5/12/10


எண்ணங்களின் வரைபடம்

எந்த ஒரு வெற்றிக்கும் பின்னால் திறமையான திட்டமிடலிருக்கிறது என்பது நம் எல்லோருக்கும்  தெரிந்த விஷயம். திட்டமிடுவதில்  வெறும் மனத்தளவில், நெருங்கியவர்களின் ஆலோசனையின்படி,  வரிசைப்படுத்தி ஒரு தாளில் அட்டவணையிடுவது  போன்ற பல வகைகள். சமீப காலங்களில் “”  (mind maping) என்ற எண்ணங்களை வரைபடமாக எழுதிக்கொள்வது என்ற முறை பயன் படுத்தப்படுகிறது. பயன் படுத்தி வெற்றி பெற்றவர்களின் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டிருப்பதால் இந்த முறை குறித்து அதிகளவில் புத்தகங்கள் வந்துகொண்டிருகின்றன. சில அமெரிக்க நிறுவனங்கள் தங்கள் அதிகாரிகளுக்கு இதில் பயிற்சி அளிக்க ஆரம்பித்துவிட்டது.

எண்ண ஓட்டங்களை வெறும் வரி வடிவமாக மட்டுமில்லாமல், ஒரு வரைபடமாக வடிவமைத்தால் முளையில் ஆழமாக பதிந்துவிடும்.  அது செயலாற்ற மிக உதவியாகயிருக்கும் என்பது இந்த முறையின் அடிப்படை தத்துவம்.  சிறந்த ஒவியர், கட்டிடகலைநிபுணர், இயந்திர வடிவமைப்பாளார் என்று பலகலை மேதையாக அறியபட்டிருக்கும் லீயோனார்டாவின்ஸி,  படைப்புகளின்  பல குறிப்புகளில் பல  இந்த முறை பயன் படுத்தப்பட்டிருப்பதை  இன்று பார்க்கமுடிகிறது. இதைப்போல் 17ம் நூற்`றாண்டில் வாழ்ந்த மேதை கலீலியோ, மற்றும் “குவாண்டம் எலெட்ரோ டயனமிஸம்” என்ற பெளதிக தத்வத்தை உருவாக்கி நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி ஃபெயின் மென் , விஞ்ஞானி, ஆல்பர்ட் அயின்ஸ்டின் போன்ற பலரும் பயன்  படுத்தியிருக்கும் இந்த முறையை பற்றி ஆராய்ந்து பல புத்தகங்கள் எழுதியிருப்பவர் திரு. டோனி புஸ்ஸன்.(tony buzan) 100க்கு மேற்பட்ட நாடுகளில் 30 மொழிகளில் இவரது புத்தகங்கள் பதிப்பிக்கபடுகிறது. மைக்க்ராஸாப்ட், போயிங், ஜெனரல் மோட்டார்ஸ் போன்ற பெரிய நிறுவனங்களுக்கு நிர்வாக ஆலோசகராகயிருக்கும் இவரது சமீபத்திய புத்தகத்தில் இந்த  மைண்ட் மாப்பிங்கை  எப்படி தனி நபர் மேம்பாட்டிற்கு பயன் படுத்தமுடியும் என்பதினை விவரிக்கிறார்.
 ஒரு நகரின் பல பெரிய வீதிகளும்  சிறிய கிளைதெருக்களும் வளைந்து நெளிந்து நகரின்  மத்திய பகுதியை அடைவதைப்போல,    நமது எண்ணங்களை ஒரு குறிப்பிட்ட இலக்கை நோக்கி அடையும் பல வழிகளாக     வரைபடமாக்கி கொள்ளும்  பயிற்சி,    எந்த ஒரு விஷயத்தையும் எளிதில் கற்றுகொள்ள, திட்டமிட, பல விஷயங்களை முளையில் சேமித்துக்கொள்ள அவற்றை வகை பிரித்துக்கொள்ள, நமக்கு வேண்டிய பொழுது அவற்றை உடனடியாக நினைவிற்கு கொண்டுவர, என பல வகையில் உதவும். மாணவர், நேர்முகத்தேர்விற்கு போகவேண்டியவர், பெரிய நிறுவனத்தின் பல பிரிவுகளை நிர்வகிக்கும் நிர்வாகி,, ஒரு கூட்டத்தை அல்லது நிகழ்ச்சியை நடத்தும் நிறுவனம் இப்படி எவரும்   தங்கள் தேவைக்கேற்ப பயன் படுத்த முடியும்.
ஒரு நேர்முகத்தேர்விற்கு போகவேண்டியிருந்தால் இந்த முறையை நீங்கள்  எப்படி பயன் படுத்தலாம்?
முதலில் எதெல்லாம் அவசியம் என ஒரு தாளில் எழுதுங்கள். இது வரிசைப்படி அமைய வேண்டியதில்லை. தோன்றும் போதெல்லாம் தோன்றுவதயெல்லாம் குறித்துகொண்டேவாருங்கள்.தேர்விற்கு போகவேண்டிய நிறுவனத்தைப் பற்றிய விபரங்கள்,சம்பந்தப்பட்ட நபர்கள் பற்றிய விபரங்கள், போட்டியாளார் பற்றிய தவல்கள் இப்படி எல்லாச் செய்திகளையும் திரட்டி குறித்துக்கொள்ளுங்கள்.
   எல்லா நேர்முகத்தேர்விலும் எந்த மாதிரி கேள்விகள் கேட்டகப்படும் என்பதை எளிதாக யூகிகக்கமுடியாது என்பது உண்மையானலும் இந்த 4 கேள்விகள் பல மாறுபட்ட வடிவங்களில் எல்லா  நேர்முக தேர்வுகளிலும் கேட்கப்படுகிறது.
1.நீங்கள் ஏன் இந்த வேலைக்கு  விண்ணப்பித்திருக்கிறீர்கள்?
2. இந்த நிறுவனத்திற்காக நீங்கள் என்னசெய்வீர்கள்?
3  நீங்கள் எப்படிப்பட்டவர்?
4. இந்த வேலைக்கு நீங்கள் தகுந்தவர் என்று எதனால் நினைக்கிறிர்கள்?
இதைத் தவிர இந்த 5 கேள்விகளும் அனேகமாக எல்லாயிடங்களிலும் கேட்கபடுகிறது.
1.அடுத்த 5 ஆண்டுகளில் நீங்கள் என்னவாக வேண்டுமென நினைகிறீர்கள்?
2 உங்களுடைய பலம், பலவீனம் என்ன?
3 உங்களைப்பற்றி  சொல்லுங்கள்?
4.உங்களுடைய வேலையயை ஏன் ராஜினாமா செய்தீர்கள்?
5 இந்த நிறுவனத்தைப்பற்றி என்ன தெரியும்?
இந்த கேள்விகளை  முக்கிய வீதிகளாகவும் நீங்கள் சேகரித்த தகவல்களை  சிறு துணை வழிகளாகவும்அமைத்து வரைபடத்தை அமைக்க வேண்டும்
எப்படிச்செய்வது?
ஒரு வெள்ளைதாளை எடுத்துக்கொள்ளுங்கள். அதை குறுக்கு வசத்தில் (Landscape size) பயன் படுத்தவேண்டும் (இது முக்கியமானது)

நீங்கள் பங்கேற்கபோவது ஒரு ஆடை வடிவமைக்கும் நிறுவனம்  என்றால் அதன் மையப்பகுதியில் ஒரு வட்டமிட்டு அதில் ஒரு ஆயுத்த ஆடையையோ, அல்லது அந்த கம்பெனியின் சின்னத்தையோ வரைந்துகொள்ளுங்கள். அந்த வட்டத்தை சுற்றி வளைந்த பாதைகளாக கேள்விகளை வண்ண மார்க்கர்களை பயன்படுத்தி எழுதுங்கள்.முக்கியமாதற்கு அழுத்தமான வண்ணங்களைப் பயன் படுத்துங்கள்..சேகரித்த தகவல்களை  அலசி அது எந்த கேள்விக்கு பொருந்துமோ அங்கே கிளைத்தெருவாக  வரையுங்கள். இந்த பயிற்சியின் போது உங்களுக்கு புதிய கேள்விகள் தோன்றலாம். இருக்கும் விஷயங்களுக்கு கேள்விகள் இல்லாமலிருக்கலாம்.அப்போது அவசியமானால் கேள்விகளை மாற்றிக்கொள்ளுங்கள். இப்போது எதிர்பார்க்கும் கேள்விகளையும், அதற்கான பதில்களையும் தயாரித்துவிட்டீர்கள்.ஒருமுறைக்கு இருமுறை பரீசலனை செய்து அவசியமான மாற்றங்கள் செய்து ஒரு தெளிவான பிரதியை வண்ணங்களில் தயாரித்துக்கொள்ளுங்கள்.
ஏன் வண்ண மார்க்கர்கள் பயன்படுத்தவேண்டும்?
மனித முளையின் இடதுபுறம் வார்த்தைகளும் வலதுபுறம் வண்ணங்களும் பதிகிறது,இரண்டும் இணைந்து செயல்படும்போது இரண்டும் மறக்காமல் நினைவிற்கு வரும் என்பது ஆராய்சிகளின் முடிவு. இப்போது இந்த வரைபடத்தை மனதில் நிறுத்தும் பயிற்சியைத் துவக்குங்கள். தினசரி அடிக்கடி பார்த்துகொள்ளுங்கள். கேள்விபாதை, பதில் கிளைபாதை எல்லாம் மனதில் பதிந்துவிடும். தேர்வில் அமர்ந்திருக்கும்போது கண்முன்னே வரைபடம் விரியும் அருகருகே பல விஷயங்களை குறித்திருப்பதால்  கேள்விகள் மாறினாலும் பதில்கள்  பளிச்சென்று நினைவிற்கு வரும்.
ஒரு முறை இந்த பயிற்சியை செய்துபழகிவிட்டால் இதை மற்ற பல விஷயங்களுக்கும் எளிதாக பயன் படுத்தலாம். முயற்சிசெய்து பாருங்களேன்.
 இணைத்திருக்கும் மாதிரிப்படத்தைப்போல வண்ணத்தில் இந்த கேள்விகளுடன் படம் எழுத வேண்டும்

1.நீங்கள் ஏன் இந்த வேலைக்கு  விண்ணப்பித்திருக்கிறீர்கள்?
     -அனுபவம்
     -ஆர்வம்
    - தகுதி
    -சொந்த ஊர்.           
2. இந்த நிறுவனத்திற்காக நீங்கள் என்னசெய்வீர்கள்?
அதிக ஆர்டர்கள்
புதிய வாடிக்கையாளர்கள்
புகார் இல்லாத சேவை
3  நீங்கள் எப்படிப்பட்டவர்?
-ஆர்வமிக்கவர்
-எளிதில் கோப படாதவர்
-நட்பாக பழகுபவர்
4. இந்த வேலைக்கு நீங்கள் தகுந்தவர் என்று எதனால் நினைக்கிறிர்கள்?
கவரும் உருவம்
என் அனுபவம்
திறமையில் நம்பிக்கை
நிறைய தொடர்புகள்

1.அடுத்த 5 ஆண்டுகளில் நீங்கள் என்னவாக வேண்டுமென நினைகிறீர்கள்?
படிப்படியான பதவி உயர்வு
ஒரு கிளயின் முதல் நிலை மேலாளர்
2 உங்களுடைய பலம், பலவீனம் என்ன?
பலம் நிறைய நண்பர்கள்
பலவீனம்=முறயான மார்கெட்டிங் பட்டமில்லாதது
3 உங்களைப்பற்றி  சொல்லுங்கள்?
குடும்பம்
படிப்பு
முன் அனுபவம்
தொடர்புகள்
ஆர்வம்
4.உங்களுடைய வேலையயை ஏன் ராஜினாமா செய்தீர்கள்?
திறமை மதிக்கபடவில்லை/எற்ற வேலையில்ல
நிர்வாக மாற்றத்தினால்

5 இந்த நிறுவனத்தைப்பற்றி என்ன தெரியும்
கடந்த ஆண்டின் சாதன
ISO தர சான்று பெற்ற விபரம்
புதிய கிளைகள்திறப்பு
வேகமாக வளரும் நிறுவனம்
வெளிநாட்டு ஒப்பந்தம்
            

21/11/10


இரண்டு கார்கள்

கார் 1

80 கிலோ தங்கம், 15 கிலோ வெள்ளி, 10 ஆயிரம் ஆபரணகற்கள் பயன் படுத்தி 15 பேரின் உழைப்பில் ஒரு தங்க நானோ காரை டாடா குழுமம உருவாக்கியிருக்கிறது.  இந்தியாவின் அனைத்து மாநிலங்களின் பாரம்பரிய பாணிநகைவடிவங்களுடன் இடம்பெற்றிருக்கும் இந்த கார் முகப்பில் தோகை விரித்தாடும் வண்ண மயிலுடன் ஜொலிக்கிறது. காரின் வெளியே மட்டுமில்லாது  உள் கைப்பிடிகள் ஸ்டீரியங், கியர், டாஷ்போர்ட் எல்லாம் தங்கம். வந்த 20 டிசைன்களில் 3 தேர்ந்தெடுக்கபட்டு அதை மக்களிடம் ஓட்டுக்குவிட்டு இறுதியில் தேர்வான இதை வடிவமைத்த 5வர் குழுவில் 2 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். டாடா குழுமத்தின் ஒரு அங்கமான கோல்ட் பிளஸ் என்ற தங்க நகைப்பிரிவிற்காக தயாரிக்கபட்டிருக்கும் இதன் மதிப்பு 22 கோடிருபாய்கள்.  இந்தியாவின் மிக குறைந்த விலை கார் நானோ.அந்த 2 லட்சரூபாய் காரை விலையுர்ந்த காராக்கி விற்பனைக்கு அல்ல விளமபரத்திற்கு மட்டும் என்றும் யாரும் பயன்படுத்தபோதில்லை எனறும் அறிவித்திருக்கிறார்கள்.

கார் 2


ஒரே ஒருவரின்  பயன்பாட்டிற்காக ஒரு புதிய கார்  பலகோடி மதிப்பில் வாங்கபட்டிருக்கிறது.  முன்னாள் மன்னர்கள் பாரம்பரியப்படி 4 குதிரைகள் இழுக்கும் சாராட்டில் இன்றும் முக்கிய விழா நாட்களில் வரும் இந்திய குடியரசு தலைவர்கள் நீண்ட நாட்களாக ப்யன்படுத்திவந்தது தேசிய காரான அம்பாஸிடர். 8 ஆண்டுகளுக்கு முன் அது வெளிநாட்டு காராயிற்று. அது இப்போது மாற்றபடுகிறது.
உலகின் மிகபாதுகாப்பான காராக கருதப்படும் மெர்சிடீஸ் பென்ஸ் கார் S600L   ஜெர்மனியிலிருந்து நமது குடியரசுதலைவரின் பயன்பாட்டிற்காக இறக்குமதி செய்யப்பட்டிருக்கிறது.  துப்பாக்கி குண்டுகள் துளைக்க முடியாத டயர்கள் வெடித்தாலும் நிற்காமல் ஓடக்கூடிய, விஷவாயு பரவினால் உடனே ஆக்சிஜன் நிரம்ப இப்படி பல வசதிகள்.  கார் தேர்ந்தெடுத்தபின் ஒராண்டாக பாதுகாப்பு அதிகாரிகளினால் பலகட்டங்களில் பாதுகாப்பு அமைப்புகள் சோதித்து பொருத்தபட்ட  இந்த காரை குடியரசு தலைவர் மட்டுமே உபயோகிக்க முடியும். விலையைம் மொத்த செலவையும்  ராணுவம் செய்திருப்பதால் தகவல் அறியும் சட்டத்தில் கூட அதை அறிய முடியாது. 6 கோடியிலிருந்து 8 கோடிக்குள் இருக்கும் என வல்லுனர்கள் மதிப்பிடுகிறார்கள்.  உள்ளே குடியரசுதலைவர் உடன் வரும் விருந்தினருடன் முகம் பார்த்து பேச வசதியாக சீட்டுகளை திருப்பிகொள்ளும் வசதிகளுடனும், வீடியோகான்பிரன்ஸிங் வசதியுடனும்  அமைக்கபட்டிருக்கும் இந்த காரில் வெளியே இருப்பவைகளை பார்கக தனி வீடியோ வசதிகள். பேசப்படுவது  ஓட்டுபவருக்கு கேட்க முடியாத வசதிகள் எல்லாம்.


கார்கள் உற்பத்தியிலும் ஏற்றுமதியில்   முதலிடத்திலிருந்தாலும்    நாட்டின் தலவருக்காக கார் இறக்குமதி செய்யும்,   விளமபரத்திற்காக மட்டுமே ஆடம்பரமாக தஙகத்தில் கார் தயாரிக்கும்  நாடு இந்தியாவாகதானிருக்கும். இந்த நாட்டில் தான் , கடனில்  கார் வாங்கிய சாமனியன்  தொடர்ந்து உயரும் பெட்ரோல்விலை, பராமரிப்புசெலவு, வங்கிகடனின்வட்டிவீதம் போன்றவைகளை சமாளிக்க திணறிக்கொண்டிருக்கிறான்.

14/11/10

அழிவின் விளிம்பில் எழுந்த புரட்சி.



சி

 

னந்து சீறி எழுந்த அந்த ஆழிப்பேரலைகளில் சிக்கி அழிந்து கொண்டிருந்தது ஜப்பானின் வடகிழக்கு கடற்கரை நகரமான  புக்கூஷிமா. மனிதர்கள் வீடுகள்கார்கள்சாலைகள்பாலங்கள் எல்லாம் கசக்கிபோட்ட காகிதங்களாக  சில நிமிடங்களில் கடல்அலைகளில் மிதந்த கோரத்தை உலகின் அத்தனை தொலைகாட்சிகளும்  ஒளிபரப்பி கொண்டிருந்தன.  அச்சத்துடனும் அனுதாபத்துடனும் பார்த்துகொண்டிருந்த பலகோடி பேர்களில் அந்த ஜெர்மானிய பெண்மணியும் ஒருவர். இரவில் தொடர்ந்து வந்த டிவி செய்திகளில் அந்த ஜப்பானிய நகரிலுள்ள அணு மின் உற்பத்தி உலைகளின் கூரை ஒன்று வெடித்ததையும் எந்த நிமிடத்திலும்  மற்றவைகள் வெடித்து அணுக்கதிர்கள் பரவும் அபாயமிருப்பதையும்அதை தடுக்க முடியாமல் தவிக்கிறார்கள் என்பது காட்டபட்டவுடன் “ காலையில்  அமைச்சரவையின் அவசர கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யுங்கள் “ என உதவியாளாரிடம் சொல்லிவிட்டு தனது நூலகத்தில் அணு உலைகளில் பாதுகாப்பு ப்ற்றிய புத்தகங்களை தேட துவங்குகிறார்.
அவர் ஜெர்மானிய அதிபர் திருமதி ஏஞ்சலா மெர்க்கீல் (Angela Merkel)

 “ரஷ்ய நாட்டின் செர்னோபைல் (Chernobyl) நகரில்  நடந்த அணு உலை விபத்துகள் மனித தவறினால் நிகழந்தவை,   அணுஉலைகளில் விபத்து ஏற்பட 0.5% கூட வாய்ப்பில்லை அணு மின் உற்பத்தி பாதுகாப்பானது போன்ற நமது  நம்பிக்கைகளை மாற்றி கொள்ள வேண்டும். இயற்கையின் சீற்றத்தினால் ஏற்படும் இந்த மாதிரி விபத்துகளிலிருந்து அணு உலைகளயும் அதன் அழிவில் எழும் பின்  விளைவுகளயும் யாரலும் தவிர்க்க முடியாது.  எனவே நமது மின் அணு உலைகளை மூட உத்திரவிடப்போகிறேன்.  அணு மின் சக்க்திக்கு மாற்றான எரிசக்தி   அதற்கான செலவு பட்ஜெட்உலைகளை படிப்படியாக மூடும் திட்ட அட்டவணை போன்ற பணிகளுக்கு அமைச்சகங்கள் முன்னுரிமை கொடுத்து உடனடியாக ஒரு வரைவு திட்டத்தை அடுத்த  4 நாள் கூட்டதில் விவாதிக்க வேண்டும்“ அந்த காலை நேர கூட்டதில் இந்த அதிரடி அறிவிப்பை கேட்ட அமைச்சர்களும் அதிகாரிகளும் திடுக்கிட்டு அதிர்ந்து போனார்கள். உடனடியாக எப்படி முடியும்?. மாற்று சக்திகான பெரும் செலவை எப்படி சமாளிபது?, எனற சந்தேகங்களை எழுப்பிய  அதிகாரிகளுக்கும்,  அடுத்த மாதம் சில மாநிலங்களில் தேர்தல்  நடக்க இருக்கும் நேரத்தில் இப்படி பட்ட அறிவிப்பு கட்சியையின் செல்வாககை குறைக்கும் என்று  சொன்ன கட்சி  அமைச்சர்களுக்கும் அதிபர் திருமதி ஏஞ்சலா மெர்க்கீல் (Angela Merkel) சொன்ன பதில் ” “வருங்காலத்தில் இத்தகைய பேரபாயங்களிலிருந்து ஜெர்மனியார்களை காக்கும் பொறுப்பு நமக்கு இருக்கிறது எனபதை மறக்காதீர்கள் “ எனபதுதான். கட்சிகாரகளின் பயத்தில் அர்த்தமிருந்தது. காரணம் கடந்த ஆண்டு இதே அதிபர் தான் உற்பத்திய துவக்கிய 8 ஆண்டுகளுக்கு பின் மின் அணு ஆலைகளை மூடி விடவேண்டும் என்ற விதியை  தளர்த்தி 12 ஆண்டுகளுக்கு என நீடித்தார்.. இருந்தாலும் அமைச்சரவை கூட்டதில்  சொன்னபடியே  ஓரே வாரத்தில் அறிவித்து  அதே நாளிலியே 4 அணு மின் உற்பத்தி ஆலைகளை மூடவும் உத்திரவிட்டார்.

 ஜெர்மனியின்  பல பகுதிகளில் 17 அணுமின் உலைகள் இருக்கின்றன   நாட்டின் தொழில் நகரங்களுக்கு மின்சாரத்தை தருபவை அவை. தொழிற்கூடங்கள் நிறைந்த   ஒரு நாட்டில் அதுவும் மொத்த மின் உற்பத்தியில்  28% த்தைதரும் மின் உலைகள மூட முடிவெடுக்க  துணிச்சல் வேண்டும். அதிலும்  அதிபர் ஏஞ்சலா மெர்க்கீல் (Angela Merkel) எடுத்தது மிக துணிச்சலான முடிவு.   ஏன் எனபதை தெரிந்து கொள்ள ஜெர்மனியின் இன்றைய அரசியலை புரிந்துகொள்ள வேண்டும்.
 ஜெர்மனியில் இப்போது ஆட்சியிலிருப்பது ஒரு 3 கட்சி கூட்டணி.. நமது நாட்டைபோலவே  கொள்கையளவில் சில அடிப்படை வேறு பாடுகளிலிருந்தாலும் ஆட்சியில் ஒருங்கிணைந்திருக்குக்ம் கட்சிகள் இவை. இதில் அதிக  பாரளமன்ற  உறுப்பினர்களை கொண்டது அதிபர் ஏஞ்சலா மெர்க்கீல் (Angela Merkel) லின் கிறஸ்டியன் டெமாகிரடிக் யூனியன் Christian Democratic Union கட்சி. ஜெர்மானிய அரசியல் சட்டபடி பராளூமன்றதின் மொத்த உறுப்பினர்களில் பெறுமானமையானவர்களின் ஒட்டை பெறும் ஒருவரைத்தான்   தலைவர்  நாட்டின் அதிபராக (Chancellor of Germany)  அறிவிப்பார். பிரதமரை போல அதிகாரம் பெற்ற இவர் தான் மந்திரிசபையை அமைக்கமுடியும். இந்த முறையினால் அதிக உறுபினர்களை பெற்ற கட்சியாக யிருந்தாலும் பாராளுமன்றத்தில்  அதிபர் தேர்தலில் 50%  எம் பி களின் ஓட்டுகளை பெற கட்சிகளின் கூட்டணி தேவை  இவர் அதிபராக உதவியிருக்கும் அந்த இரண்டு கட்சிகளில் ஏதேனும் ஒன்று இந்த திட்டத்திற்கு ஆதரவு அளிக்காவிட்டால்செயல்படுத்த முடியாது .பிடிவாதமாகயிருந்தால் அதிபர் பதவியுடன் ஆட்சியும்  பறிபோகும் அபாயமும் இருந்த  சுழ்நிலையிலும் இப்படி ஒரு முடிவை அறிவித்திருந்தது இவரது மன உறுதி அணுசக்தியைப்போல வலிமையானது என்பதை காட்டியது.
 ஜப்பானில் நிகழந்த அணு உலைவிபத்தினால் மட்டும் அதிபர் ஏஞ்சலா மெர்க்கீல் (Angela Merkel) அதிபர் இந்த முடிவை எடுக்கவில்லை. ஒரு சிறிய கிராமத்தில்  கிருத்துவ பாதிரியாரின் மகளாக பிறந்த இவர் கஷ்ட்டபட்டு படித்து கல்லுரரியில் ரசாயனத்தில் பட்டபடிப்பும்பெளதிகத்தில் முதுகலையும் பின்னர் அதிலேயே முனைவர் பட்டமும் பெற்று. பல்கலை கழகத்தில் ஆசிரியராக பணியாற்றியவர். போதித்த பாடம் அணுசக்தி. அதனால் அதன் வீரியமும்வீபரிதமும் நன்கு தெரியும். ஒருங்கிணைந்த ஜெர்மெனி உருவான் காலகட்டதில் 1989ம் ஆண்டில் ஆசிரியர் பணியிலிருந்து அரசியலுக்கு வந்து கட்சியில் மளமளவென் வளர்ந்து கட்சியின் செய்லாளரனவர். 2005ல் முதல் முறை அதிபர் தேர்தலில் வென்று ஜெர்மனியின் முதல் பெண் அதிபர் ஆனார். 2009ல் தேர்தலில்  கூட்டனியின் கட்சிகள் மாறினாலும் மீண்டும் அதிபராக தேர்ந்தெடுக்கபட்ட இவர்  ஐரோப்பிவின் செல்வாக்கு பெற்ற பெண்மணிகளின் பட்டியலில் முதலிடம் பெற்றவர்.  ஜெர்மன் மொழியை தவிர ரஷ்யன்,பிரெஞ்ச்,ஆங்கிலம் சரளமாக பேசும் இவர் எப்போதும் தன் நிலையை தெளிவாக உறுதியாக சொல்லும் திறமையான பேச்சாளார்.. கடந்த ஆண்டு நேரு நினைவு பரிசு பெற இந்தியாவிற்கு வந்திருக்கிறார்,இந்த 56 வயது அதிபர்.


தனது  கூட்டணி கட்சிகளின் தலைவர்களிடம் அணுஆலைகள் அகற்றபடவேண்டியதின்  முக்கியததுவத்தை விளக்கிய 15 மணிநேர ஆலோசனை கூட்டத்திற்கு பின்  அவர்களின் ஒப்புதலுடன் சட்ட வடிவாகவே இந்த அறிவிப்பு வெளியானது. ஜெர்மனியின்  எல்லா அரசியல் கட்சிகளிலும். பேராசிரியர்கள்முன்னாள் அரசு அதிகாரிகள்,பத்திரிகயளார்கள்  என ஒரு அறிவுஜீவிகளின் கூட்ட்மே இருக்கும்.  அதனால் அதிபரின் முயற்சிக்கு அரசியலுக்கு அப்பாற்பட்ட ஆதரவும் இருந்தது.
 இதன்படி ஜெர்மனியின் மினனணு ஆலைகள் எல்லாம் படிப்படியாக் முடப்படும். 2020க்குள்ளாக படிப்படியாக 17 ஆலைகளும் மூடபட்டு  காற்றாலைசூரியஒளி இயற்கை எரிவாயுபோன்ற்வற்றின் உதவியுடன்  குறைந்த செலவில் மாற்று எரிபொருள்கலிலிருந்து  தயாரிக்கபடும்  மின்சாரமே நாடு முழுவதற்கும் வழங்கபடும். இதற்கான திட்டஙகளுடன் வரும் ஆண்டுகள் அரசு செயல்படும்  .  2020ல்  ஜெர்மனி உலகின்  முதல்  பசுமைசக்தி (GREEN ENGERY NATION) நாடாக  இருக்கும். என அறிவித்திருக்கிறார். உலக அரங்கில் ஆச்சரியத்தை ஏற்படுத்திய இந்த அறிவிப்பை பல நாடுகள் வரவேற்றன. சுவிஸ் நாடு தாஙகளும் இதை பின பற்ற போவதாக் அறிவித்தது. ஜி8  நாடுகள் தங்கள் அணு உலைகளின் பாதுகாப்பை  பரிசிலிக்கும் பற்றி திட்டங்களை தொடங்கி விட்டன.
 இந்த திட்டத்தை முழுமையாக செயல் படுத்த  10 ஆண்டுகள் ஆகும். இவரது பதவிகாலம் 4 ஆண்டுகள்தான்.  அதற்குபின் அரசியல் மாற்றம் நிகழந்தால் திட்டம் என்னவாகும்?  ஜெர்மானிய அரசியல் சட்டபடி  மக்களின் அடிப்படை நலன்களை மாற்றி அமைக்கும்  எந்த சட்ட திருத்திற்கும்  பாரளாமன்ற ஒப்புதல் மட்டும் போதாதுமக்களிடம் வாக்கெடுப்பு நடத்த வேண்டும். அதனால் இதில் எந்த கட்சியும் மீண்டும் அணுமின் உலைகள் தேவை என  சொல்லி அரசியல் செய்யமுடியாது. அப்படியே செய்தாலும் மக்கள் ஏற்கமாட்டார்கள் எனபது அதிபர் ஏஞ்சலா மெர்க்கீலின் கணிப்பு.
பல பில்லியன் யூரோ செலவாகப் போகும் இந்த திட்டதிற்கு தேவையான நிதியை எப்படி சமாளிக்க போகிறாகள்.?  அணுமின் உலைகளின் செலவுக்கு ஒதுக்கபட்ட பணத்துடன்  புதிய காற்றாலை திட்டங்களில் தனியாருடன் சேர்ந்து அரசும் முதலீடு செய்யும்அன்னிய முதலீடுகள் வரவேற்கபடும். இங்கு வந்து மின்சாரம் தயாரித்து  அரசுக்கு விற்றும் மீதியை அண்டை நாடுகளுக்கு  “ஏற்றுமதி” “ செய்தும் பணம் சாம்பாதிக்க வாய்ப்புள்ள நாடாக ஜெர்மனி ஆக போகிறது என்கிறார் அதன் நிதி அமைச்சர்.
விபத்துகள் நிகழும் போது பல இழப்புகளோடு சில நன்மைகளும் ஏற்படும் என்று சொல்லப்படுவதுஉண்டு. சுனாமியால் ஜப்பானில் நிகழந்த பேரழிவினால் ஜெர்மனியில ஒரு பசுமைசக்திப் புரட்சி க்கு வித்திட்டிருக்கிறார் இந்த புரட்சிதலைவி.
  
















19/9/10

எரியும் திரியின் பின்னே..


எரியும் திரியின் பின்னே..


அருப்புகோட்டை நகரின் தெற்கு தெரு. மாலை நேரம். அன்று மின்வெட்டில்லை ஆனாலும் இருட்டு.
பற்ற வைத்துவிட்டு பரபரவென்று நாம் ஓடிவருவதற்குள் சரசரவென்று தங்கப் பொறியாக நகர்நது பலத்த ஒசையுடன் கிளம்பி வானில் ஒளிப்பூவாய் சிதறும் பட்டாசுகளின் திரிகளின் பிறப்பிடம் அது. இருண்டு கிடக்கும் சிமிண்ட் பூசாத செங்கல்சுவர்களும் ஓட்டுகூரையுமாகயிருக்கும் சின்ன சின்ன வீடுகள். ஒருகாலத்தில் நெசாவளார் வீதியாகயிருந்தது, இன்று ஒரு தறி கூட கிடையாது. மிகக்குறுகிய அந்த தெரு முனைகளில் குவியல்களாக திரி நூல்கள். கந்தக வாசனை.. குடும்பம் முழுவதும் குனிந்த தலை நிமிராமல் பிசியாகயிருக்கிறது. தெரியாதவர்கள் அனுமதிக்கபடாத அந்த தெருவில்நுழைந்த நம்மை சந்தேகத்துடன் பார்க்கும் கண்களும் உயரும் புருவங்களும் உடன் வரும் அவர்களின் தலைவர் களின் நண்பரை பார்த்ததும் அமைதியாகின்றன.
மிகமிக ஆபத்தான இந்த பட்டாசு திரி தயாரிக்கும் தொழில், இங்கே 100 வீடுகளில் எந்த அனுமதியுமில்லமல் திருட்டுதனமாக இருட்டில் நடந்துக்கொண்டிருக்கிறது. ஒரு சிறிய நெருப்பு பொறி பட்டால் கூட பெரும் விபத்தாகவிடக்கூடிய அபாயமிருப்பதால் வீடுகளில் சமையல் கிடையாது, பூஜை விளக்கு கூட கிடையாது.. கார்கள் கூட போக முடியாத இந்த தெருக்களில் தீயனைக்கும் வண்டிகள் நுழைவதை நினைத்துகூட பார்க்கமுடியாது.
இந்தியாவின் பட்டாசு நகரமான சிவாசியில் பட்டாசு திரிகள் தயாரிக்கபடுவதில்லை. ஒரு சில பெரிய நிறுவனங்களில் மட்டும் இதற்கு தனி பகுதி வைத்திருக்கிறார்கள். மற்ற ஆயிரக்கணக்கான தொழிற்சாலைகளுக்கு இங்கிருந்துதான் திரி போகிறது. பொட்டாசியம் நைட்டிரேட், கந்தகம், மற்றும் கரித்தூளில் தோய்த்த கருப்பு நூலும், மெல்லிய பேப்பரும் இவர்களுக்கு வழங்கபடுகிறது. அதை 3 மீட்டர் நீளத்திற்கு வெட்டி டேப்பாக வரும் பேப்பரை அழகாக அதன்மீது சுற்றய பின் ஆண்கள் அதை பெண் தொழிலாளிகளிடம் தருகிறார்கள். அவர் அதை தன் வெற்று தொடையில் திரித்து அளவான திரியாகாக்கி அடுக்கிறார். இந்த வெடி மருந்து பொருட்கள் இப்படி வெற்று உடலில் படுவது ஆபத்து என்பது அவர்களுக்கு தெரிந்திருக்கிறது. அதற்காக பவுடராக அரைத்த கரியை பூசிக்கொள்கிறார்கள். அது இன்னும் எவளவு பெரிய ஆபத்து எனபது அவர்களுக்கு தெரியவில்லை. 1500 திரி தயாரித்தால் கூலி 150 ருபாய்கள். வாரத்திற்கு 800 முதல் 1000வரை ஒரு குடும்பம் சம்பாதிக்கிறது. சீஸன் நேரமாதலால் ஓவர் டைம் வேலை செய்கிறார்கள். சில தெருக்கள் தள்ளியிருக்கும் உறவினர்களுக்கும் வேலை கொடுக்கிறார்கள். ஆண்டுதோறும் பட்டாசு தொழிலில் நிகழும் விபத்துகள் பற்றி கேட்டால் இதுவரை திரி தயாரிப்பில் எதுவும் நடக்கவில்லையே என்கிறார்கள். ஆனால் தாங்கள் யாருக்காக வேலை செய்கிறோம் என்றுகூட தெரியாத இவர்களில் சிலருக்கு இது அனுமதியில்லமல் சட்டவிரோதமாக செய்யபடும்தொழில் என்பது தெரிந்திருக்கிறது. “இங்கு போலீஸ், மற்ற அதிகாரிகள் வரமாட்டார்கள்.எங்கள் தலைவர்கள் பார்த்துகொள்வார்கள்” என்று சொல்லும் இவரகளின் இந்த தொழில் இரண்டு பெரிய கட்சிகளின் உள்ளூர் தலைவர்களின் ஆசியுடன் இயங்குகிறது. தீப்பெட்டி, பட்டாசு தொழிலாளர்கள். தமிழகத்தின் மிக முக்கிய ஓட்டு வங்கிகளில் ஒன்று அதை இழக்க எந்த கட்சியும் தயாரில்லை
பலஆண்டுகளாக பலருக்கு வேலைவாய்ப்பு தரும், இருட்டில் திருட்டுதனமாக நடைபெறும் இந்த தொழிலுக்கு தனியாக எல்லாவித பாதுகாப்பு வசதியுடன் அரசு ஒரு ‘வெடிமருந்து பூங்கா' இதே பகுதியில் நிறுவ முடியதா?




ழு படங்களுடன் பேட்டிகள் வெளியானால் அவர்கள் குடும்பத்திற்கு வேலை போய்விடும் என்பதால் படங்கள் எடுக்க அனுமதிக்க படவில்லை.

யாருக்காக இந்த ஓட்டம்



கடந்த சில ஆண்டுகளாக மிகப்பெரிய  அளவில் விளம்பரங்கள் அரசியல், சினிமா பிரபலங்களின் கொடிசைப்புகள்,இசைகலைஞர்களின் நிகழ்ச்சிகள்  என்ற  ஆராவாரங்களுடன்துவக்கம்  என்று நிகழ்ந்து கொண்டிருக்குகிறது மாரத்தான் ஓட்டங்கள்முழுமராத்தான், அரை மாராத்தான், நகரின் பெயரில் ஒரு சிறியமினி மாராத்தான் என பல ஒட்டங்கள்சென்னைக்கு  4 ஆண்டுகள் முன் அறிமுகமான இந்த ஓட்டங்கள் அதற்கு முன்பே மும்பபையிலும் டெல்லியிலும் ஆண்டுதோறும் நிகழ்கின்றன. பல கோடிகளில் பணம்புரளும்  இந்த ஓட்டங்களுக்கு கார்ப்ரேட்களின் ஸ்பான்ஸ்ர்ஷிப் ஆண்டுதோறும் அதிகரித்துவருகிறது,
1981ல் புற்று நோய் பற்றிய விழிப்புணர்ச்சி ஏற்படுத்தவும் அதற்கான நிதி ஆதாரத்தை பெருக்கவும் கனடா நாட்டில் டெரிபாக்ஸ் எனபவரால் மிக எளிமையாக துவக்கபட்டு மிக பெரிய வெற்றியை எட்டிய இந்த சமூக விழிப்புணர்வு ஒட்டம் இப்போது உலகின் பல நாடுகளில் எதாவது  ஒரு சமுக பிரச்சனை விழப்புணர்ச்சிகாக நடத்தப்பட்டு பணம் சேர்க்கபடுகிறது.
ஆனால் இங்கே இது ஒரு பெரிய விளம்பர வியாபரமாகி விட்டது. பங்கேற்பவர்களுக்கு ஓட்டதின் நோக்கம் தெரிவதில்லை. ஸ்பான்ஸ்ர்களின் விளம்பரம் ஒட்டத்தின் நோக்கத்தையும் அது மக்களிடம் ஏற்படுத்தவேண்டிய தாக்கத்தை விட அவர்களின் நிறுவனம் அல்லது விற்பனை செய்யும் சாதனங்களை பற்றிய தாக்கத்தைத்தான் அதிகம் ஏற்படுத்துகிறது.  கடந்த ஆண்டு  துபாயில் வாழும் புற்று நோயால் தாக்கபட்ட  அக்காஷ் சென்னையில் டெரிபாக்ஸ் ஒட்டத்தை அறிமுகபடுத்தினார். இதற்காக பல பள்ளிகளில் காலை பிரார்த்தனை கூட்டதில் பேசினார். சில  வாரங்களக்கு முன் சென்னை  IIT யில் நிகழந்த இரண்டாமாண்டு ஆண்டு ஒட்டத்தில் கடந்த ஆண்டைவிட அதிகம்பேர் பங்கேற்றது மகிழ்ச்சியான விஷயம். ஆனால் அதில் பலருக்கு நோக்கம் தெரியாதிருந்ததுதான் வருத்தமானது. ஏன் ஒடினீர்கள்? எனற் கேள்விக்கு என் டிரையினர்  இது ஒரு நல்ல பயிற்சிக்கான வாய்ப்பு போ என்று சொன்னார்என் பிரண்டஸ் கூப்பிட்டார்கள் போன்ற பதில்கள் தான் கிடைத்தது.
அதேபோல் சமீபத்தில்  80000 பேருக்குமேல் பங்குகொண்டதாக அறிவிக்கபட்ட. சென்னை மாராத்தானில் பங்குகொண்ட பலருக்கு அது உதவுப்போகும் நிறுவனம் பற்றி எதுவும் தெரிந்திருக்கவில்லை. “எங்கள் வங்கி இதை ஸ்பான்ஸர் செய்திருக்கிறது.பெரிய அதிகாரிகள் பங்கேற்கிறார்கள் அவர்கள் கண்ணில் நான் பட வேண்டும்,” “சிவமணியின் டிரம்ஸ்சை இலவசமாக கேட்கலாம்எனபது போன்றது தான் பலரின் பதில். பல கோடிகளில் இந்த நிகழ்ச்சிகளுக்கு விளம்பரம்  செய்பவர்கள்  கடந்த ஆண்டுகளில் நடந்த ஓட்டங்களினால் சேகரித்த பணத்தில் என்ன தொண்டு செய்தார்கள் என்பதை பற்றி ஒரு சின்ன விளம்பரம் கூட கொடுக்காதபோது பங்குகொள்பர்களுக்கு தெரியாமல் இருப்பதில் வியப்பு ஒன்றுமில்லை என்றார், 50 குழந்தைகளை கூட்டிவந்த ஒரு ஆசிரியை.
ஒடியவர்கள் ஒடும்போழுதே குடித்துவிட்டு தூக்கிபோட்ட பிளாஸ்டிக் பாட்டில்களை பொறுக்க எழைக் குழந்தகள் ஒடிவந்த காட்சி மனதை உறுத்தியது.
பதவியிலிருக்கும் அரசியல்வாதிகளின் ஆசியோடு சிலர் தங்களை முன் நிறுத்திக்கொள்ளவும் ஸ்பான்ஸ்ர்கள் அவர்கள் உதவியோடு தங்களது தேவைகளை எளிதாக நிறைவேற்றிக்கொள்ளவும் இந்த ஓட்டங்கள் ஒரு எளிதான வழியாகிவிட்டது என்கிறார் ஒரு மூத்த பத்திரிகயாளார். கார்ப்ரேட்கள்  அவர்களது சமூக கடமையாக செய்த பணிகளை வெளியிடவேண்டியது(Corporate Social Responsblity) இபோது கட்டாயமாக்கபட்டிருக்கிறது. அதனால் சில நிறுவனங்கள்  அந்த கணக்கில் புத்திசாலிதனமாக இந்த விளமபரங்களை செய்கிரார்கள். தவிர்க்கமுடியாதாது   இது என்கிறார் பங்கு பெற்ற ஒரு நிறுவனத்தின் உயர் அதிகாரி.
1981 டெரிபாக்ஸ் கனடாவில் ஓட்டத்தை துவக்கியபொழுது தேடிவந்த ஸ்பான்ஸ்ர்களை நிராகரித்தார்.சொன்ன காரணம்விளம்பரங்கள் ஒட்டதின் நோக்கத்தை தகர்த்துவிடும்.” தொடந்து அந்த ஓட்டத்தை உலகமெங்கும் நடத்தி  பல கோடிகளை நிதியாக சேர்த்தளிக்கும்   அவரது அறக்கட்டளை  இன்றும் கார்ப்பெரட் விளம்பரங்களுக்காக ஸ்பாஸ்ர்களை ஏற்பதில்ல.

(கல்கி 19.09.2010)