30/6/24

தரம்சாலா-தபோவனம்-தலாய்லாமா4

“நீங்கள் விரும்புவது போல் ஒரு மாதம் எல்லாம் ஹாபி மாதிரி செய்யக்கூடிய பணியல்ல அது. இரண்டுவருடமாவது செய்ய வேண்டும். மேலும் நீங்கள்”pahari” மொழியைக் கற்றுகொள்ளவேண்டும்”. (ஹிந்தி தான் மாநில மொழியானாலும் பழங்குடி கிராம மக்கள் அதைப்பேசுவதில்லை) என்பது CORDல் நான் தன்னார்வலாராக இணைந்து பணியாற்ற அனுமதி கேட்டதற்கு ஸ்வாமிஜி பிரகாஷானந்தா. (இவரை ரெஸிடென்ட் ஆச்சார்யா என்றழைக்கிறார்கள்.)
“ஹிந்தியே தடுமாறும் உங்களால் இனிமேல் ஒரு புதிய மொழியை கற்க முடியாது” என்று மனைவி சொல்ல (அவருக்கு நான் இங்கேயே தங்கிவிடுவேனோ என்ற பயமும் ஒரு காரணம்) எண்ணத்தை அடுத்த பிறவிக்கு ஒத்தி வைத்தேன்.
இங்கு நாள் காலை5.45க்கு குருதேவரின் சமாதி ஸ்தலத்தில் வழிபாடு ஆர்த்தியுடன் தொடங்குகிறது. நாம் அதற்குள் ரெடியாக வேண்டும். நம் மாதிரி விஸிட்டர்களுக்கு கட்டாயம் இல்லை. ஆனால் நம்மோடு எழுந்து . இமயத்திலிருந்து பால்கனிவழியாக எட்டிப்பார்க்கும் சூரியனும் ஒலிக்கும் வேதங்களும் நம்மை அழைக்கிறது.
6.15க்கு முடிந்த குருதேவரின் ஆர்த்திக்கு பின் அருகிலுள்ள ராமர் கோவிலில் பூஜை, வாழ்நாள் முழுவதும் கீதையை பல வடிவங்களில் போதித்த சின்மையானந்தா கிருஷ்ணருக்கு ஒரு கோவில் எழுப்பாமல் இங்கு எந்த ஆர்பாட்டமும் இல்லாமல் 1983ல் ராமருக்கு ஒரு கோவில் உருவாக்கியிருக்கிறார். ஒரு கோடிக்குமேல் 24 நாடுகளிலிருந்து வந்த ராமநாமம் எழுதப்பட்ட நோட்டுபுத்தகங்கள் கருவரையின் அஸ்திவாரத்திலிருப்பதாக தகவல் பலகை சொல்லுகிறது.
பளிரென்று ஒளிரும் கருங்கற்களில் கேரள அம்பலம். (நுழை வாயிற்படியில் ஆமை(கூர்மம்) பாணியில் வட்ட வடிவ கருவறை, முன்னால் விஸ்தாரமான ஹால். கண்ணாடி பேழையில் வேதங்கள் எழுதப்பட்ட பெரிய புத்தகம். கோவிலின் கோபுரமாக ராமர் கீரிடம். வடிவமைத்து கட்டியிருப்பது தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு பொறியாளார் நிறுவனம்.
சன்னதியின் எதிரில் தரையில் உட்கார்ந்து பிரார்த்தனை செய்ய முடிவதால். ராமர் நம்முடன் பேசும் உணர்வு எழுகிறது. மூலவர் வன வாசகோலம். உற்சவர் சீதை,இளவல், மற்றும் ஆஞ்சநேயருடன்.. வடித்த சிற்பி யாரோ அழகும் அமைதியும் கொஞ்சுகிறது. இது இந்த மாநிலத்தில் எழுப்பட்ட முதல் ராமர் கோவில்.
இங்கு பூஜைகள் முடிந்த பின்னரும் அங்கேயே அமர்ந்திருக்கிறோம். தொடர்ந்து அந்த வளாகத்திலிருக்கும் ஒரு பிரமாண்ட ஆஞ்னேயருக்கு பூஜை. ஏன் ஆஞ்சேனேயருக்கு இவ்வளவு பெரிய சிலை? என்பது ஒரு சுவாரஸ்யமான தகவல். காலை உணவு மணி அழைக்கிறது. அதை அடுத்த பதிவில் பேசுவோமே
All reactions:
Vidya Subramaniam, Manthiramoorthi Alagu and 66 others
20
1
Like
Comment
Send
Share

29/6/24

தரம்சாலா-தபோவனம்-தலாய்லாமா 5

தரம்சாலா நகருக்கு வெளியே 12 கிமீ தொலைவில் மெல்யோடு Mcleod Ganj, மலையின் நடுப்பகுதியில் அமைந்திருக்கிறது தலாய்லாமா கோவில் வளாகம். இதை Tsuglagkhang Complex என்கிறது நுழைவுப்பலகை. (இதனுள்ளே திபேத்திய கலாசாரா ஆய்வு மையமும் இருப்பதால் வளாகத்தை கல்வி நிலையமாக பதிவு செய்திருக்கிறார்கள்). வளாகும் இருக்குமிடம் மினி லாசா(திபேத்தின் தலைநகர்) போலிருக்கிறது. எங்கு திபேத்திய முகம், லாமாக்கள், திபேத்திய கலைப்பொருட்கள் விற்பனைசெய்யும் கடைகள். அரை நூற்றாண்டுகளுக்கு மேல் இங்கு திபேத்தியர்கள் வாழ்ந்திருப்பதால் இளம் தலைமுறையினர் இந்தியும் பேசுகிறார்கள்.
திபேத்திய புரட்சியின் போராட்டங்களை சித்தரிக்கும் காட்சிகளும் தியாகிகளின் படங்களும் வரவேற்கும் நுழைவாயில். அந்த வளாகத்தில் தான் தலாய்லா வழிபடும் புத்தரின் கோவிலும் அவர் வாழுமிடமும் இருக்கிறது.
ஒரு மலைப்பகுதியாக இருப்பதானால் நான்கு தளங்களாக படிகள் அமைத்து பெரிய. பெரிய கட்டிடங்களை நிறுவிவியிருக்கிறார்கள். இதில் இரண்டும் மூன்றாம் தளங்களில் புத்தர் கோவிலும், 4 வது தளத்தில் தலாய் லாமா வாழும் அரண்மனையும் இருக்கிறது. (அரண்மனை என்று சொல்லக்கூடாது என்றார்கள்)
அந்த இடத்தை அடையவே பல செக்யூரிட்டி கெடிபிடிகள். பல கேள்விகள். தலாய்லாமாவின் செயலகம் நம் பிரதமர் அலுவகம் போல பல மட்ட அதிகார அடுக்களுடன் இருக்கிறது. திபேத்துக்கு வெளியே நிறுவப்பட்டிருக்கும் திபேத்திய அரசின் தலைமை அலுவகம் என்ற அந்தஸ்த்தை பெற்றிருக்கும் இடம்.
செகரட்டரியை சந்திக்க வேண்டும் என்று சொன்னவுடன் எந்த செகரட்டரி? இங்கு 5 பேர் இருக்கிறார்கள் என்றார்கள், நமக்கு வந்த மெயிலை காட்டிய பின் அமரச்சொல்லி உள்ளே போனார் அந்த ராணுவத் தோரணையிலிருந்த அதிகாரி. 10 நமிட காத்திருப்புக்கு பின் நம் உடமைகளை மட்டுமில்லை நம்மையும் ஸ்கேன் செய்யும் அமெரிக்க இயந்திரவாசலை கடந்தபின் தலைமைசெயலரின் அறைக்கு அழைத்துச்செல்லுகிரார் மற்றொரு அதிகாரி.
காவி உடை அணிந்திருக்கும் லாமாக்கள் மத்தியில் பளீரென்று ஃபுல் சூட்டில் இருக்கிறார் தலமைச் செயலாளார் Chhime Rigzin Chhoekyapa, (சரியாக உச்சரிக்கத்தெரியாதால் சொக்கப்பா என்று நினைவுபடுத்திக்கொள்ளவேண்டும்). நல்ல ஆங்கில உச்சரிப்பில் மெல்லப்பேசுகிறார். அவர் மேஜையில் நான் சில ஆண்டுகளுக்கு முன் THE WEEK பின்னர் கல்கியில் எழுதிய உலக அமைதிக்காக தலாய் லாமா நடத்தும் காலசக்கர பூஜை பற்றிய கட்டுரைகளின் பிரதிகள் (கட்டுரையின் லிங்க் பதிவின் இறுதியிலும் முதல் பின்னுட்டத்திலும்)
“உங்கள் தாய்மொழியில் காலச்சக்கரம் பற்றி எழுதியிருக்கிறீர்கள் நன்றி” என்று அன்புடன் வரவேற்று டீ கொடுத்து (சகிக்கலை) உபசரித்து சொன்ன விஷயம் தலாய்லாமாவை சந்திக்க இயலாது என்பது தான். “உங்களுக்காக இன்று 10 நிமிடம் திட்டமிட்டிருந்தோம். ஆனல் அவர் உடல் நிலை சரியாகயில்லாதால் (வயது 90) அடுத்த 20 நாட்களக்கு அவரது சந்திப்புகள் ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது. அடுத்த மாதம் முயற்சி செய்யுங்கள் என்றார்.
எமாற்றமாகயிருந்த போதிலும் சந்திக்க இயலாது என்பதை போனிலோ, மெயிலிலோ சொல்லாமல் வரவேற்று பேசி சொன்னது ஒரு பத்திரிகையாளனுக்கு கிடைத்த கெளரவம்.
கோவிலைப் பார்த்துச்செல்லுங்கள் என்று ஒரு லாமாவை உடன் அனுப்பினார். ஆங்கிலம் பேசும் அந்த லாமா( எல்லா லாமக்களும் ஆங்கிலம் பேசுவதில்லை) நிறைய தகவல்கள் சொன்னார். இரண்டாம் தளத்திலிருக்கும் தலாய்லாமா வணங்கும் தெய்வங்களின் உருவங்கள் முன்னால் அவர் அமர்ந்து ஆன்மீக உரை, வழங்கும், பிரார்த்தனை செய்யும் மண்டபத்துக்குள் கூட்டிச் சென்றார். துணியால் மூடப்பட்டிருக்கு பெரிய தங்க சிம்மாசனம்.
தொடர்ந்து முதல் தளத்தில் தலாய்லாமா வணங்கும் புத்தர்கோவில், முதலில் வெளிப்பிரகாரத்தை சுற்றி நடந்து பிரார்த்தனை சக்கரங்களை clockwise ஆக சுற்றி நம் வேண்டுதலைச் சொன்ன பின்னர்தான் கோவிலுக்குள் செல்லவேண்டும் என்பதை சொல்லிக்கொடுத்தார். உள்ளே பளபளக்கும் தங்க வண்ணத்தில் தியான நிலையில் புத்தர். பின்னால் சுவற்றில் பல காட்சிகள்
இரண்டாம் தலாய்லாமா தோற்றுவித்த நாம்கியால்(Namgyal) கோவில் புரட்சியில் அழிந்து விட்டதால் இந்த 14ம் தலாய் லாமா அதை இங்கு வழிபாட்டுக்காக எழுப்பியிருப்பதாகச் சொன்னார் நம்மை அழைத்துவந்தலாமா.. நீங்கள் விரும்பும் வரை பிரார்த்திக்கலாம் எனச் சொல்லி அவர் விடை பெற்றுகொண்டார்.
பளிசென்று சுத்தமாகயிருந்தாலும் புத்தர் பிரமாண்டமாகயிருந்தாலும் ஒரு தெய்வ சன்னதியை அங்கு உணர முடியவில்லை. பூஜை ஆராதனை எதுவும் கிடையாது. ஒரு எரியும் விளக்கு கூட இல்லை. வரும் டூரிஸ்ட்கள் புத்தரின் அருகில் நின்று செல்பி எடுத்துக்கொள்கிறாகள். அதிக செல்பி படங்களில் சிக்கியவர் இந்த புத்தராகத்தானிருப்பார் என்னை நினைத்துக்கொண்டோம்
. புத்தருக்கு வேண்டுதலுடன் படைத்த பிஸ்கட் சாக்லேட், வாட்டர் பாட்டில்கள், சோப்புகள் போன்ற அந்த சிலையின் முன்னே அழகாக அடுக்கி வைக்கபட்டிருக்கின்றன.
ஒரு மலைச்சரிவில் இறங்குகிறோம் என்றே தெரியாதவண்ணம் படிகளில் இறங்கி வெளியே வந்து அறைக்கு திரும்புகிறோம்.
நாளை காலை இங்கிருந்து சிம்லா போகதிட்டம். பல ஆண்டுகளுக்கு முன் நாங்கள் ஹனிமூன் சென்ற இடம் சிம்லா. இங்கிருந்து 40 நிமிட விமானபயணத்தில் போய்விடலாம் என்பதால் இப்போது சிம்லா எப்படியிருக்கிறது என்று பார்க்க விரும்பி அங்கு போக திட்டமிட்டிருந்தோம்.
காலையில் விமான நிலையம் சென்ற எங்களுக்கு ஒரு ஆச்சரியம் காத்திருந்தது.
(https://www.chuvadugal.com/2014/07/blog-post_31.html சுட்டியில் காலசக்கர வழிபாடு கட்டுரையைப் படிக்கலாம்)
All reactions:
You, Vidya Subramaniam, Manthiramoorthi Alagu and 16 others

28/6/24

தரம்சாலா-தபோவனம்-தலாய்லாமா 5

ஹிமாச்சல் பிரதேஷ்ஷில் தஹூல்தஹூர் என்ற இமயமலைத்தொடரின் கங்கரா பள்ளத்தாக்கில் அமைந்திருக்கிறது தரம்சாலா. பனி, மழை, கடும் காற்று வெய்யில் என்று எல்லாம் வரிசையாக ஆண்டுதோறும் தாக்கும் காட்டுப்பகுதி இது.
புராணங்களில் தேவபூமி என்று வர்ணிக்கப்படும் இந்த காட்டுப்பகுதிக்கு 1977ல் ஸ்வாமி சின்மையானந்தா வந்தபோது இந்த இடத்தின் அதிர்வுகளை உணர்ந்து இங்கு தன் ஆஸ்ரமத்தை தொடங்க திட்டமிடுகின்றார். பல சவால்களை எதிர் கொண்டு ஒரு சிறிய குடிலில் தொடங்கப்பட்ட அந்த ஆஸ்ரமம். இன்று ஒருஅழகான சோலையாக பல வித மரங்கள், மலர்ச்செடிகளுடன் வளர்ந்திருக்கிறது. அங்கிருப்பது தான் இந்த மெகா சைஸ் ஆஞ்சனேயர். சின்மையானந்தா இந்த இடத்தில் ஆஸ்ரம கட்டிடங்களை எழுப்பும் போது பெரும் சூறாவளி காற்று தொடர்ந்து தாக்கி ஆஸ்ரமத்தின் கட்டமைப்புகளை அழித்தது. மேற்கூரைகள் பறந்தன. தொடர்ந்த முயற்சி செய்தும் பலனில்லை. அப்போது கேரளாவிலிருந்து (சின்மையானாந்தா கேரளத்தைச்சேர்ந்தவர் பூர்வாசிரமப் பெயர் பாலகிருஷ்ண மேனன்) வந்த தாந்திரிகள். பிரசன்னம் பார்த்து இந்த இடம் ஆஞ்நேயருடையது. அவருக்கு பூஜை செய்து கட்டிடப்பணிகளை தொடங்க வேண்டும் என்று சொல்லுகிறார்கள். அதன் விளைவாக எழுந்தது தான் ஆஸ்ரமத்தில் எங்கிருந்தாலும் நம்மை அன்புடன் பார்க்கும் இந்த பிரமாண்ட ஆஞ்நேயர். இன்றும் தினசரி இரண்டு வேளை பூஜை நடைபெறுகிறது.
இந்தப் பள்ளதாக்கில் பல கோவில்கள். அவற்றில் 200 கீமி சுற்றளவில் ஐந்து சக்தி பீடங்கள் முக்கியமானவையாகக் கருதப்படுகின்றன. ஜவ்வாலாஜி,பிரேஜ்ஸ்வரி,சிந்தப்பூரணி நைனா தேவி என்ற இந்த சக்திப்பீடங்களின் இன்றைய கட்டமைப்பு, வசதிகள் எல்லாம் திருவிழாக்காலங்களில் வரும் பெருங்கூட்டத்தைச் சொல்லுகிறது.
படு சுத்தமாக பளிச்சென்று மார்பிளிட்ட பிஹாரங்கள்,,தங்க வண்ணக் கூரைகள். மெல்லிய சாரலாக நீர் தூவும் கூலர்கள் எல்லாம் இருந்தாலும் சன்னதிகள் ஒருசிலர் மட்டுமே நுழையக்கூடிய அளவில் சிறியதாகியிருக்கிறது. சன்னதியில் அலங்கரிக்கப்ட்ட தேவி வடிவ உருவம் எதுவுமில்லாமல் இயற்கையாக எழுந்த சுயம்பு கற்கள் மட்டுமே. இவற்றை “பிண்டி” என்று அழைக்கின்றனர்.
ஜவாலஜி தேவி கோவிலில் மட்டும் ஒரு பாறையின் இடுக்கிலிருந்து இரண்டு இடங்களில் பல நூற்றாண்டுகளாக தொடர்ந்து இயற்கையாகவே எரிந்து கொண்டிருக்கும் ஒரு நெருப்புச்சுடர் தான் தேவி. அதற்குத்தான் பூஜை வேண்டுதல் எல்லாம்.
அந்த இளம் நீல வண்ணச்சுடர் எப்படி தொடர்ந்து எரிந்துகொண்டிருக்கிறது என்பது தான் ஆச்சரியம்
“இப்படி எல்லா தேவிகளையும் எல்லோராலும் ஒரே நாளில் பிராத்திக்க முடியாது. நீங்கள் ஆசி பெற்றவர்கள்” என்று சொன்னார் எங்களை அழைத்துப்போன காரின் டிரைவர் இந்தக் கோவில்களுக்கு வருவதால் நாள் முழுவது சாப்பிடாமலிருந்தார் அவர் .
இந்தப்பயணத்துக்குத் திட்டமிட்டபோது தலைலாமாவைச் சந்திக்க அனுமதியும் நேரமும் கேட்டிருந்தேன். தர்மசாலா வந்த பின் தொடர்பு கொள்ளுங்கள். இப்போது எதுவும் உறுதியாகச் சொல்ல முடியாது என்று பதில் வந்திருந்தது.
நாளை தலாய்லாமாவின் கோவிலில் அவருடைய செகரட்டரியை சந்தித்து பேசச் சொல்லி ஆஸ்ரமத்துக்கு தகவல் வந்திருந்தது.
நாளை போகவேண்டும்
All reactions:
Vidya Subramaniam, Manthiramoorthi Alagu and 70 others