30/6/13

ருத்தர தாண்டவம்


 

“அன்று நல்ல மழை பெய்துகொண்டிருந்தாலும் சாயங்கால பூஜைக்கு நல்ல கூட்டம். பூஜைகளை முடித்துவிட்டு கோவிலையும் மூடியபின் கோவில் வளாகத்திலேயிருக்கும் என் அறையில் இருந்தேன்.  இரவு 8 மணியளவில் வெளியே ஒரே சப்தம். பலர் கத்திய படி ஓடி வந்துகொண்டிருந்தனர்.  எட்டிபார்த்த நான் அப்படியே உறைந்துபோனேன். கோவிலின் பின்னால் உள்ள மலைசரிவில்  மேகங்கள் வெடித்து வானமே பொத்துக் கொண்டதுபோல பெரிய அளவில் வெள்ளம் வந்து கொண்டிருந்தது. வினாடியில் சுதாரித்து கோவிலுக்குள் ஒடுவதற்குள் வெள்ளம் வேகமாக கோவில் கம்பெளண்ட்  சுவரை உடைத்து பாய்ந்தது. கோவிலின் இரண்டுபக்கமும் ஆள் உயரத்திற்கு வெள்ளம்.  குருஆதி சங்கரரின் சமாதி இருந்த கோவில் உடைந்து அதிலிருந்த அவர் பளிங்கு சிலையும் மரகத லிங்கமும் அடித்து செல்வதை  பார்த்தேன். நாம் வாழ்வு இன்னும் சில நிமிடங்கள் தான் அது இந்த தெய்வ சன்னதியில் போகட்டும் என கோவிலிலே இருக்க தீர்மானித்தேன். என்னுடன் 8 பேர். வெளியே பெரிய இரைச்சலோடு வெள்ளம் போய் கொண்டிருந்தாலும் கோவிலின் உள்ளே மெல்லதான் நீர் உயர்ந்து கொண்டிருந்தது. இரவு முழுவதும் நின்று கொண்டே இருந்த நான் காலயில் சற்று மழை விட்டதும் வெளியே வந்து பார்த்தேன். வெள்ளம் வடிந்து கொண்டிருந்தது. ஆனால் கோவில் வாசலில் நிறைய பிணங்கள். ஊர் முழுவமே அழிந்து அடித்து செல்லபட்டிருந்தது. என்ன செய்வது என தெரியாமல் சற்று நடந்து பார்த்ததில் மலையின் மறுபக்தியில் மக்கள் நடமாட்டம் தெரிந்த்து. ஆனால் அங்கே போக  இடையில் ஒரு சின்ன ஓடையை கடக்க வேண்டும். எப்போது பாதம் தொட்டுமட்டுமே நீர் போகும் அதில் ஆள் உயரத்திற்கு தண்ணீர் போய்கொண்டிருந்தது துணிவுடன் மந்திரங்களை ஜபித்து கொண்டே நீந்தி கரைய அடைந்து 24 மணி நேரதவிப்புக்கு பின்னர்  ஹெலிகாப்டரில் வந்து அழைத்துபோனார்கள். 18 வருடமாக இந்த கோவிலில் பணி செய்கிறேன். பரம்பரையாக என் குடும்பத்தாரின் பணி இது. இதுவரை இத்தகைய கோரம் நிகழ்ந்ததாக சரித்திரமில்லை. ஏன் இப்போது சிவபெருமானுக்கு கோபம் வந்து சிவதாண்டவம் ஆடியிருக்கிறோ  தெரியவில்லை.” என்கிறார் கேதார் நாத் கோவிலின் அர்ச்சகர்களில் ஒருவரான ரவி பட். நிகழ்ந்ததை பார்த்து தப்பித்த சிலரில் ஒருவரான இவர்  பிபிசிக்கு அளித்த பேட்டியில் இதை சொல்லுகிறார். இப்போது டேராடுனுக்கு அருகிலிருக்கும் கிராமத்திலிருக்கும் ரவி பட்டின் கவலையெல்லாம் பெருமானுக்கு தினபூஜைகள் நைவேத்தியங்கள்  இல்லாது போய்விட்டதே என்பதுதான்.  
நம் நாட்டின் மிக பழமையான சிவன் கோவில்களில் ஒன்று கேதார்நாத். 12 ஜோதிர்லிங்களில் மிக முக்கியமானதாக கருதப்படும் இந்த கோவில் இமயமலைதொடரில் ஒரு பகுதியில் இருக்கிறது. உத்தர்காண்ட் மாநிலத்தில் ருத்தரபிர்யாக் பகுதியில் அமைந்திருக்கும் கோவில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்பரல் முதல் தீபாவளி வரைதான் திறந்திருக்கும். மீதி நாட்களில் பனிகொட்டிகொண்டிருக்கும் காலம் எனபதால் கோவில் மூடபட்டுவிடும்,கேதார் ஊரே காலியாகி மலை அடிவாரத்திற்கு இடம் பெயர்ந்துவிடும். பல லட்சகணகான யாத்திரிகர்கள் வரும் இந்த கோவிலுக்கு நேரடியான போக்குவரத்து வசதிகள் கிடையாது. கெளரி குண்ட் என்ற பகுதிவரை கார் பஸ் போகும் அங்கிருந்து  18 கீமீ மலையில் நடக்க  வேண்டும். குதிரை, பல்லக்கு களிலும் போகலாம்.  இமயமலையின் பல பகுதிகளில்  அருமையான ரோடுகளை போட்டு நிர்வகிக்கும் இந்திய ராணுவத்தின் ஒரு அமைப்பான பார்டர் ரோடு ஆர்க்னேஷேனின் தலமை அலுவலகம் டேராடுனில் இருந்தாலும்  என்ன காரணத்தோலோ இந்த இடத்தில் வாகனம் போகும்வகையில் ரோடுகள் அமைக்க படவில்லை. முழுவதும் நடந்து ஏற  முடியாது போய்விடுமோ என்ற பயத்தில் பலர் குதிரையில்பயணம் செய்வார்கள். 1000க்கும் மேல் குதிரைகள் இருக்கின்றன. ஒவ்வொரு குதிரையுடன் ஒரு  12 வயது பையன் “கைடு” ஆக வருவார். கோவிலை அடைய 4 மனிநேரம் ஆகும். அவர் கார்வாலி மொழியில் பேசிகொண்டே வருவார். பேசுவது நம்முடனா குதிரையுடனா என்பது புரியாது. தரிசனம் முடிந்து திரும்பி வரும்வரை காத்திருந்து சரியாக நம்மை அடையாளம் கண்டு  பாதுகாப்பாக அழைத்து வருவார்கள். இந்த வெள்ளத்தில்  இந்த குதிரைகளும், அந்தகைடுகளும் பெருமளவில் காணமல் போயிருக்கிறார்கள்
கோவில் சிறியது. எந்தவிதமான சாரளமும் இல்லாமல் கற்கள் அடுக்கிகட்டபட்ட கோவில்  அந்த கடும் குளிரிலும் காலை 4 மணிக்கு பூஜை துவங்கும்  உள்ளே சன்னதியில் அம்ர்ந்து நீங்களே அபிஷேகம் ஆராதனை செய்யலாம். உள்ளே இட வசதிகுறைவினால் வெளியில் நடுங்கும் குளிரில் காத்திருக்க வேண்டும், கோவில் ஒரு மலைச்சரிவில்  அமைந்திருக்கிறது.


கோவிலை சுற்றி  எழுப்ப பட்டிருக்கும் சுவரில் திருநாவுகரசரின் உருவமும் இந்ததலத்தை பற்றிய அவரது பாடல் வரிகள் தமிழிலும், ஹிந்தியிலும் சம்ஸ்கிருத்திலும் பொறிக்க பட்ட கல்வெட்டுகள். தமிழ்நாட்டு நகரத்தார் உபயம்.  சற்று தள்ளி ஆதி சங்கரர் தன் ஒரே சொத்தான தண்டத்தை துறந்து இமயத்தின் உச்சியை நோக்கி நடந்த இடத்தை குறிக்கும் வகையில் ஒரு கைமட்டும் தண்டத்துடன்  எழுப்பட்ட சின்னம். இவையெல்லாம் இருந்த இடம் அடையளாம் தெரியவில்லை. ஆனால் இந்த 8 நூற்ராண்டு கோவில் மட்டும் அப்படியே நிற்பது ஆச்சரியம்  
கோவில் அருகில் பெரிய அளவில் நதி கிடையாது.  (ஒரு காலத்தில் இருந்திருக்கிறது) ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலங்களை இந்த பகுதி சந்திக்கிறது. இதற்கு முன்பும்கூட பலமுறை இமயமலையில் பெரும் மழை கொட்டித் தீர்த்திருக்கிறது அப்படியிருக்கும்போது இந்த கோவிலில் வெள்ளம் எப்படி சூழ்ந்தது ?  1000 ஆண்டுகாலம் இல்லாமல் எப்படி இந்த பயங்கர  விபத்து  இப்போது நிகழந்தது?
மழையும் வெள்ளமும் இயற்கையின் சீற்றமாமக இருக்கலாம் ஆனால் ஆனால் இந்தப் பேரழிவுக்கான பழியை இயற்கை மீதுபோடுவது தவறு. . இது Man Made Disaster க்கு  மனிதர்களின் செயலே காரணம் என்கிறார்  உத்தர்கண்ட் பகுதி சுற்றுச் சூழல் ஆராய்ச்சியாளர் மகராஜ் பண்டிட்.

உத்தர்கண்ட் மாநிலம் உருவான காலத்திலிருந்தே அவர்கள் சந்தித்த மிகபெரிய பிர்ச்சனை மின்பற்றாகுறை. ஜீவ நதியான அலக்நந்தா (கங்கை) இருந்தும் மாநிலத்தின் மின் தேவைக்கு அண்டைமாநிலங்களை நாட்வேண்டியிருந்தது. மாறிவந்த அரசுகள் தொடர்ந்து  சிரு சிறு அளவில் மலைப்பகுதிகளில் மின் உற்பத்தி நிலையங்களை  அமைக்க துவங்கின. இன்னும் 90நிலையங்களுக்கு திட்டமிடபட்டிருக்கிறது. இந்த மின் நிலையங்களின்  தேவைக்கு ஏற்ற பல இடங்களில் நதிகளின் போக்குகள் திருப்பிவிடபட்டன. கங்கையின் மற்ற முக்கிய துணையாறுகளான பாகீரதி 80 சதவீதமும், அலக்நந்தா 65 சதவீதமும் பாதை மாற்றப்பட்டுள்ளன, மின் திட்டங்கள் மற்றும் அணைக்கட்டுகளுக்காக. மற்ற சிறிய ஆறுகள் 90 சதவீதம் அதன் போக்கிலிருந்து திருப்பிவிடப்பட்டுள்ளன..

 அவற்றில் ஒன்று கேதார் கோவிலுக்கு அருகில் சென்ற மந்தாகினியின் பிரிவு, 10 ஆண்டுகளுக்கு முன்னரே இது செய்யபட்டுவிட்டது கேதார்நாத் மூன்று மலைகளுக்கிடையே இருக்கும் சிறு பள்ளதாக்கு, ஒன்றின் உச்சிக்கு பெயர் ”கேதார் டோம்”. இது ஒரு பனிச்சிகரம். இந்த சிகரம்தான் உடைந்து அதன் கீழே உள்ள சர்பால் ஏரியில் விழுந்தது. இது கோவிலுக்கு 6 கீமீ தொலைவில் இருக்கிறது, அன்று ஏற்கனவே பேய் மழை பெய்து கொண்டிருந்தாதால் ஏரி நிரம்பிக்கொண்டிருந்தது. பல ஆயிர கன அடி தண்ணீராக  பனிசிகரம் கேதார் டோம் இந்தஏரியில் விழுந்தவுடன் ஏறி உடைந்தது. வெளியேறிய நீர் ஒரு இமாலய சுனாமியை உருவாக்கியதால், மந்தாகினி ஆறு தனது பழைய பாதையைதே தேடி பெரும் வேகத்தில் வழியிலிருந்து மனிதர்கள், கட்டடங்கள், வாகனங்கள் அத்தனையையும் வாரிசு சுருட்டி வீசிவிட்டு ஓடியது. அதன் விளைவாக  மலையின் கீழ்பகுதியாக இருக்கும் ரிஷிகேஷில் கங்கை கரையில் இருக்கும்  14 அடி உயர சிவன் சிலை முழுகும் அளவிற்கு தன்சீற்றத்தை காட்டியது
கரையின் இருபுறமும் வெள்ளம் அழித்த கட்டிடங்களில் 90%க்கு மேல் அனுமதி பெறாதவை, அரசியல் வாதிகளுக்கு சொந்தமானவை. ரோடு அருகில் ஒருசின்ன இடத்தை வாங்கி அதையொட்டி இருக்கும் மலைச்சரிவிலும் ஆற்று படுகைகளிலும் ராட்சத கான்கீரிட் தூண்களை எழுப்பி அதன் மீது விரிந்த பரப்பில் உருவாக்கிய கட்டிடங்கள்.  இந்த பேரழிவில் சிக்கிய யாத்திரிகர்களையும் அவர்களை மாநில அரசுகள் மீட்டதைபற்றியும் மீடியாக்கள்  எழுதிதள்ளுகின்றன.  ஆனால் மிக அதிக அளவில் பாதிக்கபட்டிருபது அந்த மலைச்சரிவின் 200கிராமங்களின் மக்கள்.. அவர்களில் பலருக்கு வாழ்வாதரம் இந்த கோவில்தான். மாநில மக்கள் தொகை ஒரு கோடி, வரும் டூரிஸ்ட்கள் 2.5 கோடி. பலருக்கு 6 மாதசீஸன் வருமானத்தில் ஒராண்டு வாழக்கை. அடுத்த 3 ஆண்டுகளுக்கு இவர்களுக்கு வாழ வேறு வழியில்லை.
இயற்கையின் சீற்றம் ஒவ்வொருமுறையும் நமக்கு  ஒரு பாடம் சொல்லிதரும். இம்முறை நதிகள் சொல்லியிருப்பது காடுகளை அழித்து, எங்கள் போக்கை மாற்றினால் ஒரு நாள்-  பெரும் அழிவிற்கு பின்  நாங்களே  அதை சரிசெய்து கொள்வோம்.  \

26/6/13

அழகிய காதலிக்காக ஒரு ஆழ்கிணறு

 2

 குஜராத் பயணம் 2 


குஜராத் மொழியில் வாவ் என்று சொன்னால் படிக்கட்டுகளுடன் உள்ள ஆழ் கிணறு என்று அர்த்தம். அஹமதாபாத் நகருக்கு அருகில் 18 கீமீ தொலைவில் இருக்கும் அடலாஜி என்ற கிராமத்தில் இருக்கும் இந்த கிணற்றை பார்ப்பவர்கள் பிரமித்துபோய் ஆச்சரியத்தில் சொல்லுவது “ "வாவ்”. கலைநயம் மிளிரும் தூண்களுடன் நிற்கும் ஐந்து பெரிய தளங்கள். மலர்கள், பறவைகள் யானைகள் என்று அழகான சிற்பங்களுடன் அதன் பக்க சுவர்கள், வழவழப்பான அதன் தரைகள்,. இவ்வளவும் பூமிக்கு அடியில். 300 அடிகள் ஆழத்திற்கு அமைக்கபட்டிருக்கிறது. எண்கோண வடிவில் பிரமாண்டமாக அமைக்க பட்டிருக்கும் இதன் மூன்று பக்கங்களிலும் இருக்கும் அகலமான படிகள் கிழே முதல் தளத்திற்கு இட்டு செல்லுகிறது. அங்கிருந்து கிழே தண்ணீர் இருக்கும் பகுதிக்கு இறங்க வசதியாக  அமைக்கபட்டிருக்கும் 344 படிக்கட்டுகளின் பக்க சுவர்களை இணைத்து வட்டவடிவில் தளங்கள். எளிதாக நூறுபேர் அமரலாம். அவற்றிலிருந்து கிழே கிணற்று நீரை பாதுகாப்புடன் பார்க்க சுற்று சுவர்கள், மாடங்கள். தள சுவர்களில் சமஸ்கிருத எழுத்துக்களில் ஸ்லோகங்கள், சிற்பங்கள் இந்த கிணற்றின் கதை எல்லாம். இதை ஒரு கிணறாக மட்டுமில்லாமல் மக்கள் கூடும் பலவகை பயன்பாட்டிருக்கு உதவும் ஒரு சமூதாய கூடமாக அமைக்கபட்டிருப்பது புரிகிறது  இதைஎல்லாம் விட ஆச்சரியம். 300 அடை ஆழத்தில் அண்டர்கிரவுண்ட்டில் இருக்கிறோம் என்பதை மறக்க செய்யும் வெளிச்சமும் காற்றும்.வெளியே அனலாக கொதிக்கும் ஏப்பரல் மாத அஹமதாபாத்தின் தாக்கமே இல்லாமல் இதமான சுழல்.


கட்டிட கலையில் மிக சவலானது நிலத்தடியில் கட்டிடம் எழுப்பவது. அதுவும் சரியான இடத்தில் ஒரு வற்றாத ஆழ்கிணற்றின் நீர் நிலையை கண்டுபிடித்து (இன்றும் அதில் தண்ணீர் இருக்கிறது) அதில் பருவகாலத்தில் அதிகபட்ச நீர் நிறையும்இடத்தைகணக்கிட்டு  மேல் நோக்கி கலைநுணுக்கத்துடன் தளங்களைஎழுப்பி இணைத்திருப்பது ஒரு சாதனை.. 15ஆம் நூற்றாண்டிலேயேஇதை இந்திய கட்டிடகலைஞர்கள் சாதித்திருக்கிறார்கள் என்பதற்கு சாட்சியாக நிற்கும் இது,  தாஜ்மஹாலைப்போல ஒரு காதல் சின்னம் என்பதை அதன் சுவர்களிலிருக்கும் கல்வெட்டுக்கள் சொல்வது  நம் ஆச்சரியத்தை இன்னும் அதிகமாக்குகிறது.
15ம் நூற்றாண்டில் இந்த பகுதியை ஆண்ட மன்னன் ராணா வீர்சிங். அவரது காதலித்து மணம் புரிந்த கொண்டது ரூபா என்ற அழகிய கிராமப் பெண்ணை..தன்னைப்போல தன் ஊர் மக்கள் தண்ணீருக்காக நீண்ட தூரம் நடப்பதை தவிர்க்க தங்கள் காதலின் நினைவு பரிசாக தன் கிராம மக்களுக்கு ஒரு அழகான கிணற்றை நிர்மாணிக்க வேண்டினார் ருபா. மகிழ்ச்சியுடன் சம்மதித்த மன்னர் உடனே செய்ய துவங்கினார். ஆனால் 3 வது மாட பணிகள் நடந்து கொண்டிருந்தபோது, அந்த காலகட்டத்தில் வேகமாக பரவி வந்த முகமதியர் படைஎடுப்பினால் பக்கத்து நாட்டு முகமதிய மன்னன் தொடுத்த போரில் ராணா வீர்சிங்  கொல்லபட்டு நாடு முகமதியர் வசமாகிறது. முகமதிய மன்னர் ராணி ரூபாவின் அழகில் மயங்கி தன் காதலை அவரிடம் சொல்ல,ராணி ரூபா சொன்ன ஒரே நிபந்தனை இந்த கிணற்றின் பணியை முடித்து மக்களுக்கு கொடுங்கள் நான் உங்கள் மனைவியாகிறேன் என்பது தான்.
கட்டிட பணி தொடர்கிறது. ரஜபுத்திர கட்டிடகலைபாணியில் துவக்கபட்ட கிணற்றின் கடைசி இரு மாடங்கள் முகமதியர் பாணியில் முடிக்கபடுகிறது. மக்களுக்கு அர்பணிக்கும் விழாவின் மறுநாள் திருமணம் என்ற நிலையில் ரஜபுத்திர பெண் ரூபா அந்த கிணற்றை வலம் வந்து அதில் விழுந்து தன் உயிரை போக்கி கொள்ளுகிறார். அதற்கு சில நாட்கள் முன்பு அருகிலிருக்கு ஸ்வாமி நாராயணன் கோவிலின் தலமையிடம் தான் செய்ய போகும் காரியத்தையும் தன் மரணத்திற்கு பின் கிணற்று நீரை புனிதபடுத்த வேண்டிய சடங்குகளைசெய்யது மக்கள் பயன்படுத்தஉதவ வேண்டும் என்று வேண்டியிருக்கிறார். (இது அந்த கோவிலிலும் பதிவு செய்யபட்டிருக்கிறது). தான் ஏமாற்றபட்டவிட்ட கோபத்தில் முகம்மதிய மன்னன் இதை இடித்து தள்ளாமல் விட்டதைவிட ஆச்சரியம் தகுந்த பாதுகாப்புடன் மக்கள் அதை பயன்படுத்த அனுமதித்ததுதான். அவரின் ஒருதலைகாதலின் சின்னமாக இருக்கட்டும் என விட்டிருக்கலாம் என சில சரித்திர ஆசிரியர்கள் எழுதியிருக்கிறார்கள்.
அழகான, ஆழமான இந்த கிணறு இரண்டு மன்னர்களும் காதலித்தது ஒரு பெண்ணை மட்டுமில்லை கட்டிடகலையையும் தான் எனபதை நமக்கு சொல்லுகிறது.
படங்களை ஸ்லைட் ஷோவில் பார்க்கலாம் 











23/6/13

பெரிய அண்ணன் பார்த்து கொண்டிருக்கிறார்,





உங்கள் ஈ மெயில், பேஸ்புக், டிவிட்டர், பிளாக்இண்டர்நெட்டில் அனுப்படும் போட்டோக்கள், ஸைக்ப்பில் பேசுவது, யூடூபில் பார்ப்பது, அனுப்புவது எதுவாக இருந்தாலும் அமெரிக்க உளவுதுறையால் எப்போது வேண்டுமானாலும் உங்கள் இண்ட்ர்னெட்டின் சர்வரிலிருந்து நேரிடையாக பெற்று பார்க்க முடியும். தொடர்ந்து கண்காணிக்கவும் முடியும்.  அதற்கான அதிகாரமும்  அத்தனை வசதிகளும் அவர்களிடமிருக்கிறது. .  ஆப்பிள், மைக்ரோசாப்ட். குகூள், யாகூ போன்ற எல்லா நிறுவனங்களும் இதற்கு உதவ ஒப்பந்தம் செய்து  கொண்டிருக்கின்றன,இந்த திட்டத்திற்கு பிரிசம்”PRISM என்று பெயர்  ”உலகம் முழுவமுள்ள தனி மனிதர்களின்  சுதந்திரத்தில் தலையிடும் மிகப்பெரிய குறுக்கீடு, மனித உரிமை மீறல் இது என்ற அதிர்ச்சியான தகவலை கடந்த வாரம் அமெரிக்காவின் புகழ் பெற்ற தினசரி கார்டியன்” வெளியிட்டிருக்கிறது கார்டியன் இதழ் அதன் நம்பகமான செய்திகளுக்கும், ஆணித்தரமான தலையங்களுக்கும் பெயர் பெற்றது. தொடர்ந்து வாஷிங்டன் போஸ்ட் தினசரியும்  இது பற்றி ஒரு கட்டுரையை வெளியிட்டிருக்கிறது.
NSA நேஷனல் தேசீய ஏஜென்ஸி என்பது அமெரிக்க உளவு துறையின் 
ஒரு அங்கம் 1952லேயே துவக்கபட்ட இது முதல் 20 ஆண்டுகள் எங்கிருந்து இயங்குகிறது எனபதே தெரியாத அளவிற்கு ரகசியமானதாக இருந்தது. NSA என்றால் ”நோ ஸ்ச் ஏஜென்சி” என்று கூட கிண்டல் செய்யபட்டது. 1975ல் ”இது வெளிநாடுகளில் அமெரிக்க பாதுகாப்புக்கு ஏதிராக நடவடிக்கைகளில் ஈடுபடும் சந்தேகத்திற்குரிய நபர்களின் செய்தி தொடர்புகளை கண்காணிக்கிறது. அமெரிக்க மக்களின் தனிநபர் சுதந்திரத்தில் தலையீடுவதில்லை” என்று இதன் அன்றைய தலைவர்  அமெரிக்க நாடளுமன்றத்தில் ஆஜாராகி தெரிவித்தார். ஆனால் இந்த நிறுவனம்தான்  இப்போது அமெரிக்கா மட்டுமில்லை உலகம் முழுவதும் உள்ள அத்தனை பேரின் அந்தரங்களுக்குள்  ஊடூருவும் சர்வ வல்லமை பெற்றிருக்கிறது.. இது அமெரிக்க அதிபரின் அனுமதியையும் பெற்றிருக்கிறது என்கிறது கார்டியன். NSA இன்று ஆண்டுக்கு 20 கோடி டாலர் பட்ஜெட்டில் 1000பேருக்கு மேல் பணியாற்றும்-(பலர் ராணுவ சேவை எனற போர்வையில்) - நிறுவனம். பல வெளிநாடுகளில் அலுவலகங்கள் எனஇன்று உலகின் மிகப்பெரிய கண்காணிப்பு நிறுவனமாக பிரமாண்டமாக வளர்ந்திருக்கிறது. இதன் கண்காணிப்பு பட்டியலில் 5 வது இடத்தில் இருப்பது இந்தியா. கடந்த மார்ச் மாதம்மட்டும்  இவர்கள் ஆராய்ந்திருப்பது 63 லட்சம் இந்திய செய்திகளை!
அமெரிக்க சட்டத்தின் படிஒரு அமெரிக்கரின் அல்லது வெளிநாட்டாவரின் போன் அல்லது எந்த ஒரு செய்தி தொடர்புகளை கண்காணிக்க வேண்டுமானால் அரசு அதற்கென மட்டுமே இயங்கும் ஒரு கோர்ட்டில் ரகசிய ஆணையை வாரண்ட்டாக பெற வேண்டும். இது செனட் கமிட்டிக்கு தெரிவிக்கபடும். ஆனால் இப்போது இது NSA வின் நடவடிக்கைகளுக்கு பொருந்தாது என அமெரிக்க அதிபர் விசேஷ அதிகாரம் அளித்திருக்கிறார். அதனால் அவர்கள் எப்போது வேண்டுமானலும் யாருடைய கணக்கையும் கண்காணிக்க முடியும். இந்த அதிகாரம் புஷ் அதிபராக இருந்தபோது வழங்கபட்டது. ஒபாமா அதன் ஆயூட்காலத்தை இப்போது நீடித்திருக்கிறார். ஒபாமா தன் முதல் தேர்தலில்”புஷ் நிர்வாகத்தில் அமெரிக்க மக்களின் தனி உரிமைகளில் அரசாங்கத்தின் தலையீடுகளை” கண்டித்தவர்.
 செய்தி வெளியாகி ஊடகங்கள் கலக்கி கொண்டிருந்தபோது , ”பிரிஸமா ?” அப்படி ஒன்றும் எங்களுக்கு தெரியாதே!. நாங்கள் கோர்ட் கேட்கும் தகவல்களை மட்டுமே கொடுப்போம். எங்கள் வாடிக்கையாளர்களின் செய்திகளை நாங்கள் யாருடனும் பகிர்ந்து கொள்வதில்லை என எல்லா இண்ட்ர்நெட் சேவை நிறுவனங்களும் தெரிவித்தன. எல்லா கம்பெனிகளின் அறிக்கைகளூம் ஒரே மாதிரியான வாசகங்களை கொண்டிருப்பதிலிருந்தே உண்மை புரிய வில்லையா? என கேட்கிறது வாஷிங்டன் போஸ்ட்.  கார்டியன் வெளியிட்ட செய்திகள் முழுவது உண்மையில்லை என சொல்லும் NSA வின் தலைவர் கண்காணிக்க படுவதை மறுக்க வில்லை.  அமெரிக்க அதிபர் ஓபாமா ”தேச நலனுக்காக செய்யபடும் விஷயங்களில் எந்த நிர்வாகமும் 100% வீத பாதுகாப்பும், 100% தனிஉரிமையையும் 0% யாருக்கு தொல்லையில்லாத வாழக்கையை எல்லோருக்கும் அளிக்க முடியாது” என்று  சொல்லியிருப்பது அவரின் ஆசியுடன் தான் இந்த விஷயங்கள் நடைபெறுகிறது என்பதை உறுதி செய்கிறது. பிரிஸம் பிரிவினருக்கு பயிற்சி அளிக்க தயாரிக்க பட்டிருந்த 41 ஸ்லைட்(power point slides) கள் கார்டியனிடம் சிக்கியதால் வெளிச்சதிற்கு வந்த விஷயம் இது. எப்படி இந்த அதி ரகசிய ஆவணம் லீக் ஆனது? என்பதை விசாரிக்க உயர்மட்ட குழு அமைக்கபட்டிருக்கிறது. மக்கள் நலன் கருதி சொன்னது நான் தான் என எட்வர்ட் என்பவர் அறிவித்திருக்கிறார். இவர் முன்னாள் ஊழியர்.
இணையஉலக வாசிகள் அதிர்ந்துபோயிருக்கிறார்கள். அமெரிக்காவில் எதிர்க்ட்சிகள் நாடளுமன்றத்தில் எழுப்ப காத்திருக்கின்றன. மீடியாக்கள்எதிர் குரல் எழுப்பிகொண்டிருக்கின்றன. இந்தியாவில் அகில இந்திய சேவை வழங்குவோர் சங்கம், அமைச்சர் கபில் சிபிலை சந்தித்து பிரச்சனை குறித்து பேசவிருக்கிறார்கள்.
ஏது எப்படியோ இனி மெயில் எழுதும்போது பேஸ்புக் கமெண்ட் போடும்போது ஜாக்கிரதையாக (தலைவர் ஒபாமா வாழ்க?) எழுதுங்கள்.  பெரிய அண்ணன் பார்த்து கொண்டிருக்கிறார்,    

16/6/13

இன்னும் ஒரு காந்தியாக..

குஜராத் பயணம் 1

     
அஹமதாபாத்திலிருந்து காரில்போய் பஞ்ச துவாரக்களையும் அதில் ஒன்று ராஜ்ஸ்த்தான் எல்லயில் இருப்பதால் அதனருகிலிருக்கும் புஷ்கர் பார்க்க  7 நாள் பயண திட்டம். துவாரகா அருகில் இருக்கும் சோமநாத் கோவிலை பார்க்க போகும் 7 மணிநேர பயனத்திற்கு முன் அஹமதாபாத்தில் சில மணிகளை செலவிட்டு போகலாம் என்று முதலில் போன இடம் அண்ணல் காந்தி அடிகள் வாழ்ந்த சபர்மதி சேவாஸ்ரம். அந்த இடத்தை மீயூசியமாக மாற்றியிருக்கிறார்கள்.

ஓடுவேயந்த தாழ்வாரம் வடிவில்  கான்கீட்டில் வடிவமைக்கபட்ட 6 பட்டை வடிவ கூடம். இயற்கையான வெளிச்சம் வரும்படியான சுழலில் நிறைய படங்கள் காந்தியின் இந்த தேசத்தின் கதையை சொல்லுகிறது. நிறைய நேரமும், பொறுமையும் சரித்திர நேசிக்கும் தன்மையும் வேண்டும். சில படங்கள் இதுவரை நாம் எங்குமே பார்க்காதது. காந்தியின், அவர்பற்றிய புத்தகங்கள் நிறைந்த நூலகம் இருக்கிறது. ஆராய்சியளர்களுக்கு மட்டும்தான் அனுமதியாம்.
வெளியே பெரிய தோட்டம். காந்திகாலத்தில் பெரிய திடலாக இருந்திருக்கும் போல. ஆஸ்ரமத்தை ஒட்டிய படி சமர்மதி நதி போகிறது. இப்போது அதை லண்டன் தேம்ஸ் அளவிற்கு அழகுபடுத்த  முதல்வர் மோடி திட்டமிட்டிருக்கும் வேலைகள் நடப்பதால் நதி எங்கியோ திருப்ப பட்டு காய்ந்து கிடக்கிறது. அதை நோக்கியிருக்கும் பிராத்தனை திடல். இது காந்தியின் வாழக்கையில் முக்கிய இடம். பல விஷயங்கள் அறிவிக்கபட்ட இடம் என்ற குறிப்பை நிறுத்தியிருக்கிறர்கள். அவர் வாழ்ந்த ஹிருத்ய குஞ் வீட்டை பார்த்தவுடன் அதை முதன்முதலில் பார்த்த ஆட்டன்ப்ரோவின் காந்தி படம் நினைவிற்கு வந்தது.உள்ளே பார்த்தபோது இந்த சின்ன இடத்திலிருந்தா இந்த மனிதன் உலகத்தையே கவனிக்க செய்தார் என ஆச்சரியமாக இருந்தது. நுழையுமிட்த்தில் ஒருவர் ராட்டையில் நூல் நூற்றுகொண்டிருந்தார். ஸ்ரீவில்லிப்தூர் வீட்டில் என் தாத்தா டாக்டர் நாராயண அய்யர் தினமும் நூற்று அந்த நூலை கதர் கடையில் கொடுத்து கதர் துணி வாங்கி அதை தானே சட்டையாக தைத்துபோட்டுகொள்வது நினைவலைகளாக தொட்டுபோனது. வெளியே
சற்று தள்ளி வினோபாவே வாழந்த இடத்தை  பார்த்த்தும் ஒரு கணம் மூச்சே நின்றுவிட்டது. எவ்வளவு எளிமையான வாழ்க்கையை நமது தலைவர்கள் வாழ்ந்து காட்டியிருக்கிறார்கள்?.
ஓவ்வொரு இந்தியனும் இதை பார்க்கவேண்டும் தன் குழந்தைகளுக்கு காட்டவேண்டும் என தோன்றுகிறது. பணம்கொட்டும் குஜராத் மாநிலம் இதை இன்னும் வெளிநாடுகளில் இருக்கும் நினைவுதலங்கள் போல சிறப்பாக அமைக்கலாம். ஒலி ஓளிகாட்சி,காதில் மாட்டிக்கொள்ளும் வசதியுடன் விளக்க உரை தரும் சிடிபேளையர்கள், கதைகள் சொல்லும் கைடுகள் என நிறைய செய்யலாம். காந்தி சம்பந்த பட்ட சினிமாபடங்களை காட்டும் காட்சிகூடம் அமைக்கலாம். காந்தியை பிடிக்காத பிஜேபிகாரகள் செய்யாவிட்டால் கூட   ஒரு காந்தியாக வரப்போகும் ராகுல் காந்தியாவது செய்யவாரா?செய்ய வேண்டுமம்
அஹமதபாத்தை ரொம்பவும்  மாற்றிகொண்டிருக்கிறார்கள்.பஸ்க்கு தனிபாதை-டிராக்,

நகரின் நடுவே ஒடும் நதியை அழகாக்குவது, பரோடாவை இணக்க எக்ஸ்பிரஸ்வே எல்லாம். இதில் கார்களுக்கும் பஸ்களுக்கும் மட்டுமே அனுமதி. மீனிமம் ஸ்பீடு 100கிமீ.ரோடில் நடந்தால் 1000 ருபாய் பைன் அல்லது ஜெயில். அஹமதாபாத்திலும் சோம்நாத் போகும் வழியில் பார்த்தவைகளில் சில படங்களை இந்த பக்கத்தின் மேலுள்ள பயாஸ்கோப்பை கிளிக் செய்து open in new window வை கிளிக் செய்தால்  ஸ்லைட் ஷோவில் பார்க்கலாம்




7/6/13

GANDHI AND GODSE





மாலனின் ஜனகன மண வை  சாந்தி சிவராமன் 
ஆங்கித்தில் மொழிபெயர்த்திருக்கிறார்.Indian Writing   வெளியிட்டிருக்கிறது.
மூலத்தை அப்படியே பிரதிபலிக்கும் நல்ல மொழிபெயர்ப்பு.





3/6/13

“ஏர்போர்ஸ் ஒன்” என்பது அமெரிக்க  ஜனாதிபதிகள் மட்டும் பயன் படுத்தும் விமானம். சகலவசதிகளுடனும் மிகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடனும்  இருக்கும் இந்த விமானத்தை அமெரிக்க அதிபர்கள் தங்கள் உள்நாட்டு வெளிநாட்டு பயணங்களுக்கு  பயன்படுத்துவார்கள். அதிபர் குடும்பத்தினர், அவரது விருந்தினர்கள் மட்டுமே பயணிக்கும் இந்த பெரிய விமானத்தில் குறைவான இருக்கைகள் அதிகமான வசதிகள். அதிபருக்கு வெள்ளமாளிகை “ஓவல் ஆபிஸ்” போல ஒரு  அறை,குடும்பத்தினருக்கு தனி அறைகள், ஜிம்,  அதிகாரிகள் கூட்டத்திற்கான கான்பிரன்ஸ்ரூம்,தொலைதொடர்பு வசதிகளுடன் பத்திரிகையாளர்கள் அறை, அதிபரின் குரூப் ரத்ததின் சேமிப்புடன் ஒரு குட்டி ஆஸ்பத்திரி  என எல்லாம் இருக்கும்.
அவசியமானால் பறந்துகொண்டிருக்கும்போதே மற்றொருவிமானத்திலிருந்து பெட்ரோல் நிரப்ப வசதி,  தரையிலிருந்து பாயும் ஏவுகணைகள் விமானத்தை தாக்க முடியாத பக்க சுவர்கள் போன்ற பாதுகாப்பு வசதிகள்,  வாஷிங்டனிலுள்ள வெள்ளை மாளிகையுடன் எப்போது தொடர்பிலிருக்கும் ஹாட்லைன். உலகின் எந்த நாட்டு அதிபரையும்  தொடர்புகொள்ளும் வசதியுள்ள டெலிபோன்கள் போன்ற சகல வசதிகளுடன் கூடிய  ஒரு பறக்கும் ”வெள்ளை மாளிகை” இது


1990லிருந்து அமெரிக்காவின் முன்னாள் அதிபர்கள் ஜெரால்ட் ஃபோர்ட், ஜிம்மி கார்ட்டர், ரொனல்ட் ரீகன், ஜார்ஜ் எஸ்.புஷ், பில் கிளிண்டன், ஜார்ஜ் டபிள்யு.புஷ் ஆகியோர் பயணம் செய்த போயிங்  DC9-32 வகையை சேர்ந்த இந்த ஏர்போர்ஸ் ஒன் விமானத்தை  இப்போது ஏலம் போடபோகிறார்கள். இதைவிட இன்னும் அதிகமான பாதுகாப்பு  மற்ற வசதிகளுடன் கூடிய புதிய விமானத்தை அதிபர் ஒபாமாவின் பயன்பட்டிற்காக வாங்கியிருப்பது தான் காரணம். இம்மாதிரி அதிபரின் ஏர்போர்ஸ் ஒன்  விமானத்தை ஏலம்போடுவது இதுதான் முதல்முறை.  ஆன்லைனில் நடைபெறும் இந்த ஏலத்திற்கு 50000 டாலர்கள் குறைந்த பட்ச தொகை என்று நிர்ணயத்திருக்கிறார்கள்.  ”நாங்கள் இப்படி ஒரு சரித்திர சம்பங்களுக்கு சாட்சியான அரிய பொருளை அடிக்கடி விற்பதில்லை. வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுங்கள் என விளம்பரபடுத்தி எவரும் பங்குகொள்ளகூடிய ”ஆன்லைன்” ஏலத்தை அறிவித்திருக்கிறது GSA(Govt. Service Agency). இவர்கள் தான் அமெரிக்க அரசாங்க அலுவலக சொத்துகளை பராமரிப்பவர்கள்.   ஏலத்தில் கேட்கபடும் அதிக தொகைக்கு விமானம் விற்கபடும்.. அரிசோனா மாநிலத்தில் போனிக்ஸ் விமான நிலையத்தில்  நிற்கும் இந்த விமானத்தை அப்படியே அங்கிருந்து எடுத்து செல்லும் பொறுப்பு வாங்குகிறவர்களுடையது
விமானத்தை வாங்கியவர்கள் ”ஏர் போர்ஸ் ஒன்” என்ற பெயரையோ அல்லது அதிபரின் சின்னத்தையோ பயன்படுத்தமுடியாது. ஏனென்றால் ஏர்போர்ஸ் ஒன் என்பது அமெரிக்க அதிபர் பயணம் செய்யும்  விமானத்தின் அடையாள எண்.  அதிபர் அந்த விமானத்தில் இருந்தால் மட்டுமே அந்த பெயரால் அழைக்கபடும் என்கிறது அமெரிக்க விமானதுறை சட்டம். .இது மிக அதிகமான் செலவில்  தயாரிக்கபட்ட விமானம் என்பதால் இதன் உதிரிபாகங்கள் அதைதயாரித்த நிறுவனத்திடம் மட்டுமே கிடைக்கும் அதுவும் மிக அதிக விலையில்தான் இருக்கும் அந்த விலைக்கு புது ஜெட் விமானமே வாங்கிவிடலாமாம். அப்படியானால் யார் வாங்குபவர்கள்? வாங்கி  என்ன செய்வார்கள்.?

”அருமையான கிச்சன் வசதி இருப்பதால் அதை அப்படியே நிறுத்தி ரெஸ்டோரண்ட் நடத்தலாம்..” ஆபிஸ் அருகில் நிறுத்தி கான்பிரன்ஸ் போன்ற தங்கள் அலுவ்லக மீட்டிங்களுக்கு பயன்படுத்தலாம். பணக்காரர்கள் தங்கள் வீட்டு வாசலில் நிறுத்தி “ நான் சின்ன பையானாக இருந்த போது இதில்தான் நம் பிரெஸிடெண்ட் போவார் என்று பேரகுழந்தைகளுக்கு காட்டலாம் என்ற ரீதியில்  இணைய தளத்திலும் பேஸ் புக்கிலும் பல ஐடியாக்கள் கொட்டுகின்றன. விமானத்திற்கு விலையை சொல்லுபவர்களை விட விதவிதமான யோசனைகள்  சொல்பவர்கள் தான் அதிகமாகிக்கொண்டிருக்கிறார்கள். ம்ம். யார்வீட்டு வாசலில்  இது நிற்கபோகிறதோ?