11/3/12

நம்பிக்கையின் சின்னம்



கனவு காட்சியானதைச்சொல்லுகிறது இந்த பாறை



அமெரிக்க அரசியல் சரித்திரத்தில் அழிக்கமுடியாத இடத்தைபெற்றிருப்பவர் மார்ட்டின் லூதர்கிங். ஆப்ரஹாம் லிங்கன் அறிவித்திருந்த நிற,இனபேதமில்லாத அமெரிக்கா” 100 ஆண்டுகளுக்குமேலாக கனவாகவே இருப்பதை கண்டித்து அதைச் சட்டபூர்வமாக செயலாக்க 60களில் அண்ணல் காந்தியின் வழியில் அறப்போர் செய்து வெற்றிகண்டவர். நீதிகேட்டு  வெள்ளை மாளிகை நோக்கி அவர் குழுவுடன் செய்த நீண்டபயணமும் இறுதியில் 2லட்சம்பேர் பங்கு கொண்ட பேரணியும் அமெரிக்க சரித்திரத்தில் ஒருமுக்கிய திருப்பத்தை ஏற்படுத்தியது. ”கனவொன்று கண்டேன்என அந்த பேரணியின் இறுதியில் லிங்கலின் நினைவுசின்னத்தின் படிகளிலிருந்து அவர் நிகழ்த்திய உரை இன்றளவும் உலகின் மிக சிறந்த உரைகளில் ஒன்றாக வர்ணிக்கப்படுகிறது..”  நான் கண்ட கனவு இது  எனது நான்கு சிறு குழந்தைகளும்  ஒரு நாள்  அவர்களின் தோலின் நிறத்தால் இல்லாமல்  அவர்களது பண்பினாலும் ஆளுமையினாலும்  மதிக்கபடும் அமெரிக்காவில் வாழ்வார்கள்என்று சொன்ன மார்ட்டின்லூதரின் இன்று கனவு பலித்திருக்கிறது. கறுப்பினத்தவர் பலர் இன்று அரசியலில்,.சமூகஅமைப்புகள், கல்வி, கலை, இலக்கியம் என பலதுறைகளிலும்அரசு பணிகளிலும் உயர்ந்த இடத்திலிருக்கிறார்கள். இது சட்டம் மட்டும் செய்த விஷயமில்லை. மக்கள் மனதார ஏற்றுகொண்ட ஒருசமூக புரட்சி. 1964லில் நோபல் பரிசு பெற்ற மார்டின் 1968ல் சுட்டுகொல்லபட்டது சரித்திரத்தின் கருப்பு பக்கம்
.
கடந்த ஆண்டு அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் மார்டின் லூதர் கிங்க்கு ஒரு நினைவுசின்னம்  பிரமாண்டமான சிலையுடன் எழுப்பபட்டிருக்கிறது. முன்னாள் அதிபர்களான ஆப்ராஹாம்லிங்கனுக்கும், ஜெபர்ஸனுக்கும் மட்டுமே (ஜார்ஜ் வாஷிங்டனுக்கு கூட சிலை கிடையாது) அளிக்கபட்டிருக்கும்  மிகப் பெரிய கெளரவம். இது. அவர்களது நினைவுசின்னங்களுக்கு அருகில் நகரின் முக்கியமான இடத்தில் பொட்டாமாக் நதிகரையில் நிறுவப்பட்டிருக்கும் இதை, அமைதிபேரணியின் 48ம் ஆண்டு  நினைவு நாளான்று  அதிபர் ஒபாமாவால் நாட்டுக்கு அர்பணிக்கபட்டது. இந்த பிரமாண்ட சிலை அவரது வரலாற்றுசிறப்புமிக்க பேரணி உரையில் சொல்லபட்ட சில  வாசகங்களின் அடிப்படையில் வடிவமைக்க பட்டிருகிறது.
இந்த பேரணி  நம்பிக்கையின்மை என்ற கடினமான மலைபாறையிலிருந்து யிலிருந்து   வெட்டி எடுக்கபட்ட கல்லாக நம்பிகையளிக்கிறது.” ( "Out of the Mountain of Despair, a Stone of Hope"— for Justice,) "
என்ற அந்த வாசகங்களுக்கு ஏற்ப ஒரு பெரிய வெண்சலவைகள் மலையிலிருந்து வெட்டி எடுக்க்பட்ட பாறையில் நிற்கும் நிலையில்  சிலை வடிக்கபட்டிருகிறது. பிளவுபட்ட ஒரு மலையின் வழியாக சென்று பார்க்கும்படியாக அமைக்கபட்டிருக்கும் 30 அடி உயரசிலை. வளாகத்தின் சுற்று  கருங்கல் சுவர்களில் அவரது புகழ் பெற்ற வாசகங்கள்.. 140 மில்லியன் டாலர்களில் ஆறு ஆண்டு திட்டமாக நிறைவேற்றபட்டிருக்கும் இந்த சிலையை வடித்தவர் புகழ்பெற்ற சீன சிற்பி லீ யெக்ஸின்(Lei Yixin,)  பீகிங் நகர செஞ்சதுக்கதிலிருக்கும் பிரமாண்ட(100அடி) மாசேதுங் சிலையை வடித்தவர். அழியா சின்னங்களான சிலைகளைப்டைக்கும் சிற்பிகள் ஒவியர்களைப்போல தங்கள் படைப்புகளில் கையெழுத்திட மாட்டார்கள். ஆனால் இவர் செய்திருகிறார். சிலையின் பீடத்தில் இவரது கையெழுத்தும் கல்வெட்டாக இடம்பெற்றிருப்பது இந்த கலைஞனுக்கும் அளிக்கபட்டிருக்கும் காலத்தையும்கடந்து நிற்கும் கெளரவம்..




வெள்ளை மாளிகையில் விளக்கேற்ரியவர் இவர்



அமெரிக்க ஐக்கியநாட்டின் வட கோடியில் இருக்கும் ஒரு சின்னஞ்சிறு மாநிலம் மேரிலாண்ட். நாட்டின் தலைநகரமான வாஷிங்டனை ஒரு எல்லையாக கொண்டிருக்கும்  இதில் லான்ஹம் என்ற சின்ன நகரில் இருக்கிறது சிவ-விஷ்ணு கோவில். வாஷிங்டனிலிருந்து பால்ட்டிமோர் நகருக்கும் செல்லும் சாலையில் 12வது மைலில் பளிரென்ற வெண்நிற ராஜகோபுரத்துடன் கம்பீரமாக நிற்கும் இந்த கோவில் அமெரிக்காவில் மிக பிரசித்திபெற்றது. 80களின் இறுதியில் மிக சிறிய அளவில் ஒரு வீட்டில் துவக்க பட்ட இது இன்று அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள் அனைவரும் அறிந்திருக்கும் ஒரு முக்கிய கோவிலாக வளர்ந்திருக்கிறது. நாட்டின் தலைநகருக்கு அருகிலிருப்பதால் இந்தியாவிலிருந்து வரும்  பல அமைச்சர்களும் அரசு அதிகாரிகளும் வருகை தந்திருக்கிறார்கள் நுழைவாயிலில் திறந்து வைக்கபட்டிருக்கும்  அந்த அழகான கதவுகளுக்கு அருகில் ஒருபுறம் கீதா உபதேசம், மறுபுறம் ஞான உபதேசம் சிற்பங்கள்.
உட்பிரகார சுவற்றில் பெருமாள் சன்னதியிருக்கும் பக்கத்தில் தஸாவதாரமும். சிவபருமான் சன்னதியிருக்கும் பக்கத்தில் நாயன்மார்களும் அலங்கரிக்கின்றனர். வினாயகர், ஆண்டாள், ஆஞ்னேயர், அய்யப்பன் என ஒவ்வோரு சன்னதியும் மிகந்த அழகோடு  நிர்மாணிக்கப்பட்டு நேர்த்தியாக பராமபரிக்கபட்டுவருகிறது படு சுத்தமான பளிங்கு தரையில், குளிர்கால மாதலால் உட்கார்ந்து பிரார்த்திக்க வசதியாக கார்பெட்கள் இடப்பட்டிருக்கிறது சன்னதிகளில் ஆப்பிளும், பாதாம் பருப்பும் தான் நைவேத்தியம். அர்ச்சனை, பூஜை கட்டணங்கள் உள்ளூர் பண மதிப்பிலியே. சற்று அதிகம் தான். ஆனால் நம்ம கோவிலுக்குதானே என்ற எண்ணம் எல்லோரிடமும் இருக்கிறது.. திட்டமிட்ட அட்டவணையுடன் எல்லா கால  அபிஷகங்களும், பூஜைகளும் நடைபெறுகிறது. இங்குள்ள ஐயப்பன் அமெரிக்க கோவில்களிலிருக்கும் ஐயப்ப ஸ்வாமிகளில் முதல்வர் என்பதால் பக்கத்து மாநிலங்களிலிருந்து இருமுடிகட்டி விரதமிருந்து வருகிறார்கள். நல்ல குளிரிலும் பல குடும்பங்கள் குழந்தைகளுடன் வந்திருப்பதும் அவர்கள் கோவிலுக்குள் நுழையும் முன் நீரில் கை கால் சுத்தம் செய்துகொள்வதும் பார்க்க சந்தோஷமாகயிருக்கிறது.
கோவிலின் தலைமை அர்ச்சகர்  நாராயணச்சார். கர்நாடக மாநிலத்திலிருந்து வந்திருக்கும் இவர் இங்கு கடந்த 30 ஆண்டுகளாகயிருக்கிறார். தமிழ் தெலுங்கு ஆங்கிலம் பேசும் இவரின் கீழ் 10 அர்ச்சகர்கள் சுழல் முறையில்  எல்லா சன்னதிகளில் பூஜை செய்கிறார்கள். நாராயணச்சார் சம்ஸ்கிருத வித்வான், சம்ஸ்கிருத்திலும் ஆங்கிலத்திலும் ஏம் ஏ பட்டம பெற்றவர். 1999ல் அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகையில் கிருஸ்தமஸ்ஸை போல தீபாவளி பண்டிகையும் கொண்டாட வேண்டும் என்றஅமெரிக்க வாழ் இந்தியர்களின் கோரிக்கையை அமெரிக்க அதிபர் ஒபாமா ஏற்ற போது அதை துவக்கிவைக்க அழைக்கபட்டஒரே இந்து அர்ச்சகர் இவர். அதிபர் ஒபாமா நாட்டின் வளர்ச்சிக்கு அமெரிக்க வாழ் இந்தியர்களின் பங்களிப்பை பாராட்டி பேசிய அந்த நிகழ்ச்சியில் இனி ஆண்டுதோறும் வெள்ளை மாளிகையில் திபாவளி கொண்டாடப்படும் என அறிவித்து அதற்கான அதிபரின் ஆணையையும் வெளியிடும்  அந்த வெள்ளை மாளிகை விழாவில்  புல் சூட்டிலிருக்கும் அத்தனைபேருக்கிடையில் வெண்பஞ்சகச்சத்தில் பளிச்சன்று நெற்றியில் திருமண்ணுடன் நாராயணச்சார் நாராயணச்சார்  தனது கணிரென்ற குரலில்   இருளுலிருந்து ஓளியை நோக்கி   எனற பொருளில் சொல்லபட்ட
அஸ்த்தோமா சத்-ஃகாம்யா
த்மஸோமா ஜோதிஃகம்யா
 असतो मा सद्गमय 
तमसो मा ज्योतिर्गमय 
मृत्योर्मा अमृतं गमय 
 शान्तिः शान्तिः शान्तिः ॥ 
ஸ்லோகத்தை சொல்ல  அதிபர்  ஐந்து முக வெள்ளி விளக்கை மெழுகுதிரியினால் ஏற்றிய பின் திபாவளி விழா துவங்குகிகிறது.. 200 வருடங்களாக கிருத்துவ பாடல்கள் மட்டுமே ஒலித்த வெள்ளை மாளிகையில் நமது உபநிஷத்தின் பொன்னான வரிகளுடன் ஒரு சரித்திர நிகழ்வை பதிவு செய்த பெருமை இவருடையது. ”என் வாழ்வின் சந்தோஷமான தருணம் அது” என்கிறார். இவருக்கு மட்டுமில்லை நமக்கும் தான். தொடர்ந்து கடந்த ஆண்டு  வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாடபட்டிருகிறது. இது இனி ஆண்டு தோறும் தொடரும்.
நமது கோவில்கள் வழிபாட்டுதலங்கள் மட்டுமில்லை.கலாசார வளர்ச்சிக்கு உதவும் இடமாகவுமிருக்க வேண்டும் என்ற நமது மரபிற்கேற்ப இந்த கோவிலை நிர்வகிக்கும் SSVT டிரஸ்ட் அடுத்த தலைமுறைக்கும் இந்த ஆர்வம் தொடர பல பணிகளை செய்துவருகிறார்கள். இந்திய கலைஞர்களின் நிகழ்ச்சிகளை தவிர இசை நடன வகுப்புகளும் அதில் பயின்ற இளைஞர்களின்  நிகழ்ச்சிகளும் மட்டுமில்லாமல்,ஆன்மிக வகுப்புகள், செமினார்கள் என பல நடத்துகிறார்கள். கோவிலை இன்னும் பெரிதாக்க  வளர்ச்சி திட்டங்கள்,நிதி ஆதாரங்களை மேம்படுத்த போன்ற பல்வகை பணிகளை பெரிய நிறுவங்களில்  பதவிகளிலும்,அமெரிக்க அரசு பணிகளிலும் இருக்கும் இதன்  கெளரவ உறுப்பினர்கள் சிறப்பாக செய்கிறார்கள்.
இது போல் அமெரிக்காவின் எல்லா  மாநிலங்களிலும் பல கோவில்கள் (குறைந்த பட்சம் இரண்டு கோவில்களாவதுவது)  சிறப்பாக இயங்குகிறது. சில கால நூற்றாண்டையும்  கடந்தவை. இன்னுமும் புதிய கோவில்கள் எழும்பிக்கொண்டிருக்கின்றன.

2408 society drive
Claymont
DELWARE USA  19703 1760



US1220212

18/12/11

`செய்திகளின் விலை..


`செய்திகளின் விலை..






ஒரு பத்திரிகை   அது வெளியிடும் செய்திகள் எங்கிருந்து, எப்படி கிடத்தது எனபதை மிக பாதுகாப்பாக வைத்துகொள்வார்கள். அதன் ஆசிரியருக்கும் சில சமயம் உரிமையாளர்க்ளுக்கு ம்ட்டுமெ தெரிந்திருக்கும் அதை யாரிடமும் பகிர்ந்து கொள்ளுவதில்லை என்பது உலகம் முழுவதும் கடைபிடிக்கபடும் ஒரு மரபு.
ல்ண்டனிலிருந்து வெளியாகும் நீயூஸ் ஆப் தி வேர்ல்ட் என்ற வாரசெய்திதாள் அது வெளியிடும் திடுக்கிடும் செய்திகளுக்கு பெயர் பெற்றது.ள்ண்டன்குண்டுவெடிப்பு, ஆப்கானி/ஸ்தான் போரில் இறந்த இக்கிலாந்து வீரர்கள்,மேட்ச் பிக்ஸிங் சூதாட்டத்தில் சிக்கிய பாக்கிஸ்தான் கிரிகெட் வீரர்கள் என பல விஷ்யங்களை அம்பலபடுத்திய பத்திரிகையிது. இங்கிலாந்து அர்ச குடும்ப விகாரங்களை கூட அம்பலபடுத்தியிருக்கிறது. பரப்ரபபான செய்திகளினாலும் . கவ்ர்சிகரமான தலைப்புகளினாலும் பிரபலமான இந்த பத்த்ரிகையின் வார விற்பனை 75 லட்சம் பிரதிகள்.  பத்த்ரிகையின்  விற்றபனை அதிகரித்துகொண்டே போனாலும், வெளியான செய்திகளினால் பாதிக்க பட்டவர்கள்  மிக கோபமாகயிருந்தனர். பத்திரிகை செய்தி சேகரிப்பதிற்காக தனி மனித உரிமைகளை மீறும் குற்றத்தை செய்கிறது இந்த பத்திரிகை என்ற குற்றசாட்டு  எழுந்தது. லஞ்சம் கொடுக்கபடும் விஷயத்தை லஞ்சம் கொடுத்து தெரிந்து கொள்வது எப்படி பத்த்ரிகை தருமாகும் என்று எழுந்தகேள்வி  பிரிட்டிஷ் நாடளுமன்றத்தில்  எதிரொலித்தது. பிரதமர் டேவிட் கேமரூன் விசாரணைக்கு உத்தரவிட்டார்.  -தொலைபேசி ஒட்டுகேட்பதிலிருந்து, பெரிய இடஙகளின் உதவியாளருக்ளுக்கு மாதசம்பளம் கொடுப்பதுவரை பல தப்பு காரியங்களை பல ஆண்டுகளாக செய்து அதற்காக போலிசுக்கும், அதிகாரிகளுக்கும் அரசியல் வாதிகளுக்கும் கொடுத்த லஞ்சமாக 7000 கோடி ரூபாய்கள் வரை செலவழித்திருக்கிறது இந்த பத்திரிகை- என்று விசாரணை அதிகாரியின் அதிர்ச்சி அறிக்கை இப்போது வெளியாகியிருக்கிறது.
பத்திரிகையின் ஆசிரியராக 2003 முதல் 2007 வரை இருந்தவர் ஆண்டிகவ்ல்ஸன். இவர் கடந்தஆண்டுவரை பிரதமரின் தகவல் தொடர்பு அதிகாரியாக பணியாற்றியவர். இவரும் ஒரு முன்னாள் நிருபரும் கைது செய்யபட்டிருகிறார்கள்.
 பிரச்னை பெரிதாகவே அதை எதிர்கொண்டு பத்திரிகையின் ரகசிய தொடர்புகள் வெளியாவதை விட எளிதான வழி பத்திரிகையை மூடுவிடுது என அதன் உரிமையளார் ரூபர்ட் முர்டோச் முடிவு செய்து உடனடியாக செயல் படுத்தியும்விட்டார்.  இவர் உலகம் முழுவதும் இருக்கும் பல பத்திரிகைகள், டிவி சானல்கள், ரேடியோ நிலையங்களின் அதிபராகயிருக்கும் மீடியா சக்ரவர்த்தி. இன்று 168 வயதாகும் இந்த பாரமபரிய பத்திரிகையை 1969ல் வாங்கி அதிலிருந்து  ஆண்டு தோறும் விற்பனையில் சாதனை படைத்தகொண்டிருந்தவர். இவரது அதிரடி முடிவு அதன் கோடிக்கண்கான வாசகர்களுக்கும், அதன் 300 உழியர்களுக்கும் பெரிய அதிர்ச்சி. வெளியான செய்திகளுகாக தன்னையே விலையாக தந்த இந்த பத்திரிகை தனது 8674 வது பதிப்பாக தனது கடைசி இதழை  தாங்க்யூ & குட்பை என்ற கொட்டை எழுத்துகளில் முழு முதல் பக்கத்துடன் உள்ளே பத்திரிகை தோன்றி வளந்த கதையை படஙகளுடன்வெளியிட்டயிருக்கிறது.


சென்னையை கலக்கிய ஹிலாரி கிளிண்டன்





சென்னையை கலக்கிய ஹிலாரி  கிளிண்டன் 

அமெரிக்க அதிபரின் வெளியுறவு கொளகைகளை வகுப்பதிலும் வழி நடத்துவதிலும் மிக முக்கிய பணியாற்றுபவர் அமெரிக்க வெளியுறவு செயலர். முன்னாள் அமெரிக்க அதிபரின் மனைவி. செனட்டர், அதிபர் வேட்பாளருக்கு  தேர்தலில் உள்கட்சி தேர்தலில் ஒமாவுடன் போட்டியயிட்ட   அரசியல்வாதி  என்று பல முகங்களை கொண்ட ஹிலாரி கிண்டன். இப்போது அந்த பதவியிலிருப்பவர்.  இந்தமுறை இந்தியபயணத்தில் அவர் வர விருபியது சென்னை.  இதுவரை இந்த பத்வியிலிருந்தவர்கள் சென்னைக்கு வந்தலில்லை. அமெரிக்க  துணை அதிபரும் அமைசர்களும்  மட்டும் பயன்படுத்தும் அமெரிக்க விமானப்படையின்  விசேஷ போயிங் விமானத்தில் ஐந்து பெண அதிகாரிகள் உள்ளிட்ட 19 பாதுகாப்பு படையினர், 2 மோப்ப நாய்கள்.  10 பத்திரிகையளார்கள், 5 அரசு அதிகாரிகளுடன்   டில்லியிலிருந்து வந்து விமான் நிலையத்தில்  வந்து இறங்கியவுடன் நேரே பங்குகொள்ள வேண்டிய நிகழச்சிகளுக்கு  சென்றார். பரபரவென்று  ௪ மணிநேரத்தில்  ௪ விழாக்களில் பங்கு கொண்டு கலக்கினார். கருநீலசூட்டில் கருப்புகண்ணாடி, கையில் சின்ன ஸ்கேனர், காலரில் மைக் என அவர் கூடவே வந்த ” “மென் இன் பிளாக்“பாதுகாப்புபடைக்கு எந்த வகையிலும் சளைத்தவர்கள் இல்லை என்று காட்டியது  நமது சென்னை போலீசின் சிறப்பு விஐபி பாதுகாப்பு படை. 18 கார்கள் பவனி வந்தாலும் நகரில் எந்த இடத்திலும் போக்குவரத்து நிறுத்தப்படாமல் ஒரு அசாம்பவிதமும் இல்லாமல் படு திறமியாக சமாளித்தார்கள், ஹிலாரி கலந்துகொண்ட நிகழச்சிகளின் ஒரு நேரடி ரிபோர்ட்.
                         ***********

கோட்டுர்புரத்தில் கலைஞரின் கனவு கட்டிடங்களில் ஒன்றான அண்ணா நூலகத்தின் ஆடிட்டோரியத்தில் தூதரகத்தினரால் விசேஷமாக அழைக்கபட்ட நகரின் பிரமுகர்கள்,. பேராசியர்கள் மாணவர்கள்  என 700க்கும் மேற்பட்டவ்ர்கள் கலந்த கொண்ட கூட்டம் முதல்நிகழ்ச்சி.  பாதுகாப்பு காரணத்தினால் முன்னாதாக வரச் சொல்லியிருந்ததால் வந்து  ஒரு மணி நேரம் பொறுமையுடன் காத்திருந்த கூட்டத்தில் கண்ணில் பட்டவர்கள்.    கார்திக்சிதம்பரம், பூங்கோதை ஆலடிஅருணாஆற்காட் இளவரசர், சுதாரகுநாதன்,  கமலஹாசன் கெளதமி.  வெள்ளை பேண்ட், வெள்ளை ஷூ, நீல பூக்கள் போட்ட பட்டு புஷ்கோட்  அணிந்து ஹிலாரி மேடை ஏறி அமெரிக்க ஆக்ஸெண்ட்ட்டில் “வணக்கம்””’’’”“ என்றவுடன் அரங்கம் கைதட்டலில் அதிர்ந்தது.
மேடைக்கு ஹிலாரியை அழைத்து வந்தவர் ஒரு நிமிடத்தில் தன் வரவேற்பை முடித்து அமர்ந்துவிட்டார்.  அவரை பலருக்கு யாரென்று தெரியவில்லை. கடந்த 18 ஆண்டுகளில் இந்தியா எப்படி சாதித்து காட்டமுடியும் என்பதற்கு  தமிழ் நாடு மிக சிறந்த முன் உதாரணமாக இருப்பது கண்டுவியந்து போன நான் இம்முறை இங்குவர விரும்பினேன் என்று துவக்கி 40 நிமிடம் ஹிலாரி பேசினார்.பேச்சின் நடுவே  இந்த நூலுகத்தின் தலமை நூலகருக்கும் அமெரிக்காவிற்கும் ஒரு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த தொடர்பு இருபதாக குறிபிட்டுவிட்டு அவரை பார்த்து புன்கைத்தார். விழாவிற்கு பின்னர் அவரை சந்தித்ததில் தெரிந்து கொண்டவிஷயம் நூலகர் நரேஷ் 2005ல் கடலூர் மாவட்டத்தின் கல்வி அதிகாரியாக பணியாற்றிய போது  சூனாமியால் பதிக்கபட்ட பள்ளி குழந்தைகளுக்கு படிப்பை தொடர              விசேஷ ஏற்பாடுகளை வெற்றிகரமாக் செய்த அதிகாரி எனபதையும் அபோது வந்த அதிபர் கிளீண்டனால் பராட்டபட்டவர் எனபதையும்  “தூதரக அதிகாரிகள் என்னை பற்றி சொல்லியிருக்கலாம்.. அதைதிருமதி ஹிலாரி குறிப்பிட்டது சந்தோஷமாகயிருகிறது.” “ என்றார் இபோது கல்வித்துறையின் இணை டைரக்டராகவும்  நூலக தலமைக்கும் பொறுப்பேற்றிருக்கும் நரேஷ்
 கூட்டம் முடிந்ததும்  கோட்டையில் அம்மாவை சந்திக்க புறப்பட்டார் ஹில்லாரி.  வெளியே நம் காதில் விழுந்த கமெண்ட்  “ அருமையான ஸ்பீச: ” “புதிய விஷயம் ஒன்றும் இல்லை” “: போன்ற  மாணவர்களின்.  பல விதமாக கமெண்ட்களுக்கிடையே பேசப்பட்ட ஒரு விஷயம் ஏன் கேள்விகள் அனுமதிக்க் படவில்லை? ..

                .
                                                                             *************


தெனிந்தியாவின் பல  நகர்புற,கிராமபஞ்சாயத்து பெண்தலைவர்கள், சுய உதவிகுழுகளின் தலைவிகள் போன்ற ஆசிரியயைகள் போன்ற உழைக்கும் மகிளிர் அணிகளின் கூட்டமைப்பின் தலைமையக்ம் சென்ன்னையிலிருக்கிறது. கோட்டயில் அம்மாவை சந்தித்தபின் ஹிலாரிகிளிண்டன் கலந்த கொண்ட கூட்டம் இவர்களுடையது.  மேடை ஏறியவுனயே  என் நல்ல நணபரும் உங்கள் எல்லோருடைய நண்பருமான ஜெயா விற்கு இங்கு வந்தறகு நன்றி சொல்லவேண்டும். என துவக்கி 1978லிருந்து உங்கள் அமைப்பு செய்துவரும் நல்ல பணிகளையும் 700லிருந்து இன்று ப்ல லட்சமாக வளர்ந்துவருவதை நான் வியந்து பார்த்து கொண்டிருகிறேன் என்று சொல்லி  விரைவில் ஒரு பெரிய அமெரிக்க நிதி நிறுவனம் உங்களுக்கு தொடர்ந்த  பயிற்சி அளிக்க  ஏற்பாடுகளை செய்யபோகிறது என்ற தகவலையும் அறிவித்தார். நீங்கள் பின்பற்ற  உங்களது தலைவியை விட வேறு எந்த ரோல்மாடலும் வேண்டாம் என்று புகழந்து   எங்கே அவர்? ஜெயா கம். கம் ஹியர் என தன்னருகில் அழைத்து நிறுத்திகொண்டார். கலந்து கொண்டவர்களில் எத்தனைபேருக்கு ஹில்லாரியின் அமெரிக்க ஆங்கிலம் புரிந்ததோ ஆனால்  ஒவொருமுறை பர்ரட்டபடும்போது கைதட்டி மகிழந்தார்கள்.  இந்த அமைப்பின் தலவர் திரும்தி ஜெயா அருணாசலம்  2005  நாட்டின் பொருளாதார வளர்ச்சிகாக பாடுபடும் தலவர்களுக்கு வழங்கபடும் குளோபல் லீடர்ஷிப்  விருதுபெற்றவர். தனிபட்ட முறையிலும் ஹிலாரி கிளிண்டனை அறிந்தவர். விழாவில் பங்கேறகாமல் ஆபீஸில் பணியிலிருந்தவர்களையும்  அருகில் சென்று வாழ்த்திவிட்டு கலாஷேத்திராவில் அடுத்த நிகழச்சிக்கு புறபட்டார்,

                                    ********
 மேடை, நாற்காலி, மாலை, பேனர், மைக் பிகாசமான விளக்குகள் எதுவும் இல்லாமல்  மிக குறைந்த அழைப்பாளார்களுடன் கலாஷேத்திராவின்  நிகழ்ச்சிகள்.  ஹில்லாரி வரும் முன்னே வந்த பாதுகாப்பு அதிகாரிகள். இடத்தை மட்டுமில்லாமல் நடனத்திற்கு தயாராக் இருந்தவர்களையும் சோதித்தனர். கலாஷேத்திராவின் மையப்பகுதியில் பதம புஷ்கரணி என்ற அல்லி த்டாகத்தின் அருகில் பெரிய ஆலமரம். படர்ந்து வளரும் அதன் விழுதுகள்  சீராக்கபட்டு  ஒரு பந்தல் இடபட்ட கூடம் போல  அமைந்திருக்கும். அதன். தரை சிமிண்ட் தளமிடபட்டிருக்கும். பக்கத்தில் சின்ன மேடையில் வினாயகர் இந்த ஆலமரத்தின் அடியில் தான்  நடன வகுப்புகள் நடக்கும். அன்று இதமான வெளிச்சம் தரும் விளக்குகளுடன் அந்த வகுப்பறையில்   ஹிலாரிகிளிண்டனுக்கான நடன  நிகழ்ச்சிகள் நடத்தபட்டன, கலாஷேத்திரா அமைப்பின் தலைவரின் அழகான  சிறிய வரவேற்பு உரையில் ரதன சுருக்கமாக கலாஷேத்திரா பற்றியும் நிறுவனர் ருக்மணி தேவி பற்றியும் குறிபிட்டார். பின்னர்  கதக்களியும் மோகினியாட்டமும் இணைந்த ஒரு நடனம் தொடர்ந்து 10 நிமிட பரதநாட்டியம். 20 நிமிடத்தில் கச்சதிமாக முடிந்தது கலைநிகழ்ச்சி. ஹிலாரியுடன் வந்த ஒரு அமெரிக்க அதைகாரி பிர்மாதமாக் தலையாட்டி ரசித்துகொண்டிருந்தார். மிகுந்த் கவனத்துடன் நடனைத்தை ரசித்து பார்த்த ஹில்லாரி எழுந்துவந்து கலைஞர்களை ” “இனியஇசை, அற்புதமான நட்டுவாங்கம், அழகிய நடனம் “ என கைகூப்பி  பராட்டி, சற்று தள்ளி அரை இருட்டில் அமர்ந்திருந்த வாத்திய கலைஞர்களையும் கூப்பிட்டு பராட்டினார்.

ஒரு இந்திய நடனத்தை இன்ரு தான் இவ்வளவு அருகிலிருந்து பார்கிறேன். என்று சொல்லி எல்லோரும் படம் எடுத்துகொண்டார்களா என உறுதி செய்துகொண்ட பின்னரே இடத்திலிருந்து நகர்ந்தார்.  ” “இன்று ஆடிய தில்லாவின் ஜதிஸ்வரம் ருக்மணி தேவியியால் உருவாக்கபட்டதுஎங்களது 75ஆம் ஆண்டில் இதுபோன்ற முக்கிய தருணத்தில் அதை நடனமாக்கியதில் எங்களுக்கு மகிழ்ச்சி “ என்று சொன்ன லீலா ஸம்சன் .   “தொடர்ந்து மூடிய அரங்களிலும் அறைகளிலும் நடந்த கூட்டங்களிலிருந்து மாறுதலான இதை நான் மிகவும் ரசித்தேன்” “ என ஹிலாரி அவரிடம் சொன்னதை சந்தோஷத்துடன் நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.. கலாஷேத்திராவில் யாரகயிருந்தாலும் வகுப்புக்குள் மட்டுமில்லை  இசை  நடன நிகழச்சிகள் பார்க்க கூட காலணியை கழட்டிய பின் தான் அமரவேண்டும்  என்பது விதி. ஆனால் ஆலமரவகுப்பில்  அவ்வளவு  ஷூககள்,  ஹைஹீல் ஷுக்கள் அணிந்தவர்களைப்  பார்த்தது சற்று நெருடலாயிருந்தது.