27/5/14

மிஸ்டர் எடிட்டர்

பெ. கருணாகரன் FB லிருந்து

காகிதப் படகில் சாகசப் பயணம்
மிஸ்டர் எடிட்டர்
புதிய தலைமுறை முதல் இதழ் வெளிவந்த சமயம். அப்போது நிறைய வாசகர் கடிதங்கள் அலுவலகத்துக்கு வந்திருந்தன. அவற்றைப் படித்துக் கொண்டிருந்தபோது, அதில் ஒரு கடிதம். உங்கள் இதழின் பெயர் புதிய தலைமுறை’. இளைஞர்களுக்கான இதழ் என்று வேறு சொல்கிறீர்கள். ஆனால், அதன் ஆசிரியர் மாலன். அவர் என்ன புதிய தலைமுறையா? இளைஞரா?’ என்று அந்தக் கடிதத்தில் கேட்டிருந்தார் ஒரு வாசகர். மொட்டைக் கடிதமாக இருந்திருந்தால் தூக்கி எறிந்திருப்போம். எழுதியவர் ஊர் திருவண்ணாமலை என்று நினைவு. முகவரியுடன் தொலைபேசி எண்ணும் கொடுத்திருந்தார்.
அந்த எண்ணில் தொடர்பு கொண்டு அவரிடம் பேசினேன். புதிய தலைமுறைஎன்பது வயது சார்ந்ததல்ல. புதிய சிந்தனை சார்ந்தது. வயதுக்கும் புதிய சிந்தனைக்கும் சம்பந்தமில்லை. அனுபவப் பின்புலத்துடன் வெளிப்படும் புதிய சிந்தனைகள் வீரியமுள்ளவை. சமூக அக்கறையுடன் சிந்திக்கும், புதிய மாற்றங்களைக் கொண்டு வர உழைக்கும், துடிக்கும் யாரும் புதிய தலைமுறைதான். அந்த வகையில் அப்துல் கலாம் புதிய தலைமுறைதான். மாலனும் புதிய தலைமுறைதான்.
அடுத்து, இளமைக்கும் வயதுக்கும் சம்பந்தமில்லை. வயது என்பது உடலின் முதிர்ச்சி. இளமை என்பது மனதின் எழுச்சி. மனயெழுச்சி உள்ள யாரும் இளைஞர்தான். எந்தச் சமூக அக்கறையும் இல்லாமல் மன எழுச்சியில்லாமல் இன்று டாஸ்மாக்கில் சரிந்து கிடக்கும் 20 வயதுக்காரன் கூட முதியவர்தான்...என்றேன். நான் கூறியவற்றை அந்த வாசகரால் மறுக்க முடியவில்லை. ஏற்றுக் கொண்டார். மாலன் சாரைப் பற்றி எழுதத் தொடங்கும்போது, அந்த திருவண்ணாமலை வாசகரிடம் கூறியதுதான் நினைவுக்கு வருகிறது. அவர் ஒரு புதிய தலைமுறைஇளைஞர்.
எல்லோருக்கும் வடக்குப் பக்க வாசல் என்றால் அவரது வாசல் தெற்குப் பக்கமாகவே இருக்கும். அமைந்த பாதையில் செல்வதை விட, நமக்கான பாதையை நாமே புதிதாய் அமைத்து அதில் பயணப்பட வேண்டும் என்பதே அவரது சிந்தனைப் போக்காக இருக்க வேண்டும் என்று புரிந்து கொள்கிறேன். ஒரு ஐடியாவைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தால், அதை எப்படி பிரசென்ட் செய்ய வேண்டும் என்பதை முதலில் விவரிப்பார். அவர் சொல்லும்போதே இந்த இதழ் இதனை இப்படி அணுகும். அநத இதழ் அப்படி எழுதும் என்று கூறுபவர், ‘புதிய தலைமுறையில் அது எப்படி எழுதப்பட வேண்டும் என்றும் மற்றவர்களிடமிருந்து எப்படி வித்தியாசப்படுத்த வேண்டும் என்று விரியும் அவரது வழிகாட்டல்கள்.
புதிய தலைமுறையில் வேலைக்குச் சேர்ந்த புதிதில் நான் கொஞ்சம் திணறித்தான் போனேன். காரணம், நான் வணிகப் பத்திரிகைச் சூழலில் வளர்ந்து வந்தவன். ஆனால், ‘புதிய தலைமுறையின் உள்ளடக்கமோ வேறு. இங்கு சினிமா இல்லை. ஆன்மீகம் இல்லை. அரசியல் இல்லை. வம்புகள் இல்லை.
இந்நிலையில் என் பார்வை வேறு. அவரது பார்வை வேறு. செய்திகளின் தேர்வு முறையிலும் இருவரும் இரு துருவங்களே. நான் புதிய தலைமுறையில் சேர்ந்தபோது, பெங்குவினைத் தூக்கிச் சகாராவில் போட்டது போலவோ, அல்லது, ஒட்டகத்தைக் கட்டி இழுத்து வந்து அண்டார்டிக்காவில் விட்டது போலவோ, தட்ப வெப்பநிலை மாறி தவித்தது உண்மை. இந்தப் புரிந்து கொள்ளலில் இருந்த இடைவெளியில் அவரை விட்டு மனதளவில் நான் வெகுதூரம் விலகி நின்றேன். முதல் இதழ் வெளிவந்த பிறகுதான் நான் புதிய தலைமுறையின் உள்ளடக்கத்தைப் புரிந்து கொண்டேன். அவரும் என்னைப் புரிந்து கொண்டார்.
புதிய தலைமுறையில் நான் எழுதிய முதல் கட்டுரை, ‘CAT’ நுழைவுத் தேர்வு பற்றியது. எடிட்டோரியல் மீட்டிங்கில் கர்ணா... நீங்க கேட் எக்ஸாம் பற்றி எழுதிடுங்க...என்று அவர் கூலாகச் சொன்னவும் திகைத்து விட்டேன். கேட் நுழைவுத் தேர்வா? நான் கேள்விப்பட்டதே இல்லையே... எனக்குப் பூனையைப் பற்றித் தானே தெரியும். ஙேஎன்று விழித்தேன். என்றாலும் என்னை நான் தைரியப்படுத்திக் கொண்டு அது குறித்த தகவல்களைத் திரட்டினேன். அந்தக் கட்டுரை அச்சாகி இதழில் வந்தபோது, ஏராளமான பாராட்டுக் கடிதங்கள் வந்தன. ஒரு பள்ளி நிர்வாகி அந்தக் கட்டுரையை வெட்டி தங்கள் பள்ளி நோட்டீஸ் போர்டில் ஒட்டியிருப்பதாகக் குறிப்பிட்டிருந்தார். இதற்கு முன் எவ்வளவோ கதைகள், கட்டுரைகள், கவிதைகள் எழுதி அதற்கு வாசகரிடமிருந்து நிறைய பாராட்டுக் கடிதங்கள் வந்தாலும் அந்தக் கடிதம் மறக்க முடியாதது. அதன் பிறகு ஸ்ரெஸ் இன்டர்வியூ, ஸ்காலர்ஷிப், எமப்ளாய்மெண்ட் என்று புதிது புதிதாக எழுதினேன். என் எழுத்தின் நிறமும் தேர்வுகளும் கொஞ்ச கொஞ்சமாய் மாறத் தொடங்கின. அதற்குக் காரணம் மாலன் என்றால் மிகையல்ல.
அடுத்த தலைமுறையைப் பற்றியே எப்போதும் அவரது சிந்தனைகள் இருக்கும். எந்த ஒரு சமூக, அரசியல் நிகழ்விலும் இளைய தலைமுறையின் பார்வை என்ன என்று தெரிந்து கொள்வதிலேயே அவரது ஆர்வம் இருக்கும். தகவல் தொழில் நுட்ப வளர்ச்சி, கண்டுபிடிப்பு, வேலை வாய்ப்பு, கல்வி மேம்பாடு என்று அனைத்திலும் புதிதாய் அறிமுகமாகும் விஷயங்களையே முன்னிறுத்தி புதிய தலைமுறைஇருக்க வேண்டும் என்பதே அவரது கனவு.
பொருளாதாரத்தில் பின்தங்கிய, போதிய பின்புலம் இல்லாதவர்களை முன்னுக்குக் கொண்டுவர வேண்டும் என்பதில் துடிப்புள்ளவர். புதிய தலைமுறையில் பத்திரிகைத் துறையில் நுழைய விரும்புகிறவர்களுக்காகப் பயிற்சிப் பத்திரிகையாளர் திட்டம் உண்டு. இளைஞர்களைத் தேர்வு செய்து, நிருபர்களாக ஓர் ஆண்டு பயிற்சி அளிக்கிறோம். இந்த நிருபர்களைத் தேர்ந்தெடுப்பதில் அவர் கையாளும் அணுகுமுறை வித்தியாசமானது. முதல் சுற்றில் விண்ணப்பித்தவரின் அறிவாற்றல், மொழியாற்றல் சோதிக்கப்படும். அதில் தேறியவர்களை நேர்காணல் செய்வோம். இந்த நேர்காணலில் அவரது சுற்றுச்சூழல் பரிசீலிக்கப்படும். கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை. அடுத்து அவரது குடும்பப் பின்னணி ஆராயப்படும். தந்தையை இழந்தவர், வறுமையில் உழல்பவர், டீக்கடைக்காரரின் மகன் என்று சமூகத்தின் அடித்தட்டிலிருந்தவர்களே பயிற்சிப் பத்திரிகையாளர் திட்டத்தில் தேர்வானவர்கள். இங்கு ஜாதி கேட்கப்படாமலே, ஒரு சமூக நீதியை நடைமுறைப்படுத்தினார் மாலன். அந்தப் பயிற்சிப் பத்திரிகையாளர்களில் பலர் இன்று எங்கள் புதிய தலைமுறையின் விழுதுகளாய் வளர்ந்து நிற்கிறார்கள்.
பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களை மேம்படுத்தும் இன்னொரு திட்டம்தான் இலவச உயர் கல்வித் திட்டம். இந்தத் திட்டத்தின் மூலம் நூற்றுக்கணக்கான மாணவர்கள் படித்து வெளியேறி பலர் நல்ல பணியிலும் இருக்கிறார்கள் என்பதில் எனக்கும் பெருமைதான்.
தொடர்ந்து பத்திரிகைகளில் எழுதியவர்களே எழுதாமல் புதிது புதிதாய் பலருக்கும் வாய்ப்பளிக்கபப்பட வேண்டும் என்பதும் அவரது விருப்பம். திசைகள் இதழில் அப்படி வாய்ப்பளிக்கப்பட்ட இளைஞர்கள் பலர் பத்திரிகைத் துறையில் பிரபலமானது கடந்த காலம். வைத்த கன்றுகள் விருட்சங்கள் ஆனதைக் கண்டு தோட்டக்காரர்கள் ஓய்ந்து விடுவதில்லை. அவர்கள் தொடர்ந்து அடுத்த தலைமுறைக்கான புதிய கன்றுகளை வளர்க்கும் முயற்சியில் இறங்கி விடுவார்கள். மாலனும் அப்படிப்பட்ட தோட்டக்காரர்தான். இப்போது கூட சென்னைப் புறநகர்ப் பகுதியின் குடிசைப் பகுதிகளைச் சேர்ந்த ஏழைக் குழந்தைகளுக்காக ‘SLUM KIDS JOURNALIST‘ பயிற்சித் திட்டம் நடைமுறையில் உள்ளது. அதன்படி குடிசைப் பகுதிகளைச் சேர்ந்த குழந்தைகளை விட்டே அவர்கள் பகுதியைப் பற்றியும் அவர்களது பிரச்சினைகள், எதிர்காலக் கனவுகள் பற்றியும் எழுதச் சொல்லி புதிய தலைமுறையில் வெளியிட்டு வருகிறோம். பள்ளி மாணவனுக்கும் பத்திரிகையாள மனோபாவம் வரவேண்டும் என்பதே அதன் நோக்கம். இது அந்தக் குழந்தைகளின் எழுத்துத் திறமை, சமூக அக்கறையை மேம்படுத்துவதோடு, குழந்தைகளின் மனோவியலை புரிந்து கொள்ளவும் நமக்கு வாய்ப்பாகிறது.
வறுமை என்பது சாபமல்ல. அது ஒரு நிலை. அதை வெல்ல வேண்டும் என்கிற முயற்சியும் துடிப்பும் இருந்தால் அவர்களுக்குக் கரம் கொடுத்துத் தூக்கி விட அவர் என்றும் தயங்கியதே இல்லை. பத்திரிகை சாராமல் ஆதரவற்றோர் இல்லங்களில் பல குழந்தைகளை இவர் தத்தெடுத்து அவர்களுக்கான கல்விச் செலவுகளை ஏற்றுக் கொண்டிருக்கிறார் என்பது பலரும் அறிந்திராத தகவல்.
அவர் எப்போதாவது ஆசிரியர் குழுவினர் ரிலாக்ஸ் செய்து கொள்ள மாமல்லபுரம் போன்ற இடங்களுக்குச் சென்று வரலாம் என்று கூறினால் நான் டென்ஷன் ஆகி விடுவேன். ஏனென்றால் அங்கேயும்போய் எடிட்டோரியல் மீட்டிங்தான் நடக்கும். தங்கள் பணி அனுபவம், பத்திரிகையில் இன்னும் என்னென்ன மாற்றங்கள் கொண்டு வரலாம்? லே அவுட் எப்படி இம்ப்ரூவ் செய்யலாம் என்கிற ஆலோசனைக் கூட்டமாகவே அது அமையும். பலர் ரிலாக்ஸ் செய்து கொள்வதென்பது ரூம் போடுவது, சினிமா பார்ப்பது, தூங்குவது என்றுதான் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். என்னைப் பொறுத்த வரை ஓய்வு என்பது ஒரு வேலை அலுப்பேற்படுத்தினால், இன்னொரு வேலையைச் செய்வதுதான்...என்பார். அது உண்மைதான். அவரை ஓய்வில் பார்ப்பது அரிது. இதழியல், இலக்கியம், அரசியல், பெண்ணியம், சுற்றுச் சூழல் என்று பல்வேறு தளங்களிலும் இயங்கிக் கொண்டே இருப்பார். அலுவலகத்தில் மட்டுமின்றி வீட்டிலிருந்தும் கட்டுரைகளை அனுப்புவார். ஞாயிற்றுக்கிழமைகளிலும் இது தொடரும். இவர் என்ன இயந்திரமா என்று கூட சில நேரங்களில் தோன்றுவதுண்டு. இப்போது யோசித்துப் பார்க்கும்போது, அவர் பத்திரிகைத் தொழிலை எந்த அளவுக்கு நேசிக்கிறார் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.
பெண்களின் மீது மிகுந்த அக்கறை உள்ளவர். வீட்டில் குடும்பத் தலைவியாகவும் அலுவலகத்தில ஓர் ஊழியையாகவும் இரு வேறு பாத்திரங்களை வகிக்கும் அவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படக் கூடாது என்று நினைப்பார். அலுவலகத்தில் தங்களுக்கு நேரும் பணிச்சூழல் பிரச்சினைகளை அவரிடம் தாராளமாகப் பகிர்ந்து கொள்ளலாம். மகப்பேறு அடைந்த பெண்கள் அலுவலகம் வருவதில் டைம் அட்ஜஸ்ட் மெண்ட், மகப்பேறு விடுமுறைக் கால நீட்டிப்பு என்று சலுகைகள் உண்டு. ஒரு பெண் ஊழியருக்குத் தன் கைக்குழந்தையைப் பார்த்துக் கொள்ள ஆள் இல்லை. அலுவலகத்துக்குக் குழந்தையைக் கூட்டி வந்து இரண்டு தினங்கள் வைத்துக் கொள்ளவா என்று கேட்டபோது, அதை அனுமதித்த அவர், யார் வேண்டுமானாலும் குழந்தையை அழைத்து வந்து அலுவலகத்தில் பார்த்துக் கொள்ளலாம் என்று பொது உத்தரவே போட்டார். அலுவலகத்திலேயே பெண் ஊழியர்களின் குழந்தைகளைப் பராமரிக்க ஒரு பராமரிப்பு இல்லம் அமைக்க வேண்டும் என்பது அவரது கனவு. பெண்களின் மீதான பிற்போக்குத்தனமான திணிப்புகளை அவர் கடுமையாக விமர்சிப்பார். பெண்களை ஒரு மலர் என்றோ, மான் என்றோ வர்ணித்தால் கடும் கோபப்படுவார். பெண் என்பவள் ஒரு மனுஷி. அவளை ஒரு சக மனுஷியாகவே பாருங்கள் என்பார். எதையும் அவருக்கு ரொமன்டைஸ் செய்யக் கூடாது.
தனது சகாக்களுக்கு வெளியிலிருந்து விருதுகள் கிடைத்தால் மிகவும் மகிழ்வார். நான் தமிழ்ப் பேராய விருது வென்ற தகவலை அவரிடம் சொன்னபோது, அவர் அமெரிக்கா செல்வதற்காக விமான நிலையத்தில் இருந்தார். ‘‘அதைப் பற்றிய தகவலை இந்த இதழிலேயே வைத்து விடுங்கள்...என்றபோது, அந்த விருதை அவரே வாங்கி விட்டதான மகிழ்ச்சி அவர் குரலில். பொன். தனசேகரன் லால்டி மீடியா விருது, வாங்கியபோதும், யுவகிருஷ்ணா, அதிஷா இருவரும் சுஜாதா விருது வாங்கியபோதும், கீதா SCARF விருது வாங்கியபோதும் அது குறித்த தகவல்களை பத்திரிகையில் இடம் பெறச் செய்தார்.
ஒரு பத்திரிகையில் வேலை செய்பவர் இன்னொரு பத்திரிகையில் எழுதக் கூடாது என்பது ஒரு பொதுவிதி. ஆனால், ‘புதிய தலைமுறைஆசிரியர்க் குழுவினருக்கு அந்த விதி இல்லை. எங்கு வேண்டுமானாலும் எழுதலாம். முன் கூட்டி ஒரு வார்த்தை அவரிடம் கூறிவிட்டால் போதும். சமுக வலைத்தளங்களில் எழுத பல இதழ்களில் தடையுண்டு. ஆனால், நாங்கள் சமூக வலைத்தலங்களில் உலாவத் தடையில்லை. சமூக வலைத்தளங்களையும் தகவல் தெரிந்து கொள்ளும் ஒரு களமாகவே அவர் பார்க்கிறார்.
ஒரு பத்திரிகையாளன் எந்தக் கட்சியைம் சார்ந்திருக்கக் கூடாது. ஆனால், இங்கும் அதற்கு விதிவிலக்கு. எந்தக் கட்சியில் வேண்டுமானாலும் இருந்து கொள்ளுங்கள். அது உங்கள் சுதந்திரம். ஆனால், பத்திரிகையில் எழுதும்போது அது வெளிப்படக் கூடாது. எதையும் சகித்துக் கொள்வேன். பத்திரிகையின் பெயரை யாராவது கெடுக்க முயன்றால் அதனைச் சகித்துக் கொள்ள மாட்டேன்என்பார்.
அவரது ஒரே மைனஸாய் நான் பார்க்கும் விஷயம் அவரது கோபம். பணியில் சேர்ந்திலிருந்தே மூன்று மாதங்கள் அவரது கோபத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு மன உளைச்சலுக்கு உள்ளானேன். வேலையை விட்டு விடலாமா என்று கூட தீவிரமாய் ஒரு கட்டத்தில் யோசித்துண்டு. என்றாலும் அப்படி விட்டுவிட மனமில்லை. காரணம், எனக்கிந்த வேலை பிடித்திருந்தது. பணிச்சூழல் பிடித்திருந்தது.
ஒரு நாள் அவருக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பினேன். அதில், அவரது கோபத்தைப் பற்றிக் குறிப்பிட்டு, ‘நீங்கள் ஒரு சாதாரண மனிதராய் இருந்தால், நீங்கள் கோபப்படுவது குறித்து நான் வருத்தப்பட மாட்டேன். ஆனால், குரு ஸ்தானத்தில் இருப்பவர். நாங்கள் உங்களிடம் கற்க வேண்டிய விஷயங்கள் நிறைய. ஆனால், எங்களுக்கு உங்களை நெருங்க கொஞ்சம் அச்சமாக இருக்கிறதே. உங்கள் கோபம் தடுக்கிறதே...என்று அந்த மின்னஞ்சலில் குறிப்பிட்டிருந்தேன்.
அதற்கு அவர் அன்றிரவே பதிலளித்தார். அந்தப் பதில் மின்னஞ்சலில், ‘நான் கோபப்படுகிறேன் எனப் பலர் சொல்லியிருக்கிறார்கள். அதை வெல்ல தொடர்ந்து முயன்று வருகிறேன். கோபத்திற்குப் பயந்து யாரும் என்னோடு பேசாதிருக்க வேண்டாம். தாராளமாக அணுகிப் பேசலாம். விவாதிக்கலாம். தங்கள் தரப்பு நியாயங்களை எடுத்துச் சொல்லலாம். நான் அவற்றை என்றுமே அனுமதிக்க மறுத்ததில்லை
என் கோபம் தனிமனிதர்கள் மீதானதல்ல. நான் எந்த சகாவையும் தனிப்பட திட்டியதில்லை. அவர்களிடம் ஒப்படைத்த பொறுப்பை அவர்கள் சரிவரச் செய்யாது போனால், அதை உரித்த நேரத்தில் செய்யாது போனால், அல்லது அது குறித்து அக்கறையற்று இருந்தால் கோபப்படுவதுண்டு. அதற்கு வேலை கெட்டுப் போகிறதே என்பதுதான் காரணம். திறமைக் குறைவை நான் பொறுத்துக் கொள்வேன். ஆனால் பொறுப்புணர்வற்ற தன்மையை நான் சகிக்க மாட்டேன். காரணம் திறமையை வளர்த்துக் கொள்ள இயலும். ஆனால் பொறுப்பின்மை அக்கறையின்மையால் விளைவது. அது மனோபாவம்.
கடந்த 3 மாதங்களில் நான் எதற்காகவெல்லாம் நம் குழுவினரை கோபித்துக் கொண்டிருக்கிறேன் என எண்ணிப் பாருங்கள். தனிப்பட்ட விதத்தில் எவரையேனும் விமர்சித்திருந்தால் வருந்துகிறேன்.
என்னைப் பொறுத்தவரையில் பத்திரிகையாளன் என்பது ஒரு வேலை அல்ல. ஒரு தொழில். Profession அதைக் குறித்த பெருமிதங்கள் எனக்கு உண்டு. நான் பத்திரிகையாளனானதே அந்தப் பெருமிதத்தால்தான். இது ஒருவன் காசுக்குப் பார்க்கிற வேலை அல்ல என்பது என் எண்ணம். இது வெறும் உடல் உழைப்பு அல்ல. மூளையால் செய்கிற வேலை அல்ல. உடல் மூளை இவற்றுடன் மனமும் இணைந்து வேலை செய்ய வேண்டும். கதை எழுதுவது போல படைப்பு அல்ல. ஆனால், படைப்பாற்றலும் வேண்டும். வேறு எந்தத் தொழிலிலும் இத்தனை அம்சமும் இணைந்தது கிடையாது.
எனவே என் சகாக்கள் இதை ஒரு வேலையாகப் பார்க்காமல் தொழிலாகப் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் எதிர்பார்ப்பு எனக்கு உண்டு. என் கோபத்தைப் பொருட்படுத்த வேண்டாம். எவரும் எப்போதும் என்னிடம் எதையும் பேசலாம்.என்று அந்த மின்னஞ்சலில் அவர் குறிப்பிட்டிருந்தார்.


12/5/14

I AM PROUD OF YOU Maalan

சற்று முன் face bookல்  இதை பார்த்தேன். சந்தோஷத்தை தாண்டிய ஒர் உணர்வு. எல்லோருடனும் பகிர்ந்து கொள்ள விரும்பியதால் சுவடுகளில் பதிகிறேன். பொற்கோவில் கட்டுரையை விடுங்கள் மற்றவர்கல் சொல்லியிருப்பதை பாருங்கள்.
ரமணன்




மாலன் நாராயணன் commented on this.
1984ல் பொற்கோவிலில் ராணுவம் நுழைந்த நேரம். அந்தச் செய்தி பற்றிய பின்னணிகள் அந்த வாரமே வந்துவிட வேண்டும் என ஜீனியர் விகடன் விரும்பியது. நீங்கள் எழுத முடியுமா என போனில் தொடர்பு கொண்டு கேட்டார்கள். “எழுதுகிறேன், எப்போது வேண்டும்?” என்றார்கள். ”இப்போதே” என்றார்கள். ” என்ன விளையாடறீங்களா?” என்றேன். ”இல்ல சார் நிஜமாதான், நீங்க கொஞ்சம் உடனே ஆபீசிற்கு வரமுடியுமா என்றார் சுதாங்கன். மாலை இரவை நெருங்கிக் கொண்டிருந்தது. அப்போது ஜூவி ஆ.வி அலுவலகத்திற்கு வெளியே தனியாய் சோவியத் கலாசார மையத்தின் அருகில் ஒரு வீட்டை அலுவலகமாக்கி இயங்கிக் கொண்டிருந்தது. போனேன். ”இங்க உட்காருங்க சார்’ என்று சுதாங்கன் அவர் உட்கார்ந்திருந்த நாற்காலியிலிருந்து எழுந்து அவரது இடத்தையும் மேசையையும் கொடுத்தார். “சார் அர்ஜண்ட் சார். நிஜமாத்தான் சார். இன்றிரவே அச்சுக்குப் போகணும்சார்” என்றவரின் அடுத்த வரி என்னை திடுக்கிட வைத்தது. “கொஞ்சம் இங்கேயே உட்கார்ந்து எழுதிக் கொடுத்திடுங்க சார்” என்றார். அவர் என்னுடன் திசைகளில் செயலபட்டவர். மறுக்க முடியாத தர்மசங்கடத்தோடு ‘முயற்சிக்கிறேன்” என்று சொன்னேன், அவ்வளவுதான் நியூஸ்பிரிண்ட் காகிதங்கள் என் முன் வைக்கப்பட்டன.மூன்று மணி நேரம் எழுதியிருப்பேன். இடையிடையே சில தகவல்களை சரிபார்த்துக் கொள்ள வேண்டிய புத்தகங்களையும் பத்திரிகைகளையும் தாமதமின்றி சுதாங்கன் கொண்டு வந்து தந்தார்.
முப்பது வருடங்களுக்கு முன் அப்படி உருவானது இந்தப் ’பொற்கோவில் ரணகளமான கதை’ அன்று எழுத கணினி இல்லை. தேட கூகுள் இல்லை. மின்னஞசல் இல்லை. ஆனால் எங்கள் முன் சவால்கள் இருந்தன.
இதன் அச்சுப் பிரதி கூட இன்று என்னிடம் இல்லை. ஆனால் விகடன் லைப்ரரியிலிருந்து Srinivasa Raghavan அவர் பதிவில் வெளியிட்டிருந்தார். அவருக்கும் விகடனுக்கும் நன்றி. பழைய நினைவுகளைக் கிளறியதற்க்காக ஸ்ரீநிவாச ராகவனுக்குக் கூடுதலாக நன்றி
தமிழகம், இலங்கை, Read online tamil news, Vikatan, anandavikatan, junior vikatan, aval vikatan, chutti vikatan, sakthi vikatan, nanayam vikatan, motor vikatan, pasumai...
NEWS.VIKATAN.COM
Like ·  · 
  • 37 people like this.
  • மாலன் நாராயணன் Karthikayan Vaiyapuri //epaper, google போன்றவற்றை அப்போதுதான் தொட்டிருப்பீர்கள்// இல்லை. அப்போது e-paperகள் அறிமுகமாகியிருக்கவில்லை ஏனெனில் அப்போது IE explorer உருவாகியிருக்க/அறிமுகமாகியிருக்கவில்லை.என் புராஜெக்ட்டே மின் செய்தித்தாளுக்கு ஒரு முன்வடிவு ...See More
    32 mins · Unlike · 7
  • Pitchumani Sudhangan மாலன் அவர்களால் தான் உடனடியாக எழத முடியும் என்று புதிதாக அங்கு வேலைக்குச் சேர்ந்த நான் ஆசிரியர்களிடம் வலுவாக , மாலன் அவர்களை அழைக்கு முன் வாதிட முடிந்தது என்றால் அதற்கு முன் மாலன் அவர்கள் சாவி வார இதழில் அயல் நாட்டு விவகாரங்களை குழந்தைகளுக்கு கூட புரிய...See More
    18 mins · Like · 3
  • மாலன் நாராயணன் Pitchumani Sudhangan உனக்குள் இருந்த ஒரு பத்திரிகையாளனை உனக்குக் காண்பித்துக் கொடுத்ததைத் தவிர உனக்கு வேறு எதுவும் நான் செய்துவிடவில்லை. உனக்குள் இருக்கும் பத்திரிகையாளனையும் நீதான் எனக்குக் காண்பித்தாய் உன் கையெழுத்துப் பத்திரிகை மூலம்
    15 mins · Like · 2
  • Jayaraman Venkataraman Dindigul நீங்கள் இரண்டு பேரும் மற்றும் பாலகுமாரன் சார், சுஜாதா சாரும் என்னை(யும்) எழுத்தாளனாக்கினார்கள். மாலன் சார் என்னுடைய முதல்கதையை தினமணி கதிரில் வெளியிட்டார். சுஜாதா அவர்கள் குமுதத்தில் ஆசிரியராக இருந்த போது ஒவ்வொருவாரமும் என்னுடைய படைப்புக்கள் ஏதேனும் வந்தது. காந்தளுர் வசந்தகுமாரன் தொடரில் என்னுடைய ஒரு சந்தேகத்திற்கு(?) பதில் சொல்லிவிட்டு தொடரை தொடர்ந்திருப்பார்.... இனிமையான நாட்கள் அவை...
    8 mins · Like · 1

27/4/14

பயணங்கள் முடிவதில்லை.

இது வரை எழுதிய பயணகட்டுரைகளின் தொகுப்பு புத்தகமாக  இந்த தமிழ் புத்தாண்டில் வெளிவந்திருக்கிறது. கவிதாவின் வெளியீடு. வாங்கி படித்துவிட்டு கருத்துச் சொன்னால் சந்தோஷப்படுவேன்.





19/4/14

மெளனம் கலைந்தது….மனைவி இருப்பது தெரிந்தது !



நாடளுமன்றத்தின் 543 சீட்டுகளுக்கு போட்டியிடும் வேட்பாளார்களில் 5 ல் ஒரு பங்கினர் பிரம்மச்சாரிகள் என்கிறது தேர்தல் கமிஷனின் புள்ளிவிபரம். மிக முக்கிய பிரம்மச்சாரிகள் நரேந்திர மோடியும், ராகுல்காந்தியும். இப்போது அதில் ஒன்றை குறைத்து கொள்ள வேண்டும்.  மோடி தனக்கு திருமணமாகியிருக்கிறது என்பதை தனது வேட்பு மனுவுடன் சமர்பித்திருக்கும் பிரமாணபத்திரத்தில் தெரிவித்திருக்கிறார், சீசரின் மனைவி சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவராக இருக்க வேண்டும் என்
று சொல்லபடுவதுண்டு. மோடிக்கு மனைவி இருக்கிறாரா? என்பதே சந்தேகமாகயிருந்த ஒரு விஷயம்..

மோடி பிரம்மச்சாரி இல்லை அவருக்கு ஒரு மனைவி  கிராமத்தில் இருக்கிறார் என அவ்வப்போது  மிடியாக்களில் செய்தி அடிபட்டதுண்டு..  ஆனால் ஒரு முறை கூட மோடி அதை ஏற்றோ, மறுத்தோ பேசியதில்லை. கடந்த தேர்தல்களில் 2001,2002,2007, மற்றும் 2012 தேர்தல்களின்போது  இணைக்கப்படும் பிராமணப் பத்திரத்தில்  மனைவியின் பெயர் என்ற பகுதியில் வெற்றிடமாக விட்டுவந்தார்., இப்போது முதல் முறையாக தன்  மனைவியின் பெயர் ஐஷோட பென் என்றும் குறிப்பிட்டிருக்கிறார். ஆனால் மனைவியின் சொத்து பற்றிய விபரங்கள் பகுதியில் “தகவல் இல்லை” no information என குறிபிட்டிருக்கிறார்.
திருமதி ஐஷோட பென், ஓய்வு பெற்ற குழந்தைகள் வகுப்புகான ஆசிரியை, மோடியின் சொந்த ஊரான வாத் நகரில் இருந்து 35 கீமீ தொலைவில் உள்ள பிரமன்வதா என்ற கிராமத்தில் வசித்து வருகிறார்,  வயது 62,
நரந்திர மோடியின் மனைவி நான்தான் என சொல்லிகொண்டிருந்த இவரின் பள்ளி ஆவணங்களில் திருமதி ஐஷோட பென் நரேந்திர மோடிபாய் என்றுதான் இருக்கிறது.  அதனால் இவர்தான் மோடியின் மனைவி என்று சில மஹராஷ்டிர ஊடகங்கள் சில ஆண்டுகளுக்குமுன் எழுதிவந்தன. ஆனால் ஐஷோபென் பத்திரிகையாளர்களை சந்திக்க  தொடர்ந்து மறுத்துவந்தார். மோடி பிரதமர் வேட்பாளாராக அறிவிக்கபட்டவுடன் இந்த ஆண்டு பிப்ரவரியில் இந்தியன் எகஸ்பிரஸ் நிருபர் சந்தித்தபோது முதல் முறையாக பேட்டிக்கு ஒப்புகொண்டவர் போட்டோக்கள் எடுக்க அனுமதிக்கவில்லை.
இந்த பரபரப்பு  பேட்டி பற்றி மோடி – மெளனத்தையே தன் பதிலாக தந்தார்.
தனது 17 வது வயதில் நடந்த அந்த திருமணத்திற்கு பின் 3 மாதங்கள் மட்டுமே அவருடைய குடும்பத்தாருடன் இருந்தேன். அந்த மூன்று மாதத்திலும் பல நாட்கள் மோடி வீட்டில் இருக்கமாட்டார். நான் பள்ளிப்படிப்பை 10ம் வகுப்பை பாதியில் நிறுத்தி திருமணம் செய்து கொண்டிருந்தேன். மோடி என்னை அப்பாவீட்டிற்கு போய் படிப்பை தொடர சொன்னார்..  அவரது குடுமப்த்தினர் என்னை  வெறுக்க வில்லை. ஆனால் மோடிபற்றி மட்டும் எதுவும் பேசமாட்டர்கள், அப்போது இங்க்கெ வந்ததுதான். அப்பா, அண்ணனின் உதவியுடன், பள்ளிப்படிப்பையும், தொடர்ந்து ஆசிரியர் பயிற்சியையும் முடித்து உள்ளூர் பள்ளியில் வேலைக்கு சென்றேன், இப்போது ஒய்வும் பெற்றுவிட்டேன். என்று சொல்லும் ஐஷோட பென் தன் 14000ருபாய் பென்ஷனில் சிறிய வீட்டில் மிக சிம்பிளான வாழ்க்கையை  பலமணிநேரம் துர்க்கா பிராத்தனை மற்றும் மாணவர்களுக்கு டியூஷன் என கழிக்கிறார்..  திருமணமாணவுடனேயே கணவனை விட்டு பிரிந்து வாழவேண்டும் என்பது என் தலைவிதியானால் யார் என்ன செய்யமுடியும்? என்று சொல்லும் இவர் அதற்காக வருந்தவில்லை என்றும் சொல்லியிருக்கிறார். மோடியை பற்றிய செய்திகளை மீடியாவில் பார்க்கிறார். அவர் ஒரு நாள் பிரதமர் ஆவார் என்று எனக்கு தெரியும் என்கிறார்.  பிரதமரானபின் டெல்லிக்கு  போய் அவருடன் வாழ்வாரா? அவர் விரும்பாத எதையும் நான் செய்யதயாராக இல்லை. எனப்து தான் இவர் பதில்
இவ்வளவு நாட்கள் இல்லாமல் இப்போது மோடி ஏன் இந்த விஷயத்தை பகிரங்கபடுத்தியிருக்கிறார்? சமீபத்தில் இவரது வாழ்க்கை குறிப்பு புத்தகங்கள் எழுதியிருப்பவர்களிடம் கூட இந்த திருமணம்,தனியாக வாழும் மனைவி பற்றி பேசியதில்லை. எனக்கு குடும்பம், குழந்தைகள் இல்லாதால் ஊழல் செய்ய வேண்டிய அவசியமே இருக்காது என்றுதான் சொல்லியிருக்கிறார்.
இப்போது இப்படி அறிவிக்க வேண்டியது அரசியலினால் அவசியமாகிவிட்டது. மக்கள் பிரநிதி சட்டம் 1951ன்படி வேட்பாளார்கள் தங்களது, தங்கள் குடும்பத்தினர் சொத்துகளை அறிவிக்க வேண்டும் என்று சொல்லுகிறது,  தவறாண் தகவல் தரப்பட்டால் வேட்பாளர் மனு நிராகரிக்கபடும் ஆபத்துடன் சட்டபூர்வ நடவடிக்கையும் எடுக்கபடும் ஆபத்தும் இருக்கிறது. திருமணமானவரா என்ற கேள்வி இல்லை ஆனால் மனைவியின் பெயர், மற்றும் சொத்துவிபரம் கேட்கபட்டிருக்கும்.
கடந்த சில மாதங்களாகவே காங்கிரஸ் மோடியின் திருமண வாழ்க்கையை  ஒரு பிரச்னையாக்கி கொண்டிருக்கிறது. தன் திருமணத்தை மறைத்து, சொந்த மனைவியை ஒதுக்கிவைத்து அநீதி  இழைக்கும் இவர் எப்படி இந்திய தாய்குலத்தின் நலனில் அக்கரை காட்டுவார் என்றெல்லாம்  கேள்வி எழுப்பினார்கள். தேர்தல் மனுச்செய்த பின் இதை ஒரு ஆயுதமாக காங்கிரஸ் கையிலெடுக்கும். தேசிய அளவில் மகிளிர் அமைப்புகள் அதற்கு ஆதரவு கொடுக்கும் என்ற நிலையை தவிர்க்கவே இந்த ஒப்புதல் வாக்குமூலம் என்பது பரவலான கருத்து.  முந்தைய வேட்பு மனுக்களில் மறைக்கபட்டிருப்பது குற்றமாகாதா? தேர்தல் சட்ட நிபுணர்கள் தான் பதில் சொல்ல வேண்டும்.
50 ஆண்டுகளுக்கு முன் குஜராத்தில் இப்படி இளம்வயது திருமணம் சகஜம்.  எங்கள் ஏழைப்பெற்றோர்கள் படிக்காதவர்கள். அந்த சிறுவயதில் நாங்கள் பெற்றோர் சொன்னதைத்தான்  செய்வோம். இந்த திருமணமும் அப்படி நடந்த ஒன்று. சமூகதிற்காக செய்யபட்ட சடங்காக செய்யபட்ட நரேந்திரனுக்கு இஷ்டமில்லாத இந்த கல்யாணத்திலிருந்து உடனே ஒதுங்கிவிட்டான்.  என்கிறார் மோடியின் மூத்த சகோதரர் சோமாபாய். இந்த அறிவிப்பு பிஜெபி அலுவலகதிலிருந்து மீடியாக்களுக்கு வந்தது.
பொதுவாக வேட்பாளார்களின் பிரமாணபத்திரங்களின் நகல்கள்  மனுத்தாக்கல் முடிந்தவுடன் நோட்டிஸ்போர்டில் போடப்படும் . ஆனால் வடோதரா தேர்தல் அதிகாரி  அவரின் மேல் அதிகாரிகளின் உத்தரவிற்கு பின்னரே இதை வெளியிட்டார்.
செய்தி வெளியானதிலிருந்து திருமதி மோடியை மீடியாக்கள்  துரத்துகின்றன. ஆனால் அவர்கிராமத்தில் இல்லை. கட்சியால மோடி பிரதமர் வேட்பளாராக அறிவிக்கபடவேண்டும் என 1 வாரம் செருப்பணியாமல் நடந்தது, அரிசி சாதம் சாப்பிடாமல் விரதம் இருந்தது போல இப்போது தேர்தல் வெற்றிகாக பத்ரி- கேதார்- முக்திநாத் புனித பயணம் போயிருக்கிறார் என்கிறார்கள் அந்த கிராமத்தினர். ”இல்லை அவர்  மீடியாவை சந்திக்க முடியாமல் முதல்வரால் பாதுகாக்கபடுகிறார்” என்கிறது அபியான் என்ற குஜராத் பத்திரிகை.
ஆதித்யா
கல்கி 26/04/14



16/4/14

திடுக்கிடும் விபத்தா? திட்டமிட்ட சதியா?


  



டிசம்பர் 6 1992. இந்திய வரலாற்றில்  ஒர் கருப்பு பக்கம். ராமஜன்ம பூமியான அயோத்தியாவில், இருந்த பாபர் மசூதி இடித்து தரை மட்டமாக்க பட்டதும் அதன் விளைவாக எழுந்த கலவரங்களும் போராட்டங்களும் அழியாவடுக்களாக இன்றும்  பலர் மனதிலிருக்கிறது.  கர சேவைக்காக போன பக்தர்கள் கூட்டம் தலைவர்களின் எழுச்சி மிக்க பேச்சுகளால் ஆவேசம் அடைந்து, உணர்ச்சி வசப்பட்டு அந்த பழைய கட்டிடத்தை இடித்துவிட்டார்கள் என்று சொல்ல பட்ட இந்த விபத்து குறித்து, கமிஷன்களும், வழக்குவிசாரனைகளும் இன்னுமும் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில் இப்போது வெளியாகிருக்கும் தகவல், இது ஒரு திட்டமிட்டு  வெற்றிகரமாக அரங்கேற்றபட்ட சதி என்பது.
கோப்ரா போஸ்ட்
என்பது ஒரு புலனாய்வு இணைய பத்திரிகை. (டெஹ்ல்கா மாதிரி) இதன் இணை ஆசிரியர்  கே ஆஷிஷ்  பாபர் மசூதி இடிப்பு தொடர்பாக ஓர் ஆய்வு நூல் எழுதுவதாக  சொல்லி , 23 முக்கிய தலைவர்களை பேட்டி எடுத்துள்ளார். இந்த ரகசிய வீடியோ பதிவில் வினய் கட்டியார், உமா பாரதி, கல்யாண்சிங், சுவாமி சச்சிதானந்த் சாக்‌ஷி மஹராஜ், மஹந்த் ராம்விலாஸ் வேதாந்தி. சாத்வி ரித்தம்பரா, மஹந்த் அவைத்யநாத் மற்றும் சுவாமி நிருத்ய கோபால்தாஸ் மற்றும், பா.ஜ.க., சிவசேனா, வி.ஹெச்.பி மற்றும் பஜ்ரங்தளம் ஆகியவற்றின் முக்கிய தலைவர்கள் இடம் பெற்றிருக்கிறார்கள்.


வர்களில் 15 பேரை நீதிபதி லிபரான் கமிஷன் குற்றவாளிகள் என்று குறிப்பிட்டுள்ளது. 19 பேர் குற்றவாளிகள் என்று சிபிஐ தனது குற்றப்பத்திரிக்கையில் தெரிவித்துள்ளது. ஆப்ரேஷன் ஜென்மபூமிஎன்ற பெயரில் நடத்தப்பட்ட சதிச்செயலின் அடித்தளம் வரை சென்று கண்டறிந்த பல உண்மைகளை வெளியிட்டிருக்கும்  'கோப்ரா போஸ்ட்'  டின் டிவிடியை டில்லி பத்திரிகையாளர்களுக்கு அதன் ஆசிரியர் அனிரோத் வழங்கியிருக்கிறார்.. இதில் சொல்லப்படும் விஷயங்களின் ஹைலைட்கள்:
            பாபர் மசூதி இடிப்பு வி.ஹெச்.பி., சிவசேனாவால் நடத்தப்பட்ட திட்டமிடப்பட்ட சதிச் செயல் என்றும்,  இந்த இரு அமைப்புகளும் தங்களது தொண்டர்களுக்கு பல மாதங்களுக்கு முன்பாகவே பயிற்சி அளித்ததாகவும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சார்பில் பலிதானி ஜாதாஎனும் பெயரில் தற்கொலைப்படைகளும் அமைக்கப்படதாகவும் கூறப்பட்டுள்ளளது. பயிற்சி குஜராத்தில் ஒரு கிராமத்தில் முன்னாள் ராணுவ அதிகாரிகளால் அளிக்கபட்டது. எதற்கு பயிற்சி என்று சொல்லப்படாத நிலையில் கடின மலைஏற்றம், கயிற்றில் தொங்கி சுவற்றை உடைப்பது போன்ற பயிற்சிகள் தரப்பட்டன. இந்த படைக்கு லக்‌ஷ்மண சேனை என்று பெயர்.

மசூதியை இடிக்கத் தொடங்கியவுடன், ராம்விலாஸ் வேதாந்தி பாபாதலைமையில் கரசேவகர்கள் எல்.கே.அத்வானி, அசோக் சிங்கால், முரளிமனோகர் ஜோஷி, கிரிராஜ் கிஷோர், ஆச்சார்யார் தர்மேந்தர் உட்பட பலரது முன்னிலையில்  5 பேர்கள் ராம பக்தர்களானான் நாங்கள் கோவிலை காப்போம் என ராமர்  மேல் சத்தியம் செய்து கொண்டு பணியை துவக்கினர்கள்.
சுவர்களை உடைக்கும் பெரிய சுத்தியல்கள், சரியான நீளத்தில் வலுவான கயிறு எல்லாம் சேகரிக்கபட்டு தயார் நிலையில் வைக்க திட்டமிட்டவர் உமா பாரதி. என்றும்  பயிற்சி பெற்ற பலரில் இந்த 5 பேர் தலைவர்களாக தேர்ந்தெடுக்கபட்டவர்கள். கட்டிடத்தின் வெடிப்புகளில் நுழைக்க பெட்ரோல் குண்டுகளும் கொடுக்கப்பட்டடிருக்கிறது.

 ஒருவேளை முயற்சி தோல்வி அடைந்தால் மசூதியை வெடிகுண்டு வைத்து தகர்க்க இரண்டுதற்கொலை படையினர்  உடலில் கட்டிய குண்டுகளுடன் பிளான் பி யாக தயாராக. என்றும் பேட்டிகளில் பதிவாகயிருக்கிறது.

மசூதியை இடிப்பதற்கு ஒருநாள் முன்னதாக அயோத்தியின் ந்துதாமில் வி.ஹெச்.பி. மற்றும் ஆர்.எஸ்.எஸ். நடத்திய ரகசியக் கூட்டத்தில், அசோக் சிங்கால், வினய் கட்டியார், வி.ஹெச்.டால்மியா, மற்றும் மஹந்த் அவைத்யநாத் ஆகியோர் கலந்து கொண்டனர். ஹனுமன் பாக்கில் நடந்த ரகசிய கூட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். சார்பில் ஹெச்.வி.சேஷாத்ரி மற்றும் பாரதிய ஜனதாவின் முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர்  என்று கோப்ரா போஸ்ட் தெரிவிக்கிறது.
 இந்த நாசவேலை குறித்து அன்றைய மாநில முதல்வர் கல்யாண்சிங்க்கும், பிரதமர் நரசிம ராவுக்கும் தெரியும் என்கிறது கோப்ரா போஸ்ட். இதில் விருபமில்லாத கல்யாண்சிங் டிச 6 அன்று தன் பதவியை ராஜினாமா செய்யவிருந்த போது தடுத்தவர் முரளி மனோகர் ஜோஷி என்றும் இடிப்பு முழுவதுமாக முடியும் வரை அவர் லக்னோவில் ஆர் எஸ் எஸ் வீரர்களால் “சிறை” பிடிக்க பட்டிருந்தார் என்றும் ஒருவர் பேட்டியில் சொல்லுகிறார்.

                                                                                                    
இந்நிலையில், தேர்தல் அமைதியாக நடப்பதை தடுக்கும் விதத்தில் 'கோப்ரா போஸ்ட்' திட்டமிட்டு காங்கிரஸின் உதவியுடன் சதி செய்வதாகவும், இதுதொடர்பான அனைத்துச் செய்திகளையும் உடனடியாக தடை செய்ய வேண்டும் என்றும் தேர்தல் ஆணையத்தில் பா.ஜ.க புகார் செய்தது. இந்த கோரிக்கையை தேர்தல் ஆணையம் நிராகரித்து விட்டது..
                     
செய்தியை தடை செய்யவேண்டும் என்று சொல்லும் பிஜபி அதன் பேட்டிகளை, பேட்டியில் சொல்லப்படும் விஷயங்களை மறுக்க வில்லையே ஏன்? என்கிறது காங்கிரஸ்.
இது எங்களது இரண்டாண்டு புலானாய்வு. அத்தனைக்கும் பதிவு செய்யபட்ட ஆதாரம் இருக்கிறது வழக்குகளை சந்திக்கதயார் என சவால் விடுகிறது கோப்ராபோஸ்ட்.
 நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ராமர் கோவிலை சட்டவிதிகளுக்குட்பட்டு கட்டுவோம் என்று கடைசி பக்கத்தில் ஒரு வரியாக தன் தேர்தல் அறிக்கையில் சொல்ல்யிருக்கிறது பிஜெபி.


-ஆதித்யா
கல்கி 20/04/14