23/5/15

ஒபாமா பொய் சொன்னாரா?


”ஆப்ரேஷன் நெப்டியூன் ஸ்பியர்” நினவிருக்கிறதா? 
2001-ம் ஆண்டு, செப்டம் பர 11-ம் தேதி அல-கொய்தா தீவிர வாதிகள் வாஷிங்டனில்அமைந்துள்ள அமெரிக்க ராணுவத் தலைமையிடமான பெண்டகன், நியூயார்க்கில் உள்ள இரட்டை கோபுரம் ஆகிய தாக்குதல்களில் 3 ஆயிரத் திற்கு மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டனர். இதற்கு மூளையாக இருந்து செயல்படுத்தியவர் அந்தஇயக்கத் தின் தலைவர் ஒசாமா பின்லேடன். இவரைப் பிடிக்க அமெரிக்கா தீவிரமாக, உலகெங்கும் தேடிக்கொண்டிருந்தனர். 
10 ஆண்டுகள் தேடுதலுக்குப் பின்னர் ”ஆப்ரேஷன் நெப்டியூன் ஸ்பியர்” என்ற பெயரில் ஜேம்ஸ்பாண்ட் சினிமாவைப்போல ஒர் அதிரடி நடவடிக்கையில் 2011- மே 2-ம் தேதி பாக்கிஸ் தானின் அபோட்டா பாத பகுதியில் ஒரு வீட்டில் பதுங்கியிருந்த ஒசாமாவை சிறிய விமானங்களில் சென்று அமெரிக்க ராணுவம் சுட்டுக் கொன்றது.. முழுநடவடிக்கைகளையும் அமெரிக்க அதிபர் ஒபாமா வெள்ளை மாளிகையில் இருந்து ”லைவ்” வாக்க பார்த்துக்கொண்டிருந்தார். என்பதுதான் மறுநாள் உலகம் முழுவதும் தலைப்புச் செய்தியாக இருந்தது. 
அமெரிக்க உளவு, மற்றும் ராணுவத்துறைகளின் மிகப்பெரிய ராணுவ சாதனையாக வர்ணிக்கப்படும் இதில் முழுவதும் உண்மையில்லை என்கிறார். சேய்மோர் எம்.ஹெரிஸ் (Harsh) என்ற புலானாய்வு பத்திரியாளார். இவர் லண்டன் புக ரிவ்யூ என்ற இதழில் எழுதியிருக்கும் கட்டுரையை இஸ்லாமபாத்திலிருந்து வெளிவரும் டான் பத்திரிகையும் வெளியிட்டிருக்கிறது. இவர் அமெரிக்க வியட்நாம் போர்களில் அமெரிக்க நடவடிக்கைகள் பற்றியும் அமெரிக்கச் சிஐஏ பற்றியும் புத்தகங்கள் எழுதியிருப்பவர். மிக நீண்ட புலானாய்வுகளுக்குப் பின்னர் எழுதுபவர். உலகின் பெரிய பத்திரிகைகளின் நம்பிக்கை பெற்றவர். 
இந்தப் பரபரப்புக் கட்டுரையில் இவர் சொல்வது. அமெரிக்கா பின்லேடனை ஆப்கானிஸ்தான் மலைக்குகைகளில் தேடிக்கொண்டிருந்த காலகட்டத்திலேயே 2006 முதல் பின்லேடன் பாக்கிஸ்தானில் ரகசிய இடத்தில் கைதியாக . சவுதிஅரேபிய அரசின் வேண்டுகோளுக்கு இணங்க ஐஎஸ்ஐ என்ற பாக்கிஸ்தான் உளவு நிறுவனத்தால் பாதுகாக்கப்பட்டார். அல்கொய்தாவிற்கு உதவிகள் செய்து வந்த சவுதி அரசு இந்தப் பாதுகாப்பு செலவுகளை ஏற்பதாகவும் எந்தக் காரணத்திற்காகவௌம் அவர் கொல்லப்படக்கூடாது என்றும் சொல்லியிருந்தது. 
இந்தக் கைதியை அமெரிக்காவிற்குத் தருவதின் மூலம் தங்கள் உளவு நிறுவனங்களுக்குப் பெருமளவில் அமெரிக்க நிதி மற்றும் ஆயூத உதவிகளைப் பெற பாக்கிஸ்தான் திட்டமிட்டிருந்தது. அதற்கான நேரத்திற்காகக் காத்திருந்தது. இதற்கிடையில் அமெரிக்கா பின்லேடனை கண்டுபிடிக்க உதவுபவர்களுக்கு 25 கோடி டாலர் பரிசுத்தொகை அறிவித்து இருந்தது. பாக்கிஸ்தானில் பின்லேடனை ரகசியமாகக் காக்கும் பொறுப்பேற்றிருந்த ஜெனரல் பர்வேஷ் ஆஷ்பஃ கியானி, மற்றும் உளவுத்துறை தலைவர் அஹமது ஷுஜா பாசா அமெரிக்கப் பரிசு தொகைக்காகத் தங்கள் தேசத்திற்குத் துரோகம் செய்து ரகசியத்தை விற்றுவிட்டனர் என்கிறார் ஹெரிஸ். பாகிஸ்தானிலுள்ள அமெரிக்கச் சிஅய் ஏவின் அதிகாரி இவர்கள் சொல்வது உண்மைதான் என்று உறுதிசெய்யது கொள்ளப் பொய் சொல்லவதைக் கண்டறியும் டெஸ்ட்களைக் கூடச் செய்திருக்கிறார்கள். விஷயத்தை உறுதி செய்துகொண்டதும் அமெரிக்க ராணுவம் செயலில் இறங்கியது. 
சாட்டிலைட்கள் மூலம் பின்லேடனின் இருப்பிடத்தைக் கண்டுபிடித்து, கூரியர் தபால் தருபவர் மூலம் உறுதி செய்து கொண்டு, தடுப்பூசிபோடுபதாகச் சொல்லி ரத்த சாம்பில் எடுத்து DNA டெஸ்ட் செய்து பின்லேடன் இருப்பதை உறுதி செய்து கொண்டு சிறிய அதிவேக விமானங்களில் அதரடியாகச் சென்று பின்லேடன் வசித்துவந்த வீட்டிற்குள் சென்று ஆயுத போரட்டம் நடத்தி அவரைச் சுட்டு கொன்றோம் என்று அமெரிக்கா சொல்லியிருக்கிறது. இது பொய் என்கிறார் கட்டுரையாசிரியர். 
இருக்குமிடத்தை அறிவித்துத் தாக்குதல் நடத்தும்போது பாக்கிஸ்தான் ராணவ கட்டுப்பாடுகளைத் தளர்த்தி, மின் இணைப்புகளைத் தூண்டித்து ஆப்ரேஷன் நெப்டியூன் ஸ்பியர் சரியாக நடக்க எல்லா வசதிகளையும் இந்த ஐஸ்ஐ அதிகாரிகள் செய்து கொடுத்தனர். இதைச் சற்றும் எதிர்பார்க்காத பாக்கிஸ்தான் அரசு ஆப்ரேஷன் பற்றி அறிந்ததும். இது எங்கள் ராணுவத்துக்குப் பெரிய இழுக்கு. அதனால் ஒருவாரத்திற்குப் பின்னர் செய்தியை வெளியிடுங்கள். எங்கள் உதவியுடன் செய்ததாக உலகிற்கு அறிவியுங்கள்.. என்று அமெரிக்க அதிபரை வேண்டியது. 
ஆனால் ஓபாமா உடனையாக அறிவித்துவிட்டார். அதற்கு இரண்டு காரணங்களைச் சொல்லுகிறார் ஹெரிஸ் (Harsh) ஒன்று  அந்த சமயத்தில் அமெரிக்கத் தேர்தலில் மறுமுறை போட்டியிட தீர்மானித்திருந்த ஒபாமா இதைத் தன் அரசின் சாதனையாக மட்டுமே இருப்பதை விரும்பினார், மற்றொன்று இந்த ஆப்ரேஷனில் ஒர் அமெரிக்க ஹெலிகாப்டர் பின் லேடன் வசித்துவந்த கட்டிடத்தில் மோதி நொறுங்கிவிட்டிருந்தது. அது அமெரிக்க விமானம் இல்லை என்று மறைப்பது கடினமான செயல். எல்லாவற்றையும் விட ஒரு சின்ன நாடு அமெரிக்காவை ஏமாற்றிவிட்டதே என்ற அவரின் கோபம் 
பின்லேடன் பிடிபட்டபோது அவர் நிராயத பாணியாக இருந்தார். பாதுகாவலர்கள் இல்லை அமெரிக்கச் சீல் (SEAL) ராணுவம் மிக எளிதாக வீட்டின் உள் நுழைந்து அவரைச் சுட்டுக் கொன்றது. அமெரிக்கா சொல்லுவது போலக் கடலில்விமானம் தாங்கி கப்பலில் எடுத்து சென்று  அவர் உடல் இறுதி முகமதிய மதசடங்குகளுடனும் மரியாதைகளுடன் யுடன் அடக்கம் செய்யபடவில்லை. தூண்டு துண்டான உடலை இந்துகுஷ் மலைப்பகுதிகளில் எறிந்தனர் என்றும் எழுதியிருக்கிறார்.பின்லேடனின் இறுதிச் சடங்கு படங்களை வெளியிடாதற்கு இதுதான் காரணம் என்கிறார், 
இந்தக் கட்டுரை ஆதாரமற்றது என அமெரிக்க அதிபர் மாளிகை அறிவிப்புச் சொல்லுகிறது. . 
உலகின் சில அரசியல் தலைவர்களின் மரணங்களுக்குப் பின் ஏற்படும் சர்ச்சைகள் மரணமடைவதில்லை. பல ஆண்டுகள் அவை தொடர்ந்துகொண்டே இருக்கும். அந்த வரிசையில் ஓசாமா பின்லேடனும் இப்போது சேருகிறார். 

944902215
170515

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்கள்