கொள்முதல் செய்து நூற்பாலைகளுக்கு விற்பனை செய்ய வேண்டும்.
6.            நூற்பாலைகளுக்குத் தேவையான மின்சாரத்தை தமிழக அரசு வழங்க வேண்டும். தமிழ்நாட்டு மின் தேவையில் பற்றாக்குறைக்கு ஏற்பமத்திய தொகுப்பில் இருந்து தமிழகத்திற்கு உரிய முழுப் பங்கையும் மத்திய அரசிடம் கோரிப் பெற வேண்டும். நூற்பாலைகள் டீசல் ஜெனரேட்டர்களை இயக்குவதற்கு மானிய விலையில் தமிழக அரசு டீசல் வழங்க வேண்டும்.
7.            சாயப்பட்டறைத் தொழிலுக்குத் தேவையான சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்க ஏற்படும் செலவுக்கு போதிய மானியம் வழங்க வேண்டும்.
8.            பனியன் ஆயத்த ஆடை ஏற்றுமதியாளர்களுக்கு ஏற்பட்டுள்ள சமீபத்திய உடனடி பாதிப்புகளான நூல் விலை உயர்வுமின்வெட்டினால் ஏற்பட்டுள்ள கூடுதல் உற்பத்திச் செலவுகளை ஈடுகட்டும் விதத்தில் கூடுதல் ஊக்கத் தொகைகளை மத்திய அரசு அளிக்க வேண்டும்.

9.            விசைத்தறிகைத்தறி நூல்களுக்கு ஏற்கனவே மத்திய அரசு மானியம் வழங்கியது போல தற்போதும் விலை உயர்வைச் சமாளிக்க கைத்தறிவிசைத்தறி நூல்களுக்கு மானியம் வழங்க வேண்டும்.10.          இந்திய ரூபாயின் மதிப்பு உயர்கிற பிரச்சனைக்குரிய மூல காரணமாகவும்உள்நாட்டுப் பொருளாதாரம் பலவீனமடையக் காரணமாகவும் உள்ள அந்நிய நிதி மூலதனத்தை குறிப்பாக ஊக முதலீட்டை இந்தியாவுக்குள் நுழைவதை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு அமல்படுத்த வேண்டும்.பிரச்சனையும்தீர்வுகளும்  நமக்கு புரிகிறது.  அரசுக்கு புரிந்து அதன் கவனத்திலிருக்கிறதாதிரு தயாநிதி மாறன் தொலைதொடர்பு துறையினமைசாராகயிருந்தபோது பிரதமரால் அவரது வேகமான செயல்திறனுக்காக பராட்டபட்டவர். இபோது அவர் வசமிருக்கும் இந்த துறையிலும் அதுபோல் வேகமான மாற்றங்களை எதிர்பார்த்து மக்கள் காத்திருக்கிறார்கள்.---------------------------------------------------------------------------------

8/8/10

நெசவுத்தொழிலின் நிஜங்கள்



               நெசவுத்தொழில் பிரச்சனைகளின் நிஜங்கள் 3


இன்றைக்கு  மற்ற எந்த தொழிலையும் விட மிக பாதிக்கபட்டிருப்பது நெசவுத்தொழிலின் மிக முக்கிய அங்கமான நூற்பாலைகள் தான். பல ஆலைகள் நஷ்டத்திலோ அல்லது மிக  குறைந்த லாபத்திலோ தான் இயங்கிக்கொண்டிருக்கிறது. வங்கிகளுக்கு செலுத்தவேண்டிய கடன் சுமை ஏறிக்கொண்டேயிருக்கிறது. மற்ற தொழிளார்களைவிட அதிகம் ஊதியம் பெறுபவர்கள் நூற்பாலைததொழிலாளிகள். ஆனால் அதிகமான தொழிலாளர் பிரச்சனையும் இதில் தான். கடுமையான மின்வெட்டுஅறிவிக்கபட்டது 30% தான் ஆனால் உண்மையான மின்வெட்டு 50%. இதனால் உற்பத்தி பாதிக்கபட்டாலும் தொழிலாகளுக்கு சம்பளம் கொடுக்கவேண்டும். ஏறிக்கொண்டே போகும் டீசலின் விலையினால் ஜெனரேட்டர் இயக்கத்தின் செலவு மூன்று மடங்கு உயர்ந்திருக்கிறது.  அதுமட்டுமில்லை நல்ல வகை பஞ்சு நேரடியாக ஏற்றுமதி செய்யப்படுகிறது இதனால் தொடர்ந்து பஞ்சு  ஒரே விலையில் கிடைப்பதில்லை தரமும் வேறுபடுகிறது.. தயாரிக்கும்   நால் விற்பனை விலை மாறுபடுகிறது என்கிறது நூற்பாலை அதிபர்களின் தரப்பு. உலக அரங்கில் இந்திய ஜவுளித்துறையின் மிகப்பெரிய பலமே பருத்தி உற்பத்திதான் உலகின் பருத்தி உற்பத்தியில் நமக்கு இரண்டாவது இடம்..சுமார் 300 லட்சம் பேல்கள் (ஒரு பேல் 170கிலோ) இந்தியாவில் விளைவிக்கப் படுகிறது. ஆனாலும் பருத்தி விவாசயிகளின் அவலநிலை இன்னும் அப்படியேயிருக்கிறது. எனபதுதான் உண்மை..1997லிருந்து-2007 விளைவித்த பருத்திக்கு ஏற்ற விலை கிடைக்காமல்கந்துவட்டிகொடுமையினால் தற்கொலை செய்துகொண்ட பருத்திவிவசாயிகள் ஒரு லட்சத்து 80ஆயிரம்பேர் என்பது பாராளுமன்றத்தில் பதிவான செய்தி. ஆனால் இடைத்தரகர்களும் பஞ்சாலை அதிபர்களும் பஞ்சு ஏற்றுமதி செய்து  கொள்ளை லாபம் ஈட்டியிருக்கின்றனர்


பஞ்சாலைகளின் நேரடி பஞ்சு ஏற்றுமதி  நூல் விலையேற்றத்திற்கு  ஒரு காரணம் என்று சொல்லும் இந்த நூற்பாலைகள் செய்தது என்ன தெரியுமாதரமாக தயாரிக்கபட்ட நூலையே எற்றுமதி செய்ததுதான். பெரும் மூலதனத்தில் கட்டமைப்பும்பல லட்சகணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரமாகவும் இருக்கும் நெசவுத்தொழிலின் முக்கிய இடுபொருளை உள்நாட்டு சந்தையில் விற்பனை செய்யாமல் ஏறுமதி செய்ய கற்றுகொடுத்திருக்கிறது அரசின் உலகமயமாதல் கொள்கைகள்.  இதைவிட அதிர்ச்சியான விஷயம் இந்த நூலை வாங்கும் பங்களாதேஷ்வியாட்நாம்பாக்கிஸ்தான்சீனா போன்ற நாடுகள்  சர்வேதேச  ஜவுளிஆயுத்த ஆடைகளின் ஏற்றுமதி மார்க்கெட்டில் நமது போட்டியாளர்கள். நமது நூலை வாங்கி அதில்  துணி உற்பத்தி செய்து நாம் ஏற்றுமதி செய்துகொண்டிருக்கும் நாடுகளுக்கே குறைந்த விலையில் விற்கிரார்கள் இந்த புத்திசாலிகள். இதற்கு உதவிக்கொண்டிருக்கின்றன நமது ஆலைகள். ஏற்கனவே   உருகிஓடிகொண்டிருக்கும் உலக பொருளாதாரவீழ்ச்சியில் டாலர் மதிப்பு 13 சதவீதம் வீழ்ச்சி அடைந்ததால்  நமது துணி ஏற்றுமதியாளருக்கு  13% வரவுஇழப்பு என்பதோடு  வரும் காலத்தில்  மார்கெட்டையும் இழக்கும்  அபாயமிருக்கிறது. .இந்த ஆண்டு இந்தியாவில் நால் விலையின் இந்த வரலாறு காணாத விலைஏற்றத்திற்கு முழுக்க முழுக்க மத்திய அரசின் ஏற்றுமதி கொள்கைகள் தான் என்பதை தொடர்ந்து நாங்கள் சொல்லிக்கொண்டேயிருக்கிறோம் என்கிறது மார்க்ஸிஸ்ட் கட்சியின் அறிக்கை. 2009 செப்படம்பரிலிருந்து நவம்பருக்குள்ளாக ஒரு பேல் `22000லிருந்து 25000 உயர்ந்துவிட்டது. உடனடியாக பஞ்சு ஏற்றுமதியை நிறுத்தவேண்டும் என கோவை தென்னிந்திய மில்சங்கம்,ஆயத்த ஆடை ஏற்றுமதி கழகம்இந்திய ஜவுளி கூட்டமைப்புஎல்லாம் மத்திய அரசை வேண்டின. “ தொழிலில் ஈடுபட்டுள்ளோர் தேவையில்லாமல் பீதி அடைந்துள்ளனர். நமது நாட்டில் போதுமான பருத்தி உற்பத்தியுள்ளது பருத்தி  ஏறுமதியை தடை செய்ய வேண்டிய அவசியமேயில்லை என்று அமைச்சர் மாறன் 2009 டிசம்பரில் அறிவிக்கிறார். ஆனால் 2010 ஏப்பரல் மாதத்தில் ஜவுளித்துறை உள்நாட்டு  நூற்பாலைத்தொழிலுக்கு மூலப்பொருள் பற்றாகுறையிருப்பதால் ஏற்றுமதிக்கு தீர்வை விதிக்கபடவேண்டும் என்று பரிந்துரைப்பதால் பஞ்சு ஏறுமதிக்கு தீர்வை என மத்திய நிதிஅமைச்சகம் அறிவிக்கிறது. இதை கடந்த ஆண்டு நவம்பர் மாதமே செய்திருந்தால் இந்த  நூல் விலை உயர்வு வந்தேயிருக்காதுஎன்பது துறையிலிருக்கும் பலரின் ஆதங்கம். ஏற்றுமதி தீர்வை நிலமையை முழுவதும் சமாளிக்க உதவாது. இந்த ஆண்டு விளைந்த பஞ்சில் 81% சதவீதம் தான் வெளியே வந்திருக்கிறது 19 சதவீதம் பதுக்கபட்டிருக்கிறது. சர்வதேச சந்தையில் வருமாண்டு  வரப்போகும் பஞ்சு பற்றாகுறையை பணமாக்கி கொள்ள அஹமதாபாத் பஞ்சாலை லாபி திட்டமிட்டிருக்கிறது. அதனால் அடுத்தாண்டும் நூல்விலை குறைய வாய்ப்பில்லை என்கிறது  ஒரு ஆராய்ச்சி கட்டுரை.

நெசவுத்தொழில் சார்ந்த சங்கிலித்தொடரான தொழில்களில் ஈடுபட்டுள்ள பருத்திவிவசாயிகள்ஜின்னிங் தொழில் உரிமையாளர்கள்பஞ்சுவர்த்தகர்கள் நூற்பாலை உரிமையாளார்கள்கைத்தறிவிசைத்தறி தொழிலாளார்கள் ஏற்றுமதியாளார்கள் என அனைவரும் சிக்கிய நூல்கண்டாக தவிக்க வைக்கும் இந்த நூல் பிரச்சனைக்கு தீர்வுதான் என்ன?
ஜவுளிதொழிலில் நீண்ட அனுபமுள்ள ஆலோசரின்  ஆலோசனைகள் அடுத்த வாரம்... ..
_________________________________________________________________________________