8/10/17

சிலைகள் எழுப்பியிருக்கும் பிரச்சனை

       
 
அமெரிக்காவில் வெர்ஜினியா மாநிலத்திலிருக்கும் ஒரு நகரம் சார்லொட்டஸ்வில் (Charlottesvulle). அமைதியான இந்த நகரில் எழுந்த ஒரு போராட்டம், இன்று அமெரிக்காவின் சிலநகரங்களில் இனவெறிப்போராட்டமாகப் பரவிக்கொண்டிருக்கிறது. நகரப் பார்க்கில் இருக்கும் ராபர்ட் இ-லீ என்பவரின் சிலையினால் எழுந்தது பிரச்னை.
அமெரிக்கா ஒரு ஐக்கியநாடாக, பிறந்தவுடன் சில மாநிலங்களை இணைக்க ஒரு நீண்ட உள்நாட்டுபோரை சந்தித்ததைச் சரித்திரம். சொல்லுகிறது 1861 முதல் 1865 வரை நடைபெற்ற இந்த உள்நாட்டுப் போருக்கான காரணங்களில் ஒன்று. .அடிமைகளின் விடுதலை. முறையை ஒழிப்பதை முன்னிறுத்தி ஆபிரகாம் லிங்கன் அந்த   தலைமையில் ஒரு படையும், அடிமைகளை விடுதலை செய்யக் கூடாது என்பதை முன்னிறுத்தி ஜெபர்சன் டேவிஸ் தலைமையில் மற்றொரு படையும் போரில் ஈடுபட்இதிஸீல் ஜெபர்சன் டேவிஸ் அணியியை ஜெனரல் ராபர்ட் இ-லீ வழிநடத்தினார்.
இந்தப் போரில் ஆபிரகாம் ஆபிரஹாம் லிங்கள் வெற்றி பெற்றாலும் அவரை எதிர்த்துப் போராடிய மாநிலங்களில் ஆட்சி செய்யதவர்களின் சிலைகளும் பெயர்களைத்தாங்கிய பொதுக் கட்டிடங்களும் தொடர்ந்து கொண்டிருந்தன. காலப் போக்கில் மக்கள் அவைகளை தங்கள் மாநிலத்தின் சரித்திர அடையாளாங்களாக ஏற்றுகொண்டார்கள்.
வெர்ஜினியா மாகாணம் சார்லோட்டஸ்வில் நகரில்  இந்த ஜெனரல் ராபர்ட் இ-லீ-யின் சிலை உள்ளது. அந்தச் சிலையை அகற்ற நகர நிர்வாகம் முடிவு செய்தது. சொல்லப்பட்ட காரணம் இம்மாதிரி சிலைகள் அமெரிக்காவில் வெள்ளையினத்தவரின்களின் ஆதிக்கத்தைக் காட்டும் அடையாளம். என்பது. முடிவு செய்து ஒராண்டாகியும் சிலை அகற்றபடாதால், அதைச்செய்வதற்கு இயந்திரங்களுடன் ஒரு தன்னார்வ குழு பார்க்கில் குழுமிவிட்டது இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மற்றொரு குழு சார்லோட்டஸ்வில் நகரில் பேரணி நடத்தினர். அதேநேரம் இன ஒற்றுமையை வலியுறுத்தும் ஒரு  குழுவினரும் அதே பகுதியில் கூடினர்.
 இருதரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் பெரிய கலவரமாக வெடித்தது அதில் நகரின் முக்கிய மனித உரிமை ஆர்வலர் ஒருவர் இறந்துவிட்டார். இது தேசிய சின்னமாக அறிவிக்கபட்ட  பல சின்னங்களில்  இந்தச் சிலையும் ஒன்று. அகற்ற நகரகவுன்சிலுக்கு அதிகாரமில்லை என்று போடப்பட்ட வழக்கில் நீதிபதி, அகற்ற தடையுத்தரவு பிறபித்து சில நகரங்களில் நடந்திருப்பதைப் போல சிலைஉடைக்கபட்டுவிடக்கூடாது என்பதற்காக சிலையை கருப்பு துணியால் மூடி பாதுகாக்க  உத்திரவிட்டிருக்கிறார்.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து மெரிலாண்ட், ஃபளோரிடா வடக்கு காரோலினா போன்ற மாநிலங்களில் உள்ள சில பெரிய நகர கவுன்சில்கள் இம்மாதிரி இருக்கும் சிலைகளை அகற்ற தீர்மானங்கள் போட்டு இரவோடு இரவாக அகற்றவும் செய்துவிட்டார்கள். துர்ஹாம் என்ற நகரில் போராட்டக்கார்களே சிலையைப் பீடத்திலிருந்து கழட்டி கயற்றில் கட்டி கிரேன் மூலம் பகலில் மக்கள் கைதட்டலுடன் அகற்றியிருக்கிறார்கள். சில இடங்களில் சிலைகள் கறுப்பு துணிகளால் மூடப்பட்டன. சில சிலைகள் மரப்பெட்டிகளால் மறைக்கபட்டன.
நகர பார்க்குகளை நிர்வகிக்கும் உரிமை நகர கவுன்சில்களுக்கு இருந்தாலும் இப்படி சிலைகளைச் சின்னங்களையும் அகற்றும் உரிமைகளை ரத்து செய்திருப்பதாகச் சில மாநில அரசுகள் அறிவித்திருக்கின்றன.  இந்த முடிவை எதிர்த்து வழக்குகளும் போடபட்டிருக்கின்றன
இம்மாதிரி நாட்டின் ஒற்றுமையைக் குலைக்கும் இனவெறிச் செயல்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஸ்டன் நகரில் பல்லாயிரக் கணக்கானோர் கலந்து கொண்ட பிரம்மாண்ட பேரணி ஒன்றும் அண்மையில் நடைபெற்றது
இந்த எதிர்ப்பும் போராட்டமும் ஒரே இரவில் எழுந்தவை இல்லை. 2015ல் கொலைவெறி பிடித்த வெள்ளை இன அமெரிக்கர், ஒருவர் பல கறுப்பினத்தவரை சுட்டுக்கொன்றதில்  எழுந்த கோபம் அடங்காமல் மெல்ல கனிந்து கொண்டிருந்தது. “கருப்பு இனத்தவரின் உயிர்களும் முக்கியமானது(Black lives matter movement) என்று ஒரு இயக்கம் எழுந்த்து. அது தான் இதைச்செய்து கொன்டிருக்கிறது
.
அமெரிக்காவின் பல நகர கவுன்சிகளில் கறுப்பினத்தவர் பெருமளவில் இடம் பெற்றிருப்பதால் இதைச் செய்யத் துவங்கியிருக்கிறார்கள். சிலைகளை அகற்றுவது ஒரு அடையாளமே தவிர பிரச்னையின் ஆழம் பெரிது.
இந்த ஆண்டு பிப்ரவரியில் யேல் பல்கலைகழகம் இந்தப் பிர்ச்னையை சந்தித்தது. அந்தப் பலகலைகழகத்திலிருக்கும் பல கல்லூரிகளில் ஓன்று கால்ஹென் காலேஜ்(CALHOUN COLLEGE) செல்வந்தரான அவரது நன்கொடையினால் உருவாக்கப்பட்ட இந்தக் கல்லூரிக்கு அவரது பெயரிடப்பட்டு அதன் முகப்பில் அவர் சிலையும் நிறுவப்பட்டு பலகாலமாக இருந்து வருகிறது. திரு கால்ஹென் கறுப்பின அடிமை முறையை ஆதரித்தவர், அதனால் அந்தப் பெயரை மாற்றிச் சிலையை அப்புறபடுத்துங்கள் என மாணவர்கள் போராட்டம் செய்தனர். முதலில் வெகுகடுமையாக எதிர்த்த பல்கலை கழக நிர்வாகம் நீண்ட போரட்டங்களுக்கு பின்னர் தன் முடிவை மாற்றிக்கொண்டு கல்லூரியின் பெயரை  இப்போது மாற்றியிருக்கிறது. இதுபோல பல பல்கலைகழங்களில் இப்படி நனகொடை கொடுத்தவர்களின் பெயர்களும், சிலைகளும் இருப்பதால் இம் மாதிரிப் போராட்டங்கள் அங்கும் தொடரலாம் என்ற அச்சம் எழுந்திருக்கிறது.
இதுவரை 60க்குமேல் சிலைகளும் அடையாளங்களும் அகற்றப்பட்டிருக்கின்றன, . நமது உள்நட்டுப் போரும் அடிமைமுறை ஒழிப்பும் நாட்டின் சரித்திரம். அதில் பங்குபெற்றவர்களும் அமெரிக்கர்கள் தான். 20ம் நூற்றாண்டில் நிறுவபட்ட சிலைகளை இப்போது அகற்ற போராடுவது அநாகரிகம். சரித்திரத்தை நாம் ஏன் மறைக்க வேண்டும்? என இருநிற இனத்தவரும் இணைந்த குழு ஒன்றும் குரல் எழுப்ப்யிருக்கிறது
.
இந்த இனமோதலை அமெரிக்க அதிபர் டிரம்ப் சரியான விதத்தில் கையாளவில்ல என அனைத்து தரப்பினரும் விமர்சிக்கின்றனர். பிர்ச்சனை தீவிரமாக இருந்தபோது “இன்று ராப்ர்ட்- இ லீ நாளை ஜார்ஜ் வாஷிங்டனா? பின்னர் ஜெபர்ஸ்னா? அவர்களும் அடிமைகளை வைத்திருந்தவர்கள் தானே?” என்ற அவரது பேச்சு அமெரிக்க வெள்ளையினத்தவரின் ஆணவ வெளிபாடாகப் புரிந்துகொள்ளபட்டது. வழக்கம் போலப் பின்னால் அவர் தெரிவித்த குழப்பான விளக்கங்கள் எடுபடவில்லை.
உலக சரித்திரத்தை உற்று நோக்கினால்  பெரிய போராடங்களுக்கும் புரட்சிக்கும்  பின்னால் ஒரு தனி மனிதனின் செயல் தீப்பொறியாகத் துவங்கியிருக்கும். ஒரு கோபக்காரின் துப்பாக்கி சூட்டில் இறந்தவர்களுக்கு விலையாக் இந்தப் போராட்டம் எழுந்திருக்கிறது.
இது வலுக்குமா? சரியான நடவடிக்கைகள்மூலம் டிரம்ப் பின் நிர்வாகம் வலுவிழக்கச்செய்யுமா?
 உலகம் பார்த்துக்கொண்டிருக்கிறது


 

24/9/17

புத்தக் வெளியீடு



எனது புத்தக வெளியிட்டு விழாவை நண்பர் விஜயன் காணிளியாக்கி யூ டுயூபில் வெளியிட்டிருக்கிறார்.  இங்கே அதப் பார்க்கலாம். 













18/9/17

பெட்ரோல் விலை ஏன் உயர்ந்துகொண்டே போகிறது?
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடந்த 2014ம் ஆண்டு ஜூன் மாதத்தில் ஒரு பேரல் 109.05 டாலராக இருந்தது. கடந்த ஜனவரி மாதத்தில் இது வெறும் 28.12 டாலராக சரிந்தது. அதன்பிறகு தற்போது ஒரு பேரல் கடந்தமாத  நிழைவு வரி 

13/9/17

விற்கப் படும் வீரப்பதக்கங்கள்



தலை நகரில் குடியரசு தின அணிவகுப்புக்கு முன்னர் குடியரசுத் தலைவர் இந்திய ராணுவத்தின் உயரிய கெளரவமான பரம வீர் சக்ரா. வீர்சக்ரா போன்ற பதக்கங்களை வழங்கும்போது, அவற்றை அதிகாரிகள் பெருமிதத்தோடு பெறும் கம்பீரமான காட்சிகளைப் பார்த்திருக்கிறோம். இந்த உயரிய விருது பதக்கங்களைத்தவிர 10 விதமான பதக்கங்களை நமது ராணுவ அதிகாரிகளுக்கும் வீரர்களுக்கும் வழங்குகிறது இந்திய அரசு என்ற செய்தியை நம்மில் பலர் அறிந்திருக்கக்கூடும்.

ஆனால் அதிர்ச்சியான செய்தி இந்தப் பதக்கங்கள் கடைகளில் விற்கப்படுகிறது என்பதுதான். செகந்திரா பாத் நகரில் லால் பஸார் என்ற பகுதியில் மிலிட்டிரி லேன் என்றழைக்கப்படும் ஒரு சிறிய சந்திலிருக்கும் கடைகளில் இந்திய ராணுவம் தரும் எந்தமெடலும் விலைக்குக் கிடைக்கிறது. மெடல்கள் மட்டுமில்லை ராணுவ அதிகாரிகள் தோள்பட்டையில் அணியும் அந்தஸ்த்தை குறிக்கும் ஸடார்கள், பட்டைகள் எல்லாமே கிடைக்கிறது. 2500 ரூபாய்களில் ஒரு ராணுவ அதிகாரி தன் வீர தீரச் செயல்களுக்காகப் பெறும் அத்தனை மெடல்களுடன் அதிகாரி அணியும் யூனிபார்மே கிடைக்கிறது.

1999 கார்கில் போர் ஆப்ரேஷன் விஜய் யில் பங்குபெற்றதற்கான மெடல் 40ரூபாய், சியாச்சின் பனிச்சிகரங்களின் பணியிலிருந்ததற்காகத் தரப்படும் உச் துங்கட்டா மெடல் 40 ரூபாய், மிகச்சிறந்த பணிக்கான மெடல் ரு 180 என விலைபட்டியலைப் பார்த்துசொல்லுகிறார்கள். மெடல்கள் ஷோ கேஸ்களில் காட்சிக்கு வைக்கபடவில்லையே தவிர, மருந்துக்கடை களிலிருப்பது போல அட்டைப்பெட்டிகளில் போட்டுப் பெயர் எழுதி அடுக்கி வைத்திருக்கிறார்கள். உங்களுக்கு எந்த மெடல் வேண்டும்? எனக் கேட்டுத் தருகிறார்கள். மெடல்கள் கோர்க்கபட்டிருக்கும் ரிப்பன்களின் கலரும் டிசைனும் அது எந்த வகை மெடலை சேர்ந்தது என்பதைச்சொல்லும். எல்லா நேரங்களிம் மெடல் அணிய முடியாதாகையால் இந்த ரிப்பன் வண்ணங்களை ஒரு குறிப்பிட்ட அளவில் பேட்ஜ்களாக அணிவார்கள். இதை அதிகாரிகள் யூனிபார்ம் அணியாத போதும் அணிந்துகொள்வார்கள். அந்த மாதிரி பேட்ஜ்களூம் கிடைக்கிறது.
யார் இதை வாங்குகிறார்கள்? என்ற கேள்விக்கு—“நமது வீரர்கள் தான்” என்று வந்த பதில் நமது அதிர்ச்சியை அதிகபடுத்துகிறது. விருது பெற்ற வீரர்கள் அதை ஏன் இவர்களிடம் வாங்குகிறார்கள்?,

ராணுவத்தில் ஆண்டுதோறும் சிறந்த சேவைக்காக, திறமையான பணிக்காக என பல மெடல்கள் அறிவிக்கபட்டாலும், அந்தக் கடிதமும், சிலசமயம் அதற்கான பணப்பரிசும் அந்த வீரர்களுக்கு அனுப்பபடும். ஆனால் மெடல்கள் அவர்களுக்கு அளிக்கத் தாமதம் ஆகும். சில சமயங்களில் ஆண்டுகள் கூட ஆகிவிடுமாம். 10  ஆண்டுகளுக்கு முன் அறிவிக்கபட்ட மெடல்கள் இன்னும் கொடுக்கபடவில்லையாம்.  
 இந்த மெடல்களில் ராணூவத்தினரின் பெயரோ அலலது நம்பரோ பொறிக்க பட்டிருக்காது. பணப்பரிசை விட மெடல் அணிந்துகொள்வதை பெரிய  கெளவரமாகக் கருதுவதால் வீரர்கள் இந்த மாதிரிகடைகளில் கிடைக்கும் டூப்பிளிகேட்களை வாங்கி அணிந்து கொள்கிறார்கள். 
இதை டூப்பிளீகேட் எனச்சொல்லக் கூடாதாம். இவற்றிற்கு “டெயிலர் காப்பி” என்று பெயர் என்ற கடைக்காரர்களிடம் இதற்கு அவர்களுக்குரிய அனுமதி வழங்கப்பட்டிருக்கிறதா என்று கேட்டால் மழுப்புகிறார்கள். ஒரு கடைக்காரர் யூனிபாரம் தைத்து விற்க அனுமதியிருக்கிறது. மெடல்களும் யூனிபார்மின் ஒரு பகுதிதானே என்றார். வாங்குபவர்கள் ராணுத்தினரா? என்று கூடக் கேட்பதில்லை
.
ஒரு கடையில் சில ஓரிஜனல் மெடல்களையும் விற்கிறார்கள். பஞ்சாப் மாநில போலீஸின் விருதான ஸ்பெஷல் டுயூடி மெடலை அதனுடைய பெட்டியுடன் காட்டினார்கள்.
 சரியான போர்டு கூட இல்லாத கடைகளில் இப்படி விற்கிறார்களேயென ஒரு முன்னாள் ராணுவ அதிகாரியிடம் கேட்டபோது, “நமது மெடல்களை தயாரிப்பது அரசின் மின்ட் தான். அவர்களால் ஒரே நேரத்தில் பல மெடல்களை உரிய நேரத்தில் தயாரித்துக்கொடுக்க முடியவில்லை. அதனால் அந்த மெடல்களை தயாரிக்கும் மோல்ட்களை தயாரித்து இப்படி மெடல்களைச் செய்யும் ஒரு நிறுவனம் பஞ்சாபில் துவங்கியது. இவைகள் மிகவும் மலிவான உலோகங்களில்  கனம் இல்லாமல் செய்யப்பட்டிருக்கும். ராணுவத்தினருக்கு அது ஒரிஜினல் இல்லை என்பது எளிதாகத் தெரிந்துவிடும்.
இப்போது பெரிய பிஸினஸ் ஆகி விட்டது. சில சமயம் அரசின் முடிவுகளும் காரணம். இந்திய சுதந்திரத்தின் 50 வது ஆண்டுவிழா நினைவாக இந்திய ராணுவத்திலிருக்கும் அனைவருக்கும்  மெடல் என்று அறிவிக்கபட்டது. அதை எல்லோருக்கும் வினியோகிக்க 5 ஆண்டுகள் ஆனது. அதற்குள் சிலர் ஓய்வே பெற்றுவிட்டார்கள்.பலருக்கு போயே சேரவில்லை. இது போலச் சில குழப்பங்கள் என்ற அவர். இந்த ஒரிஜினல் மெடல்களை நீங்கள் ஆன்லைனிலேயே கூட வாங்கலாம்” என்றார்
.
ஆச்சரியப்பட்டு இணையத்தில் தேடியபோது  இந்திய சுதந்திர 50ஆம் ஆண்டு மெடல்  360 ருபாய்க்கும் மற்றொரு நிறுவனத்தில் அதைவிட 10 ரூபாய் குறைவாகவும் கிடைக்கிறது. இதைத்தேடும்போது பார்த்த  மற்றோரு விஷயம் இ பே என்ற ஆன்லைன் நிறுவனம் இந்திய ராணுவ  மெடல்களை ஏலத்தில் விற்கிறது. ஒன்பது வெவ்வேறு மெடல்கள் அடங்கிய ஒரு மெடல் பார் ரூ 3500 என்று ஒரு நிறுவனம் விலை சொல்லுகிறது.
 அதிகாரிகளின்பெயர்களுடனும் நம்பர்களுடனும் உள்ள ஒரிஜினல் மெடல்களுக்கு அமெரிக்க டாலரில் விலைபட்டியலிட்டிருக்கும் இ பே அவற்றை இந்தியாவிற்கு அனுப்ப முடியாது என்பதைத் தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறது
.
“பெயர் பொறிக்கப்பட்டிருக்கும் மெடல்களை எந்த ராணுவ வீரனும் விற்க மாட்டான். அவன் உயிரைவிடவும் நேசிக்கும் விஷயம் அது. சில சமயங்களில் மரணத்துக்குப் பின் புதைக்கும்போது கூட அதை அணிந்த நிலையில் தான் புதைப்பார்கள். இப்படி விற்பனைக்குக்  கிடைப்பது திருடப்பட்டது அல்லது வீரர் இறந்த பின் எவரும் உரிமை கோராத தாக இருக்கும் என்கிறார். ஒரு மூத்த முன்னாள் ராணுவ வீரர்.

ராணுவத்தினருக்கு வெற்றி பதக்கங்கள் என்பது அவர்களின் சாதனைகளைப் பார்ப்பவருக்குச் சொல்லும் அடையாளம். சியாச்சின் பள்ளதாக்குகளின் பனிப்புயல்களிலும், இமயப்பகுதி எல்லைகளிலும் பலவிதமான இடையூறுகளுக்குமிடையில் தங்கள் சிறப்பான பணிக்காகப் பெறும் விருதுகளூம் பதக்கங்களும் அவர்களை உடனே அடைவதில்லை என்பது மிக வருத்ததுக்குரிய விஷயம்.
 எவ்வளவோ விஷயங்களை மாற்றத்துடிக்கும் இந்த அரசு இதையும் கவனிக்குமா?










2/9/17

100 வருடங்களாகத் தினமும் போட்டோ!





மெல்ல நம்மைத்தொட்டுச்செல்லும் இனிய தென்றலின் இதத்தில் வழியெங்கும் புன்னகைக்கும் பூக்களைப் பார்த்தவண்ணம் நடக்க பாதைகள். பசுமையாகப் பரந்திருக்கும் மலைசிகரங்களை தொட்டு மிதந்து கொண்டிருக்கும் வெண்பனிமேகங்கள். அமைதியாகயிருக்கும் அழகான ஏரி. வெள்ளிக்கம்பிகளாக அவ்வபோது பாய்ந்து கொண்டிருக்கும் மழைச்சாரல் என இயற்கை தந்த “கொடையாக” நாம் அறிந்திருக்கும் கொடைக்கானல் தான், கடந்த நூற்றாண்டில் விண்வெளி இயற்பியலில்(ஆஸ்ட்ரோபிஸிக்ஸிக்கில்) ஒரு மிக முக்கிய கண்டுபிடிப்பு நிகழ்ந்த இடம் என்பதும், அந்த வான் மண்டல கண்காணிப்பு தொலை நோக்கு நிலையம் கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாகத் தினசரி சூரியனின் நிலையைப் போட்டோ எடுத்துக்கொண்டிருக்கிறது என்பதும் பலருக்குத் தெரியாத செய்தி
.
நாள்தோறும் ஆதவன் ஒய்வு இல்லாமல் தன் பணியைச்செய்வதைப் போல நிறுவப்பட்ட நாளிலிருந்து சூரியனை தினமும் படமெடுத்துகொண்டிருக்கும் இந்த வான் மண்டல கண்காணிப்பு மையத் (0bservatory).திற்கு வயது 118. உலகில் நிறுவப்பட்டஇடங்களிலேயே நிலைத்து தொடர்ந்து 100 ஆண்டுகளுக்குமேல் தங்கள் பணியைத் தொடர்ந்து கொண்டிருக்கும் 3 மையங்களில் இது முதன்மையானாது. 1899ம்ஆண்டு சூரிய மண்டலத்தை ஆரயாய நிறுவப்பட்ட இந்த நிலயத்திலிருந்தது தினசரி சூரியனை படமெடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.
ஆம்! 100ஆண்டுகளாக தினசரி சூரியனை படமெடுத்து பதிவுசெய்துகொண்டிருக்கிறார்கள். உலகெங்குமிருக்கும் பல வான் மண்டல ஆராய்ச்சியாளார்கள் அதைப் பயன் படுத்திக்கொண்டிருக்கிறார்கள்
“ஓரு பேரிடரினால் சில நன்மைகளும் உண்டாகும்” என்ற வார்த்தைகளுக்கு ஏற்ப 1890-95 ஆண்டுகளில் ஏற்பட்ட மிகக் கொடிய பஞ்சத்தின் பின் விளவுகளில் ஓன்று தான் இந்திய வான் ஆராய்சி மையங்கள். கிழக்கிந்திய கம்பெனி தன் சாம்ராஜ்யத்தின் எல்லைகளை விஸ்தரித்துகொண்டிருந்த அந்தக் கால கட்டத்தில், எற்பட்ட மிக மோசமான பஞ்சத்திற்கு காரணம் தொடர்ந்து மழைபொய்த்ததும், அந்த நிலையை முன்கூட்டிய அறிய வாய்ப்பில்லாது போனதுதான் என்று உணர்ந்த நிர்வாகம் வானிலை ஆராய்சி நிலையங்களைத் துவக்கியது.


ஜான் எலியட் என்ற அதிகாரி கண்டுபிடித்த “தூசி மறைக்காமல் வானம் தெளிவாகத் தெரியக்கூடிய இடமான பழனி மலைத்தொடரின் இந்தப் பகுதி” தேர்ந்தெடுக்கபடுகிறது. பின்னாளில் இது சென்னை நுங்கம்பாக்கத்துக்கு மாற்றப்பட்டபின் இது சூரியனை ஆராயும் நிலையமாக மாற்றபட்டிருக்கிறது.


“இந்தக் கட்டிடத்தில் ஜனவரி 9ம் நாள் 1909 ஜான் எவர்ஷெட் சூரியனிலிருக்கும் கரும்புள்ளிகள் ஒரு குறிப்பிட்ட சுழற்சிமுறையில் உருமாறுவதை கண்டுபிடித்தார்” என்ற பதிவுக்கல் வரவேற்கும் அந்தச் சிறிய கூடத்திலிருக்கும் டெலிஸ்கோப் மூலம் தான் சூரியனின் படம் தினசரி பதிவு செய்யப்படுகிறது.
சூரியனில் உள்ள கரும்புள்ளிகள் 11ஆண்டுகளுக்கு ஒருமுறை உருமாறிக் கொள்வதும் அதன் விளைவாக நிகழும் மாற்றங்கள் தான் பருவ நிலை மாறக்காரணம் என்ற இவரது கண்டுபிடிப்பு “எவர்ஷெட் எபஃக்ட்’ என்ற அழைக்கப்படுகிறது. இன்றும் தொடர்ந்துகொண்டிருக்கும் பல ஆராய்ச்சிகளுக்கு இது தான் அடிப்படை.

வட்டவடிவ கட்டிடத்திற்கு கோளவடிவ ஹெல்மெட் போட்டதைப் போன்ற அமைப்பு. அந்தக் கோள வடிவ மேற்கூரையை நகரும் கதவுகளுடன் கோள வடிவத்தில் (2300ரிவிட்கள்!) அமைக்கவேண்டியிருந்த அந்தப் பணிக்கு உள்ளுரில் திறமையான தொழிலாளிகள் இல்லாதால் தானே தினந்தோறும் உழைத்து அமைக்கிறார் இதன் முதல் அதிகாரியான மைக் ஸ்மித்.


சுழுலும் சக்கர கைப்பிடிகளினால் எளிதாக இயக்கித் திறக்ககூடிய இந்தக் கதவுகள் இன்றும் இயங்குகிறது. சூரியன் நகரும் பாதையை நோக்கி மட்டும் திறக்கப்படும் இதன் கதவுகளின் வழியே டெலிஸ்கோப் சூரியனைபார்க்கிறது. 1901ல் நிறுவப்பட்ட 6” டெலிஸ்கோப் சிறந்த பாரமரிப்பினால் இன்றும் பணி செய்வதை விட ஆச்சரியம் அதன் மூலம் எடுக்கபட்ட அத்தனை படங்களும் பாதுகாக்கப்பட்டிருக்கிறது என்பது தான்
1999ம் ஆண்டு இதன் நூற்றாண்டுவிழா கொண்டாடப்பட்டபொழுது உலகெங்குமிருந்து 50 ஆராய்ச்சியாளர்கள் பங்கேற்று தங்கள் படைப்புகளைப் பதிவு செய்திருக்கிறார்கள்.



எப்படி படமெடுக்கிறார்கள்?. சூரியனை கேமிரா வழியாகக் கூட நேரடியாகப் பார்க்கமுடியாது. அதற்காக ஒரு மூன்று அடுக்கு அமைப்பு. மேல் மாடியில் சூரியனைப்பார்க்கும் டெலிஸ்கோப் தான் பார்ப்பதை ஒரு வட்டகண்ணாடியில் பிரதிபலிக்கிறது. அங்கிருந்து அது 45 டிகிரி கோணத்தில் இரண்டாவது மாடியிலிருக்கும் மற்றொரு கண்ணாடியில் தெரிகிறது.  அது மீண்டும் தரையின் கிழே பூமிக்கடியிலிருக்கும் மற்றொரு கண்ணாடியில் பட்டு அதன் முன்னே 60 அடி தொலைவில் இருக்கும் ஒரு வெண்திரையில் பிரதிபலிக்கிறது. அதை அதன் முன் நீண்ட பாதையில் நகரும்படி அமைக்கப்பட்டிருக்கும் கேமிரா படம்பிடித்துக்கொண்டே இருக்கிறது. ஒரு வினாடி கூடத் தவறாமல் கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக இப்படி படம் எடுத்துக்கொண்டே இருக்கிறது. கிராப் பேப்பர்களில் கோடுகளாகப் பதிவு செய்து கோண்டிருந்த இது இப்போது டிஜிட்டலாக்கபட்டு கம்யூட்டரில் பதிவு செய்யப்படுகிறது. 150 மில்லியன் கீமிக்கு அப்பால் இருக்கும்(ஒரு மில்லியன் 10 லட்சம்) சூரியனின் முழூ உருவத்தைக் கைக்கெட்டும் தூரத்தில் கண் கூசாமல் பார்க்கிறோம்

.
இப்படி சூரியனைத் தொடர்ந்து கண்காணிக்கும் மையம் உலகிலேயே இது ஒன்று தான் என்று சொல்லி நம்மை ஆச்சரியப்படுத்துகிறார் இந்த மைய இயக்குனர் திரு செல்வேந்திரன். விண்வெளியியலில் சிறப்புப் பட்டங்கள் பெற்றிருக்கும் இவர் இந்தத்துறையில் நீண்ட அனுபவம் கொண்டவர். மிக அழகாக நமக்கு எளிதில் புரியும்படி விளக்குகிறார். பென்சிலில் இடப்பட்ட புள்ளிபோல வெண்திறையில் நமக்குத் தெரியும் இந்தக் கருப்பு புள்ளிகள் தான் பிளாக் ஸ்பாட் எனப்படும் கரும்புள்ளிகள். ஒவ்வொன்றும் பூமியைவிடப் பெரிது என்கிறார்.
வளாகத்திலிருக்கும் கட்டிடங்களில் ஒரு சிறு நூலகமும், அருங்காட்சியகமும் இருக்கிறது மிகுந்த கஷ்டங்களுக்கிடையே காடாக இருந்த இடத்தில் நிலையம் உருவாக்கப்பட்டிருக்கிறது போன்ற பல தகவல்கள், ஓரு சுவையான நாவலைப் போல எழுதப்பட்ட பல குறிப்புகள்அடங்கிய புத்தகங்கள், 1000க்குக் மேற்பட்ட புத்தகங்கள் இருப்பதால் போதிய இடமில்லாதால் மேற்கூரை வரை அடுக்கியிருக்கிறார்கள் தேவயையானபோது பெரிய ஏணிகள் மூலம் எடுப்பார்களாம்

பல அரிய படங்கள் கருவிகளின் மாதிரிகள், படங்கள் கொண்ட அந்த அருங்காட்சியகத்தில் மனமும் நேரமும் இருந்தால் நாள் கணக்கில் செலவழிக்கலாம்.


எல்லோருக்கும் டெலிஸ்கோப் இருக்கும் கட்டிடத்திற்குள் அனுமதி இல்லை என்பதால் அது எப்படி செயல் படுகிறது என்பதை இந்த அருங்காட்சியகத்தில் அதன் சிறிய மாதிரியை அமைத்து ஒரு சிறிய டெலிஸ்கோப் வழியாகச் சூரியனின் பிம்பத்தைக் காட்டி அருமையாக விளக்குகிறார்கள் திரு செல்வேந்தரனின் உதவியாளர்கள்.

சென்னை SIET கல்லூரியில் 50 ஆண்டுகளுக்கு முன் ஒரே வகுப்பில் படித்தவர்கள் தங்கள் நீண்டகால நட்பைக் கொண்டாட கொடைக்கானல் வந்த குழு ஒன்று கேட்ட கேள்விகளினால் நாம் பல விஷயங்களைப் புரிந்து கொள்கிறோம். அவர்கள் கணிதத்துடன் வானியல் படித்தார்களாம். ஆர்வத்துக்கு வயது இல்லை என்பது புரிகிறது

.

வானியல் வரலாற்றில் மிக முக்கிய நிகழ்வு நடந்த இடம், 100 வருடங்களுக்கும் மேலாக ஆதவனை அலுக்காமல் பார்த்து உலகின் வானவியல் வித்தகர்களுக்குத் தொடர்ந்து புதிய செய்திகளை வழங்கிக்கொண்டிருக்கும் ஒரே இடத்தை நாம் பார்த்தோம் என்ற பெருமிதத்தோடு வெளியே வருகிறோம்.