25/9/11

பணம் காய்க்கும் மரங்களை வளர்ப்பவர்


லைப் பூஸ்டர் 8             
 ராம் ஸ்ரீராம்

அமெரிக்காவிலிருந்து வெளிவரும் போர்ப்ஃஸ் பத்திரிகை ஆண்டு தோறும் முதல் 400 கோடிஸ்வரகளின் பெயர்களை பட்டியிலிடும்.  2005 ஆண்டிலிருந்து இந்த பட்டியலில் தொடர்ந்து இடம்பெற்றுவரும்  அமெரிக்கா வாழ் இந்தியர்  ராம்ஸ்ரீராம். அதே பத்திரிகை புதிய தொழில்களில் முதலீடு செய்து பெறும் லாபம் ஈட்டியவர்களின் பெயர்களை மைடாஸ் லிஸ்ட் MIDAS LIST  (மைடாஸ் தொட்டதெல்லாம் தங்கமாகும் மன்னரின் பெயர் ) என்றும் வெளியிடுகிறது. அதில்  இவரது பெயர் கடந்த 6 ஆண்டுகளாக முதல் 5 இடத்துக்குள்ளாகவே இருக்கிறது.   இன்றைய இவரது சொத்து 1.8 பில்லியன் டாலர்களுக்கு மேல். (ரூ9000 கோடிக்கும்மேல்)  இன்று  14 நாடுகளிலிருக்கும் 11 நிறுவனங்களில் டைரக்கடாரக இருக்கிரார். அதில் ஒன்று கூகுள் நிறுவனம்.  இந்த கோடிஸ்வரர் ராம்ஸ்ரீராம் ஒரு  தமிழர்.  சென்னையில் ஒரு சாதாரண மத்தியதர குடும்பத்தில் பிறந்தவர். தாத்தாவீட்டிலிருந்து டான்பாஸ்கோவிலும் பின்னர் லயோலா கல்லூரியிலும் படித்தவர் தாய் ஒரு கல்லூரியில்  ஆங்கில விரிவுரையாளார். எப்படி இவ்வளவு பெரிய செல்வந்தர் ஆனார்.?   “சரியான முடிவுகளை, மிக்சரியான நேரத்தில் எடுத்தது தான் ஒரு முக்கிய காரணம். நல்ல படிப்பின் அவசியத்துடன்,  டிஸிப்பிளினாக வளர்த்த என அம்மா தான் என் ஆதர்ஸம். படிப்புக்கு வெளியே  எல்லா போட்டிகளிலும் பங்கேற்கசெய்து  டென்னிஸ் விளையாட அனுப்பி, என்னை ஒரு துணிவான மனிதாக்கினார். 70களில் எல்லாமத்திய தர குடும்பத்து மாணவன் போல எனக்கு ஐஐடி ஆசை- பாங்க் வேலை போன்ற கனவுகள் இல்லை, தாத்தா அதுபோன்ரவைகளை விரும்பினாலும்  என் விருப்பத்தை  மதித்த அம்மா நான் விரும்பவதையே படிக்க அனுமதித்தார். அமெரிக்கபோய் படிக்க விரும்பியபோதும் இந்த மாதிரி கோடிஸ்வர கனவுகள் எதுவும் இருந்த்த்தில்லை. ஆனால் சொந்தமாக ஒரு கம்பெனி எனற எண்ணம் மட்டும வள்ர்ந்துகொண்டே வந்த்தது. மெக்சிக்கன் பல்கலைகழகத்தில் எம்பிஏ முடித்தவுடன்  ஒரு சிறிய டெலிகாம் கம்பெனியில் வேலைகிடைத்தது. அப்போது வேலைக்கு இன்றுபோல் கஷடங்கள் கிடையாது. சிலநாளில் அந்த கம்பெனியை  பெரிய அமெரிக்க நிறுவனமான பெல் வாங்கிவிட்டது. அதில் எனக்கு இண்டெர்நேஷ்னல் மார்க்கெட்டிங் கற்றுகொள்ள  நல்ல வாய்ப்புகள். உலகின் பல நாடுகளுக்கு நிறைய பயணங்கள் புதிய அறிமுகங்கள் எல்லாம். அமெரிக்காவிலிருக்கும்போது வேலை தொடர்பாக் அடிக்கடி சிலிகான் வேலிக்கு போவேன் அங்குதான் தனித் தொழில் வாய்ப்புகள் அதிகம் எனபதை உணர்ந்தேன். இணைத்தை பயன்படுத்தும் பெளரவுசர்களில் முதலாவதான நெட்ஸ்கேப்  நிறுவந்த்தில் பணிகிடத்தது. அங்கு இண்டர்நெட்டின் வலிமையை புரிந்துகொண்டேன். எனறு சொல்லும் ஸ்ரீராம் தன் 28 வயதில் பார்த்த வேலையைவிட்டுவிட்டுதுவக்கியது ஒரு டெலிகாம் கம்பெனி. அன்றைய அமெரிக்க அதிபர் ரீகன் அறிவித்தபுதிய ஸ்பெட்ரம் லைசென்ஸ் கொள்கையினால் கவரப்பட்டு டெலிகாம் துறையில் புதிய தொழில் துவங்கி  தோற்றிருக்கிறார். அந்த டெக்னாலாஜியை முழுவதும் பயன்படுத்துகூடிய வேகமான கம்ப்யூட்டர்களும், லேப்டாப்களும் வராத காலம் அது.  நிகழும் காலத்திற்கு முன்பாகவே நாம் சிந்திக்கிறோம் எனற தவறை உணர்கிறார். க்டனை அடைக்க மீண்டும் வேலைதேடிபோய் சம்பாதித்திருக்கிறார்.  பின்னர் 1994ல் துவக்கிய  தொழில் இணையதளத்தில் பொருட்கள் விற்கும் ஒரு நிறுவனம், அப்போது அமோஸான் என்ற நிறுவனம் அம்மாதிரி இணைய விற்பனையை பெரிய அளவில் துவக்கியிருந்தது. அவர்கள் ஸ்ரீராமின் நிறுவனத்தை விலைக்கு கேட்க நல்லவிலையில்விற்றவர் அவர்களிட்மே அந்த இணையதளத்தினை நிர்வகிக்கும் பொறுப்பை 1998ல் ஏற்கிறார். கிடைத்த பணத்தை ஸ்டான்போர்ட் கல்லூரியில்தன்னுடன்  படித்த நண்பர்கள் துவங்கும் புதிய  கம்பெனியில் முதலீடு செய்கிறார். அந்த நிறுவனம் கூகுள்.  30 லட்சமவாடிக்கையாளார்களுடன் இருந்த அமோஸான்  ராம் ஸ்ரீராமின் நிர்வாக்திரமியினால் 1கோடி வாடிக்கையாளார்கள் உள்ள கம்பெனியாக் உயர்ந்து உலகின் மிகபெரிய இணையதள வியாபார நிறுவனமாகிறது. சேவைக்கான போனஸாக அதன் பங்குகளைப்பெறுகிறார். அதனையும் விற்று கூகுளின் பங்குகளை வாங்கிகிறார். கூகுளின் இயக்குனராக இருந்த போதும் அது முதலீட்டுக்கு நல்ல லாபத்தை ஈட்டிகொண்டிருந்த போதும்.  2005ம்  இவர் வைத்திருந்த கூகுள் பங்குகள் 34 லட்சம் பங்குகள். அதில் பாதியை பணமாக்கி  ஒரு தனி கம்பெனியை நிறுவுகிறார்.  இவரது தன்னுடைய 25 ஆண்டுகால டெலிகாம், இணைய மார்க்கெட்டிங் புதிய கம்பெனிகள் துவக்கிய அனுபவங்களின் அடிப்படையில் அவர் ஆரம்பித்த நிறுவனம்  ஷெர்ப்பாலொ (SHERPALO) என்ற வென்ச்சர் காப்பிட்டல் முதலீட்டு நிறுவனம். வென்சர் காப்பிட்டல் என்பது  வெறும் நிதி நிறுவனம் இல்லை. மிக வேகமாக் வளர்ந்து நல்ல லாபத்தை ஈட்டகூடிய புது முய்றசிகளுடன் தௌவங்கப்ட்டிருக்கும் தொழிலைகளை கண்டறிந்து அவர்களுக்கு உதவுவது.  ” “முயற்சி உங்களுடையது முதல் எங்களுடையது “ “ எனற ரீதியில் முதலீடு செய்து லாபத்தில் பங்குப்பெறுவார்கள்.90களில் அமெரிகாவில் தோன்றிய இது இன்று உல்கெங்கும் பரவியிருக்கிறது.  அதனென்ன பெயர் ஷெர்ப்பாலொ  ” “கடினமான ம்லைஏற்றத்தில் சாதனையாளருடன் கடைசி வரை, உச்சியை அடையும் வரை வந்து உதவி செய்பவர் ஷெர்ப்பா எனற உதவியாளார். சாதனையாளாரின் அத்தனை கஷ்டங்களையும் படுபவர் இவர். அதுபோல நாங்கள் எனறு சொல்லும் இவரது நிறுவனம் இன்று உலகின் பலநாடுகளில்  வெற்றிபாதையை நோக்கிச்செல்லும் புதிய தொழில்களில் செய்திருக்கும் முதலீடுகள்  அதிக  அளவில் லாபத்தை கொட்டிகொண்டிருக்கிறது. .  தொழில்துவங் கிறவர்க்ளுக்கு, நிதி மட்டுமில்லை ஆலோசனை, வழிகாட்டுதல்  மார்கெட்டிங், நிர்வாக் பயிற்சி கூட்டுமுதலிட்டார்களை அறிமுகபடுத்துவது போன்ற பல விஷயஙகளில் உதவுகிறார்கள்.  ” “எந்த வெற்றியையும் தவறுகள் செய்யாமல் அடைய முடியாது. என் முயற்சிகளில் நான் செய்த தவறுகளை “  ராமின் தவறுகள் “ என புத்தகமே எழுதலாம். அவைகளை புதியவர்கள் செய்யகூடாது என்று சொல்லும் இவரது நிறுவனம் இந்தியாவில் நாக்ரி.காம், மைட்ரிப்.காம்,  ஜூம் இன் போன்ற நிறுவனங்களில் முதலீடு செய்திருக்கிறது.
இவரது மனைவி விஜயலக்‌ஷ்மியும் தமிழகத்தை சேர்ந்தவர். இரண்டு மகள்களும் ஸ்டான்போர்ட் கல்லூரியில் படிக்கிறார்க்ள். விஜிஸ்ரீராம் என்று அறியபட்டிருக்கும் திருமதி ஸ்ரீராம் தனம் என்ற அறகட்டளையை நிறுவி பள்ளிகல்வியை பாதியில் விட்ட அமெரிக்க மாணவர்களுக்கு கல்வி அளிக்கும்   K  12 பள்ளிகளையும் அதை சார்ந்த சமுக நல அமைப்புகளையும் நிறுவி நடத்திகொண்டிருக்கிறார்.
கூகுள் நிறுவனத்தின் பங்குகள் இந்த உயரதிற்கு போகும் எனபதை எப்படி உங்களால் கணிக்க முடிந்தது? . ” “என்சொந்த கம்பெனியை விற்று கிடைத்த பணம், பத்திரமாகமூதலீடு செய்து ,அதிக லாபத்துடன் திருப்பிப்பெற நான் செய்த ஆராய்ச்சி, நண்பர்க்ள் தேர்ந்த்டுத்திருந்த  டெக்னாலாஜியின் மீது நம்பிக்கை ஆகியவ்றால் கூகுள் இணைய உலகில் ஒரு மிகப்பெரிய அசைக்கமுடியாத சக்தியாகும் என்பதை அது துவங்குமுன்பே கணித்தேன்.  கணிப்பு சரியாகயிருந்தது “ என்கிறார்.  இப்படி ஒரு நிறுவனத்தின் எதிர்கால வெற்றியை கணிக்கும் திறன் இவரிடமிருப்பதால் தானோ என்னவோ இவரது ஷெர்ப்பாலொ  நிறுவனம் உலகெங்கிருந்தும் புதிய எண்ணங்களோடு சாதிக்க துடிக்கும்  இளைஞர்களின் முயற்சிகளை தேடிப்போய் வரவேற்று  மூதலீடு செய்கிறாகள்.  உங்களிடம் எதாவது புது சூப்பர் ஐடியாக்ளும் திட்டங்களுமிருந்தால் தொடர்பு கொள்ளுங்களேன்.  




18/9/11

உழைப்பில் விளைந்த வெற்றிகனிகள்


லைப் பூஸ்டர் 7              

பழமுதிர் நிலையம் சின்னசாமி


தமிழகத்தின் 8 நகரங்களில் 30 கிளைகளுடன் ஆயிரத்துக்குமேற்பட்ட ஊழியர்களோடு இயங்கும் இந்த நிறுவனத்தின் கடந்த ஆண்டு மொத்த வியாபாரம் 120 கோடிக்கும் மேல். வெளி நாட்டு பழவகைகளை பெரிய அளவில் நேரடியாக இறக்குமதி செய்யும்  இந்த நிறுவனம் பிறந்தது கோவை நகரில் ஒரு ஒழுக்கமான உழைப்பாளியாக தள்ளு வண்டியில்  பழம் விற்றுகொண்டிருந்த இளைஞனின  மனத்தில் தோன்றிய சிறு பொறியிலிருந்து..  “நல்ல பழங்களாக தருகிறாய் ஆனால் எனக்கு வசதியான நேரத்திற்கு வரமாட்டேன்கிறாயயே, ஒரு கடை போட்டால் நானாவது வந்து வாங்குவேன் “ என்ற ஒரு இல்லத்தரசியின் வார்த்தைகள் அசீரீயாக ஒலித்தது சின்னச்சாமிக்கு.  பள்ளிக்கூடமே இல்லாத குக்கிராமத்தில் பிறந்த சின்னச்சாமிக்கு  நடந்து பககத்து ஊர் பள்ளிக்கூடம் போய் படிக்கமுடியாத குடும்ப சூழ்நிலை.   12 வயதிலிருந்து கிடைத்த வேலயை செய்து குடுபத்துக்கு உதவிய அந்த சிறுவனை உறவினர் கோவை அருகே உள்ள அன்னூரில்  ஒரு முஸ்லீம் பழக்காரரிடம் வேலை பழக ஒப்படைத்தார்.  அன்று முதல் பழங்கள் தான் அவன் உலகம். பஸ்நிலையத்திலிருந்த அந்த கடை காலை முதல் பஸ் 5மணிக்கு கிளம்பும் முன் திறக்கபடும் இரவு 10 மணிக்கு கடைசி பஸ்  கிளம்பியபின் மூடப்படும்.  எந்த விடுமுறையும் கிடையாது.பழங்களை பார்த்து பார்த்து துடைத்து அடுக்கி வைத்திருந்த முறை வருபவர்களை கவர்ந்து வியாபாரம் பெருகியது. எந்த நேரத்திலும் பொய் சொல்ல கூடாது யாரையும் ஏமாற்றகூடாது என்ற பாடத்துடன் பழ வியாபரத்தையும் முதலாளியிடம் கற்றபடி மூன்றாண்டுகள் ஒடின, பஸ்நிலைய கடைகள் எலத்தில் எதோ அரசியல். முதலாளி கடையை மூடிவிட்டார். என்ன செய்வது எனறு தெரியாத  சின்னசாமி பஸ் ஏறிசென்ற இடம் ஊட்டி. அங்கு ஒரு பலசரக்குகடையில் உதவியாளார் வேலை அதுவே தங்குமிடதானால் நாள் முழுதும் வேலை. 18 வயது ஆவதற்காக காத்திருந்து
கோவையில் ஒரு மில்லில் கூலியாக வேலைக்குசேர்ந்த சின்னசாமிக்கு சந்தோஷத்திவிட சங்கடம் தான் அதிகமாகயிருந்தது. காரணம் ஒரு நாளில் 18 மணி நேரம் உழைத்தவருக்கு 8 மணி நேர ஷிப்ட் கஷ்டமாகியிருந்தது , மில் ஷிப்ட் நேரம் போக மீதி நேரத்தில் ஆப்பிள் சாத்துக்குடி மலைப்பழம் வாங்கலியோ என குரல் எழுப்பி கோவை முழுவதும்  சுற்றி வந்த  நேரம்  மிக சந்தோஷமாந்தாயிருந்திருக்கிறது..  எல்லா தெருக்களுக்கும் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு போகமுடியாததில் எழுந்த வாடிக்கையாளரின் கேள்வியின் விடை தான்  அவருடைய முதல் கடை.  போட்டிக்கு அருகில பளீர் விளக்குகளுடன் வந்த புதிய காய்கறிகடையை பார்த்தவுடன் தான் இந்த வியாபாரத்திற்கு அதுவும் அவசியம் எனப்து புரிந்தது.  விரித்த நீயூஸ் பேப்பரில் பழங்களும்  குண்டு பல்புமாகயிருந்த நாஙகளூம் மாறினோம். கோவையின் பல ஏரியாக்களில் அறிமுகமாகியிருந்த்தால்  கிளைகள் பிறந்தன. தம்பிக்கும் வயது 18 ஆகி மில்லில் வேலை கிடைத்ததால் நான் தைரியமாக முழு நேரவியாபாரியானேன்.   கடைக்கு பெயர் வைக்கவேண்டும் என்ற எண்ணம்கூட என்னுடையதில்லை. பழம் வாங்க வரும் ஒரு பள்ளி தமிழ் ஆசிரியர் தான், இருக்கும் அதிகபழவகைகளை பார்த்து இந்த பெயர் வைத்தார். அவரே போர்டும் தயாரித்து அனுப்பினார்.
இன்றைக்கு  இவர்களுடைய அத்தனை கிளைகளிலும் சேர்த்து ஒரு நாள் வரும் வாடிக்கையாளார்கள் 40000 க்கும் மேல் இருப்பதின் காரணம் பழங்க்ளுடன் காய்கறிகளும், பழங்களில் நல்ல வெளிநாட்டு வகைகளும்விற்பது தான்.  முதலில் இதையெல்லாம் நம் மக்கள் எல்லோரும் வாங்குவார்களா என்ற பயம் இருந்தது. இன்று நகரங்களில் உடல் ஆரோக்கியத்திற்கு உடற்பயிற்சியும் பழங்களும் அவசியம் எனபதை நிறையவே உணர்ந்திருகிறார்கள்.  நல்ல பழங்களை பாதுகாக்க ஏர்கண்டிஷன் அவசியமாயிற்று அதையே கஸ்டமர்களுக்கு செய்யும்போது பெரிய இடங்கள் அவசியமாயிற்று என்பதை தனது கடைகள் பரந்த பரப்பிலிருப்பதற்கு காரணமாக சொல்லுகிறார் இவர்.  விலை அதிகமாகிவிடுமே என்ற நம் கேள்வியை  தவறு என்கிறார். பல காலமாக கோவையில் ப்ழங்களின் விலையை பேப்பரில் அறிவிப்பவர்கள் நாங்கள்.  எங்கள் போட்டியாளார்கள் இதை வரவேற்கவில்லை எனற போதிலும் நாங்கள் செய்கிறோம். காரணம் தரமான பழங்களின் மார்கெட் விலயை மக்கள் அறிவதற்காகத் தான்.  விலை அதிகம் வைத்தால் மக்கள் எங்களை ஒதுக்கிவிடுவார்கள் எனகிறார். இவர்களின் வாடிக்கையாளர்களின் வேண்டுகோளினாலும் முதல் கிளையை  திறந்தவர்கள் இப்போது பலநகரங்களில் பரவியிருக்கிறார்கள் தமிழகம் முழுவதும் பரவது லட்சியம் என்று சொல்லும் இவரது மகன் செல்வம் இப்படி காய்கனி வியாபாரத்தில் செயின் ஸ்டோரை தெனிந்தியாவில் அறிமுகபடுத்தியது தங்கள் நிருவனம் தான் என்கிறார்.  சாப்ட்வேர்கள் தயாரிக்க படித்து பயிற்சி பெற்ற இவர் தயாரித்த  ஒரு மென்பொருளால்  வியாபார நிர்வாக்த்தில் பல விஷயங்கள் எளிதாக்கப்பட்டிருக்கிறது.  இதை பல வியாபர நிறுவனங்கள் விரும்பி கேட்டதால் அதை தயாரிப்பதற்காகவே ஒரு தனி நிறுவனத்தை துவக்கியிருகிருப்பதாக சொல்லும் செந்தில் தந்தையின் காய்கனி வியாபாரம் தான் முதனமையானதும் முக்கியமானதும்  எனகிறார்.
தங்கள் கடைவாசலில் வ்ரும் வடிக்கையாளர்களுக்காக பழஜூஸ் விற்க ஆரம்பித்தில் தெரிந்த விஷயம் அதை வாடிக்கையாளார்கள்  பெரிதும் விருபுகிறார்கள். எனபது. அதை  நன்கு ஆராய்ந்தபின் அதற்காகவே தனி கடைகளை நல்ல வசதிகளுடன் பல இடங்களில் ஆரம்பித்துவிட்டார்கள்.  ஒரு நாளைக்கு 20000 கப்புகள் ஆரோக்கியமான பழ ஜுசை மக்கள் அருந்திக்கொண்டிருக்கிறார்கள். முதலில் வெளிநாட்டு பழங்களை இடைத்தரகர்கள் மூலம்  இறக்குமதி செய்துகொண்டிருந்தவர்கள் இப்போது உலக புகழ பெற்ற நிறுவனங்களிலிருந்து நேரடியாகவே இறக்குமதி செய்கிறார்கள். இது நல்ல தரத்தை குறைந்த விலையில்  தரமுடிகிறது என்று சொல்லும் இவர்கள்  அண்டை நாடுகளுக்கு நமது பழங்களை ஏற்றுமதி செய்யவும ஆரம்பித்திருக்கிறாகள்.  வாழக்கையில் நான் எதையும்  எதிர்கால எதிர்பார்ப்பு திட்டங்களுடன்  ஆரம்பிக்கவில்லை. கிடைத்த வாய்ப்பை ந்மபிக்கையுடனும் நன்பர்கள் உதவியுடனும் உழைப்பினால் செயல் படுத்தினேன்.  இபோது அடுத்த தலைமுறை அதை சிறப்பாக வளர்க்க முயற்சிக்கிராரகள் அதைத்த்விர ஒன்றும் வெற்றி ரக்சியம் இல்லை என்று அடக்கதுடன் சொல்லும் சின்னசாமி இன்றும் பல நாட்களில் விடியற்காலை நேரங்களில் விற்பனை செய்பவைகளை கொள்முதல் செய்ய மார்கெட்டுக்கு  தனது குடும்பத்து இளைய தலைமுறையினரையும் அழைத்துகொண்டு போகிறார். 

96     




11/9/11

6வேலைத்தேடி தரும் வேலை


              

நாடு முழுவதிலிருந்தும் பல லட்சங்களில் தேர்வு எழுதி அதில்முன்னணி ம்திப்பெண்கள் பெறும் சூப்பர் புதிசாலிகளில் சிறந்த்வர்களை மட்டும்  சலித்து தேர்ந்தெடுத்து பயிற்சி அளிக்கும்  கல்வி நிறுவனம் இந்தியன் இன்ஸ்ட்டியூட் ஆப் மெனேஜமெண்ட்.. இன்று உலகதரத்திலிருக்கும் இதில் படித்தவர்களை  பட்டம் பெற்றும்முன்னே போட்டிபோட்டு பெரிய நிறுவனங்கள் பணியில் அமர்த்திக்கொள்ளும். இந்த நிர்வாகயியல் பயிற்சி நிறுவங்களில் முதலிடத்திலிருப்பது  அஹமதாபாத் ஐஐஎம்.  அதில் பயின்ற மத்தியதர குடும்பத்திலிருந்து வந்த ஒரு மாணவர்.    படிக்கும்போதே பெரிய வேலை என லட்சியமில்லை நான் ஒரு புதிய தொழில் துவங்கி வெற்றிகரமாக நடத்துவேன் என்ற் சொல்லிக்கொண்டிருந்தபோது  அவருடையா பேராசியர் உள்பட புருவம் உயர்த்தியவர்கள் பலர். அவர் சஞ்ஜீவ் பிக்சந்தானி. தனது  கன்வுகளுடன் துவக்கிய லட்சிய பயணத்தில் 10 ஆண்டு பயணத்திற்கு பின்னர்  வெற்றி கண்டவர்.  இன்று இந்தியாவின் மிகப்பெரிய இணையத்தின் மூலம் வேலைதேடித்தரும் நிறுவனமாகியிருக்கும் நாக்ரி.காம் நிறுவனத்தை உருவாக்கியவர்.  இன்று இந்த நிறுவனத்தின் மதிப்பு 200கோடி இதுவரை பதிவுசெய்திருப்பவர்கள் 10 ல்ட்சத்திற்கும் மேல். பலருக்கு  வேலை கிடைக்க உதவியிருக்கிறது. Naukri.com  இணையதளம். தொடர்ந்து முதலிடத்தில் இருக்கும் வேலை வாய்ப்பு தேடல் இயந்திரம். (Job Search Engine). இத்தளத்தில் நீங்கள் வேலை தேடுவது, விண்ணப்பிப்பது மட்டுமல்லாது, பல்வேறு முன்னணி நிறுவனங்களில் இருக்கும் தேவை பற்றிய அறிவிப்புகளை, அந்த நிறுவனங்களின் Career இணைப்பிலிருந்து பெறலாம். இது மட்டுமல்லாது உங்கள் தகுதிக்கேற்ற வேலைகளை உங்கள் மின்னஞ்சல், அலைபேசியில் பெறுவதோடு SMS மூலமும் வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.
ஐஐஎம்ல் படிப்பு முடிந்த வந்தவுடன் எதாவது தொழில் ஆரம்பிப்பது பற்றி தீவரமாக சிந்தித்து கொண்டிருந்தவரை ” “தீர்மானம் செய்யும்வரை ஒரு வேலையில் சேர்ந்து கொஞ்சம் பணமும் சேர்த்துக்கொள்” “ என்று சொன்னவர் உடன் படித்த தோழியும் பின்னாளில் மனைவீயுமான சுரபி. அவருக்கு நெஸ்லே நிருவனத்தில் நல்ல சம்பளத்தில் வேலை கிடைத்திருந்தது.  ஆலோசனையை ஏற்று ஹார்லீக்ஸ் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார். நல்ல சம்பளம், வசதிகள் இருந்தாலும்  உள்ளத்தில் “சொந்தபிஸினஸ்” “ என்ற கனல் கனிந்த்து கொண்டேயிருந்தது.  திருமணமான புதிதில் ஒரு நாள் வேலையை வீசியெறிந்துவிட்டு, மனைவியிடம் நமது நிருவனம் பிறந்து  வளர்ந்து ஒருநிலையை அடையும் வரை நீ குடும்ப செலவுகளை சமாளிக்க வேண்டும் எனறு சொல்லிவிட்டு தன் தந்தையையின் வீட்டின் பின்னே இருந்த வேலையாட்களத்ங்கும் இரண்டு அறை வீட்டில்  நணபரை பார்டனராரக சேர்த்துகொண்டு நிறுவனத்தை துவக்குகிறார். பெயர் இன்போ எட்ஜ் திட்டமிட்டிருந்த பிஸினஸ்டேட்டா பிராஸிங், ஆலோசனைகள் வழங்குவது. அப்போது இந்தியாவில் அதிகமான அளவில் நிறுவனங்கள் கம்பூட்டர்களை பயன்படுத்தவில்லை, தகுதியான் ஆட்களும் இல்லை. என்வே இது நல்ல தொழிலாக வளரும் என்பது சஞ்ஜீவின் கணிப்பு,. ஆனால் எதிர்பார்த்த அளவில் வரவேற்பில்லை.. வருமானம் இல்லாமல் செலவுகள் கூடின.அதை சமாளிக்க ஒரு மானேஜ்மெண்ட்ட் கல்லூரியில் லெக்சரர் வேலைஇரண்டாவது குழந்தையை எதிர்பார்த்திருந்த சுரபியும் வேலையை விட்டிருந்தார். அதானால்  ஒரு நாளிதழலில் வேலை வாய்ப்பு பக்கஙகளை கவனிக்கும் சிலமணி நேர பகுதி நேர இரண்டாவது வேலை. சஞ்ஜீவ் வாய்ப்புகளை அணுகி போகுமிடங்களில் எல்லாம் பலர் பிசினஸ் டூடே என்ற பத்திரிகையை எல்லோரும் கடைசி பக்கத்திலிருந்து படித்து கொண்டிருப்பதை பார்த்தார்.   ஏன் என கவனித்து போது அது  நிறுவனங்களில் மேல்மட்ட வேலைவாய்பு விளம்பரஙகள் தெரிந்த்தது. இதை  மற்ற சதாரண வேலைவாய்ப்களுடன் நாமே தொகுத்து தரலாம் என்ற எண்ணத்தில் தினசரி பேப்பர்களில்  வந்திருக்கும் வாய்ப்பை தொகுத்து ஒரு டேட்டா பேஸை உருவாக்க தனது அலுவலக  ஊழியர்களை பணித்தார். (அவர்களுக்கு வேறு வேலையுமில்லை எனபதும் ஒரு விஷயம்.).. இவ்வளவு கஷ்டங்களுக்கிடையேயும் தனது நிறுவனத்தை நடத்தி வந்ததிருக்கும் இவரது அசைக்கமுடியாத தன்னம்பிக்கை நம்மை ஆச்சரியபடவைக்கிறது.  ஒரு நாள் மாலையில் பிரமாத விள்மபரபடுத்தபட்ட பொருட்காட்சியில் தனக்கு வாய்ப்பாக எதேனும் ஒரு நிறுவந்த்தின் தொடர்பு கிடைக்குமா என போனவரின் கண்ணில் பட்டது  WWW  என்ற பெயரில் ஒரு ஸ்டால். என்னவென்று விசாரித்த்தில் அது தான் இண்டர்நெட் என்றும் அதில் மெயில்அனுப்பிக்கொள்ளலாம் என்றும் தனியாக ஒரு தளம் வைத்துகொண்டு தங்கள் தொழில் பற்றி சொல்லாம் எனறும் தெரிந்து கொண்டார். உடனே இதன்மூலம் நாம் ஏன் பிஸினஸ் செய்யகூடாது எனற எண்ணம் எழுந்தது. கவனியங்கள். இன்று இண்டர்நெட் மூலம் பணம் கொட்டிக்கொண்டிருக்கும் பிஸினசை நடத்திகொண்டிருக்கும் சஞ்ஜீவிக்கு அன்று இண்டர்நெட் என்றால் என்னவென்ன்று கூட தெரிந்திருக்கவில்லை.   “எனக்கு இண்டர்நெட் எனபது தெரிந்திரிக்கவில்லை. ஆனால் சில வினாடிகளில் அதில் இருக்கும் வியாபார வாய்ப்பை புரிந்துகொண்டேன்” “ என்கிறார் சஞ்ஜீவ்.  தொடர்பு கொண்டு விபரஙகள் அறிந்த போது இணையத்தில் ஒரு தளமாக இணைய  சர்வர் இருக்கும் நிறுவந்த்தின் உதவி அவசியம் அது அமெரிக்காவில் இருக்கிறது, கட்டணம்  மாதம் 25 டாலர் செலுத்த வேண்டும் எனபதை அறிந்தார். அமெரிகாவிலிருக்கும் சகோதரை  தொடர்பு கொண்டு  இண்டர்நெட் எனறால் தெரியுமா? உதவமுடியுமா? எனகேட்டார். அவர் சிரித்து கொண்டே இங்கு எல்லோரும் பயன் படுத்துவதாக சொல்லி உதவ உறுதியளித்தார். அவர் உதவும் பணத்திற்கு தந்து நிறுவனத்தில் 5% பங்குகள் தருவதாக சொன்ன தம்பியின் நம்பிக்கையை பராட்டியவருக்கு அப்போது தெரியாது அந்த பங்குகள் ஒரே  இரவில் அவரை கோடிஸ்வரனக்கபோகிறது எனபது.
தனது தொழில் இதுதான் என முடிவுசெய்துவிட்ட சஞ்ஜீவ் முழு முச்சாக அதில் இறங்கினார். இரண்டு முழு இரவுபகல்கள் உழைத்து ஒரு திட்ட அறிக்கயை உருவாக்கினார். எதை எப்படி ஏன் செய்ய வேண்டும் என்ற கச்சிதமான் திட்டம். வெப் சைட்டை வடிவமைக்கவும் நிர்வகிக்கவும் டெக்கினிகல் விஷயஙகள் அறிந்தவர்கள்  தேவை எனபதால் ஐஐஎம்லில் கூட படித்த  நணபர் லாலை  அழைத்தார்.  சம்பளம் கிடையாது  நிறுவனத்தின் பங்குகளில் 9 % எனபது ஒப்பந்தம். கம்ப்யூட்டர் ப்ரோகிராமில் கில்லாடியான அவர் எனக்கு இண்டர்நெட் பற்றி எதுவும்  தெரியாது எனறவரிடம் உனனால் முடியும் என்று ஊக்கபடுத்தியதில் ஒரே வாரத்தில் நான் தயார் என்றார். சேமித்து வைத்த வேலை வாய்ப்புகள் டேட்டாகள் உதவின. 1000 வேலைவாய்ப்பு விபரங்களுடன் நாக்ரி. காம் 1997ல் பிறந்தது. சொந்தத்தில் ஒரு கம்ப்யூட்டர்கூட இல்லாதால் நணபர் லாலின் கம்ப்யூட்டர் மூலம் இயங்கியது. முதலாண்டு 18லட்சம்இரண்டாம் ஆண்டு 36 லட்சம் என பிஸினஸ் வளர்ந்தது. கூடவே புதியபோட்டியாளார்களும் களத்தில் இறங்க தனது நிறுவனம் அவர்களைவிட பிரமாண்டமாக்யிருக்க வேண்டியதை உணர்ந்த சஞ்ஜீவிவ் செய்தத  துணிவான முடிவு. 2005ல் நிறுவன முதலுக்கு பங்குசந்தையை நாடியதுதான். நம்பமுடியாத ஆச்சரியமாக பங்குகள் வேண்டி விண்ணப்பத்தவர்கள் லட்சகணக்கில். தேவைக்குமேல் 55 மடங்கு. 320ருபாய் ஷேர்  600ருபாய்களுக்கு விற்றது. சஞ்ஜீவ் குடும்பத்தினர் தஙக்ள் பங்ககளில் சிலவற்றை விற்று கோடிஸ்ரர்கள் ஆனார்கள். அந்த ஆண்டு நாக்கிரி.காமின் வருமானம்  84 கோடி லாஉஅப் 13 கோடிகள். அன்றிலிருந்து இந்த நிறுவனம்  வேலை தேடுவதை பல புதிய பரிமாணங்களோடு அறிமுகபடுத்தி வளர்ந்துகொண்டிருக்கிறது.   “சொந்த தொழில் செய்யவிரும்புகிறீகளா? திட்டத்தில் அசாத்திய நம்பிக்கை வைத்து உழையுங்கள். வெற்றி நிச்சியம் வரும் த்மாதமாகத்தான் வரும்  அதுவரை காத்திருக்க கற்றுகொள்ளுங்கள் “ எனகிறார் சஞ்ஜீவ்






4/9/11

அழகான அழைப்பிதழ்கள் அழைக்கின்றன


லைப் பூஸ்டர் 5 4               

மேனகா கார்ட்ஸ் சங்கரலிங்கம்



சொர்கத்தில் நிச்சியக்கப்பட்டாலும்  இணையத்தில் நிச்சியிக்கப்பட்டாலும்,  அழைப்பிதழ்கள் அச்சிடபட்டு வழங்கபட்ட பின்னர்தான் தான் திருமணங்கள் நடைபெறுகின்றன. திருமண அழைப்பிதழ் எனபது அச்சகங்களின்  ஒரு  அச்சு பணி என்ற நிலையை மாற்றி அவைகள் அழகான வடிவத்தில் அமைக்கபட்டு  முதன் முதலில் தமிழகத்தில் திருமண அழைப்புகளுக்கே ஒரு  தனிகெளரவம்  சேர்த்தவர்கள்   மேனகா கார்ட்ஸ்.  இன்று இந்த  துறையில் முதலிடம் பெற்று நாடெங்கும் க்ஷ்க்ஷ்க்ஷ் கிளகளுடனும் க்ஷ்க்ஷ்க்ஷ் போன்ற வெளிநாடுகளிலும் கிளைகளுடன் இயங்கும் இந்த நிறுவனத்தின்  துவக்கம் ஆச்சரியமானது.  இதை துவக்கியது அச்சு தொழிலை செய்துகொண்டிருந்த ஒரு குடும்பத்திலிருந்து அல்லது பெரிய வியாபரா பிண்னணியுள்ள  குடும்பத்திலிருந்து வந்தவராலால் இல்லை.  மிகமிக  எளிய குடுமபத்தில் பிறந்து  படிப்பின் அருமையை உணர்ந்த ஆனால் படிக்க முடியாத  வாழ்க்கைச் சூழ்நிலைகளின்யின் மேடு பள்ளங்களை கடந்துவந்தவர்.. இன்று வெற்றியின் வாயிலில் இருக்கும் இவர் வந்த பாதை புதியபாதை மட்டுமில்லை கடினமானதும் கூட.
 தென்  தமிழகத்திலிருக்கும் வானத்தை நம்பியிருக்கும் பல  வறண்ட கிராமங்களில் ஒன்று சாத்தான்குளம். திருநெல்வேலியிலிருந்து 50 கீமி  தூரத்திலிருக்கும் இந்த கிராமத்தில் விவசாயிகளும் பனை மரங்களும் தான் அதிகம்.   ஆனால் விவசாய தொழிலுக்கு  வாய்ப்பில்லாததால் சாரயாங்காய்ச்சுவதுதான் பலருக்கு வேலை.  ஒரு பகுதி கூலியாக கிடைத்தை குடித்துமகிழ்ந்தவர்கள். அந்த கிராமத்தில் உழைப்பின், படிப்பின் அவசியத்தையை உணர்ந்த்டிருந்திருந்த ஒரு தந்தை, தன் மகனை பக்கத்துஊர் பள்ளிக்கூடத்திற்கு  கைபிடித்து நடத்தி கூட்டிபோய் படிக்கவைத்தவர். அப்படி ஆரமப கல்வியைப் படித்த பையன் சங்கரலிங்கம்.  நாங்குநேரி அரசின் விடுதியில் தங்கி உயர்நிலைபள்ளிப் படிப்பை   தொடர்ந்தபோது அடிக்கடி பார்த்தது அருகிலுள்ள டிவிஎஸ் அதிகாரிகள் காரில் வருவதைத்தான்.  இந்த நிலையை அடைக்க தான் ”நன்றாக படிக்க வேண்டியதின்  அவசியத்தை யாரும் சொல்லாமலே உணர்ந்தான் அந்த மாணவன்.  தந்தையின் விருப்பபடி அக்ரிகல்சரல் ஆபிஸாரகும் ஆவலில் கோவைகல்லூரிக்கு மனுச்செய்து நேர்முகத்திற்கு  அழைப்பு வந்தவுடன்  எதோ வெளிநாட்டுக்கு போகும் ஆவலுடன்  கோவை சென்ற சஙகரலிஙக்த்திற்கு ஏமாற்றம. அட்மிட்ஷன் கிடைக்கவில்லை. மனமொடிந்து ஊருக்கு திரும்பியவர் அடுத்த் ஆண்டு  மீண்டும் முயற்சிக்கும் வரை  பக்கத்து ஊரான திசையன்விளை  வரை  சைக்கிளில் போய்  டைப்ரைட்டிங் படிக்க ஆரம்பித்தவர்  ஊர்கார்களுக்கு உதவ விறகு வாங்கி  தந்ததையையே ஒரு  தொழிலாக ஆரம்பிதார்.. அடிக்கடி சைக்கிள் பஞ்சரானாதால் பஞ்சர் ஒட்ட கற்று  கொண்டதிருந்ததினால், சாத்தன் குளத்தில் முதல்முதலாக ஒரு பஞ்ஞ்ர் ஒட்டும்கடை போர்டுடன் பிறந்தது. கடை வைத்திருந்தால் கூட அக்ரி படிப்பின்மீது  ஆசை போகவில்லை. அடுத்த ஆண்டு மனுச்செய்தபோதும்  அட்மிஷன் கிடைக்கவில்லை. மனம் வெறுத்துபோன சங்கரலிங்கத்தை கடையை கவனத்துடன் கவனித்து பெரிது படுத்தும் யோசனையைச்சொல்லி ஆறுதல் படுத்தினார்.தந்தை.   ஆனாலும் அந்த இளைஞனின் மனதில்  சாதிக்க வேண்டும் என்று கனிந்து கொண்டிருந்த கனல் மெல்ல அனாலாகி,  உயரஙகளைத்தொட வேண்டிய நமக்கு வேண்டியது இந்த கிராமத்தில் இல்லை  என்ற முடிவோடு கையில் 300 ரூபாய்களுடன் கோவைக்கு பயணமானான்.
எந்த அறிமுகமும் இல்லாத ஒரு இளைஞனுக்கு தெரியாத ஊரில் வேலை கிடைப்பதைவிட கஷ்டமான காரியம் வேறுஏதுவுமில்லை என்பதை உணர்ந்த சங்கலிங்கம் ஏற்றது ஒரு ஹோட்டலில் சர்வர் வேலை. சாப்பாடும், தங்குமிடமும் நிச்சியமாகயிருந்ததாலும் தொடர்ந்து வேலை தேடுவதை நிறுத்த வில்லை. கோவையிலிருந்து அப்போது  வெளியாகிகொண்டிருந்த கலைகதிர் பத்திரிகையின் துணை ஆசிரியர் முருகானந்தம் அவருடைய பைண்டிங் தொழிலை நிர்வகிக்கும் வேலையை தந்தார். இந்த மனிதரை சந்தித்தது  தன் வாழ்வில்  அதிர்ஷ்டம் என்கிறார். சஙகரலிஙகம். இவரது படிக்கும் ஆர்வத்தை பாராட்டி மாலைக்கல்லூரியில் பி.காம் படிக்க வைத்திருக்கிறார். அச்சக தொழிலில் நாளெல்லாம் இருந்ததினால் அதை முறையாக சிறப்பாக அறிய பிரிண்டிங் டெக்னாலாஜி படிக்க விரும்பிய போது  அதற்கும் உதவி செய்து துணை நின்றிருக்கிரார் முருகானாந்தம் எனற  அந்த நல்ல மனிதர். தொடர்ந்து அச்சக கல்லூரியின் முன்னாள் முதல்வர் நடத்திய அச்சகத்திலேயே பணிக்கு சேர்ந்து  திறமையை வளர்த்து கொண்டிருந்தவரின் வாழ்க்கையில் ஒரு புதிய திருப்பம். டைரக்டர் மகேந்திரனின உதிரிபூக்கள் படத்தில் ஒரு சின்ன வேடதில் நடிக்க கிடைத்த வாய்ப்பு  “கனவுத் தொழிற்சாலயில்”’“ ஆர்வத்தை தூண்டியது. சில வாய்ப்புகள் பல ஏமாற்றங்கள் என  நான்காண்டு போராட்டதிற்கு பின்னர் அண்டன் கனவு கலைந்தபின்  இவர் புரிந்துகொண்டது.” “ முயற்சித்தும் ஒரு விஷயம் முடியவிலையென்றால், முடியும் விஷயத்தை நாம் முயற்சிக்க வில்லை “ என்பதுதான்.  இந்த நிலையில் ஊரில் குடும்பத்தினர்  இவருக்கு திருமணம் பேசி முடிவு செய்திருக்கிறார்கள். அச்சுக்கலையை நன்கு அறிந்த இவர் தன் திருமண பத்திரிகையை  தானே அழகாக வடிவமைத்து  அச்சகத்தில் கொடுத்த போது  எல்லா அச்சகங்களும் சொன்னபதில் “ இதை உடனடியாகச் செய்ய முடியாது “  மிக சதாரண முறையிலேயே தன் திருமண அழைப்பை அச்சிட நேர்ந்த இவருக்கு தோன்றிய யோசனை  “ஏன் இதற்காகவே ஒரு அச்சகத்தை ஏற்படுத்தகூடாது? “ என்பது தான்.  எண்ணம் எழுச்சி பெற்று 1900 ஆம் ஆண்டு செயல்வடிவம் பெற்றது. தரமாக தயாரிக்க பட்ட ரெடிமேட் கார்டுகளில் 24 மணி நேரத்தில் அழைப்பிதழ அச்சிட்டு தரப்பட்டது அந்த கால கட்டதில் ஆச்சரியமான விஷயம். இந்து மத பிரிவுகள் தவிர மற்ற மதத்தினருக்கும் ஏற்ப வடிவமைக்கப்ட்ட  கார்டுகளும், தயாரித்து வைக்கபட்டிருந்த பத்திரிகைகளின் வாசகஙகளும் பெரும் வரவேற்பை பெற்றது.  இன்று 1000க்கு மேற்பட்ட டிசைன்களடன் எந்த மதப்பிரிவினரின் திருமணத்திற்கும் கார்டுகளுடன் காத்திருக்கும் இவர்கள் தொடர்ந்து புதிய டிசைன்களையும் உருவாக்கிகொண்டிருக்கின்றனர். முதலில் திருமணத்திற்குமட்டும்  என டிசைன் கார்டுகளை துவங்கிய இவர்கள் இப்போது பிறந்த குழந்தையை தொட்டிலிடுவதிலிருந்து,  சஷ்டியப்தபூர்த்தி, சதாபிஷகம் வரை  எல்லா சுப நிகழ்வுகளுக்கும் பல டிசைன்களில் கார்டுகளை தயாரிக்கிறார்கள்.
 ஒரு கார்டு  5 ருபாயிலிருந்து  5000 ரூபாய்வரை என விலைகளில்  பல வகைகள் வைத்திருக்கும் இவர்களின் கார்டுகளை ஆன்லைனில் பார்த்து  தேர்ந்தெடுக்கும் வசதியையும் அறிமுகபடுத்தியிருகிறார்கள்.   தொழில் நுட்ப வளர்ச்சியுடன் நாம் இணைந்து வளர வேண்டியது  காலத்தின் கட்டாயம் என்று சொல்லும் நிறுவனர்  “ இண்ட்டர்னெட்ட்டைப்பயன்படுத்தி நேரிலே வராமல் தேந்தெடுத்த கார்டில் அழைப்பிதழை தயாரித்து பெற்றுக்கொள்பவர்களும் உண்டு. எங்களிடம் வந்து இருக்கும் டிசைன்களைய்ல்லாம் பார்த்துவிட்டு  மாறுதல்களை சொல்லி புதிதாக உருவாக்குசொல்பவர்ககளும் உண்டு”. எதுவாகயிருந்தாலும் சிறப்பாக செய்யவேண்டும். ஏனெனில் அடுத்த கஸ்டமர்களை அறிமுகபடுத்தபோகிறவ்ர்கள் அவர்கள் தான் “.  என்கிறார். சென்னையில். பெரிய நகரங்களில் விற்பனை செய்தாலும்  கார்டுகள் தயாரிக்கும் தொழிற்சலையை தன்  சொந்த கிராமமான் சாத்தன்குளத்தில்  நிறுவி  கிராமத்து இளைஞகள் பலருக்கு வேலை வாய்ப்பை தந்திருக்கிறார்.   தொழில் துவஙக விரும்பும் இளைஞர்களுக்கு இவர் சொல்லவிரும்புவது  “பிஸிஸில் நேர்மையாக இருக்க முடியாது-ஏமாற்றினால்தான் நிறைய சம்பாதிக முடியம் “ என்று சொல்லுவதை நம்பாதீர்கள். ஏற்காதீர்கள். முடியும் என்பதற்கு என்  வாழ்க்கையே  உதாரணம் “

28/8/11

புத்திசாலிகளே வாருஙகள்




“இந்த விஷயத்தை அரசு ஏன் சொதப்புகிறது. இன்னும் சற்று புத்தி சாலிதனமாக செய்திருக்கலாமே என்ற எண்ணுபவரா  நீங்கள்?  அரசு பணியில் இல்லாவிட்டலாலும் உங்கள் திறமையினாலும் அனுபவத்தினாலும் வாய்பு ஒரு கிடைத்தால் சவாலாக ஏற்று சாதிக்க  விருப்புகிறவரா நீங்கள் ? அவுட் ஆப் பாக்ஸ் திங்கிங் என்று சொல்லப்படும் மாறுபட்ட சிந்தனையாளாராக அரசுக்கு எதாவது புதிய யோசனை வைத்திருப்பவரா ?  இருக்கும் வேலைக்கு லீவு  போட்டுவிட்டு வாருங்கள். சேர்ந்து உழைப்போம். புதியதோர் உலகம் செய்வோம்- என்று அழைக்கிறது கர்நாடக அரசு.

இந்திய நாட்டை அறிவுசார்ந்த நாடக மாற்றும் குறிக்கோளுடன் பிரதமர் “தேசிய அறிவுசார் ஆணையத்தை “ (NATIONAL KNOWLEDGE COMMSSION)  அமைத்திருக்கிறார். பொருளாதார மேதைகளும், சிறந்த அறிஞர்களும் உறுப்பினாராகளாயிருக்கும் இதன் தற்போதைய தலைவர் திரு. சாம்பிட்ரோடா.
கர்நாடக அரசின் முதல்வர் எடியூரப்பா 2008ல் தனது அரசுக்கு உதவ இதே அடிப்படையில் கர்நாடக நாலெட்ஜ் கமிஷனை   இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் முன்னாள் தலைவர் கஸ்தூரிரங்கன் தலமையில் அமைத்தார்.  அந்த அறிவுசார்மையம் தான் இந்த அழைப்பை விடுத்திருகிறது. “ நீங்கள் காணவிரும்பும்  மாற்றமாக முதலில் நீஙகள் இருங்கள்” “ என்ற அண்ணல் காந்தி அடிகளின்  வார்த்தைகளுகேற்ப   ‘ ஞானம்” “ என்ற திட்டத்தை உதவித்தொகையுடன் அறிவித்திருக்கிறது.  ஒரு குறிபிட்ட திட்டதை திறம்பட செயல் படுத்துவது, ஊழியர்களுக்கு ப்யிற்சிஅளிப்பது,  ஆராய்ந்து அறிக்கைஅளிப்பது போன்ற பணிகளில் ஈடுபட தகுதியும் ஆர்வமும் உள்ள 28 வயதுமுதல்-40வயது வரை உள்ள இளையதலைமுறையினரை- தொழில்துறை தகுதியுடன் பணியிலிருப்பவர், சொந்ததொழில்செய்பவர், இல்லத்தரசி  என்று எலோரையும்  அழைகிறது இந்த ஆணையம். குறைந்த பட்சதகுதி பட்டபடிப்பு,,  5 ஆண்டு முன் அனுபவம் போன்ற விபரஙகளுடன்  இனையதளத்தில் அறிவிப்பு வெளியான உடனே மனு செய்திருப்பவர்கள் 300 பேர். பல ஆயிரகணகானவர்கள் இணைய தளத்தை பார்ப்பது பதிவாகி கொண்டிருக்கிறது.
மனுசெய்தவர்களுக்கு இரண்டுகட்ட தேர்வு. மனுக்களிலிருந்து முதல் கட்ட பரிசீலனையில் தேர்ந்தெடுக்கபட்டவர்கள் முதல் கட்ட நேர்முக தேர்வு நேரடியாகவோ அல்லது டெலிபோனிலோ நடக்கும். இதில் தேர்ந்தவர்கள்  மட்டும் நேர்முகத்திற்கு அழைக்கபடுவார்கள். இராண்டாம் கட்டதில் குழுவிவாதம், தனி நேர்முகம் போன்றவை களினால் தேர்ந்தெடுக்கபடுபவர்கள் ஆறுமாதம் முதல் ஒரு வருடம் வரை பணிசெய்ய வேண்டும் உதவித்தொகை  மாதம் ரூபாய் 40000/. தேர்வு செய்யபட்டால்,தற்போது இருக்கும் பணியில் நீண்ட விடுமுறைக்குபின் மீண்டும் சேரும் உரிமையும்  உண்டு. இவர்களின் பணிகள் அந்தந்த துறை செயலர்களால் நேரிடையாக கண்காணிக்கபடும்.  இவர்களின் பணிகளில் முன்னாள் அதிகாரிகள்,வல்லுனர்கள், வழிகாட்டிகளாக இருந்து உதவுவார்கள்.பணிகால இறுதியில் எதாவது ஒரு துறையில் திட்ட அறிக்கை சமர்பிக்கவேண்டும். பின்னர் மீண்டும் தஙகளது பணிக்கே திரும்பிவிடலாம். செய்த திறமையான பணியின் அடிபடையில் நாலெட்ஜ்கமிஷன் அதன் வேறு திட்டங்களுக்கு  மீண்டும் உதவ அழைக்கபடகூடிய வாய்ப்பும் உண்டு. .
அறிவிக்கபட்டதிலிருந்து இந்த திட்டதிற்கு வந்து குவியும் விண்ணபஙகள், மேல்விபரங்கள் அறிய வரும் எண்னற்ற போன்கள் பற்றியும் அறியும்போது  அரசின் திட்ட பணிகளில் உதவ  காத்திருக்கும் இளய தலைமுறையையினரையும்,    சிறந்த  புத்திசாலிகளை  அரசு பணிகளுக்கு பயன்படுத்திகொள்ள வேண்டிய அவசியத்தை  உணர்ந்த ஒரு  மாநில அரசையும் புரிந்துகொள்ளமுடிகிறது.
பக்கத்து வீட்டை பார்த்து  நாமும்  செய்யலாமே?       

21/8/11

சொர்க்கத்தை நிச்சியப்பவர் -இவர்



திருமணங்கள்  இணயத்தில் நிச்சியக்கபடுகின்றன.
எவருடைய வாழ்விலும் திருமணம் ஒருஇனிமையான் முக்கியமான கட்டம். அது காதல் திருமணமாகயிருந்தாலும் சரி, பெற்றோர்கள் முடிவுசெய்த திருமணமாகயிருந்தாலும் சரி. அவைகள் சொர்கத்தில் நிச்சியக்கபட்டவை என நம்பபடுகிறது. இன்று அப்படி சொர்கத்தில் முடிவு செய்யபட்ட  வாழ்க்கை  துணை யாரென்று கண்டுபிடிக்க இன்று இணயம் உதவுகிறது. இந்தியாவில் இன்னும் 60% க்கும் மேலான திருமணங்கள் பெற்றோரால் முடிவு செய்ய்படுகிறது என்கிறது ஒரு ஆய்வு.  கோவில்களில், சமுக சேவை மையங்களில் விபரங்கள் பதிவு செய்வதிலிருந்து  தினசரிகளில்  வரி விளம்பரங்கள் தரும் வரை பலவகைகளில்  தங்கள் வாரிசுகளுக்கு தகுந்த துணையை  தேடிக்கொண்டிருக்கும் பெற்றோர்களில்  பலர் இன்று இணையத்தின் துணையை நாடுகிறார்கள்.  இந்த புதிய பாதையை கண்ண்டுபிடித்தவர் முருகவேல் ஜானகிராமன் என்ற தமிழர். அவரது நிறுவனம் பாரத் மேட்டர்மோனி.கடந்த 12 ஆண்டுகளாக் இயங்கும் இந்த நிறுவனத்தில் பதிவுசெய்துகொண்டவர்கள் 1 கோடிக்கும் மேல். இந்த இணைய தளத்தின் மூலம்  நடந்த திருமணங்கள் 7 ல்ட்சத்திற்கு  மேல் என்கிறது லிம்கா புக்  ஆப் ரிகார்ட்ஸ்

1997ல் நியூஜெர்சியில் ஒரு இந்திய மென்பொருள் நிறுவனத்தில் கன்ஸெல்டெண்ட்டாக  பணியாற்றிகொண்டிருந்த முருகவேல் ஒய்வு நேரத்தில் அமெரிக்க வாழ் இந்தியர்களுக்காக ஒரு வெப்ஸைட்டை  வடிவமைத்திருந்தார். அதில் தாய் நாட்டுசெய்தி. அரசியல், சினிமா, கோவில் விழாககளின் படங்கள் போன்றவற்றுடன் ஒரு பகுதியாக் மணமகன்/மகள் தேவை அறிவிப்பு.   இந்தப் பகுதி  மிக பிரபலமாகி அதற்காக நிறைய இடம் ஒதுக்க வேண்டியதாயிற்று. அபோது எழுந்த எண்ணம் இதையே ஏன் பெரிய அளவில் ஒரு தனிவெப்ஸைட்   ஆக்கி பலருக்கு உதவக்கூடாது?


இந்தியாவிற்கு திரும்பியுடன் வேலையை ராஜினாமா செய்து விட்டு பாரத் மேட்டர்மோனியை துவக்கினார்.  இண்டர்நெட்டின் முழுவீச்சும் அதன் பலமும் இந்தியாவில் அதிக தாக்கம் ஏற்படுத்தாதாத  நேரம் அது.  நெட்டில் பார்த்தெல்லாம் கல்யாணம் செய்யமாட்டார்கள்  இந்து போன்ற பெரிய பேபர்களில் வந்த விளமபர்களைக்கூட பலரிடம் விசாரித்த பின் தான்  திருமண பேச்சையே துவக்கும் நம் தேசத்தில் இதெல்லாம் சரிவராது என்று இவரை பயமுர்த்தியவர்கள் தான் அதிகம். ஆனால் ஜாதக பொருத்தங்களிலும்மதவழக்கங்களில் நம்பிக்கைகளும், கொண்ட நம் நாட்டில் தங்கள் பிள்ளைகளுக்கு நல்ல துணையை தேடித்தருவதை கடமையாக கருதும் பெற்றோர்கள் இருப்பதால். வருங்காலங்களில்  இணைய தளவழி   நிச்சியமாக தவிர்க்க முடியாதாகிவிடும் என்று நம்பிய முருகவேல் மன்ந்தளராமல் தன் முயற்சியை திவிரப்படுத்தினார். மேலும் ஒரு தினசரியில் 4 வ்ரி விளமபரத்தைவிட விரிவான தகவல்கள் தர வெப்ஸைட் உதவும், பயன் படுத்தி பலன் அடைந்தவர்களின்  வார்த்தைகளினால் புதிய தொடர்புகள் நிச்சியம் என நம்பினார். நம்பிக்கை உண்மையாயிற்று.  இன்று  பல நிருவனங்கள் இறங்கியிருக்கும், 1000கோடி பிசினஸ் இருப்பதாக நம்பபடும் இநத துறையின் முன்னோடியானார் இவர். பாரத் மேட்ர்மோனியின் வெற்றிக்கு காரணம் மாநில, மொழி வாரியாக, மத வாரியாக  அவர்களது வெப்ஸைட் தமிழ்மேட்டர்மோனி,பஞ்ஞாபி மேட்டர் மோனி என்று இயங்குவதுதான். இந்தியாவில் உள்ள அத்தனை மொழி பேசுபவர்களுக்கும் தனித்தனி தளங்கள்  இருப்பதால் பங்குகொள்பவர்களுக்கு வசதியாகயிருக்கிறது.  அது மட்டுமில்லமல், விவாகரத்து பெற்றவர்கள், தனித்து வாழ்பவர்கள்மாற்றுதிறனாளிகள் இப்படி பல வகையான பிரிவுகள். கடந்த ஆண்டு ஒரு 63 வயது இளைஞ்ர் இதன் மூலம் தன் துணையை க்ண்டுபித்து மணந்திருக்கிறார். .  இந்த  இணையதளம் எப்படி இயங்குகிறது ?
 இவர்களது வெப்ஸைட்டில்   மணமகன்/மகள் விபரங்களை பெற்றோர் அல்லது அவர்களே பதிவு செய்தால் அது விபரம் தேடுபவர்களுக்கு எளிதில்  ஆன் லயனில் கிடைக்கும் படி வசதி செய்யபட்டிருகிறது. அதில் தரப்ப்ட்டிருக்கும் போன் அல்லது மெயிலில்  சம்பந்தபட்டவ்ர்கள் நேரடியாக தொட்ர்புகொள்ள முடியும். இதற்கு கட்டணம் எதுவுமில்ல.  தரப்பட்டிருக்கும் தகவல்களை  எப்படி நமபுவது?
எங்கள்  நிறுவனத்தின் நம்பகதன்மைதான் எங்கள் பலம். அதை  ஏற்படுத்தவதில் ஆரபம்த்திலிருந்தே மிகுந்த கவனம் செலுத்திவருகிறோம். பதிவு செய்யப்படும் தகவல்கள் ஒவ்வொன்றும் எங்கள் அலுவலர்களால் சோதிக்கபடுகிறது. போன் நம்பர்களை தொடர்பு கொண்டு சோதிக்க தனி நிறுவனமிருக்கிறது. அவர்களால்  சோதித்த பின்னர்தான் நம்பர் பதிப்பிக்கபடும் .அதுபோல் பதிவு செய்யபட்டவர்களின் படங்கள் தகவல் தருபவர்கள் விரும்பினால் மட்டுமே வெளியிடப்படும்.  பாஸ்வேர்ட் பாதுகாப்புடன் படத்தையும் ஜாதகத்தையும்  வெளியிடும் வசதியும் இருகிறது.  இவைகளெல்லாம் கட்டணம் செலுத்த வேண்டும். பதிவு செய்யும்போது உறவினர், நண்பர்,அல்லது சமூக பிர்முகர்ரை ரெபரன்ஸாக கொடுக்பட்டிருப்பரை நேர்டையாக் அணுகி விசாரித்துகொள்ளலாம். தனி கட்டணம் செலுத்தி சம்பளம் படிப்பு ஆகியவற்றை  எஜென்சி மூலம் விசாரித்து உறுதி செய்யது கொள்ள வசதியும்  உண்டு. 
 பாரம்பரிய பழக்கங்களை  பெரிதும் மதிக்கும் ஒரு கட்டுபாடன  குடுமபத்திலிருந்து வந்திருக்கும்  முருகவேல் இந்திய திருமணத்தை முடிவு செய்ய கூடிய பல விஷயங்களை ந்ன்றாக  புரிந்து வைத்திருகிறார்.
. இவரே  ஒரு புரோகிரமராக இருப்பதால் பதிவு செய்யும்போதே பல விஷயங்களை தரும்படியாக  திட்டமிட்டு  இணையதளம்  அமைக்கபட்டிருகிறது. அதனால் பயன்படுத்துவர்   இந்த ஜாதி பிரிவில்-வெளி நாட்டில் வேலை செய்யும் கம்ப்யூட்டர் எஞ்னியர் -இன்ன சம்பளத்தில்  மண்மகன் தேவை என  குறிப்பிட்டால் பளிச்சென்ற வேகத்தில் பட்டியலை தருகிறது. இணையதளம். இந்த தளத்தின் மூலம் முடிவான ஒரு திருமணத்தில் மணமகளின்  தந்தை  “பழைய  வைதீக முறைப்படி ஜாதகப் பொருத்தம் பார்த்து அதே நேரத்தில் மற்ற விபரஙகளையும் எளிதாக  அறிந்து கொள்ள இன்றைய மார்டன்  இண்டர்னெட்யுகத்தில் அதன் முலமே  செய்யபட்டிருக்கும் இந்த வசதி ஒரு பெரிய வரப்பிரசாதம். “எங்கள் காலத்தில்  இப்படி ஒரு வசதி இல்லைபோல எதுமில்லை “ என்கிறார் (நல்ல வேளை இல்லை! எனபது அவ்ர் மனைவி அடித்த கமெண்ட் என்பது வேறு விஷயம்)
 இவர்களுடைய தளங்களிலியே அதிகம் பயன்படுத்தப்ட்டிருப்பதும் அதிக திருமணங்கள் முடிந்ததும் தமிழ் மேட்ர்மோனியும் ஹிந்தியும் தானாம் ஆன்லைன் வசதி மிக பாப்புலாராக இருந்தாலும்  இன்றும் கல்யாணம் என்றால் நேரில் சந்தித்து பேசுவதுதான் சிற்ந்தது என்ற எண்ணம் பலருக்கிறது. அதனால் நிறைய நகரங்களில்  சிறிய ஆபீஸ்களை அமைத்து இண்ட்டர் நெட்டில் பதிவு செய்ய தேர்வு செய்ய உதவுகிறார்கள். அடிக்கடி நேரடி சுயம்வரங்கள் நட்த்திகொண்டிருந்தவர்கள் இப்போது இணயத்தில்  ஒரே நேரத்தில் பலர் பங்குகொள்ளும் வெர்சுவல் சுயம்வரத்தையும் முயற்சிக்கிறார்கள்

வெறும் திருமணத்துடன் நிறுத்திவிடாமல் வேலைவாய்ப்பு, ரியல் எஸ்டேட் கார் விற்பனை போன்றவைகளுக்கும் தனித்தனி  இணைய தளங்களை துவக்கி இப்போது செயல்படுத்தி கொண்டிருகிறார். முருகவேல். மிக வேகமாக மாக வளரும் இவர்களின் நிருவனத்தில் யாஹூ இணைய தள நிருவனம்  முதலீடு செய்திருகிறது. சமூகத்திற்கு தஙகளது பங்களிப்பாக  இணையத்திலேயே பாரத் ரத்தவங்கி, கண்வங்கி போன்ற வற்றை துவக்கி  மருத்துவ  மனைகளுக்கு உதவுகிறார்கள்.  பெற்றோர் பார்த்து, பாரமப்ரிய முறை  திருமணங்கள் போற்றபட வேண்டும் எனபதற்காக் எப்பரல் 14யை மண்வாழ்க்கைநாளாக (matrimonial day)  கொண்டாடி அன்று தங்கள்தள்த்தின்  மூலம் இணைந்தவர்களின் பங்களிப்புடன் எதாவது ஒரு சமூகப் பணியைச் செய்கிறார்கள்.
வெப்ஸைட் வடிவமைப்பது எனபது கணணியியல் பயின்ற எவரும்  செய்யக்கூடிய ஒரு பணி. ஆனால் தன் பணியில்   சிறு பொறியாக கிளம்பிய மாறுபட்ட ஒரு  சிந்தனையை ஒரு பிஸினஸ் மாடலாகவே உருவாகியிருகிறக்கும் முருகவேல் ஜானகிராமன் இணையத்தில் புதிதாக சாதிக்க  துடிக்கும் இளைஞர்களுக்கு  சொல்ல விருமபவது.: வாய்ப்புகள் வானளவில் இருக்கிறது. அதில் வியாபரா ரீதியாக வெற்றி பெறக்கூடியது  எதுவென்று   கண்டுபிடிப்பதில் தான் உங்கள் வெற்றியிருகிறது. .


    



  


14/8/11

விளக்கேற்றியவர் ஹரிஷ்


ஓளி மயமான எதிர்காலம் தெரிகிறது .

ஹரிஷ் ஹண்டேயின்  தந்தை ரூர்கேலா உருக்கு ஆலையில் பணியாற்றும் ஒரு பொறியாளார். எல்லா மத்திய தரகுடும்பத்தின் தந்தையைபோல மகனுக்கு  சிறப்பாக படிக்க வேண்டியதின் அவசியத்தை வலியுறித்தி வளர்த்தார். பள்ளி படிப்புதொடர்ந்து ஐஐடி யில் என்ஜினியரிங் முடித்து  அமெரிக்காவில் மேற்படிப்புகாக போனவ்ர் ஸ்கார்ஷிப் கிடைத்தனால் பிஎச் டி யும் முடித்தார். படித்தது எனர்ஜி என்ஜினியரிங். படிக்குபோதே பெரிய வேலைகள் அழைத்தன. ஆனால்  தொழில் செய்ய தீர்மானிஹ்டிருந்தார்
ஆராய்ச்சிபடிப்ப்பில் ஈடுபட்டபோது பாதித்த ஒரு  விஷயம் உலகின் பல பகுதிகளில் இன்னும் மின்சார வசதியில்லை. மாற்று சக்தியான சூரிய ஓளி மின்சாரம் பரவலாக மக்களை அடையவில்லை. அப்போது எழுந்த எண்ணம் சூரிய ஓளி மின்சார தயாரிப்பை ஏன்   தொழிலாக செய்யக்க்கூடாதுஎன்பது தான்.   இந்தியா திரும்பிய ஹரிஷ் ஹண்டேயின் தொழில் துவக்கும் யோசனையை கேட்டு, அமெரிக்காவில் படித்து பெரிய வேலைக்கு போவார் என்ற எதிர்பார்த்த குடும்பத்தினரும் உறவினரும் அதிர்ந்து போனாகள்.
ஓளிமயமான் எதிர்காலம் தெரிகிறது என்ற் நம்பிய  ஹரிஷ் மின்சாரமே இல்லாத கிராம்ங்களுக்கு சூரிய ஒளியிலிருந்து மின்சார விளக்குகள் தர 1995ல் செல்கோ SELCO INDIA, கம்பெனியை  தொடங்கினார். இன்று இந்த நிறுவனம் 120,000 கிராம இல்லங்களில் விளக்கு ஏற்றியிருக்கிறது. இந்த நிறுவன்த்தின் மூன்று முக்கிய குறிக்கோளாக் ஹரிஷ் அறிவித்த்து.
 1) ஏழைமக்களுகு டெக்னாலஜியின் பயன் போய் சேரவேண்டும்
.2) அவர்களையும் இதன் பயன்களை அடையச்செய்ய வளர்க வேண்டும்
 3) இம்மாதிரி சமுக தேவைகளையும் வியாபார ரீதியில் வெற்றிகரமாக் செய்யலாம்
என்பது தான்.  கடந்த 7 ஆண்டுகளில் இதை வெற்றிகரமாக் செய்து காண்பித்து வியக்க வைத்திருக்கிறார்.கர்நாடகத்திலும் குஜராத்திலும் 170 பேர் வேலை செய்யும் இவரது நிறுவனத்தின் கடந்த ஆண்டு வரவு செலவு 13 கோடிகள். இவரை விற்பனை செய்திருப்பது 100000க்கு மேற்பட்ட சோலார் ஸிஸ்டம்கள்.
இந்த மகத்தான் வெற்றியை செய்துகாட்டிய ஹரிஷ் ஹண்டேக்கு 20க்கும்மேற்பட்ட நிறுவனங்கள் விருதுகளை வழங்கி கெளரவித்திருக்கிறது. அதிபர் ஒபாமா தேர்ந்த்டுத்து சந்தித்த 20 பேர்களில்  இவரும் ஒருவர். சென்ற மாதம் இவருக்கு  இந்த ஆண்டு ஆசிய நோபலாக் கருதPபடும் மாகஸெஸே    விருது    MAGASAYSAY AWARD  அறிவிக்கபட்டிருகிறது.
 இவர்  இந்த வெற்றிகளை அடைய கடந்து வந்த பாதை ரோஜா மலர்கள் விரித்த பாதையில்லை. கடினமானது மிக கடினமானது. கர்நாடக மாநில்த்தில் தான் மிக அதிக்மான் கிராம்ங்கள் மின்வசதி பெறாதவை எனபதை நம்மில் எத்தன பேர் அறிவோம்.? அதை கண்டுபிடித்து அங்கிருந்து தன் பயணத்தை துவக்கிய இவர் சந்த்தித்த பிரச்சனைகள் ஏராளாம். முதலில் சூரிய ஓளியிலிருந்து மின்சாரம் எனபதையே கிராம மக்கள் நமபத்தயாரகயில்லை.  நம்பியவர்களும்  அதில்  முதலீடு செய்ய தயாராக்யில்லை. தன் ஸ்கார்ஷிப் பணத்தில் மிச்சம்பிடித்த செய்த  முதலீடான 5000 அமெரிக்க டாலர்களில் ம  செய் முறை விள்ளக்கங்களிலேயே மெல்ல கரைந்து கொண்டிருந்தது.  கடைசியாக ஒரு சின்னஞ்சிறு  கிராமத்தில் வேண்டாம் என்று சொன்ன ஒரு பீடி வியாபாரி வீட்டில் அவ்ர் இலாதபோது கூரையில் பேனல்களை பொருத்தி 4 பல்புகளையும் ஒரு சின்ன டிவியையும் இணைத்திருந்தார்.  மாலையில் வீட்டுக்குவந்த வியாபாரி தன் வீட்டில் பெரிய ஓளியையும் கூட்டத்தையும் பார்த்து ஆச்சரியபட்டு உடனே அதை வாங்கி கொள்ள ஒப்புகொண்டார்.  இப்படி விற்ற முதல் சோலார் ஸிஸ்டத்தின் பணத்தில் அடுத்தது வாங்கி  அதை விற்று அடுத்தை வாங்கி வியாபாரத்தை  வளர்த்தார். சற்று யோசித்து பாருங்கள். அமெரிக்காவில் எனஜரி எஜ்னியரிங்கில்  டாக்ரேட் வாங்கியவர் ஒரு படிபிப்லாத வியாபாரியிடம் மன்றாடி தன ஐடியாவை விற்றிருக்கிரார். ஏன்தன் முயற்சியில் நம்பிகையும் வெற்றி பெறவேண்டும் எனற வெறியினால் தான். . புதிய பாதையில் பயணம் செய்ய விரும்புவர்களுக்கு இது மிக் மிக அவ்சியம் எனகிறார் ஹரிஷ்.
இரண்டு அல்லது நாலு டூயூப் லைட்ஒரு பேன்ஒரு ரேடியோ வை இயக்க தேவயான மின்சாரத்தை சூரிய  ஒளியிலிருந்து பெற்று அதை ஒரு பாட்ட்ரியில் சேமிக்கும் வகையான் சோலார்பேனல்  தயாரித்து விற்கிறாரகள். விலை 8000லிருந்து  10 ஆயிரம வரை. ஆனால் அந்த கிராம வாசிகளுக்கு இது பெரிய தொகை. கடனில் கொடுத்தால் வாங்க தயார்ஆனால் கடன் கொடுபார்தான்  யாருமில்லை.  வங்கிகளுக்கு  இது எழைகளில் வாழ்வில் பெரிய மாற்றத்தை உண்டாக்கும் எனபதை போராடி புரிய வைத்து கடன் வழங்க ஒரு திட்டத்தையே உருவாக்கிய  பெருமை இவரையே சாரும்,. ஆனால் சிக்கல்  தொடர்ந்த்து. கடன் வழங்க  மனு தாரரின் மார்ஜின் பங்காக 10-15 % பணம் கட்ட வேண்டும்.அதற்கு கூட வசதியில்லாதவர்கள் அந்த கிராம பகுதி மக்கள். வங்கிகளுக்கு அந்த பணத்திற்கு தனது கம்பெனி   கியாரண்டி கொடுக்கும் என்ற திட்டத்தை அறிமுக படுத்தியதின்   மூலம் பல கிராம மக்கள் பயன் பெற்றனர். இன்று பல வங்கிகள் இவரது திட்டத்தின் மூலம் கிராமக்களில்  வழங்கும் க்டன்களை அதிகரித்திருகிறார்கள். முக்கிய காராணம் இவர்களே வங்கிகள் வழங்கிய கடனை வசுலிக்கவும் உதவுகிறார்கள். சோலார் பேனல்கள் விற்பது மட்டுமில்லை இவர்கள் பணிஅதை நிறுவது மாதம் ஒருமுறை பார்த்து பராமரிப்பது போன்ற பணிகளும். அதற்கு உள்ளூர் இளைஞர்களை பயிற்சி அளித்திருப்பது மூலம் வேலைவாய்ப்பையும்  உண்டாக்கியிருக்கிறார்கள்.  கடனில் கூட இந்த வசதியை பெற முடியதாவர்களைக்கூட   இவர்கள் ஈர்க்கிறார்கள். ஒரு ஆதி வாசிகள் கிராமத்தில் கூடைசெய்பவர்கள் போதிய வியாபாரம் இல்லாதால்  விவாசய கூலிவலை செய்கிறார்கள். அவர்களுக்கு மின் விளக்குகள்  அமைத்து கொடுத்து இரவில் செய்யும் கூடைகளில் ஒரு கூடைக்கு 5 ரூபாய் வீதம் கடனை திருப்பி செலுத்த உதவியிருக்கிரார்கள். அரிக்கேன் விளக்கில் படித்த மாணவ்ர்கள் இன்று ட்யூ லைட்டில் படிக்கிறார்கள். பீடி சுற்றுவதுதைய்ல் போன்ற் வேலைகளை இரவில் செய்கிறார்கள்  பெண்கள்.  சுருக்க மாக சொன்னால் ஒரு மின்சார புரட்சியை  இவரது நிறுவனம் செய்து கொண்டிருக்கிறது. .இதை நம் கிராம புற பகுதிகளிலும் வியாபாரரீதியாக் செய்ய முடியாதா என்று எண்ணும் அல்லது இதை மேம்படுத்த எதாவது யோசனை வைத்திருக்கிரீர்களாஹரிஷ் ஹண்டேவை தொடர்புகொள்ளுங்கள் காத்திருகிறார்.

======================================================ற்ற்

7/8/11

கேளுங்கள் சொல்லப்படும்



 புதிய பாதையிலே......1
(



ஆசிரியரின் அறிமுக குறிப்பக்காக ஒரு  draft
 வெற்றி பெற துடிக்கும் ஒவ்வொருவரின் வாழ்கையும்  அதை   நோக்கிய பயணமாகததான் இருக்கிறது. ஆனால், தீமானம் இல்லாத இலக்குடன் திட்டமிடப்படாத பயணமும் வெற்றியின் அளவுகோலை மாற்றிக்கொண்டே இருககும். அதனால் கிடைத்ததுமட்டுமே வெற்றி என எண்ணிக் கொண்டு  அந்த பயணத்தை பாதியில் விட்டுவிடுபர்கள் பலர்.
ஆனால் சிலர் யாரோ போட்டுவைத்த பாதையில் பயணம் செய்யாமல் தங்கள் பல்வீனங்களை பலமாக்கிகொண்டு,புதிய மாறுபட்ட சிந்தனைகளுடன் போராடி தங்களின் பாதைகளை  தாங்களே  புதிய பாதைகளாக்  உருவாக்கி  அதில்  வேட்கையுடன் பயணம் செய்து வெற்றி காண்கிறார்கள்.
அதிகரித்துவரும்  பல இளைய தலமுறை வாசகர்களின் விருபத்திற்கேற்ப  அப்படி புதிய பாதைகளில் பயணித்து வெற்றிபெற்ற சிரையும் அவர்களின் வெற்றிகளின் ரகசியத்தையும், வெற்றி பெற துடிக்கும் இளைஞர்களுக்கு ஊக்கமளிக்கும் நம்பிக்கை விதைகளாக தர – இந்த பகுதி
                           ******




கேளுங்கள் சொல்லப்படும்


சில ஆண்டுகள் முன் வரை தேவையான ஒரு டெலிபோன் நமபரை பல நூறு பககஙகள் உள்ள டைரக்டிரியில் தேடி, பின்  தேடிய நமபர் அதில்  இல்லாத போதுதான் அது பழைய பதிப்பு என்பதை  தெரிந்து சலிப்படைவோம்.   இன்று ஒரு நம்பர் தேவையானால் ஜஸ்ட் டயலை கூப்பிட்டு கேட்டால் வினாடிகளில் கிடைக்கிறது.
டெலிபோன் நமபர்கள் மட்டுமில்லை  ஒடிகொண்டிருக்கும் சினிமா, ஆஸ்பத்ரிகள், ரிப்பேர்செய்பவர்கள், கல்யாண மண்டபங்கள் கல்லூரிகள், ரியல் எஸ்டேட், வாட்கைக்கு வீடு, செல்போன் கடைகள் இப்படி  உங்கள் எரியாவிலிருக்கு எதைப்பற்றிய விபரங்களையும் வினாடிகளில்  இலவசமாக தரும் இந்த ஜஸ்ட் டயல் நிறுவனத்தின் சேவைகளை இன்று 240  இந்திய நகரங்களில்இரண்டரைகோடிபேர் பயன்படுத்துகிறார்கள்.  இந்த நிறுவனம்  மாறுபட்டு சிந்தித்த ஒரு தமிழரின் கனவு.
 3000க்குமேற்பட்ட ஊழியர்களுடனும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட விள்மபர வாடிக்கையாளார்களுடனும் வெற்றிகரமாக இயங்கும்  இந்த நிறுவனத்தை துவக்கியவர் விஎஸ்எஸ் மணி. ஜாம்ஷெட்பூரில் பிறந்து கல்கதாவில் வளர்ந்த இந்த  இளைஞனின் பெற்றோரின் விருப்பம் இவர் ஒரு சார்டெட் அக்கெண்டண்ட் ஆவது.  அதற்காக  டெல்லி வந்த இவர் படிப்பு செலவிற்காக பண்ம் சேர்க்க 1985ல்  ஒரு நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார். அது யெல்லோ பேஜஸஸ் என்ற டெலிபோன் டைரக்டரி தயாரிக்கும் கம்பெனி.. முதல் முறையாக, தனியாரால் வெளிநாடுகளை போல், இந்திய தொலைபேசி துறையின் போன்டைரக்க்டிரி போல் இல்லாமல்  தொழில் வாரியாக, துறைவாரியாக நம்பர்கள் பட்டியிலிடபட்டு  புதுமாதிரியான வடிவில் வெளியிட துவங்கியிருந்த கம்பெனிஅதில்  வேலைக்கு சேர்ந்த சுப்பரமணி அதன் சார்பாக  பலரை சந்தித்த போது எழுந்த ஒரு எண்ணம், ஏன்  இது புத்தக வடிவில் மட்டும் இருக்க வேண்டும் ?  24 மணி நேரமும் கேட்டால்  போனில் சொல்லும்படி  அமைக்க முடியாதா?
மனதில் கனிந்து கொண்டிருந்த எண்ணம்  வலுவான வடிவம் பெற்ற போது வேலையையும், சிஏ படிப்பையும் விட்டுவிட்டு முழுமையாக இதில் ஈடுபட்டார். நண்பர்கள் முதலீடு செய்து உதவ முன் வந்தனர்.மிக துணிவுடன்“ஆஸ்க் மீ” ‘ என்ற் 24 மணி நேரமும் போன்எண்களைச்சொல்லும் கம்பெனியை துவக்கினார். அந்த காலகட்டத்தில் மக்களிடம் இதற்கு  எதிர்பார்த்தளவு வரவேற்பு இல்லை. ஒரு போன்காலுக்கான காசை செலவழித்து ஒரு நமபரையோ அலலது விஷயத்தையோ தெரிந்துகொள்ள வேண்டுமா எனபதுதான் மக்களின் மனோபாவமாகயிருந்த்தது. கம்பெனி நஷ்டத்தில் இயங்கியது. அதிக முதலீட ஆளில்லை. அதைவிட முக்கியமானது. வெற்றிகரமாக செயல்பட்டிருக்க வேண்டிய தனது நல்ல ஐடியாவை அதற்கேற்ற காலத்திற்கு முன்னதாகவே அறிமுகபடுத்தி கொண்டிருகிறோம் எனபதை மணி உணர்ந்த்தது தான்,  மேலும் இந்த முயற்சிகளுக்கு சிறந்த இடம் மும்பாய்தான் டெல்லி அல்ல என்பதையும் அறிந்தார்.  எந்த விஷயம் பற்றி அறிந்து கொள்வதற்கும்   நண்பர்களையோ   உறவினர்களையோ அல்லது அறிமுகமிலாதவர்களிடம் கூட தகவல் கேட்கும் இந்தியர்களிடையே தனது  கேளுங்கள் சொல்லப்படும் ஐடியா சரியான முறையில் அறிமுகபடுத்தபட்டால் நிச்சியம் வெற்றி பெறும் எனபதை திடமாக  நம்பிய சுப்ரமணி அதை சில ஆண்டுகளுக்குபின் மும்பாயில் செயலபடுத்த் முடிவு செய்தார்.  ஆனால் பணம் வேண்டுமேஅதற்காக  தோன்றிய மற்றொரு எண்ணம்.  “ வெட்டிங் பிளானர்” “ எனற திருமண விளம்பர செய்திதாள்.இது இந்துஸ்டான் டைம்ஸ், டைம்ஸ் ஆப் இந்தியாவுடன் இலவசமாக தரபட்ட  ஒரு இலவச பேப்பர்.  திருமணங்கள்  சமந்தபட்ட அத்தனை வியாபாரஙகளின் விளம்பரங்களுடன்  வரும் அதில்   மணமகன்/மகள்  விள்மபரஙள் இலவசம். இதன் வெற்றியை பார்த்த ஹிந்துஸான் டைம்ஸ் தங்கள் பேப்பரிலேயெ அந்த பகுதியை  இணைப்பாக துவக்கிவிட்டார்கள். இன்று அனேகமாக எல்லா பேபர்களும் செய்துகொண்டிருக்கும் இந்த விஷயத்தின் முன்னோடி   இந்த  எஸ்.சுப்ரமணி தான்.
பையில் சேமித்த 50000 ருபாய்களுடனும் மனதில் கனவுகளுடனும் மும்பாய் வந்த மணி 1996ல் தன் கனவு கம்பெனியான  “ஜஸ்ட் டயல்”“ லை துவக்கினார். எண்ணியபடி மும்பாயில் எதுவும் எளிதாகயில்லை. தனது  தொழிலுக்கு மிக முக்கியமானது டெலிபோன். அதுவும் மக்கள்  மறக்கமுடியாத எளிதில் நினைவில் வைத்துகொள்ளும் போன் நம்பருடன் இருக்க வேண்டும் எனப்தை திட்டமிட்டிருந்தார். ஒரு போனுக்கே 3 வருடம் காத்திருக்க் வேண்டியிருந்த காலம்.  புதிய எக்சேஞ்களில் விரைவில் போன் கிடைக்கும். மும்பாயின் புறநகர் பகுதியான கண்டிவேலியில் புதிய டெலிபோன் எக்ச்சேஜ்  துவக்கபோவதாக் எனபதை  அறிந்து அங்கு ஆபிஸை துவக்கினார்.   டெலிபோன்ஜெனரல்மானேஜரை அணுகி  8ல் துவங்கும் புதிய எக்சேஞ்ஜில் தனக்கு 888-88888 எண்ணை கேட்டார். இவரது பிஸினஸ் திட்டததால் கவரப்பட்ட ஜெனரல் மானேஜர் அந்த நம்பரை விசேஷ அனுமதியின் பேரில் தந்தார். ஒசி மேஜை நாற்காலிகள், வாடகை கம்யூட்டர்களுடனும் ஜஸ்ட் டயல் தன் சேவையை  ஒரு சிறிய இடத்தில் துவக்கியது. இன்று 20000 சதுர அடி பரப்பில் மும்பாயில் சொந்த கட்டிடத்தில் தலமையகத்துடன் நாடு முழுவதும் செயல்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஒரு நகரமாக வளர்ந்து வந்திருக்கும் இவர்களின் வெற்றியின் ரகசியம்   “இன்னும் என்ன புதிதாக செய்யலாம் எனப்தை தொடர்ந்து சிந்தித்துகொண்டே இருப்பதுதான் “.  என்கிறார் மணி. டெலிபோன் நம்பரில் துவக்கி இன்று எல்லாவிதமான தகவல்களையும் தருகிறோம். எவராது கேட்ட  ஒரு தகவல் எங்களால் தரமுடியாவிட்டால் அந்த விஷயம் தான் எங்களது பட்டியலில் சேர்க்க வேண்டிய அடுத்த இலககு என தீர்மானிக்கிறோம். நாடு முழுவதும் பரவியிருப்பதால் பலருக்கு பயனாகயிருக்கிற்து. டெல்லியிலிருக்கும் ஒருவர் மதுரையிலிருக்கும் நணப்ருக்கு அவர் வீட்டின் அருகிலிருக்கும் ஒரு கடையிலிருந்து மலர் கொத்து அனுப்ப ஆர்டா செய்ய முடியும். ஒருமுறை இந்த  சேவையை பயன்படுத்திய அவர் எஙகளை மறப்பதில்லை.  எப்படி  இவர்களால் இவ்வளவு விஷயங்களைநமபர்களை தரமுடிகிறது.?  தொடர்ந்து வளர்ந்து வரும் டெக்னாலஜி உதவியுடன் மிகப் பெரிய டேட்டா பேஸை உருவாக்கி அதை மிக கவனமாக அப்டேட் செய்துகொண்டே வருகிறோம். நவீன கணணி வசதிகளுடன் பல இனங்களில் தொகுத்து வைத்திருகிறாம். ஒரு காலர்  விபரம் கேட்ட மறு வினாடி ஆப்ரேட்டரின் முன் உள்ள ஸ்கீரினில்  மின்னல் வேகத்தில் தெரியும், அதை பார்த்து அவர் சொல்லுவார். அல்லது எஸ்எம்எஸ்.  அனுப்புவார்..  செல்போன் வந்த்திலிருந்து இவர்களிடம்   தகவல் கேட்டு எஸஎம்எஸ்சில்  பெறுபவர்கள் பலமடங்கு உயர்ந்திருகிறார்கள்.டெலிகாம் துறையில் எழுந்த புரட்சி இவர்களின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவியிருகிறது.
இலவசமாக செய்யும் இந்த சேவையில் இவர்களுக்கு என்ன லாபம்.? கேட்பவர்களுக்கு  தகவல் அளிபதற்கு இவர்களிடம்  நிறுவனங்கள் பதிவு செய்ய கொள்ள வேண்டும் விளம்பரத்தைப்போல அதற்கு  அவர்கள் பணம் தரவேண்டும். அதுதான் இந்த கம்பெனியின் வ்ருமானம். கடந்த ஆண்டுமட்டும் 150 கோடி வரவு-செலவு செய்திருக்கும் இந்த நிறுவனத்தில் பதிவு செய்து கொண்டிருக்கும் சிறு வியாபார நிறுவனங்கள் லட்சத்திற்கும் மேல். டெலிபோனில் வெற்றிகரமாக் செய்து கொண்டிருக்கும் இந்த  சேவவை 2007ல் இண்டர்னெட்டிலும் துவக்கி கலக்கிகொண்டிருகிறார்கள். போனுக்காவது காசு இது ஒசி எனபதால் இவர்களது  தளத்திற்கு வருகை தருபவர்கள் ஒரு நாளைக்கு லட்சத்திற்கும் மேல்.
மிக வேகமாக வளரும் இந்த நிறுவனத்தை கூர்ந்து  கவனித்த ஹாங்காங்கிலிருக்கும் SAIF என்ற  வென்சர் காப்பிடல் நிறுவனம் லாபத்தில் பங்கு என்ற முறையில் 50 கோடி  முதலீட செய்ய முன் வந்தனர். .அந்த இனிய ஆச்சரியத்தை சரியாக பயன்படுத்திகொண்டு  சில ஆண்டுகளில் அசுர வளர்ச்சி அடைந்த நிறுவனத்திற்கு  இப்பொது டைகர் குளோபல் எனற  அமெரிக்க வென்சர் கேப்பிடல் நிறுவனம்  77 கோடி  முதலீடு செய்திருகிறார்கள். அந்த மூதலிட்டுடன் அமெரிக்காவில்  1-800 என்ற எண்ணுடன் காலடி எடுத்து வைத்திருகிறார்கள், இனி நியூயாகிலிருப்பவர்களும்  சுவையான் பிட்சா எங்கே கிடைக்கும் என கேட்கலாம்.  அடுத்த இலக்கு  ஜஸ்ட் டயலை சர்வ தேச பிராண்டாக்குவது.
வெற்றி பெற்ற சிறந்த பிஸினஸ் ஐடியாவாக அறியபட்ட இநத நிறுவனத்தை வாங்க முயற்சித்தவர்களில்  முக்கியமானது குகூள்.  நிறுவனம்.  மனதில் தோன்றிய ஒரு மாறுபட்ட எண்ணத்தை, செயலாக்கும் வெறியுடன் புதிய பாதையில் பயணித்து வெற்றிகோட்டை கடந்தும்      ஓடிக்கொண்டிருக்கும் வி எஸ் எஸ் மணி புதிய தொழில் துவஙக விரும்புவர்களுக்கு சொல்ல விரும்பவது ‘ “முதலில் நீங்கள் ஏன் தொழிலை துவங்கவிரும்புகிறீர்கள் எனபதை உங்களயே கேட்டு திருப்தியான் பதிலை பெறுங்கள்.
பொறுமை, தோல்விகளை சந்திக்கும் துணிவு, வெற்றிபெற வேண்டுமென்ற வெறி இருந்தால் மட்டுமே துவங்குங்கள்.