10/4/11

கலியுக கர்ணன்


கலியுக கர்ணன்


வாரன்பஃபெட் 2008ல் உலக கோடீஸ்வர்களில் முதல் இடத்திலிருந்தவர். பில்கேட்டினால் பின் தள்ளபட்டு இன்று 3 வது இடத்திலிருக்கிறார். அமெரிகாவிலுள்ள ஒம்கா நரில் 1930ல்  சாதரணகுடும்பத்தில் பிறந்த பஃபெட் தன் வயது சிறுவர்கள் விளையாடிக்கொண்டிருந்த போது வியாபாரம் செய்து 11வயதிலியே பங்கு சந்தைக்கு அறிமுகமாகி 17 வயதில் 5 ஆயிரம் டாலர் சம்பதித்தவர்.பென்கிராம் என்ற பங்குசந்தை நிபுணரை குருவாக ஏற்ற ஏகலைவன். 1965ல் பெர்க்‌ஷ்யர் ஹாத்வே என்ற டெக்ஸ்டையில் கம்பெனியை வாங்கி அதன் தலையெழுத்தோடு அமெரிக்க பங்கு சந்தையின் பிமப்த்தையும்  மாற்றியவர்.அவரது நிறுவனம் பல துறையில் முதலீடு செய்யது அள்ள அள்ள பணம் என்ற ரீதியில் சம்பாதிக்க துவங்கி 2008ல் உலகின் முதல் பணக்காரானவர். இவரது நிறுவனத்தின் பங்குகளின் விலை ஏற்ற இறக்கம் அமெரிக்க பங்குசந்தையின் குறியீட்டு எண்ணைவிட ஒவ்வொரு நிமிடமும் கவனிக்கபடுமளவிற்கு பிரபலமானது. இவர் தன் நிறுவன முதலீட்டாளாருக்கு எழுதும் கடிதத்தினால்  அமெரிக்க பங்குச் சந்தையின் போக்கு மாறுவதால் உலகமே உற்று கவனிக்கும் இந்த மனிதர் கடந்த வாரம் இந்தியாவிற்கு வந்திருந்தார். அதிபர் ஒபாமாவின் வருகையை காட்டிலும் அதிக ஆர்வத்தை உண்டாக்கியிருந்தது இந்த 80 வயது இளைஞரின் முதல் இந்திய வருகை.
வருகையின் காரணம் பங்களூரில் அவரது  நிறுவன முதலீட்டில் டேக்டெக் என்ற நிறுவனத்தின் துவக்க விழா என்று சொல்லபட்டாலும் இப்போது இந்தியாவில் சூடுபிடித்துவரும் இன்ஷ்யூரன்ஸ்  தொழிலில் அனுமதிக்கபட்ட அன்னிய முதலீடான 26% த்தை 50 % ஆக அரசை உயர்த்த செய்து அதில் நுழைந்துவிடவேண்டுமென்பத்தான்.. கர்நாடக அரசின் விருந்தினராக் கவுரவிக்கபட்ட பஃபெட் பங்களூரில் சிறப்பு அழைப்பாளாக அழைக்கபட்டவர்களின் கூட்டத்தில், நெற்றியில் பளீரென்ற குங்குமப்பொட்டுடன் போட்ட ஒற்றை சர மல்லிகை மாலையை கழட்டாமல்  பேசியதில் கேட்டவை.
Ø  இந்தியாவிற்கு மிக தமாதமாக வந்ததிருப்பதை உணர்கிறேன். வரும் ஆண்டுமுதல் ஆண்டு தோறும் எனது நிறுவனம் இந்தியாவில் பெருமளவில் மூதலீடு செய்யும்.
Ø  ஷேர் மார்கெட்டில் அடுத்தவர்கள் பேராசைப்படும்போது நீங்கள் பயப்படுங்கள். மற்றவர்கள் பயப்படும்போது நீங்கள் பேராசைப்படுங்கள்.
Ø  உங்கள் ஷேர்களின் மதிப்பு  50% விழுந்தால்  பீதி யடையபவரா நீங்கள்? அப்படியானால்  நீங்கள் ஸ்டாக்மார்கெட்டிலிருக்க லாயக்கில்லாதவர்.
Ø  உங்களால் புரிந்துகொள்ள முடியாத பிஸினஸில் முதலீடு செய்யாதீர்கள்
Ø  நானும் இப்போது இந்தியாவிலிருக்கும் நணபர் பில்கேட்டும் இந்திய கோடீஸ்ரர்களை சந்தித்து சம்பாதித்ததில் பெரும்பஙகை சமுதாயத்திற்கே திருப்பி கொடுக்க வேண்டியதின் அவசியத்தை வலியுறுத்தபோகிறோம்.
Ø  என் சொத்தில்(50பில்லியன் டாலர்கள்- )  99%த்தை என் வாழ்நாளுக்குள் நனகொடைகளாக வழங்க தீர்மானிருக்கிறேன். மீதி என குடுபத்தினருக்கு போதும். அவர்களின் தேவைக்குமேல் விட்டு செல்வது அவர்களுக்கு தேவையற்ற பிரச்சனைகளை உருவாக்கும்.  நான் இவவளவு பணத்தை அறககட்டளைக்கு கொடுத்தாலும் என் சந்தோஷமான வாழ்க்கையையோ எனக்கு பிடிததவவைகளையோ ,என் விடுமுறையையோ  இழக்க போவதில்லை. எனக்கு அதிகமாகயிருக்கும் இந்த பணம் பலருக்கு அவசியமாயிருக்கிறது.
Ø  நணபர் பில்கேட் இதை ஏறகனவே துவக்கி உலகளவில் 25 பில்லியன் டாலர்கள்  கல்வி, மருத்துவம் போன்றவற்றிருக்கு செலவிட்டிற்கிறார்.. நானும் அந்த வழியில் செல்ல விரும்புகிறேன்.
1985-ல்  ஹாத்வே நிறுவனத்தில் சேர்ந்த அஜித் ஜெயின் என்ற இந்தியர். இன்று இவரது நம்பிக்கைக்கு பாத்திரமான இவருக்கு அடுத்த நிலை அதிகாரி.  அஜித்தின் கடின உழைப்பால், திறமையான நிர்வாகத்தால்  பஃபெட்டின் ஹாத்வே நிறுவனக்கு பல மடங்கு பணம் மழையாக் கொட்டியது.பஃபெட்டின் வாரிசாக போகிறவர் என்பது அமெரிக்க பங்குசந்தையின் கணிப்பு. அவரைப்பற்றி பேசும்போது
Ø  அஜித் என்னைவிட மிகததிறமைசாலி. ஹாத்வேக்கு  என்னைவிட அதிகம் சம்பாதித்து கொடுத்தவர். கடுமையான திறமையான, நாணயமான உழைப்பாளி. அவரை எனக்கு தந்ததற்கு இந்தியாவிற்கு நன்றி சொல்லுகிறேன். அவரைபோல இன்னும் ஒருவர் இருந்தால் உடனே என்னிடம் அனுப்புங்கள்.

  

புத்தக அறிமுகம்


நூல் அறிமுகம்

திராவிட மாயை-ஒரு பார்வை                               ஆசிரியர்  சுப்பு.

இருப்பதை மறைப்பது மாயை. இல்லாதை இருப்பதுபோல் காட்டுவதும் மாயயே. முன்னது மெய்மேல் போர்த்திய பொய். பின்னது பொய்யையே மெய்யென காட்டுவது.  இன்று தமிழக அரசியலில் அழியாத இடம்பிடித்து விட்ட,  திமுக விற்கு பிறகு பிறந்த கட்சிகள் விட்டு விடமுடியாத அடைமொழியான “திராவிடம்” “ எனபது ஒரு” பொய்- ஒரு தோற்றுவிக்கபட்ட மாயை அதை திராவிட இயக்கங்கள் விடாப்பிடியாக நிர்வகித்துவருகின்றன எனபதை தனது நீண்ட ஆராய்சிக்கு பின்னர்  இந்த புத்தகத்தில் ஆசிரியர் சான்றாவணங்களோடும், மேற்கோள்களுடனும் விளக்குகிறார். நீதிகட்சி,சுயமரியாதை இயக்கம்,திராவிடர்கழகம், திராவிடமுன்னேற்ற கழகம் குறித்து நேர்மையாக விமர்சனம் செய்யமுடியாத இன்றைய சுழலில், 1917 முதல் 1944 வரையிலான காலகட்டத்தில் தமிழக அரசியலில் ஏற்பட்ட மாறுதல்களின் வாயிலாக “ திராவிட” “ எனற மாயை தோற்றுவிக்கபட்ட வரலாற்றை விவரிக்கும் கட்டுரைகளின் தொகுப்பு இந்த நூல்.
`திராவிடம் எனபது தமிழ்நாடு மட்டுமில்லை. அது தமிழ்ச்சொல்லுமில்லை. விந்திய மலைக்குதென்புறம் உள்ள நிலப்பகுதியே திராவிடம் என அழைக்கப்பட்டது.1856ல் அதுவரை நிலப்பரப்பை குறிக்கும் சொல்லாக இருந்த  “திராவிட” “என்ற சொல்  கிருத்துவ பாதிரியார் கால்வெல்ட்னிலால் தங்கள் மதத்தை பரப்ப ஒரு  ஆயுதமாக, திராவிட இனத்தை குறிக்கும் சொல்லாக,  மாற்றியமைக்கபட்டிருக்கிறது.  எப்படி அரசியல் லாபங்களுக்காக அந்த  திராவிட இனவாதத்தை ஒரு  அரசியல் கொள்கையாவே அறிவித்து  திராவிட கழகத்தை நிறுவி ஈ.வெ.ரா வளர்த்தார், தொடர்ந்து வந்த அவரது சீடர்கள் எப்படி அந்த மாயயை தொடர்ந்து போற்றினார்கள் எனபதை   பல கட்டுரைகள் விவரிக்கின்றன.
19ம்-மற்றும் 20 ம்நூற்றாண்டு தொடக்க்த்தின் முக்கிய நிகழ்வுகள், தாழ்த்தபட்டோரை திராவிட இயக்கதினர் நடத்திய விதம்,வைக்கம்போராட்டம் பற்றிய உண்மைகள், ஊடகங்களால் உருவாக்க பட்ட மாயை, மகாத்மா காந்தியின் தமிழக விஜயம், இடஒதுக்கீடு வந்த வழி, த்மிழறிஞராக போற்றபடும் கிருத்தவ பாதிரியார் கால்வெல்ட் செய்த ஜாதி அரசியல்,தமிழக் வேளாண்மை பொருளாதாரசூழல், வெகுசன இலக்கியங்கள் ஈவெராவின் பிரமாண எதிர்ப்பு, இரட்டைவேடம் அந்த காலகட்டதில் தேசிய இதழ்களின் போக்கு இப்படி பல விஷயங்களைப்பேசுகிறது இவரது 42 கட்டுரைகள்
தொடர்ந்து வந்த தலைமுறையினர்மீது திணிக்கபட்ட பிராசார பொய்களை அகற்றுவதற்கும் அதை பரப்பிவருவோரின் மூகமூடிகளை களைய முயற்சிப்பதற்கும மிக அசாத்தியமான் துணிவும், உணர்ச்சிவசப்படாமல் அறிவு பூர்வமாக அணுகும் மனப்பான்மையும் ஆதரங்களை அடுக்கும் திறமையும், எவரையும் புண்படுத்தாமல் எழுதும் நாகரிகமும தேவை. அனைத்தையும் இந்த தொகுப்பின் ஆசிரியர் சுப்புவின் எழுத்தில் காணமுடிகிறது. கட்டுரையில் சொல்லப்படும் எந்த விஷயமும் அந்தந்த காலகட்டதில் வந்த பத்திரிகைகளின் தேதி வாரியான செய்திகள் ,பின்னால் அதுபற்றி வெளி வந்த புத்தகங்களளின் பக்கங்கள் வார பத்திரிகைகளின் கட்டுரைகள் போன்ற ஆதாரஙகளுடன்  சொல்லபட்டிருக்கின்றன. இப்படி ஆதாரபூர்வமாக, ஆராய்ச்சிசெய்து எழுதுவதற்காக தன் பணியிலிருந்து 5 ஆண்டுகள் தன்னை விடுவித்துக்கொண்டவர் இவர்.
இந்தியர்கள் எவரும் ஆரியர்களும் இல்லை, திராவிடர்களும் இல்லை என்று மரபணு ஆய்வில் உறுதி செய்யபட்டுவிட்டாலும்,ஆரியம் ஒரு இனம், திராவிடம் ஒரு இனம் எனபதை மானுடவியல் அறிஞ்ர்கள் எவரும் ஏற்றுகொள்ளவிதில்லை என்றாலும்,அம்பேதகாரிலிருந்து சோ வரை  எழுதியிருந்தாலும் பிராசார வலிமை, அரியணை தந்த வசதி, மக்களின் பரவலான அறியாமை, படித்தவர்களின் மெத்தனம், அறிவுள்ளோரின் துணிவின்மை ஆகியவற்றால் திராவிடம் என்ற மாயை வளர்க்கபட்டிருப்பதை புரிய வைக்கிறார்.

மிக சீரியஸான இந்த கட்டுரை தொகுப்பில் சில சுவாரஸியமான, ஆச்சரிய தகவல்களும் சிதறி கிடக்கின்றன. சாம்பிளுக்கு ஒன்று. பக்188
 “இப்பத்திரிகையை திறப்பதற்கு ஈசன் அருளால் ஸ்ரீ ஸவாமிகள் போன்ற பெரியார் கிடைத்த்து அஃதெயாகும். இறைவன் அருளாலும், சுவாமிகள் அருளாலும் பத்திரிகை  என்றும் நிலைபெற்று மற்ற பத்திரிகைகளிடமுள்ள குறை யாதுமின்றிச் செவ்வனே நடைபெறவேண்டுமாய் ஆசிர்வதிக்குபடி சுவாமிகளை வேண்டுகிறேன் “ கேட்டுகொண்டவர் ஈவெரா. துவக்க விழா நடைபெற்ற பத்திரிகை - குடிஅரசு” – அழைக்கபட்டிருந்தவர் சிவ சண்முக மெய்ஞ்ஞான சிவாச்சாரிய சுவாமிகள் என்ற பெயருடைய ஞானியரடிகள்
குடிஅரசின் மேலட்டையில் “ சாதிகள் இல்லையடி பாப்பா” “ என்ற பாரதியாரின் வரிகள் அச்சிடபட்டிருந்தன.ஆனால் அதற்கு அருகிலேயே ஆசிரியர் பெயர் இருந்தது.ஆசிரியர்கள் இருவர் ஈ.வெ.ராமசாமிநாயக்கர் மற்றும் வ. மு தங்கபெருமாள் பிள்ளை. இராண்டாண்டுகள் பத்திரிகை இப்படி சாதிப்பெயருடன் தான் வந்திருக்கிறது.
தமிழக அரசியலிலிருந்து ” “திராவிட“ என்ற பெயரை அகற்றுவது அவ்வளவு எளிதல்ல.ஆனாலும் உண்மை வரலாற்றை ஆழ்ந்த ஆராய்சிக்கும், கடினஉழைப்புக்கும் பின் வரும் தலைமுறையினருக்காக பதிவு செய்திருக்கும் ஆசிரியரின் பணி பாராட்டுக்குரியது.
R

தேர்தல் 2012


2G ஸ்பெக்ட்ரம் ஊழலினால் தமிழ் நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்படுமா?

தேசத்தையே உலுக்கிய நாடுமுழுவதும் எல்லா மீடியாவினாலும் இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய ஊழலாக வர்ணிக்க்பட்ட 2ஜி அலைவரிசை ஊழலின் தாக்கம் எந்த அளவு தமிழக தேர்தலில் இருக்கும் ? ஆட்சி மாற்றம் ஏற்படுமா ?
எதிரணியின் கனவும் கணிப்பும் அதுவாகயிருந்தாலும் இந்திய தேர்தல் சரித்திரத்தை சற்று திருப்பிபார்த்தால் அது வேறுசில விஷயங்களையும் சொல்லுகிறது. ஆரம்ப காலத்திலிருந்தே ஒவொரு தேர்தலின்போதும் ஒரு ஊழல் பிரச்சனை எழுந்து விவாதிக்கபட்டிருக்கிறது. 1980கலின் இறுதியில்  ஃபோபர்ஸ் ஊழல் வெடித்தெழுந்த பின் ௧௯௮௯ தேர்தலில் காங்கிரஸ்கட்சி மிகப்பெரியதோல்வியை சந்த்தித்து ஆட்சியை இழந்தது. அதே நிலை இன்று தமிழக்தில் திமுக விற்கு நேருமா?
அன்றிருந்த நிலையை இன்றைய சூழ்நிலையுடன் ஒப்பிடமுடியாது.  “மிஸ்டர் கீளின் என்ற இமேஜுடன்  ஜீன்ஸ் டீ ஷ்ர்ட் அணிந்த துடிப்பான இளைஞரை முத்லமுறையாக தலைவராக் பார்த்த மக்கள் ஃபோப்ர்ஸ் ஊழலினால் அதிர்ச்சியடைந்தார்கள். அந்த காலகட்டத்தில் அது மக்களுக்கு செய்த துரோகமாக எதிர்கட்சிகள் வர்ணிக்க்பட்டதை மக்கள் எற்றார்கள். இன்று சூழ்நிலை அப்படியில்லை. கடந்த 30 ஆண்டுகளில்  ஊழல் இந்திய அரசியலில் ஒரு அங்கம். எந்தகட்சியும் ஊழலுக்கு விதிவிலக்கு இல்லை எனபதை மக்கள் உணர்ந்து கொண்டுவிட்டார்கள். ஃபோபர்ஸை  தொடர்ந்து பல ஊழல்கள் வெடித்திருக்கின்றன். அதில் பலவற்றை மக்கள் மறந்தே போனார்கள்.அதனால் மத்திய அர்சில் ஆட்சி மாற்றங்கள் நிகழவில்லை.
இந்திய அரசியலில் எந்த ஊழலும் வெளிவந்த  இரண்டாடுகளுக்கு பின் தேர்தல் வந்தால்  அது ஆளும் கட்சிக்கு பெரிய அளவில் பாதிப்பை உண்டாக்கியதில்லை. தேர்தல் நெருங்கிய காலத்தில் ஊழல் வெடித்தால் அது ஆளும் கட்சியை பாதிக்கும். இந்த தியரியின் படி திமுக இந்த மிகப்பெரிய தோல்வியை சந்திக்கும்.ஆனால் இந்திய வாக்காளார்கள் ஊழல்களிலும் எது தேசிய மட்ட ஊழல் எது உள்ளுர் சமாசாரம் எனபதை ஆராய்ந்து பார்க்க கற்றுகொண்டுவிட்டார்கள்.  மாநில அளவில் சமப்ந்தபட்ட ஊழல் இருந்தால் அது மாநில, தேசிய அளவிலிருந்தால் பாராளுமன்ற தேர்தலிலும் எதிரொலிக்கிறது. அதிமுகவின் ஆட்சியில் எற்பட்ட டான்சி ஊழல்,சொத்துகுவிப்பு போன்றவை தமிழக தேர்தலில் மாறுதலை ஏற்படுத்தின. ஆனால்  தேசிய பொருளாதாரத்தையே பாதித்த  யூனிட் ட்ரஸ்ட்  பங்குசந்தை, பல்கோடிஹவாலா, எம்பிகள் விலைபேசபட்டது போன்ற ஊழலகள் தொடர்ந்து வந்த தேர்தலகளில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. 1980லிருந்து இதுவரை 73 பெரிய ஊழல்கள் 3 நாள் தலைப்புசெய்தியாக இருந்து பின் மறக்கபட்டிருக்கிறது. உபியில்2500கோடி தாஜ்மஹால் வணிகவளாக ஊழல், தொடர்ந்து வந்த தேர்தல்களில் மயாவதியின் ஆட்சியை பாதிக்கவில்லை. ஜார்கண்டின் முன்னாள் முதல்வர் 4000கோடி ஊழல் அம்பலமாகி கைது வாரண்ட் வெளியிட்பட்டிருக்கும்  நிலையிலும் தனது நண்பர்களுக்காக தேர்தல் பிராசாரம் செய்து அவர்கள் வெற்றிபெறார்கள். பல கோடிகளில் பேசப்ட்ட கால்நடைதீவன் ஊழல் லாலுபிராசத்தின் வளர்ச்சியை தடுக்கவில்லை.
” “ஐந்தாண்டுகளில் அறிவித்த இலவசங்கள், கவர்ச்சி திட்டங்கள் விள்மப்ரங்களுக்கு பின்னும் திமுக இன்று மகககளிடையே 2ஜி ஊழலினால் நம்பிக்கையை இழந்து விட்டது “ என்கிறார்  திருச்சியிலுள்ள தேர்தல் கணிபாளார், மயிவாகனன் தஙகளது கவர்ச்சிகரமான திட்டங்களின் வெற்றிகளினால் ஒட்டுநிச்சயம் என்ற நிலையில் 2ஜி விவகாரம் பின்னைடவை எற்படுத்தியிருக்கிறது என்பதை திமுக உணர்ந்தே இருக்கிறது. அதிமுக விற்கு சாதகமாக அடிக்கும்  இந்த காற்றை, ஜெயலலிதா எப்படி ஊழல் ராணியாக உயர்ந்து சொத்துகுவித்தார் என்ற பழைய கதையைச் சொல்ல ஆர்ம்பித்து திசைதிருப்ப துவங்கியிருக்கிறது. ராஜா தலித் எனப்தால் பழிவாங்கப்ட்டுவிட்டார், அவ்ர் செய்த காரியத்தினால்தான் செல்போனில் 30 பைசாவிற்கு பேசமுடிகிறது எனற ரீதியில் பிரசாரம் துவங்கியிருக்கிறது.
திரு.எம்.ஜி தேவசகாயம் என்ற முன்னாள் ஐஏஸ் அதிகாரி” “நேர்மையான தேர்தல்களுக்கான் அமைப்பில்”””“ அங்கம் வகிப்பவர்.தமிழகம் முழுவதும் பயணம் செய்து நேர்மையான் தேர்தல் குறித்த விழுப்புணர்வை ஏற்படுத்தும் பணியை செய்பவர். அவர் “ 2 ஜி ஊழல் கிராம மக்களுக்கு புரியவில்லை. மீடயாக்கள் சொல்லும் அரசுக்கு எற்பட்டிருக்கும் நஷ்டம், மதிப்பீடுட்டு நஷடம் எனப்தெல்லாம் அவர்களுக்கு புரியவில்லை. கிராமமக்கள் கேட்கும்கேள்வி எபபடி அவ்வளவு பெரிய அளவில்பணத்தை சுருட்டமுடியும்? அவர்கள் பெரிய அளவில் எல்லாம் ஊழல் செய்துவிடமுடியாது என்று நினைக்கிறார்கள். நகர்புற ம்ககளுக்கு நன்றாக விஷயம் புரிந்திருக்கிறது. ஆனால் இந்த படித்த விஷயம் தெரிந்த நகர்புற மக்களில் எத்தனைபேர் தேர்தல் நாளில் ஒட்டுசாவடிக்கு வந்து தங்கள் கடமையை செய்யபோகிறார்கள்? என்கிறார்.
கிராம மக்களை அவ்வளவு எளிதாக மதிப்பிட்டுவிடமுடியாது. ரமாநாதபுரத்திலும், கும்பகோணத்திளும் 2ஜி ஊழலைகாட்டும் கோலபோட்டி,கட்டுரைபோட்டியில் கிராம பெணகளும் மானவர்களும் பெரிய அளவில் பங்குபெற்று அந்த விஷயதை எந்த அளவிற்கு  புரிந்துகொண்டிருக்கிறார்கள் எனபதை காடிட்டினார்கள் எனகிறார் திரு ஆர்  உதய்குமார்.  இவர்  அதிமுக மாநில மாணவர் அணிசெயலாளார்.
2ஜி பிரச்ச்னையில்லாமலேயே, இந்த தேர்தலில் கடுமையான விலைவாசி உயர்வு, பலதுறைகளின்  ஒரு குடும்பத்தினரின்ஆதிக்கம், ஆளுவோருக்கு எதிராக எழும்போக்கு போன்றவைகளினால் திமுகவின் வெற்றி வாய்ப்பு குறைவே. ஆனால்  தமிழக தேர்தலில் எபோதுமே  சில கூட்டல் கணக்குகள் முடிவை நிர்ணயித்திருக்கின்றன. கடந்த தேர்தலின் கட்சிகள் பெற்ற வாக்குகளின் அடிப்படையில் இன்று இருக்கும் அணிகளின் நிலையை கணித்தால் அதிமுக அணிக்கு 43 %மும் திமுக அணிக்கு 47% வ்ருகிறது.  (AIADMK+DMDK+MDMK+LEFT=43.1%,    DMK+CONGRESS+PMK+IUML=47.10)  2 ஜி ஊழலின் பாதிப்பால் குறைந்த பட்சம் இந்த 4% வாக்கார்கள்  மாறுதல் வேண்டி மாற்றி ஓட்டளித்தால் கூட ஆட்சிமாறும் வாய்ப்பு தான் அதிகம்.   
 ரமணன்



3/4/11

தேர்தல் 2012


திமுக ஆட்சியில் தொழில்வளர்ச்சி, வேலைவாய்ப்பு பெருகியிருக்கிறதா?

 நிச்சியமாக இல்லை என்று எதிரணியும். ” “சொன்னதை செய்திருக்கிறோம் “ என்று திமுகவும் சவால்விட்டுகொண்டிருகிறது. உண்மை நிலை என்ன- ஒரு அலசல்.
ஒரு மாநிலத்தின் தொழில் வளர்ச்சி என்பது ஒரிரு ஆண்டுகளில் நிகழந்துவிடக்கூடிய மாயம் இல்லை. தொலைநோக்குடன் மாநிலத்தின் எதிர்கால வளர்ச்சியை  திட்டமிட்டு  செய்யும்  பணிகள் தான் உண்மையான  தொழில் வளர்ச்சிக்கு உதவும். அந்த வகையில் பார்த்தால் முந்தைய அரசுகளைவிட திமுக ஆட்சியில் பல  தொழில்களின் வளர்ச்சிக்கான திட்டங்கள் துவங்கபட்டிருக்கின்றன.
சென்னை இன்று உலகளவில் அறியப்பட்டிருக்கும் ஒரு கார் தயாரிப்பு நகரமாக அறியப்பட்டிருக்கிறது. ஆண்டுக்கு 15 லட்சம் கார்கள் தயாரிக்கப்டுகின்றன. அமெரிக்க மாநில நகரங்களில்கூட இந்த அளவிற்கு வசதி கிடையாது.இந்தியாவில் ஓடும் கார்களில் 30%  வீதமும் அதன் உதிரி பாகங்களில் 35% வீதமும் சென்னையில் தான் உற்பத்தி செய்யப்படுகிறது. உலகின் முண்ணணி கார் தயாரிப்பு நிறுவனங்களான பிஎம்டபிள்யூ ஹூண்டாய்,போர்டு.நிஸான் மிட்சுபிஷி போன்ற நிறுவனங்கள் தமிழகத்தில் வேறுன்னற இந்த அரசும் ஒரு காரணம். இம்மாதிரி பெரிய நிறுவனங்கள் துவக்கதில் சிறிய அளவில் தொழிலை துவங்கி ஒரு காலகட்டம் வரை அரசின் உதவி, இதர சூழ்நிலைகளை பரிசோதித்த பின்னர்தான் நிரந்தரமாக பெரிய அளவில் முதலீடு செய்து வளர்வார்கள். ஆண்டுக்கு 60 ஆயிரம் கார்களை சென்னயில் தயாரிக்கும் போர்ட் நிறுவனம் இன்று 2200 கோடியில் தஙகளது தொழிற்சாலையை விரிவக்க திட்டமிட்டிருக்கிறார்கள். போர்ட் மட்டுமில்லாமல்  ஹூண்டாய், ஜெனரல் மோட்டார்ஸ், பிம்டபிள்யூ போன்ற நிறுவன்ஙள் கடந்த ஆண்டு தங்கள் புதிய மாடல்கார்களை சென்னையில் தயாரித்து உலகிற்கு அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள். அந்த அளவிற்கு அவர்களது உற்பத்திவசதிகள் பெருக்கபட்டிருக்கின்றன. ஆட்டோமொபையில் தொழில்துறை தமிழகத்தில் மிக சிறப்பாக வளர்ந்திருப்பதற்கு அரசின் அணுகுமுறையும், தொழிற்துறை அதிகாரிகளின் திறமையான செயல்பாடுகளும்தான் எனபதை மறுப்பதிற்கில்லை எனபது துறை சார்ந்த வல்லுன்னர்களின் கருத்து. சரி மற்ற துறைகள் ? ஆஙகாங்கே சிறிய அளவில் தொழில்கள் துவங்கபட்டாலும் பெரிய அரசுத்துறை சார்ந்த தொழிற்சாலைகள் துவக்கபடவில்லை. நலிந்து கொண்டிருக்கும்  தொழிற்சாலைகளையும் மேம்படுத்த வழி செய்யப்படவில்லை.மதுரை,திருச்சி,நெல்லை போன்ற துணை நகரங்களில் துவங்க போதாக அறிவிக்கபட்ட மென்பொருள் பூங்காக்கள் இன்னும் துவக்ககட்டதில்தானிருக்கின்றன..  மறைந்த அமைச்சர் மாறனின் கனவு திட்டமான நாங்குநேனேரி பகுதியில் ஒரு சிறப்பு பொருளாதாரமண்டலத்தின் ஆரமப கட்டபணிகள் கூட இன்னும் துவஙகவில்லை.பன்னாட்டு அல்லது பெரிய நிறுவனங்களை வரவேற்பதில் ஆர்வமாகயிருக்கும் தமிழக அரசு, நேரிடையாக அரசின் சார்பில் பெரிய அள்வில் தொழிலகளை துவங்கவில்லை எனபது தான் உண்மை நிலை
வேலைவாய்ப்புகள் பெருகியிருக்கின்றனவா?  அடிக்கடி தொலைகாட்சிகளில் வெளிநாட்டவருடன் கையெழுத்தான ஒப்பந்தங்களை மாற்றிக்கொண்டு கைகுலுக்கும் காட்சிகளைபார்க்கும்போது  கேட்கும் செய்தி “ இதனால் பல ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு “ என்பது.இது எந்த அளவிற்கு உணமை?
அரசின் தொழில் துறையிலிருந்து இதுவரை இம்மாதிரி பெரும் அன்னிய முதலீட்டில் தவ்ங்கபட்ட திட்டங்களினால் வேலைவாய்ப்பை பெற்றவர்களின் விபரங்கள்  தெளிவாக அறிவிக்கபடவில்லை.   “ஆட்டோமொபையில், ரசாயான துறையில் பெரும் வாய்ப்புகள் உருவாகி பல ஆயிரக்கணகானவர்களுக்கு வேலை கிடைத்திருக்கிறது. ஆனால் இம்மாதிரி பன்னாட்டு நிறுவனங்கள் தகுதி/ திறமையின் அடிப்படையில் மட்டுமே வேலைகளை வழங்குவதால் அந்த பகுதி – மக்களுக்கு, தமிழ் நாட்டினருக்க் மட்டும் வேலை வாய்ப்பு என்பது சாத்தியமில்லை” “ என்கிறார் இம்மாதிரி நிறுவனங்களின் மனிதவள மேம்பாட்டிற்கு ஆலோசனைகள் வழங்கும்  ஒரு வல்லுனர்.
  இருக்கும் அரசின் துறைகளில் வேலை வாய்ப்பு எந்த அளவிற்கு அதிகமாகியிருக்கிறது ?
முந்திய ஆட்சிகாலத்தில் போடப்பட்ட பணிநியமன சட்டம் நீக்கபட்டு வேலைவாய்ப்பு அலுவலகங்களில் ஆன்லைன் பதிவு வசதி அறிமுகபடுத்தபடிருக்கிறது.
போக்குவரத்துதுறையில் டிரைவர் நடத்துனர் பணிகளுக்கு 45000பேர்,, மின்துறையில் 5000 பேர் புதிதாகவும், நிரந்தரமாக்கபட்ட 21000 ஒப்பந்த தொழிலாளர்கள்,. பல நிலைகளில் நியமனம் செய்யபட்ட ஆசிரியர்கள்  இப்படி பல வகைகளில் சுமார் 5 லட்சம் பேர் பணி நியமனம் செய்யபட்டிருக்கின்றனர். இது கடந்தகால ஆட்சியைவிட மிக  அதிகம். ஆனால் தலமைசெயலகம் உள்ளிட்ட பல அரசுத்துறையில் பல ஆயிரக்கணகான பணியிடங்கள் காலியாக உள்ளன.பதிவு செய்த 70 ல்ட்சம் இளைஞ்ர்கள் வேலைக்காக காத்திருக்கின்றனர்.
 தொழில் வளர்ச்சி,வேலைவாய்ப்பு துறைகளில் திமுக அரசு கணிசமான அளவில் முன்னேறியிருந்தாலும்  பெரும்பகுதியான தொழிலாளார்கள்  நீண்ட காத்திருப்புக்குபின் பெற்ற பணிஆணை,பணிசுமை,நீண்ட நாட்களுக்குபின் நிரந்தரம், பன்னாட்டு நிறுவனங்களில் தொழிற்சஙக உரிமைகள் மறுக்கபடுவது, அந்த நிறுவனங்கள் அரசின் ஆதரவோடு செயல்படுவது போன்றவற்றால் நல்ல மனநிலையில் இல்லை என்பதை தொழிற்சங்கத்தினருடன் பேசும்போது உணர முடிகிறது. மொத்த்தில் இந்த் துறைகளில் திமுக அரசு பாஸ் மார்க்கு சற்று மேலாக  பெறுகிறது. ஆனால் ’ “தேர்வில்”’’””“ தேர்ச்சிபெற எல்லா பாடங்களிலும் பாஸாகவேண்டுமே.?

27/3/11

தேர்தல் 2011


அரசியல் கட்சி சாமிகளும்.. தேர்தல் ஆணைய  பூசாரிகளும்...


எந்த பொதுதேர்தலிலும் எல்லா கட்சிகளும் மறக்காமல் தங்கள் தேர்தல் அறிக்கையில்  குறிப்பிடும் ஒரு விஷயம ஆட்சிக்குபின் அவர்கள் ஆட்சி தரபோகும் தொழில் மற்றும் வேலைவாய்ப்புகள். ஆனால தேர்தல் அறிவிப்பு வந்தவுடனேயே சுவர் எழுத்து ஓவியர்கள், போஸ்ட்டர் பிரிண்டிங், டிஜிட்டல் பிளக்ஸ் பேனர், ஸ்டிக்கர் கொடிதோரணங்கள் தயாரிப்பு போன்ற சில துறைகளில் பிரமாதமாக வேலைவாய்ப்புகள் உருவாகும் இரவுபகல் கடினமாக உழைக்க வேண்டியிருந்தாலும்  குறுகிய காலத்தில் கணிசமாக காசு பார்க்கலாம் எனபதால்  ஆட்சியில் அம்ரத்துடிக்குக்ம் எதிர்கட்சிகளைவிட இந்த்துறையினர் தேர்தலில் ஆவலாகயிருப்பார்கள். ஆனால் இந்த தேர்தலில் இவர்கள் மிகவும் எமாற்றத்துடனும் வருத்தத்துடனும் இருக்கிறார்கள். அதிக நாட்கள் இல்லாமல் அவசரமாக அறிவிக்கபட்ட தேர்தல் அட்டவணையினால் மட்ட்மில்லாமல் தேர்தல் கமிஷனின் அதிரடியான புதிய கட்டுபாடுகளினால் இந்த துறையினர் ஆடிபோயிருக்கின்றனர்.
மிக லாகவாமாக 1 மணிநேரத்தில் எந்த தமிழக அரசியல் தலைவரையும் கட்வுட் செய்ய வ்சதியாக அழ்காக வரைந்து கொடுக்கககூடியவ்ர் லக்‌ஷமணன். ஓவியத்தை முறையாக பயிலாவிட்டலும் இவரது மற்றும் இவர் சீடர்களின் படத்துக்கும் கட்சிகளிடையே மிகுந்த வரவேற்பு. மாநாடு, கூட்டங்களைவிட தேர்தல்காலங்களில் அதிகம்பேர் வேலைசெய்யும் இவரது ஸ்டூடியோ இன்று காலியாக் கிடக்கிறது. காரணம்- இந்த தேர்தலில் கட் வுட்களுக்கு அனுமதியில்லை. இவரைப்போல் தமிழகம் முழுவதும் வேலையிழந்த ஓவியர்கள் பல ஆயிரத்துக்குமேல் என்கிறார். ”  “ பிளக்க்ஸ் பேனர்கள் வந்த்தலிருந்தே எங்கள் வேலை வாய்ப்பு குறைந்துகொண்டே வந்ததது. இப்போது சுத்தமாக அழிந்துவிட்டது.  சுவரில் எழுதுவத்ற்கும் தடை விதிக்கபட்டிருப்பதால் லெட்டர்ரைட்டிங் ஆர்டிஸ்ட்களுக்கும் வேலையில்லை. உடனடியகாக கிடைப்பதால் சுவரில் ஓட்டக்கூடிய பெரிய சைஸ் வினையல் ஸ்டிக்கர்களையும் ஃபிளக்ஸ் பேனர்களையும் இபோது கட்சிகளும் ஆதரிக்க துவங்கியிருக்கிறார்கள். இந்த தேர்தலில் அவ்ர்களுக்கு தான் நல்ல காலம் “ என்கிறார் அரசியல் கட்சி ஓவியங்களில் 20 ஆண்டு அனுபவம் உள்ள இந்த ஒவியர்.
 “ ஓவிய நணபர் உண்மை நிலமை தெரியாமல் சொல்லியிருக்க்லாம். இந்த தேர்தலில் மிகப்பெரிய ஏமாற்றத்தையும் நஷ்டத்தையும் சந்தித்துக்கொண்டிருப்பது  பிளக்க்ஸ் டிஜிடல் ப்ரிண்டிங் துறைதான்.நேரடியாகவும், மறைமுகமாகவும் இன்று தமிழகமுழுவதும் 6 ல்ட்சம் பேர்,  சென்னையில் மட்டும் 10 ஆயிரம்பேர் ஈடுபட்டிருக்கும் இந்த துறையினர் தேர்தல் வேலைகளை எதிர்பார்த்து காத்திருந்தவர்கள். தேர்தல் கமிஷனின் கெடிபிகளினால் ஆர்டர் ஏதுவும் வராமல் தவிக்கின்றனர். “ என்கிறார் திரு. எம். ஸ் பஷீர் அஹமது. சில ஆண்டுகளுக்கு முன் மலிவான ரேட்டுகளில் டிஜிட்டல் பிளக்க்ஸ் பேனர்களை தமிழகத்தில் பிரபலமடையச் செய்ததில் இவரது மெகா டிஜிட்டல் நிறுவனத்திற்கு கணிசமான பங்கு உண்டு எல்லா கட்சிகளுக்கும் டிசைன் செய்து ஆல்பமாகவே வைத்திருக்கிறார்கள். தேர்வு செய்தால் மாற்றங்களுடன் உடன்டியாக பேனர்கள் ரெடி..சென்ன நகரில் பல கிளைகளுடன் இயங்கும் இவர்கள் நிறுவனத்திற்கு முந்திய தேர்தலில்களில் கட்சிகளின் தலமையிடத்திலிருந்து பலஆயிரக்கணகான பேனர்கள் த்யாரித்து நேரிடையாக அனுப்ப ஆர்டர்கள் கிடைக்குமாம். ஆனால் இந்த ஆண்டு இதுவரை எந்த கட்சியும் அணுகவில்லை.வேட்பாளார் அறிவிப்புக்குபின் அந்தந்த பகுதிகளிலிருக்கும் நிறுவனங்களுக்கு வாய்ப்புகிடைக்கலாம் என்று சொல்லும் பஷீர் அஹமது தமிழக டிஜிட்டல் பேனர் தயாரிப்பு நிறுவனங்களின் சங்கத்தின் மாநில் தலைவர்.  “ எதிர்பாரத கெடுபிடிகள். 12X8 என்பது சதாரணமாக தேர்தல் காலங்களில் த்யாரிக்கபடும் ஸைஸ். இது இபோது தடை செய்யபட்டிருக்கிறது. கலெக்டரிடம் வைக்கும் இடம் அனுமதி பெற்றபின் 10X8 தயாரித்து வைக்கலாம். எவ்வளவு இடம் எப்பொது அனுமதிப்பார்கள்,  இது எந்த அளவிற்கு நடைமுறையில் முடியும் என்று தெரியவில்லை. திமுக போன்ற பெரிய கட்சிகள் தேர்தல் அறிவிப்பு வந்தவுடனேயே தலமை அலுவகத்திலுருந்து கட்சி கூட்டணி தலைவர்கள் பட்த்துடன் பொதுவாக ஆதரவு கோரி பேனர்கள் தயாரிப்பார்கள் இந்த முறை தேர்தல் அறிவித்த நாளிலிருந்தே விதிமுறைகள் அமுல்படுத்த பட்டதாலும்,, பொது இடங்களில் தேர்த்ல் விள்ம்பரம் தடைசெய்யபட்டிருப்பதலூம் அந்த ஆர்டர்களும் இல்லை. டிஸைனர்களுக்கும், மிஷின்களுக்கும் வேலைகொடுக்கவேண்டுமே என்பதால் ஆட்டோவில் ஒட்டும் சிறிய சினிமா போஸ்டர் ஸ்டிக்கர்களும், ரசிகமன்ற வேலைகளை செய்துகொண்டிருகிறோம்.  சதாரணமாக கிடைக்கும் திறப்புவிழா, கட்சி காரர்களின் இல்ல திருமண விழா ஆர்டர்கள் கூட தேர்தல் காலத்தினால் கிடைப்பதில்லை. அதில் தலைவர்கள் படமிருந்தால் தேர்தல்விதிகளின் படி தவறாகிவிடும் என பயப்படுகிறார்கள்” “ என்கிறார் இவர்.
பிள்கஸ்பேனர் த்யாரிப்பவர்கள் நிலை இது என்றால், காலங்காலமாக பயன் படுத்தும் மீடியமான போஸ்ட்டர்கள்  அச்சிடும் பிரிண்ட்டர்களின் நிலை இன்னும் மோசமானதாயிருக்கிறது.  “ தேர்தல் நேரம் என்பது ஆப்செட் பிரஸ்கார்களுக்கு அதிக பிஸினஸ் தரும் நேரம். ஆனால் இந்த ஆண்டு  8 பகுதிகளாக தயாரிக்கும் பெரிய போஸ்ட்டர்களுக்கு தடை.  அதில்8ல் ஒரு பகுதியான அளவில் சிறிய அளவு போஸ்ட்டர்க்ளுக்கே அனும்தி அதுவும் மீட்டிங் நடக்கும் இடதிலிருந்து 200 மீட்டர் தூரத்திற்குள்ளாக போலீஸ் அதிகாரிகளீடம் ஒரு நாள் முன்  அனுமதி பெற்ற பின்னரே என்கிறது விதி. இந்த நிலையில் பெரிய ஆர்டர்களை எப்படி எதிர்பார்க்கமுடியும். ஒரு சின்ன பிட் நோட்டிஸாக யிருந்தாலும் அதில் அச்சிட்ட பிரஸ்ஸின் போன் நம்பர் இடவேண்டும். மேலும் கட்சிகாரர்கள் சொன்னாலும் நீங்கள் செய்யக்கூடாது என நேரிடையாகவே போலீஸ் உதவி கமிஷனர் எங்களை அழைத்து விதிமுறைகளை சொல்லியிருகிறார்.” “ என்கிறார். டைமண்ட்லித்தோ பிரஸ் நிருவன அதிபர் திரு மோகன் சுந்தர். 18 ஆண்டுகள் அச்சுதொழிலில் இருக்கும் இந்த நிறுவனம் நிறைய தேர்தல்களுக்கு போஸ்ட்டர் தயாரித்து கொடுத்தவர்கள். இந்த ஆண்டும்நிறைய டிஸைன்களுடன் காத்திருந்தவ்ர்கள். ” “போஸ்டர் தொழிலில் தேர்தல் முடிந்தவுடனும் நன்றி அறிவிப்பு போஸ்டர் வேலைகள் வரும். இந்த முறை 1 மாதம் கழித்து ரிஸல்ட் வரப்போதால் எந்த அளவிற்கு அந்த வேலைகள் அச்சகங்களுக்கு கிடைக்கும் என தெரியவில்லை இந்த தேர்தலில்  போஸ்ட்டர் அச்சகங்கள் கடந்த முறைகள் போல பெரும் பொருளீட்ட வாய்ப்பில்லை” “ என்கிறார்.
பிரச்சனைகளில் வாய்ப்பை கண்டுபிடிப்பவன் புத்திசாலி எனறு சொல்லப்படுவது உண்டு. சாமி வரங்கொடுத்தாலும் பூசாரி கொடுக்காத கதையாக பணத்தை வாரியிறைக்க கட்சிகள் தயாராகயிருந்தாலும் தடுக்கும் தேர்தல் ஆணையத்தை குறைசொல்லி புலம்பும் இவர்கள் மததியில்  சிவகாசியில் ஒரு சில் அச்சகங்கள் ஓசைப்படாமல் நமது அரசியல் தலிவர்களின் முகங்களை முகமூடியாக் லட்சகணக்கில் தயாரித்து தள்ளிக் கொண்டிருக்கிறது.மேல் நாடுகளில் தேர்தலில் கட்சிகளின் ஆதரவளார்கள் பயன் படுத்தும் முறையிது.தேர்தல் கமிஷன் முகமூடி பற்றி எதுவும் சொல்லாதால் தமிழகத்தில் தயாரிப்பை துவக்கிவிட்டார்கள். இந்திய அரசியல் கட்சிகள் முழுமைக்கும் சிவகாசி இதன் தயாரிப்புகளமானலும் ஆச்சரியமில்லை. இதைபோல திருப்பூரில் ஒரு பிரபலமான கட்சிக்காக் முன்புறம் அதன் த்லைவர் படம்   கட்சியின் சின்னம் பின்னால் கொண்ட காலர் இல்லாத பனியன் டீ சர்ட்டும்களும், சின்னத்துடன் தொப்பிகளும் லட்சககணக்கில் தயாராகிக்கொண்டிருக்கின்றன். தேர்தல் நேரம் நல்ல கோடை காலம் எனப்தால் தொப்பி அணிவதை தடுக்க் முடியாது. மேலும் விதிகளில் தனிநபர் உடைகளுக்கு தடை  ஏதுமில்லையே என்கிறார் அந்த கட்சியின் விளம்பர பொருப்பாளார்.
உடலிலயே பெயிண்ட்டால் சின்னம் எழுதிக்கொண்டு சட்டையில்லமல் நடக்கலாம் என திட்ட்மிட்டிருக்கும் அதிமுக விசுவாசிகள் சிலர் அதை அதன் தலமையலுவலகத்திற்கு அருகில் சமீபத்தில் செய்தும் காட்டினர்.
சாலைசந்திப்புகளில் பிரமாண்ட கட்வுட்கள்,  பத்து அடிக்கு ஒன்றாக பளபளக்கும் டிஜிட்டல் பேனர்கள். தெருமுழுவதும் கட்சிகொடிகள், செவிப்பறையை கிழிக்கும் பிரச்சாரஙகள் இல்லாத ஒரு தேர்தலை தமிழகம் சந்திக்க போகிறதா இல்லை க்டைசிநேரதில் கட்சிகள் விதிகளை காற்றில் பறக்கவிட்டுவிட்டு நமக்கு பழக்கமான காட்சிகளையே காட்டபோகிறார்களா?
பொறுத்திருந்து பார்ப்போம்

ரம்ணன்.

கொடிகள் கட்டும் “கம்பெனிகள்” “
குடும்பத்தினரை மறந்து கைகாசுபோட்டு டீ யும் பன்னும் சாப்பிட்டு கட்சி கொடிகளை தெருவெல்லாம் கட்டி தொண்டர்கள் தேர்தல் வேலை செய்வதெல்லாம் மெல்ல இப்போது மாறிவருகிறது. இந்த ப்ணிகளை இப்பொது கட்சிகாரகளின் மேற்பார்வையில் பணத்திற்காக  தொழில் ரீதியாக செய்துகொடுக்க எஜென்சிகள் வந்துவிட்டன.
சென்னையின் புறநகர் பகுதியான கேளம்பாக்கத்தில் இப்படிபட்ட பணிகளை செய்யும் நிறுவனத்தினரிடம் பேசினோம்.  மறுப்புக்கும் நீண்ட தயக்கதிற்கும் பின்னர் பெயர், படம் கூடாது எனற நிபந்தைனகளுடன் பேசினார் அதன் நிருவனர்.
” “இன்று கட்சிகள் அவ்ர்கள் தொண்டர்களைவிட இந்த வேலைகளை நாங்கள் செய்வதையே விரும்புகிறார்கள். குறித்த நேரத்திற்குள் போலீஸ் அனுமதி வாங்குவதிலிருந்து அப்புறபடுத்துவது வரை எல்லாம் நாங்கள் பொரபஷனாலாக செய்வது தான் காரணம் “ என்று சொல்லும் இவரிடம் 4 லாரிகள், ஒரு குட்டி டிராக்டர் 5 ஆயிரத்துக்குமேல் ஸ்டீல் பைப்புகள் இருக்கின்றன்..  ஒரு கோடவுன் ஒரு ஆபிஸ் என்று கார்ப்ரேட் ரேஞ்சில் இருக்கிறது. எல்லா கட்சிகளுக்கும் வேலை செய்யும் இவர்களை போன்றாவ்ர்கள்  சென்னையையும் அதன் சுற்றுபுறத்தையும் பகுதி பிரித்துகொண்டிருகிறார்கள். ஒருவர் ஏரியாவில் மற்றவர் வேலை செய்வதில்லை.ஒவ்வொரு கட்சிகளிலும் குறிப்பிட்ட சிலர்தான் இவர்களை தொடர்பு கொள்ளமுடியும். தலைவர்கள் பிறந்த நாள், பொதுகூட்டங்கள் பேரணிகள் என ஆண்டு முழுவத்ற்கும்  இவர்களுக்கு வேலையிருக்கிறது ” “முன்போல் மூங்கில் சவுக்குகட்டை எல்லாம் கொடிகளுக்கு பயன் படுத்துவதில்லை. எல்லாமே ஜிஅய்(GI) பைபுகள் தான். நடுவது எடுப்பது எளிது ரோடுகள் பழாவதில்ல. (!) தேவையான் இடங்களுக்கு லாரிகளில் பைப்புகள் இறக்கப்படும். பின்னாலேயே வரும் இளைஞர்கள் டீம் சிலமணிகளில் தரையில் துளையிட்டு பைப்புகளில் கொடிகளை பொறுத்தி நடுவார்கள். வேகமாக் வேலைகளைச் செய்ய டிரில்லர் போன்ற சாதனங்களும் எல்லா கட்சி கொடிகளும் எங்களிடமிருக்கிறது.” “ என்று சொல்லும் இவரது வருத்தம்  தேர்தல் கமிஷனின் விதிகட்டுபாடுகளினால் இன்னும் சில நூறு பேர்களுக்கு வேலை வழங்கும் வாய்ப்பு இல்லாது போய்விட்டதே எனபதுதான்.






















20/3/11

தமிழக தேர்தல் 2011


தலித் கட்சிகள் வெற்றியை தீர்மானிக்கும் சக்தியா?

ஒவ்வொரு  தேர்தல் அறிவிப்பு வந்தவுடன் பரபரப்பாக பேசப்படும் விஷயங்களில் ஒன்று தலித் ஓட்டு வங்கியை கையில் வைததிருக்கும் கட்சிகள் எந்த கூட்டணியில் இணைகிறார்கள் என்பது. உண்மையிலேயே இந்த தலித் கட்சிகள் கூட்டணிகளின் வெற்றிக்கு ஒரு பெரிய சக்தியாக இருந்து  உதவுகிறார்களா? அல்லது எதிரணியின் ஒட்டுகளைப்பிரிக்க மட்டுமே பயன்படும்பகடைகாய்களாக பயன் படுத்தபடுகிறார்களா?
தமிழக மக்கள்தொகையில் 19% தலித்மக்கள். தேசிய அள்விலான சராசரி 16%தான். ஆனாலும் இங்கு இவர்கள் எந்த ஒரு தேர்தலிலும் தீர்மானிக்கும் சக்தியாக இருந்ததில்லை. தமிழகத்தைவிட 2% மட்டுமே அதிக தலித்மககள் தொகைகொண்ட உத்திரபிரேதசத்தின் அரசியலின் தலையெழுத்தை மாற்றியவர்கள் தலித் மக்கள்.  சுதந்திரம் பெறுவதற்குமுன்னரே பிரிட்டிஷ் அரசிடம் தங்கள் உரிமைகளை வலியுறுத்தி நடந்த பூனா  வட்டமேசை மாநாட்டில்  மதுரையிலிருந்து சென்று பங்குபெற்று தனிஓட்டூரிமை, போட்டியிட தொகுதிகள் என்பதியெல்லாம் வலியுறுத்தி சட்டரீதியாக பெற்றதில் தமிழ் தலித்துகளுக்கு பெறும்பங்கு இருந்திருக்கிற்து. ஆனால் அந்த பாரம்பரியங்களெல்லாம் இன்று பழங்கதைகளாகி திராவிடகட்சிகளின் தயவில் தலித் இயக்கங்கள் அரசியல் செய்து கொண்டிருக்கின்றனர். 1990களில் மிகப்பெரிய எழுச்சியுடன் எழுந்த தலித் இயக்க்ஙகள் கடந்த 20 ஆண்டுகளில் அதன் தலைவர்கள் தங்களை நிலைநிறுத்திகொள்வதற்க்காக எதாவது ஒரு திராவிட கட்சியுடன் இணைந்துகொள்கிரார்களே தவிர வெற்றிவாய்ப்பை நிர்ணயக்கும் சக்தியாக இருந்த்தில்லை
” “அப்படி ஒரேடியாக சொல்லிவிடுவதிற்கில்லை. கடந்த  சிலதேர்தல்களில் தலித் ஓட்டுகள் கூட்டணியின் வெற்றிக்கு உதவியிருக்கிறது. கடந்த நாடாளூமன்ற தேர்தலில் திண்டுக்கல் கங்கிரஸ் வேட்பாளார் சித்தன் அந்த தொகுதிக்கு சற்றும் சம்பந்தமில்லாதவர். எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளார் அந்த பகுதியில் அதிகம் இருக்கும் கொங்கு வேளாளர் இனத்தவ்ர். அதனால் வெற்றிவாய்ப்பு அவருக்குதான் அதிகம் என் கணிக்கபட்டிருந்த்து. ஆனால் அந்த தொகுயின் தலித் ஒட்டுகள் 90000. விடுத்லைசிறுத்தைகளின் உதவியால் அது சிதறாமல் காங்கிரசுக்கு கிடைத்து சித்தன் வெற்றிபெற்றார். இதேபோல்தான் கருர், மதுரை தொகுதிகளிலும். நிச்சியமாக விடுத்லை சிறுத்தைகள் வெற்றிவாய்ப்பை உருவாக்கும் சக்திபெற்ற்வர்கள் தான் என சொல்லுகிறார் மூத்த பதிரிகையாளாரும், அரசியல் விமர்சகருமான திரு சோலை.
” “ஒருசில இடங்களில் கிடைத்த அரசியல்வெற்றிகளினால் இவர்களை ஒரு வலிமையான சக்தி என்று சொல்லிவிடமுடியாது. அடிப்படையில் ஒரு வலிமையான் சக்தியாக உருவாகியிருக்கவேண்டிய இவர்கள் சிலசீட்டுகளுக்காகவும் அரசியல் லாபங்களுகாகவும்  திமுகஅதிமுக கட்சிகளின் தயவை நாடி கடைசியின் அவர்களின் மேலாதிக்கநிலையினால் தங்கள் தனித்துவத்தை இழந்துவிட்டார்கள். விடுதலைசிறுத்தைகளும்சரி, புதிய தமிழக கட்சியும் சரி தங்கள் இலக்குகளான தலித்துகளுக்கு சமுக நீதியும் உரிமையையும் பெற்றுதருவதை மறந்து தமிழன பிரச்சனைகையில் எடுத்துகொண்ட அரசியல் வாதிகளாகிவிட்டனர். இனி இவர்கள் எதாவது ஒரு திராவிட கட்சியை சேர்ந்த அணியில் தான் இருக்க முடியும் என்ற நிலைக்கு வந்துவிட்டார்கள் “ என்கிறார் திரு ஹ்யூகோ காரின்ஞ். (Hugo Gorringe, Lecturer in Sociology at the University of Edinburgh.) இவர் எடின்பர்க் பல்கலைகழகத்தில் சமுகவியல் விரிவுரையாளார். தமிழகதில் 3ஆண்டுகள் தலித்துகளுடன் தங்கி அவர்கள் பற்றி ஆராயந்து  முனைவர்பட்டம் பெற்றவர். தலித்கள் பற்றி 4 புத்தகங்கள் எழுதியிருப்பவர். தலித்கள் பற்றிய அத்தனைவிஷ்யங்களையும் விரல் நுனியில் வைத்திருப்பவர். அரசியல் கட்சிகளுடன் இணைந்தாலும் தலித்துகள் அந்த அணியில்  ஒரு வலிமையான அழுத்தம் தரும்  ஒரு குழுவாக, சக்தியாக இல்லாதால் எதுவும் சாதிக்கமுடியவில்லை என்கிறார்.
அரசியலில் சாதித்தது கிடக்கட்டும் தலித்துகளுக்கு இவர்கள் என்ன செய்திருக்கிறார்கள்? ”துவக்க கால்ங்களில் காங்கிரஸுக்கும் பின்னர் திராவிடகட்சிகளுக்கும் ஆதரவு அளித்துவந்த தலித்துகள் தனி இயக்கஙகள் எழுந்தவுடன் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் இருந்து ஏமாற்றமடைந்துவிட்டனர்.இன்னும் கிராமடீகடைகளில் இரட்டை டம்பளரிலிருந்து எல்லா கொடுமைகளும் தொடர்கிறது. அந்த அவலங்களை எதிர்த்துபோரடி வெற்றிபெறமுடியாதநிலையில் இருக்கிறார்கள் இந்த தலைவர்கள் என்கிறார் டாக்டர் பிராஸாத். இவர் தீண்டாமை தடுப்பு சட்டதினைபலபடுத்தும் தேசியகூட்ட்மைப்பின் தலவர். இவர்து குழு கடந்த பிப்ரவரி 25ல்வெளியிட்டிருக்கும்  ஒரு அறிக்கை  திடுக்கிடவைக்கிருக்கிறது. இன்னும் 80% தலித்துகள் கிராமங்களில் குறைந்தபட்ச வசதிகூட இல்லாத வாழக்கை, 50% மேல் படிப்பறிவில்லாத நிலை என்று அவதிப்படுகிறார்கள். பஞ்சாயத் ராஜ் சட்டதின் கீழ் அளிக்க் பட்ட உரிமைகள் கூட மறுக்க்படுகின்றன.  கடந்த 20 ஆண்டுகளூக்குமுன் தமிழகத்தில் 28 மாவட்டங்கள் தலித்துகளுக்கு அநீதி இழைக்கபடும் மாவட்டங்களாக அடையாளாங்காட்டபட்டிருந்தது. இது இன்னும் அப்படியே நீடிக்கிறது.. நீண்டநாட்களுக்கு முன் இந்த மாவட்டங்களை கண்காணித்து  முதலவருக்கு அறிக்கை அனுப்ப ஒரு 5வர் குழு அமைக்கபட்டது. அவர்கள் இன்னும் ஒரு அறிக்கைகூட தரவில்லை. அரசும் அறிவித்தபடி இதற்கு ஒரு ஸ்பெஷல் ஆபிஸர் போடவில்லை.  குறைந்த பட்சம் இவைகளுக்காகாவது தலித் தலைவர்கள் போராடியிருக்க்வேண்டும்” “ என்கிறார். இவர்.
கடந்த ஆண்டு ஜுன் ஜூலை மாதங்களில் உத்தபுரத்தில் தீண்டாமையின் சின்னமாக் நின்றுகொண்டிருந்த சுவரை இடிக்கும் போராட்டத்தினை முன்னின்று நடத்தியது மார்க்ஸ்ஸிஸ்ட் கம்னியூஸ்ட்கட்சியினரே தவிர த்லித் இயக்க்ங்கள் இல்லை எனபதையும் சுட்டிகாடுகிறார் இவர்.
கடந்த 20 ஆண்டுகளில் படித்த தலித இளைஞ்ர்களிடையே ஒரு விழிப்புணர்ச்சி எற்பட்டிருக்கிறது. தங்கள் இனத்தை அடையாளங்காட்டும் கட்சியைவிட ஒரு பிரபலஅரசியல் கட்சியில் நேர்டியாக பங்குகொள்வது பலனளிக்கும் என் எண்ணது வங்கியிருக்கிறார்கள். இதை விஜயகாந்தின் கட்சியில் பார்க்கமுடிகிறது. வருங்காலங்களில் தலித் இயக்கங்கள் அரசியலைவிட்டுவிட்டு சமூக விழிப்புணர்ச்சியியக்கஙளானால் கூட வியப்படையவதிற்கில்லை. என்கிறார் ஒரு மூத்த பத்திரிகையாளார்.
தேர்தலில் இவர்கள் சக்தியாக் இருப்பார்களாக் மாட்டார்களாக எனபதை ஆராய்சியாளார்களுக்கு விட்டுவிட்டு, சந்தேகபட்டு வாய்ப்பை கெடுத்துகொள்வானேன் என்று  மளமளவென காய்களை நகத்ததுவங்கிவிட்டனர் கூட்டணியினர். ராசாவிற்கு எதிராக விடுத்த அறிக்கைகளினால் எங்கே தலித்களை பகைத்துகொண்டு விடுவோமோ என்ற எண்ணத்தில் அதிமுக தனது அணியின் முதல் தொகுதி உடன்பாட்டை தலித் கட்சிகளுடன் செய்துகொண்டது அதிமுக டாக்டர் கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம் கட்சிக்கு 2 தொகுதிகளையும், செ.கு.தமிழரசனின் இந்திய குடியரசுக் கட்சிக்கு ஒரு தொகுதியையும் ஒதுக்கியுள்ளார் ஜெயலலிதா.
அதுமட்டுமில்லை பிராசரமும் தலித் தொகுதிகளிடமிருந்து  துவங்கும் என அறிவித்திருக்கிற்து அதிமுக. தமாதமானால் எங்கே எதாவ்து 3வது அணி எழுந்து அதில் போய் சேர்ந்துவிடுவார்களோ என்ற அச்சத்தில்  திமுக விடுதலைசிறுத்தைகளுக்கு சிவப்புகம்பளம் விரித்து 10 சீட்டுகளுடன் வற்வேற்றுவிட்டது. தேர்தலின் வெற்றிகளை தீர்மானிக்கும் சக்தியாகயிருக்க்போகிறார்களோ இல்லையோ கூட்டணிகளின் தலைமைகட்சிக்கு நிச்சியமாக பயம் எற்படுத்தும் சக்தியாகதான் தலித் கட்சிகள் இருக்கின்றன..

1
திருமதி சிவகாமி (முன்னாள் IAS அதிகாரி- தலைவர் சமூக சமத்துவ படை)

உத்திரபிரதேசத்தைப் போல தமிழகத்தில் தலித்சமுகத்தினர் ஏன் ஒரு வலுவான அரசியல் சக்தியாக எழமுடியவில்லை?
தமிழக அரசியலை சற்று ஆழ்ந்துபார்த்தால் துவக்கதிலிருந்தே இங்கு தலித்துகளும் அவர்களின் பிரச்சனைகளும் தனியாக இனங்கண்டு கொள்ளபடாமல் பார்பனரல்லாதார் பிரச்சனையோடு இணைத்துதான அடையாளாங்காட்டபட்டிருகிறது. அரசியல் கட்சிகள் தங்கள் கட்சிகளில் தலித்துகளுக்கு பிரதிநித்துவம் கொடுப்பதாக சொல்லி அப்படி கொடுக்கபட்டவர்களின் மூலம் தங்கள் கட்சியை பலபடுத்தினார்களே தவிர தலித்துகளை தலைவர்களாக வளரவிடவில்லை. காங்கிரஸ். திராவிட கட்சிகளில் தலித்களின் பிரநிதிகளாக அறியபடுவர்கள் தலித்களுக்காக எதுவும் செய்யவில்லை என்பது மட்டுமில்லை செய்ய முயற்சித்தால் கட்சியில் அவர்களுக்கு அந்த கட்சியில் முக்கிய இடமில்லை எனபது தான் உண்மை நிலை.கட்சியில் தங்களுக்கு கிடைத்த இடத்தை தக்க வைத்துகொள்ள, தலமையை திருப்திபடுத்தவேண்டிய கட்யாய சூழலில் தாங்கள் தலித்களின் பிரதிநிதியாகதான் இந்தகட்சியில் இருக்கிறோம் என்பதையே அவர்கள் மறந்து போனார்கள். தாங்கள் அரசியல் கட்சிகளினால் வஞ்சிக்கபட்டதை  தாமதமாக புரிந்துகொண்டதமிழக தலித் மக்கள் தஙகளுக்கு என அரசியல் கட்சியின் அவசியத்தை இப்போது உணர்ந்திருக்கின்றனர். அது ஒரு வலுவான அரசியல் சக்தியாக எழ  இன்றைய பணபலம், ஆதிக்க அரசியல் சூழலலில் இன்னும் காலம் பிடிக்கும்.
அடிபடையான இலக்குகள்  ஒன்றாகயிருக்குபோது ஏன் இத்தனை பிரிவுகள்? ஒரு தலைமையின் கீழ் வலிமையான இயக்கமாக வாய்புகள் இல்லையா?
பிரிவுகளாக இருந்து இயங்குவதில் என்ன தவறு? எந்த அணியானாலும் கிடைக்கும் வாய்ப்புகளுடன் வளர வேண்டிய சூழ்நிலை இன்று. குறைந்த பட்ச திட்டம்,  அதிகாரத்தில் பங்கு என கேட்ககூடிய நிலையில் இன்று தலித்கட்சிகள் இல்லாமலிருக்கலாம், ஆனால் அந்த நிலைக்கு வளர இம்மாதிரி அணிகளிலிருக்கும்  சிறு கட்சிகளாக தலித்துகள் இருப்பது உதவுமே” “


2
தமிழகத்தில் தலித் சமுதாய மக்கள் மூன்று பிரிவுகளாகயிருக்கிறார்கள். தென்மாவட்டங்களில்
தேவந்ததிரகுல வேளார்கள் முதல்பிரிவினர்.அடுத்தது ஆதிதிரவிடர்கள் பின்னர்
அருந்த்தியினர்.வடமாவட்டங்களில் 90%  ஆதிதிராவிட்ர்கள். இந்த சமுதாய மக்களிடம்  அவர்கள் சமுகம் சார்ந்த அரசியல் கட்சிகளான் விடுதலைசிறுத்தைகள், அல்லது புதியதமிழகம் செல்வாக்கு பெற்றிருக்கிறது. முந்தைய தேர்தல்களில் இந்த தொகுதிகளில் வெற்றியை நிர்ணயத்த ஒட்டுகளின் எண்ணிக்கை இந்த சமுகத்தினர் ஓட்டு எண்ணிக்கையை நெருங்கியிருந்ததால் கூட்டணிகள் இந்த கட்சிகளை தங்கள் அணியில் அதிக அக்கரையுடன் இணைத்துகொள்கின்றன்ர். தமிழக ஒட்டு வங்கியில் இவர்களது 18% என கணக்கிடபடிருக்கிறது
கடந்த 2006 தேர்தலில் திமுக பெற்றது26.46% வாக்குகள். இது அதிமுக பெற்ற ஒட்டுகளின் % விட(32.64%) குறைவு என்றாலும் அவர்களைவிட 35 தொகுதிகளில் வெற்றி பெற முடிந்ததற்கு கூட்டணியில் இருந்த தலித் கட்சியினரின் ஒட்டுகளும் ஒரு முக்கிய காரணமாக கருதபட்டது.



3
தலிதமக்களுக்குஅம்மா அளித்த அங்கீகாரம்
தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்காக முதலில் தலித் கட்சிகளுக்கு புரட்சித் தலைவி தொகுதிகளை ஒதுக்கீடு செய்துள்ளார். இதை, தலித் சமுதாய மக்களுக்கு அம்மா அவர்கள் அளித்த மிகப் பெரிய அங்கீகாரமாகக் கருதுகிறோம். தமிழகத்தில் இப்போதுள்ள தலித் விரோத அரசை அகற்ற தமிழ்நாட்டில் உள்ள அடித்தளத்து மக்கள் அனைவரையும் அதிமுகவுக்கு ஆதரவாக அணி திரட்டிட எங்கள் கட்சியினர் மிகக் கடுமையாக உழைப்பார்கள். தேர்தலில் அதிமுக அணிக்கு வரலாறு காணாத வெற்றி கிடைக்கப் போவது உறுதி
  செ.கு தமிழரசன்  தலைவர் இந்திய குடியர்சுகட்சி

4
                                                        தொகுதி  பங்கீடு மகிழ்ச்சி அளிக்கிறது-கிருஷ்ணசாமி:

அதிமுக கூட்டணியில் புதிய தமிழகத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள இடங்கள் மனநிறைவையும், மகிழ்ச்சியையும் அளிக்கிறது. சட்டமன்ற தேர்தலில் அதிமுக வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியை பெறுவதற்கு புதிய தமிழகம் பாடுபடும்

கிருஷ்ணசாமி  தலைவர் , புதிய தமிழகம்