27/1/19

அலஹாபாத் அழகாகிக்கொண்டிருக்கிறது


4 நகரங்கள்,  இரண்டுகோடி. பக்தர்கள் ஒரே திருவிழா

கங்கையும் யமுனையும் கண்ணுக்கு தெரியாத சரஸ்வதியும்  சங்கமிக்கும்  இடத்தில் 1580ஆம் ஆண்டு, மன்னர் அக்பர் புதிய நகரம் ஒன்றை உருவாக்கி, அதற்கு 'இலாஹாபாத்' என்று பெயரிட்டார். பின்னர்,  அது ஷாஜகான் காலத்தில் 'அலகாபாத்' என்று மாற்றப்பட்டதாக வரலாறு  சொல்லுகிறது. இப்போது. அதன் புதியபெயர்  பிரயாக்ராஜ்:

இந்த பிரயாக்ராஜ் இப்போது மிக அழகாகிக்கொண்டிருக்கிறது. புதிய சாலைகள்,, பாலங்கள் கட்டிடங்கள் மட்டுமில்லை. எப்போதும் சற்று அழுக்காகவே இருக்கும் நகரின் பல தெருக்களின் சந்துகளின் சுவர்களைக்கூட அழகான ஓவியங்கள் அலங்கரிக்கின்றன. பெரிய அளவில்  தெய்வ, மற்றும் இயற்கை காட்சிகள் வண்ணப்படங்களுடன் ஒரு  ஓவியகண்காட்சி போலிருக்கிறது.






12 ஆண்டுகளுக்கு ஒரு முறை வருவது கும்பமேளா என்ற திருவிழா இதை  ஆர்த கும்பமேளா அல்லது  பூர்ண கும்ப மேளா என்கிறார்கள்  6 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுவது. அர்த்த கும்ப மேளா.  இந்த கும்பமேளா ஹரித்துவாரில் முதலில் தொடங்குகிறது. இதனைத் தொடர்ந்து பிரயாக், நாசிக், உஜ்ஜயினி நகரில் நடைபெறும் மூன்று நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடுவது மிகப் புண்ணியம்  என்பதால்   பிரயாக்ராஜ் நகரின்(அலஹாபாத்) விழா மிக முக்கியத்துவம் பெறுகிறது. இந்த ஆண்டு அர்த்த கும்ம மேளா  ஜனவரி 15  மகரசங்கராந்தி தினத்தன்று அதிகாலை 4 மணிக்குத் திரிவேணி சங்கமத்தில்  பக்தர்கள்,,சாதுக்கள் என 2 கோடி பேரின்   புனித நீராடலுடன் தொடங்கியிருக்கிறது என்கிறது கும்பமேளா ஆணையம். இந்த விழா மார்ச் 4ஆம் தேதிவரை  நடைபெறும்.


இந்த நகரங்களில் மட்டும் ஏன் கும்பமேளா நடைபெறுகிறது? என்பது ஒரு சுவாரஸ்யமான கதை. இந்த நகரங்களில் மட்டும்  அமுதம் சிந்தியிருக்கிறது. . புராணக் கதையில் தேவாசுரர்கள் பாற்கடலைக் கடைந்து அமிர்தம் எடுத்தபோது, இந்திரனின் மகன் ஜெயந்தனுக்கு அவசரம் தாங்கவில்லை. பறவை வடிவில் வந்து அமுதக் கும்பத்தைத் தூக்கிக்கொண்டு பறந்தான். அசுரர்கள், வாயு வேகத்தில் அவனைத் தொடர்ந்தார்கள். இருவருக்கும் இடையே பன்னிரண்டு நாட்கள் (அதாவது பன்னிரண்டு வருடங்கள்) இழுபறிப் போர் நடந்தது. அந்தச் சமயம் சந்திரன் கும்பத்திலிருந்து அமுதம் சிந்தாமல் தடுக்க முயற்சி செய்தான். சூரியன், கும்பம் உடைந்து விடக்கூடாதே என்று வருத்தப்பட்டான். பிரகஸ்பதி அசுரர்கள் அபகரித்துச் சென்றுவிடாமல் காப்பாற்ற முயன்றான். சனி பகவானோ, ஜயந்தன் ஒரே மிடறில் சாப்பிட்டுவிட்டால் என்ன செய்வதென்று கவலைப் பட்டான். இப்படி நால் வரும் கூடி முயன்றும் நான்கு இடங்களில் அமுதம் சிந்திவிட்டது. அதன் விளைவால் அந்த இடங்களின் புனிதம் பலமடங்கு உயர்ந்தது. அந்த இடங்கள்தான் ஹரித்வார், பிரயாகை, உஜ்ஜயினி, நாசிக் ஆகியவை.. அதனால் அங்குள்ள நதியில் குறிப்பிட்ட நாட்களில்  நீராடினால் புண்ணியம் என்று நமப்ப்படுகிறது


உலகிலேயே மிகப்பெரிய எண்ணிக்கையில் மக்கள் கூடும்  இந்த நிகழ்விற்கு உலகின் மிகப்பெரிய கலாச்சார மற்றும் சமய நிகழ்வு என்ற பெருமையை யுனெஸ்கோ அளித்திருக்கிறது.


ஓவ்வொரு கும்ம்மேளாவிற்கும் பாதுகாப்பு, மற்றும் சுகாதார ஏற்பாடுகளுக்காக மாநில அரசுதான் செலவிடும் என்றாலும், இந்த ஆண்டு யோகி ஆதித்தனார் அரசு  4300 கோடி பட்ஜெட்டில் திட்டங்களை உருவாக்கிக் கடந்த ஆண்டு முழுவதும் 1000 கணக்கான அதிகாரிகளுடன்  அதைச்செயலாற்றிக்கொண்டிருக்கின்றது புதுப்பிக்கப்பட்ட விமான நிலையம், 6 வழிச்சாலைகள் மேம்பாலங்கள் என்று அசத்திக்கொண்டிருக்கிறார்கள். நகரம் முழுக்க சாலைகள் விரிவுபடுத்தப் பட்டுள்ளன, மேம்பாலங்கள் கட்டப் பட்டுள்ளன. மேளா நடைபெறும் பகுதிக்குள் 300 கிலோ மீட்டர் நீளத்துக்குச் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. 50 லட்சத்துக்கும் மேற்பட்ட வாகனங்களை நிறுத்தும் வகையில் நகரம் முழுக்க பெரிய கார் நிறுத்தும் வளாகங்கள் அமைக்கப்பட்டிருக்கிறது.


கங்கையாற்றங்கரையில் 250 கி.மீ நீளம் கொண்ட ‘கும்ப்நகரி' என்ற தற்காலிக  பெரிய  கூடார நகரம் உருவாக்கப் பட்டுள்ளது.  பாதுகாப்பு தேவைகளைக் கையாள்வதற்கு 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவல் துறையினரும், துணை ராணுவத்தினரும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.. விழா நாட்களில்  நகரில் அசைவம் சாப்பிட  அனுமதியில்லாதால் . இவர்களுக்கும்  அனுதியில்லை 
•ஏழு வார காலத்திற்கு நடைபெறும் இந்த ஆண்டுக்கான விழாவில் 2 கோடி பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு செளதி அரேபியாவுக்கு வந்த ஹஜ் யாத்திரிகர்களின் எண்ணிக்கையைவிட இது அதிகம்.

இந்த கும்மமேளாவிற்காக  இமயமலைப்பகுதிகளிலிருந்து சாதுக்கள் பலர் கூட்டம் கூட்டமாக வருவார்கள். அவர்களில்  பல குழுக்கள். பிரிவுகள். அரை ஆடைஅணிந்தவர்கள்,, அதுவுமில்லாதவர்கள்  ஆயுதங்களுடன், வாதியங்களுடன்  இப்படி பலவகையான குழுக்கள். இவர்கள் கங்கைக்கரையிலேயே 50 நாளும் தங்கிவிடுவார்கள்.


இவர்கள் தங்க வசதியாக தனித்தனிக் கூடாரங்கள்,  அதில் மின் வசதி நீண்ட வரிசையில்  டாய்லெட்கள். சுத்தமான குடி நீர்  போன்ற எல்லா வசதிகளையும்  செய்திருக்கிறார்கள்.  இந்த சாதுகளுக்கும், மதம் சார்ந்த குழுவினர்களுக்கும்  அவர்களே உணவு தயாரித்துகொள்ள வசதிகள் செய்யப்பட்டிருக்கிறது.
இவர்களுக்காகவே  முகாமில் 160 நியவிலைக்கடைகள். இதில் மத முகாம்களுக்கு இலவசம். மற்ற பத்தர்களுக்கு நியாவிலையில்  அரிசி கோதுமை மாவு சர்க்கரை வழங்கப்படுகிறது. இதற்காகத் தற்காலிக ரேஷன் கார்ட்கள் தரப்பட்டிருக்கின்றன. இந்த ரேஷன் கடைகளுக்கான சப்ளைகளைத்தர உள்ளேயே ஒரு கோடவுனுமிருக்கிறது.


100க்குமேற்பட்ட மருத்துவர்களுடன் 10 சிறு மருத்தவ மனை  எக்ஸ்ரே எடுக்கும் வசதிகள், பல் மருத்துவர்கள்,  தவிர 80 ஆயுர்வேத மருத்துவர்களும் தயாராக யிருக்கின்றனர். இவர்களைத்தவிர 80 ஆம்புலன்ஸ்கள்   நதியையில் மிதக்கும் 9  ஆம்புலன்ஸ், ஒருவிமான ஆம்புலன்ஸ்  எல்லாம்  அவசரத்தேவைகளை  சமாளிக்கக் காத்திருக்கிறது..



இம்முறை உபி   முதல்வரின் நேரடிப் பார்வையில் விழா ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. மத்திய அமைச்சர்களும், பல விஐபிகளும் விழாவிற்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது..வி.ஐ.பிக்கள் ஹெலிகாப்டரில் வந்து செல்ல வசதியாக ஹெலிபேட் அமைக்கப்பட்டுள்ளது. நகரின் பல பகுதிகளில் உச்சகட்ட போலீஸ் பாதுகாப்பு..

வி.ஐ.பிக்கள், முக்கியப் பிரமுகர்கள், வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள்  தங்குவதற்கு வசதியாக 4,000 சொகுசு  கூடாரங்கள்  அமைக்கப்பட்டுள்ளன. 5 நட்சத்திர ஹோட்டல் அறைகளுக்கு இணையான வசதிகளுடன் இருக்கும் இந்தச் சொகுசு குடில்களில் தங்குவதற்கு ஒரு நாளைக்கு 15,000 ரூபாயில் இருந்து 24,000 ரூபாய் வரை கட்டணம் 

சுருக்கமாகச் சொல்வதானால் கும்மமேளாவிற்காக அலகபாத் நதிக்கரையில்  சகலவசதிகளுடன் ஒரு நகரையே நிர்மாணித்திருக்கிறார்கள்..


கும்பமேளா காலத்தில் திரிவேணி சங்கமத்தில் நீராடியவர்களுக்குப் புண்ணியம் சேருகிறதோ என்னவோ  அலஹபாத் நகரம்   இப்படி ஒரு புதிய பெயருடன் புதுப்பொலிவைப்பெற  நிச்சியமாகப் புண்ணியம் செய்திருக்கிறது

கடவுள்களாக வாழும் கலைஞன்



இன்று  நம் மனதில் பதிந்திருக்கும்,வழிபடும் சரஸ்வதி, லஷ்மி முருகன் போன்ற தெய்வங்களின் உருவங்களை இந்த உலகுக்கு அந்த வடிவில் அறிமுகப்படுத்தியவர் இராஜா ரவிவர்மா.
தன் வாழ்நாளில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட ஓவியங்களைப் படைத்திருப்பதாகச்   சொல்லப்படும் இந்த ஓவியனின் அத்தனைப் படைப்புகளைப் பற்றிய விபரங்கள் இன்று ஒரே இடத்தில் இல்லை. மஹாபாரதம், இராமாயணம், புராணக்கதை மாந்தர்களைத்தவிர அவர் எண்ணற்ற படங்களை  வரைந்திருக்கிறார். அவை இவர் பெயர் இல்லாமல் இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் பல அரண்மனைகளை அலங்கரித்துக்கொண்டிருக்கின்றன.
சாகுந்தலம் போன்ற காவியத்தின் காட்சிகள் இவரது ஓவியங்கள் மூலம் கவிதைகளாயின.  இவர் வரைந்த பெண்களின் கண்கள் உணர்ச்சிகளை மட்டுமில்லை,அந்த உருவங்களும் பெண்ணின்உடல் மொழியைப் பேசின.  இவரது ஓவியங்களில் அந்த இடத்தின் சூழல், அணிந்திருந்த ஆடைகள், தரை, சுவர் ஒளி நிழல் என எல்லாம் மிக நுணுக்கமாக வரையப்பட்டிருக்கும்.  அழகான பெண் என்றால் அவர் ரவி வர்மாவின் ஓவியம் போல என வர்ணிக்கப்பட்டார். இதை வரைய எவ்வளவு காலம் பிடித்திருக்கும் என்ற எண்ணவைக்கும் பல படங்களை இவர் சிலமணி நேரங்களில் வரைந்து தள்ளியிருக்கிறார். அதனால் தான் வாழ்நாளில் அத்தனை படங்களை வரைய முடிந்திருக்கிறது.

திருவனந்தபுரம் அருகிலிருக்கும் கிளிமானுர் ஒரு சின்ன ஜமீன். அன்றைய திருவிதாங்கூர் ராஜ வம்சத்துடன் திருமணத் தொடர்புகள் ஏற்படுத்திக்கொள்ளும் உரிமை பெற்ற குடும்பம் அது. அந்தக் குடும்பத்தில் 1848ல் பிறந்தவர் ரவி வர்மா. மிகச்சிறு வயதிலேயே கிளிமானுர் அரண்மனைச்சுவர் முழுவதும் கரித்துண்டால் படங்களாக வரைய முயன்றுகொண்டிருந்த இவரின் ஆர்வத்தையும் ஓவியத் திறனையும்  கண்டுபிடித்தவர் இவரது மாமா ராஜா வர்மா. அவரது ராஜா பட்டம் தான்  மறுமக்கத்தாயம் என்ற தாய்வழி மரபுப்படி பின்னாளில் இவரை  அடைந்தது.

மாமா  ராஜ ராஜா  வர்மாவே ஒரு ஓவியராக இருந்ததால், ஓவியத்தில் மிக ஆவர்வம் கொண்ட மருமகனை திருவிதாங்கூர்  மன்னர்  ஆயில்யம் திருநாளிடம்  14 வது வயதில் ஒப்படைத்தார். அங்கு அரண்மனை  ஓவியராக இருந்த தமிழர் ராமசாமி நாயுடுவிடம் ஒன்பது ஆண்டுகள் கற்றபின் தமிழ்நாட்டில் தஞ்சாவூர் அரண்மனை ஓவியரான அழகிரி நாயுடுவிடம் தைல வண்ண ஒவியநுணுக்கங்களை கற்றார். உலகம் வியந்த இந்தக் கலைஞனுக்கு குருவாகயிருந்தவர்கள்  தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்.



திருவிதாங்கூர் மன்னரின் ஆதரவுடன்.   இளம் வயதிலேயே இவரது படங்கள் வெளிநாட்டு ஓவிய கண்காட்சிகளுக்கு அனுப்பப்பட்டு பரிசுகளைப் பெற்றிருக்கிறது  ஓவியத்தில் தீராத ஆர்வம் கொண்ட ரவி வர்மா ஒரு காலகட்டத்துக்குப்பின் தானாகக் கற்றுக்கொண்டதுதான் அதிகம்.

இலைகள், மரப்பட்டைகள், மலர்கள், மண் ஆகியவற்றிலிருந்து வண்ணங்கள் தயாரித்தே அந்தக் காலகட்டத்தில் இந்திய ஓவியங்கள் தீட்டப்பட்டன. ஐரோப்பியர்களின் எண்ணெய் வண்ணங்களை ஓவியங்களில் பயன்படுத்தி வந்தனர் அந்த உத்திகளைத் . தியோடோர் ஜென்சன் என்னும் ஐரோப்பியர்  1868 இல் அரண்மனை வந்திருந்தபோது அவர் ஓவியம் வரையும் முறையையும் உத்திகளையும் அருகில் இருந்து கவனித்து அந்த ஐரோப்பியக் கலையைக் கற்றுக்கொண்டார்.
 தேடித்தேடிச் சேகரித்த ஐரோப்பிய ஓவியங்கள், புத்தகங்கள் இவருக்கு உதவின.  வண்ணங்களின் கலவை, ஓவியத்திலிருக்கும் உடல் பரிமாணம் இவைகள் தான் ஒரு ஓவியத்தின் கலைநயத்தைத் தீர்மானிக்கின்றன என்பதை உணர்ந்த ரவி வர்மா அதை தன் ஓவியங்களில் ஐரோப்பிய முப்பரிமாண ஓவியப்பாணியை புகுத்தி தனக்கென ஒரு ஓவியப்பாணியை உருவாக்கிக்கொண்டார்.  முதல் முறையாக இந்திய ஓவியங்களில் முப்பரிமாணத்தில் கடவுளர், இதிகாசக்காட்சிகள் தைல  ஓவியங்களாயின.

 10 ஆண்டுகளுக்குமேலாக தன் கிளிமானூர் அரண்மனையிலேயே படங்களை வரைந்து தள்ளிக்கொண்டிருந்த ரவிவர்மாவுக்கு  பரோடா மன்னர். சத்யாஜிராவ் கெய்க்வாட் (Sathyajirao Gaekwad) அவர்களிடமிருந்து அழைப்பு வந்தது. அவர் உருவாக்கிக்கொண்டிருக்கும்  மிகப்பெரிய அரண்மனையின்  கூடங்களை ரவி வர்மாவின் ஓவியங்களால்  அலங்கரிக்க விரும்பினார்.. அதற்காக அந்த அரண்மனையில் 10 ஆண்டுகள் தங்கி ஓவியங்களை வரைந்திருக்கிறார்.

தொடர்ந்து மைசூர் சமஸ்தானத்தின் அழைப்பு. இப்படி மன்னர்கள், பிரபுக்களின் ஆதரவுடன் அவர்கள் படங்களையும் ,ஆங்கிலேயே அதிகாரிகளையும் வரைந்து கொண்டிருந்தாலும், அவரது சில சிறந்த படைப்புகள் அரண்மனைகளில்தான்  பிறந்தவை என்றாலும்  தன் படைப்புகள் சதாரண மனிதர்களை அடையவில்லையே என்ற ஆதங்கம் ரவி வர்மாவுக்கு இருந்தது.  அப்போது அவருக்கு எழுந்த எண்ணம் தான் அன்று ஜெர்மனியில் அறிமுகமாயிருந்த கான்வாஸில்  . வரைந்த ஓவியங்களை அதே வண்ணங்களுடன் காகிதத்தில்  அச்சிடும்  முறையை இந்தியாவில் அறிமுகப்படுத்தி தன் படங்களை அச்சிடவேண்டும் என்பது.
தன் சேமிப்பு அனைத்தையும் மூதலீடு செய்து 1894ல் பம்பாயில் ஒரு அச்சகத்தைத் நிறுவினார்.அவரது அச்சகத்தில் அச்சிடப்பட்ட முதல்  ஓவியம் தமயந்தி அன்னப்பட்சியுடன் உரையாடும் ஓவியம்.



 அழகான படங்கள் நிறைய அச்சிடப்பட்டும் அச்சகம் லாபத்தில் இயங்கவில்லை. 1896ல் அதை புனா அருகிலுள்ள ஒரு சின்ன நகருக்கு   மாற்றியும் தொடர்ந்து நஷ்டத்தையே சந்தித்தது அந்த அச்சகம்.  அச்சு இயந்திரங்களை நிறுவியபோது அவரிடம் பணியிலிருந்த ஜெர்மனியாருக்கே அதை விற்றுவிட்டு தனது ஊரான கிளிமானுருக்குத்   வருத்தத்துடன்  திரும்பிய  இந்த ஓவிய மேதையின் இறுதிக்காலம் ஒரு மோசமான ஓவியத்தைப்போலத்தான் இருந்தது.



ஐரோப்பிய நாடுகளுக்குச்சென்று பிரபல ஓவியர்களைச் சந்திக்க வேண்டும்  என்ற இவரது ஆசை நிறைவேறவில்லை.  அந்த நாட்களில் கடல் தாண்டி பயணம் செய்தால் திரும்பியபின் கோவில்களுகச் செல்லும் உரிமை தடை செய்யப்படும்  என்ற சமூக நிராகரிப்பைச் சந்திக்கவிரும்ப வில்லை அவர்..
அச்சகத்தை வாங்கியவருக்கு தன் கடவுளர் படங்களை அச்சிடும் உரிமையைக்கொடுத்திருந்தார். அதன் விளைவாகத்தான் கடந்த நூற்றாண்டில் காலண்டர்களாகப் பிறந்து பல இந்துக்குடும்பங்களின்  பூஜை அறையில் தெய்வங்களாக இடம்பெற்றிருக்கிறது இவரது ஓவியங்கள்.

எல்லா நல்ல கலைஞர்களைப்போல பாராட்டுகளுடன் கண்டனங்களையும் சந்தித்தவர் ரவி வர்மா.. மேற்கத்திய பாணியைப்புகுத்தி நம் பாரம்பரிய சித்திரகலையைச்சிதைத்துவிட்டார்,  நமது தெய்வங்களை கொச்சைப்படுத்திவிட்டார் என்றும் விமர்சிக்கப்பட்டார். அவரது ஓவியங்கள் இந்திய  கலாச்சாரத்தின் வெளிப்பாடற்றவை என்று விவேகானந்தரும், இந்திய ரசனையையும் அதன் கலைப்பண்பாட்டையும் தரம் தாழ்த்தியவர் என்று அரவிந்தரும்  எழுதியிருக்கிறார்கள்.

விமர்சனங்கள் எப்படியிருந்தாலும் சாமானிய மனிதனை ஓவியங்களை ரசிக்க வைத்த கலைஞன் அவன். .இன்றைக்கும் ஓவியராக விரும்புவர்களுக்கு  ஆர்வம்  ரவி வர்மாவின் படங்களிலிருந்துதான் துவங்குகிறது.

ஒரு நல்ல கலைஞனின் படைப்பு காலத்தால் அழிவதில்லை என்பதற்கு, ரவி வர்மா  இறந்து 100 ஆண்டுகளுக்குப்பின்னரும் அவரது படங்கள்  இன்றும் பேசப்படுகின்றன என்பதே சாட்சி.              

அதிரடி 10% இட ஒதுக்கீடு அவசியமா? அரசியலா? – ஓர் அலசல்.


பொருளாதாரத்தில் பின்தங்கிய முற்பட்ட வகுப்பினருக்குக் கூடுதலாக 10% இடஒதுக்கீடு வழங்குவதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ஜாதி ரீதியாகப் பின்தங்கியவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கி சமூக நீதியைக் காப்பாற்றும் நடைமுறை நாடு முழுக்க பின்பற்றப்பட்டு வருகிறது. அதிலும் தமிழகம் முன்னோடி மாநிலமாகும். ஆனால், உயர்சாதி பிரிவில் உள்ளவர்கள் தங்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையநீண்ட நாட்களாக முன்வைத்து வந்தனர். இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடியின் அரசு  அவர்களை, பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள் என்ற பிரிவின் கீழ் கொண்டு வந்து, வேலைவாய்ப்பில் அவர்களுக்கு 10% இட ஒதுக்கீடு வழங்குவதற்கு முடிவு செய்துள்ளது.

இதற்காக, அரசியல் சாசனத்தில் திருத்தம் கொண்டு வருவதற்கு முடிவு செய்யப்பட்டு. நடந்துமுடிந்த குளிர்கால கூட்டத்தொடரை மேலும் 2 நாட்கள் நீட்டிப்பு செய்து, அதில் அமைச்சரவை முடிவுக்கு, ஏற்றாற்போல  நமது அரசியல் சாசனத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.  இதன்மூலம், பொருளாதாரத்தில் பின் தங்கிய பிரிவினருக்கான இடஒதுக்கீடு 50%-ல் இருந்து 60% ஆக அதிகரிக்கப்படும். ஏற்கனவே நம் நாட்டில்  சமூகநீதி அடிப்படையில் இட ஒதுக்கீடு உள்ள நிலையில் பொருளாதார ரீதியாக இட ஒதுக்கீடு வழங்கும்  முறையும் அமுலுக்கு வருகிறது. 
மிக முக்கியமான இந்தச் சட்ட திருத்தத்தை அதிரடியாக கொண்டுவந்தது பாஜக அரசு. முதல் நாள் அமைச்சரவைக்கூட்டத்தில் எடுத்த முடிவு. அவசர, அவசரமாக  மறு நாள் மாலை சட்ட வடிவம் பெறுகிறது. குளிர்கால கூட்டத்தொடர் இதற்காக இரண்டுநாள் சிலமணி நேர நோட்டிஸில் நீடிக்கப்பட்டது. 
.மக்களவையில் இந்த மசோதாவிற்கு எதிராக 3 வாக்குகளும்,மாநிலங்களவையில் 7 வாக்குகளுமே பதிவாகின. காங்கிரஸ் இத்தகைய ஒதுக்கீட்டைத் தனது தேர்தல் அறிக்கையிலேயே முன் வைத்திருந்தது. கம்யூனிஸ்ட்களும் இப்போதிருக்கும் இட ஒதுக்கீட்டிற்குப் பாதிப்பு இல்லை என்பதால் ஆதரித்தார்கள்.. ஆம் ஆத்மி  திருணாமூல், இடதுசாரிகள்,  ஆதரித்து வாக்களித்திருக்கின்றன, அதிமுக, திமுக, ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சிகள் மட்டுமே மசோதாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்தன..இதில் அதிமுக எதிர் வாக்களிக்காமல் வெளிநடப்பு செய்தது. அதாவது பெருவாரியான கட்சிகள் ஆதரித்திருக்கின்றன‌.  இந்த பல கட்சிகளின்  ஆதரவு நிலையை எதிர்பார்த்து பாஜக  திட்டமிட்டிருப்பது அவர்களின் சாணக்கியம். 

  10 சதவீதம் இடஒதுக்கீட்டு சட்டம் நாடாளுமன்றத்தில்  நிறைவேற்றப்படாது, சபைகள் விடாது, எதிர்க்கட்சிகள் இம்மாதிரி விஷயங்களை ஆதரிக்காது என்றெல்லாம் சொல்லிகொண்டிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தார்கள்., ஆனால் ஆதரித்து  வாக்களித்த  எதிர்க் கட்சிகள் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்திருக்கிறார்கள். ஜனதா தளம், பகுஜன் சமாஜ், தெலுங்கு தேசம் உள்ளிட்ட கட்சிகள் மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்தாலும், மக்களவை தேர்தலில் ஆதாயம் பெறவே பாஜக அரசு அவசரமாக இந்த நேரத்தில் மசோதாவைத் தாக்கல் செய்கிறது எனக் குற்றம்சாட்டின. ‘இது நள்ளிரவு வழிப்பறி’ என ராஷ்டிரிய ஜனதா தளம் சொல்லுகிறது. , ‘‘பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டியது அவசியம்தான். ஆனால், 5 மாநில தேர்தலில் பாஜக தோல்வி அடைந்த உடனேயே இந்த மசோதாவைக் கொண்டு வந்திருப்பதுதான் கேள்விக்குறி. இந்த விஷயத்தில் மசோதாவைத் தாக்கல் செய்யும் விதத்தைத்தான் கேள்வி கேட்கிறோம். என்கிறது காங்கிரஸ்.
‘‘பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்குவதாக ஒவ்வொரு கட்சியும் அதன் தேர்தல் வாக்குறுதியில் கூறியிருக்கிறது. முந்தைய அரசுகளால் நாடாளுமன்றத்தில் சரியான முறையில் இந்த விவகாரம் கையாளப்படாததால் தோல்வியில் முடிந்தது. இந்த மசோதா மூலம் 95 சதவீத மக்கள் பயனடைவார்கள்’’ என்கிறது பாஜக.


.எந்த ஆய்வுக்கும் உட்படுத்தாமல், எந்தப்புள்ளிவிவர தரவுகளும் இல்லாமல் இப்படி  மசோதாவை  அவசர அவசரமாக தாக்கல் செய்து நிறைவேற்றியிருப்பது  நாடாளுமன்றத்தை அவமதிக்கும் செயல். என்று காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் போன்ற கட்சிகள் நாடாளுமன்றவிவாதத்தில் குரல் எழுப்பினாலும் அவர்கள் ஆதரவு வாக்களித்தார்கள். காரணம்,அனேகமாக எல்லா அரசியல் கட்சிகளும் இந்த இடஒதுக்கீட்டைச் செய்வோம் என்று தங்கள் தேர்தல் அறிக்கையில் சொல்லியிருந்தது தான்.  ஆதரவு ஓட்டளிக்காவிட்டால் பஜகா அதை  எதிர் வரும் தேர்தலில் தங்களுக்குச் சாதகமாக பயன் படுத்திக்கொள்ளும் என்ற நிலை. தான் காரணம்.  இதை எதிர்பார்த்து பாஜக சாதுரியமாக காய்களை  இறுதி நேரத்தில் நகர்த்தி ஆட்டத்தில்  வென்றிருக்கிறது. இரு அவைகளிலும் மசோதா நிறைவேற்றப்பட்ட நிலையில் ஜனாதிபதி கையெழுத்திட்டால்  உடனே இது சட்டமாகும். 
இரவு வரை நீடித்த பாராளுமன்ற கூட்டத்துக்குப் பின் பிரதமர்  இது இந்திய  சமூக நீதி வரலாற்றில் ஒரு புதிய மைல் கல் என்று ட்விட் செய்திருக்கிறார்.  
இந்த நள்ளிரவு காட்சிகள் சில கேள்விகளை எழுப்புகின்றன

ஏன் இந்த அவசரம்?

விவசாயிகள் போராட்டம்', `பெட்ரோல், டீசல் விலையேற்றம்', `ரஃபேல் விமான ஒப்பந்தத்தில் முறைகேடு' என மத்தியில் ஆளும் பி.ஜே.பி. அரசைக் குறிவைத்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. அண்மையில் நடந்த மாநில தேர்தல்களில் தோல்வியைச் சந்தித்த  பாஜக.  நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக, நாடு முழுவதும் வாக்காளர்களைக் கவர்ந்தே ஆக வேண்டும் என்பதில் . மிகவும் தீவிரமாக இருக்கிறது.  அவர்களின் கட்சி ஆய்வின் படி மாநிலங்களில் அவர்களுடைய வாக்கு வங்கி சரிந்ததற்கு காரணம்  பொதுப்பிரிவினரில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள்பலர் அவர்களுக்கு வாக்களிக்கவில்லை. எனவே அவர்களுக்கு  10 சதவிகித இடஒதுக்கீடு வழங்க வகைசெய்யும் மசோதாவை உடனடியாக கொண்டுவந்து சட்டமாக்கிவிட்டது. இதைத்தான் பாஜக அரசு எடுத்திருப்பது அரசியல் ஆதாயத்திற்காகத்தான் என்று ஆதரவளித்த பல்வேறு தரப்பினரும் விமர்சித்து வருகின்றனர்.


இந்த சட்டத்திருத்தத்தினால் இப்போது நடைமுறையிலிருக்கும் இட ஒதுக்கீடு பாதிக்கப்படுமா? 
பட்டியலினத்தவர், இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு கைவிடப்படவில்லை. இந்தத் திருத்தம் இப்போதிருந்ததுவரும் வரும் இட ஒதுக்கீடு முறைக்கு.   மாற்று இல்ல.. அது தொடரும். மேலும்  சட்ட வரைவில்." in addition to existing reservations and subject to a maximum of 10 percent of the total seats in each category" என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

பாஜகவை ஆதரிக்கும் பெரும்பாலான பார்ப்பனருக்கு   உதவ இந்தத் திருத்தம் என அரசியல் கட்சிகள் குற்றம் சாட்டுகின்றனவே
ஏற்கனவே உள்ள இட ஒதுக்கீட்டிற்கு எந்த வித பாதிப்பும் இல்லாத நிலையில்  இதை தமிழககட்சிகள் . அரசியலாக்க முயற்சிக்கின்றன. பொதுப் பிரிவில் 40க்கும் மேற்பட்ட சாதிகள் இருக்கின்றன. அவற்றில் சில: பார்ப்பனர்கள், தாக்கூர்கள் (என்ற ராஜபுத்திரர்கள்) ஜாட்கள், மராத்தாக்கள், பூமிகார்கள், பனியாக்கள், கம்மாக்கள், கப்பூக்கள் எனப்பல சாதிகள் இருக்கின்றன. அனைவருக்கும் பலன் கிடைக்கும் தமிழகத்தில் . பார்ப்பனர்களின் எண்ணிக்கை  மூன்று சதவீதத்திற்கும் குறைவு

இது அரசியலில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்?

நீண்ட நாட்களாக அரசியல் கட்சிகள் அறிவித்துச் செய்ய முடியாததை நாங்கள் சாதித்திருக்கிறோம் என பாஜக இதைச் சாதனையாகப் பேசும். வட மாநிலங்களில் இந்த சட்டத்திருத்தம் பிரசாரம்  அவர்களுக்குப்  பலனளிக்கலாம்.  ஆனால்  தமிழகத்தில்  இது அரசியலமைப்பு சட்டத்தில் வழங்கப்பட்டிருக்கும் சமூக நீதி  உரிமைகளுக்கு முரணானது என்ற நிலையைத்  திராவிட கட்சிகள்  எடுத்திருக்கிறது.  அதனால் .  அதிமுக வுடன் கூட்டணியை விரும்பும்  தமிழக பாஜக  இதனால்  பெரும் நெருக்கடியைச் சந்திக்கும்.
சட்ட சிக்கல்கள் வருமா? 

இந்தச் சட்டத்திருத்தம் , அரசியலமைப்புச் சட்டம் 15 (4) (இடஒதுக்கீடு தொடர்பானது) பிரிவில் சமூக, கல்விரீதியில் பின்தங்கியவர்கள் என்பதோடு, பொருளாதார ரீதியிலும் பின்தங்கியவர்கள் என்கிற பிரிவும் சேர்க்கப்படுகிறது.  மிக முக்கியமான இந்த சட்டத்திருத்தம் அறிவிக்கப்பட்ட 24 மணி நேரத்தில்  அதை  எதிர்த்து நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டிருக்கிறது.
 கட்சி வழக்கறிஞர்கள் இதை எப்படிப்பார்க்கிறார்கள்?
``இது, வட இந்திய உயர் சாதியினரின் வாக்குகளைக் கவர்வதற்காக மேற்கொள்ளப்படும் அரசியல் நாடகம். நான்கரை ஆண்டுக் காலம் ஆட்சியில் இருந்தபோது ஏற்படாத இதுபோன்ற இட ஒதுக்கீடு தேவை இப்போது ஏன் வந்தது? இது முற்றிலும் தவறானது; சமூக நீதிக்கு எதிரானது. இந்தியா போன்ற ஏற்றத்தாழ்வுகள் நிறைந்த நாட்டில் பொருளாதார ரீதியிலான இடஒதுக்கீடு என்பதே தவறு. இந்த மசோதாவை எதிர்த்து நீதிமன்றத்திற்குச் சென்றால், அது நிலைக்காது. 50 சதவிகித இட ஒதுக்கீடு உச்ச வரம்பை நிர்ணயித்தது நீதிமன்றம்தான். இப்போது 10 சத விகிதம் சேர்த்து ஏன் 60 சதவிகிதமாக்குகிறார்கள் என்று தெரியவில்லை. இதற்கான விளக்கத்தை மத்திய அரசு, நீதிமன்றத்தில் நிரூபிக்க வேண்டும். அதற்கான எந்தவொரு ஆதாரமும் இல்லை. முதல் நாளில் அமைச்சரவையில் நிறைவேற்றி, மறுநாள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து, பெரிய விவாதம் எதுவுமின்றியே நிறைவேற்றுவதற்கான அவசியம் என்ன? ஐந்து மாநிலத் தேர்தல்களில் பி.ஜே.பி. அடைந்த தோல்விதான் இத்தகைய மசோதாவைக் கொண்டுவரக் காரணம்.. பொதுப் பிரிவினரில் பொருளாதார ரீதியில் பின்தங்கியவர்கள் என அளவுகோல் வைத்தால், எதிர்காலத்தில் இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கும் இதே அளவுகோலைக் கொண்டுவர நேரிடும். இது ஆபத்தாகிவிடும்  1951-ம் ஆண்டு இட ஒதுக்கீடு செல்லாது என நீதிமன்றம் தீர்ப்பளித்தபோது, தந்தை பெரியார் தலைமையில் 3 லட்சம் பேர் அதை எதிர்த்து மிகப்பெரிய அளவில் போராடித்தான், முதலாவது சட்டத் திருத்தத்தைப் பெற முடிந்தது. ஆனால், இன்று முற்பட்ட வகுப்பினர் கேட்காமலேயே அவர்களுக்கு இட ஒதுக்கீடு கிடைக்கிறது. காங்கிரஸ் கட்சியும் இந்தப் பிரச்னையில் மௌனம் காத்து வருவது தவறான முன்னுதாரணமாகி விடும். சமூக நீதி பேசுவதாகச் சொல்லிக்கொள்கிற பி.ஜே.பி., குறுகிய கால வாக்கு அரசியலுக்காகக் கொண்டு வரப்பட்ட சந்தர்ப்பவாத முடிவுதான் இது" உச்ச நீதி மன்றம்  இதை ஏற்காது தடை செய்யும் வய்ப்பு அதிகம் . என்கிறார்  பட்டாளி மக்கள் வழக்கறிஞர் திரு பாலு

பாஜக. செய்தித்தொடர்பாளர் வழக்கறிஞர் கே.டி. ராகவன், 
``அனைவருக்குமான வளர்ச்சி என்கிற முழக்கத்தோடுதான் பி.ஜே.பி. அரசு, அனைத்துத் திட்டங்களையும் மேற்கொண்டு வருகிறது. மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஆட்சிக் காலத்திலேயே இத்தகைய இட ஒதுக்கீடு பற்றி ஆராயக் குழு ஒன்று அமைக்கப்பட்டது. அதன் அடிப்படையில்தான், இந்தப் புதிய சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் பிரதமர் நரசிம்மராவும் இதற்கான முயற்சிகளை எடுத்தார். மேலும், 1992-ம் ஆண்டு, இந்திரா சஹானி வழக்கில் உச்ச நீதிமன்றம் தடை செய்யக் காரணம், அரசியலமைப்புச் சட்டத்தின் 15 (4) பிரிவில் சமூக, கல்வி ரீதியில் பின்தங்கியவர்களுக்காக என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதனால், தற்போது அரசியலமைப்புச் சட்டத்தைத் திருத்தி பொருளாதாரம் என்பதையும் சேர்த்துள்ளோம்.
எனவே, `பொதுப்பிரிவினருக்கு இட ஒதுக்கீடு என்பது அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது' என்று கூறி, நீதிமன்றம் தடை விதிப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு. அதுமட்டுமல்லாமல் நரசிம்மராவ் ஆட்சியில் வெறும் அரசு உத்தரவாக அது கொண்டு வரப்பட்டது. தற்போது அரசியலமைப்புச் சட்டத் திருத்தம் என்பதால் சட்டப்பூர்வமாக அதற்கு மதிப்பு அதிகம். அரசியலமைப்புச் சட்டம் தற்போது 124-வது முறையாகத் திருத்தப்படுகிறது. அனைத்துச் சட்டத் திருத்தங்களையும் நீதிமன்றம் ரத்து செய்துவிடவில்லையே. எனவே, இந்தச் சட்டத்திருத்தத்தையும் நீதிமன்றம் தடை செய்யாது என நம்புகிறோம்.

விவாதத்தின் போது திமுக எம்பி கனிமொழி  எழுப்பிய கேள்வி 
 , ‘‘நாடாளுமன்றத்தை பாஜக கேலிக்கூத்தாக்குகிறது. ஒரே இரவில் 10% இடஒதுக்கீடு மசோதா கொண்டு வந்து, எந்த ஆய்வுக்கும் உட்படுத்தாமல் அதை நிறைவேற்றி மக்கள் மீது திணிக்கப் பார்க்கிறது. பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்குவது வரலாற்றுத் தவறாக அமையும்.. 10% இடஒதுக்கீடு எதன் அடிப்படையில் முடிவு செய்யப்பட்டது? நாடாளுமன்ற தேர்வுக்குழு இந்த மசோதாவை அனுப்ப வேண்டும்’’

உச்ச நீதிமன்றத்தின் அரசியலமைப்பு அமர்வு  இந்த வழக்கை அனுமதித்து விவாதங்களைக்கேட்டுத் சமூக நீதியுடன் சம நீதியும் வழங்குவது  சரியா என்ற  தீர்ப்பை வரும் நாடாளுமன்ற தேர்தலுக்குள் வழங்கும் என்பது நிச்சியமில்லை.   ஆனால்  அரசியில்  கட்சிகள்  தேர்தலில் இந்தத் தீர்ப்பை அரசியலாக்கும் என்பது மட்டும்  நிச்சியம்.
ரமணன்

    


விவாதத்தின் போது திமுக எம்பி கனிமொழி  எழுப்பிய கேள்வி 
 , ‘‘நாடாளுமன்றத்தை பாஜக கேலிக்கூத்தாக்குகிறது. ஒரே இரவில் 10% இடஒதுக்கீடு மசோதா கொண்டு வந்து, எந்த ஆய்வுக்கும் உட்படுத்தாமல் அதை நிறைவேற்றி மக்கள் மீது திணிக்கப் பார்க்கிறது. பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்குவது வரலாற்றுத் தவறாக அமையும்.. 10% இடஒதுக்கீடு எதன் அடிப்படையில் முடிவு செய்யப்பட்டது? நாடாளுமன்ற தேர்வுக்குழு இந்த மசோதாவை அனுப்ப வேண்டும்’’


























எல்லாருக்கும் பெய்யும் மழை



சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து  எழுதுவதின்  மூலம் பெரிய அளவில் என்ன  சமூக சேவை செய்துவிடமுடியும்? சமூகத்துக்கு  ஏதாவது ஒரு நல்ல பணியைச் செய்ய வேண்டுமென்றால்  அடைப்படையான தேவை பணம். அது  தொடந்து எழுதிக்கொண்டிருப்பதால் மட்டுமே எப்படிக்  கிடைக்கும்?  என்று எண்ணும் நம்மைப்போலப் பலரை திகைக்க வைக்கிறார் கொங்கு மண்டல இளைஞர் வா.மணிகண்டன். தன் வலைப்பூவில் எழுதுவது  மூலமே பெரிய அளவு நிதி திரட்டி உதவிக்கொண்டிருக்கிறார்.

கரட்டடிபாளையம்(ஈரோடுவட்டம்) என்ற கிராமத்துக்காரரான இவர் கணனியிலில் முதுகலைப்பட்டதாரி. தொடர் பணிமாற்றங்களுக்கும், முயற்சிகளுக்கும், பயிற்சிகளுக்கும்  பின்னர் பெங்களூரில் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில்  நல்ல பணியிலமர்ந்தவர்.  கவிஞரான இவரது வலைப்பூ “நிசப்தம்?.  பேர்தான் நிசப்தமே தவிர மனிதர்  மனித உணர்வுகள் வாழ்வின் யாதர்த்தங்கள், சமூக அவலங்கள் அரசியல் போன்ற பல விஷயங்களில் தன் கருத்தை உறக்கச் சொல்பவர்.  அதனாலேயே இவரது நிசப்தத்தின் வாசகர் வட்டம் குறுகிய காலத்தில்  மிகப் பெரிதாக வளர்ந்தது.


ஒரு முறை இவரது வாசகர் ஒருவர் கேட்டக்கொண்டதற்கு ஏற்ப. கல்விச்செலவுக்கு வந்த வேண்டுகோளை தன் வலைப் பூவில் வெளியிட அதற்கு வந்த ஆதரவைக்கண்டு ஆச்சரியப்பட்டுப்போனார் மணிகண்டன். தன்வாசகர்களில் இத்தனை பேர் தன்மீது கொண்டுள்ள நம்பிக்கையும்,உதவிகள் செய்வதில் ஆர்வமும் கொண்டிருப்பதை கண்டு ஊக்கமடைந்து தொடர்ந்து அதுபோல உதவிகள் செய்யத்துவங்கினார். உள்நாடு வெளிநாடு என்று பல இடங்களிலிருந்து முகமறியாத மனிதர்களிடமிருந்து பணம் வரத்துவங்கியது.  ஆரம்பகாலங்களில் தனது பெயரிலேயே நன்கொடைகளைப் பெற்று உதவி வந்த இவர் கடந்த இரண்டாண்டுகளுக்கு முன் நிசப்தம் அறக்கட்டளையை நிறுவி அதன் மூலம் அறப்பணிகளை நிர்வகித்து வருகிறார். 



கடந்த இரண்டாண்டில் மட்டும் இந்த அறக்கட்டளை செய்திருக்கும் உதவிகள்  ஒரு கோடிக்கும் மேலிருக்கும். நல்ல இலாபத்தில் இயங்கும் ஒரு கார்பேர்ட்,  தொண்டு செய்வதையே தொழிலாகக் கொண்ட ஒரு தன்னார்வல நிறுவனம்  இதைப்போல செய்வதில் ஆச்சரியம் இல்லை. ஆனால் ஒரு தனி மனிதன்,அதுவும் ஒரு நிறுவனத்தில் பணியாற்றிக்கொண்டிருக்கும் மனிதர் செய்திருப்பதை அறியும்போது  பிரமிப்பாகயிருக்கிறது 
அறக்கட்டளையின் வரவு செலவுகளை மாதந்தோறும் வங்கியின் அறிக்கையோடு தன் நிசப்தம் வலைப்பூவில் வெளியிடுகிறார். வங்கியின் ஸ்டேட்மென்ட்டில் வரிசை எண்ணிட்டு அவை பெறப்பட்ட நாள் நன்கொடை/ வேண்டுகோளின் விபரங்கள்(எந்த மாதிரி உதவி கோரப்பட்டிருக்கிறது)   அதன் தற்போதைய நிலவரம், போன்ற விபரங்களை ஒரு பட்டியலாக  இணைத்து வெளியிடுகிறார்.  



“உரியத் தளராத ஆர்வத்துடனும் மங்காத அறவுணர்ச்சியுடனும்  வா மணிகண்டன் பணியாற்றிவருகிறார். அவரது நிசப்தம் அறக்கட்டளை ஆதரவற்றவர்களுக்கான மருத்துவ உதவிக்கும், எளியோரின் கல்விக்கும் பெரும்பணிகளை ஆற்றிக்கொண்டிருக்கிறது. தனிப்பட்ட முறையில் அவர்முன் இதற்காக  தலைவணங்குகிறேன்” என்கிறார் எழுத்தாளர் ஜெயமோகன். 
கல்வி மருத்துவ உதவிகளைத்தாண்டி சமூகப்பணிகளையும் செய்கிறது நிசப்தம். அறக்கட்டளை. 2015  பெரு வெள்ளத்தில்  அரசு நிவாரணப்பணிகள் அடையாத கிராமங்களைத் தேடிச் சென்று உதவியிருக்கிறார்கள்.  கடந்த ஆண்டு முதல் ஏரி குளங்களை தூர்வாரி மீட்டெடுத்தல், சமுதாய காடுகள் உருவாக்கம் போன்றவற்றைச் செய்யத் துவங்கியிருக்கிறார்கள் . 




வேமாண்டம்பாளையம் ஒரு  சிறிய கிராமம்.   ஒரு வருடத்துக்கு முன்பாக அந்த ஊரில் இருந்த குளத்தில் இருந்த சீமைக் கருவேல மரத்தையெல்லாம் நிசப்தம் சார்பில் அழித்துக் கொடுத்திருக்கிறார்கள்.. குளம் மட்டுமில்லை- பஞ்சாயத்து முழுவதிலும் இருந்த சீமைக் கருவேலம் அழிக்கப்பட்டன. கிட்டத்தட்ட அறுபது ஏக்கர் குளம். சில ஊர்களில் இருக்கும் குளங்கள் அக்கம்பக்கத்து ஆறுகளில், ஓடைகளில் நீர் ஓடினால் நிரம்ப வாய்ப்பிருக்கிறது. இந்தக் குளத்துக்கு அந்த வாய்ப்பில்லை. மழையைத் தவிர வேறு எந்த வழியுமில்லை. வானம் பார்த்த பூமி. காய்ந்து கருவாடாக்கிக் கிடந்த அந்தக்குளம். மழையால்  இப்போது  நிரம்பியிருக்கிறது.. ஒரு வருடக் காத்திருப்புக்குப் பிறகான பெரு மகிழ்ச்சி இது.  என்கிறார் மணிகண்டன்.. பல ஆண்டுகளாகக் காய்ந்து கிடந்த பூமியில் நீர் நிரம்பிக் கிடப்பதை பார்க்க யாருக்குத்தான் மகிழ்வாக இருக்காது? அடுத்த இரண்டாண்டுகளுக்கு அந்தக் கிராமத்தில் தண்ணீருக்கு பிரச்சனையில்லை.  நிரம்பிய நீரைக்கண்டு மனம் நிறைந்திருக்கும் நிசப்தம்  இதுபோல மேலும் இரண்டு கிராமங்களுக்குச் செய்திருக்கிறார்கள்.


 இம்மாதிரி நீர் நிலைகளின் அருகில் அடர் வனம் என்ற முறையில் நிறைய மரங்களை வளர்க்கும் முயற்சியிலும் ஈடுபட்டிருக்கிறார்கள். அடர்வனம் என்பது ஒரே இடத்தில் அடர்த்தியாக வளரக்கூடிய மரங்களைத் தேர்ந்தெடுத்து மிக நெருக்கமாக நட்டு வளர்ப்பது,. மிக வேகமாக வளரும் அந்த மண்ணின் தன்மைக்கேற்ற மரக்கன்றுகளைக் கண்டுபிடித்து நடுகிறார்கள்  ஒரு அல்லது இரண்டு ஆண்டுகளில் அந்த இடத்தில்  ஒரு சின்ன  அடர் வனம் உருவாகிறது. கோட்டுப்புள்ளாம்பாளையம் என்ற கிராமத்தில்  இரண்டாயிரம் செடிகளுடன் ஒரு வனத்தை உருவாக்கி அது செழித்து என அந்தப்பகுதி இப்போது பக்கத்துகிராம்மக்களுக்கு டூரிஸ்ட்ஸ்பாட்டாகியிருக்கிறது



இத்தனை பெரியபணிகளை எப்படி இவரால் சாதிக்க முடிகிறது.? “தொடர்ந்த  முயற்சிகள் தான் சார்” என்கிறார்.  முதலில் கிராமங்களில் இளைஞர்களை அழைத்துபேசுகிறோம். நிறையவே பேசுகிறோம்.. அரசியல் வாதிகளிடம் பெற்ற அனுபவத்தால்  மிகத் தயங்குவார்கள். ஆனால் அவர்கள் நம்பிக்கையைப் பெற்றபின் திட்டங்களை விளக்கினால் முன்வருவார்கள்.  முன் வந்துவிட்டால் பின் வாங்குவதில்லை.வேமாண்டம்பாளையத்தில் அத்தனை பணிகளையும் செய்தது உள்ளுர் இளைஞர்களும், சமூக ஆர்வலர்களும் தான். அதிகாரிகளை சந்தித்துபேசினால் 95% பேர்  உதவுகிறார்கள்  என்று சொல்லும் இவர் சில கிராமங்களில்  சவால்களையும் சந்தித்திருக்கிறார்.  ஆனால் மனம்தளாரமல் தொடர்கிறார்.


“நல்லவர்கள் நான்கு பேர் கொடுக்கும் பணத்தை வாங்கித் தனிப்பட்ட நபர்களுக்கு உதவுவது  என்பது  ஒரு சங்கிலித் தொடராக இருக்க வேண்டும். உதவி செய்கிறவர்களைவிடவும் உதவி பெறுகிறவர்களிடம் இந்த எண்ணம் வலுக்க வேண்டும். அதுதான் நாம் படுகிற அத்தனை சிரமங்களுக்குமான அர்த்தமாக இருக்கும். நாம் விதைக்கிற ஒவ்வொரு ரூபாயும் அடுத்தடுத்த சந்ததிக்கான விளைபொருட்களை உருவாக்குவதாக இருக்க வேண்டும். என்று சொல்லும் மணிகண்டன் இப்போது பங்களுரிலிருந்து பணிமாறி  கொங்கு நாட்டில் கோவைக்கு வந்திருக்கிறார்
இவர்களைப் போன்றவர்கள் ஓய்வு நேரம் வார விடுமுறைகளை தியாகம் செய்து  சமூக சேவைசெய்வது அவர்களுக்கு அது உள்ளூர அளிக்கும் ஒரு நிறைவுக்காக, விடுதலைக்காக. 
நம்மைப்போன்ற பலரால் அதைச் செய்யமுடியாது. 
மணிகண்டன் போன்றவர்களை முன்வைத்தே 
‘எல்லாருக்கும் பெய்யும் மழை’

காகிதப்புலி




லோக்ஆயுக்தா என்றால்மக்களால்நியமிக்கப்பட்டவர்கள்என்றுஅர்த்தம். சுதந்திரம்பெற்றபின்னர்அரசின்திட்டங்கள்

சட்டதிட்டங்கள்மக்களுக்குமுறையாகச்சென்றுசேர்கிறதாஎன்றஅடிப்படையில்ஆரம்பிக்கப்பட்டது. இந்தவிவாதம் 1960-களில்தொடங்கியது. பொதுவாழ்க்கையில்இருப்பவர்கள்ஊழலில்ஈடுபடுவதால், ஊழல்முக்கியப்பிரச்சினையாகஇருந்ததால்அதுவும்கூடுதலாகசேர்க்கப்பட்டது. இதுதான்லோக்ஆயுக்தாஎன்றவடிவத்தின்முக்கியஆரம்பம்
ஆளுங்கட்சியின்தலையீடுஏதுமின்றிதன்னாட்சியாக, முழுஅதிகாரத்தோடுசெயல்படக்கூடியலஞ்சஊழல்ஒழிப்புக்கானஆணையம்மற்றும்அரசுசேவைகளில்மக்களுக்குள்ளகுறைபாடுகளைதீர்க்கஉதவும்ஒருமையம். இதைதமிழில்அழகாககூறவேண்டுமானால், 
‘ஊழல்விசாரிப்புமற்றும்மக்கள்குறைதீர்ஆணையம்’என்றுஅழைக்கலாம்.

இது எல்லா மாநிலங்களிலும் அமைக்கப்படவேண்டும் என்று உச்ச நீதி மன்றம் வழி காட்டியிருந்தது. ஆனால் மாநிலங்கள் அக்கறை காட்டவில்லை. சமூக  ஆர்வலர்களின் பல முறையீடுகளினால் சில மாநிலங்களில் அமைக்கப்பட்டது.சமீபத்தியநீதிமன்றகணக்கின்படி 12மாநிலங்கள்தவிரஅனைத்துமாநிலங்களிலும்உள்ளது. லோக்ஆயுக்தாநீதிமன்றங்களைஏன்அமைக்கவில்லைஎன்பதுதொடர்பாககடந்த ஆண்டு ஜுலை 31ம் தேதிக்குள் பிரமாணப்பத்திரம்தாக்கல்செய்யும்படிதமிழகம்உள்ளிட்ட 12
 மாநிலங்களுக்குஉச்சநீதிமன்றம்கடந்தமாதம்உத்தரவிட்டது.
அனைத்துக்கட்சிகளும், சட்டப்பஞ்சாயத்துபோன்றஅமைப்புகளும், மீடியாக்களும்நெருக்கியதாலும்.உச்சநீதிமன்றத்திற்குஅறிக்கைஅளிக்கவேண்டியகட்டாயம் நேர்ந்ததின் விளைவாக கடந்த ஆண்டு ஜுலை மாத கூட்டத்தொடரின்  நாளன்று தமிழக அரசு ஒரு மசோதாவை அவசர அவசரமாக தாக்கல் செய்து நிறைவேற்றியிருக்கிறது.


ஏன் இந்த லோக் ஆயுக்தா அவசியம்?


லஞ்சஒழிப்புத்துறைமாநிலஅரசின்வரம்பிற்குள்வரும், லஞ்சஒழிப்புத்துறையில்உள்ளஅதிகாரிகளைமாநிலஅரசுநினைத்தபடிதூக்கிஅடிக்கலாம், தங்களுக்கேற்றஆட்களைநியமிக்கலாம். ஆனால்லோக்ஆயுக்தாவில்அப்படிச்செய்யமுடியாது. அதன்நியமனம்மாநிலஅரசுசம்பந்தப்பட்டதாகஇருந்தாலும்நீக்கமுடியாது, மாற்றவும்முடியாது.

லோக்ஆயுக்தாதலைவர்லஞ்சப்புகாரின்நடவடிக்கை எடுக்கப்பரிந்துரைக்கலாம்,
தாமாகமுன்வந்துவழக்குப்பதிவுசெய்யலாம். அமைச்சர்கள், முதல்வர், அதிகாரிகள்வீட்டுக்குள்சென்றுகூடரெய்டுநடத்தஉரிமைஉண்டு. பொதுமக்கள்சேவைபுகாரின்பேரில்நோட்டீஸ்அனுப்பலாம். விளக்கம்கேட்கலாம்.

லோக்ஆயுக்தாபோலீஸ்என்றுதனியாகஇருக்கும். இதற்கானபோலீஸார்மாநிலபோலீஸாராகஇருந்தாலும்லோக்ஆயுக்தாகட்டுப்பாட்டில்இருப்பார்கள்.

ஆனால் இந்த விதிமுறைகள்மாநிலஅரசுஇயற்றும்சட்டத்தின்பிரிவில்இருக்கவேண்டும். இதில்முதல்வர், அமைச்சர்கள்வீடுகளுக்குரெய்டுபோகக்கூடாதுபோன்ற விஷயங்களுக்கு விதிவிலக்குகொடுத்தால்அதுநடக்காது.

லோக்ஆயுக்தாவில்என்னென்னஅம்சங்கள்இருக்க வேண்டும்.,
லோக்ஆயுக்தாவில்யார்தலைவராகஇருப்பது, யார்தலைவரைநியமிப்பது. யார்தேர்ந்தெடுப்பதுஎன்றவரையறை எல்லாவற்றையும் மாநில அரசுகள்  தங்கள் சட்ட வடிவில் சொல்ல வேண்டும்  அதே போல் என்னென்னவிஷயங்கள்விசாரிக்கலாம், என்னஅதிகாரங்கள்உண்டுஎன்ற விஷயங்களும் சொல்லப்பட்டிருக்க வேண்டும்

அப்படியானால் மாநில அரசுகள் இந்த சட்டத்தை நீர்த்துப்போக செய்துவிடுமே?

.இந்த நிலையைத் தவிர்க்கத்தான்  மத்தியஅரசேஇந்தியாவுக்கானபொதுவானஒருலோக்ஆயுக்தாசட்டத்தைஉருவாக்க வேண்டும் அல்லது பொது வரையறைகளைஅளிக்கவேண்டும்என்றும். மத்தியஅரசுலோக்பால், மாநிலஅரசுலோக்ஆயுக்தாஎன்றுஇருக்கவேண்டும்.அதேநேரத்தில்நியமனம்போன்றவிஷயங்களில்வரையறைவேண்டும்என்று சமூக ஆர்வலர்கள் போராடுகிறார்கள்.

மாநில அரசுகள்  இந்த சட்டம் இயற்றுவதும் மாற்றுவதும்  தங்கள் உரிமை என்ற பெயரில் கர்நாடகநாடக அரசு ஒரு  மோசமான முன்னூதாரணத்தை ஏற்படுத்தியிருக்கிறது.லோக்ஆயுக்தாவில்கடுமையானசட்டப்பிரிவுகள்உள்ளமாநிலம்என்றால்அதுசந்தோஷ்ஹெக்டேஇருந்தபோதுகர்நாடகாவில்தான். என்ற நிலையிருந்தது.
 .கர்நாடகாவில்அறிமுகப்படுத்தபட்ட லோக்ஆயுக்தாசட்டப்பிரிவு 13 படிமுதல்வர்மீதோ, அமைச்சர்மீதோ, ஐஏஎஸ், ஐபிஎஸ்அதிகாரிகள்மீதுஒருபுகார்வருகிறதுஎன்றுவைத்துக்கொள்வோம். அப்போதுதான்சட்டப்பிரிவு 13-ன்கீழ்லோக்ஆயுக்தாவின்பணிதொடங்கும். இந்தப்பிரிவின்கீழ்உங்கள்மீதுபுகார்வந்துள்ளது, நீங்கள்பதவியில்இருந்தால்விசாரிப்பதில்குறுக்கீடுஇருக்கும். ஆகவே, நீங்கள்பதவிவிலகவேண்டும்என்றுகோரலாம்.
இதன் கிழ் எடுத்த நடவடிக்கையின் படி தான் அன்றைய் முதல்வர் எடியூரப் கைதாகவும் பதவி விலகவும் நேர்ந்தது.

ஆனால்கர்நாடகமாநிலஅரசு தேர்தலுக்குப் பின்  2014-ல்எடுத்த ஒருமுடிவினால் . மக்களுக்கானசேவைகளைவிசாரிப்பதுலோக்ஆயுக்தாவில்இருக்காது. இனிதனியாகஒருஅமைப்புபார்த்துக்கொள்ளும்என்றுமுடிவெடுத்தார்கள். 2016-ம்ஆண்டில் ‘ஆன்டிகரெப்ஷன்பீரோ’என்றஅமைப்பைஉருவாக்கிஇனிஇந்தஅமைப்புலஞ்சஊழல்பிரச்சினைகளைபார்த்துக்கொள்ளும்என்றுசட்டம்இயற்றிவிட்டார்கள்.
இதற்குஎதிர்ப்புதெரிவித்து முன்னாள் நீதிபதிசந்தோஷ்ஹெக்டே “கர்நாடகாவில்லோக்ஆயுக்தாமரணப்படுக்கையில்உள்ளது”என்றார். கர்நாடகமாநிலலோக்ஆயுக்தாதலைவர் ''நாங்கள்இனிலஞ்ச, ஊழல்புகார்வந்தால்அதை ‘ஆன்டிகரெப்ஷம்பீரோவுக்கு’அனுப்பிவிடுவோம்ஏனென்றால்எங்கள்அதிகாரம்குறைக்கப்பட்டுவிட்டது'' என்றுகூறியுள்ளார்.எனவே ஒரு மாநில அரசு இந்த லோக் ஆயூக்தாவை ஏற்படுத்தினாலும் அதை செயலிழக்கச் செய்யும் வலிமை பெற்றதாக யிருக்கிறது.

தமிழகம் கொண்டுவந்திருக்கும் சட்டம் எப்படியிருக்கிறது?
சட்டத்தின் முன் வடிவை பொதுவெளியில் விவாதிக்காமல் அவசரகதியில் மசோதாவை நிறைவேற்றியபின்னர்  அதற்கான விதி முறைகளை அறிவித்திருக்கிறது. அதில் மிக முக்கியமானது

ஊழல்புகார்கள்மீதுரகசியவிசாரணை மட்டுமேநடத்தவேண்டும்; புகாருக்குள்ளானஊழல்வாதிகுறித்துபத்திரிகைகளுக்கோ, பொதுமக்களுக்கோதெரிவிக்கக்கூடாது; விசாரணைநடக்கும்போதோஅல்லதுவிசாரணைமுடிந்தபிறகோகூடஅந்தவிவரங்களைதெரிவிக்கக்கூடாது

லோக்ஆயுக்தாவிற்குதலைவர்மற்றும்உறுப்பினர்களைதேர்வுசெய்யும் “தேடுதல்குழு”உறுப்பினர்களைஎந்தநேரத்திலும்மாற்றலாம்.

இந்த விதிகள் அறிவிப்புவுடன் பல சமூக ஆர்வ அமைப்புகள் தங்கள் எதிர்ப்பைத்தெரிவித்திருக்கின்றன.
இந்த  விதிகள்அ.தி.மு.கவில்உள்ளஊழல்அமைச்சர்களையும், ஊழல்குற்றச்சாட்டிற்குஉள்ளாகியுள்ளமுதல்- அமைச்சர்தன்னைத்தானேகாப்பாற்றிக்கொள்ளவும்வகுக்கப்பட்டுள்ளதாகவேதெரிகிறது.ஊழல்புகார்கள்மீதுரகசியவிசாரணைநடத்தவேண்டும்; புகாருக்குள்ளானஊழல்வாதிகுறித்துபத்திரிகைகளுக்கோ, பொதுமக்களுக்கோதெரிவிக்கக்கூடாது; விசாரணைநடக்கும்போதோஅல்லதுவிசாரணைமுடிந்தபிறகோகூடஅந்தவிவரங்களைதெரிவிக்கக்கூடாதுஎன்றெல்லாம்வகுத்துள்ளவிதிகள்அ.தி.மு.கவில்உள்ளஊழல்அமைச்சர்களையும், ஊழல்குற்றச்சாட்டிற்குஉள்ளாகியுள்ளமுதல்- அமைச்சர்தன்னைத்தானேகாப்பாற்றிக்கொள்ளவும்வகுக்கப்பட்டுள்ளதாகவேதெரிகிறது.


ஊழல்ஒழிப்பின்அடித்தளத்தையேதகர்த்துஎறியும்
இந்த விதிகளைஉடனடியாகரத்துசெய்யவேண்டும். இந்த அரசு, லோக்ஆயுக்தாஅமைப்பைஒரு “காகிதப்புலி”போல்ஆக்கிகாலில்போட்டுமிதிக்கநினைக்கிறது என்று திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.
.மாநிலஅரசின்உரிமைஎன்ற பெயரால் தன்இஷ்டத்துக்கு சட்டங்களை மாற்ற அனுமதிக்காமல்  . லோக்ஆயுக்தாவைக்காப்பாற்றஉச்ச நீதிமன்றமோ அல்லது மத்திய அரசு சட்டம் ஒன்றை கொண்டுவராதவரையில் லோக்ஆயுக்தாஎன்பது உண்மையில் மக்களால்நியமிக்கப்பட்டவர்களாக இருக்க மாட்டார்கள்