11/11/11

11 11 11

 

             11 11 11

 

இந்த தேதியை ம்றுபடி எழுத இன்னும் 1000 ஆண்டுகள் ஆகும். வங்கிப்பணியில் இம்ம்மாதிரி  விநோத தேதிகளில் எதாவது   ஒரு முக்கிய   விஷயத்தை (கிளைதிறப்பு  ஒப்பந்தங்கள் முக்கியஅறிக்கைகள் வெளியிடுவது போன்றவற்றை) செய்வதை வழக்கமாக்கியிருந்தேன். ஒரு கட்டத்தில் இம்மாதிரி நாட்கள் நெருங்கும்போது என்ன செய்ய்ப்போகிறீர்கள் என நணப்ர்கள்  கேட்க துவங்கிவிட்டனர்.
கடந்த ஒருவருடமாக அசைபோட்டுக்கொண்டிருந்த  ஒரு எண்ணமான இந்த  Blog ஐ பதிவு செய்யும் எண்ணம் எழுந்த்து.    
பெயர் ? ....சுவடுகள்     ஏன்  “சுவடுகள்“?

 என் அனுபவச் சிதறல்கள், படித்தவைகள்,  பார்த்தவைகள் கேட்டவைகள்  சந்த்தித்தவைகள், பயணங்கள்  எழுதியவைகள் எல்லாமே என் மனதில் பதிந்த சுவடுகள். சில கடல் அலையருகின் மணலில் பதிந்தவை. சில ஈர சிமிண்ட்டில் பதிந்ததடங்களாக வாழ்ந்துகொண்டிருப்பவை. . அவைகளை, உங்களுடன் பகிர்ந்துகொள்ள, என்னை வசீகரித்த மனிதர்களைப்பற்றிசொல்ல, என் வாழ்வின் வேறு சில நினைவலைகளைப்பதியவும்  இந்த சுவடுகள் உதவும்.   என் எண்ணங்களுக்கு சங்கிலிப் போடாத  என் குடுமப்த்தினருக்கும், எனக்கு தமிழ அறிவித்த ஆசான்களுக்கும்  நன்றியுடன்  இன்று இதைத் துவங்கிறேன். 
படைப்பின்சந்தோஷத்திற்காகவும் படிக்கிறவர்களுக்காகவும்  எழுதுவதை  நிரந்தரமாக பாதுகாக்க இந்த தொழில் நுட்பம் கைகொடுபதும் ஒரு காரணம். சரி நமக்கு பின் இதை பாதுகாத்து பராமரித்து  எழுதப்போவது யார்?  என்ற் கேள்வி மனத்தில் எழுகிறது. சமீபத்த (dec 2011) அமெரிக்க பயணத்திலிருந்தபோது படித்த ஒரு செய்தி. சமயல் குறிப்புகளை வலைப்பூவில் எழுதி வந்த ஒருவரின் மரணத்திற்கு பின் அந்த வலைப்பூவை உரிமை கொண்டாடி அவரின் வாரிசுகள் கோர்ட்டில் நின்றனர். எழுதபட்டிருந்த உயிலில் எதுவும் சொல்லப்ப்டாதால் வழக்கு. பல நூற்றுகணக்கான கட்டுரைகளில்  ஒரே ஒரு கடுரையில்  என வாழநாளுக்கு பின் இதை என் மகள் தொடர்வாள் என் நம்புகிறேன் என்று சொன்னதை சுட்டி அந்த வலைப்பூ எனக்குதான் சொந்தம் எனறாள்  மகள். நான் இந்தியா திரும்பும்  வரை வழக்கின் தீர்ப்பு வரவில்லை.
இதனால் வருங்காலத்தில் வலைப்பூக்களூம் சொத்தாக மதிக்கபடபோவது புரிகிறது.   எனவே இந்த வலைப்பூவின் வாரிசாக எனது பெயர்த்தி பார்கவியை நியமிக்கிறேன். பேச துவங்கிய சில நாட்களிலேயே  மீரா பாட்டி சொல்லிக்கொடுத்த “அகர முதல“” குறளை மனனம் செய்து சொன்ன இந்தப்பெண் தமிழ் நன்கு படித்து மாலனைபோல் தமிழ்எழுத வேண்டும் என  இறைவனை வேண்டுகிறேன்.
பிறப்பின் சரித்திரம் போதுமே. சுவடுகளின் பதிவுகளை பார்த்துவிட்டு எனக்கு எழுதுங்களேன்.
அன்புடன்
Ramanan

30/10/11


ராஜாவுக்கு கல்யாணம்

நமது பக்கத்துவீடான பூடான  உலகிலில் மன்னா ஆட்சியிலிருக்கும் சில  குட்டிநாடுகளில் ஒன்று. . ஒரு அரச குடும்ப திருமணத்திற்கான எந்தவித ஆடம்பரபமும் இல்லாமல் மிக எளிமையாக நடந்தது அதன்  31 வயது மன்னரான ஜிக்மி கேஸர் நாம்ஜியால் வாங்சக். (Jigme Khesar Namgyel Wangchuck, ) திருமணம்.  திருமணத்திற்கு பிற நாட்டுதலைவர்கள், மனன்ர்கள் அழைக்கபடவில்லை. நண்பர்களாக பங்குகொண்டவர்கள் ராகுல் காந்தியும் அமைச்சர் ஜோதிராத்தியா சிந்தியாவும் மட்டுமே. பூடானின் தலைநகர் திம்புவானாலும் திருமணம் நாட்டின் பழைய தலைநகரான  புனாகா லிருக்கும் பரம்பரை புத்தர் கோவிலில் தான் நடந்தது.  மணப்பெண்  21 வயதான ஜெட்சன் பெமா  (Jetsun Pema,)
இந்தியாவில் படித்தபின் லணடனில் கல்லூரியில் படிக்கும் மாணவி.  இவர் ஆக்ஸ்போர்டிலும்  பின்னர் அமெரிக்காவிலும் படித்த மன்னரின் காதலி எனபது ஐரோப்பிய மீடியாக்கள் தரும் தகவல்.   நாலு மணிநேர பிராத்தனைக்கு பின் மன்னரிடம் தரப்பட்ட சிவப்பு துணித்தொப்பியை மணமகளுக்கு அணிவித்து அழைத்துச்செனறு தன் தங்கசிம்மாஸனத்திற்கு  அருகில் அமைக்கபட்டிருந்த தனியாசனத்தில் அமர வைத்தார். அவ்வளவுதான் திருமணம் முடிந்தது. க்ஷ்க்ஷ்க்ஷ் பூடான் மன்னரின் மனைவியாகவும் ராணியாகவும் ஆகிவிட்டார்.
.7 லட்சமே மக்கள்தொகை கொண்ட, எளிமையான வாழ்க்கையில்  மிக சந்தோஷமாகயிருக்கும் இந்த நாட்டிற்கு மக்கள் கேட்காமலேயே  ஜனநாய அரசை மக்க்ளிடம் திணித்திருப்பவர் இவரது தந்தை.இதனால் இப்போது 47 உறுப்பினர் கொண்ட பார்லிமெண்ட்டும் இருக்கிறது. இதில் தன் திருமணத்தை அறிவித்த போது  ” “நாட்டின் ராணியாக வரப்போகிறவர் நல்ல மனுஷியாகவும்  மக்கள் விரும்பவராக, அவர்களின் நலம் பேணுவராக இருப்பார் “ என சொல்லியிருந்தார். அந்த நாளிலிருந்து மக்கள் ஆவலுடன்  அந்த அதிர்ஷ்டசாலியையை காண காத்திருந்தனர். திருமணத்தை தேசமுழுவதும் மக்கள்  தங்கள் வீட்டுதிருமணமாக கருதிகொண்டாடினர். பேபர் போஸ்டர்கள் கூட அனுமதியில்லாதா பூட்டனில் முதல் முறையாக டிஜிடல் பேனர்களில்  மன்னர் தம்பதியினரின் படம்.   குடும்ப விழாவாக நடைபெற்ற திருமணத்தை தொடர்ந்து   மக்கள் கூடியிருந்த ஸ்டேடித்தில் மக்களின் வாழ்த்தைபெற்ற இந்த மன்னரும் ராணியும அவர்கள் முன் முத்தமிட்டகொண்டது ஒரு  எதிர்பாராத  இனிய ஆச்சரியம்.. பொது இடத்தில் பெண்களை தொடுவது கூட தவறு எனறு கருதப்படும் நாட்டில் மன்னரின் இந்த செய்கை மன்னரைஒரு ஹீரோவாக பார்க்கும்  இளைஞர்களுக்கும் மாணவிகளுக்கும்  மகிழ்ச்சியை தந்தது என்பது எழுந்த ஆராவரத்தில் தெரிந்தது.

GDP   என்ற வளர்ச்சி குறியீடு போல GHP  எனபது ஒரு நாட்டு மககளின் சந்தோஷத்தை குறிக்கும் குறியீடு.  அதில் 148 உலக நாடுகளில்  7 வது இடத்தியும் ஆசியாவில் முதலிடத்தையும் பெற்றிருக்கும் பூட்டானில்  மக்கள் ஆட்சி மலர்ந்திருந்தாலும் மன்னரின் திருமணத்தில் தேசமே சந்தோஷப்படுவதில் ஆச்சரியமில்லையே


"

16/10/11

கலாம் சொன்னதைச் செய்தவர்


லைப் பூஸ்டர் 11             

 ராகவேந்திர ராவ்

  

ராகவேந்தர்  சென்னையில் பிறந்து  தெனாலியில் படித்து வளர்ந்தவர். தந்தை ஒரு ரெயில்வே அதிகாரி. குடும்பத்தில் யாரும்பிஸினஸோ தொழிலோ செய்பர்கள் இல்லை. ஆனால்  பிகாம் பட்டபடிப்பில் பல்கலைகழகதங்க மெடல் பெற்று, அகில இந்திய தகுதித்தேர்வில் பெற்ற முன்ணணி ரேங்க்கினால் அஹதாபாத் ஐஐஎம் ல் இடம் பெறறு எம்பிஏ படித்த இவரின் கனவு சொந்த தொழில். அதவும் சாதாரண கனவில்லை.  பிரமாண்டமான பலநூறு கோடிகளில் ஒரு பெரிய தொழிற்சாலை கனவு. அதுதான் இன்றைய உலகமறிந்த 300மில்லியன் டாலர் கம்பெனியான ஆர்ச்சிட் பார்மா (ORCHID PHARMA ) நிறுவனம்
கிடைத்த முதல் வேலை மும்பாயில் குவாலிட்டி ஐஸ்கீரிம் நிறுவனத்தில். நஷட்த்தில் இயங்கிகொண்டிருந்த அதன் அஹமதாபாத் கிளையை சீராக்கி சிறப்பான நிலைக்கு கொண்டுவந்த ராகவேந்தரின் சாதனை தாகத்திற்கு அது போதுமானதாக இல்லை.  சென்னை அசோக்லேண்ட் பணியில் ஒரு தொழிற்சாலையின் பன்முகங்களை அறிய வாய்ப்பு கிடைத்தாலும்,  பெரிய அளவில் சாதிக்க துடிக்க காத்திருந்தவருக்கு 1986ல் ஹைதிராபாத்தில் கெமிகல் ஆலையை துவக்க திட்டமிட்டகொண்டிருந்த  ஒரு குழுமத்தினரின் அழைப்பு சவாலாக இருந்தது. அந்த நிறுவனத்தை முதல் செங்கலிருந்து உருவாக்கிய அந்த நிறுவனம் 2 ஆண்டுகளில்  5 மடங்கு வளர்ந்திருந்த்து. அவரது  சொந்த கம்பெனியின் கனவைப்போலவே. சொந்த தொழில் துவக்க வேண்டிய மூலதனத்திற்கான் பணத்தை இந்த வேலையில் சம்பாதிக்க முடியாதென்பதால் வெளிநாடுபோய் வேலைசெய்து சம்பாதிக்க திட்டமிட்டதின் விளைவு நல்ல சம்பளத்திலிருந்த வேலையை ராஜினாமா செய்தது. இதற்கிடையில் திருமணமாகி ஒரு குழந்தையும் குடுமப உறுப்பினராகியிருந்த்து. மனைவி இல்லத்தரசிஇத்தனை நாள் உழைப்பில் வங்கிகணக்கில் இருந்த் சேமிப்பு  11000ரூ மட்டுமே இந்த நிலையில் ஒமன் நாட்டில் ஒரு ஹோட்டலின் அக்கெண்டிங் மேனஜர் வேலைக்கு தேர்வாகி தனியே அங்கு போனபோது இவர் அடைந்தது மிகப்பெரிய ஏமாற்றம். அது ஒரு 30  ஊழியர்களுடன் 16 அறைகளை  கொண்ட சின்னஞ்சிறு ஹோட்டல். அதில் அதிகம் படித்த ஊழியர் 12 வகுப்பு பாஸ் செய்திருந்தவர் நிறைய நிலமும், பெரியஆசைகளுடனும் கொண்டவர்கள் அதன் முதலாளிகள்.  முதலில் தயங்கிய ராகவேந்தர் இதை சவாலாக ஏற்று சாதிக்க  வேண்டும் என்று முடிவு செய்தார், எல்லா பொறுப்புகளையும் நேரடியாக கவனித்து அந்த ஹோட்டலை பெறும்லாபத்தை ஈட்டி தரும் நிறுவனமாக்கினார். அதன் உரிமையாளர்களுக்கு நல்ல ஆலோசனைகளை வழங்கி அவர்கள் ஒரு ரெடிமேட் ஆடைதயாரிக்கு நிறுவனம், சின்ன உருக்காலை, ஒரு கெமிகல் ஆலை போன்றவைகளை உருவாக்க உதவினார். 4 ஆண்டுகளில் ஒரு சின்னஹோட்டலை நடதிக்கொண்டிருந்த குடுமபம் ஆண்டுக்கு 80 மில்லியன் டாலர்கள் சம்பாதிக்கும் குழுமம் ஆகியிருந்தது. அரபு நாடுகளில் நிறுவனத்தின் பங்குகள்ஊழியர்களுக்கு வழங்கபடமுடியாது என்பதால் 10000 டாலர் சம்பளம், பலவசதிகளை அந்த நிறுவனம் ராகவேந்தருக்கு தந்திருந்தாலும்  தன் கனவை மறக்காமல் இன்னும் பல புதியபரிமானங்களுடன் கண்டுகொண்டேயிருந்தார்.நிறுவனத்தின் வளர்ச்சசியில் கட்டுமான பணி, இயந்திர இறக்குமதி,  பணியாட்கள் எல்லாம் இந்தியாவிலிருந்தே ஏற்பாடுசெய்து பலருக்கு வாய்ப்பளிதிருக்கிறார்.  சேமித்த பணத்துடன் இந்தியா திரும்பிய ராகவேந்தர் திட்டமிட்டது  மருந்துகள் தயாரிக்கும்  தொழிலுக்கு தேவையான் அடிப்படை கெமிகல்கள் உற்பத்திசெய்யும் ஒரு ஆலை. மருந்து தயாரிக்கும் தொழில் மனித சமுதயாமிருக்கும் வரை வளர்ந்துகொண்டிருக்கும் ஒரு தொழில் அதில் ஈடுபடுவது மற்றதை விட லாபகரமானது  எனபதை கணித்த ராகவேந்தர் அதை  ஒரு சிறுதொழிலாக துவக்கவதை விரும்பவில்லை. தன்னுடையது ஒரு பெரிய நிறுவனமாக இந்தியா அறிந்த, உலகம் அறிந்த நிறுவனமாக இருக்கவேண்டும் என்பதை விரும்பினார். அதற்காக  12 கோடியில் தனக்கிருந்த தயாரிப்பு, நிர்வாக அனுபவம் எல்லாவற்றுடன் அழகான ஒரு பெரிய திட்டத்தை தயாரித்தார். தனது சேமிப்பு மட்டும் போதாது எனபதால் வங்கிகளை கடன் வசதிக்காக அணுகினார். ஐடிபிஐ வங்கி கடன்  5 கோடி கடன் தரமுன் வந்தது. ஆனால் சொன்ன நிபந்தனை  “ உங்கள் மூலதனத்தை 6 கோடிகளாக்க வேண்டும் “ அதற்காக பங்குசந்தையில் நுழையும்படி ஆலோசனையைவழங்கி  அதை நிர்வகிக்கவும் முன்வந்தது. தொடர்ந்து நேரடி மூதலீட்டுக்கு சில தனியார் நிறுவனங்களையும் அணுகினார். தன் திறமையின் மீது கொண்ட அசாத்திய நமபிக்கையினால்  நனபர்கள், நண்பர்களின் நண்பர்கள்,  அப்பலோ மருத்துமனையில் டாக்டராக இருந்த அண்ணனின் நணபர்களை என பலரை அணுகி திட்டத்தை விவரித்து  மூதலிட்டை பெற்றார். தனிமனிதராக இதைச்செய்ததைவிட  பெரியசாதனை,இறுதியில் குறைந்த 50 லட்சத்தை ஐடிபிஐ வங்கி முதலீடு செய்ய முன்வந்ததுதான். கடன் கொடுக்கும் வங்கியே அந்த தொழிலில் முதலிடு செய்வது எனபது இந்தியாவில் அது தான் முதல் முறை.   1992ல் துவங்கிய முயற்சி மொட்டுக்கள் ஒரே ஆண்டில் தொழிற்சாலையாக மலர்ந்தது.   எல்லா கட்டஙகளிலும் திட்டமிட்ட நாட்களுக்கு முன்னதாகவே பணிகள் முடிக்கபட்டன. முதல் இரண்டு மாதத்தில் தயாரிப்பும் பிஸினஸும் 5 கோடி லாபம் 43 லட்சம். அன்று முதல் இன்று வரை இந்த நிறுவனத்திற்கு தொடர்ந்தது வெற்றிகள் மட்டுமே. 94-95 ஆண்டுகளில் நிறுவனத்தின் பிசினஸ் 192 கோடிகள். திட்ட அறிக்கையில் எதிர்பார்ப்பாக சொல்லபட்டிருந்தது 37 கோடிகள்.
இந்த  மகத்தான வெற்றிக்ககான காரணமாக 3 விஷயங்களை  சொல்லுகிறார்  பத்மஸ்ரீ ராகவேந்திரா ராவ். முதலில்  ” “என்னுடைய டீம். என்னுடன் ஹைதிராபாத்திலும்,ஓமனிலும் என்னுடன் இணைந்தது உழைத்த அருமையான நண்பர்கள். . இன்று எல்லோருக்கும் கணிசமான பங்குகள் இருந்தாலும் கம்பெனி துவங்கிய காலங்களில் சமபளம் எடுத்துகொளாமல் நம்பிக்கையோடு உழைத்தவர்கள். இரண்டாவது தேர்ந்தெடுத்த தொழிலில்  எதைத்யாரிக்கவேண்டும் எனற  தீர்மானமான குறிக்கோள். நிறைய கம்பெனிகள் இந்த தொழிலில் இருந்தாலும் போட்டியில்லாத, மிகஅதிக அளவில்மருந்துகளின் தயாரிப்புக்கு தேவைப்படும்  ஒரு  முக்கிய ஆண்டிப்யாட்டிக் மூலப்பொருளை தயாரிக்க முடிவு செய்தது. “ (இன்று உலகில் 5 கம்பெனிகள்  மட்டுமே தயரிக்கும் ஒரு பொருளை இவர்கள் உற்பத்தி செய்கிறார்கள்.)  மூன்றாவது உலக மார்கெட்டில் கண்வைத்து முழுதயாரிப்பையும் 100% ஏறுமதிக்காக உற்பத்திசெய்யும் நிறுவனமாக துவங்கியது. உலகளவில்.  அடிப்படை மருந்துகளின் தேவையில் இந்தியா 1%  ஏறுமதி தான் செய்துவருகிறது அதில் இறங்குவதிலிருக்கும் ஆபத்துகளைப்பற்றி மற்றவர்கள் பேசிக்கொண்டிருந்த்காலத்தில் மீதி 99 % தயாரிப்பில் பெரிய இடத்தை பிடிக்க நாங்கள் நம்பிக்கையுடன் திட்டமிட்டதுதான் எனகிறார்..முதல்ஆண்டு 3 நாடுகளுக்கும், இரண்டாம் ஆண்டு 12 நாடுகளுக்கும் ஏற்றுமதிசெய்துகொண்டிருந்த ஆர்ச்சிட் நிறுவனம் இன்று 90 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது. மிக அதிக அளவில் அமெரிக்காவிற்கு.  இன்று அமெரிக்க ஆஸ்பத்திரிகளில் வழங்கபடும் மருந்துகளிலும் மாத்திரைகளிலும் இருக்கும் அடிப்படை வேதியப்பொருள் இந்தியாவில் தயாரிக்கபட்டது என்ற பெருமையான விஷயத்தை செய்தவர்கள் இவர்கள்.
இவர்களின் வெற்றிக்கு மற்றொரு பெரிய காரணம் இவர்களது  3700 ஊழியர்கள். பலர் நிறுவனத்துடன் வளர்ந்தவர்கள். டீ கொடுக்கும் பையனிலிருந்து ஜெனரல் மானேஜர்கள் வரை பலருக்கு நிறுவனத்தின் ஷேர்கள்  வழங்கப்பட்டிருக்கிறது. சாப்ட்வேர் கம்பெனிகளில் மட்டுமேஇருந்த இந்த திட்டதை 199லியே தன் நிறுவனத்தில் அறிமுகபடுத்தியிருக்கிறார்.
உலகப்பொருளாதாரநெருக்கடி. பன்னாட்டுகம்பெனிகளின்போட்டி அன்னிய முதலீட்டு கொள்கைகளினால் வெளிநாட்டுகம்பெனிகளின்போட்டி, கமபெனியையே முழுங்க முயறசிக்கும் உள்நாட்டு போட்டியாளர்கள் எல்லாவற்றையும் திறமையாக சமாளித்து பிரமாண்டமாக நிற்கும்  இந்த நிறுவனம்  ஒரு  இந்திய இளைஞனின் “ நம்பிக்கையின் அடையாளம்
 096     


9/10/11

சமையலோடு பிஸினஸும் செய்யுங்கள்

லைப் பூஸ்டர் 10             

லலிதா ராவ்


ஒரு பெண் அதுவும் மத்தியதரகுடும்பத்து இல்லத்தரசி சொந்தமாக பிசினஸ் ஆரம்பிப்பது எனபது   10 ஆண்டுகளுக்குமுன் மிக கடினமாகயிருந்த ஒரு விஷயம் அவர்களின் இம்மாதிரி முயற்சிகளூக்கு முதல் எதிர்ப்பு அவர்கள் வீட்டிலிருந்துதான் எழும்.   மெக்கானிகல்என்ஜினியரிங் படித்து ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் டிசைன் என்ஜியராக நல்ல சம்பளத்திலிருந்த   லிலிதா திருமணத்திற்கு பின்னும் தன் வேலையை  தொடர்ந்தார். ஆனால்  எதாவது சொந்த தொழில் ஆரம்பித்து  பல பெண்களுக்கு வேலை கொடுக்கவேண்டும் என்ற  ஆவலில் வேலையை விட்டுவிட்டு  துவக்கிய  தொழில் இன்று 15000 க்குமேற்பட்ட பெண்களுக்கு எளிதாக வருமானம் ஈட்டும் வழியைச் சொல்லிக்கொடுத்திருக்கிறது.  இந்த முயற்சியை பராட்டி எக்னாக்மிஸ் டைம் பத்திரிகை  உமன் லீடர் ஆப் டூமாரோ  விருதை வழங்கியுருக்கிறது.
லிலிதா உடுப்பி பின்னணி உள்ள குடுமபத்திலிருந்து வந்தவர். கோவையில் படித்து வளர்ந்தவர். இன்று மை பேமிலி பிஸ் எனற 54 வகையான  இன்ஸ் டெண்ட்  உணவுப்பொருளை தயாரிக்கும் நிறுவனத்தின் தலைவர். கடந்த ஆண்டின் மொத்த வியாபாரம். 12 கோடிக்கும்மேல்.   மெக்கானிகல் எனஜினியர் எப்படி உணவு பொருள் தயாரிப்புக்கு வந்தார்கணவரின் பணிகளில் உதவ ஆரம்பித்தில அறிந்துகொண்ட விஷங்கள் தான் என்கிறார். கணவர் சேஷாத்திரி ரங்கநாத் ஒரு பிரபல நிறுவனத்தின் மார்கெடிங் மேனேஜர். அவர் நிறுவனத்தில் முதல் முறையாக பிஸ்கட், ஜாம், ரெடிமேட் உணவுபொருள்களை தயாரிபாளார்களிடமிருந்து வாஙகி மார்க்கெட் செய்யும் முயற்சியை முன்நின்று நடத்தியவர் ரஙகநாத். நிருவனத்திற்கு மிகப்பெரிய வெற்றியான இந்த விஷயம்  ஏற்கனவே   “எதாவது சொந்தத்தொழில்”“ என்ற எண்ணததிலிருந்த லலிதாவை  மேலும் சிந்திக்க வைத்தது.  உணவு சம்பந்தபட்ட துறையின் வளமான எதிர்காலத்தை புரிந்துகொண்ட அவருக்கு இயல்பிலியே சமையலில் ஆர்வமிருந்திருந்தால் அந்த பொருட்கள் தயாரிப்பை தேர்ந்தெடுத்தார். 1999ல்  பங்களூர் ராஜாஜி நகரில் ஒரு 10X 10 அறையில் 55000ரூபாய் மூலதனத்தில் (அதில் 20000 கடன்) துவங்கியது லிலிதாவின் கம்பெனி. முதலில் பெரிய அளவில் தயாரித்தது ஊட்டசத்து பௌடர். குழந்தைகளுக்கும், வயோதிகர்களுக்கும், சிகிச்சைக்குபின் நோயாளிகளின் ஆரோக்கியத்திற்கும் உதவும் அந்த பிராடக்டட் மிகபெரிய வெற்றியாயிற்று. இதுபோன்ற பொருட்களை உலக மார்கெட்டில் விற்பனை செய்யும் ஒரு நிறுவனம் பெருமளவில் வாங்கியதினால் ஏற்றுமதியும் அதிகரித்தது. வியாபாரம் அதிகமிருந்தாலும்,லாபம் குறைவாகவேயிருந்தது. காரணம் விற்பனை மற்றும் மார்கெட்டிங்க்கு ஆகும் செலவுகள். மேலும் உலகபொருளாதாரம் மந்தநிலையில் சிக்கியபோது ஏற்றுமதியும் நின்றது. மனம் தளராத லிலிதா தன் முயற்சிகளை  தொடர்ந்தார்.  உள் நாட்டு உணவுத்துறையில் ஐடிசி போன்ற இந்திய பெரிய நிறுவனங்கள் இறங்கியிருந்த நேரம் அது. அவர்களுக்கு தயாரிப்பில் யோசனைகள் கொடுத்தோடு தயாரித்தும் கொடுத்தார்.  சனபீஸ்ட், பாஸ்டாடீரிட் ஆஸிர்வாத் போன்ற பிமாதமாக விற்கும் பொருட்களை த்யாரித்து கொடுத்தவர்கள் இவரது கம்பெனிதான். விற்பனையும் வருமானமும் பெருகி வந்தது. சந்தித்த பலர் முன்வைத்த கேள்வி  “இதை ஏன் உங்கள் பிராண்டாகவே செய்யகூடாதுஇந்த கேள்வி லலிதாவை அடுத்த கட்டத்திற்கு இட்டுசென்றது. விளைவு கணவருடன் இணைந்த மை பேமிலி பிஸ் நிறுவனம் பிறந்தது.
மார்கெட்டிங் பிரச்னைகளையும், விற்பனை செலவுகளையும் பற்றி நன்கு அறிந்திருந்த  அவர் இந்த நிறுவனத்தின் ” “உடுப்பிருசி””’“ விற்பனையையில்  ஒரு புதிய மாடலை துணிவோடு அறிமுகபடுத்தினார். முதலில் தன் நிறுவனம் பெண்களால்-பெண்களுக்காக நடத்தபடுவது எனபதை அறிவித்தார்.. இதன் விற்பனை பெண்களுக்கும் மட்டுமே. பார்கெட்டிங்பிரதிநிதி, கிடையாது.கடைகளில், சூப்பர்மார்கெட்டில் கிடைக்காது. உறுப்பினர்களுக்கு மட்டுமே விற்பனை. ஆனால் பெண்கள் மட்டுமே உறுப்பினராக முடியும்.   இப்படியெல்லாம் கண்டிஷன்கள் போட்டு  பொருட்களை அதுவும் பெண்களிடம் விற்கமுடியுமா?   முடியும் எனறு சாதித்திருக்கிறார் இவர். இதை எப்படி செய்கிறார்.? உறுப்பினாராகிறவர்கள் 600 ரூபாய் கட்டணம் செலுத்தவேண்டும்.  அதற்கு அவர்களுக்கு 750 மதிபபுள்ள ஒரு பாக்கெட் அனுப்பபடும்.   அதில் தினசரி சமயலுக்கு தேவையான சாம்பார் பொடி, ரசப்பொடி, புளியோதரைமிக்ஸ்,பஜ்ஜி தோசைமிக்ஸ் மில்க்ஷேக்பவுடர்  என எல்லாம் இருக்கும்,. பயன்படுத்தி பார்த்து நன்றாகயிருந்தால் நண்பர்களுக்கு சிபாரிசு செய்யலாம். அப்படி செய்யும்போது அவர்களுக்கு அந்த பாக்கெட்டிலிருக்கும் புதிய உறுப்பினராகும் விண்ணப்படிவத்தில் தங்கள் உறுப்பினர் நமபரையிட்டு ஸ்பான்ஸர் என குறிப்பிட்டு கொடுக்கவேண்டும். அந்த புதிய உறுப்பினர் வாங்கும் பாக்கெட்டிலும் இதுபோல ஒரு படிவம் இருக்கும். இதை கஸ்டம்ர்2கஸ்டமர் முறை என சொல்லுகிறார். அறிமுகபடுத்தபட்டவர் வாங்கும் பொருட்களுக்கு ஸ்பான்சருக்கு கமிஷன் தரப்படுகிறது.  அறிமுகபடுத்தபட்டவர் மற்றொரு புதிய உறுப்பினரை அறிமுகபடுத்தும் போதும், அவர் பொருட்கள் வாங்கும்போதும் ஸ்பான்ஸருக்கு ஒரு சிறிய கமிஷன் தொடர்ந்து கிடைத்துகொண்டேயிருக்கும். ” “நாங்கள செய்வது மல்டி லெவல் மார்கெட்டிங்கோ, அல்லது ஆன்லைன் மார்கெட்டிங் பிஸினஸோ இல்லை. இதில் தொடர்ந்து வீடுகளுக்கு போய் விற்க வேண்டிய கட்யாமோஅல்லது கமிஷனுக்கான  விற்பனை டார்கெட் போன்ற பிரச்சனையான விஷயஙகளோ இல்லை””“என்பதை தெளிவாக சொல்லுகிறார் லிலிதா. சமைத்து, சாப்பிட்டு பார்த்து பிடித்திருந்தால் மட்டுமே அடுத்தவருக்கு சொன்னால் போதும். வரவேற்பு எப்படியிருக்குகிறது.? சூப்பர் என்கிறார்.  திட்டத்தை அறிவித்த அன்று மாலையில்  ஒரு புதிய பராடெக்ட் பாக்கெட்களை கோவில் சன்னதியில் வைத்து பூஜித்து வீடு திரும்பிய  எனக்கு காத்திருந்த ஆச்சரியம்  என் வீட்டின் பணிப்பெண் 10 உறுப்பினர்களின் விண்ணப்பங்களுடன் காத்திருந்தது. அதிகம் படிக்காத அந்தபெண் இபோது நான அவருக்கு தரும் சம்பளத்தைவிட பல மடங்கு இதில் சம்பாதிக்கிறார்.   2010 ஆகஸ்ட்டில் துவக்கிய இந்த திட்டத்தில் இது வரை உறுப்பினாராகியிப்பவர்கள் 14 ஆயிரத்துக்கும் மேல். தமிழ்நாட்டில் மட்டும் 7000 பேர் எனகிறார்.எங்கள் பொருட்களின் தரத்தால் தினமும் பலபுது உறுப்பினார்கள் சேருகிறார்கள். இதில்  புதியவர்களின் முகவரிகளையோ அல்லது தேவையான ஆர்டர்களை  ஸ்எம்ஸ் அல்லது ஈமெயில் மூலம் அனுப்புவது மட்டும் தான் உறுப்பினர்களுக்கு வேலை.  பொருட்கள் நேரடியாக ஸ்டாக்பாயிண்ட்லிருந்து  வந்துசேரும்.  ஒரு சிறிய அறையும் கம்யூட்டரும் இருந்தால் ஸ்டாக்பாயிண்ட் துவக்கலாம்.  ஆனால்  இதுவும் பெண்களுக்கு மட்டுமே. இம்மாதிரி இருக்கும் பல ஸ்டாக்பாயிண்ட்களின் கம்யூட்டர்கள் பங்களுரின்தலமைஅவலகத்துடன் இணைக்கபட்டிருக்கிறது. உறுப்பினர்களின் ஆர்டர்கள் கிடைத்தவுடன்  அது  ஆன்லயனில்  ஸ்டாக்பாயிண்ட்க்கு தெரிவிக்கபட்டு.   உடனே  அவர்களின் வீடுகளுக்கு பொருட்கள் நேரிடையாக அனுப்பபடுகிறது.  ஸ்பான்ஸ்ர்களின் . கமிஷன் தொகை  இண்டர்னெட் மூலம் வங்கி கணக்கில்சேருகி
றது.  ஆர்கல் தயாரித்திருக்கும் இந்த மென்பொருளால். நேரம்
,மிச்சமாகிறது. அவசியமான பொருட்கள் மட்டும் தயாரிக்கபடுவதால் உற்பத்திச்செலவு கட்டுபாட்டிலிருக்கிறது.
1999லிருந்து ஆண்டு தோறும் திருப்பதிக்கு கணவருடன் பஙகளூரிலிருந்து 284 கீமீ நடைப்பயணமாக சென்று பிராத்தனை செய்து திரும்பும் இவர் கடந்த சில ஆண்டுகளாக அதை ஒரு சமூக பொறுப்புடன் செய்கிறார். தனது  “வாக்தானுக்கு“ 10 கீலோமீட்டருக்கு  ஒரு கட்டணத்தை நிர்ணயத்து அதை  ஸ்பான்ஸ்ர்களிடமிருந்து பெற்று  சிறு கிராமங்களில் பள்ளிக்கூடங்களுக்கு உள்ளூர் சமுக நிறுவனங்களின் உதவியுடன் அடிப்படை வசதிகளைப்பெறுக்க  உதவுகிறார். தயாரிப்பின் தரத்திற்கு உலக தரச்சான்றிதழ், நவீன சோதனைச்சாலை எல்லாமிருந்தாலும் தயாரிப்புகளை தினசரி   தன் வீட்டு சமையலில் பயன்படுத்தி பார்க்கும் இவர் வீட்டில் சமையலுக்கு பணியாள் இலை. தினசரி  வீட்டிலிருக்கும் 85 வயது மாமியாருக்கு தேவையானவற்றை தயார்  செய்து விட்டு கல்லூரிக்கு மகனை அனுப்பிவிட்டு தானே தயாரித்த  மதிய உணவுடன் தினசரி அலுவலகம் வரும் இந்த தொழில அதிபரின் லட்சியம் அடுத்த சிலஆண்டுகளில் லட்சம் உறுப்பினர்கள். 

2/10/11

பேரீச்சையிலிருந்து எழுந்த சிங்கம்..


லைப் பூஸ்டர் 9             

 பொன்னுதுரை


பலகாலமாக பழையபொருட்களுக்கு மாற்றாக தரப்படுவதாக மட்டுமே அறியபட்டிருந்த பேரீச்சம் பழத்தை உடல் ஆரோக்கியத்தையும் வலிவையும் பெருக்கும் ஒரு விஷயமாக்கிய பெருமை லயன் டேட்சையே சாரும்.இன்று ஆண்டுக்கு 5000 டன்னுக்கு மேல் பேரீச்சைபழம்களை இறக்குமதி செய்து பக்குவபடுத்தி விற்பனை செய்யும் இந்த நிறுவனம் பிறந்தது ஒரு எளிய குடும்பத்தில் பிறந்த இளைஞனின  சொந்த தொழில்துவங்க வேண்டும் என்ற  தணியாத ஆசையினால். 1970களில் இலங்கயிலிருந்து  இந்தியாவிற்கு புலம்பெயர்ந்த பல குடுமப்ங்களில் இவருடையதும் ஒன்று. இலங்கயில் 10 வயதிலிருந்து கடைகளில் வேலைசெய்துகொண்டே பள்ளிபடிப்பை  தொடர்ந்த பொன்னுத்துரை இந்தியா வந்தபின்னரும் அதையே  தொடர்ந்து  திருச்சியில் 80ரூபாய் சம்பளத்தில் 18 வ்யது வரை செய்து வந்தார். . துளிர் விட்டிருந்த சொந்ததொழில் ஆசையும் வளர்ந்தது இந்த காலகட்டதில்தான்நண்பர் ஒருவரின் உதவியால் வங்கிக்கடன் 5000 பெற்று ஆரம்பித்தது ஒரு சின்ன மளிகை கடை. ஆர்வம் இருந்த அளவிற்கு அனுபவம் இல்லாதால் வியாபாரம் செய்யத்தெரியவில்லை. ஆறு மாதத்திலியே படு நஷடம் கடனும் அதிகமாயிற்று. என்றோ மனுச்செய்த அரசாங்க வேலையும், கடை ஆரம்பித்தபோது விண்ணப்பித்த சபீனா பௌடருக்கான எஜென்சியும் ஒன்றாக வந்தது.  ஏதை ஏற்பது என்று குழம்பியிருந்தவருக்கு சபீனாகாரர்கள் சொன்ன யோசனை இரண்டையும் ஏற்றுகொள்ளுங்கள் எனபதுதான். பகலில் ஆபிஸ் மாலையில் சபீனா வியாபரத்திற்காக கடைகளுக்கு போவது எனப்து வாழ்க்கையாயிற்று. கிடைத்த கமிஷன் பணத்திலும் சம்பளத்திலும்  வங்கி கடனை அடைத்த பின்னர். மீண்டும் சொந்த பிஸினஸ் எண்ணம் எழுந்திருந்தது.
தினசரி திருச்சி நகரின் பல கடைகளுக்கு போய்கொண்டிருந்தபோது கவனித்த ஒரு விஷயம் சில கடைகளில் பேரீச்சம்ப்ழத்தை திறந்த கூடைகளில், ஈ க்களுடன் சுகாதாரமற்ற நிலையில் வைத்திருந்ததையும் அதை மக்கள் வாங்குவதையும் தான். இதை பாக்செய்து வைக்ககூடாடாதா? என்ற இவரது கேள்விக்கு ஒரு கடைகாரரின் பதில் தான் இவரை இந்த தொழிலுக்கு அழைத்திருக்கிறது எனபது ஆச்சரியமான உண்மை.  “ நீயே பேக்செய்து கொண்டுவாயேன் “ என்பது தான் அந்த பதில்.  அன்றே அதைப்பற்றி யோசித்து மறுநாளே தனது கீளினிங்பௌடருடன் இதையும் கடைகளுக்கு கொடுக்க ஆரம்பித்தவருக்கு அதற்கு கிடைத்த வரவேற்பு பிரம்பிப்பை தந்தது. தனியளாக இரவெல்லாம் பேக்கிங் செய்து காலை மாலை நேரங்களில் கடைகளில் விற்று வந்தார். சுத்தமான தரமான பழங்களை கொடுத்ததால் ஆர்டர்கள் அதிகமாயிற்று. ஒரு நாள் 500 பாகெட் வரை போக ஆரம்பித்தவுடன் இதுதான் நமது சொந்த தொழில் என தீர்மானித்ததும் செய்த முதல் வேலை அரசாங்க வேலையை ராஜினாமா செய்ததுதான். தினசரி சப்ளை செய்து பணம் வாங்குவது மட்டுமில்லாமல் வாடிக்கையாளார்களின் விர்ப்னையாளர்களின் கருத்துக்கு கேட்டு அதற்கு மதிப்பளிதிருக்கிறார். அப்படி செய்த  ஒரு விஷயமதான் இன்றும், இவராலும் மற்ற நிறுவனங்களாலும்  பின்பற்றபடுகிறது. அது பேரிச்சம்பழத்தை அதன் கொட்டைகள் நீக்கி விற்பது.
 தினசரி பல கடைகளுக்கு கொடுத்துவந்த பேரீச்சம்பழத்திற்கு ஒரு தனி[பெயர் இருந்தால் மக்கள் கேட்டு வாங்கவார்கள் என்று நண்பர் சொன்ன ஒரு யோசனையினால் ஒருநாள் இரவு பிறந்த பெயர்  “லயன் “. சிங்கதிற்கும் பேரீச்சைக்கும் என்ன சமபந்தம்.- பேட்டண்ட், ரிஜிஸ்டிரேஷன் பற்றியெல்லாம் தெரியாது. சிங்கம் மாதிரி இந்த தொழிலில் நம் சரக்கு ராஜாவாகயிருக்க வேண்டும்,. எல்லோருக்கு எளிதாக புரியக்கூடியபெயராக இருக்க வேண்டும் எனபதுதான் எண்ணமாகயிருந்தது.  டிசைன் செய்த கலர் சிங்க படத்துடன் சிவகாசியில் லேபில் தயாரிக்க வேண்டுமனால் ஆயிரகணக்கில் ஆர்டர் தரவேண்டும், நிறைய செலவாகும் அன்றைய சூழலில் அது முடியாத காரியமாக் இருந்தததால்  உள்ளூர் அச்சகத்தில் தயாராக இருந்த தேர்தல் சின்னங்களில் ஒன்றாக இருந்த சிங்க பட பிளாக்கையையே பயன் படுத்தி லேபில்களை அச்சிட்டேன்  என்று சொல்லும் இவரது நிறுவனம் இன்று விளமபரபட்ஜெட்க்காக பல கோடிகளை ஒதுக்கியிருக்கிறது
 சில ஆண்டுகளிலியே உள்ளூரில் கொள்முதல் செய்யும் நிலையிலிருந்து வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யும் நிலைக்கு உயர்ந்தவர் ஓமன் துனிஷியா போன்ற நாடுகளிலிருந்த்து நேரடியாக கண்டெயினர்களில் இறக்குமதி செய்து அதை தரம் பிரித்து சுத்தப்படுத்தி பேக் செய்ய தொழிற்சலைகளை நிறுவியிருக்கிறார்.  இவர் பலமுறை மும்பாய்க்கும் பல நகரங்களுக்கும் செல்ல நேர்ந்த போது உணர்ந்த விஷயம் வியாபாரத்தை பெருக்க தேவையானதில் முக்கியமானது ஆங்கிலம் எனபதைத்தான்.  அதற்காக 1990ல் பல மாதங்கள் டியூஷன் வைத்து கற்றுகொண்டேன்  என தயங்காமல் சொல்லும் இவரது பிஸினஸ் அணுகுமுறைகள் மிக யதார்த்தமாகயிருக்கிறது.
 “நீங்கள் ஒரு புதிய பொருளை அறிமுகபடுத்தி அதில் உங்களுடையதை பிராண்டாக ஆக்கவேண்டுமானால் முதலில் வாங்குவோருக்கு அந்த பொருளைப் பற்றி புரிய வைக்க வேண்டும். இதற்கு சற்று காலம் பிடிக்கும் ஆனால் இது அவசியம்” “ எனகிறார். பிலிப்ஸ் கோட்ல்ர் என்ற அமெரிக்க மார்கெட்டிங் குரு.  இதைப்பற்றியெல்லாம் அதிகம் அறிந்திருக்காத பொன்னுதுரை ஆரமபகாலத்தில்  இதை தனது பிராடக்டெக்காக அனாசியமாக செய்திருப்பது வியப்பாகயிருக்கிறது. இன்று அதிக அளவில் விற்பனையாவதற்கு காரணம் பேரீச்சை உடல் நலத்திற்கு உகந்தது எனபது  இவர்களால் கன்ஸ்யூமருக்கு புரிய வைக்கபட்டிருப்பது தான். இன்று உலக பேரீச்சையின் 5% இறக்குமதியை நம்து நாடு செய்கிறது. உள்ளூர் மார்கெட்டின் விற்பனை  இன்னும் உயர நல்ல வாய்ப்பு இருக்கிறது நாங்கள் இன்னும் நாட்டின் பல மாநிலங்களில் முழுவதுமாக பரவவில்லை என்று சொல்லுகிறார்.
பேரீச்சை பழஙகளை இவர்களுக்கு மஸ்கட்டிலிருந்து விற்பனை செய்துகொண்டிருந்த உலக புகழபெற்ற நிருவனம் பேரிச்சையிலிருந்து சிரப் த்யாரித்து கொண்டிருந்தது. அதை ஏற்றுமதி செய்யும் முயற்சிகளிலிருந்த அந்த அரசு நிருவனம் இவரை அழைத்து இந்தியாவில் அறிமுகபடுத்தமுடியுமா எனகேட்டார்கள்.   அவர்கள் ஆலோசனையின் பேரில் அதை இந்தியாவில் அறிமுக படுத்த துணிந்தது இவர்கள் வளர்ச்சியின் அடுத்த கட்டம். அந்த சிரப்பை நமது உணவுமுறைகளுடன் ஆரோக்கிய சம்பந்தமான விஷயமாக விளம்பரபடுத்தும் முன் நிறைய ஆராய்ச்சி செய்து பார்த்திருகிறார்கள். இறுதியாக கண்டுபிடித்த விஷயங்கள்  அதை இளம்சூடான பாலில் கலந்து சாப்பிடுவது மிக நல்லது. சில விஷயங்களில் சர்க்கரைக்கு மாற்றாக பயன் படுத்தலாம். எனபது.  மார்கெட்டில் பெறும் வரவேற்பை பெற்றிருந்த இந்த  சிரப். சில ஆண்டுகளுக்குபின் சந்தித்த பிரச்சனை சற்று வினோதமானது. மஸ்கட்டில் இதை த்யாரித்துகொண்டிருந்த ஆலை மூடப்படுவிட்டது.  இங்கு கஷ்ட்டபட்டு உருவாக்கிய பெருகிவரும் மார்க்கெட்  ஆனால் மூலப்பொருள் இறக்குமதி செய்ய முடியாது என்ற நிலை. உருவானது. அபோது பொன்னுத்துரை எடுத்த முடிவு அவரது துணிச்சலையும் தன்னம்பிக்கையையும் காட்டுகிறது. ஒரு சிரப் தயாரிக்கும் ஆலையை திருச்சிக்கு அருகில் நிறுவி அதை நிர்வகிக்க ஓமானிலிருந்து நபர்களை வேலைக்கு அமர்த்தியது இன்று அந்த தயாரிப்பை  உள் நாட்டில் விற்பதுமட்டுமிலாமல் மலேசியாவிற்கும் சிங்கபூருக்கும் ஏற்றுமதிசெய்கிறார்கள்.
சிரப்பை தொடர்ந்து தேனை விற்பனைக்கு அறிமுகபடுத்திய இவர்கள் அதில் தங்களின் தனி தரத்தால் தேன் விற்பனையில் நாட்டின முதலிடத்தை  விரைவில் அடைந்துவிடுவோம் எனபதில் நம்பிக்கையோடு இருக்கிறார்கள். திருச்சிக்கு அருகில் கிராமங்களில் அமைந்திருக்கும் இவர்கள் தொழிற்சாலைகளில் வேலையில் மகளீருக்கு முன்னுரிமை. ஒரு தொழிற்சாலையில்  அதிக அளவில் பணியிலிருப்பவர்களின் எண்ணிக்கை 50 வயதுக்குமேல். விரும்பி ஏற்ற தொழிலில் வாடிக்கையாளார்கள் தேவைகளை கூர்ந்து கவனித்தால் வெற்றி நிச்சியம் என்று சொல்லும்  இவரது இன்றைய கனவு இந்தியாவில் அத்தனை மாநிலத்தவரும் இவ்ர்களின் தயாரிப்புகளை அறிந்திருக்க வேண்டும்.  
 

25/9/11

பணம் காய்க்கும் மரங்களை வளர்ப்பவர்


லைப் பூஸ்டர் 8             
 ராம் ஸ்ரீராம்

அமெரிக்காவிலிருந்து வெளிவரும் போர்ப்ஃஸ் பத்திரிகை ஆண்டு தோறும் முதல் 400 கோடிஸ்வரகளின் பெயர்களை பட்டியிலிடும்.  2005 ஆண்டிலிருந்து இந்த பட்டியலில் தொடர்ந்து இடம்பெற்றுவரும்  அமெரிக்கா வாழ் இந்தியர்  ராம்ஸ்ரீராம். அதே பத்திரிகை புதிய தொழில்களில் முதலீடு செய்து பெறும் லாபம் ஈட்டியவர்களின் பெயர்களை மைடாஸ் லிஸ்ட் MIDAS LIST  (மைடாஸ் தொட்டதெல்லாம் தங்கமாகும் மன்னரின் பெயர் ) என்றும் வெளியிடுகிறது. அதில்  இவரது பெயர் கடந்த 6 ஆண்டுகளாக முதல் 5 இடத்துக்குள்ளாகவே இருக்கிறது.   இன்றைய இவரது சொத்து 1.8 பில்லியன் டாலர்களுக்கு மேல். (ரூ9000 கோடிக்கும்மேல்)  இன்று  14 நாடுகளிலிருக்கும் 11 நிறுவனங்களில் டைரக்கடாரக இருக்கிரார். அதில் ஒன்று கூகுள் நிறுவனம்.  இந்த கோடிஸ்வரர் ராம்ஸ்ரீராம் ஒரு  தமிழர்.  சென்னையில் ஒரு சாதாரண மத்தியதர குடும்பத்தில் பிறந்தவர். தாத்தாவீட்டிலிருந்து டான்பாஸ்கோவிலும் பின்னர் லயோலா கல்லூரியிலும் படித்தவர் தாய் ஒரு கல்லூரியில்  ஆங்கில விரிவுரையாளார். எப்படி இவ்வளவு பெரிய செல்வந்தர் ஆனார்.?   “சரியான முடிவுகளை, மிக்சரியான நேரத்தில் எடுத்தது தான் ஒரு முக்கிய காரணம். நல்ல படிப்பின் அவசியத்துடன்,  டிஸிப்பிளினாக வளர்த்த என அம்மா தான் என் ஆதர்ஸம். படிப்புக்கு வெளியே  எல்லா போட்டிகளிலும் பங்கேற்கசெய்து  டென்னிஸ் விளையாட அனுப்பி, என்னை ஒரு துணிவான மனிதாக்கினார். 70களில் எல்லாமத்திய தர குடும்பத்து மாணவன் போல எனக்கு ஐஐடி ஆசை- பாங்க் வேலை போன்ற கனவுகள் இல்லை, தாத்தா அதுபோன்ரவைகளை விரும்பினாலும்  என் விருப்பத்தை  மதித்த அம்மா நான் விரும்பவதையே படிக்க அனுமதித்தார். அமெரிக்கபோய் படிக்க விரும்பியபோதும் இந்த மாதிரி கோடிஸ்வர கனவுகள் எதுவும் இருந்த்த்தில்லை. ஆனால் சொந்தமாக ஒரு கம்பெனி எனற எண்ணம் மட்டும வள்ர்ந்துகொண்டே வந்த்தது. மெக்சிக்கன் பல்கலைகழகத்தில் எம்பிஏ முடித்தவுடன்  ஒரு சிறிய டெலிகாம் கம்பெனியில் வேலைகிடைத்தது. அப்போது வேலைக்கு இன்றுபோல் கஷடங்கள் கிடையாது. சிலநாளில் அந்த கம்பெனியை  பெரிய அமெரிக்க நிறுவனமான பெல் வாங்கிவிட்டது. அதில் எனக்கு இண்டெர்நேஷ்னல் மார்க்கெட்டிங் கற்றுகொள்ள  நல்ல வாய்ப்புகள். உலகின் பல நாடுகளுக்கு நிறைய பயணங்கள் புதிய அறிமுகங்கள் எல்லாம். அமெரிக்காவிலிருக்கும்போது வேலை தொடர்பாக் அடிக்கடி சிலிகான் வேலிக்கு போவேன் அங்குதான் தனித் தொழில் வாய்ப்புகள் அதிகம் எனபதை உணர்ந்தேன். இணைத்தை பயன்படுத்தும் பெளரவுசர்களில் முதலாவதான நெட்ஸ்கேப்  நிறுவந்த்தில் பணிகிடத்தது. அங்கு இண்டர்நெட்டின் வலிமையை புரிந்துகொண்டேன். எனறு சொல்லும் ஸ்ரீராம் தன் 28 வயதில் பார்த்த வேலையைவிட்டுவிட்டுதுவக்கியது ஒரு டெலிகாம் கம்பெனி. அன்றைய அமெரிக்க அதிபர் ரீகன் அறிவித்தபுதிய ஸ்பெட்ரம் லைசென்ஸ் கொள்கையினால் கவரப்பட்டு டெலிகாம் துறையில் புதிய தொழில் துவங்கி  தோற்றிருக்கிறார். அந்த டெக்னாலாஜியை முழுவதும் பயன்படுத்துகூடிய வேகமான கம்ப்யூட்டர்களும், லேப்டாப்களும் வராத காலம் அது.  நிகழும் காலத்திற்கு முன்பாகவே நாம் சிந்திக்கிறோம் எனற தவறை உணர்கிறார். க்டனை அடைக்க மீண்டும் வேலைதேடிபோய் சம்பாதித்திருக்கிறார்.  பின்னர் 1994ல் துவக்கிய  தொழில் இணையதளத்தில் பொருட்கள் விற்கும் ஒரு நிறுவனம், அப்போது அமோஸான் என்ற நிறுவனம் அம்மாதிரி இணைய விற்பனையை பெரிய அளவில் துவக்கியிருந்தது. அவர்கள் ஸ்ரீராமின் நிறுவனத்தை விலைக்கு கேட்க நல்லவிலையில்விற்றவர் அவர்களிட்மே அந்த இணையதளத்தினை நிர்வகிக்கும் பொறுப்பை 1998ல் ஏற்கிறார். கிடைத்த பணத்தை ஸ்டான்போர்ட் கல்லூரியில்தன்னுடன்  படித்த நண்பர்கள் துவங்கும் புதிய  கம்பெனியில் முதலீடு செய்கிறார். அந்த நிறுவனம் கூகுள்.  30 லட்சமவாடிக்கையாளார்களுடன் இருந்த அமோஸான்  ராம் ஸ்ரீராமின் நிர்வாக்திரமியினால் 1கோடி வாடிக்கையாளார்கள் உள்ள கம்பெனியாக் உயர்ந்து உலகின் மிகபெரிய இணையதள வியாபார நிறுவனமாகிறது. சேவைக்கான போனஸாக அதன் பங்குகளைப்பெறுகிறார். அதனையும் விற்று கூகுளின் பங்குகளை வாங்கிகிறார். கூகுளின் இயக்குனராக இருந்த போதும் அது முதலீட்டுக்கு நல்ல லாபத்தை ஈட்டிகொண்டிருந்த போதும்.  2005ம்  இவர் வைத்திருந்த கூகுள் பங்குகள் 34 லட்சம் பங்குகள். அதில் பாதியை பணமாக்கி  ஒரு தனி கம்பெனியை நிறுவுகிறார்.  இவரது தன்னுடைய 25 ஆண்டுகால டெலிகாம், இணைய மார்க்கெட்டிங் புதிய கம்பெனிகள் துவக்கிய அனுபவங்களின் அடிப்படையில் அவர் ஆரம்பித்த நிறுவனம்  ஷெர்ப்பாலொ (SHERPALO) என்ற வென்ச்சர் காப்பிட்டல் முதலீட்டு நிறுவனம். வென்சர் காப்பிட்டல் என்பது  வெறும் நிதி நிறுவனம் இல்லை. மிக வேகமாக் வளர்ந்து நல்ல லாபத்தை ஈட்டகூடிய புது முய்றசிகளுடன் தௌவங்கப்ட்டிருக்கும் தொழிலைகளை கண்டறிந்து அவர்களுக்கு உதவுவது.  ” “முயற்சி உங்களுடையது முதல் எங்களுடையது “ “ எனற ரீதியில் முதலீடு செய்து லாபத்தில் பங்குப்பெறுவார்கள்.90களில் அமெரிகாவில் தோன்றிய இது இன்று உல்கெங்கும் பரவியிருக்கிறது.  அதனென்ன பெயர் ஷெர்ப்பாலொ  ” “கடினமான ம்லைஏற்றத்தில் சாதனையாளருடன் கடைசி வரை, உச்சியை அடையும் வரை வந்து உதவி செய்பவர் ஷெர்ப்பா எனற உதவியாளார். சாதனையாளாரின் அத்தனை கஷ்டங்களையும் படுபவர் இவர். அதுபோல நாங்கள் எனறு சொல்லும் இவரது நிறுவனம் இன்று உலகின் பலநாடுகளில்  வெற்றிபாதையை நோக்கிச்செல்லும் புதிய தொழில்களில் செய்திருக்கும் முதலீடுகள்  அதிக  அளவில் லாபத்தை கொட்டிகொண்டிருக்கிறது. .  தொழில்துவங் கிறவர்க்ளுக்கு, நிதி மட்டுமில்லை ஆலோசனை, வழிகாட்டுதல்  மார்கெட்டிங், நிர்வாக் பயிற்சி கூட்டுமுதலிட்டார்களை அறிமுகபடுத்துவது போன்ற பல விஷயஙகளில் உதவுகிறார்கள்.  ” “எந்த வெற்றியையும் தவறுகள் செய்யாமல் அடைய முடியாது. என் முயற்சிகளில் நான் செய்த தவறுகளை “  ராமின் தவறுகள் “ என புத்தகமே எழுதலாம். அவைகளை புதியவர்கள் செய்யகூடாது என்று சொல்லும் இவரது நிறுவனம் இந்தியாவில் நாக்ரி.காம், மைட்ரிப்.காம்,  ஜூம் இன் போன்ற நிறுவனங்களில் முதலீடு செய்திருக்கிறது.
இவரது மனைவி விஜயலக்‌ஷ்மியும் தமிழகத்தை சேர்ந்தவர். இரண்டு மகள்களும் ஸ்டான்போர்ட் கல்லூரியில் படிக்கிறார்க்ள். விஜிஸ்ரீராம் என்று அறியபட்டிருக்கும் திருமதி ஸ்ரீராம் தனம் என்ற அறகட்டளையை நிறுவி பள்ளிகல்வியை பாதியில் விட்ட அமெரிக்க மாணவர்களுக்கு கல்வி அளிக்கும்   K  12 பள்ளிகளையும் அதை சார்ந்த சமுக நல அமைப்புகளையும் நிறுவி நடத்திகொண்டிருக்கிறார்.
கூகுள் நிறுவனத்தின் பங்குகள் இந்த உயரதிற்கு போகும் எனபதை எப்படி உங்களால் கணிக்க முடிந்தது? . ” “என்சொந்த கம்பெனியை விற்று கிடைத்த பணம், பத்திரமாகமூதலீடு செய்து ,அதிக லாபத்துடன் திருப்பிப்பெற நான் செய்த ஆராய்ச்சி, நண்பர்க்ள் தேர்ந்த்டுத்திருந்த  டெக்னாலாஜியின் மீது நம்பிக்கை ஆகியவ்றால் கூகுள் இணைய உலகில் ஒரு மிகப்பெரிய அசைக்கமுடியாத சக்தியாகும் என்பதை அது துவங்குமுன்பே கணித்தேன்.  கணிப்பு சரியாகயிருந்தது “ என்கிறார்.  இப்படி ஒரு நிறுவனத்தின் எதிர்கால வெற்றியை கணிக்கும் திறன் இவரிடமிருப்பதால் தானோ என்னவோ இவரது ஷெர்ப்பாலொ  நிறுவனம் உலகெங்கிருந்தும் புதிய எண்ணங்களோடு சாதிக்க துடிக்கும்  இளைஞர்களின் முயற்சிகளை தேடிப்போய் வரவேற்று  மூதலீடு செய்கிறாகள்.  உங்களிடம் எதாவது புது சூப்பர் ஐடியாக்ளும் திட்டங்களுமிருந்தால் தொடர்பு கொள்ளுங்களேன்.  




18/9/11

உழைப்பில் விளைந்த வெற்றிகனிகள்


லைப் பூஸ்டர் 7              

பழமுதிர் நிலையம் சின்னசாமி


தமிழகத்தின் 8 நகரங்களில் 30 கிளைகளுடன் ஆயிரத்துக்குமேற்பட்ட ஊழியர்களோடு இயங்கும் இந்த நிறுவனத்தின் கடந்த ஆண்டு மொத்த வியாபாரம் 120 கோடிக்கும் மேல். வெளி நாட்டு பழவகைகளை பெரிய அளவில் நேரடியாக இறக்குமதி செய்யும்  இந்த நிறுவனம் பிறந்தது கோவை நகரில் ஒரு ஒழுக்கமான உழைப்பாளியாக தள்ளு வண்டியில்  பழம் விற்றுகொண்டிருந்த இளைஞனின  மனத்தில் தோன்றிய சிறு பொறியிலிருந்து..  “நல்ல பழங்களாக தருகிறாய் ஆனால் எனக்கு வசதியான நேரத்திற்கு வரமாட்டேன்கிறாயயே, ஒரு கடை போட்டால் நானாவது வந்து வாங்குவேன் “ என்ற ஒரு இல்லத்தரசியின் வார்த்தைகள் அசீரீயாக ஒலித்தது சின்னச்சாமிக்கு.  பள்ளிக்கூடமே இல்லாத குக்கிராமத்தில் பிறந்த சின்னச்சாமிக்கு  நடந்து பககத்து ஊர் பள்ளிக்கூடம் போய் படிக்கமுடியாத குடும்ப சூழ்நிலை.   12 வயதிலிருந்து கிடைத்த வேலயை செய்து குடுபத்துக்கு உதவிய அந்த சிறுவனை உறவினர் கோவை அருகே உள்ள அன்னூரில்  ஒரு முஸ்லீம் பழக்காரரிடம் வேலை பழக ஒப்படைத்தார்.  அன்று முதல் பழங்கள் தான் அவன் உலகம். பஸ்நிலையத்திலிருந்த அந்த கடை காலை முதல் பஸ் 5மணிக்கு கிளம்பும் முன் திறக்கபடும் இரவு 10 மணிக்கு கடைசி பஸ்  கிளம்பியபின் மூடப்படும்.  எந்த விடுமுறையும் கிடையாது.பழங்களை பார்த்து பார்த்து துடைத்து அடுக்கி வைத்திருந்த முறை வருபவர்களை கவர்ந்து வியாபாரம் பெருகியது. எந்த நேரத்திலும் பொய் சொல்ல கூடாது யாரையும் ஏமாற்றகூடாது என்ற பாடத்துடன் பழ வியாபரத்தையும் முதலாளியிடம் கற்றபடி மூன்றாண்டுகள் ஒடின, பஸ்நிலைய கடைகள் எலத்தில் எதோ அரசியல். முதலாளி கடையை மூடிவிட்டார். என்ன செய்வது எனறு தெரியாத  சின்னசாமி பஸ் ஏறிசென்ற இடம் ஊட்டி. அங்கு ஒரு பலசரக்குகடையில் உதவியாளார் வேலை அதுவே தங்குமிடதானால் நாள் முழுதும் வேலை. 18 வயது ஆவதற்காக காத்திருந்து
கோவையில் ஒரு மில்லில் கூலியாக வேலைக்குசேர்ந்த சின்னசாமிக்கு சந்தோஷத்திவிட சங்கடம் தான் அதிகமாகயிருந்தது. காரணம் ஒரு நாளில் 18 மணி நேரம் உழைத்தவருக்கு 8 மணி நேர ஷிப்ட் கஷ்டமாகியிருந்தது , மில் ஷிப்ட் நேரம் போக மீதி நேரத்தில் ஆப்பிள் சாத்துக்குடி மலைப்பழம் வாங்கலியோ என குரல் எழுப்பி கோவை முழுவதும்  சுற்றி வந்த  நேரம்  மிக சந்தோஷமாந்தாயிருந்திருக்கிறது..  எல்லா தெருக்களுக்கும் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு போகமுடியாததில் எழுந்த வாடிக்கையாளரின் கேள்வியின் விடை தான்  அவருடைய முதல் கடை.  போட்டிக்கு அருகில பளீர் விளக்குகளுடன் வந்த புதிய காய்கறிகடையை பார்த்தவுடன் தான் இந்த வியாபாரத்திற்கு அதுவும் அவசியம் எனப்து புரிந்தது.  விரித்த நீயூஸ் பேப்பரில் பழங்களும்  குண்டு பல்புமாகயிருந்த நாஙகளூம் மாறினோம். கோவையின் பல ஏரியாக்களில் அறிமுகமாகியிருந்த்தால்  கிளைகள் பிறந்தன. தம்பிக்கும் வயது 18 ஆகி மில்லில் வேலை கிடைத்ததால் நான் தைரியமாக முழு நேரவியாபாரியானேன்.   கடைக்கு பெயர் வைக்கவேண்டும் என்ற எண்ணம்கூட என்னுடையதில்லை. பழம் வாங்க வரும் ஒரு பள்ளி தமிழ் ஆசிரியர் தான், இருக்கும் அதிகபழவகைகளை பார்த்து இந்த பெயர் வைத்தார். அவரே போர்டும் தயாரித்து அனுப்பினார்.
இன்றைக்கு  இவர்களுடைய அத்தனை கிளைகளிலும் சேர்த்து ஒரு நாள் வரும் வாடிக்கையாளார்கள் 40000 க்கும் மேல் இருப்பதின் காரணம் பழங்க்ளுடன் காய்கறிகளும், பழங்களில் நல்ல வெளிநாட்டு வகைகளும்விற்பது தான்.  முதலில் இதையெல்லாம் நம் மக்கள் எல்லோரும் வாங்குவார்களா என்ற பயம் இருந்தது. இன்று நகரங்களில் உடல் ஆரோக்கியத்திற்கு உடற்பயிற்சியும் பழங்களும் அவசியம் எனபதை நிறையவே உணர்ந்திருகிறார்கள்.  நல்ல பழங்களை பாதுகாக்க ஏர்கண்டிஷன் அவசியமாயிற்று அதையே கஸ்டமர்களுக்கு செய்யும்போது பெரிய இடங்கள் அவசியமாயிற்று என்பதை தனது கடைகள் பரந்த பரப்பிலிருப்பதற்கு காரணமாக சொல்லுகிறார் இவர்.  விலை அதிகமாகிவிடுமே என்ற நம் கேள்வியை  தவறு என்கிறார். பல காலமாக கோவையில் ப்ழங்களின் விலையை பேப்பரில் அறிவிப்பவர்கள் நாங்கள்.  எங்கள் போட்டியாளார்கள் இதை வரவேற்கவில்லை எனற போதிலும் நாங்கள் செய்கிறோம். காரணம் தரமான பழங்களின் மார்கெட் விலயை மக்கள் அறிவதற்காகத் தான்.  விலை அதிகம் வைத்தால் மக்கள் எங்களை ஒதுக்கிவிடுவார்கள் எனகிறார். இவர்களின் வாடிக்கையாளர்களின் வேண்டுகோளினாலும் முதல் கிளையை  திறந்தவர்கள் இப்போது பலநகரங்களில் பரவியிருக்கிறார்கள் தமிழகம் முழுவதும் பரவது லட்சியம் என்று சொல்லும் இவரது மகன் செல்வம் இப்படி காய்கனி வியாபாரத்தில் செயின் ஸ்டோரை தெனிந்தியாவில் அறிமுகபடுத்தியது தங்கள் நிருவனம் தான் என்கிறார்.  சாப்ட்வேர்கள் தயாரிக்க படித்து பயிற்சி பெற்ற இவர் தயாரித்த  ஒரு மென்பொருளால்  வியாபார நிர்வாக்த்தில் பல விஷயங்கள் எளிதாக்கப்பட்டிருக்கிறது.  இதை பல வியாபர நிறுவனங்கள் விரும்பி கேட்டதால் அதை தயாரிப்பதற்காகவே ஒரு தனி நிறுவனத்தை துவக்கியிருகிருப்பதாக சொல்லும் செந்தில் தந்தையின் காய்கனி வியாபாரம் தான் முதனமையானதும் முக்கியமானதும்  எனகிறார்.
தங்கள் கடைவாசலில் வ்ரும் வடிக்கையாளர்களுக்காக பழஜூஸ் விற்க ஆரம்பித்தில் தெரிந்த விஷயம் அதை வாடிக்கையாளார்கள்  பெரிதும் விருபுகிறார்கள். எனபது. அதை  நன்கு ஆராய்ந்தபின் அதற்காகவே தனி கடைகளை நல்ல வசதிகளுடன் பல இடங்களில் ஆரம்பித்துவிட்டார்கள்.  ஒரு நாளைக்கு 20000 கப்புகள் ஆரோக்கியமான பழ ஜுசை மக்கள் அருந்திக்கொண்டிருக்கிறார்கள். முதலில் வெளிநாட்டு பழங்களை இடைத்தரகர்கள் மூலம்  இறக்குமதி செய்துகொண்டிருந்தவர்கள் இப்போது உலக புகழ பெற்ற நிறுவனங்களிலிருந்து நேரடியாகவே இறக்குமதி செய்கிறார்கள். இது நல்ல தரத்தை குறைந்த விலையில்  தரமுடிகிறது என்று சொல்லும் இவர்கள்  அண்டை நாடுகளுக்கு நமது பழங்களை ஏற்றுமதி செய்யவும ஆரம்பித்திருக்கிறாகள்.  வாழக்கையில் நான் எதையும்  எதிர்கால எதிர்பார்ப்பு திட்டங்களுடன்  ஆரம்பிக்கவில்லை. கிடைத்த வாய்ப்பை ந்மபிக்கையுடனும் நன்பர்கள் உதவியுடனும் உழைப்பினால் செயல் படுத்தினேன்.  இபோது அடுத்த தலைமுறை அதை சிறப்பாக வளர்க்க முயற்சிக்கிராரகள் அதைத்த்விர ஒன்றும் வெற்றி ரக்சியம் இல்லை என்று அடக்கதுடன் சொல்லும் சின்னசாமி இன்றும் பல நாட்களில் விடியற்காலை நேரங்களில் விற்பனை செய்பவைகளை கொள்முதல் செய்ய மார்கெட்டுக்கு  தனது குடும்பத்து இளைய தலைமுறையினரையும் அழைத்துகொண்டு போகிறார். 

96     




11/9/11

6வேலைத்தேடி தரும் வேலை


              

நாடு முழுவதிலிருந்தும் பல லட்சங்களில் தேர்வு எழுதி அதில்முன்னணி ம்திப்பெண்கள் பெறும் சூப்பர் புதிசாலிகளில் சிறந்த்வர்களை மட்டும்  சலித்து தேர்ந்தெடுத்து பயிற்சி அளிக்கும்  கல்வி நிறுவனம் இந்தியன் இன்ஸ்ட்டியூட் ஆப் மெனேஜமெண்ட்.. இன்று உலகதரத்திலிருக்கும் இதில் படித்தவர்களை  பட்டம் பெற்றும்முன்னே போட்டிபோட்டு பெரிய நிறுவனங்கள் பணியில் அமர்த்திக்கொள்ளும். இந்த நிர்வாகயியல் பயிற்சி நிறுவங்களில் முதலிடத்திலிருப்பது  அஹமதாபாத் ஐஐஎம்.  அதில் பயின்ற மத்தியதர குடும்பத்திலிருந்து வந்த ஒரு மாணவர்.    படிக்கும்போதே பெரிய வேலை என லட்சியமில்லை நான் ஒரு புதிய தொழில் துவங்கி வெற்றிகரமாக நடத்துவேன் என்ற் சொல்லிக்கொண்டிருந்தபோது  அவருடையா பேராசியர் உள்பட புருவம் உயர்த்தியவர்கள் பலர். அவர் சஞ்ஜீவ் பிக்சந்தானி. தனது  கன்வுகளுடன் துவக்கிய லட்சிய பயணத்தில் 10 ஆண்டு பயணத்திற்கு பின்னர்  வெற்றி கண்டவர்.  இன்று இந்தியாவின் மிகப்பெரிய இணையத்தின் மூலம் வேலைதேடித்தரும் நிறுவனமாகியிருக்கும் நாக்ரி.காம் நிறுவனத்தை உருவாக்கியவர்.  இன்று இந்த நிறுவனத்தின் மதிப்பு 200கோடி இதுவரை பதிவுசெய்திருப்பவர்கள் 10 ல்ட்சத்திற்கும் மேல். பலருக்கு  வேலை கிடைக்க உதவியிருக்கிறது. Naukri.com  இணையதளம். தொடர்ந்து முதலிடத்தில் இருக்கும் வேலை வாய்ப்பு தேடல் இயந்திரம். (Job Search Engine). இத்தளத்தில் நீங்கள் வேலை தேடுவது, விண்ணப்பிப்பது மட்டுமல்லாது, பல்வேறு முன்னணி நிறுவனங்களில் இருக்கும் தேவை பற்றிய அறிவிப்புகளை, அந்த நிறுவனங்களின் Career இணைப்பிலிருந்து பெறலாம். இது மட்டுமல்லாது உங்கள் தகுதிக்கேற்ற வேலைகளை உங்கள் மின்னஞ்சல், அலைபேசியில் பெறுவதோடு SMS மூலமும் வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.
ஐஐஎம்ல் படிப்பு முடிந்த வந்தவுடன் எதாவது தொழில் ஆரம்பிப்பது பற்றி தீவரமாக சிந்தித்து கொண்டிருந்தவரை ” “தீர்மானம் செய்யும்வரை ஒரு வேலையில் சேர்ந்து கொஞ்சம் பணமும் சேர்த்துக்கொள்” “ என்று சொன்னவர் உடன் படித்த தோழியும் பின்னாளில் மனைவீயுமான சுரபி. அவருக்கு நெஸ்லே நிருவனத்தில் நல்ல சம்பளத்தில் வேலை கிடைத்திருந்தது.  ஆலோசனையை ஏற்று ஹார்லீக்ஸ் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார். நல்ல சம்பளம், வசதிகள் இருந்தாலும்  உள்ளத்தில் “சொந்தபிஸினஸ்” “ என்ற கனல் கனிந்த்து கொண்டேயிருந்தது.  திருமணமான புதிதில் ஒரு நாள் வேலையை வீசியெறிந்துவிட்டு, மனைவியிடம் நமது நிருவனம் பிறந்து  வளர்ந்து ஒருநிலையை அடையும் வரை நீ குடும்ப செலவுகளை சமாளிக்க வேண்டும் எனறு சொல்லிவிட்டு தன் தந்தையையின் வீட்டின் பின்னே இருந்த வேலையாட்களத்ங்கும் இரண்டு அறை வீட்டில்  நணபரை பார்டனராரக சேர்த்துகொண்டு நிறுவனத்தை துவக்குகிறார். பெயர் இன்போ எட்ஜ் திட்டமிட்டிருந்த பிஸினஸ்டேட்டா பிராஸிங், ஆலோசனைகள் வழங்குவது. அப்போது இந்தியாவில் அதிகமான அளவில் நிறுவனங்கள் கம்பூட்டர்களை பயன்படுத்தவில்லை, தகுதியான் ஆட்களும் இல்லை. என்வே இது நல்ல தொழிலாக வளரும் என்பது சஞ்ஜீவின் கணிப்பு,. ஆனால் எதிர்பார்த்த அளவில் வரவேற்பில்லை.. வருமானம் இல்லாமல் செலவுகள் கூடின.அதை சமாளிக்க ஒரு மானேஜ்மெண்ட்ட் கல்லூரியில் லெக்சரர் வேலைஇரண்டாவது குழந்தையை எதிர்பார்த்திருந்த சுரபியும் வேலையை விட்டிருந்தார். அதானால்  ஒரு நாளிதழலில் வேலை வாய்ப்பு பக்கஙகளை கவனிக்கும் சிலமணி நேர பகுதி நேர இரண்டாவது வேலை. சஞ்ஜீவ் வாய்ப்புகளை அணுகி போகுமிடங்களில் எல்லாம் பலர் பிசினஸ் டூடே என்ற பத்திரிகையை எல்லோரும் கடைசி பக்கத்திலிருந்து படித்து கொண்டிருப்பதை பார்த்தார்.   ஏன் என கவனித்து போது அது  நிறுவனங்களில் மேல்மட்ட வேலைவாய்பு விளம்பரஙகள் தெரிந்த்தது. இதை  மற்ற சதாரண வேலைவாய்ப்களுடன் நாமே தொகுத்து தரலாம் என்ற எண்ணத்தில் தினசரி பேப்பர்களில்  வந்திருக்கும் வாய்ப்பை தொகுத்து ஒரு டேட்டா பேஸை உருவாக்க தனது அலுவலக  ஊழியர்களை பணித்தார். (அவர்களுக்கு வேறு வேலையுமில்லை எனபதும் ஒரு விஷயம்.).. இவ்வளவு கஷ்டங்களுக்கிடையேயும் தனது நிறுவனத்தை நடத்தி வந்ததிருக்கும் இவரது அசைக்கமுடியாத தன்னம்பிக்கை நம்மை ஆச்சரியபடவைக்கிறது.  ஒரு நாள் மாலையில் பிரமாத விள்மபரபடுத்தபட்ட பொருட்காட்சியில் தனக்கு வாய்ப்பாக எதேனும் ஒரு நிறுவந்த்தின் தொடர்பு கிடைக்குமா என போனவரின் கண்ணில் பட்டது  WWW  என்ற பெயரில் ஒரு ஸ்டால். என்னவென்று விசாரித்த்தில் அது தான் இண்டர்நெட் என்றும் அதில் மெயில்அனுப்பிக்கொள்ளலாம் என்றும் தனியாக ஒரு தளம் வைத்துகொண்டு தங்கள் தொழில் பற்றி சொல்லாம் எனறும் தெரிந்து கொண்டார். உடனே இதன்மூலம் நாம் ஏன் பிஸினஸ் செய்யகூடாது எனற எண்ணம் எழுந்தது. கவனியங்கள். இன்று இண்டர்நெட் மூலம் பணம் கொட்டிக்கொண்டிருக்கும் பிஸினசை நடத்திகொண்டிருக்கும் சஞ்ஜீவிக்கு அன்று இண்டர்நெட் என்றால் என்னவென்ன்று கூட தெரிந்திருக்கவில்லை.   “எனக்கு இண்டர்நெட் எனபது தெரிந்திரிக்கவில்லை. ஆனால் சில வினாடிகளில் அதில் இருக்கும் வியாபார வாய்ப்பை புரிந்துகொண்டேன்” “ என்கிறார் சஞ்ஜீவ்.  தொடர்பு கொண்டு விபரஙகள் அறிந்த போது இணையத்தில் ஒரு தளமாக இணைய  சர்வர் இருக்கும் நிறுவந்த்தின் உதவி அவசியம் அது அமெரிக்காவில் இருக்கிறது, கட்டணம்  மாதம் 25 டாலர் செலுத்த வேண்டும் எனபதை அறிந்தார். அமெரிகாவிலிருக்கும் சகோதரை  தொடர்பு கொண்டு  இண்டர்நெட் எனறால் தெரியுமா? உதவமுடியுமா? எனகேட்டார். அவர் சிரித்து கொண்டே இங்கு எல்லோரும் பயன் படுத்துவதாக சொல்லி உதவ உறுதியளித்தார். அவர் உதவும் பணத்திற்கு தந்து நிறுவனத்தில் 5% பங்குகள் தருவதாக சொன்ன தம்பியின் நம்பிக்கையை பராட்டியவருக்கு அப்போது தெரியாது அந்த பங்குகள் ஒரே  இரவில் அவரை கோடிஸ்வரனக்கபோகிறது எனபது.
தனது தொழில் இதுதான் என முடிவுசெய்துவிட்ட சஞ்ஜீவ் முழு முச்சாக அதில் இறங்கினார். இரண்டு முழு இரவுபகல்கள் உழைத்து ஒரு திட்ட அறிக்கயை உருவாக்கினார். எதை எப்படி ஏன் செய்ய வேண்டும் என்ற கச்சிதமான் திட்டம். வெப் சைட்டை வடிவமைக்கவும் நிர்வகிக்கவும் டெக்கினிகல் விஷயஙகள் அறிந்தவர்கள்  தேவை எனபதால் ஐஐஎம்லில் கூட படித்த  நணபர் லாலை  அழைத்தார்.  சம்பளம் கிடையாது  நிறுவனத்தின் பங்குகளில் 9 % எனபது ஒப்பந்தம். கம்ப்யூட்டர் ப்ரோகிராமில் கில்லாடியான அவர் எனக்கு இண்டர்நெட் பற்றி எதுவும்  தெரியாது எனறவரிடம் உனனால் முடியும் என்று ஊக்கபடுத்தியதில் ஒரே வாரத்தில் நான் தயார் என்றார். சேமித்து வைத்த வேலை வாய்ப்புகள் டேட்டாகள் உதவின. 1000 வேலைவாய்ப்பு விபரங்களுடன் நாக்ரி. காம் 1997ல் பிறந்தது. சொந்தத்தில் ஒரு கம்ப்யூட்டர்கூட இல்லாதால் நணபர் லாலின் கம்ப்யூட்டர் மூலம் இயங்கியது. முதலாண்டு 18லட்சம்இரண்டாம் ஆண்டு 36 லட்சம் என பிஸினஸ் வளர்ந்தது. கூடவே புதியபோட்டியாளார்களும் களத்தில் இறங்க தனது நிறுவனம் அவர்களைவிட பிரமாண்டமாக்யிருக்க வேண்டியதை உணர்ந்த சஞ்ஜீவிவ் செய்தத  துணிவான முடிவு. 2005ல் நிறுவன முதலுக்கு பங்குசந்தையை நாடியதுதான். நம்பமுடியாத ஆச்சரியமாக பங்குகள் வேண்டி விண்ணப்பத்தவர்கள் லட்சகணக்கில். தேவைக்குமேல் 55 மடங்கு. 320ருபாய் ஷேர்  600ருபாய்களுக்கு விற்றது. சஞ்ஜீவ் குடும்பத்தினர் தஙக்ள் பங்ககளில் சிலவற்றை விற்று கோடிஸ்ரர்கள் ஆனார்கள். அந்த ஆண்டு நாக்கிரி.காமின் வருமானம்  84 கோடி லாஉஅப் 13 கோடிகள். அன்றிலிருந்து இந்த நிறுவனம்  வேலை தேடுவதை பல புதிய பரிமாணங்களோடு அறிமுகபடுத்தி வளர்ந்துகொண்டிருக்கிறது.   “சொந்த தொழில் செய்யவிரும்புகிறீகளா? திட்டத்தில் அசாத்திய நம்பிக்கை வைத்து உழையுங்கள். வெற்றி நிச்சியம் வரும் த்மாதமாகத்தான் வரும்  அதுவரை காத்திருக்க கற்றுகொள்ளுங்கள் “ எனகிறார் சஞ்ஜீவ்






4/9/11

அழகான அழைப்பிதழ்கள் அழைக்கின்றன


லைப் பூஸ்டர் 5 4               

மேனகா கார்ட்ஸ் சங்கரலிங்கம்



சொர்கத்தில் நிச்சியக்கப்பட்டாலும்  இணையத்தில் நிச்சியிக்கப்பட்டாலும்,  அழைப்பிதழ்கள் அச்சிடபட்டு வழங்கபட்ட பின்னர்தான் தான் திருமணங்கள் நடைபெறுகின்றன. திருமண அழைப்பிதழ் எனபது அச்சகங்களின்  ஒரு  அச்சு பணி என்ற நிலையை மாற்றி அவைகள் அழகான வடிவத்தில் அமைக்கபட்டு  முதன் முதலில் தமிழகத்தில் திருமண அழைப்புகளுக்கே ஒரு  தனிகெளரவம்  சேர்த்தவர்கள்   மேனகா கார்ட்ஸ்.  இன்று இந்த  துறையில் முதலிடம் பெற்று நாடெங்கும் க்ஷ்க்ஷ்க்ஷ் கிளகளுடனும் க்ஷ்க்ஷ்க்ஷ் போன்ற வெளிநாடுகளிலும் கிளைகளுடன் இயங்கும் இந்த நிறுவனத்தின்  துவக்கம் ஆச்சரியமானது.  இதை துவக்கியது அச்சு தொழிலை செய்துகொண்டிருந்த ஒரு குடும்பத்திலிருந்து அல்லது பெரிய வியாபரா பிண்னணியுள்ள  குடும்பத்திலிருந்து வந்தவராலால் இல்லை.  மிகமிக  எளிய குடுமபத்தில் பிறந்து  படிப்பின் அருமையை உணர்ந்த ஆனால் படிக்க முடியாத  வாழ்க்கைச் சூழ்நிலைகளின்யின் மேடு பள்ளங்களை கடந்துவந்தவர்.. இன்று வெற்றியின் வாயிலில் இருக்கும் இவர் வந்த பாதை புதியபாதை மட்டுமில்லை கடினமானதும் கூட.
 தென்  தமிழகத்திலிருக்கும் வானத்தை நம்பியிருக்கும் பல  வறண்ட கிராமங்களில் ஒன்று சாத்தான்குளம். திருநெல்வேலியிலிருந்து 50 கீமி  தூரத்திலிருக்கும் இந்த கிராமத்தில் விவசாயிகளும் பனை மரங்களும் தான் அதிகம்.   ஆனால் விவசாய தொழிலுக்கு  வாய்ப்பில்லாததால் சாரயாங்காய்ச்சுவதுதான் பலருக்கு வேலை.  ஒரு பகுதி கூலியாக கிடைத்தை குடித்துமகிழ்ந்தவர்கள். அந்த கிராமத்தில் உழைப்பின், படிப்பின் அவசியத்தையை உணர்ந்த்டிருந்திருந்த ஒரு தந்தை, தன் மகனை பக்கத்துஊர் பள்ளிக்கூடத்திற்கு  கைபிடித்து நடத்தி கூட்டிபோய் படிக்கவைத்தவர். அப்படி ஆரமப கல்வியைப் படித்த பையன் சங்கரலிங்கம்.  நாங்குநேரி அரசின் விடுதியில் தங்கி உயர்நிலைபள்ளிப் படிப்பை   தொடர்ந்தபோது அடிக்கடி பார்த்தது அருகிலுள்ள டிவிஎஸ் அதிகாரிகள் காரில் வருவதைத்தான்.  இந்த நிலையை அடைக்க தான் ”நன்றாக படிக்க வேண்டியதின்  அவசியத்தை யாரும் சொல்லாமலே உணர்ந்தான் அந்த மாணவன்.  தந்தையின் விருப்பபடி அக்ரிகல்சரல் ஆபிஸாரகும் ஆவலில் கோவைகல்லூரிக்கு மனுச்செய்து நேர்முகத்திற்கு  அழைப்பு வந்தவுடன்  எதோ வெளிநாட்டுக்கு போகும் ஆவலுடன்  கோவை சென்ற சஙகரலிஙக்த்திற்கு ஏமாற்றம. அட்மிட்ஷன் கிடைக்கவில்லை. மனமொடிந்து ஊருக்கு திரும்பியவர் அடுத்த் ஆண்டு  மீண்டும் முயற்சிக்கும் வரை  பக்கத்து ஊரான திசையன்விளை  வரை  சைக்கிளில் போய்  டைப்ரைட்டிங் படிக்க ஆரம்பித்தவர்  ஊர்கார்களுக்கு உதவ விறகு வாங்கி  தந்ததையையே ஒரு  தொழிலாக ஆரம்பிதார்.. அடிக்கடி சைக்கிள் பஞ்சரானாதால் பஞ்சர் ஒட்ட கற்று  கொண்டதிருந்ததினால், சாத்தன் குளத்தில் முதல்முதலாக ஒரு பஞ்ஞ்ர் ஒட்டும்கடை போர்டுடன் பிறந்தது. கடை வைத்திருந்தால் கூட அக்ரி படிப்பின்மீது  ஆசை போகவில்லை. அடுத்த ஆண்டு மனுச்செய்தபோதும்  அட்மிஷன் கிடைக்கவில்லை. மனம் வெறுத்துபோன சங்கரலிங்கத்தை கடையை கவனத்துடன் கவனித்து பெரிது படுத்தும் யோசனையைச்சொல்லி ஆறுதல் படுத்தினார்.தந்தை.   ஆனாலும் அந்த இளைஞனின் மனதில்  சாதிக்க வேண்டும் என்று கனிந்து கொண்டிருந்த கனல் மெல்ல அனாலாகி,  உயரஙகளைத்தொட வேண்டிய நமக்கு வேண்டியது இந்த கிராமத்தில் இல்லை  என்ற முடிவோடு கையில் 300 ரூபாய்களுடன் கோவைக்கு பயணமானான்.
எந்த அறிமுகமும் இல்லாத ஒரு இளைஞனுக்கு தெரியாத ஊரில் வேலை கிடைப்பதைவிட கஷ்டமான காரியம் வேறுஏதுவுமில்லை என்பதை உணர்ந்த சங்கலிங்கம் ஏற்றது ஒரு ஹோட்டலில் சர்வர் வேலை. சாப்பாடும், தங்குமிடமும் நிச்சியமாகயிருந்ததாலும் தொடர்ந்து வேலை தேடுவதை நிறுத்த வில்லை. கோவையிலிருந்து அப்போது  வெளியாகிகொண்டிருந்த கலைகதிர் பத்திரிகையின் துணை ஆசிரியர் முருகானந்தம் அவருடைய பைண்டிங் தொழிலை நிர்வகிக்கும் வேலையை தந்தார். இந்த மனிதரை சந்தித்தது  தன் வாழ்வில்  அதிர்ஷ்டம் என்கிறார். சஙகரலிஙகம். இவரது படிக்கும் ஆர்வத்தை பாராட்டி மாலைக்கல்லூரியில் பி.காம் படிக்க வைத்திருக்கிறார். அச்சக தொழிலில் நாளெல்லாம் இருந்ததினால் அதை முறையாக சிறப்பாக அறிய பிரிண்டிங் டெக்னாலாஜி படிக்க விரும்பிய போது  அதற்கும் உதவி செய்து துணை நின்றிருக்கிரார் முருகானாந்தம் எனற  அந்த நல்ல மனிதர். தொடர்ந்து அச்சக கல்லூரியின் முன்னாள் முதல்வர் நடத்திய அச்சகத்திலேயே பணிக்கு சேர்ந்து  திறமையை வளர்த்து கொண்டிருந்தவரின் வாழ்க்கையில் ஒரு புதிய திருப்பம். டைரக்டர் மகேந்திரனின உதிரிபூக்கள் படத்தில் ஒரு சின்ன வேடதில் நடிக்க கிடைத்த வாய்ப்பு  “கனவுத் தொழிற்சாலயில்”’“ ஆர்வத்தை தூண்டியது. சில வாய்ப்புகள் பல ஏமாற்றங்கள் என  நான்காண்டு போராட்டதிற்கு பின்னர் அண்டன் கனவு கலைந்தபின்  இவர் புரிந்துகொண்டது.” “ முயற்சித்தும் ஒரு விஷயம் முடியவிலையென்றால், முடியும் விஷயத்தை நாம் முயற்சிக்க வில்லை “ என்பதுதான்.  இந்த நிலையில் ஊரில் குடும்பத்தினர்  இவருக்கு திருமணம் பேசி முடிவு செய்திருக்கிறார்கள். அச்சுக்கலையை நன்கு அறிந்த இவர் தன் திருமண பத்திரிகையை  தானே அழகாக வடிவமைத்து  அச்சகத்தில் கொடுத்த போது  எல்லா அச்சகங்களும் சொன்னபதில் “ இதை உடனடியாகச் செய்ய முடியாது “  மிக சதாரண முறையிலேயே தன் திருமண அழைப்பை அச்சிட நேர்ந்த இவருக்கு தோன்றிய யோசனை  “ஏன் இதற்காகவே ஒரு அச்சகத்தை ஏற்படுத்தகூடாது? “ என்பது தான்.  எண்ணம் எழுச்சி பெற்று 1900 ஆம் ஆண்டு செயல்வடிவம் பெற்றது. தரமாக தயாரிக்க பட்ட ரெடிமேட் கார்டுகளில் 24 மணி நேரத்தில் அழைப்பிதழ அச்சிட்டு தரப்பட்டது அந்த கால கட்டதில் ஆச்சரியமான விஷயம். இந்து மத பிரிவுகள் தவிர மற்ற மதத்தினருக்கும் ஏற்ப வடிவமைக்கப்ட்ட  கார்டுகளும், தயாரித்து வைக்கபட்டிருந்த பத்திரிகைகளின் வாசகஙகளும் பெரும் வரவேற்பை பெற்றது.  இன்று 1000க்கு மேற்பட்ட டிசைன்களடன் எந்த மதப்பிரிவினரின் திருமணத்திற்கும் கார்டுகளுடன் காத்திருக்கும் இவர்கள் தொடர்ந்து புதிய டிசைன்களையும் உருவாக்கிகொண்டிருக்கின்றனர். முதலில் திருமணத்திற்குமட்டும்  என டிசைன் கார்டுகளை துவங்கிய இவர்கள் இப்போது பிறந்த குழந்தையை தொட்டிலிடுவதிலிருந்து,  சஷ்டியப்தபூர்த்தி, சதாபிஷகம் வரை  எல்லா சுப நிகழ்வுகளுக்கும் பல டிசைன்களில் கார்டுகளை தயாரிக்கிறார்கள்.
 ஒரு கார்டு  5 ருபாயிலிருந்து  5000 ரூபாய்வரை என விலைகளில்  பல வகைகள் வைத்திருக்கும் இவர்களின் கார்டுகளை ஆன்லைனில் பார்த்து  தேர்ந்தெடுக்கும் வசதியையும் அறிமுகபடுத்தியிருகிறார்கள்.   தொழில் நுட்ப வளர்ச்சியுடன் நாம் இணைந்து வளர வேண்டியது  காலத்தின் கட்டாயம் என்று சொல்லும் நிறுவனர்  “ இண்ட்டர்னெட்ட்டைப்பயன்படுத்தி நேரிலே வராமல் தேந்தெடுத்த கார்டில் அழைப்பிதழை தயாரித்து பெற்றுக்கொள்பவர்களும் உண்டு. எங்களிடம் வந்து இருக்கும் டிசைன்களைய்ல்லாம் பார்த்துவிட்டு  மாறுதல்களை சொல்லி புதிதாக உருவாக்குசொல்பவர்ககளும் உண்டு”. எதுவாகயிருந்தாலும் சிறப்பாக செய்யவேண்டும். ஏனெனில் அடுத்த கஸ்டமர்களை அறிமுகபடுத்தபோகிறவ்ர்கள் அவர்கள் தான் “.  என்கிறார். சென்னையில். பெரிய நகரங்களில் விற்பனை செய்தாலும்  கார்டுகள் தயாரிக்கும் தொழிற்சலையை தன்  சொந்த கிராமமான் சாத்தன்குளத்தில்  நிறுவி  கிராமத்து இளைஞகள் பலருக்கு வேலை வாய்ப்பை தந்திருக்கிறார்.   தொழில் துவஙக விரும்பும் இளைஞர்களுக்கு இவர் சொல்லவிரும்புவது  “பிஸிஸில் நேர்மையாக இருக்க முடியாது-ஏமாற்றினால்தான் நிறைய சம்பாதிக முடியம் “ என்று சொல்லுவதை நம்பாதீர்கள். ஏற்காதீர்கள். முடியும் என்பதற்கு என்  வாழ்க்கையே  உதாரணம் “