இந்த ஆண்டு கல்கி திபாவளி மலர் எனது 3 கட்டுரைகளை வெளியிட்டிருக்கிறது. இது சொர்க்கம் போக வழிகாட்டுகிறது.
பளிரென்ற மின்விளக்குகளின் வெளிச்சம் பரவியிருக்கும் அந்த பிரமாண்டமான அரங்கத்தில் குறைந்தது ஒரு 500 பேராவது இருப்பார்கள்.காலடியில் மெத்தென்ற கார்ப்பெட், கண்ணில் படும் கலைநயம் ததும்பும் சுவர் அலங்காரங்கள், இதமான எர்கண்டிஷன், சுகமான மெல்லிய இசை என ஒவ்வொரு சதுர அங்குலத்திலும் ஆடம்பரம். அரங்கம் முழுவதும் விதவிதமான சூதாட்டமிஷின்கள், பெரிய வட்ட மேஜைகளில்(roulette table) எண்கள் சுழலும் சக்கரத்தின் எதிர்புறம் ஓடிகொண்டிருக்கும் பந்து எந்த எண்ணில் நிற்கப்போகிறது என்பதைக்காண ஆவலுடன் காத்திருப்பவர்கள், பச்சை வெல்வெட் பதித்திருக்கும் பெரிய நீண்ட சதுர மேஜைகளைச் சுற்றி கைகளில் சீட்டாட்ட கார்டுகளுடன் கவனமாக ஆடிக்கொண்டிருப்பவர்கள் என நிறையப் பேர். இளைஞர்களும் வயதானவர்களும் பரபரப்பாக இயங்கிகொண்டிருகிறார்கள்
அமெரிக்காவிலுள்ள “உலக கேளிக்கைகளின் தலைநகரம்” என வர்ணிக்கபடும் லாஸ்வேகாஸ் நகரிலுள்ள MGM கிராண்ட் என்ற ஆடம்பர ஹோட்டலின் தரைதளத்திலிருக்கும் காஸினோவிலிருக்கிறோம். இந்த காசஸினோவில் சூதாட்ட களங்களைத்தவிர உலகின் பல நாடுகளின் உணவு வகைகளும் கிடைக்கும் ரெஸ்ட்ரொண்ட்களும் நிறைய. நம்ம ஊர் சமாச்சாரங்கள் கிடைக்குமா என தேடிமெல்ல நடந்துகொண்டிருக்கும் நாம் அந்த காட்சியைக்கண்டு அதிர்ந்து நிற்கிறோம். ஓரு கண்ணாடிக்கூண்டில் நடமாடிக் கொண்டிருக்கும் சிங்கங்கள்! 1.5 அங்குல கனமேயிருக்கும் அந்த கண்ணாடிச்சுவர்களுக்குபின் செயற்கயாக அமைக்கபட்ட பாறைகளுக்கும்,அருவிக்கும், குகைகளுக்கும் இடையே பயிற்சியாளார்களுடன் ஒடி விளயாடிக்கொண்டிருக்கும் 6 பெரிய சிங்ககள்! கண்ணாடிச் சுவர்களின் வெளியேயிருக்கும் ஸ்டீரியோ ஸ்பிக்கரில் அவ்வப்போது அவைகளின் உறுமல் சத்தம். கண்ணாடி சுவற்றில் முகம் பதித்து சிங்கங்களைப் பார்க்கும் குழந்தைகள். அவற்றை அருகில் வந்து பார்க்கும் சிங்கங்கள். இரண்டு கண்ணாடிஅறைகளையும் பாலமாக இணைத்திருக்கும் ஒரு உருளை வடிவ கண்ணாடி பாதையின் வழியாக அனாசியமாக நடந்துபோகும் சிங்கங்களை அந்த கண்னாடிப்பாலத்தினடியில் நிற்பவர்கள் அண்ணாந்து சிங்கங்களின் பாதங்களைப் பார்த்து கொண்டிருப்பவர்கள். நாம் பயத்திலிருந்து விடுபட்டு அருகில்போய் பார்க்க சில நிமிடங்களாகின்றன. ஒரு சூதாட்டவிடுதியில் இவ்வளவு அருகில் சிங்கங்களிருப்படைவிட ஆச்சரியம், அதைப்பற்றி எந்த பயமும் இல்லாமல் கருமமே கண்ணாயிரமாக சூதாடிக்கொண்டிருப்பவர்கள் தான்
இங்கு ஏன் சிங்கங்கள்?
MGM என்பது புகழ்பெற்ற ஹாலிவுட் திரைப்பட்ட நிறுவனம். அவர்களது கம்பெனியின் இலச்சினையாக உறுமும் சிங்கம் ஒவ்வொரு படத்தின் துவக்கத்திலும் காட்டப்படும். நாளடைவில் MGM என்று சொன்னாலே சிங்கம் என்ற அளவிற்கு அவர்களது அடையாளாமகிவிட்டது. சினிமாத்தொழிலைவிட்டு வந்து இன்று இப்படி பெரிய ஆடம்பரஹோட்டல்களை நடத்திக்கொண்டிருந்தாலும் சிங்கத்தை விடவில்லை. இங்கு உயிரோடு சிங்கங்களை விளயாடவிட்டு வேடிக்கை காட்டுகிறார்கள். இதற்ககாவே 25கீமீ தொலைவில் ஒரு பண்ணையில் 31 சிங்கங்களை வளர்க்கிறார்கள்.அவர்களுக்கு பயிற்சியளித்து ஓவ்வொரு 4 மணி நேரத்திற்கும் 6 சிங்கங்கள் என ஷிப்டில் இங்கு அழைத்துவருகிறார்கள். மிக மிக அருகில் கண்ணாடி வழியே மிருக ராஜனை பார்ப்பது ஒரு வினோத அனுபமாகயிருந்தாலும், இந்த கண்ணாடியை உடைத்து கொண்டு வெளியே வந்தால்... . என்ற எண்ணமே நம்மை நடுங்கச்செய்கிறது. 30 தளங்களும் 6000அறைகளும் கொண்ட அந்த பிரம்மாண்ட ஹோட்டலை விட்டு வெளியே வந்தால் அருகில் 45அடிஉயரத்தில் 50டன் எடையில் தங்க வண்ணத்தில் ஒரு சிங்க சிலை இது முதலில் நுழைவாயிலில் தான் இருந்ததாம். சூதாடவரும் சீனர்கள். பெங்ஃஷுயி வாஸ்து படி சிங்கத்தைபார்த்துவிட்டு சூதாடினால் தோற்றுவிடுவோம் என்பதால் இந்த காஸினோவை தவிர்க்க ஆரம்பித்ததால், நிர்வாகம் சிலையை மாற்றி பக்கத்தில் வைத்துவிட்டது. வாஸ்துவின் பலன் சூதாடுபவர்களுக்கு எப்படியோ, MGMக்கு கிடைத்த பலன் ஆடிக்கொண்டிருக்கும் கூட்டதைப்பார்தால் தெரிகிறது.
கிருஷ்ண ஜயந்தியன்று கண்ணன் பிறந்த நேரத்தில் சூதாடினால் நிறையஜெயிக்கலாம் எனற எண்ணம் நம் குஜராத்தியர்களிடம் வேகமாக பரவிவருகிறது. இந்த ஆண்டு அதற்காவே ஏற்படுத்தபட்ட பேக்கேஜ் குருப் டூர்களில் நுற்றுகணக்கானோர் லாஸ்வேகாஸ் நகருக்கு பயணித்திருக்கிறார்கள்.
இந்குள்ள ஹோட்டல்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு நாட்டின் ஸ்டைலில் அமைத்திருக்கிறார்கள். பிரமிட் வடிவ நுழைவாயில் உள்ள ஹோட்டலிண் உள்ளே அறைகள், அரங்கங்களின் அமைப்புகள் உள் அலங்காரங்கள் முழுவதும் எகிப்திய கலாசார பாணியில்.இதைப்போல வெனிஸ் ஹோட்டலில் அறைகளுக்குப்போக படகுகள். ஸீஸர் என பெயரிடப்பட்டிருக்கும் ஹோட்டலின் நுழைவாயிலில் மன்னர் சீஸரின் சிலை.கிரேக்க பாணி கோட்டை வடிவில் ஹோட்டலின் அமைப்பு. ஒரு ஹோட்டலில் ஓசையுடன் அலை எழும்புமும் கடலையும், வெண்மணல் பீச்சையும் கூட நிறுவியிருக்கிறார்கள் “நியுயார்க் நியுயார்க்” என்ற ஹோட்டலின் முகப்பில்; நியுயார்க் நகரில் இருக்கும் லிபர்டி சிலை, பாலங்கள், எம்ப்யர்ஸ்டேட் கட்டிடம் என குட்டி நியூயார்க்கே நிற்கிறது. பாரிஸீன் ஈஃபில் டவரையே நிறுவி அதன் மாடியில் ஓரு ஹோட்டல். ஆடம்பர ஹோட்டல்கள் எல்லாவற்றிலும் முதல் தளம் முழுவதும் காஸினோ, நைட்கிளப், உணவு விடுதிகள் என நிறைந்திருக்கிறது. ஓவ்வொன்றிலும் MGMலிருக்கும் கண்ணாடி சிங்கங்களின் கூண்டுகளைப் போல, பெரிய டால்பின்மீன்கள் காட்சி, சர்க்கஸ், பாலே நடனம் மாஜிக் என எதாவது ஒரு பிரமிக்கவைக்கும் காட்சி. சில வற்றிருக்கு கட்டணம். பல இலவசம். இந்த ஹோட்டல்களை இணைத்து ஒடிக்கொண்டிருக்கும் ஒரு மோனோ ரயில். காசினோக்களுக்கு, மாறி,மாறிப்போய் நாள்முழுவதும் சூதாடிக்கொண்டிருக்கிறார்கள் சூதாடும் கிளப்புகளில் முன்போல பணத்திற்கு பதில் டோக்கன் என்ற சிஸ்டம் கிடையாது. முதலில் கட்டிய பணத்திற்கு அல்லது பாங்க்கிலிருந்து மாற்றிய பணத்திற்கு கிரிடிட் கார்டு போல ஒரு பிளாஸ்டிக் கார்டு தருகிறார்கள். அதை மிஷினில் சொருகிவிட்டு ஆடவேண்டும்.,தோற்றால் கார்டிலிள்ள பணம் குறையும் வெற்றி பெற்றால் நிறையும் . கணக்கை அருகிலுள்ள சின்னத் திரை காட்டுகிறது. சிலர் ஜாக்கிரதையாக கார்டை சங்கலியுடன் இடுப்பில் இணைத்திருக்கிகிறார்கள்.
ஹோட்டல்களின் முகப்பில் மட்டுமில்லமல் ஓவ்வொரு விஷயத்திலும் அந்த ஹோட்டலின் தீமை(theme) கவனத்துடன் நினைவூட்டுகிறார்கள். நாங்கள் தங்கியிருந்த ஹோட்டலின் பெயர் “எக்ஸ்காலிபர்” (Excalibur) (12 நூற்றாண்டின் மன்னர் ஆர்தரின் புகழ்பெற்ற போர் வாளின் பெயர்) ஹோட்டல் கோட்டை வடிவில். அறைகளின் உள் அலங்காரங்கள் ஒரு அரண்மணையைப்போல். அரண்மணை சேவர் உடையில் பணியாளார்கள்.வெளியே சென்று திரும்பிய நம்மை “மன்னர் ஆர்தர் தங்கள் அறையை சுத்தம் செய்ய இயலாதற்காக மன்னிப்பை கோருகிறார். படுக்கையில் நீங்கள் சில பொருட்களை வைத்திருந்தால் இயலவில்லை. வந்ததும் தொடர்பு கொள்ளவும். காத்திருக்கிறோம்”’ என்ற படுக்கையிலிருக்கும் குறிப்பு நம்மை வரவேற்கிறது. உலகிலேயே அதிக ஹோட்டல் களிருக்கும் நகரம் இது தான் என்பதும் மொத்த ஹோட்டல் அறைகள்1,40,000 என்ற தகவல் நம்மைப் பிரமிக்கச்செய்கிறது. கடந்த ஆண்டின் பொருளாதார விழ்ச்சியில் சரிந்த பிஸினசை “3 நாள் வாடகையில் 6 நாள் தங்குங்கள்” என அதிரடி தள்ளுபடிகள் அறிவித்து சமாளித்துகொண்டிருக்கிறார்கள்..
(100-ஹோட்டல்களுக்குமேல் அமைந்திருக்கும் “ஸ்ட்ரிப்” என அழைக்கப்படும் அந்த பெரிய வீதியில் மாலை நேரத்தில் நடந்துகொண்டிருக்கிறோம். ‘லால் வேகாஸ் வெல்கம்ஸ் யூ’ (ப1)என்ற அந்த போர்டை எல்லோரும் படமெடுத்துக்கொண்டிருக்கிறார்கள். லாரிஓட்டுனர்களுக்கும்,தொழிலாளர்களுக்கமாக.தோன்றியமதுக்கடைகளும்,சூதாட்டகிளப்புகளுமாகயிருந்த இடம் லாஸ்வேகாஸ் என்ற பெயரில் 1931ல் நகரமாக பிறந்த போது இந்த இடத்தில் எழுந்த இந்த போர்டு இன்றும் அதே இடத்தில் அதே வார்த்தைகளுடன் புதுபிக்கபட்டுக்கொண்டிருக்கிறது என்று அறிகிறோம். அந்த பகுதியில் பல சர்ச்கள். அதன் முன்னால் லைசன்ஸ்டுன் ஒரு மணி நேரத்தில் திருமணம் செய்துவிக்கபடும் என கட்டண விவரத்துடன் போர்ட்கள். காரைவிட்டு இறங்காமலே கல்யானம் செய்துகொள்ள டிரைவின் சர்ச் கூட இருக்கிறது. ஆச்சரியபட்டு உள்ளே போய் விசாரித்தால் ”சும்மா தேனிநிலவு தம்பதிகளின் ஜாலிக்காக” என்கிறார்கள். சர்ச் பெயரில் கூடவா பிஸினஸ்? என தோன்றிற்று.
மெல்ல இரவு பரவுகிறது. சட்டென்று வீதி முழுவதும் வர்ண ஜாலமாக ஒளிவெள்ளம், நகரும் பிரமாண்ட நியான் விளம்பரங்கள் தொலைவில் சரவிளக்கில் மின்னும் பாரீஸின் ஈபில் டவர், அருகில் மெல்லிய பச்சை விளக்கில் லிபர்டி சிலை தெரு முழுவதும் தொடர்ந்து ஒலிக்கும் இசை,இவற்றையெல்லாம் ரசிப்பதற்காகவே நடக்கும் மக்களுடன் நாம்.. ஒரு புதிய உலகத்திலிருகிறோம்
வீதியின் முனையில் ஒரு பிரமாண்ட ஹோட்டலின் முன் இசை மேதை பித்தாவோனின் இசைக்கு எற்ப நடனமாடும், மிகப்பெரிய நீருற்று. சுற்றும் இருள் சூழ்ந்த சூழலலில் பிரகாசமான ஒளிவெள்ளத்தில் இசைக்கேற்ப வளைந்து நெளிந்து உயர்ந்து தாழ்ந்து, பக்கவாட்டில் ஆடி,ஓடி குருப் நடன கலஞர்களைப் போல பலவாக அணிவகுத்து ஆடி இறுதியில் இசை ஓங்கி ஒலிக்கும்போது உயரமான ஒற்றை நீருற்றாக அந்த ஹோட்டல் கட்டிட உயரத்திற்கு உயரும் அந்தவினாடியில் ஹோட்டல் முகப்பு முழுவதும் பளிரென்று விளக்குகள் முழித்துக்கொண்டவுடன் சட்டென்று ஓய்கிறது அந்த நடனம், ஒலிக்கிறது கரகோஷம். ஒரு அரங்கத்தில் ஆடி முடித்த நடன கலைஞர்களை கெளரவிப்பது போல சூழ்ந்திருக்கும் அத்துனைபேரையும் கைதட்டவைக்கிறது..அந்த காட்சி. பலர் நகர மனமில்லாமல் துவங்கப்போகும் அடுத்த காட்சிக்காக காத்திருக்கிறார்கள். நள்ளிரவை நெருங்கிக்கொண்டிருக்கும் அந்த நேரத்தில் வீசும் மெல்லிய காற்றின் இதத்தோடு நடந்து அறைக்குத்திரும்பிக்கொண்டிருக்கிறோம். பெரியசத்தத்துடன்பொங்கிவழியும்எரிமலை,மிதக்கும்கப்பலில்சுட்டுக்கொள்ளும் கடற்கொள்ளைக்காரர்கள், வேகமாக சுழலும் முன் சக்கரத்துடன் நிற்கும் பிரமாண்டமான மோட்டர் சைக்கிள் என அட்டகாசமான முகப்பு காட்சிகளுடன் நியான் விளக்களில் வினோதமான பெயர்களில் நம்மை அழைக்கும் பார்கள். “எங்கள் காஸினோவில் விளயாடிவிட்டு எங்களது 44 வது மாடிக்கு வாருங்கள் வானில் தெரியும் நட்சத்திரங்களையும்,கிழே தெரியும் நீருற்று நடனத்தையும் சேர்ந்து பார்த்துகொண்டே, உணவு அருந்தும்போது சொர்கத்தை உணர்வீர்கள்” (ப 28)என்ற வாசகம் கண்ணில் படுகிறது. சூதாட்டம்,மதுக்கடை,இரவுவிடுதி போன்ற பாவசெயல்களால் நிரம்பி வழியும் இந்த பாவ நகரில்(SIN CITY) சொர்க்கத்தை உணரச்செய்யும் இவர்களது புத்துசாலித்தானமான மார்க்கெட்டிங் டெக்னிக்கை வியந்துகொண்டே அறைக்கு திரும்புகிறோம்.
-படங்கள் குகன், ரமணன்
கட்டுரைக்கான படங்கள் இந்த ஷோவில்