7/2/13

வானத்தை தொட்ட வண்ணத்து பூச்சி

  2

கர்நாடக மாநிலத்தின்  ஒருசின்னகிராமத்தில் எளியகுடும்பத்தில் பிறந்த சிறுவன்கிராமியச்சூழலில் வளர்ந்துராணுவத்தில்அதிகாரியாகிறான்.பின்னர் தனதுகிராமத்திற்கே திரும்பி விவசாயம்செய்யத்துவங்கி மிகுந்தபோராட்டங்களுக்கு கிடையே படிப்படியாக உயர்ந்து,ஹெலிகாப்டர்களைவாடகைக்கு விடும் நிறுவனத்தைத் துவக்கும் அந்த இளைஞன் சிலஆண்டுகளிலேயே உள்நாட்டுவிமான சர்வீஸையும் துவக்கி, மிக வெற்றிகரமாகநடத்தி  இந்திய உள்நாட்டு விமானத்துறையின் சரித்திரத்தில் நம்ப முடியாதசாதனைகள படைக்கிறார்.அவர்தான்,சாதாரண இந்தியனுக்கு  குறைந்த கட்டணத்தில் விமானப்பயணவசதியைவழங்கி, மிகக்குறுகிய காலத்தில் இந்தியாவின் பலமுனைகளைத்தொட்ட  விமான நிறுவனமாக ஏர்டெகன் சாம்ராஜ்யத்தைநிறுவிய கேப்டன் கோபிநாத். இப்போது   எர்டெகன் கிங்பிஷ்ஷர் ஏர்லையன்ஸுடன் இணைக்கபட்டு அது இன்று மூடப்படும் நிலையிலிருக்கிறது. ஆனாலும் போரட்டங்களையும், வெற்றிகளையும் தொடர்ந்து  திருப்புமுனைகளாக்கிய கோபிநாத் இப்போது புதிய விமான சர்விஸை துவக்குகிறார்.

1971 பங்களாதேஷ் போரிலும்தொடர்ந்து காஷ்மீர் எல்லையிலும் 8 ஆண்டுகள் பணியாற்றினேன்.திடுமெனஒருநாள் பெரிதாகபுதிதாக எதாவது செய்யவேண்டும் தோன்றியதால் ராணுவவேலையைராஜினாமா செய்துவிட்டு, கிராஜிவிட்டியாக தந்த 6500 ரூபாய்களுடன்  புதிதாகவிவசாயத்தில் எதாவது வெற்றிகரமாக  செய்யவிரும்பிய இவரது போரட்டம் அங்கே துவங்கியிருக்கிறது. மனைவியின் சில நகைகளையும் அடகு வைத்துவிவசாயம் செய்திருக்கிறார். எதிர்பார்த்த அளவில் வெற்றியில்லை.ஆனால். சுற்றுபுறசூழல் பாதிக்காத வண்ணம் பட்டுப்பூச்சிவளர்ப்பதில் சில முறைகளை அறிமுகப்படுத்தியதில்.மிகப்பெரிய வெற்றியை தந்த அந்த திட்டம் பெரிய அளவில் பாராட்டைப்பெற்றது. 1996ல் சர்வதேசஅளவில் இம்மாதிரி முயற்சிகளை ஊக்குவிக்கும் ரோலக்ஸ்நிறுவனம்(கடிகாரம் தயாரிக்கும் நிறுவனம்)பரிசுஅளித்துகெளரவித்தது.தொடர்ந்த  மாநில அரசின் பரிசு, பல நிறுவனங்களின்அங்கீகாரம் என இவரது பயணம் தொடர்ந்தது. வெற்றிகள் தந்த நம்பிக்கையில்தொடர்ந்த வேறு பல  வணிக முயற்சிகளும் வெற்றிபெற தொடங்கின.
ஆனாலும்அதிகம் போட்டியில்லாத,லாபம்தரக்கூடிய ஒரு புதிய பிஸினஸ்துவக்குவதுபற்றி சிந்தித்கொண்டேயிருந்தஇவர் ராணுவத்திலிருந்தநண்பர்களுடன் இணைந்து ஒரு          ஹெலிகாப்டர் நிறுவனத்தை துவக்கினார்.தனியார்விமான   சார்ட்டர்  முறையை முதலில் இந்தியாவில் துவக்கியது இந்த நிறுவனம்தான்.பல நிறுவனங்களும், வெளிநாட்டு பயணிகளும் பயன் படுத்தும் இந்தநிறுவனத்தில்  இன்றைக்கு 11 ஹெலிகாப்டரும், இரண்டு குட்டி விமானங்களும்இருக்கிறது. இந்த நிறுவனத்தைத்துதுவக்கியபோது,சொந்த மாட்டுவண்டி கூடஇல்லாத இந்த குடும்பம் விமானம் வாங்க முடியுமா? `ன்றுகிண்டலடித்தவர்களும் என் கிராமத்தினரும் ராக்பெல்லர்குடும்பத்தினர் எங்கள் ஹெலிகாப்டரில் பயணம் செய்தைப் பார்த்து வியந்தனர். ஹெலிகாப்டர்நிறுவனம் தந்த வெற்றி,  தனியார் நிறுவனங்களுக்கும் பயணிகள்விமானத்துறையில் அனுமதி என்ற அரசின் புதிய கொள்கைஅறிவிப்பு போன்றவையினால் எழுந்த எண்ணம் தான் பயணிகளுக்கானவிமான சேவையை துவங்கவைத்தது. டெக்கான் என்பது  அறிமுகமானபெயராகயிருந்ததால் அதிலியே துவக்கினார்.’”.செலவுகளை குறைத்து மிககுறைவான கட்டணத்தில் அதிக பயணிகளை இந்தியாவின் சிறியஎர்போர்ட்டுகளுக்கு எற்றிசெல்லவேண்டும் என்பதுதான் குறிக்கோள். பெறும்போரட்டங்களைச்சந்திக்கவேண்டியிருந்தது. போர்முனையில் எதிரிகளுடன்போராடியதைவிட டெல்லியில்  அதிகாரிகளுடன் போராடுவது கஷ்டமாகயிருந்தது.” என்கிறார் கோபிநாத். ஓவ்வொரு இந்தியனுக்கும்   வாழ்க்கையில் ஒருமுறையாவது விமானத்தில் பறக்கும் வாய்ப்பயை எற்படுத்தி வேண்டும்என்பது இவரது கனவாகியிருநது.  மிக குறைவான கட்டணங்களில்-ஒரு ருபாய்க்கு கூடவிமான டிக்கட்-   என துவங்கிய  இவரது  விமான சேவை மிகப்பெரியவரவேற்பைப் பெற்றது. 4 விமானங்களுடன் துவக்கிய  டெக்கான் நாலேஆண்டுகளில்,67 நகரங்களை இணைக்கும் இந்தியாவின் மிகப்பெரிய  முதல்நிறுவனமாக,வளர்ந்து இந்தியன் எர்லைன்ஸை மூன்றாவதிடத்திற்குதள்ளியது. சாமனிய இந்தியனாக இந்தியா முழுவதும் அறியப்பட்டிருந்த RKலஷ்மணனின் கார்ட்டுன் படம்  விளம்பரசின்னமாகவிமானத்திலேயே வரையபட்டது. டிராவல்ஏஜண்ட்கள் இல்லாமல்ஆன்லயனிலியே டிக்கெட் பதிவு, அச்சிட்ட டிக்கட்கள இல்லாமல் செய்ததது,விமானத்தில்  உணவு வழங்குதை நிறுத்தியது, போன்ற பல செலவுகளைகுறைத்து, இந்திய உள்நாட்டு விமான சேவையில்  ஒரு புரட்சி எனவர்ணிக்கபட்ட   நிலையைத் தோற்றிவித்த பெருமை  இவரையேசாரும்.குறைந்த காலத்தில்  1.5 கோடி பயணிகளைகையாண்ட எர்டெக்கானின்வெற்றியை பார்த்து,குறைந்த கட்டண விமான சேவை வழங்கும்  புதியகம்பெனினிகள் மள,மளவென்று தோன்ற ஆரம்பித்தன. ஆனால் இந்த வெற்றிகள் சந்தோஷத்தோடு பல கவலைகளையும் சேர்த்தது
 விமானத்துறையில் பெருகிவரும் போட்டியினால் புதியகம்பெனிகள் டெக்கன்  விமானிகளை, நிர்வாகிகளை அதிக சம்பளம் கொடுத்து இழுத்தார்கள்.  டெக்கனில் பயிற்சி பெற்றவர்களின் திறமைபோட்டியாளர்களுக்கு பயன் பட்டது  புதிய வரிக்கொள்கைகளினால் டிக்கட்கட்டணத்தை  அதிகரிக்க வேண்டியதாயிற்று.  ஏர்டெக்கன் 500 பைலட்டுகளுடனும்,500எஞ்சினியர்களுடமும் 8 கேந்திரங்களிலிருந்து இந்தியாமுழுவதும் பறந்துகொண்டிருந்தாலும் மிககுறைந்த பட்ச லாபமான ஒரு பயணிக்கு 600 ருபாய்கூட தரவில்லை..  செலவினங்களுக்கு தேவையான அளவிற்கு வருமானம்  உயரவில்லை.அதிக மூலதனம் உடனடி அவசியம் என்ற நிலை உருவாயிற்று, இது கோபிநாத் சந்தித்த மிகபெரிய சவால் . இந்த நிலையில் மிக வேகமாக வளரும் அவரது நிருவனத்தை விலைக்கு வாஙக சிலர் தயாரகயிருந்தார்களே தவிர அதிக முதலீடு மட்டும் செய்து உதவ முன்வரவில்லை.
அந்த நேரத்தில் ரிலையன்ஸ் நிருவனம் முன்வந்தது.  “இந்தியாவே உன்னிப்பாக கவனித்தகொண்டிருந்த அம்பானி குடும்ப பிரச்சனை முடிவுக்குவந்து ரிலயன்ஸ் இரண்டாகியிருந்த டெக்கன் தொடர்ந்து  லாபம் அளிக்கும் கம்பெனியாக இருக்குமா என்பதை அவர்களின் நிபுணர் குழு உறுதிசெய்வதைப்பொருத்துதான் முதலிட்டின் முடிவு இருக்கும் என்பதை சொன்னார்கள். ஏர்டெக்கன் நஷட்டங்களை தொடர்ந்து கொண்டிருந்த அந்த நாட்களில் கோபிநாத் மிகபொருமயுடன் காத்திருந்தார் . திரு அமிதாப் ஜூன்ஜின்வாலாவின் தலமையில் 3 மாதங்கள்இயங்கிய ஒரு குழுகம்பெனியின் பலவிஷயங்கள் அலசி ஆராய்ந்து. மதிப்பீடுகள் செய்யதது.இறுதியில் புதிய கம்பெனியில் ரிலயன்ஸின் பங்கு 51% மாதிரி வடிவமைக்கபட்டது ஒரு ஒப்பந்தம். இந்த திருப்பத்தினால்  கோபிநாத்தை விட ரிலையன்ஸின் பங்கு அதிகமாகும். கம்பெனி அவர்கள் வசமாகும் என்ற நிலை உருவாயிற்று.   ”ஆனால் குறைந்த பட்ச லாபத்தையும் ஈட்டாமல், இந்த நல்ல சந்தர்ப்பத்தையும் நழுவவிட்டுவிட்டால் அது மிகபெரிய விபத்தாகிவிடும்.தன்னை நம்பியிருக்கும்எண்ணற்றபங்குதாரர்கள், தொழிலாளிகள்,விமானப்பயணிகள் எல்லோரும் மிக மோசமான முடிவைச்சந்திக்க நேரும்.எனது சொந்த கவுரவத்திற்காக அவர்கள் பலியாகிவிடக்கூடாது  கம்பெனி அழிவிலிருந்து காப்பற்றபடுவிடும்
என்பதினால்  அதை எற்றேன் என்கிறார் கோபிநாத. ஆனால் பிரச்னை வேறு வடிவில் எழுந்தது. ரிலியன்ஸுடன் 15 நாளில் முடிவான முழு ஒப்பந்தம் கையெழுத்திடுவது என முடிவு செய்யபட்டிருந்தது. அந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியிருந்ததே தவிர அது சட்டபூர்வமாக்படவில்லை. இது தெரிந்த சில முதலீட்டாளார்கள் கோபிநாத்துடன் தொடர்ந்து டெக்கனில் முதலீடு செய்வதுகுறித்து பேசிக்கொண்டேயிருந்தார்கள். குறிப்பிட்ட நாளில் ரிலயன்ஸ் போட்ட குண்டு “நாங்கள் மற்றொரு விமான நிருவனத்தை வாங்குவது பற்றி பேசிக்கொண்டிருக்கிறாம் அதோடு சேர்த்து உங்களுடையதை வாங்குகிறோம்.” இது கோபிநாத் எதிர்பார்க்காத அதிர்ச்சியான திருப்பம் திருமணம் நிச்யக்கபட்ட பெண் ஏமாற்றமடைந்ததைப்போல நான் அதிர்ந்தேன் என்கிறார் கோபிநாத்.
ரிலயன்ஸ் வார்த்தை தவறியதை அடுத்து கிங்பிஷ்ஷ்ர் மூதலீடுசெய்து நடத்த முன் வந்தது.  அவர்கள்  டெக்கனை கிங்பிஷ்ஷரின் கம்பெனியின் ஒருஅங்கமாக நடத்துவதாக சொல்லி வாங்கி குறுகியகாலத்திலியே இணைப்பை அறிவித்து டெக்கான பெயரை சின்னங்களை நீக்கி விட்டார்கள். மலிவு விலை டிக்கட்களையும் நிறுத்திவிட்டார்கள். “ நிஜமாகி வந்த என் கனவுகள் உருமாறி கலைந்துபோனதில் எனக்கு மிகுந்த வருத்தம் தான். ஆனால் எனது சொந்த கெளரவப்பிரச்சனையாக கருதி போராடிக்கொண்டேயிருந்தால் 6 மாதத்தில் கம்பெனி திவாலாகி 4000 பேர் வேலையிழந்திருப்பார்கள்.  பொதுத்துறைவங்கிகள் LIC போன்ற நிறுவனங்களிடமிருந்து பெற்ற பலநூறு கோடி கடன்கள்வராத கடன்களாகி பொதுமக்களின் பணம் நஷ்டமாகியிருக்கும். இன்றுஅவையெல்லாம் காப்பற்றபட்டு டெக்கானை நம்பி மூதலீடு செய்தஷேர்ஹோல்டர்களுக்கும் நல்ல  விலைகிடைத்ததில் எனக்கு மகிழ்ச்சியே.” என்று சொல்லும் கோபிநாத் தொடர்ந்து புதிய கனவுகளோடு  இந்தியாவின் எல்லாப்பகுதிகளையும்ஒருமையப்புள்ளியில் இணைக்கும் சரக்குகள்விமானகேந்திரத்தை8விமானங்களுடனும் 100லாரிகளுடனும் . மிகப்பெரிய  சரக்குகளை கையாளும் நிறுவனமாக்கும் திட்டத்துடன்  360டிகிரி எனற சரக்கு விமான  சர்வீசை துவக்கினார். இந்தியாவில் எந்த பகுதியிலிருந்தும் சரக்குகளை விமானத்தின் மூலம் லாரிகளின் உதவிய விரைவாக செய்வது குறிக்கோள். தொடர்ந்த எரிபொருள் விலையேற்றம் மாநிலங்களக்கிடையே உள்ள வரிகட்டணங்கள் அரசின் கொள்கைகள் முட்டுகட்டையாக, இந்த முயற்சி தோல்லிவியை கண்டது. தோல்விகளை ஏற்காத கோபிநாத் இப்போது மீண்டும் விமான சர்வீஸை துவக்குகிறார்.   கிங் பிஷ்ஷரின் இணைப்பில் இவர் தனியாக ஒரு விமான சர்விஸ் துவக்க கூடாது எனபது ஒரு நிபந்தனை. அந்த கெடு இந்த ஆண்டு ஜனவரியில் முடிந்துவிட்டதால் சின்ன நகரங்களை இணைக்கும் சின்ன விமானங்களின் சர்விஸை துவக்கிறார்.இவரையும் இவரது திறமைகளையும் நம்பும் ஒரு வெளிநாட்டு நிறுவனம் முதலீடு செய்கிறது மக்களின் முதலீட்டையும் நாடுவேன் என்கிறார் நம்பிக்கையோடு கோபிநாத். பருவங்கள் மாறினாலும் வண்ணத்து பூச்சிகள் பறப்பதை நிறுத்துவதில்லை.

31/1/13

சோதனைகளை சாதனைகளாக்கிய தொழில் சக்ரவர்த்தி


சவாலே சமாளி  1


“நீ  உன் ஐபிஎம் வேலையை ராஜினாமா செய்துவிட்டு உடனே இங்கே வா. நமது கம்பெனிகளில் நீ செய்ய வேண்டியது நிறைய இருக்கிறது” என்று மாமாவிடமிருந்து வந்த அந்த தந்தியை பார்த்து திகைத்து நின்றான் அந்த இளைஞன். படிப்பின், உழைப்பின் அருமை தெரிந்த ஒரு பணக்கார இந்திய குடும்பத்திலிருந்து வந்து அமெரிக்காவில்  கட்டிடகலை படித்த உடனேயே ஒரு பெரிய நிறுவனத்தில் நல்ல  வேலையும் கிடைத்திருந்த அந்த இளைஞனின் ஆச்சரியத்திற்கு காரணம் அவனை அமெரிக்காவிற்கு படிக்க அனுப்பியதே அவனுடைய மாமா தான். திரும்பிபோக தயங்கியதற்கு மற்றொரு காரணம் கல்லூரி இறுதியாண்டில் அரும்பிய காதல் அபோதுதான் மலர்ந்திருந்தது. காதலி  இந்தியா வரத்தயாராகயில்லை. குடும்பத்தொழிலா? காதலா? என்ற நிலையில்  அந்த இளைஞன் எடுத்த முடிவு காதலை துறந்து மாமாவின் விருப்படி நாடு திரும்புவது. காரணம் சிறுவயதில் தாயும் தந்தையும் பிரிந்ததால் பாட்டியால் வளர்க்க பட்ட அவனுக்கு மாமா ஜே ஆர் டி டாட்டா தான் எல்லாம். அவர் வார்த்தைகள் அவனுக்கு வேதம். அந்த இளைஞன் தான் இன்று 98 கம்பெனிகளுடனும் 3,95,000 ஊழியர்களுடனும் உலகெங்கும் பரந்துவிரிந்து கொண்டிருக்கும் டாட்டா சாம்ராஜ்யத்தின் தலைவர் ரத்தன்டாட்டா. கடந்த 10 ஆண்டில் டாட்டா நிறுவனத்தின் வளர்ச்சியை 12 மடங்கு உயர்த்தி பல ஆயிரம் கோடி கம்பெனியாக்கியிருப்பது (கடந்த ஆண்டு வருமானம் 67 பில்லியன் டாலர்கள்-ஒருபிக்கியன் 100கோடி) இவரது சாதனை. அந்த சாதனைகளுக்கு பின்னால்  இவர் சந்தித்த சோதனைகளும்  நெருக்கடிகளும் சவால்களும் பிரச்சனைகளும் ஏராளம்.
1962ல் இந்தியா திரும்பிய உடன்கொடுக்கபட்ட வேலை ஜாம்ஷெட்பூர் உருக்கு ஆலையில் தொழிலாளர் பணி. சுண்ணாம்பு கற்களை கொதிகலனில் இடுவதிலிருந்து எல்லா வேலையும்.  டாடா நிறுவனத்தில் உயர் பதவிக்கு போகபோவருக்கு  அவர் நிறுவனரின் குடுமபத்திலிருந்து வந்தவரானாலும் எல்லாம் சரியாக தெரிந்திருக்கவேண்டும் என்று அவருக்கு சொல்லபட்டது நீண்ட பயிற்சிகளுக்கு பின் அதே ஆலையில் மேலாளாராக இருந்தவரை நிறுவன தலைவர் ஏற்க சொன்னது டாட்டாவின் ரேடியோ மற்றும் மின்பொருள் தயாரிக்கும் நெல்கோ நிறுவனத்தை, நஷ்டத்தில் 2 சதவீத மார்கெட் ஷேருடன் இயங்கிகொண்டிருந்த அதை 25 %மாக உயர்த்தி லாபம் ஈட்டும்கம்பெனியாக்கி காட்டியவருக்கு அதை மேலும் உயர்த்தமுடியாமல்  நெருக்கடி நிலை பிரகடனம் என்ற அரசியல் சூழ்நிலை குறுக்கிட்டது. தொடர்ந்து வந்த தொழிற்சங்கபிரச்னைகளினால் டாடா நிர்வாகம் அந்த நிறுவனத்தை மூட முடிவுசெய்துவிட்டது.  அதற்காக வருந்தினாலும்  மனமுடைந்துபோகாமல்  ரத்தன் கேட்ட கேள்வி எனது அடுத்த சவால் என்ன? பாம்பாயில் ஒரு நலிந்துகொண்டிருந்த துணிஆலையின் பொறுப்பு அவருக்கு கொடுக்க பட்டது. ஊழியர்களை குறைத்து, இயந்திரங்களை நவீனபடுத்தி உற்பத்தியை பெருக்கும் அவரது யோசனைகளை நிர்வாகம் ஏற்கவில்லை.. இறுதியில் அந்த ஆலை மூடபட்டது. “ அன்று எனக்கு ஒரு 55 லட்சம் தரப்பட்டிருந்தால் அது இன்று நாட்டின் சிறந்த துணி ஆலையாகியிருக்கும் என எழுதுகிறார் ரத்தன். தொடர்ந்த போராட்டங்கள், தோல்விகளிலிருந்து ரத்தன் டாட்டா புரிந்துகொண்ட விஷயம் இந்த நிறுவனம் புதுமைகளை ஏற்க தயங்கிறது. ஆனாலும் அடுத்த சவாலாக அவர் ஏற்றது அவர்களின் மோட்டார் தயாரிப்பு நிறுவனம், அந்த கால கட்டத்தில்1991ல் நிறுவன சேர்மன் ஜேஆர்டி டாட்டா தனக்கு அடுத்த சேர்மனை தேர்ந்தெடுக்கபோவதாக அறிவித்திருந்தார்.. நீண்ட நாள் டாட்டாவில் பணியிலிருந்த ருஸிமோடி, பல்கிவாலா, அஜித்கேல்கர் போன்றவர்களிலிருந்து யாரவது அறிவிக்கபடுவார் என்று எதிர்பார்க்கபட்ட நிலையில் அவர் தேர்ந்தெடுதெடுத்தது ரத்தனை. இதை எதிர்பார்க்காத அவர்கள் ரத்தன் டாட்டாவிற்கு நல்ல ஒத்துழைப்பு கொடுக்காமல்  “ஒன்றும் தெரியாத  அந்த சின்னபையனை தங்கள் பிடியில் வைத்துகொள்ள“ முற்சித்தனர். ரத்தன் டாட்டா சந்தித்த மிகப்பெரிய சோதனையிது. டாட்ட நிறுவனத்தில் எவரும் நீக்கபடுவதில்லை. ராஜினாமாதான் செய்வார்கள். நிறுவனத்துடன் வளர்ந்தவர்களை, அதை வளர்த்தவர்களை தான் மதிப்பவர்களை  காலத்தின் கட்டாயத்தை புரிந்துகொளாததால் அவர்களை அதை செய்யவைத்தார். குழுமத்தில் லாபத்தில் இயங்காத பல கம்பெனிகளை மூடினார். எல்லா கம்பெனிகளுக்கும் திறமையான இளம் நிர்வாகிகளை தேர்ந்தெடுத்து அமர்த்தினார். இந்த அதிரடி மாற்றங்கள் இந்திய தொழிற்துறையையே ஆச்சரியத்தில் ஆழத்தியது. மெல்ல எல்லா நிறுவனங்களும் லாபம் ஈட்டின. கம்ப்யூட்டர் நிருவனமான டிசிஸ்  உலக அளவில் புதிய உயரங்களை தொட்டது.

ஒரே ஸ்கூட்டரில் 4 பேர் பயணம் செய்யும் காட்சியை அடிக்கடி கண்டபோது இந்தமட்டத்திலிருப்பவர்களுக்கான ஒரு சின்ன காரை லட்சரூபாயில் நனோ என்ற பெயரில்  இவர் அறிவித்தபோது அது எப்படி சாத்தியமாகாது என்று சொன்னவர்கள்தான் அதிகம். மேற்கு வங்காளத்திலிருந்த கம்யூனிசஅரசு வேலை வாய்ப்பை அதிகரிக்க கேட்டுகொண்டதின் பேரில் அங்கு அதற்காக துவக்கப்படவிருந்த தொழிற்சாலையை தொடர்ந்து வந்த ஆட்சிமாற்றத்தால், அரசியல் மாச்சரியங்களினால் நிறுத்த வேண்டிய நிலை எழுந்த்ததுதான் இவருக்கு வந்த அடுத்த சோதனை. அசரவில்லை ரத்தன் உடனடியாக முழுதொழிற்சாலயையும் குஜராத்தில் நிறுவி தந்து கனவு காரான நானோவை 2008ல் மார்கெட்டுக்கு கொண்டுவந்தார்.  டிமாண்ட் அதிகம் இருக்கும் கார்களுக்கு பதிவு செய்யும்போது முன்பணம் செலுத்துவது வழக்கம். நானோவிற்கு முழுபணமும் கடன் வாங்கி செலுத்தி குலுக்கல் முறையில் பெற்று கொள்ள மக்கள் தயாராகிருந்தனர். அறிவிப்பு வந்தவுடன் அப்படி புக் செய்தவர்கள் 2 லட்சத்திற்கும் மேல். நிருவனம் பெற்ற பணம் 2500 கோடிகள். சந்தேக பட்டவர்கள், சவால்விட்டவர்கள்  எல்லாம் சத்தமில்லாம்ல் அடங்கிபோனார்கள்.  உன்னிப்பாக கவனித்து கொண்டிருந்த நிதி தரம் வழங்கும்  உலக நிறுவனங்கள் டாடா நிறுவனத்தின் மீது மக்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையை புரிந்துகொண்டது. நிறுவனத்தின் 100 ஆண்டு பராம்பரியம், மக்களின் நமபிக்கை அரசின்  “உலகமயமாதல்” கொள்கையினால் எழுந்த வாய்ப்புகளை பயன்படுத்த இது உதவியது. டாட்டா சாம்ராஜ்யத்தின் எல்லைகள் உலகின் பலநாடுகளுக்கு விரிவடைந்தது, சிறிதும் பெரிதுமாக பலநாடுகளில் நிறுவனங்கள் வாங்கபட்டன.  இன்று 80 நாடுகளில் இயங்குகிறது.
இங்கிலாந்தைச் சேர்ந்த மிகப்பெரிய, ஏகபோக இரும்புத் தொழிற்சாலை நிறுவனமான கோரஸை’’யும், உலகப் புகழ் பெற்ற ஜாகுவர் மற்றும் லேண்ட் ரோவர் என்ற கார்களைத் தயாரிக்கும் தொழிற்சாலையையும் பலத்த போட்டிக் கிடையே பெரும் விலை கொடுத்து   வாங்கியது. உலகின் பெரிய வங்கிகள் கடன் உதவி செய்தது. இதன் மூலம் டாடா உலகின் 5வது பெரிய இரும்பாலைக்கு சொந்தமானது.
தொடர்ந்து பிரச்னைகளை வெற்றிகரமாக சமாளித்த ரத்தன்டாட்டா வை தேடி வந்த அடுத்த சோதனை இது., இலாபத்துடன் இயங்கி வந்த இந்த நிறுவனங்களை டாட்டா வாங்கியபொழுது, அடுத்த ஒரே ஆண்டில் உலகப் பொருளாதாரமே அதல பாதாளத்தில் விழுந்துவிடும் எனக் கனவில்கூட நினைத்துப் பார்த்திருக்க மாட்டார். 2008-ஆம் ஆண்டின் தொடக்கத்திலேயே ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் கார் விற்பனை படுத்துப்போனதால், ஜாகுவர் லேண்ட் ரோவர் கார் தொழிற்சாலையை இழுத்து மூடிவிட வேண்டிய அபாயம் ஏற்பட்டது. சர்வதேச நிதி நிறுவனங்களுக்கு கடன் செலுத்த முடியவில்லை. இந்த சோதனையை ரத்தன் வென்றமுறை உலகத்தையே திரும்பி பார்க்கவைத்தது. ”இது உங்கள் நாட்டிலிருக்கும் இருக்கும் தொழிற்சாலை. பல ஆயிரகணக்கான தொழிலாளர்கள் வேலையிழக்காமல் காப்பாற்ற  நீண்ட கால கடன் உதவிசெய்யுங்கள்” என  தொழிளார்கள் யூனியன்களுடன் இணைந்து  இங்கிலாந்து அரசிடம் வேண்டினார். முதலில் மறுத்த அரசு  பின்னர் உதவியது,
ஒரு நிறுவனத்திற்கு பிர்ச்னைகள் எங்கிருந்தும் வரலாம், பாக்கிஸ்தான் பயங்கரவாதிகள் மும்பை தாஜ்ம்ஹால் ஹோட்லை 2008 தாக்கி எரித்த விபத்தில் டாடாவிற்கு நேர்ந்த்து வெறும் பொருளாதார இழப்பு  மட்டுமில்லை. பாதுகாப்பு இல்லாத ஹோட்டலென்ற அவப்பெயரை எற்படுத்திவிடக்கூடிய அபாயமும்கூட. சுற்றுலா பயணிகளின் நம்பிக்கையை தொடர்ந்து பெற வேண்டியது சவால். தாக்கபட்ட 8மாதங்களில் புதுபிக்கபட்ட ஹோட்டலில் அடுத்த ஆண்டு வந்து தங்கியவர் அமெரிக்க அதிபர் ஒமாமா. இதற்கான பப்ளிக் ரிலேஷன் முயற்சிகளை முன்னின்று செய்தவர் ரத்தன்.
எந்த பிரச்னைகளையும் எதிர் கொண்டு அயராது உழைத்து வெற்றிகண்ட ரத்தன் டாடா கடந்த மாதம்  தன் 75 வது வயதில் ஒய்வு பெற்று விட்டார். ஓய்வை எப்படி கழிக்க போகிறார்? “ அதுதான் நான் இப்போது சிந்தித்துகொண்டிருக்கும் அடுத்த பிரச்னை” என்கிறார்.


கல்கி03/02/13

29/1/13

புத்தரின் மகள் !


நாங்கள் வசிக்கும் கீரின் ஏக்கர்ஸில் ஒவ்வொரு வருடமும் GARDEN (green acres residents dinner and entertainment night) கொண்டாவோம். ஒரு பொரபஷனல் கலைஞரின் நிகழ்ச்சியும் ஒரு இன் ஹவுஸ் நிகழ்ச்சியும் இருக்கும். இம் முறை கார்த்திக் என்ற இளைஞனின் தீமாட்டிக் கான்ஸ்ர்ட். .
கர்னாடிக், வெஸ்ட்டர்ன் கிளாசிக், சினிமா என வயலினிலும் வாய்பாட்டிலும் கலக்கிட்டார் கார்திக். சாப்ட்வேர் எஞினியர்  கம்ப்யூட்டர் ப்ரொகிமர் வேலையை விட இந்த மியூசிக் ப்ரொகிராம்கள் படித்திருப்பதால் வேலையைவிட்டுவிட்டு வயலின் வாசிக்கிறார்.
அதே இரவில் எங்கள் ஜிஏ மகிளிர் ஒருஹிந்தி  நாட்டிய நாடகம் நடத்தினார்கள். மன்னன்  சித்தார்த் மனம் மாறி துறவறம் பூண்ட ”மஹாராத்திரி”. அதில் சித்தார்த்தின் மகன் ராகுலாக நடிக்க பார்கவியை அழைத்தார் அதன் டைரக்டர். ஒரு சில நிமிடங்கள் மட்டுமே  வர வேண்டிய காட்சி வெறும்அபிநயம் மட்டும் என்பதால் அவளுக்கு ரிகர்ஸல் கிடையாது. மேடையேறும் முன் ஒரு சின்ன பிரிபிங் போதும் என்றார்.  (பார்கவியின் திறமையில் டைரக்டர்களுக்கு அவ்வளவு நம்பிக்கை)   தான் செய்ய வேண்டியதை  அவர்கள் சொன்ன போது கவனமாக கேட்ட பார்கவி சொன்னது  “ நான் பிரின்ஸ்ஸ் ஆகதான் வருவேன் என்னிடம் ராணி டிரஸ் இருக்கிறது. பாய்ஸ் டிரஸ் வேண்டாம்” என்றாள்.  அவள் மனதை மாற்ற முயன்று தோற்ற டைரக்டருக்கு இவளை விடவும் மனமில்லை.  அவர் சரி நீ ராணீதான் உன் டிரஸையே போட்டுக்கோ என்றார். ராகுலை எப்படி இவர் இளவரசியாக மாற்றுவார் என்று நினைத்துகொண்டிருந்தேன்.
”அப்பா ஏன் விசனமாகயிருக்கிறார்?” என்ற ராகுலின் கேள்விக்கு அவன் அன்னை தரும் பதிலை நம்பாமல் நீ பொய் சொல்லுகிறாய் என கோவித்துகொண்டு அன்னை தள்ளிவிடுவது காட்சி. அதை பார்கவி செய்தபோது எல்லோரும் ரசித்து கைதட்டினார்கள்.

 
நாட்டிய நாடகமாதலாலும் பார்கவிக்கு வசனமில்லாதலும்  அவள் ராகுல் என  அம்மாவால் அழைக்கபட்டபோது கூட  அந்த ராஜகுமாரன் தான் என்பது அவளுக்கு புரியவில்லை.
பிரின்ஸெஸ் ஆக நடித்துவிட்டோம் என பார்கவியும் காட்சி நன்றாக போனது என டைரக்டரும் சந்தோஷபட்டு கொண்டார்கள்.
இறுதியில் ”இளவரசனாக வந்த இளவரசிக்கு” என பரிசு கொடுத்தபோது அதன் அர்த்தம் எத்தனைபேருக்கு புரிந்ததோ.?
கார்திக்கின் இசையின் ஒரு பகுதியை யை இந்த லிங்க்கில் கேட்கலாம்